tag:blogger.com,1999:blog-61876182146436363782024-03-13T06:34:49.880-04:00முகுந்த்அம்மாமுகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comBlogger356125tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-22848469851007055542019-10-13T12:39:00.006-04:002019-10-13T12:39:41.944-04:00குழந்தைகளும், பொறுப்புணர்வும்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-64NKycOGcjc/XaNS3BFVcfI/AAAAAAAACog/fevCYXMKRe48PPNUmsy0BgjroYrTnBBbgCLcBGAsYHQ/s1600/RealisticallyRaisingAResponsibleChild.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="457" data-original-width="1600" height="91" src="https://1.bp.blogspot.com/-64NKycOGcjc/XaNS3BFVcfI/AAAAAAAACog/fevCYXMKRe48PPNUmsy0BgjroYrTnBBbgCLcBGAsYHQ/s320/RealisticallyRaisingAResponsibleChild.jpg" width="320" /></a></div>
<br />
<span style="font-size: xx-small;">picture adopted from</span><br />
<a href="https://www.isd197.org/news/news_archives/2015-16_news_archives/realistically_raising_a_responsible_child#.XaNSxS-ZOgQ"><span style="font-size: xx-small;">https://www.isd197.org/news/news_archives/2015-16_news_archives/realistically_raising_a_responsible_child#.XaNSxS-ZOgQ</span></a><br />
<br />
பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கும் குழந்தைகள் பற்றிய முதல் கவலை என்னவாக இருக்கும் என்றால், "எப்படி பொறுப்பா வர போறானோ/போறாளோ தெரியல , எப்போ பாரு டிவி/கம்ப்யூட்டர்/போன்/ கேம்ஸ் அப்படின்னு திரியுறாங்க?" என்பதாக இருக்கும்.<br />
<br />
<br />
இது பொதுவாக உபயோகப்படுத்தப்படும் ஒரு வாக்கியம் என்றாலும், கொஞ்சம் ஆழ்ந்து நோக்கினால், பல அர்த்தங்கள் கொண்டது.<br />
<br />
பொறுப்புணர்வு என்று எதனை குறிக்கிறோம்?<br />
<br />
1. ஒரு காரியத்தை கொடுத்தால், அதனை முழுமையாக தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையாக செய்து முடிக்கும் தன்மையா?<br />
<br />
2. வார்த்தை சுத்தம், தொழில் சுத்தம், வார்த்தை மாறாமல் சொன்னதை செய்யும் தன்மையா?<br />
<br />
3. கொடுத்த காலக்கெடுவுக்குள் ஒரு காரியத்தை செய்து முடிக்கும் தன்மையா?<br />
<br />
4. உங்களின் முழு திறமையும் செலுத்தி காரியம் முடிக்கும் திறனையா?<br />
<br />
5. தவறு செய்தாலும் நன்மை செய்தாலும், அதனால் விளையும் விளைவின் பலனை ஏற்றுக்கொண்டு கலங்காமல் இருக்கும் திறனிலா?<br />
<br />
6. தான் சார்ந்த குடும்பத்துக்கு, வேலைக்கு, ஊருக்கு, நாட்டுக்கு, உலகத்துக்கு ...தன்னால் ஆன பங்களிப்பை கொடுத்து நல்ல பேர் வாங்குவதையா?<br />
<br />
இப்படி சொல்லி கொண்டே போகலாம். "பொறுப்பு" என்ற ஒரு வார்த்தை பன்முகம், பல பரிமாணங்கள் கொண்டது. ஆயினும், ஒவ்வொரு குழந்தையும் மேலே குறிப்பிட்ட அந்த பல பரிமாணங்களையும் எப்படியாவது கற்று கொள்ள வேண்டும், அல்லது பெற்றோர் அதற்க்கு உதவ வேண்டும்.இது பள்ளி, கல்லூரி, வேலை, குடும்பம் என்று அனைத்து இடங்களுக்கும் பொருந்தும்.<br />
<br />
<b><span style="color: red;">பொறுப்புணர்வும், கீழ்ப்படிதலும் </span></b><br />
<b><br /></b>
பொறுப்புணர்வு என்று சொன்னாலே பெருபாலான பெற்றோர் அதனை கீழ்ப்படிதல் என்று நினைத்து கொள்கிறார்கள். அதாவது, <span style="color: blue;">"நான் என்ன சொல்லுறேனோ/எதிர்பார்க்கிறேனோ, கேட்டு , பதில் கேள்வி எதுவும் கேக்காமல், அதன் படி(யே) நடக்கணும்/செய்யணும் "</span> , இது கீழ்ப்படிதல்.<br />
<br />
ஆனால் பொறுப்புணர்வு என்பது <span style="color: blue;">" எவரும் இதனை செய், அதனை செய் என்று சொல்லாமல் தானாகவே எது செய்யவேண்டியதோ, அதனை தானாக செய்வது".</span><br />
<br />
இரண்டுக்கும் ஒரு மெல்லிய கோடு அளவு வித்தியாசமே. அது, "பிறர் எதிர்பார்ப்பு" என்பது போய் "தானாக முடிவெடுக்க முடியும்" என்ற ஒரு உணர்வு வரும் போது பொறுப்பு வந்துவிட்டது என்று உணரலாம்.<br />
<br />
சொல்லப்போனால், பெரும்பாலான பெற்றோர் குழந்தைகளை, அவர்கள் பெரியவர் ஆன பின்பும் கூட, கீழ்ப்படிதல் கொண்ட ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் தவிர, பொறுப்பானவர் ஆக, தானாக முடிவெடுக்க முடிந்தவர் ஆக, அல்ல. தான் சொல்லுவதை கேட்க வேண்டும், பதில் ஏதும் சொல்லாமலே, அப்படியாயின் அவர், பொறுப்பான பிள்ளை. இல்லை எனில் "சொன்ன பேச்சு கேக்காத தறுதலை"<br />
<br />
<span style="color: red;"><b>எப்படி பொறுப்புணர்வை வளர்ப்பது?</b></span><br />
<br />
எப்போது கீழ்ப்படிதல் எதிர்பார்ப்பு என்பதுபோய் பொறுப்புணர்வு எட்டிப்பார்க்கும்? எவ்வளவு தூரம் குழந்தைகள் கையை பிடித்து நடக்க சொல்லி கொடுப்பது? அல்லது எப்படியாவது போ? என்று தண்ணீர் தெளித்து விடுவதா? அல்லது எப்போது அவர்களாகவே சென்று கற்றுக்கொள்ளட்டும் என்று விடுவது? எப்போது அவர்க ளுக்கு நம் அறிவுரைகள் தேவை என்று அறிவது? இப்படி பல பல கேள்விகள்.<br />
<br />
எப்போதும் பிள்ளைகள் நம் கண்ட்ரோலில் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோரின் முதல் முதல் பயமே, "நம்ம கண்ட்ரோலில் இல்லை எனில், பிள்ளை தவறான பாதையில் போயிடும், பின்ன நமக்கு தான் பெரிய பாரம், வேலை" என்ற எண்ணத்திலே , விரல் நுனியில் பிள்ளைகளை வைத்துஇருக்கிறார்கள் . ஆனால், இப்படி வைத்திருப்பின், உங்கள் கட்டளைகளை கேட்கும் ஒரு ரோபாட் போல அவர்கள் இருப்பார்களே தவிர, எப்போது எதனை செய்தால் நல்லது, என்று முடிவெடுக்கும் பக்குவம் தெரியாதவர்களாக இருப்பார்கள்.<br />
<br />
அதனால், இது உன்னுடைய வேலை, அதனை எப்படி செய்வாயோ அது உன்னுடைய திறமை. ஆனால் இதன் இறுதி நாள் அடுத்தவாரம் , அதற்குள் எப்படி முடிக்க முடியுமோ, முடித்து கொள். ஏதேனும் உதவி தேவை படின் கேள்? என்று சொல்லலாம்.<br />
<br />
<br />
<span style="color: red;"><b>எப்போது உதவுவது, எப்போது உதவாமல் இருப்பது என்று அறிவது ஒரு கலை </b></span><br />
<span style="color: red;"><b><br /></b></span>
எப்போது உதவுவது, எப்போதுகுழந்தைகளை சுதந்திரமாக முடிவெடுக்க விடுவது என்று அறிவது என்பது எளிதான விஷயம் அல்ல.<br />
<br />
மிகவும் கண்டிப்பாக,நான் சொல்லுவதை கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்றுநினைப்பதும் தவறு , என்ன வேண்டும் என்றாலும் செய், எப்படி வேண்டும் என்றாலும் செய், என்று அதிகம் செல்லம் கொடுப்பதும் தவறு. ஒரு பாலன்ஸ் வேண்டும். எப்போது செல்லம் கொடுக்க வேண்டும், எப்போது கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று தெரிந்திருப்பது ஒரு கலை.<br />
<br />
<b><span style="color: red;">அன்பை பொழியும் பெற்றோர் ரோல் </span></b><br />
<br />
உதாரணமாக, நீங்கள் நல்ல மூடில் இருக்கிறீர்கள் எனில் குழந்தைகளோடு கருணையாக, அன்பாக அக்கறையாக, அவர்கள் சொல்லுவதை காது கொடுத்து கேட்டு அவர்களோடு விளையாடி கொண்டு, உதவி கொண்டு இருக்கலாம்" இந்த நேரத்தில், நீங்கள் எந்தவித எதிர்பார்ப்பில்லாத அன்பை குழந்தை மீது நீங்கள் செலுத்துகிறீர்கள்.<br />
<br />
<b><span style="color: red;">ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரோல் </span></b><br />
<br />
நீங்கள் எல்லா நேரத்திலும், மேலே சொன்னது போல, அன்பை பொழிந்து கொண்டிருப்பேன், உண்மை வாழ்க்கை நிலவரம் குழந்தைகளுக்கு தெரியாது, அதனால். சிலநேரம் ஸ்ட்ரிக்ட் ஆபிசர், ரோல் நீங்கள் எடுக்க வேண்டியது வரும்.<br />
<br />
இந்த நேரத்தில், நீங்கள் ஒரு வேலை முடிக்க 1. கால அளவு நிர்ணயிக்கலாம் 2. டிஸிப்ளின் அல்லது இப்படி தான் செய்ய வேண்டும் என்று ஒழுக்கம் சொல்லலாம் 3. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் நடத்தை சொல்லி கொடுக்கலாம். 4. உங்களின் நன் மதிப்புகள் , நற்குணங்கள், கருணை போன்றவற்றை சொல்லி கொடுக்கலாம்.<br />
<br />
குழந்தைகள் கேட்டதை உடனே கொடுக்காமல் அவர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தைகொடுக்கலாம். இது, எனக்கு உடனே அது கிடைக்க வேண்டும் என்ற உந்துதலை கட்டுப்படுத்த உதவும். "Delayed gratification" என்பது குறைந்த மனக்கிளர்ச்சியை, "தான்/தன் சந்தோசம்" என்ற நிலையை விட்டு வர உதவும். இந்த எண்ணமே, வீடியோ கேம், இன்டர்நெட் அடிமையாக பிள்ளைகள்/பெற்றோர் கிடைப்பதற்கு அடிப்படை.<br />
<br />
இது தான் "எதிர்பார்க்கப்படும் அடிப்படை ஒழுக்கம் " என்று தெளிவாக சொல்லி விடுங்கள். அதே போல, இதனை மீறினால் கிடைக்கும் விளைவுகளையும் சொல்லி விடுங்கள். தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளுக்கு குழந்தைகள் சந்தோசப்பட வேண்டும். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி" என்பது அவர்களுக்கு விளங்க வேண்டும்.<br />
<br />
இது ஸ்ட்ரிக்ட் ஆபீசர் ரோலின் முக்கிய அம்சங்கள்.<br />
<br />
<b><span style="color: red;">இரண்டும் கலந்த கலவை ரோல் </span></b><br />
<br />
பெரும்பாலான குழந்தைகள், நீங்கள் அன்பாக, ஆதரவாக, அக்கறையாக, சொன்னால் உங்களின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருக்க சம்மதிப்பார்கள்.<br />
<br />
ஆரோக்கியமான பொறுப்புணர்வான குழந்தைகள் எங்கே வளர்வார்கள் எனில், அங்கே அன்பும் கண்டிப்பும் ஒரு சேர இருக்கும் வீட்டில் தான். இந்த கண்டிப்பு, கீழ்ப்படிதல் எதிர்பார்ப்பு அல்ல, மாறாக, விளைவை சார்ந்த நல்ல தன்னம்பிக்கை கொண்டது.<br />
<br />
<br />
<ol style="text-align: left;">
<li>தன்னம்பிக்கை கொண்ட குழந்தைகள் பொறுப்புணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். அவர்கள். பொறுமையாக, நோக்கம் நிறைவேறும் வரை திரும்ப திரும்ப முயற்சி செய்பவர்களாக இருப்பார்கள். </li>
<li>தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்களாக அதிலிருந்து பாடம் கற்று கொள்பவர்களாக இருப்பார்கள்.</li>
<li>இறுதிவரை எடுத்த காரியத்தை செய்து முடிப்பார்கள். தேவை எனில் உதவி கேட்க தயங்க மாட்டார்கள்.</li>
<li>அவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்து இருப்பார்கள்.</li>
<li>புதிய விஷயங்கள் செய்ய துணிவுகொள்வார்கள்</li>
<li>ஏதேனும் தடங்கல்கள் வரின் தன்னால் சமாளிப்பது எப்படி என்று அறிந்திருப்பார்கள்.</li>
</ol>
<div>
<b><span style="color: red;">உனக்காக நான் இருக்கிறேன் என்ற உணர்வு கொண்டு வருவது </span></b></div>
<div>
<br /></div>
<div>
சரி, "எப்படி குழந்தைகள் நாம்சரி தவறு எது செய்தாலும் நம்முடன் பெற்றோர் இருப்பார்கள் " என்று நம்பிக்கை கொள்ள வைப்பது </div>
<div>
<br /></div>
<div>
"நான் எப்போதும் உன்னிடம் அன்பு செலுத்துவேன்" என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவது </div>
<div>
<br /></div>
<div>
"நீ எனக்கு மகனாக/மகளாக கிடைத்தது என் பாக்கியம்" என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லுவது"</div>
<div>
<br /></div>
<div>
"உன்னுடன் நேரம் செலவழிப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி கொடுக்கிறது" என்று சொல்லுவது </div>
<div>
<br /></div>
<div>
இது போன்ற சின்ன சின்ன செய்திகள் அடிக்கடி சொல்வதன் மூலம், குழந்தைகள் நமக்கு பின்புலமாக நம் பெற்றோர் இருக்கிறார்கள், என்று நம்பிக்கை கொள்வார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
<b><span style="color: red;">உன்னால் முடியும் என்று ஊக்கப்படுத்துவது </span></b></div>
<div>
<b><br /></b></div>
<div>
குழந்தைகளின் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கு அவர்களின் தன்னபிக்கை மிக முக்கியம். அதனை வளர்க்க சில வழிகளை பயன்படுத்தலாம்.</div>
<div>
<br /></div>
<div>
1. அவர்கள் தானாக செய்த திட்டப்பணி, படங்கள், உதவி போன்ற சிறு சிறு விஷயங்களையும் எடுத்து பாராட்டுவது. உதாரணமாக, அவர்களின் ஸ்கூல் ப்ராஜெக்ட் ஒன்றை எடுத்து கொண்டு, அவர்கள் எப்படி சிறப்பாக அதனை செய்தார்கள் என்று பாராட்டுவது.</div>
<div>
<br /></div>
<div>
2. வீட்டு வேலைகளில் ஏதாவது அவர்கள் உதவி இருப்பின் அதனை பாராட்டுவது.</div>
<div>
<br /></div>
<div>
3. அவர்கள் ஏதாவது செய்த பிறகு, "எனக்கு தெரியும் உன்னால் செய்ய முடியும் என்று" என்று சொல்லுவது .</div>
<div>
<br /></div>
<div>
4. சொந்த பந்தங்களிடம் பரிவாக பேசும்போதோ அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் போதோ, அவர்கள் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்று அறிய வைப்பது.</div>
<div>
<br /></div>
<div>
5. நாமாக சொல்லாமல் அவர்களாக எதாவது ஒரு உதவி செய்திருப்பின், அவர்களின் பொறுப்புணர்வை பாராட்டுவது. </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<b><span style="color: red;">அதீத கவனிப்பும் அதன் விளைவும் </span></b></div>
<div>
<br /></div>
<div>
நான் அதிகம் கவனித்த பார்த்த இந்த தலைமுறை குழந்தைகள் பலர் சுயநல வாதிகளாக, இருப்பதற்கு நன்றியுணர்வு இல்லாதவர்களாக, இது என் உரிமை, கொடு என்று வேண்டுபவர்களாக, தன்னால் செய்ய முடிந்ததையும் பிறர் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்களாக, எதுவும் உடனே கிடைக்க வேண்டும் என்று அடம் பிடிப்பவர்களாக, தாம் செய்த தவறை ஒத்து கொள்ளாதவர்களாக, முயற்சி செய்யத்தவர்களாக, அடுத்தவர்களிடம் பகிராதவர்களாக, இருக்குகிறார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
மேலே சொன்ன அனைத்திற்கும் காரணம், பெற்றோர். தான் பட்ட கஷ்டம் தன குழந்தை படக்கூடாது என்று கேட்டதை வாங்கி கொடுத்து, அவர்கள் கேட்காததையும் வாங்கி கொடுத்து, "எல்லாமே ஈசி" என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்கிறோம். உதாரணமாக, நீங்கள் Ipad /போன்/கேம்ஸ் என்று அனைத்தும் சிறு வயது முதலே குழந்தைக்கு கொடுப்பது </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இன்னொரு உதாரணம், குழந்தைகள் தாமாகவே செய்ய முடிந்த வேலையை செய்ய விடாமல் தானாக செய்வது. உதாரணமாக, டிவி பார்த்து கொண்டு, அது கொண்டு வா, இது கொண்டு வா என்று ஆர்டர் செய்யும் குழந்தைகள். அதனை செய்யும் பெற்றோர்.</div>
<div>
<br /></div>
<div>
இது தான் உன்னுடைய லிமிட் என்று தெளிவாக இலக்கு நிர்ணயிப்பது. "நோ" என்ற வார்த்தையை சொல்லுவது இவை இரண்டும் தாரக மந்திரம்.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
முடிவாக, நம் நோக்கம் தன்னம்பிக்கை கொண்ட, சமூக பொறுப்பு, குடும்ப பொறுப்பு கொண்ட ஒரு பொறுப்பான ஒரு பிள்ளையை வளர்ப்பது.இது எளிதான காரியம் அல்ல, இரு பக்கம் கூர்மையான ஒரு கத்தி மேல் நடப்பது போன்றது. அதிக செல்லமும் இல்லாமல், அதிக கண்டிப்பும் இல்லாமல் அதே நேரம், தெரிவான இலக்கு கொடுத்து வளர்க்க வேண்டிய ஒன்று. கொஞ்சம் முயற்சியும் சுய கட்டுப்படும் கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றி கொள்ளலாம்.</div>
<div>
<br /></div>
<div>
நன்றி.</div>
<div>
<br /></div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-12068405157757741222019-04-28T10:07:00.000-04:002019-06-17T19:50:00.286-04:00குழந்தைகள், மனித கடத்தல் : எந்த நாடு பாதுகாப்பானது?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
முதலில் சில கேள்விகள்?<br />
<br />
1. உலகில் உள்ள நாடுகளில் எந்த நாட்டில் மனித கடத்தல் குறைவு?<br />
<br />
<ul style="text-align: left;">
<li> US </li>
<li>இந்தியா </li>
<li>உக்ரேன் </li>
</ul>
<br />
<br />
2. சிறு பெண், ஆண் குழந்தைகள் எதற்காக கடத்தப்படுகிறார்கள்?<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>பாலியல் தொழிலுக்காக </li>
<li>பிச்சை எடுக்க </li>
<li>அடிமை தொழில் செய்ய </li>
</ul>
<div>
3. எந்த நாட்டில் 7 இல் 1 காணாமல் போகும் பெண் குழந்தைகள் பாலியல் தொழில் செய்ய வற்புறுத்த படுகிறார்கள்?</div>
<div>
<br /></div>
<div>
<ul style="text-align: left;">
<li>US </li>
<li>கனடா </li>
<li>இந்தியா </li>
</ul>
<div>
<br /></div>
<span style="color: blue;">1. </span> முதல் கேள்விக்கு விடை. எந்த நாடும் மனித கடத்தலில் இருந்து பாதுகாப்பானது கிடையாது. எல்லா நாடுகளிலும் மனித கடத்தல் கொடி கட்டி பறக்கிறது.</div>
<div>
<br /></div>
<div>
<span style="color: blue;">2.</span> இரண்டாவது கேள்விக்கு விடை நாடு விட்டு நாடு மாறும். உதாரணமாக, பெண் குழந்தைகள் கடத்தப்படுவது முக்கால் வாசி நேரம் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த என்றாலும், கம்போடியா போன்ற நாடுகளில் ஆண் குழந்தைகளும் பாலியல் தொழிலில் சித்திரவதை செய்து ஈடுபட வற்புறுத்த படுத்துகிறார்கள். கம்போடியா பெண் குழந்தைகள் சீனாவில் கட்டாய திருமணம் செய்ய வற்புறுத்த படுகிறார்கள்.</div>
<br />
<br />
<span style="color: blue;">3.</span> மூன்றாவது கேள்விக்கு விடை, US. USA வில் காணாமல் போகும் 7 இல் 1 பெண் குழந்தைகள்/பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
மனதை வருத்தும் ஒரு விஷயம் என்னவென்றால், இது போன்ற கடத்தல்களும், அதற்கு துணை போகும் மக்கள் யார் என்று பார்த்தால், கடத்த பட்ட குழந்தைக்கு மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர் அல்லது கணவன்/காதலன். இது உலகம் முழுக்க இருக்கும் நிகழ்வு. ஒரு சில ஹாட் ஸ்பாட்ஸ் இந்த நிகழ்வுக்கு உண்டு. அந்த ஹாட் ஸ்பாட்ஸ் நாடுகளில் இருந்தும் எல்லா நாட்டு பெண்கள்/குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள்.<br />
<br />
உதாரணமாக "மத்திய கிழக்கு நாடுகள்", "மேற்கு ஐரோப்பா நாடுகள்", மற்றும் "வட அமெரிக்கா" இவை மூன்றும் ஹாட் ஸ்பாட்ஸ். இந்த ஹாட் ஸ்பாட்ஸ் களுக்கு பல நாடுகளில் இருந்தும் மக்கள்/பெண்கள்/குழந்தைகள் சப்ளை செய்ய படுவார்கள்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<span style="font-size: xx-small;">*Picture adopted from /www.unodc.org/</span><br />
<br />
<br />
மனித கடத்தல் குறித்த போலாரிஸ் வீடியோ இங்கே<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<br />
<br />
<br />
"மனித கடத்தலை தடுப்பது எப்படி" என்ற ஒரு "திட்டப்பணி" ஒரு தொண்டு நிறுவனத்துடன் சேர்ந்து செய்ய நேர்ந்தது. அதன் விளைவே இந்த பதிவு.<br />
<br />
நன்றி<br />
<br />
<br />
References:<br />
<br />
<ol style="text-align: left;">
<li>https://www.unodc.org/documents/human-trafficking/Country_profiles/North_America.pdf</li>
<li>https://www.unodc.org/documents/data-and-analysis/glotip/2016_Global_Report_on_Trafficking_in_Persons.pdf</li>
</ol>
<br />
<br />
<br />
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-4405344611384814592019-04-07T17:53:00.000-04:002019-04-07T17:53:28.256-04:00மறுபடியும், கேரேமேர் Vs கேரேமேர், 90ml<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு 40 வருடங்களுக்கு முன்பு 1979 இல், ஹாலிவூட்டில் "Kramer Vs Kramer" என்ற அற்புதமான படம். குடும்ப உறவுகளை, ஜெண்டர் பையஸ், அல்லது பாலின பாகுபாடுகள் குறித்து வந்த படம்.<br />
ஆண்கள் பாதுகாப்பாளர்கள், வீட்டுக்கு தேவையானதை சம்பாதிப்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், தன் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்று கூட அறியாதவர்கள், அவர்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம், மதியம் உணவு வேளையில் கூட 3 மார்டினி அடிக்கலாம். மாறாக பெண்கள் :வீட்டை, குழந்தைகளை, குடும்பத்தை, வீட்டு பெரியவர்களை பொறுப்பாக கவனித்து கொள்ள வேண்டும். என்ன கஷ்டம் வந்தாலும் கவலை குடும்ப பிரச்னை இருந்தாலும் பொறுத்து கொண்டு, தியாக சிகரம் ஆக இருக்க வேண்டும். என்ற ஜெண்டர் பையஸ் இல் இருந்து வெளியே வர துடிக்கிறாள் ஜோயன். தன்னுடைய மனைவியின் மனநிலையை புரிந்து கொள்ளாத கணவன், அவளுக்கு என்ன நடக்கிறது என்று கூட பரிமாறி கொள்ளாத கணவன் டெட்.<br />
<br />
ஒரு நாள் மிக பெரிய ப்ரோமோஷன் கிடைத்ததை பகிர வீட்டுக்கு வரும் டெட் க்கு, தன்னுடைய மனைவி வீட்டை விட்டு செல்ல தயாராக இருக்கிறாள் என்று தெரிய வருகிறது. அவள் யாருடனும் "ஓடி போக வில்லை", மாறாக தன்னை புரிந்து கொள்ள அறிந்து கொள்ள, தன்னுடைய ஐடென்டிட்டி ஐ தெரிந்து கொள்ள செல்கிறாள்.<br />
<br />
தானாக வாழ வேண்டும், தனக்கென்று ஒரு ஐடென்டிட்டி உருவாக்க விழையும் ஒரு பெண்ணின் தேடுதல் அது. ஜெண்டர் ரோல்ஸ் மாற வேண்டும் என்று 40 வருடங்களுக்கு முன்பு சொன்ன படம் அது.<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-EmzKPLVCeIE/XKoUAd4JGvI/AAAAAAAACjs/rmW0Ocn6iZgBkiRnh27qHxvDMWf7V3_8wCLcBGAs/s1600/p28_v_v8_af.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1440" data-original-width="960" height="320" src="https://3.bp.blogspot.com/-EmzKPLVCeIE/XKoUAd4JGvI/AAAAAAAACjs/rmW0Ocn6iZgBkiRnh27qHxvDMWf7V3_8wCLcBGAs/s320/p28_v_v8_af.jpg" width="213" /></a></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
<br />
25 வருடங்களுக்கு முன்பு வந்த படம் . "மறுபடியும்"<br />
<br />
"கல்யாணம்கிறது ஒரு செக்யூரிட்டி அப்படின்னு கவிதா நினைக்கிறாங்க, ஆனா ஒரு கையெழுத்து போட்டா அது முடிஞ்சிடும்னு அவங்களுக்கு தெரியல"<br />
<br />
"மறுபடியும் என்னை கோழை ஆக்கிடாதீங்க. எல்லாத்தையும் உங்க மேல தூக்கி போட்டு ரிலாக்ஸ் ஆகிடுவேன் நான். எனக்கு அது வேண்டாம்."<br />
<br />
"மறுபடியும்" படத்தின் அற்புதமான வரிகள்.<br />
<div>
<br /></div>
"கல்யாணம் என்பது செக்யூரிட்டி" என்ற பார்வையில் இருந்து ஒரு பெண் விலகி தனி ஆளாக எந்த குடும்ப பெயர், கணவன் பெயர், அப்பா பெயர் இல்லாமல் சுதந்திரமாக வாழ முடிவெடுத்த ஒரு இடத்தில் முடிந்த படம் அது. அந்த பெண்ணுக்கு வாழ ஒரு பிடிமானம் கொடுத்தது "தத்தெடுத்த அந்த குழந்தை"<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-tLkEc_Mcnkk/XKoULaPhBVI/AAAAAAAACjw/mUQ-teL_tRIhpmwUbWVvNK-5N0z8i2n5wCLcBGAs/s1600/5dc5c689-2cfe-42a3-89bb-41e78bab3cd6.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="256" data-original-width="256" src="https://2.bp.blogspot.com/-tLkEc_Mcnkk/XKoULaPhBVI/AAAAAAAACjw/mUQ-teL_tRIhpmwUbWVvNK-5N0z8i2n5wCLcBGAs/s1600/5dc5c689-2cfe-42a3-89bb-41e78bab3cd6.jpg" /></a></div>
<br />
<br />
"மறுபடியும்" படம் தற்போது வரை கொண்டாட படுகிறது என்றால் அதற்க்கு காரணம், "துளசி" கேரக்டர், ஒரு பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற தமிழ் சமுதாயம் வரையறுத்த இலக்கணத்தில் இருந்து மாறாமல் அதே சமயம் தனக்கென்ற ஒரு ஐடென்டிட்டி தேடிய பெண்ணின் கதை என்பதால்.<br />
<br />
இன்று வரை, பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் "பெண்ணின் விருப்பம் என்று ஒன்றும் இல்லை", ஆண் தன்னுடைய விருப்பத்தை பெண்ணின் மீதி திணிக்கலாம். பெண்கள் என்பவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று திரும்ப திரும்ப சொல்லப்படுகிறது. உதாரணமாக "ரோஜா", "மௌன ராகம் ". ஒரு சில படங்களில் மட்டுமே வலுவான பெண் கதாபாத்திரம் இருக்கும். அதுவும் தனக்கென்று முடிவெடுக்க தெரிந்த, அந்த முடிவில் நிலைத்து நின்ற பெண் தமிழ் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.<br />
<br />
சரி ஹாலிவுட்டில் 40 வருடங்களுக்கு முன்பு வந்த kramer vs kramer போன்ற ஒரு கருத்து உள்ள படம் தற்போது தமிழில் எடுக்கப்படுகிறது என்று வைத்து கொள்ளுங்கள், என்ன எதிர் வினை வரும்? உடனே அந்த பெண்ணின் கேரக்ட்டர் மேல் படுகொலை நடந்து இருக்கும். என்னப்பா படம் எடுக்குறீங்க? எப்படி அந்த பெண் தன்னுடைய விருப்பப்படி முடிவெடுக்க முடியும். இது குடும்பத்துக்கு எதிரானது, கலாச்சார படுகொலை, என்று கத்தி இருப்பார்கள்.<br />
<br />
இந்திய திரைப்படங்களை பொறுத்தவரை, ஜெண்டர் பையஸ் என்பது இன்று வரை மிக அதிகமாக விரவி கிடக்கிறது. இந்தியா போன்ற சமூகத்தில், ஒரு பெண் தனக்கு பிடித்த மாதிரி வாழ்க்கை வாழ நினைக்கிறாள் என்பதை காட்சி படுத்த நினைத்த ஒரு படம் 90ML. "My life My rules!", தனக்கென்ற ஒரு ஐடென்டிட்டி திருமணம் ஆனால் தொலைந்து விடும் என்று நம்பும் ஒரு பெண், திருமணத்தை தவிர்க்கிறாள். தனக்கு பிடித்ததை செய்கிறாள். அது தண்ணி அடிப்பதில் ஆகட்டும், மற்ற வஸ்துகள் உபயோகிப்பதில் ஆகட்டும். இதுவே நம் கலாச்சார காவலர்களுக்கு பெரிய ஷாக் ஆகிறது. எப்படி சமூக சீர்கேட்டை இந்த படம் பரப்புகிறது என்று குய்யோ முறையோ என்று அடித்து கொள்கிறார்கள். அதாவது, இதே போன்ற ஒரு காட்சி 100இல் 99.99 தமிழ் படங்களில் கதாநாயகர்கள் செய்வார்கள். அது ஏற்றுக்கொள்ளப்படும். அதே சமயம், பெண்கள் இது போன்று செய்தால் கலாச்சார சீர்கேடாம்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-BtIuPMPqsUw/XKoggDptyPI/AAAAAAAACkM/ESDgGb35BCkVlj9yy8uwXWfFPlW2GRN_wCLcBGAs/s1600/MV5BNDA4MzRhZTItZDhiZi00M2I0LWFiNTEtMzY3NmQ0NDA4MDlhXkEyXkFqcGdeQXVyOTc3NzA4MDI%2540._V1_SY1000_CR0%252C0%252C610%252C1000_AL_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1000" data-original-width="610" height="320" src="https://3.bp.blogspot.com/-BtIuPMPqsUw/XKoggDptyPI/AAAAAAAACkM/ESDgGb35BCkVlj9yy8uwXWfFPlW2GRN_wCLcBGAs/s320/MV5BNDA4MzRhZTItZDhiZi00M2I0LWFiNTEtMzY3NmQ0NDA4MDlhXkEyXkFqcGdeQXVyOTc3NzA4MDI%2540._V1_SY1000_CR0%252C0%252C610%252C1000_AL_.jpg" width="195" /></a></div>
<br />
<br />
இன்னும் 40-50 வருடங்கள் பின்தங்கி இருக்கும் தமிழ் திரை உலகில், "My life My rules! போன்ற அல்ட்ரா மாடர்ன் கருத்துகளை கொண்டு இருக்கும் இது போன்ற படங்களை ஓட ஓட விரட்டியே தீர்வார்கள். இன்னும் அருக்காணி போல, "மாமா" என்று கதாநாயகனை விரட்டி விரட்டி காதலிக்கும் லூசு காதலி, அல்லது, தியாகசிகரம் மனைவி மட்டுமே இவர்கள் தேவை. இந்திய சமூகத்தில், பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. அதனை நீங்கள் சிறிதளவு தாண்டினாலும், நீங்கள் கலாச்சார சீரழிவை உண்டாக்குபவர்ஆக்கப்படும் .<br />
<br />
இன்னும் மனதளவில் வளராத ஒரு சமூகத்தின் முன்பு, இது போன்ற கருத்துகள் கொண்ட படங்கள் தேவை இல்லை. ஏனெனில் புரிந்து கொள்ள படாது என்பது என் எண்ணம்.<br />
<br />
<br />
<u>டிஸ்கி </u><br />
இது என்னுடைய கருத்துகள் மட்டுமே. இது தமிழ் கலாச்சார சீர்கேட்டை ஆதரிப்பதாக படிப்பவர்களுக்கு தோன்றினால் அது என் பொறுப்பு அல்ல.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-51899881388952228022019-03-24T11:21:00.000-04:002019-03-24T11:21:18.459-04:00கார் சேல்ஸ் ம், ஆண் உரிமையும், லிடியனும்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ரொம்ப நாள் கழிச்சு வலைப்பக்கம், ரொம்ப சந்தோசமா இருக்கு. அது என்னவோ தெரியல நிறய எழுதணும்னு நினைக்கும் போது நேரம் கிடைப்பது இல்லை. ஆனால் நேரம் இருக்கும் போது, ஒரு கோர்வையா எண்ணங்கள் வந்து விழ மாட்டேன்கிறது. என்ன ஆனாலும் சரி எதையாவது கிறுக்கணும்னு முடிவு செய்து எழுத ஆரம்பிக்கிறேன்.<br />
<br />
<u><span style="color: blue;">செய்தி 1:</span></u><br />
<br />
இப்போ எல்லாம் லண்டன் ல அல்லது UK ல இருக்கறவங்க எல்லாம் கார் வாங்குறது குறைஞ்சிருக்காம். ஒரு சில பிரெக்ஸிட் னால என்றாலும், சிலர், உபெர், லிப்ட் போன்ற செயலிகள் வந்ததன் தாக்கம் என்கிறார்கள். உபாயம் "தி கார்டியன்" , "பிபிசி" <a href="https://www.theguardian.com/business/2018/oct/04/bumper-to-slumper-new-emissions-tests-choke-uk-car-sales">https://www.theguardian.com/business/2018/oct/04/bumper-to-slumper-new-emissions-tests-choke-uk-car-sales</a><br />
<a href="https://www.bbc.com/news/business-47291627">https://www.bbc.com/news/business-47291627</a><br />
<br />
<br />
கார் வாங்காம பப்லிக் ட்ராஸ்போர்ட், உபேர் போன்ற வாகனங்களில் செல்வதில் என்னை பொறுத்தவரை நிறைய வசதிகள். டிராபிக் இல், எப்போ முன்னால இருக்கிற கார் போகும் நாம போகணும்னுகிற பிரச்னை இல்லை. ட்ரெயின் அல்லது பஸ் பிடிச்சோமா ஆபீஸ் போய் சேர்ந்தோமானு இருக்கு. இது போன்ற பப்லிக் ட்ரஸ்போர்ட் க்கு அல்லது HOV எனப்படும் நிறைய மக்கள் செல்லும் வண்டிகளுக்கு என்று ஹை வே யில் தனி லேன்/பாதை உண்டு என்பதால், டிராபிக் இல் நிற்க வேண்டி இருப்பதில்லை. அது தவிர, கார் இன்சூரன்ஸ், பராமரிப்பு செலவு, பெட்ரோல் செலவு என்று அனைத்தும் மிச்சம். பல கம்பெனிகள் பயணப்படி கொடுப்பதால், நாம் ட்ரெயின் அல்லது பஸ்ஸுக்கு செலவுக்கும் பணத்தை திரும்ப ஆஃபிஸில் இருந்து வாங்கி விடலாம், நிம்மதியா ஆபீஸ் போனோமா வந்தோமான்னு இருக்கு. வார இறுதி நாட்களில் ஷாப்பிங் செல்ல மட்டுமே கார் என்பது எவ்வளவு சவுகரியமாக இருக்கிறது.<br />
<br />
ஒரு இருபது வருடம் ரீவின்ட் செய்து பார்க்கிறேன். அப்போதும் இதே போல பஸ்ஸில் சென்றதுநியாபகம் வருகிறது. அப்போ எல்லாம், "ச்சே, நமக்குன்னு ஒரு கார் இருந்தா எப்படி இருக்கும்!!, இபப்டி கால் கடுக்க பஸ்ஸுக்கு நிக்க வேண்டியதில்லை இல்லை". என்று அலுத்து இருக்கிறேன். எல்லாம் பெர்செப்ஷன். அப்போ வசதின்னு நினைச்சது இப்போ உபத்திரவமா இருக்கு. அப்போ வேணும்னு தோன்றியது இப்போ வேணாமுன்னு தோணுது.<br />
<br />
<br />
<u><span style="color: blue;">செய்தி 2:</span></u><br />
<br />
எப்படி எல்லாம் 498A எனப்படும் பெண்களுக்கு ஆதரவான வரதட்சணைகொடுமை சட்டம், தற்போது ஆண்களுக்கு எதிராக பயன்படுத்த படுகிறது என்பது குறித்த ஒரு ஆவண படம் பார்க்க நேர்ந்தது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/gbUbgr6qD10/0.jpg" src="https://www.youtube.com/embed/gbUbgr6qD10?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br />
தற்போது எல்லாம் கல்யாணம் கட்டிக்கொண்ட ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியவில்லை பிரச்னை என்று வந்தால், பெண்கள் வசம் கையில் இருப்பது "மணமகன் வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துகிறார்கள்" என்ற வழக்கு. உண்மையாகவே வரதட்சணை பிரச்சனையால் கஷ்டப்படும் பெண்களுக்கு ஆதரவாக வடிவமைக்க பட்ட இந்த சட்டம். தற்போது ஆண்களுக்கு எதிராக எப்படி பெண்களால் அல்லது பெண் வீட்டாரால் பயன் படுத்த படுகிறது என்று இந்த ஆவணப்படம் விளக்குகிறது. இதனையே சார்ந்த "நிஷா சர்மா, வரதட்சணை வழக்கு" அனைவரும் அறிந்திருக்க கூடும். எனக்கு தெரிந்தே சில வழக்குகள் இப்படி பெண்கள் சுய நலத்துக்காக உபயோகித்து ஆண்களை பழி வாங்கிய சம்பவம் நடந்து கொண்டிருக்கிறது. இவை எல்லாம், எப்படி பெண்களுக்கு பெண் உரிமை சட்டங்கள் பாதுகாக்க இருக்கிறதோ, அதே போல, ஆண் உரிமை சட்டங்களும் வேண்டுமோ? என்பதை யோசிக்க தூண்டி இருக்கின்றன.<br />
<br />
<br />
உபாயம்: விக்கி, பிபிசி<br />
<br />
<a href="https://en.wikipedia.org/wiki/Nisha_Sharma_dowry_case">https://en.wikipedia.org/wiki/Nisha_Sharma_dowry_case</a><br />
<a href="https://www.bbc.com/news/world-asia-india-40749636">https://www.bbc.com/news/world-asia-india-40749636</a><br />
<br />
<br />
<br />
<u><span style="color: blue;">செய்தி 3:</span></u><br />
<br />
Ambidextrous எனப்படும் இரு கைகளையும் வேறு காரியங்களுக்கு பயன்படுத்த கூடிய திறமை இருக்கும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுவார்கள்.<br />
உபாயம் , "தி கார்டியன்", "வெப் எம் டி"<br />
<br />
<a href="https://www.theguardian.com/education/2010/jan/25/ambidextrous-children-school-languages">https://www.theguardian.com/education/2010/jan/25/ambidextrous-children-school-languages</a><br />
<br />
<a href="https://www.webmd.com/children/news/20100125/ambidextrous-kids-more-likely-to-have-adhd#1">https://www.webmd.com/children/news/20100125/ambidextrous-kids-more-likely-to-have-adhd#1</a><br />
<br />
பெரும்பாலானவர்கள் "லிடியன் நாதஸ்வரம்" அவர்களின் "தி ஒர்ல்ட்ஸ் பெஸ்ட்" பரிசு வாங்கியதை பார்த்து என்னை போல ஆனந்த பட்டு இருப்பீர்கள். ஆனால், கவனித்து பார்த்தீர்கள் ஆனால், லிடியனின் இன்னொரு திறமை, Ambidexterity, அதாவது அவரின் இரண்டு கைகளும் இரண்டு பியானோவில் இரண்டு வகையான மியூசிக் வாசிக்கும் திறமை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/lVaKTpTU44s/0.jpg" src="https://www.youtube.com/embed/lVaKTpTU44s?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br />
<br />
<br />
இது போன்ற இரண்டு கைகளையும் வெவ்வேறு காரியங்களுக்கு பயன்படுத்த பழகியவர்கள், அல்லது பிறவியிலேயே இது போன்ற திறமை கைகொண்டவர்கள் மிக மிக சிறந்த கற்பனை திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி. தலை சிறந்த இசை மேதைகள் அனைவரும் இப்படி இருக்கை பழக்கம் உடையவர்கள். ஏன் , சொல்ல போனால் ஐன்ஸ்டீன் அவர்களுமே, வலது மற்றும் இடது கைகளை ஒரே சமயத்தில் பல நேரத்தில் வேறு வேறு பணி செய்ய பயன்படுத்தினார் என்பது வரலாறு. அதனாலேயே அவர் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல், அவுட் ஆப் தி பாக்ஸ் யோசித்து "ரிலேட்டிவிட்டி தியரி" கொண்டு வர முடிந்தது.<br />
<br />
இப்படி இரண்டு கை பழக்கம் உள்ளவர்கள் பள்ளிகளில், மொழிகளை கற்று கொள்ளுவதில் சிரமப்படுவார்கள் என்கிறது ஆராய்ச்சி. ஆனால், அவர்களுக்கு பிடித்த துறையில், பிடித்த விதத்தில் திறமையை ஊக்குவித்ததால் லிடியன் போன்று "இளம் ஜீனியஸ்" ஆகலாம். இவரின் இசை திறமையை ஊக்குவித்த இவரின் பெற்றோருக்கு பாராட்டுக்கள். படிப்பு மட்டும் உலகம் என்று எண்ணாமல், உள் திறமையை கண்டு ஊக்குவித்ததற்கு.<br />
<br />
வாழ்த்துக்கள் லிடியன்.<br />
<br />
நன்றி.<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-29201283685660312522019-01-06T09:50:00.001-05:002019-01-06T09:50:53.545-05:00கலவை: 16 வயதினிலே டாக்டர்ம், ருமினேஷன்ம், சில அறிவு கேள்விகளும் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஏதோ ஒன்றை தேட யூ டூப் தேட விழைந்த போது, "செந்தூர பூவே, செந்தூர பூவே!" 16 வயதினிலே பாடல் கேட்க நேர்ந்தது. அப்படியே அதனை குறித்த சிந்தனை பரவ, அந்த படமும் அடுத்து பார்க்க நேர்ந்தது. பிறகு அதில் வந்த டாக்டர் குறித்த சிந்தனை. அவரின் கேரக்டர் குறித்த சிந்தனை என்று ஒன்றுக்கு பின் ஒன்றாக தொடர ஆரம்பித்தது.<br />
<br />
இது ஒரு வித தொடர் சிந்தனை. அதாவது, எதோ ஒன்றை பார்க்க போக, அதனை தொடர்ந்து சில பல சிந்தனைகள் உங்களை சிந்திக்க வைக்க, அதனை தொடர்ந்து வேறு சில விஷயங்கள் உங்களுக்கு வர என்று தொடரும். அல்லது ஒரே சிந்தனையை வேறு வேறு கோணத்தில் சிந்திக்க ஆரம்பிப்போம். உளவியலில் இந்த மாதிரியான சிந்தனை, செக்கு மாடு போன்று ஒரே விடயத்தை திரும்ப திரும்ப சிந்திக்கும் நிலை, "ருமினேஷன்", என்று அழைக்க படுகிறது. ருமினேஷனுக்கும் மனஅழுத்தம் மனசிதைவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்போது ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப நினைத்தது மனம் வருந்துகிறோமோ, அப்போதே மனஅழுத்தம் உண்டாகி மனசிதைவு ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டாகும்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-ALgP8sktrhM/XDITSUurv2I/AAAAAAAACgw/jFnfot3a7hc-SbsMNwjSjNHIGTKytxbIACLcBGAs/s1600/definition-of-rumination-stress-center-for-creative-leadership-300x162.gif" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="162" data-original-width="300" src="https://1.bp.blogspot.com/-ALgP8sktrhM/XDITSUurv2I/AAAAAAAACgw/jFnfot3a7hc-SbsMNwjSjNHIGTKytxbIACLcBGAs/s1600/definition-of-rumination-stress-center-for-creative-leadership-300x162.gif" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<br />
திரும்ப 16 வயதினிலே டாக்டர் க்கு வருவோம். இப்பொழுது எல்லாம் இது போன்ற பெர்சோனாலிட்டி கொண்டவர்கள் சர்வ சாதாரணமாக இருப்பினும். இதனை போன்றவர்கள் எல்லா காலத்திலும் இருந்து இருக்கிறார்கள், அதாவது, அவர்களின் டைம் பாஸ் காக மட்டும் ஆட்களை தேடுபவர்கள். இவர்களுக்கு தேவை எந்த கமிட்மென்ட்ம் இல்லாத fun, சந்தோசம். ஒரு பெண்ணுக்கு அல்லது பையனுக்கு வலை வீசுவது, அவர்கள் வலையில் வீழும் வரை நன்றாக பேசி, நடிப்பது. பின்னர் வலையில் வீழ்ந்தவுடன், நன்கு அவர்களிடம் இருந்து "கறக்க வேண்டியதை கறந்து விடுவது". பின்னர். எதோ காரணம் சொல்லி கழட்டி விடுவது. இவர்கள் டைம் பாஸ் லவ்வேர்ஸ். கழட்டி விட காரணம், முக்கியமாக பொருளாதார காரணமாக இருக்கும். "நீ சம்பாதிக்கல, உன் கிட்ட பணம் இல்லை, எப்படி என்னை வச்சு காப்பாத்த போற?", "உங்க அப்பா சாதாரண வேலை பாக்குறாரு, உன்னால நான் கேட்டதை வாங்கி கொடுக்க முடியாது" என்று பல பல காரணங்கள். எப்படி இந்த படத்தில் டாக்டர், "எனக்கு வரப்போற வைப், ஒரு பொட்டி கடை காரி பொண்ணா?" என்று கேட்டு கழட்டி விடுவாரோ அப்படி கழட்டி விட்டு விட்டு சென்று கொண்டே இருப்பார்கள். வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டு அவர்கள் வேலை பார்த்து போய் விடுவார்கள். நம்ம 16 வயதினிலே, டைம் பாஸ் லவ் டாக்டர் போல.<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-KS7lILO9ymk/XDIThW4wJ7I/AAAAAAAACg0/GVhkzJhocTAirO6X-7HWwLbrqNAYvqw2QCLcBGAs/s1600/hqdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="360" data-original-width="480" height="240" src="https://1.bp.blogspot.com/-KS7lILO9ymk/XDIThW4wJ7I/AAAAAAAACg0/GVhkzJhocTAirO6X-7HWwLbrqNAYvqw2QCLcBGAs/s320/hqdefault.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
முகுந்த் என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்டான்?<br />
<br />
<br />
<ul>
<li> பூமியின் மேலோட்டில் (Crust) இருக்கும் ஆழமான பகுதி எது?</li>
</ul>
<br />
<br />
வழக்கம் போல எனக்கு முதல் கேள்விக்கு "கிராண்ட் கேன்யன்" என்று சொல்லி விழித்தேன். அது தவறு என்று பதில் வந்தது. "மரீனா ட்ரென்ச் " என்னும் பசுபிக் மகா சமுத்திரத்தில் "குவாம்" நாட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு இடமே பூமியின் மேலோட்டு ஆழமான இடம். கிட்டத்தட்ட பூமியின் மேலோட்டுக்கு கீழே 25 கிலோமீட்டர் ஆழம் செல்லும் இடம் அது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-KPskaCuoorU/XDITrTexEjI/AAAAAAAACg8/iFZcBhg7E2cVyEAHsyjHIQrkAbZCeqDjACLcBGAs/s1600/mariana-trench-record-deep-tectonic-plate-volcano-rocks.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1004" data-original-width="800" height="320" src="https://2.bp.blogspot.com/-KPskaCuoorU/XDITrTexEjI/AAAAAAAACg8/iFZcBhg7E2cVyEAHsyjHIQrkAbZCeqDjACLcBGAs/s320/mariana-trench-record-deep-tectonic-plate-volcano-rocks.jpg" width="254" /></a></div>
<br /></div>
<div>
<ul>
<li>உங்களிடம் சாப்பிட தட்டுகள் இல்லை, ஆனால் இருப்பது 3 தட்டு போன்ற தட்டையான 3 பொருட்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்றில் ஏதேனும் ஒன்றை உபயோகப்படுத்தவேண்டும் என்றால், எது உபயோகப்படுத்தலாம், எதில் கிருமிகள் கம்மி?</li>
<ul>
<li>ஐபாட் </li>
<li>காய்கறி வெட்டும் கட்டிங் போர்டு</li>
<li>டாய்லட் சீட் </li>
</ul>
</ul>
</div>
<div>
இரண்டாவது கேள்விக்கு, காய்கறி வெட்டும் போர்டு என்று பதில் அளித்தவுடன் , "அது தான் ஒர்ஸ்ட்சாய்ஸ்" . என்றான்.</div>
<div>
<br /></div>
<div>
அதே போல, போன், ஐபாட் என்று எதுவும் நல்ல சாய்ஸ் கிடையாது. டாய்லெட் சீட்டில் இருக்கும் பாக்டீரியாவை விட மிக மிக அதிக பாக்டீரியா செல்போன் மற்றும் கிட்டிங் போர்டுகளில் உண்டு. </div>
<div>
கூகிளில் இதை பற்றி தேடினால் நிறைய அறிவியல் கட்டுரை கிடைக்கும் என்பதால். சில சாம்பிள்கள் மட்டும் இங்கே.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-epjDO1v1XxQ/XDIUzJIYvXI/AAAAAAAAChM/EtarIqlIOBU-gXBgOXJ6v55Jfb6r5GqcQCLcBGAs/s1600/DVmuhlwW0AAvu_S.png" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="512" data-original-width="1024" height="160" src="https://1.bp.blogspot.com/-epjDO1v1XxQ/XDIUzJIYvXI/AAAAAAAAChM/EtarIqlIOBU-gXBgOXJ6v55Jfb6r5GqcQCLcBGAs/s320/DVmuhlwW0AAvu_S.png" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-KKeWN6_yG_o/XDIVOd8zLII/AAAAAAAAChU/NVeY2IezsSYrozd7_a5tjuPray_NeuyHwCLcBGAs/s1600/skynews-iphone-insurance2go_4392556.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://3.bp.blogspot.com/-KKeWN6_yG_o/XDIVOd8zLII/AAAAAAAAChU/NVeY2IezsSYrozd7_a5tjuPray_NeuyHwCLcBGAs/s320/skynews-iphone-insurance2go_4392556.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-gHuZcVXakc8/XDIVRApuT5I/AAAAAAAAChY/Om2n41TA2CM3HjayNYvqugctOwIvrJ6kgCLcBGAs/s1600/skynews-smartphone-toilet-seat_4392560.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1600" height="240" src="https://2.bp.blogspot.com/-gHuZcVXakc8/XDIVRApuT5I/AAAAAAAAChY/Om2n41TA2CM3HjayNYvqugctOwIvrJ6kgCLcBGAs/s320/skynews-smartphone-toilet-seat_4392560.jpg" width="320" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
நன்றி </div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div>
<br /></div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-59861034853628948212019-01-01T17:46:00.000-05:002019-01-01T17:46:38.530-05:00வருக 2019!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
கடந்த வருடம் பெரும்பாலும் நன்றாக சென்றது என்றாலும் கடைசி இரண்டு மாதங்கள், நிறைய ஸ்ட்ரெஸ் கொடுத்தன. அதிலும் நடந்த சில விஷயங்கள் மனதை பெரிதும் பாதித்தன. முதல் விஷயமாக எங்கள் தோழிகள் குரூப்பில் நடந்த மரணம். அதுவும் சிறுவயது பெண்ணின் மரணம், எங்கள் அனைவரையும் உலுக்கிய ஒரு சம்பவம் அது. எவ்வளவு தூரம் பிடிவாதமாக இருக்கவேண்டும் அல்லது இருக்க கூடாது என்று எங்கள் அனைவருக்கும் செக் வைத்தது அந்த நிகழ்வு. </div>
<div>
<br /></div>
எது சிறந்தது? ஆங்கில மருத்துவமா இல்லை இந்திய ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவமா?<br />
<br />
வாட்ஸாப் முகநூல் என்று எது திறந்தாலும் உங்களுக்கு நிறைய பாரம்பரிய மருத்துவம், உணவுகள் மற்றும் பழக்க வழக்கங்கள் தான் சிறந்தது, மற்றவை எல்லாம் கார்பொரேட் சதி என்று செய்திகள், பிரச்சாரங்கள் காணலாம். இது போன்ற பிரச்சாரங்கள் எவ்வளவு தூரம் உண்மை எவ்வளவு ஜோடிக்கப்பட்ட பிரச்சாரங்கள். இந்த கேள்வி எனக்குள் அடிக்கடி<br />
<br />
<div>
எவ்வளவு தூரம் ஒருவர் நம் மருத்துவ முறை தான் சிறந்தது, பாரம்பரியம், இயற்க்கை மருத்துவம், மூலிகை, ஆயுர்வேதம் தான் உண்மையான மருத்துவம் மற்ற ஆங்கில மருத்துவம் எல்லாம் டுபாக்கூர் என்று இருக்கலாம். </div>
<div>
<br /></div>
<div>
அப்படி ஒருவர் இருந்து, ஆங்கில மருத்துவத்தில் சாதாரணமாக தீர்க்க கூடிய ஒரு வியாதியை கவனிக்காமல், முற்றவைத்து, பாரம்பரிய மருத்துவத்தை நாடி எந்த பயனும் இல்லாமல் இறந்த ஒரு நிகழ்வே அந்த தோழியின் மரணம். தினசரி நான் அறிவுரை கூறினாலும், எதனையும் அவள் காது கொடுத்து கேட்கவில்லை. அட்வைஸ், பிரீ அட்வைஸ் என்று ஒதுக்கி விட்டு இருக்கிறார்கள். அந்த தோழியை நினைத்து நினைத்து நாங்கள் வருந்த மட்டுமே முடிந்தது. ஓரளவுக்கு மேல் எவருக்கும் அறிவுரை கூற இயலாது, என்று நான் கற்று கொண்டது அந்த நிகழ்வில் நடந்தது.</div>
<div>
<br /></div>
<div>
இரண்டாவது நிகழ்வு, ஒரு தோழியின் மிட் லைப் மெனோபாஸ் வாழ்வில் இருந்த டெப்ரேசன் கவனிக்கப்படாமல் விடப்பட்டு அவள் எஸ்ட்ரீம் எல்லைக்கு சென்ற நிகழ்வு அவளின் வாழ்க்கையில் பல கசப்பான நிகழ்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை போன்ற நேரங்களில் கணவன் மற்றும் சொந்தங்களின் அரவணைப்பு மிக தேவை. அது இல்லாமல் அவர்களே எதிரியாக இருந்தால் என்ன நடக்கும் என்று நான் கண்டது. இங்கும், எதுவும் செய்ய முடியாமல், நம்மால் கட்டுப்படுத்த முடியாமல் சில விஷயங்கள் நடந்தே தீரும் என்று நான் கண்டது.</div>
<div>
<br /></div>
<div>
எவ்வளவு முயன்றாலும் சில விஷயங்கள் நடக்கும் என்றால் நடந்தே தீரும் என்று கடந்த வருடம் காட்டி சென்று இருக்கிறது. </div>
<div>
<br /></div>
<div>
ஒவ்வொரு வருடமும் பிறக்கும் போது, இந்த வருடம் அது செய்ய வேண்டும் இது செய்யவேண்டும் என்று நினைப்பதுண்டு. அது ரெசொலூஷன் என்றெல்லாம் இல்லை, மாறாக ஒரு டுடூ லிஸ்ட் என்று வேண்டுமானால் சொல்லலாம்.</div>
<div>
<br /></div>
<div>
அப்படி இந்த வருடம், ஸ்ட்ரெஸ் கண்ட்ரோல் செய்வது, அல்லது ஸ்ட்ரெஸ் வந்தால் எப்படி சமாளிப்பது, என்னுடைய டு டூ லிஸ்டில் முதலில் இருக்கிறது. , முடிந்தவரை மாதம் ஒரு பதிவாவது இட வேண்டும், தியானம் செய்ய வேண்டும், என்பன ஒரு சில டு டூ ஐட்டங்கள். அதில் , முகுந்தின் இண்டெர்ஸ்ட் களை பப்லிஷ் செய்வது என்பதும் ஒன்று. அதன் விளைவே <a href="https://itsmemukund.blogspot.com/">முகுந்தின் பெர்சனல் ப்ளாக் </a></div>
<div>
<br /></div>
<div>
முகுந்த் அவனுடைய பள்ளி ப்ராஜெக்ட் காக ஒரு கதை எழுதி அதில் சில பல படங்களையும் வரைந்து இருந்தான். அவனை உற்சாகப்படுத்த நான் ஒரு ப்ளாக் உருவாக்கி அதில் அவனுடைய கதையை வெளியிட்டு இருக்கிறேன். நிறைய இலக்கண பிழைகள்/எழுத்து பிழைகள் அதில் இருக்கலாம்.</div>
<div>
<br /></div>
<div>
முடிந்தால் படித்து கருத்திடவும். நன்றி.</div>
<div>
<br /></div>
<div>
<a href="https://itsmemukund.blogspot.com/2019/01/the-story-of-city-numberoppolis-story.html">https://itsmemukund.blogspot.com/2019/01/the-story-of-city-numberoppolis-story.html</a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
எல்லோருக்கும் எல்லா வளமும் கிடைத்திட இந்த புது வருடத்தில் எல்லா வல்ல இறைவன்/இயற்கை அருள்புரியட்டும்!!</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
Happy New Year 2019.</div>
<div>
<br /></div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-51687745388015360602018-11-11T11:18:00.001-05:002018-11-11T11:24:42.898-05:00சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒருவரிடம் ஒரு 6-15 நிமிஷம் எதுவும் செய்யாம ஒரு ரூமுக்குள்ள சும்மா இருக்க முடியுமா? எதுவும் செய்ய கூடாது. நோ போன் பாக்குறது, நோ புக் படிக்கிறது, நோ டிவி, நோ கேம்ஸ், தூங்க கூடாது. உக்கார்ந்த இடத்தை விட்டு நகர கூடாது, நீங்களும் உங்கள் எண்ணங்கள் மட்டுமே. இப்படி ஒரு ஆய்வு 11 வெவ்வேறு இடங்களில்நடத்தப்பட்டது. என்ன முடிவு வந்திருக்கும்? சயின்ஸ்ஆய்விதழில் கட்டுரை ஒன்று பார்க்க நேர்ந்தது.<br />
<br />
இந்த ஆய்வு நேரத்துக்கு பிறகு வெளியே வரும் ஆட்களிடம் உங்களின் அனுபவம் எப்படி இருந்தது? என்று கேட்ட கேள்விக்கு, "ஒரே கொடுமையாக இருந்தது" என்றே பலரின் அனுபவம்.<br />
சரி உங்களுக்கு சும்மா இருக்க பிடிக்கவில்லை, உங்களுக்கு ஒரு தூண்டல் தருகிறோம், அது மைல்டு எலக்ட்ரிக் ஷாக். தற்போது, நீங்கள் சும்மா இருப்பதை தேர்ந்தெடுப்பீர்களா?, அல்லது எலக்ட்ரிக் ஷாக் கை தேர்ந்தெடுப்பீர்களா? என்று கேட்டால் 67% ஆண்கள், என்னால சும்மா இருக்க முடியாது? எலக்ட்ரிக் ஷாக் கொடுங்க? என்று கேட்டு இருக்கிறார்கள். ஆனால் 25% பெண்கள் அதனை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். <br />
<br />
<br />
ஏன் சும்மா இருப்பது அவ்வளவு கஷ்டம்? சும்மா இருக்கும் போது, தனக்கு உள்நோக்கி, தன்னுடைய குறைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனை சுழற்சியில் மாட்டி கொள்கிறார்கள். அதனால் எப்படியாவது அந்த சுய சிந்தனையில் இருந்து தப்பிக்க வேறேதாவது ஒரு வெளி தூண்டல் அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.<br />
<br />
<br />
இதனுடன் தொடர்புடைய டெலிகிராப் செய்தி ஒன்று பார்க்க நேர்ந்தது. அது எப்படி தற்போதைய தலைமுறை (16-24 வயதுக்கு உட்பட்டவர்கள்) வாரத்தில் 34.3 மணி நேரம் நேரம் போக்குவதற்காக இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. இது 10 வருடங்களுக்கு முன்பு இருந்தது விட 2 மடங்கு அதிகம். இந்தியாவும் இந்த விஷயத்தில் விதிவிலக்கல்ல, இந்தியர்கள் தினசரி 3 மணி நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.<br />
<br />
சும்மா இல்லாமல் இருக்க டைம் பாஸுக்காக எந்த எல்லைக்கும் போக இவர்கள் தயாராக இருக்கிறார்கள், அது நெகடிவ் விஷயம் ஆக கூட இருக்கலாம்.<br />
<br />
<br />
இந்த கட்டுரை படித்த பிறகு எனக்கு வடிவேலுவின் "சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?" என்ற காமெடி நினைவுக்கு வந்தது.<br />
<div>
<br /></div>
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen="" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/WMFx1xPE0qs/0.jpg" frameborder="0" height="266" src="https://www.youtube.com/embed/WMFx1xPE0qs?feature=player_embedded" width="320"></iframe></div>
<div>
<br /></div>
<span style="background-color: white; color: #333333; font-family: "austin news text roman" , "georgia" , "times" , serif; font-size: 17px;"><br /></span>
<br />
References<br />
<br />
<h3 class="highwire-cite-title-wrapper media__headline" style="box-sizing: inherit; caret-color: rgb(51, 51, 51); color: #333333; font-family: "Roboto Condensed", "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; line-height: 1.2; margin-bottom: 7.5px; margin-top: 0px; padding-top: 0px;">
<div class="highwire-cite-title media__headline__title" style="box-sizing: inherit;">
<span style="font-size: x-small; font-weight: normal;">1. Just think: The challenges of the disengaged mind</span></div>
</h3>
<div class="highwire-cite-authors byline" style="box-sizing: inherit; color: #666666; font-family: "Roboto Condensed", "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; text-transform: uppercase; width: 495.78125px;">
<span style="font-size: x-small;">BY <span class="highwire-citation-authors" style="box-sizing: inherit;"><span class="highwire-citation-author first" data-delta="0" style="box-sizing: inherit;">TIMOTHY D. WILSON</span>, <span class="highwire-citation-author" data-delta="1" style="box-sizing: inherit;">DAVID A. REINHARD</span>, <span class="highwire-citation-author" data-delta="2" style="box-sizing: inherit;">ERIN C. WESTGATE</span>, <span class="highwire-citation-author" data-delta="3" style="box-sizing: inherit;">DANIEL T. GILBERT</span>, <span class="highwire-citation-author" data-delta="4" style="box-sizing: inherit;">NICOLE ELLERBECK</span>, <span class="highwire-citation-author" data-delta="5" style="box-sizing: inherit;">CHERYL HAHN</span>, <span class="highwire-citation-author" data-delta="6" style="box-sizing: inherit;">CASEY L. BROWN</span>, <span class="highwire-citation-author" data-delta="7" style="box-sizing: inherit;">ADI SHAKED</span></span></span></div>
<div class="highwire-cite-metadata byline" style="box-sizing: inherit; color: #666666; font-family: "Roboto Condensed", "Helvetica Neue", Helvetica, Arial, sans-serif; text-transform: uppercase; width: 495.78125px;">
<span style="font-size: x-small;"><em style="box-sizing: inherit;">SCIENCE</em><time style="border-left-color: rgb(102, 102, 102); border-left-style: solid; border-left-width: 1px; box-sizing: inherit; margin-left: 7.5px; padding-left: 7.5px; white-space: nowrap;">04 JUL 2014</time> : 75-77</span></div>
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">2. https://www.telegraph.co.uk/news/2018/08/01/decade-smartphones-now-spend-entire-day-every-week-online/</span><br />
<span style="font-size: x-small;"><br /></span>
<span style="font-size: x-small;">3. https://economictimes.indiatimes.com/magazines/panache/indians-spend-roughly-3-hours-a-day-on-smartphones-but-are-they-paying-big-bucks-for-apps/articleshow/62866875.cms</span><br />
<span style="font-size: x-small;"><br /></span></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-91556675109396232292018-11-04T14:07:00.002-05:002018-11-04T14:15:22.597-05:00பழைய ரூபாய் நோட்டும், பரியேறும் பெருமாளும், ஹிந்தியும்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
சோசியல் மீடியா வந்தாலும் வந்தது, அதில் எந்த வித பில்டரும் இல்லாமல் வந்ததை எல்லாம் சொல்லும், அடித்து சத்தியம் செய்யும், மற்றவர்களை பேச விடாமல், தான் பேசுவது மட்டுமே சரி என்று விவாதிக்கும் சிலரும் இருக்க தானே செய்கிறார்கள். அப்படி ஒரு குரூப்பிடம் மாட்டி கொண்ட என்னுடைய அனுபவம் இங்கே.<br />
<br />
அது 1930 களில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டு குறித்தது.( அது உண்மையான நோட்டா, இல்லையா என்று தெரியவில்லை). அதனை ஒரு தோழி ஷேர் செய்து, பாருங்கள் இதில் "இந்தி இல்லை", என்று அவள் குறிப்பிட்டு விட்டாள். உடனே இன்னொரு தோழி, வரிந்து கட்டி கொண்டு. அதெல்லாம் உண்மை இல்லை, நோட்டின் அடுத்த பக்கத்தை பார்க்கவும். இந்தி எல்லாவற்றிலும் இருக்கும். "இந்த நோட்டு போலி", என்று விவாதம் மேல் விவாதம். அதோடு நின்று கொள்ளாமல், "இந்தி கற்று கொள்ளாததால் நாம் இழந்தது நிறைய" என்றுஅவள் சொல்ல "இந்தி ஆதரிப்பு பிரச்சாரமாக" ஆகி விட்டு இருந்தது.<br />
<br />
அவளிடம் உரையாடிய பிறகு பல சந்தேகங்கள். "ஒரு சிலரிடம் தர்க்கம் செய்வது என்பது ஏன் முடியாமல் போகிறது?, எப்படி விடாமல் தான் சொல்வது சரி என்று வாதிக்கிறார்கள். அடுத்தவர்களை பேச விடாமல், அவர்கள் எந்த விடயம் பேச ஆரம்பித்தாலும் அதற்கென்று ஒரு எதிர் பாயிண்டு எப்படி தயாரித்து பேச முடிகிறது.?"<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-475390-bQf4/W99FDuDBoEI/AAAAAAAACdI/R-ZoimNo2ak-UnYu9X4t_0oB5F9Eow3fQCLcBGAs/s1600/1917-1930_Issue_rupee_1_note_reverse.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="413" data-original-width="753" height="175" src="https://4.bp.blogspot.com/-475390-bQf4/W99FDuDBoEI/AAAAAAAACdI/R-ZoimNo2ak-UnYu9X4t_0oB5F9Eow3fQCLcBGAs/s320/1917-1930_Issue_rupee_1_note_reverse.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<br />
மேலும், இந்த பிரச்னை கட்டாயம் பல இடங்களில் பேச/விவாதிக்க பட்டு இருக்கும், என்பதால், இது சரியா தவறா என்ற விவாதிக்க நான் வரவில்லை. ஆனால், உண்மையில் ஹிந்தி கற்று கொள்ளாததால், நாம் நிறைய இழந்தோமா?<br />
<br />
இங்கு வந்த பிறகு, ஆபிசில் நிறைய இந்தியர்கள் இருப்பின், எந்த மாநில மக்களாயினும் சரி, இந்தியில் பேசுவதை பார்த்து இருக்கிறேன். அதே நேரம், தமிழ் பேசும் மக்கள், எனக்கு ஹிந்தி தெரியாது, ஆங்கிலத்தில் பேசுங்கள் என்று பேசுவதையும் பார்த்திருக்கிறேன். இந்தி படிக்காததால் எந்த பிரச்னையும் அவர்கள் அனுபவித்ததாக தெரியவில்லை. ஒரு வேலை இந்தியாவில் இருப்பவர்கள் இந்தி படிக்காததால் பிரச்சனைகள் அனுபவிக்கிறார்களா?. எனக்கு தெரிந்து IT வேளைகளில் இருக்கும் பலரும், பெங்களூரு, ஹைதெராபாத், சென்னை, புனே போன்றஊர்களில் வசிக்கும்போது ஆங்கிலத்தில் பேசி சமாளிப்பதை பார்த்திருக்கிறேன். அங்கிருக்கும் பாஷையிலும் பேசி சமாளிப்பதற்கு பார்த்திருக்கிறேன். அதனால், தெரியாமல் கேட்கிறேன், ஹிந்தி கட்டாயமாக படிக்காததால் நாம் இழந்தது நிறையவா?, இல்லை இது பிரச்சாரமா?<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-fQceOmrxKuk/W99B506DLqI/AAAAAAAACcw/8JgNnOopQiwkJvo5Im6dzwvqYy98BhXsACLcBGAs/s1600/images.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="720" height="320" src="https://2.bp.blogspot.com/-fQceOmrxKuk/W99B506DLqI/AAAAAAAACcw/8JgNnOopQiwkJvo5Im6dzwvqYy98BhXsACLcBGAs/s320/images.jpeg" width="213" /></a></div>
<br />
தற்போது, இதனை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல முகத்தில் அறைந்த படம் பார்த்த திருப்தி. இப்போயெல்லாம் எங்கப்பா சாதி பாக்குறாங்க/ என்று சொல்லி திரியும் சிலரின் கேள்விக்கு அளிக்கப்பட்ட பதில், "பரியேறும் பெருமாள்", உண்மைக்கு மிக அருகில் எடுக்கப்பட்ட உண்மை விளக்கம்.<br />
<br />
நான் முதுநிலை படித்த கல்லூரியில் எப்போதும் விரிவுரையாளர்கள், பையன்கள் முதுகில் நன்கு தட்டி கொடுப்பார்கள். முன்பு எனக்கு அதன் அர்த்தம் புரியாது. ஆனால், பிறகு மற்றவர்கள் சொல்ல அறிந்து கொண்டது. அவர்கள், தட்டி கொடுப்பது போன்று எதனை தேடுகிறார்கள், என்பது, அதே போல, இளங்கலை படித்த போது, என்னுடன் படித்த சில பெண்கள், எப்படி ஒரு சில பெண்களிடம் நடந்து கொண்டார்கள்?, என்பதையும் அறிந்து இருந்தேன். அவர்களிடம் சாப்பாடு வாங்கி சாப்பிட மாட்டார்கள்அல்லது எதோ சொல்லி பாலிஷ் ஆக தவிர்ப்பார்கள்.<br />
<br />
<div>
எனக்கென்னவோ, இந்த படம் பார்த்த பிறகு, சில எண்ணங்கள். அந்த "பரியனின்" இடத்தில் ஒரு பெண் இருந்திருப்பின் எவ்வாறு இருந்திருக்கும்?. ஒரு ஏழை பெண், கீழ் சாதியாய்இருப்பின், ஆங்கிலம் தெரியாமல், மற்றவர்களிடமும் கேட்டு தெரிந்து கொள்ளமுடியாமல், அந்த பெண்ணின் பொருளாதார மற்றும் சாதிய நிலையை குத்தி காட்டி காட்டியே, அவளை முழுதாக கொன்றிருப்பார்கள். ஏதேனும் மேல் சாதி பையனிடம் அந்த பெண் பழகியிருக்கிறார் என்றால், அடித்து உதைத்து முகத்தில் சிறுநீர் கழித்திருக்க மாட்டார்கள். மாறாக, அவளின் மானத்தை எடுத்து அப்போதே பிணமாக்கி இருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை. </div>
<div>
<br /></div>
<div>
இங்கே சாதி என்ற குறியீட்டை கூட எடுத்து விடுவோம். ஒரு ஏழை பெண், கிராமத்தில் வாழும், ஒரு பெண் படிக்கிறாள். படிக்க விரும்புகிறாள், என்று வைத்து கொள்ளுவோம். ஆங்கில அறிவு கொஞ்சம் மட்டுமே இருக்கும். மார்க்கும் நிறைய எடுக்கவில்லை அல்லது 10 ஆம் வகுப்பில் பெயில் என்றால் அவ்வளவு தான், படிப்பு வரல என்று கல்யாணம் செய்து வைத்து இருப்பார்கள். திரும்ப படிக்க வைப்பதோ அல்லது டுடோரியல் சேர்த்து படிக்கவைத்து பாஸ் செய்வதோ பெரிய விஷயமாகி இருக்கும். அப்படியே படிக்க வைத்த பெற்றோர் இருப்பினும். கல்லூரி வரை அந்த பெண் சென்றிருந்தால் பெரிய விஷயம். "பொம்பள புள்ளைய எதுக்கு படிக்க வச்சிட்டு, பேசாம கல்லாணம் பண்ணி வையுங்க", என்று பலரும் பரிந்துரைத்து இருப்பார்கள். திரும்ப படிக்க வைப்பது போன்ற சலுகை எல்லாமே பையனுங்களுக்கு தான்.</div>
<div>
<br /></div>
<div>
இந்த உண்மை நிலவரத்தில், ஹிந்தியும் கட்டாயமாக்க பட்டிருந்தால், என்ன ஆகியிருக்கும். தமிழை தவிர பிற மொழியான ஆங்கிலமே சொல்லி கொடுக்க யாரும் இல்லாமல் இருக்கும் நம்ம ஊரு பப்லிக் பள்ளிகளில் ஹிந்தி சொல்லி கொடுக்க யாருப்பா இருப்பாங்க. அதுலயும் பெயில் ஆகுங்க புள்ளைக. இதையே காரணம் காட்டி புள்ளைக படிப்பை நிப்பாட்டிட்டு வேலைக்கு அனுப்பி இருப்பாங்க இல்லாட்டி கல்யாணம் பண்ணி கொடுத்து இருப்பாங்க கிராமத்தில இருக்கும் பெத்தவங்க. </div>
<div>
<br /></div>
<div>
சரி, கிராம பிள்ளைகளை விட்டுடுவோம். பல நகரங்களில் தற்போது பிள்ளைகள் ஹிந்தி கற்று கொள்கிறார்கள். சொல்ல போனால், தமிழை கற்று கொள்வதே இல்லை. மார்க்குக்காக, ஹிந்தி, சமஸ்க்ருதம், பிரெஞ்சு. ஜெர்மன், ஆங்கிலம் போன்றவற்றை மற்றும் கற்றுக்கொள்கிறார்கள். அதுவும் மிக மிக தொடக்க நிலை மொழி அறிவு மட்டுமே இவர்கள் அறிந்துஇருக்கிறார்கள். இதனால் என்ன பயன்?. இவர்களால் கோர்வையாக ஹிந்தியில் பேச முடியுமா?, அல்லது பிரெஞ்சு அல்லது ஜெர்மனில் தான் பேச முடியுமா?. ஒன்றும் இல்லை. </div>
<div>
<br /></div>
<div>
அதே நேரம், எனக்கு தெரிந்தே, 5ஆவது வரை படித்த ஒரு அம்மா, மும்பையில் வசிக்க நேர்ந்த 6 மாதத்தில் அழகான ஹிந்தி கற்று கொண்டு விட்டார். மொழியை பாடமும் பாட திட்டமும் கற்றுக்கொடுக்காத மொழியை சுற்றுசூழலும், தேவையும் கற்றுகொடுத்து விட்டது. எவ்வளவோ வடஇந்திய குடும்பங்கள், மதுரையில் கோயிலை சுற்றி கடைகள் வைத்து ஆக்கிரமித்து கொண்டுள்ளனர். அழகாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் எந்த ஊரில் தமிழ் எழுத படிக்க கற்று கொண்டனர்?. எல்லாம் சூழல் கற்று கொடுத்தது.</div>
<div>
<br /></div>
<div>
சரி, மறுபடியும், தொடங்கிய கேள்விக்கு வருவோம். </div>
<div>
<br /></div>
<div>
ஹிந்தி கட்டாயமாக படிக்காததால் நாம் இழந்தது நிறையவா?, இல்லையா?</div>
<div>
<br /></div>
<div>
வாசிப்புக்கு நன்றி.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-8282650924835560702018-10-27T10:20:00.001-04:002018-10-27T10:20:32.329-04:00எது அழகானது? எது மனதுக்கு மகிழ்ச்சி தரும்? ஒரு அறிவியல் பார்வை! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
எங்கே வெளியே சுற்றுலா சென்றாலும் இயற்கை காட்சிகள் கண்டு புகைப்படம் எடுப்பது என்பது புகைப்பட கருவிகள் வந்த காலத்தில் இருந்து நடந்து கொண்டிருக்கிறது. அதே இடங்களை முன்பே பலர் பல பல விதங்களில் புகைப்படம் எடுத்திருப்பார்கள். நிறைய பத்திரிக்கைகள், இணைய தளங்களில் கோடிக்கணக்கில் பார்த்திருப்போம். இருப்பினும் அந்த இயற்க்கை காட்சியை பார்க்கும் போது நமக்குள் ஒரு சந்தோசம், அதனை நாமும் புகைப்படம் எடுப்போம். ஏன் இப்படி?, என்று பலமுறை நான் யோசித்ததுண்டு.<br />
<br />
என்னுடைய சமீபத்திய உதாரணம், கொலோராடோ சென்றிருந்தது, அங்கு க்ளென்வூட் என்னும் ஒரு ஊரில் ஹைக்கிங் சென்றது. 2.8 மைல் ஹைக்கிங் என்றாலும் ரொம்ப கஷ்டப்பட்டு ஏறி அங்கு சென்றதும், மெய் மறந்து ரசித்தது ஹாங்கிங் லேக் எனப்படும் தொங்கும் ஏரி.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-KrCYG-3uXKU/W9RzPHHKZ2I/AAAAAAAACcY/-Q5YaVu97SYPUi-eHn-ai5rkH7UU_LAJQCLcBGAs/s1600/11113423_679398485537431_7275234566861338549_n.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="400" data-original-width="400" height="320" src="https://4.bp.blogspot.com/-KrCYG-3uXKU/W9RzPHHKZ2I/AAAAAAAACcY/-Q5YaVu97SYPUi-eHn-ai5rkH7UU_LAJQCLcBGAs/s320/11113423_679398485537431_7275234566861338549_n.jpg" width="320" /></a></div>
<br />
மேலும் தொங்கும் ஏரி பற்றி தெரிந்து கொள்ள. <a href="https://www.tripadvisor.com/Attraction_Review-g33446-d146055-Reviews-Hanging_Lake-Glenwood_Springs_Colorado.html">https://www.tripadvisor.com/Attraction_Review-g33446-d146055-Reviews-Hanging_Lake-Glenwood_Springs_Colorado.html</a><br />
<br />
இயற்கை காட்சிகள் அழகானவை என்று எப்படி நாம்/நம் மனம் தீர்மானிக்கிறது? அதே போல, அழகான ஓவியங்கள், கலை பொருட்கள் இவை எல்லாம் பார்க்கும் போது மனது மகிழ்கிறது? ஏன்?. அழகென்பது என்ன? , என்று பலமுறை யோசித்தது உண்டு. அதற்க்கான விடையாக ஒரு TED டாக் பார்க்க நேர்ந்தது. டெனிஸ் டட்டன் என்ற அறிவியலார் அவர்களின் ""A Darwinian theory of beauty" தமிழில் "அழகிற்கான டார்வின் கோட்பாடு" என்பதாகும்.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/PktUzdnBqWI/0.jpg" src="https://www.youtube.com/embed/PktUzdnBqWI?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br />
<br />
டெனிஸ் அவர்களின் உரையின் படி, "எதனை நம் மூளை அழகென்று தீர்மானிக்கிறது?, என்பது, நம் மூதாதையர்களான கற்கால மனிதர்களிடம் இருந்து வந்தது. கற்கால மனிதர்கள் எதனை, எந்த நிலப்பரப்பை பாதுகாப்பானது என்று நினைத்தார்களோ, அதுவே நிம்மதியானது, அழகானது என்று மூளையில் பதியப்பட்டு இருக்கிறது. உதாரணமாக, பரந்து விரிந்த நிலப்பரப்பு, அங்கு ஒரு நதி/குளம்/ஏரி போன்ற நிலப்பரப்பு, அங்கங்கு சில, ஆடு,மாடு, முயல் போன்ற மேயும் மிருகங்கள். நிறைய மரங்கள். இவை போன்ற ஒரு காட்சி, கற்கால மனிதனை பொறுத்தவரை, ஒரு பாதுகாப்பான இடம். ஏனென்னில், அவனுக்கு, உணவு, குடிக்க தண்ணீர், எந்த கொடிய மிருகங்களும் இல்லாத சூழல், என்பது ஒரு பாதுகாப்பை தந்து இருக்கிறது. அதுவே மனித மூளையில், அழகென்பது பதிவாகி இருக்கிறது.<br />
<br />
அந்த பரிணாம தோற்றம் பதியப்பட்ட காரணத்தாலே, தற்கால மனித மனதிலும் பரந்து விரிந்த நிலப்பரப்பை நீர்.நிலம், மரங்கள், விலங்குகள் நிறைந்த இடப்பரப்பு அழகாக தெரிகிறது.<br />
<br />
<br />
"சரி, நிலப்பரப்பை விடுங்கள், ஓவியங்கள், கலைப்பொருட்கள் எல்லாம் அழகாக தெரிவதன் பின்னணி என்ன?". அதற்க்கு டெனிஸ் அவர்கள், நம்மை அதே கற்கால மனிதர்கள் காலத்துக்கு முன்னெடுத்து செல்கிறார். மயில் றெக்கை உதாரணமும் நமக்கு தருகிறார். மயில்கள் எதற்கு றெக்கை வைத்து இருக்கின்றன. அதனால் அவைகளுக்கு எந்த பிரயோஜனம் இல்லை. ஆனால், அவைகள், தன் துணையை வசீகரிக்க தம் இறக்கையை உபயோகிக்கின்றன. அதே போல, கற்கால சுவர் ஓவியங்கள், கற்களால் செய்த சிறு சிறு கலை பொருட்கள் அனைத்தும் இணையை வசீகரிக்க என்று மனிதர்களுக்கு உதவி இருக்கின்றன. அதே எண்ணங்கள் படிமங்கள் ஆக மூளையில் படித்ததன் விளைவு மனித மூளைக்கு கலைப்பொருட்கள், ஓவியங்கள், இசை என்று பல பல விஷயங்களை பார்க்கும் போதும் கேட்கும் போதும் மனதுக்கு சந்தோசம் தருகிறது. அந்த நேரங்களில் மூளையில் சந்தோச தரும் ஹார்மோன் ஆன டோபோமின் சுரப்பு அதிகம் இருக்கிறது. இது அழகானது, என்று பல விஷயங்களை மனதுக்கு மகிழ்ச்சியும் தருகிறது.<br />
<br />
<br />
ரொம்ப நாளைக்கு பிறகு என்னுடைய போனில் ரிப்பீட் மோடில் நான் கேட்டு கொண்டிருக்கும் பாடல்கள், "96" பட பாடல்கள். என்ன ஒரு மெஸ்மெரைசிங். அதுவும் "வசந்த காலங்கள்" பாட்டுநான் எப்பொழுதும் முணுமுணுக்கும் ஒன்றாகி விட்டது. வெல்டன் இசையமைப்பாளர் "கோவிந்த் வசந்தா"<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/KZZLqoRuuHw/0.jpg" src="https://www.youtube.com/embed/KZZLqoRuuHw?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br />
<br />
<br />
மனதுக்கு நிம்மதி தரும், சந்தோசம் தரும் எல்லாம் அழகு தான்!, அது புகைப்படம், பாடல், கலைப்பொருள், இயற்க்கை காட்சி, ஒரு குழந்தையின் சிரிப்பு. என்று எதுவானாலும் இருக்கலாம்.<br />
<br />
<br />
நன்றி.<br />
<br />
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-36565894205490408992018-09-09T12:14:00.000-04:002018-09-09T12:14:12.922-04:00சோசியல் மீடியா புகைப்படங்கள், மனஅழுத்தம் மற்றும் பொருளாதார நிலை!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
மனநிலை மனோ தத்துவம் இவற்றில் எல்லாம் நான் ரொம்ப கவனம் செலுத்தியதில்லை. ஆனால்,தற்போது நாடாகும் பல விஷயங்களை படிக்கும் போதும் உற்று நோக்கும் போதும், அவை எவ்வளவு முக்கியமானவை வாழ்வியலுக்கு என்று தெரிகிறது.<br />
<br />
மனிதன் ஒரு சமூகம் சார்ந்த குரங்கு. சோசியல் அனிமல். ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பது, என்பது மிக முக்கியம். நமக்கு அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது மிக முக்கியம். நான், எனக்காக வாழ்கிறேன், என்று சொல்லி திரிபவர்கள் கூட, எதோ "ஒரு விஷயத்தை" ரிகக்னிஷன்ஐ மற்றவர்களிடம் இருந்து எதிர் பார்க்கிறார்கள். இது ஒரு வகை அட்டென்சன் சீக்கிங் அதாவது "கவனத்தை கோருதல்". என்னை பார், எப்படி இருக்கிறேன் பார். என்று காட்டுதல். இது, உடல் அழகில் ஆகட்டும், பணத்தில் ஆகட்டும், பட்டு பீதாம்பரம், விளம்பரம்...என்று பல பல வழிகளில் கையாள படுகிறது.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-ex-_m9N3_LY/W5VGt0H3qhI/AAAAAAAACbg/Nj1XqUNXTuYzhLvvzUydpU-mN-RiB6E6gCLcBGAs/s1600/AAEAAQAAAAAAAA2XAAAAJDJlNDlkYTU0LWEyMDItNDc5Mi1hNGE1LTFhMjI5ODI5NzEzMg-640x383.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="383" data-original-width="640" height="191" src="https://4.bp.blogspot.com/-ex-_m9N3_LY/W5VGt0H3qhI/AAAAAAAACbg/Nj1XqUNXTuYzhLvvzUydpU-mN-RiB6E6gCLcBGAs/s320/AAEAAQAAAAAAAA2XAAAAJDJlNDlkYTU0LWEyMDItNDc5Mi1hNGE1LTFhMjI5ODI5NzEzMg-640x383.jpg" width="320" /></a></div>
<br />
இதெல்லாம் தற்போதைய கலாச்சாரம், முன்பெல்லாம் இப்படி ஏதும் இல்லை என்று சொல்லுபவர்களுக்கு, முன்பும், இவை போன்ற அட்டென்ஷன் சீக்கிங் இருந்திருக்கிறது..ஆனால் வேறு மாதிரி. உதாரணமாக, என்னுடைய பாட்டி காலத்திய கதையாக, மாதம் ஒரு புடவை எடுப்பது, உடனே அதனை கோவில், விசேஷங்கள், கல்யாணம் என்று கட்டி கொண்டு போவது..இவை எல்லாம் சாதாரணம். எனக்கு தெரிந்தே, எங்கள் பக்கத்து வீட்டு பணக்கார அம்மா, எப்பொழுது நகை வாங்கினாலும், கொண்டு வந்து எல்லோரிடமும் காட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். இது ஒரு வகையான "அட்டென்சன் சீக்கிங்". பார் நான் உங்களை விட எவ்வளவு நகை வைத்திருக்கிறேன் பார் என்று காட்டுவதற்காக.<br />
<br />
தற்போது சோசியல் மீடியா வந்த பிறகு, இப்படியான கவனம் கோருதல் அதிகமாகி இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். விளையாட்டாக சோசியல் மீடியாவுக்குள் வரும் பலரும், தொடக்கத்தில் எந்த புகை படங்களும் பகிராமல் இருந்தாலும், காலம் செல்ல செல்ல அடுத்தவர்கள், நண்பர்கள் பகிரும் போது அதனால் ஈர்க்கப்பட்டு மெதுவாக பகிர ஆரம்பிக்கிறார்கள். ஆனால், மெதுவாக, மெதுவாக, புகைப்படம் பகிர என்றே மேக்கப் செய்துகொள்வது, புது உடை உடுத்துவது, என்ன கன்டென்ட் கொடுக்கலாம், என்று அதே வேலையாக திரிவது என்று தன்னை அடிமையாக்கி கொள்கிறார்கள்.<br />
<br />
ஆனால், இப்படி விளையாட்டாக ஆரம்பிக்கும் பழக்கம், நாட்கள் செல்ல செல்ல,<a href="https://www.upmc.com/media/news/lin-primack-sm-depression"> சந்தோசத்தை தருவதை விட, டிப்ரெஷன்/மன அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கிறது என்று நான் வாசித்த சில ஆராய்ச்சி கட்டுரைகள் தெரிவிக்கின்றன. </a><br />
<br />
சோசியல் மீடியாவில் படங்களை பகிரும் பலரும், தம்முடைய புது உடை, கார், நகை, என்று பகிர்வது மட்டும் அல்லாமல், என்னுடைய கணவர். காதலர் வாங்கி கொடுத்தது என்று பகிர்வது தற்போது சகஜம். சொல்ல போனால், வீட்டில் நடக்குமா தெரியாது ஆனால் சோசியல் மீடியாவில் காதல் செய்யும், அன்பை பகிரும் கணவன், மனைவி அதிகம். இது ஒரு வித அட்டென்ஷன் சீக்கிங். "பாரு!! நான் உன்னை விட பெரிய பரிசு காதலர் தினத்துக்கு/கல்யாண நாளுக்கு வாங்கியிருக்கேன், என் கணவர் தான் பெஸ்ட்" என்று பெருமை சாற்றிக்கொள்ளும் பலரும், அடுத்தவர்களுக்கு ஒருவித டிப்ரெஷன் ஏற்படுத்துகிறார்கள், என்பதே உண்மை. பொது வெளியில், இப்படி பகிரப்படும் அனைத்தும் உண்மை என்று நம்பி, "நம்ம வீட்டுகாரர்க்கு நம்ம மேல பாசம், அன்பு இல்லை" என்று மனஅழுத்தத்துக்கு உண்டாகும் நிலை பல பெண்களுக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது.<br />
<br />
இப்படிப்பட்ட பெண்களின் மனநிலையை சாதகமாக்கி கொள்ளும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் குறிக்கோள், இப்படிப்பட்ட பெண்களிடம், பேசி பேசி, அன்பை காட்டுவது போல நடிப்பது அல்லது அந்த பெண்ணை அவள் அழகை, அவள் செயலை புகழ்வது. அதுவும் பப்லிக் ஆக சோசியல் மீடியாவில் புகழும் போது அதனை தனக்கு கிடைத்த ரெகக்னிஷன்/அங்கீகாரமாக பெண்கள் நினைத்து கொள்வது மட்டும் அல்லாமல், தன்னுடைய மன அழுத்தத்துக்கான தீர்வாக நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். <a href="https://www.ama.org/publications/MarketingNews/Pages/feeding-the-addiction.aspx">இது, அவர்களின், ப்ளஷர் ஹார்மோன் ஆன, செரோட்டின், டோபோமின் போன்றவற்றை தூண்டி, ஒரு கனவுலகில் அவர்கள் வாழ தூண்டுகிறது. </a><br />
<br />
இதுவே, "குன்றத்தூர் அபிராமி போன்றவர்களை" கனவுலக வாழ்க்கை வாழ தூண்டி இருக்க வேண்டும். சோசியல் மீடியா அடிக்சன், அதனால் நிகழ்ந்த மனஅழுத்தம், அந்த நேரம் தன் அழகை பற்றி கிடைத்த "ரெகக்னிஷன்" , அதனை தடுக்க முனைந்த பெற்றோர், குடும்பம் மற்றும் கணவர், குழந்தைகள் அனைவரும், எதிரி போல கருதப்பட்டு இருக்கிறார்கள். இது போதை மருந்து/மதுவுக்கு அடிமையானவர்களை திருத்த போதை மருந்து தராமல், அல்லது மது தராமல் தடுக்கும் போது அவர்கள் செய்யும் எதிர்வினைக்கு சமமானது. போதையை அடைய எந்த தவறும் செய்ய தயாராக இருப்பார்கள், போதைக்கு அடிமையானவர்கள். அதே நிலையை "அபிராமி" அடைந்து இருக்கிறார்.<br />
<br />
இப்படி ப்ளஷர் ஹார்மோன் வசப்பட்டவர்கள், எப்போதும் ஒரு வித பதட்டம், தூண்டல் கொண்டிருப்பார்கள். சோசியல் மீடியாவில் ஏதாவது கன்டென்ட் கொடுக்க வேண்டும் என்று எந்த லெவல்க்கும் செல்ல தயாராக இருப்பார்கள். சமீபத்தில் நான் வாசித்த ஒரு ஆராய்ச்சி கட்டுரை<br />
<a href="http://www.pnas.org/content/early/2018/08/13/1812331115?etoc=&utm_source=TrendMD&utm_medium=cpc&utm_campaign=Proc_Natl_Acad_Sci_U_S_A_TrendMD_0">"அதிகம் பிகினி உடைகளை சோசியல் மீடியாவில் பகிரும் பெண்கள், அப்படி பகிர்வதன் மூலம், தான் பொருளாதார அளவில் மற்ற பெண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று பறை சாட்டவே செய்கிறார்கள்" என்று தெரிவிக்கிறது.</a><br />
<br />
சோசியல் மீடியாவில் அதிகம் படங்களை பகிரும் பெண்கள் வசிக்கும் இடங்களில் அதிக பியூட்டி பார்லர்கள், ஹேர் சலூன்கள், மேக் அப் ஐட்டம் விற்கும் கடைகள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் கிளினிக் க்குகள் இருப்பதாத தெரிவிக்கிறது. அது மட்டும் அல்ல அந்த இடங்களில் எல்லாம் குடும்ப பொருளாதார வித்தியாசம் அதிகம் இருப்பதாக காட்டுகிறது. அதாவது, பொருளாதார நிலையில் அதிக வித்தியாசம் இருக்கும் நிலையில், பெண்கள், தன்னுடைய நிலையை போலியாக உயர்த்தி காட்ட/ மற்றவர்களின் கவனத்தை கோர, இப்படி "ஆடைகுறைப்பு/பிகினி உடை/உடல் அழகை அதிகம் காட்டும் உடை " போன்றவற்றை உடுத்துகிறார்கள் என்று தெரிவிக்கிறது.<br />
<br />
<br />
எப்படி, சோசியல் மீடியா, பொருளாதாரத்தை பாதிக்கிறது, மனித மனநிலைகளை நெகடிவ் ஆக பாதிக்கிறது, அடுத்தவர் நல்லா இருக்கிறார், நாம நல்லா இல்லை, என்பதனை போன்ற போலி பிம்பத்தை உண்டாக்கி மக்களை குற்றங்கள் புரிய தூண்டுகிறது என்பதனை படிக்கும் பலரும் , "ஏன் இந்த கருமத்தை மக்கள் உபயோகிக்கிறார்கள் பேசாம தூக்கி போட்டுட்டு இருக்கலாமே!, " என்று அறிவுரை கூறுவதை பார்க்கலாம். இது காலத்தின் கட்டாயம். மனிதன் ஒரு சோசியல் அனிமல். ஏதாவது ஒரு வகையில் அவனுக்கு ஒரு அவுட்லெட் வேணும். உபயோகிக்காமல் இருக்க முடியாது. ஆனால், அதற்க்கு அடிக்சன் ஆகாமல் இருப்பது எப்படி, எப்பொழுது நிறுத்துவது என்று அறிந்து தானே மேனேஜ் செய்தாலே போதும். ஒரு செல்ப் கண்ட்ரோல் வேணும். அப்படி சோசியல் மீடியா அடிக்ட் ஆனவர்களையும், குடும்ப கவுரவம், அடுத்தவங்க என்ன நினைப்பாங்க என்று திரும்ப அதே நிலையில் அழுத்தாமல், மீட்பு நடவடிக்கை, கவுன்சிலிங் என்று கொடுக்கலாம். இப்படி புரிந்து கொண்டு அனுசரித்து நடப்பதே அவர்களை வெளியே கொண்டு வரும். பிரச்சனைகளை தீர்க்க உதவும் என்பது என் எண்ணம்.<br />
<br />
<br />
<br />
நன்றி.<br />
<br />
<br />
<br />
References<br />
https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/da.22466<br />
https://www.ama.org/publications/MarketingNews/Pages/feeding-the-addiction.aspx<br />
http://www.pnas.org/content/early/2018/08/13/1812331115?etoc=&utm_source=TrendMD&utm_medium=cpc&utm_campaign=Proc_Natl_Acad_Sci_U_S_A_TrendMD_0<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-28457636869944171582018-07-25T18:36:00.000-04:002018-07-25T18:36:11.259-04:00சான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<br /></div>
<div>
<u><span style="color: blue;">சான்பிரான்சிஸ்கோ poop மேப்</span></u></div>
<div>
<br /></div>
<div>
சமீபத்திய நியூயார்க் பயணத்தில் நான் கண்டது நியூயார்க் தெருவுக்கு தெரு வீடில்லாமல் தெருவில் வசிக்கும் நிறைய மக்கள். ஒரு மூட்டை மட்டுமே வைத்து கொண்டு தெரு ஓரங்களில் நிறைய பேரை காண நேர்ந்தது. செக்ஸ் கொடுமைகள், பாலின மாறுபாடுகள், LGBT எனப்படும் மூன்றாம் பாலின புரிதல் மட்டும் அறிதல் காரணமாக வீட்டை விட்டு துரத்த படும் மக்கள், வேலையிழப்பு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் இழந்த மக்கள் என்று பல காரணங்களுக்காக தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-s8IEynx-VhY/W1j1nd_MszI/AAAAAAAACaA/8yBdmxsLZDgFlNc_9C0Ad9amDRwJG0ogwCLcBGAs/s1600/Homeless_person_in_New_York_City.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1024" data-original-width="768" height="320" src="https://4.bp.blogspot.com/-s8IEynx-VhY/W1j1nd_MszI/AAAAAAAACaA/8yBdmxsLZDgFlNc_9C0Ad9amDRwJG0ogwCLcBGAs/s320/Homeless_person_in_New_York_City.jpg" width="240" /></a></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: xx-small;">picture from google images</span></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<span style="font-size: xx-small;"><br /></span></div>
<div>
இப்படி தெருவில் வசிக்கும் மக்களுக்காக என்று ஹோம் லெஸ் ஷெல்ல்ட்டர் எனப்படும் தற்காலிக தங்குமிடங்கள் தரப்பட்டாலும், நிரந்தர தீர்வு என்று எதுவும்செய்து கொடுக்காத நிலையிலேயே இப்படி பலரும் தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.. அதுவும் பெரிய பெரிய மெட்ரோ நகரங்களான நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ போன்றவற்றில் இது வேறு வகையான பிரச்சனைகளை கொடுக்கிறது. அது இப்படி வீடில்லாத மக்கள் தம் கழிவுகளை தெருக்களில் வெளியேற்றுவதால் பல தெருக்களில் நாம் நடக்க முடியாத அளவு மூத்திர மற்றும் மல நாற்றம். </div>
<div>
<br /></div>
<div>
இந்த பிரச்சனையை முன்னிறுத்தியே 2014 ஜென்னிபர் வோங் என்னும் வெப் டெவலப்பர், ஹியூமன் வேஸ்ட் லேண்ட் என்னும் ஒரு ப்ராஜெக்ட் உருவாக்கினார். அதில் பே ஏரியா எனப்படும் சிலிக்கான் வேலே இல் எங்கெல்லாம் மனித கழிவுகளை ரோட்டில் காணலாம் என்று மேப்பில் குறித்திருப்பார்.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-4O7hfxCxHT8/W1j3Bi-bA-I/AAAAAAAACaM/U1Je7PaDCXEV6wiN4p3GY6Hi0tdAnMRiACLcBGAs/s1600/poopmap.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="257" data-original-width="410" height="200" src="https://1.bp.blogspot.com/-4O7hfxCxHT8/W1j3Bi-bA-I/AAAAAAAACaM/U1Je7PaDCXEV6wiN4p3GY6Hi0tdAnMRiACLcBGAs/s320/poopmap.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<span style="font-size: xx-small;">http://mochimachine.org/wasteland/</span></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இது சான் பிரான்சிஸ்கோ என்று இல்லை இன்னும் பல பல மெட்ரோ நகரங்களின் நிலை. ஏன் அட்லாண்டாவில் கூட மிட்டவுன் அருகில் இருக்கும் பல பகுதிகள் இப்படி தான் இருக்கும்.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<u><span style="color: blue;">ஹாரி பாட்டர்</span></u></div>
<div>
<br /></div>
<div>
முகுந்தின் சம்மர் ஹாலிடேஸ்ல் 4 ஆவது கிரேடுக்கு முன் படிக்க வேண்டிய புத்தக லிஸ்ட் என்று ஒரு லிஸ்ட் அவன் பள்ளியில் கொடுத்திருந்தார்கள். எப்போதும் டிவி, கேம்ஸ் என்று கழிக்காமல் எப்படியாவது ரீடிங் ஹாபீட்டை அதிகப்படுத்துவது என்று முடிவு செய்து ஹாரி பாட்டர் புத்தகத்தை படி என்று நூலகத்தில் இருந்து எடுத்து கொடுத்தேன். அவனுக்கு இண்டெர்ஸ்ட் வர என்று முதல் புத்தகத்தை அவனுடன் சேர்ந்து நானும் படிக்க ஆரம்பித்தேன். அதுவே வர வர ஒரு போட்டியாக போய் விட்டது. யார் முதலில் ஒரு சாப்டர் ஐ படிப்பது என்று. அப்படி படித்தவர்கள் அடுத்தவர்களுக்கு கதை சொல்ல கூடாது என்று அக்ரீமெண்ட் வைத்து கொண்டோம். முதல் புத்தகம் கிட்டத்தட்ட முடிய போகிறது.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-3AWQBtcp9ns/W1j5WuKiqCI/AAAAAAAACa4/Ba_fD1rD9s8DU2Y0ZXZotmbB02iNKkGvQCLcBGAs/s1600/v0_master.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="550" data-original-width="420" height="320" src="https://4.bp.blogspot.com/-3AWQBtcp9ns/W1j5WuKiqCI/AAAAAAAACa4/Ba_fD1rD9s8DU2Y0ZXZotmbB02iNKkGvQCLcBGAs/s320/v0_master.jpg" width="244" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இரண்டு சாப்டர்கள் தவிர மற்றவை சரி இன்டெரெஸ்ட்டிங். இந்த புத்தகத்தை முழுதும் முடித்த பிறகு அந்த படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன். என்னுடன் போட்டி போட்டு கொண்டே முகுந்த் இரண்டாவது புத்தகம் படித்து முடித்து விட்டான். அவனிடம், கதை ஸ்பாயில் பண்ண கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருக்கிறேன்.</div>
<div>
<br /></div>
<div>
ஏற்கனவே நன்றாக படம் வரையும் முகுந்த் தற்போது காமிக் புக் ஒன்று எழுதி படம் வரைய ஆரம்பித்து இருக்கிறான். "Journey Through Time" என்று பெயர் கூட வைத்து இருக்கிறான். வைகிங், ரோமன், விஸார்ட் மற்றும் விட்ச்ஸ் என்று அனைத்தும் அதில் வரைந்து இருக்கிறான். பார்க்கலாம் எப்படி வருகிறது என்று. </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
வாசிப்பிற்கு நன்றி.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
</div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-32457817722304316702018-07-08T16:48:00.001-04:002018-07-08T16:58:30.521-04:00 கலவை: ரசித்தது, படித்தது, நொந்தது<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<span style="background-color: white;"><u><span style="color: blue;">ரசித்தது</span></u><u>:</u><u> </u></span><br />
<div>
<br /></div>
<div>
அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்பிளேட் லிஸ்ட் இருக்கிறது.</div>
<div>
<br /></div>
<div>
ஈஸ்ட் கோஸ்ட் இல் என்றால்</div>
<div>
<br /></div>
<div>
1. நயாகரா, 2. வாஷிங்க்டன் டிசி வெள்ளை மாளிகை, கேப்பிடல் ஹில், சில ம்யூசியங்கள் 3. நியூ யார்க், டைம் ஸ்கொயர், சுதந்திர தேவி சிலை, எம்பையர் ஸ்டேட் பில்ட்டிங், மேடம் துஸ்ஸாட் மெழுகு ம்யூஸியம் 4. புளோரிடா பீச், டிஸ்னி லேண்ட், யூனிவேர்சல், 5. மியாமி பீச். </div>
<div>
<br /></div>
<div>
வெஸ்ட் கோஸ்ட் என்றால் 1. லாஸ் வேகஸ், 2. கிராண்ட் கேன்யன், 2. சான்பிரான்சிஸ்கோ 4. லாஸ் ஏஞ்செல்ஸ் </div>
<div>
<br /></div>
<div>
இவை எல்லாம் கூட்டி போய் காட்டிவிட்டால், மொத்த அமெரிக்காவும் காட்டி விட்டது போல சொல்லி கொள்ளலாம். </div>
<div>
<br /></div>
<div>
ஒவ்வொரு முறையும் அம்மா ஊரில் இருந்து வரும் போது கிட்டத்தட்ட எதாவது ஒன்றை டெம்ப்ளட் லிஸ்டில் இருந்து கவர் செய்து இருக்கிறேன். அப்படி, ஊரில் இருந்து வந்த அம்மாவை அழைத்து கொண்டு நியூயார்க் பயணம். முன்பு சிலமுறை நியூயார்க் சென்றிருக்கிறேன், என்றாலும், அம்மாவுடன் தனியாக சென்றது ஒரு த்ரில்லிங். நியூயார்க் செல்லப்போகிறேன் என்றதும், என்னுடன் வேலை பார்க்கும் சிலர், "பிராட்வே ஷோ ரொம்ப பாமேஸ்" அழைத்து கொண்டு போ, என்றனர். </div>
<div>
<br /></div>
<div>
முன்பின் ஓபரா சென்றதில்லை, என்றாலும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கு சென்று மெய்மறந்து ரசித்தது எவ்வாறு இருக்கும் என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். "பான்டோம் ஆப் ஓபரா" நியூயார்க் மெஜெஸ்டிக் பிராட்வே தியேட்டரில் 30 வருடங்களாக நடக்கும் ஷோ என்றார்கள். 30 வருசமா ஒரு ஸ்டேஜ் ஷோ நடக்குதா, என்று ஒரே ஆச்சரியம். விலை எல்லாம் கண்ணா பின்னா என்று இருந்தது, ஈவினிங் ஷோவுக்கு இடம் இல்லை. அதனால் மதியம் இரண்டு மணி ஷோவுக்கு புக் செய்து விட்டேன். 2 மணி ஷோவுக்கு 30 நிமிடம் முன்னால் சென்றால் போதும் என்று சென்றால், ஒரு மைல் தூரத்துக்கு கியூ நின்றது. அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். 30 வருசமா நடக்குற ஷோவுக்கு இவ்வளவு கூட்டமா என்று.</div>
<div>
<br /></div>
<div>
உள்ளே சென்று ஒரு வழியா உக்கார்ந்து செட்டில் ஆனவுடன், 1800 களின் பிற்பகுதியில் இருக்கும் பிரான்ஸ் என்று ஒரு ஏலம் போன்ற ஒரு செட் ஆரம்பித்தார்கள். அதில் நடு நாயகமாக சாண்ட்லியர் ஒரு மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதனை ஒருவர் ஓபன் செய்ய அற்புதமான தீம் மியூசிக் உடன் அந்த சாண்ட்லியர் மேலே செல்ல அட போட வைத்தது...</div>
<div>
<br /></div>
<div>
வாயை பிளந்து நான் பார்த்த ஒரு ஷோ என்றால் அது "பாண்டம் ஆப் ஓபரா பிராட் வே ஷோ" அமேசிங் எஸ்பிரின்ஸ். ஆர்கெஸ்ட்ரா வாசிக்க, பாண்டம் ஆக நடித்தவர், மற்றும் கிறிஸ்டின் ஆக நடித்தவர், பாடியது, செட் அலங்காரங்கள் எல்லாம் அருமையிலும் அருமை. எதோ வேறு உலகுக்கு சென்றது போன்ற ஒரு உணர்வு.</div>
<div>
<br /></div>
<div>
மறுபடி எப்பொழுது நியூயார்க் சென்றாலும் மறுபடியும் இந்த ஷோ செல்லவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஒரு அவுட் ஆப் வேர்ல்ட் உணர்வு.</div>
<div>
<br /></div>
<div>
பான்டோம் ஆப் ஓபரா படமாகவும் வந்திருக்கிறது. அதில் வந்த தீம் சாங் இங்கே</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen="" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/uNUcuZ97FT0/0.jpg" frameborder="0" height="266" src="https://www.youtube.com/embed/uNUcuZ97FT0?feature=player_embedded" width="320"></iframe></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<span style="background-color: white;"><span style="color: blue;">படித்தது :</span></span></div>
<div>
<br /></div>
<div>
எப்பொழுதும் எதிர்பாராமல் நடக்கும் சில விசயங்கள் மறக்க முடியாததாகி விடும். ஏர்போர்ட்டில் விமானம் தாமதமாக, பொழுது போக ஒரு புத்தக கடையை சுத்தி கொண்டிருந்த போது, இந்த புத்தகம் கண்ணில் பட்டது, மால்கம் கில்டவெல் எழுதிய "அவுட்லையர்ஸ்" என்ற புத்தகம். புள்ளியியலில் படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். அவுட்லையர்ஸ் என்பது எப்பொழுதும் எஸ்ட்ரீம் கேஸ் என்று டேட்டா அனாலிசிஸ் செய்யும் போது, நிராகரிக்கப்படும். எந்த டேட்டா நீங்கள் எடுத்து ஆராய்ந்தாலும் அதில் சில அவுட் லையெர்ஸ் எப்போதும் இருக்கும். அதாவது, எதோ ஒரு வகையில் பொதுவான பண்பில் இருந்து வித்தியாசமாக மாறுபட்டு தனித்து இருக்கும் விஷயங்கள் அவுட் லையெர்ஸ் எனப்படும்.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-l_l9ko40ckQ/W0JWcHxYBbI/AAAAAAAACZc/AD9pkBbSSeoobfRMQuoLAAQH_9TSc1ArwCLcBGAs/s1600/71GLAwC9cPL.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1066" height="320" src="https://2.bp.blogspot.com/-l_l9ko40ckQ/W0JWcHxYBbI/AAAAAAAACZc/AD9pkBbSSeoobfRMQuoLAAQH_9TSc1ArwCLcBGAs/s320/71GLAwC9cPL.jpg" width="213" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
"ஸ்டோரி ஆப் சக்ஸஸ்" என்று போட்டிருந்தது, வித்தியாசமாக இருந்தது. உடனே வாங்கி விட்டேன். </div>
<div>
<br /></div>
<div>
என்னை பொறுத்த வரை கற்பனை கதை என்பது மிக சுவாரசியமானது. அடுத்து என்ன என்ன என்று புத்தகத்தை புரட்ட வைத்து விடும். ஆனால் உண்மை விஷயங்களை குறிக்கும் புத்தகம், நான்பிக்சன் புத்தகம் என்பது அடுத்தது என்ன என்று பக்கங்களை நகர்த்தியது என்றால் அது இந்த புத்தகம் மட்டுமே.</div>
<div>
<br /></div>
<div>
தொடக்க சாப்டர் "ரொசெட்டா மிஸ்டரி" , இத்தாலில் இருந்த ரொசெட்டா என்ற ஊரில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய ஒரு கிராமம் முழுக்க பென்சில்வானியா ஊரில் வந்து தங்கி, அங்கேயே ஒரு குடியிருப்பை நிறுவிய மக்களை பற்றிய அத்தியாயம் அது. </div>
<div>
<br /></div>
<div>
1950 ஆம் ஆண்டு, இத்தாலியில் இருந்து பென்சில்வானியா வந்து கிட்டத்தட்ட 70-80 வருடங்கள் ஆன பிறகும் அந்த ஊரில் மட்டும் எந்த மக்களும் இதயநோயால் இறக்க வில்லை. யாருக்கும் இதயநோய் இல்லை, என்று ஆச்சரிய படுகிறார் ஸ்டீவர்ட் ஒலஃ என்னும் மருத்துவர். இதயநோய் மட்டும் அல்ல, அல்சர், மனஅழுத்தம் என்ற எந்த நோய்களும் இல்லை, என்ன காரணம்?, உணவு பழக்கமா, இல்லை உடற்பயிற்சி அதிகமா?, இல்லை சீதோஷண நிலை, இயற்கை நிலப்பரப்பா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார். ஆனால் எந்த வித துப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. உணவு பழக்கவழக்கம், சீதோஸ்ணம், உடல்பயிற்சி என்று எல்லா விதத்திலும் பென்சில்வானியா ரொசெட்டா கிராமம், மற்ற கிராமங்கள் போலவே இருக்கிறது. பின்பு எப்படி, இந்த ஊரில் மட்டும் ஒருவருக்கு கூட இதய நோய் இல்லை என்று குழம்புகிறார். இந்த ரொசெட்டா கிராமம், இதய நோயை பொறுத்தவரை ஒரு அவுட்லெயர்.</div>
<div>
<br /></div>
<div>
இதனை யோசித்து கொண்டு, அந்த கிராமம் வழியாக நடந்து சென்றபோது, ஒலஃ கவனித்தது ஒன்று. அந்த கிராம மக்கள், அனைவரும் அனைவரையும் அறிந்து இருக்கிறார்கள். எல்லாரும் எல்லோரிடமும் பேசுகிறார்கள். நடந்து செல்லும் போது கூட ஒவ்வொரு கடையிலும் நின்று எல்லோரிடமும் பேசுகிறார்கள். அதனை தவிர, ஒவ்வொருவரும் கூட்டு குடும்பமாக வாழ்கிறார்கள். </div>
<div>
குடும்பத்திற்குள் பிரச்னை என்றால் ஒருவரை ஒருவர் பேசி தீர்த்து கொள்கிறார்கள். அனைவரும் வார இறுதியில் சர்ச் செல்கிறார்கள். அங்கு ஒவ்வொரு குரூப் ஆக கலந்து பேசி, தமக்குள்ள இருக்கும் சண்டையை, மனக்கசப்பை தீர்த்து கொள்கிறார்கள். அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள். என்று கண்டறிகிறார். மருத்துவ உலகில் மிஸ்டரி ஆக இருந்த "ரொசெட்டா" ஒரு அவுட்லையேர் அல்ல, ஒரு சக்ஸஸ் ஸ்டோரி.</div>
<div>
<br /></div>
<div>
<span style="background-color: white; color: blue;">நொந்தது:</span></div>
<div>
<br /></div>
<div>
மேலே குறிப்பிட்ட இந்த புத்தகம் படித்த சில வாரங்களுக்கு முன்பு தான் என்னுடைய தோழி ஒருவரின் சமீபத்திய இந்திய பயணம் குறித்து அறிய நேர்ந்தது. ஒரு திருமணத்திற்கு என்று சென்ற அவர், தற்போது சொந்தங்கள் எப்படி இருக்கிறார்கள் என்று ஒரு கிலிம்ஸ் கொடுத்தார்.</div>
<div>
<br /></div>
<div>
முன்பெல்லாம், திருமணம் சடங்கு என்றால், அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து வேலையை எடுத்து செய்து, அனைவரையும் உபசரித்து ஆளுக்கொரு வேலையாக செய்த காலம் போய், தற்போது திருமணம், நல்ல காரியம், ஏன், உடல் நிலை சரியில்லை என்றால் கூட, நெருங்கிய சொந்தம், அக்கா, அண்ணா, தங்கை,தம்பி, தவிர வேறு யாரும் எந்த உதவியும் செய்வதில்லை. அதுவும் ஒரு குழந்தை, இரண்டு குழந்தை என்று இருக்கும் குடும்பத்தில், யாரும் இல்லை. சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை குழந்தைகள் என்று எந்த சொந்தமும், கூட மாட வேலை கூட செய்யவேண்டாம், ஏனோ தானோ என்று வருகிறார்கள், சென்று விடுகிறார்கள். அப்படி வரும் பலரும், நம்மிடம், எதோ எதிர்பார்க்கிறார்கள், செய்யவில்லை எனில், நாம் எதிரி நம்பர் 1 ஆகி விடுகிறோம். </div>
<div>
<br /></div>
<div>
இதனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், என்னுடன் வேலை பார்க்கும் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர், தன்னுடைய பேமிலி கெட்டோகெத்தேர் இருக்கிறது அதனால் நான் லீவில் செல்கிறேன் என்று சொல்லி கொண்டிருந்தார். என்னது, கெட் டுகெதர் கு லீவா?, என்ன செய்வீர்கள் என்று கேட்டுக்கொண்டிருதேன். அவர் சொன்னது. அவருடைய, சொந்தங்கள் அனைவரும், அதாவது, ஒரு பேமிலி பெயர் கொண்டிருக்கும் அனைவரும், வருடாவருடம் ஒவ்வொருவர் வீட்டில் ஒன்று கூடுவார்கள். அதற்காக, எல்லா மாநிலங்களிலும் இருந்து கெட்டோகெத்தேர் வீட்டுக்கு வந்து விடுவார்கள். பின்னர், அவர்கள் வீட்டில் சாப்பாடு, சர்ச்சுக்கு செல்வது என்று சென்று விட்டு, இரண்டு நாள் கழித்து சென்று விடுவார்கள். அப்படி கெட் டுகெதர்க்கு ஆகும் செலவு, எல்லாரும் பிரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை, அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள நல்ல வழி இது. கிட்டத்தட்ட, 50- 100 பேர் வருவார்கள் என்று சொல்லி கொண்டிருந்தார்.</div>
<div>
<br /></div>
<div>
எனக்குள், ஒரே ஆச்சரியம், சந்தோசம்,வருத்தம் எல்லாம் கலந்த ஒரு உணர்ச்சி அவர் சொன்னதை கேட்ட பிறகு. இந்தியாவில் சொந்தங்கள் எல்லாம் பொய்யாகி விட்டனவா?, என்று எனக்குள் கேள்வி? அதனால் தான், நமக்கு, இருதய நோய், அல்சர், மனஅழுத்தம் என்ற அனைத்தும் அதிகம் இருக்கிறதா?நமக்கு என்று இல்லாமல் தனக்கு என்று வாழ ஆரம்பித்ததுக்கு நாம் கொடுத்த பரிசா இது? தெரியவில்லை.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
வாசிப்புக்கு நன்றி.</div>
<div>
<br /></div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-38379253133578934522018-05-18T19:24:00.001-04:002018-05-18T19:24:44.156-04:00அன்னையர் தினமும், நடிகையர் திலகமும் , தலைமை பொறுப்பும் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
பொது நிகழ்ச்சிகளில் நான் அதிகம் கலந்து கொள்வதில்லை. நேரமின்மை முதல் காரணம். பின்னர், பல நேரங்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கவே மிக தாமதமாகும், அப்புறம், அவசர அவசரமாக முடிப்பார்கள், முழுதும் பார்க்க முடியாது.இப்படி பல காரணங்கள். ஆனால்கடந்த வாரம் , "அன்னையர் தினம்" எங்காவது போகலாம் என்று முடிவு செய்து, தமிழ் சங்கம் சார்பில் பெண்கள் தினம் கொண்டாடுறாங்க வேணா போகலாம் என்று தோழி பரிந்துரைத்தாள். சரி என்று GATS தமிழ் சங்க பெண்கள் தின விழாவுக்கு சென்றாகி விட்டது. <br />
<div>
<br /></div>
<div>
$10 இல், லஞ்ச், ஸ்னாக்ஸ் மற்றும் சமையல் போட்டி, recycling போட்டி, பேஷன் ஷோ என்றெல்லாம் அறிவிப்பு பார்த்தேன். அதோடு, முனைவர் பர்வீன் சுல்தானா அவர்களின் சிறப்புரை என்றும் அறிவித்திருந்தனர்.</div>
<div>
<br /></div>
<div>
என்னப்பா, வேற ஏதாவது சிந்திக்க மாட்டிங்களா?, மறுபடியும் சமையல், பேஷன் ஷோ ஏன், அரைச்ச மாவைவே மறுபடியும் அரைக்கிறாங்க? என்று எண்ண தோன்றியது. நான் முனைவர். பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சை முன்பு கேட்டதில்லை. அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கேட்கலாம், ரொம்ப போர் அடிச்சா ஏதாவது மூவிபோகலாம் என்று பிளான் செய்தோம்.</div>
<div>
<br /></div>
<div>
பர்வீன் சுல்தானா அவர்கள் பேச்சு ஆரம்பிக்கும் போதே, " என்னப்பா, மறுபடியும் அரைச்ச மாவா? ரீசைக்ளிங், குக்கிங் தானே வீட்டிலேயும் செய்யிறீங்க, புத்தக ரெவியூ, புத்தக, கவிதை வெளியீடு போன்றவற்றை செய்யலாமே? "அடுத்த விழாவில் ஏதாவது புத்தக வெளியீடு எதிர்பார்க்கிறேன்" என்றார். பரவாயில்லையே, நல்ல ஸ்டார்டிங் என்று தோன்றியது. எதிர்பார்ப்பின்றி வாழ்வது, அழகென்பது ஆரோக்கியமாக இருப்பது, போன்ற விஷயங்கள், நன்றாக இருந்தது. அவர்கள் சொன்ன சில கதைகளும், நன்றாகவே இருந்தது. ஆனால் அவர்களின் பேச்சை தவிர, மற்றவை அசுரசியமாக இருந்தது. </div>
<div>
<br /></div>
<div>
ஒரே ஒரு பெனிபிட் என்றால், 10$ இல், லஞ்ச், ஸ்னாக்ஸ், பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சு மற்றும் நீர் மோர் சூப்பர். மற்றபடி நோ கமெண்ட்ஸ்.</div>
<div>
<br /></div>
<div>
மூவிக்கு என்று நாங்கள் தேர்ந்தெடுத்தது, "நடிகையர் திலகம்". இந்த படம் குறித்த என்னுடைய சில அவதானிப்புகள். எனக்கு தெலுங்கு படங்கள் அதிகம் பிடிக்காது. ஆனாலும், "எவடே சுப்பிரமணியம்" எடுத்த "நாக் அஷ்வின்" மேல் ஒரு நம்பிக்கை உண்டு. அதனாலேயே, அவர் அடுத்த படத்தை நடிகை சாவித்ரி வாழ்க்கை என்றதும் பார்க்க ஆவலுடன் இருந்தேன். என்னை பொறுத்த வரை இந்த படம் நாக் அஸ்வினின் பெஸ்ட் என்று சொல்ல மாட்டேன். எவடே சுப்பிரமணியம் உடன் பொருத்தி பார்க்கும் போது, இது சுமார். கீர்த்தியின் நடிப்பு நன்றாக இருந்தது. எனக்கு பிடித்த ஒரு விடயம், உண்மையை எந்த சாயமும் பூசாமல் எடுத்தது. சாவித்திரியின் மிட் லைப் கிரைசிஸ் மற்றும் ஆணின் ஈகோ, நன்றாக காட்சி படுத்த பட்டு இருந்தது என்று சொல்வேன்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-E1IjyhbdlYA/Wv9fw8FpgRI/AAAAAAAACY8/qIUIW1tdTxYNjYhPY4g8oRswxXk93jvBACLcBGAs/s1600/Nadigaiyar-thilagam-aagney.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1200" data-original-width="1200" height="320" src="https://3.bp.blogspot.com/-E1IjyhbdlYA/Wv9fw8FpgRI/AAAAAAAACY8/qIUIW1tdTxYNjYhPY4g8oRswxXk93jvBACLcBGAs/s320/Nadigaiyar-thilagam-aagney.jpg" width="320" /></a></div>
<br />
<br />
<br />
சில நாட்களுக்கு முன் முகநூல் COO ஷெரில் (ஜிமிக்கி கம்மல் ஷெரில் அல்ல) அவர்களின் டெட் டாக் கேட்க நேர்ந்தது. "ஏன் மிக குறைந்தஅளவில் பெண்கள் தலைமை பொறுப்பில் இருக்கிறார்கள்?" என்பது குறித்த அவர்களின் உரை, அற்புதம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/18uDutylDa4/0.jpg" src="https://www.youtube.com/embed/18uDutylDa4?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br /></div>
<div>
</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
அவர்கள் சொல்ல வருவது இது தான். வேலை செய்யும் பெண்கள் பொதுவாக தனக்கு கிடைத்ததை வைத்து வாழ பழகி கொள்கிறார்கள். தனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகும் போதோ அல்லது மறுக்கப்படும் போதோ அதற்காக போராடுவதில்லை.<br />
உதாரணமாக, கல்யாணம் ஆகி குழந்தை குடும்பம் என்று வந்தபிறகு, இருப்பது போதும், எதுக்கு வீனா கேள்வி கேட்டுட்டு என்று அமைதியாக இருந்து விடுவது. ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று கிடைத்தது வைத்து இருப்பது. என்று தனக்கென்று ஒரு வட்டத்தை வகுத்துக்கொண்டு, அதுக்கெல்லாம் நாம சரிப்பட்டு வரமாட்டோம் என்று முடிவு கட்டி வாழ பழகி கொள்வது.<br />
இதுவே முதல் காரணம், பெண்கள் தலைமை பொறுப்பில் வரமுடியாமல் போவதற்கு என்கிறார்.<br />
<br />
அவர் குறிப்பிட்ட இரண்டாவது காரணம், வீட்டில் இருக்கும் துணைவரை அனைத்து விடயங்களிலும் துணைவராக பயன்படுத்தி கொள்ளாதது. அல்லது பயன்படுத்த முடியாமல் போவது.<br />
இது பொதுவாக நாம் பார்க்கும், கேட்கும், சந்திக்கும் ஒன்று. வேலைக்கு போகும் பெண்களுக்கு வீட்டில் கணவர் உதவாமல் போகும் பட்சத்தில் அந்த வேலை பெண்ணுக்கு ஒரு நரகம் மட்டுமே. வீட்டிலும் வேலை செய்து விட்டு, வெளியிலும் வேலை செய்து, பின் வீட்டுக்கு வந்து மறுபடியும், குழந்தை, சமையல் என்று ஒரு மெஷின் போல ஆகி விடும் ஒரு நிலை.<br />
<br />
அதே நேரம், ஆணை விட அதிகம் சம்பாதிக்கும் நிலை பெண்ணுக்கு வந்துவிட்டால் , ஆணுக்கு ஈகோ தொற்றிக்கொள்கிறது. நம்மை மதிப்பதில்லை, என்ற ஒரு வித மனநோய். இப்போது தலைமுறையில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மனநோய் குறைந்து கொண்டு வந்தாலும், இன்னும் முழுதும் மறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.<br />
<br />
<br />
எனக்கென்னவோ நான் மேலே குறிப்பிட்ட மூன்று விடயங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று தோன்றுகிறது. மகளிர் விழா என்றாலும் அதற்கென்று எந்த ரிஸ்க் கும் எடுக்காமல், மறுபடியும் அனைத்து விழாவும் போல, "சமையல், கலைப்பொருள் என்று" மகளிர் நினைக்கும் பாங்கு ஒரு புறம், புகழ் பணம், அதுவும் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் ஒரு நிலையில் நடக்கும் ஈகோ மோதல்கள் நடந்து, அதனால் திசை திரும்பிய சாவித்திரியின் வாழ்க்கை. இந்த இரண்டுமே ஷெரில் அவர்கள் குறிப்பிட்ட பெண்கள் தலைமை பொறுப்பில் இல்லாமல் போனதற்கான காரணங்கள் என்று தோன்றுகிறது.<br />
<br />
<br />
நன்றி.</div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-84643007384540788112018-05-06T11:09:00.001-04:002018-05-06T11:09:50.128-04:00 புகழ், திமிர், கோபம்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<br />
<div>
எதற்க்காக திடீரென்ற, "புகழ், திமிர், கோவம்" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு சிலர், அந்த டிபார்ட்மெண்டில் எல்லோருமே "திமிர்" பிடித்தவர்கள். யாருக்கும் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள். உங்களை அவமான படுத்துவார்கள் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். </div>
<div>
<br /></div>
<br />
திமிர் என்றால் என்ன? அரகன்ஸ் என்றால் என்ன?<br />
<br />
திமிரை காட்டுபவர்கள் மறைமுகமாக சொல்ல விரும்புவது, " நான் தான் அறிவாளி. எனக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும், நீங்கள் எல்லாருமே முட்டாள்கள். ஒன்றுக்கும் உதவாதவர்கள். நான் எதுக்கு உங்களுக்கு உதவி என்னுடைய நேரத்தை செலவளிக்க வேண்டும்." என்னுடைய அறிவை மதித்து எனக்கு மதிப்பளித்தால் நான் உங்களுடன் பேசுகிறேன்". "எனக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் எனக்கு கோவம் வரும்". "நான் தான் பெஸ்ட்"<br />
<br />
எல்லோரும் பிறக்கும் போதே திமிருடன் இருக்கிறார்களா? இது எப்படி ஆரம்பிக்கிறது?<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-fjCEvahTSrc/Wu8Wo01qR8I/AAAAAAAACYA/Ul1wlbfBMXsZJxhQBY0YuFW8GstDo-nIACLcBGAs/s1600/arrogant_flower.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="229" data-original-width="333" height="220" src="https://3.bp.blogspot.com/-fjCEvahTSrc/Wu8Wo01qR8I/AAAAAAAACYA/Ul1wlbfBMXsZJxhQBY0YuFW8GstDo-nIACLcBGAs/s320/arrogant_flower.jpg" width="320" /></a></div>
<br />
<br />
ஜிகர்தண்டா படத்தில் ஒரு டயலாக் வரும். "நம்மள பாத்து அடுத்தவங்க பயந்து ஒதுங்கும் போது ஒரு கிக்கு வரும்!!, அத மட்டும் அனுபவிச்சுடம்னா, அவ்வளவு தான்!!, சூர போதை!!". "அடுத்தவங்க மத்தியில நாம தனித்து தெரியுறோம். நம்மள எல்லாரும் மதிக்கிறாங்க". அவங்க மதிக்கிறாங்களா அல்லது பயந்து விலகி போறாங்களோ தெரியாது, ஆனா, நாம்ம மத்தவங்கள விட பெரியாள்!!".<br />
<br />
இந்த போதை/புகழ் கொடுக்கும் ஒரு திமிர். அந்த புகழ்/போதை கிடைக்காத போது அல்லது புறங்கணிக்க படும் போது வரும் ஒரு கோவம்.<br />
<br />
<br />
"Stardom /ஸ்டர்டாம்" அடைந்த பலர் கடக்கும் பொதுவான பாதைகள்..<br />
<br />
<br />
<ul style="text-align: left;">
<li>எதோ ஒரு திறமை இருக்கும்</li>
<li>அந்த திறமையை வெளியே கொண்டுவர வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் </li>
<li>அந்த திறமையை உலகுக்கு காட்ட, எல்லா வகையிலும் பொறுமையாக தொடர்ந்து முயல்வார்கள்</li>
<li>ஒரு சந்தர்ப்பம் அவர்களுக்கு கிடைக்கும்.</li>
<li>அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி வெற்றியை எட்டி பிடிப்பார்கள்.</li>
<li>உலகம் அவர்களை கொண்டாடும்</li>
<li>வெற்றியை சுவைக்கும் போது கிடைக்கும் சூர போதை. </li>
<li>தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற "திமிர்" வருவது </li>
<li>அந்தபுகழ் போதையை தக்கவைத்து கொள்ள எல்லாம் செய்வது </li>
<li>புகழ் காணாமல் போவது, மக்கள் நம்மை மதிப்பதில்லை என்று அறிவது </li>
<li>அப்போது வரும் கோவம், இயலாமை, அதற்காக மற்ற போதை வஸ்துக்களை தேடி சென்று தன் அழிவை தானே தேடி கொள்வது.</li>
</ul>
<div>
<br /></div>
<div>
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த ஆர்ட்டிஸ்ட் எடுத்து கொள்ளுங்கள், பலரின் கேரியர் க்ராப் இப்படி தான் இருக்கும். இதுல பெண்கள் என்றால், வேறு மாதிரியான நிலைக்கு தள்ள படுவதும் உண்டு. </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
இது நடிகை நடிகர்கள், ஆர்ட்டிஸ்ட் அல்லது showbiz இல் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பொருந்துமா?</div>
<div>
<br /></div>
<div>
இல்லை, இது எந்த துறைக்கும் பொருந்தும். எவ்வளவோ வாழ்ந்து கெட்ட குடும்பங்கள். அவர்களின் வாழ்க்கை பயணம் கிட்டத்தட்ட நான் மேலே குறிப்பது போலவே இருக்கும். அந்த திறமை என்பது தொழில் திறமை ஆக இருக்கலாம். குடும்ப பெருமையாக இருக்கலாம். ஆனால், அந்த பெருமை எல்லாம் தன்னால் உண்டாக்கப்பட்டது என்ற ஒரு "போதை" மண்டையில் ஏறி ஒரு "திமிர்" மனிதன் மனதில் வந்துவிட்டது என்றால் அதுவே அவன் முடிவுக்கு முதல் படி.</div>
<div>
<br /></div>
<div>
பெரிய குடும்பங்கள், வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் இதெல்லாம் விட்டு விடுங்கள், சாதாரண நிலையில் இருக்கும் மிடில் கிளாஸ் குடும்பங்கள் எடுத்து கொள்ளுங்கள்,அதில் இருக்கும் ஒவ்வொருவருக்கும், மனதில் எதோ ஒரு மூலையில், "புகழ்" அடைய வேண்டும் என்ற நோக்கம் இருக்கும். அது உலக புகழ், நாட்டு புகழ், ஊர் புகழ்,...என்றெல்லாம் கூட இல்லை, நண்பர்கள் வட்டத்திற்குள், தன் குடும்ப வட்டத்திற்குள், தன்னை புகழ வேண்டும், என்ற இச்சைக்காக காசை இறைக்கும், பலரும் இருக்கிறார்கள். இவர்கள் விரும்புவது எல்லாம்.. "நீ தான் பெஸ்ட்","உன்னை போல யாரும் இல்லை", என்ற வார்த்தைகள். அதற்காக என்னவேண்டும் என்றாலும் செய்வார்கள்.</div>
<div>
<br /></div>
<div>
"சபையிலே, எனக்கு உரிய மரியாதை கொடுக்கல, மதிக்கல", என்ற ஒரு சப்பை காரணத்துக்காக, சண்டை போட்டு பிரிந்த குடும்பங்கள் எத்தனை எத்தனையோ? தனக்கு என்று இருக்கும் புகழை, எல்லாரும் மதிக்க வேண்டும் என்ற "திமிர்", இப்படிபட்ட மக்கள் மனதில் ஆழ பதிந்து, அதனை அடுத்தவர் தராத பட்சத்தில் "கோவம்" தலைக்கேறி சண்டை போடுவது,இல்லை வன்முறையில் இறங்குவது.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
நிற்க, தற்போது தொடங்கிய பிரச்சனையான," எப்படி திமிர் பிடித்தவர்களுடன் வேலை பார்ப்பது" என்ற கேள்விக்கு வருவோம்.</div>
<div>
<br /></div>
<div>
"இந்த திமிர் என்பது ஒரு வித பாதுகாப்பின்மையின் வெளிப்பாடு". இவர்களிடம் "நீங்க தான் பெஸ்ட்" , என்று சொல்லி பாருங்கள். உடனே உங்களுக்கு சொல்லி கொடுப்பார்கள். நீங்கள் "நான் முட்டாள்" என்ற தொப்பியை அணிந்து கொண்டு அவர்களிடம் வேலை செய்ய வேண்டும். அடுத்தவர்கள் முன் இவர்கள் தான் பெஸ்ட் என்று காட்டி கொள்ளஎன்ன வேண்டும் என்றாலும் செய்வார்கள். அதனால், இவர்களை, "நீ தான் பெஸ்ட்" என்ற "புகழ்" பிஸ்கெட் போட்டு அவர்களின் "திமிரை" வழிக்கு கொண்டு வந்து வேலை செய்ய வேண்டும். </div>
<div>
<br /></div>
<div>
இந்த டெக்கனிக் எல்லா இடத்திலும் உதவும், குடும்பத்தில், பிரெண்ட்ஸ் மத்தியில் என்று எல்லா இடத்திலும் உதவும். அதுவும் மாமியார் மருமகள் விஷயத்தில் ரொம்பவே உதவும். </div>
<div>
<br /></div>
<div>
கடைசியாக நான் வாசித்த ஒரு quote இங்கே </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-oQCuWsBhvoM/Wu8Z4mlJcOI/AAAAAAAACYg/BuUQqgyzayA_WEOyfsXABvzk76s87p2fgCLcBGAs/s1600/Mahatma-Gandhi-Quote-first-they-ignore-you.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="276" data-original-width="640" height="138" src="https://1.bp.blogspot.com/-oQCuWsBhvoM/Wu8Z4mlJcOI/AAAAAAAACYg/BuUQqgyzayA_WEOyfsXABvzk76s87p2fgCLcBGAs/s320/Mahatma-Gandhi-Quote-first-they-ignore-you.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<span style="font-size: x-small;">photos from Google images</span></div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<br /></div>
<div>
<br /></div>
<div>
நன்றி </div>
<br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-27968601161461663662018-04-29T10:53:00.000-04:002018-04-29T10:53:01.490-04:00அறையில் இருக்கும் யானைகள்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஆங்கிலத்தில் "An elephant in the room" என்ற பதத்தை அதிகம் உபயோகிப்பதை கேட்டதுண்டு. இந்த metaphor அல்லது உதாரணம், நாம் எல்லோருக்கும் தெரியும் ஒரு பிரச்னை இருக்கிறது என்று, ஆனாலும் அந்த பிரச்னை இருப்பதை குறித்து பேசவோ, எழுதவோ, விவாதிக்கவோ நாம் விரும்பாத போது, அந்த பிரச்னையை "அறையில் இருக்கும் யானை" என்று குறிப்பிடலாம்.<br />
<br />
நாம் அனைவருக்கும் தெரியும், அந்த யானை அறையில் இருக்கிறது என்று, ஆனாலும் நாமெல்லாம் அதனை பார்ப்பதில்லை அல்லது பார்த்தும் பார்க்காமல் இருக்க நினைக்கிறோம். நான் இப்போது சொல்ல வருகிற விஷயமும் அது போல சில "அறையில் இருக்கும் யானை" தான். <br />
<br />
<u><span style="color: blue;">1. அறையில் இருக்கும் முதல் யானை </span></u><br />
<br />
என் கல்லூரி தோழிகள் குழுமத்தில் அடிக்கடி நான் கேட்கும் ஒன்று. இந்தியா மட்டும் தான் உலகில் இருக்கும் "மத சார்பற்ற ஒன்று", "வேற்றுமையில் ஒற்றுமை", நம் அண்டைய நாடுகளை பாருங்கள், அவர்களை விட நாம் தான் மற்ற எல்லா விதத்திலும் உயர்ந்து இருக்கிறோம், நம்மை யாரும் பிரிக்க முடியாது.. இத்தியாதி இத்தியாதி..அதுவும், சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் இந்த சத்தம் பெரிதாக ஓங்கி ஒலிக்கும்.<br />
<br />
இதுதான், என்னுடைய முதல் "அறையில் இருக்கும் யானை" . நாம் எல்லோருக்கும் தெரியும், நமக்குள் ஒற்றுமை இல்லை என்று. இந்தியாவில் மட்டும் அல்ல, இந்தியாவை விட்டு வெளியே வந்தாலும், நமக்குள் ஒற்றுமை இல்லை என்று. ஏன், ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் ஒற்றுமை கிடையாது. இந்திய சாதி பிரிவுகள் இங்கேயும் இருக்கின்றன. இவை ஏன், தமிழ் நாட்டில் வசித்து, அங்கிருந்து சாதியை இங்கே கொண்டு வந்து, தன் சாதியை சேர்ந்த மக்களாக மட்டும் அழைத்து தீபாவளி பொங்கல் என்று விழா கொண்டாடும் மக்களும் இங்கே இருக்கிறார்கள். எனக்கு தெரிந்தே, அப்படி "ஒரு பொங்கல் விழா" நடந்தேறியது. அந்த விழாவில் வேறு எந்த சாதிக்கும் அனுமதி இல்லை. <br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://3.bp.blogspot.com/-3pI5h-VgFiE/WuXb3B4iK9I/AAAAAAAACXk/tuQ-Eg20fhYEFlNOyMi4ozBIgRE2eucwACLcBGAs/s1600/The_Elephant_in_the_Room_Banksy-Barely_legal-2006.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="543" data-original-width="800" height="217" src="https://3.bp.blogspot.com/-3pI5h-VgFiE/WuXb3B4iK9I/AAAAAAAACXk/tuQ-Eg20fhYEFlNOyMi4ozBIgRE2eucwACLcBGAs/s320/The_Elephant_in_the_Room_Banksy-Barely_legal-2006.jpg" width="320" /></a></div>
<span style="font-size: xx-small;">photo from google image</span><br />
<br />
தற்போது இளைஞர்களை கூட தன்னுடைய ஜாதியை (அது உயர்ந்த சாதியாக இருக்கும் பட்சத்தில்) அதனை தன்னுடைய பெயருக்கு பின்னர் பெருமையாக இட்டு கொள்கிறார்கள். அதில் ஒரு பெருமை.<br />
<br />
இந்த அறையில் இருக்கும் யானையில், என்னுடைய ஒரே நம்பிக்கை/எதிர்பார்ப்பு, நமக்கு அடுத்த தலைமுறை, இதனை தொடர கூடாது என்பதே. ஆனாலும், நம்முடைய "கலாச்சாரத்தை ஊட்டுகிறேன்" பேர்வழி என்று, கலாச்சாரத்தோடு, "சாதியையும்", சேர்த்து ஊட்டுபவர்களே இங்கு அதிகம். இங்கே இந்த நிலை என்றால் இந்தியாவில் கேட்கவே வேண்டாம்.<br />
<div>
<br /></div>
<span style="color: blue;"><u>2. அறையில் இருக்கும் இரண்டாம் யானை </u></span><br />
<br />
இந்த யானையும் முதல் யானையோடு சம்மந்த பட்டது தான் என்றாலும், இது கொஞ்சம் வேறானதும் ஆகும். முதல் யானை சாதி மதத்தை பற்றியது என்றால், இரண்டாவது யானை சாதி மாறி, மதம் மாறி நடக்கும் திருமணங்களை குறித்தது.<br />
<br />
என்னுடைய கல்லூரி தோழிகள் குழுமத்தில் எல்லா மத நம்பிக்கை கொண்டவர்களும் இருக்கிறார்கள், இப்படி "இந்தியா தான் சிறந்தது, வேற்றுமையில் ஒற்றுமை, நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், இந்த அரசியல்வாதிகள் தான் மக்களை பிரிக்கிறார்கள்" என்ற வாக்கியங்களை கேட்க்கும் போது எல்லாம் நான் கேட்க்கும் ஒரு கேள்வி இது தான். சரி, நீங்கள் சொல்வது, "நன்று," "உங்கள் பெண் அல்லது பையன், மற்ற சாதி/மதம் சேர்ந்த பெண் அல்லது ஆணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உங்களிடம் வந்து கேட்கிறார் என்றால், நீங்கள் சம்மதிப்பீர்களா?" திருமணம் முடித்து வைப்பீர்களா?" இப்படி நான் கேட்டவுடன் "ஜகா" வாங்குபவர்களே அதிகம்.<br />
<br />
உங்களால் ஒரு சொல்லுக்கு கூட, "ஆமாம் நான் சம்மதிப்பேன்" என்று சொல்ல முடியவில்லையே, பின்னர் எதற்கு இந்த வீண் பேச்சு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற கூச்சல்.<br />
<br />
<u><span style="color: blue;">3. அறையில் இருக்கும் மூன்றாவது யானை </span></u><br />
<br />
இது ஒரு விதத்தில் நான் முன்பு சொன்ன விஷயத்துக்கும் தொடர்புடையது. "இந்திய கலாச்சாரம்தான் சிறந்தது", என்று நடக்கும் கூச்சல். <br />
<br />
40 வயதை கடந்தாலே, நம் மக்களுக்கு ஒரு வித மனப்பான்மை வந்து விடுகிறது என்று கொள்ளலாம். "நமக்கு" என்ற சுயம் இல்லாமல் "போய்" அனைத்த்தும் குடும்பத்துக்கு என்று வாழ்வது என்றாகி விட்ட போது, "தான் யார் " என்று தேடும் "ஐடென்டிட்டி கிரைசிஸ்" வந்து விடுகிறது. இது உண்மை, எல்லோருக்கும் நடக்கும், ஆண் பெண் வித்தியாசம் இன்றி, இதையே "மிட் லைப் கிரைசிஸ்" என்று அழைப்பார்கள். இது "அறையில் இருக்கும் மூன்றாவது யானை", பலரும் எதோ ஒரு வகையில் இந்த நிலையை கடந்து வந்திருப்பார்கள்.<br />
<br />
இந்த சூழலில், இன்னொரு காதல் என்று திரும்பும்சிலரும் இருக்கிறார்கள். எந்த பத்திரிக்கை எடுத்தாலும் இதனை போன்ற செய்திகள்இல்லாமல் இருக்காது. பத்திரிக்கை வாசிப்பவரை பொறுத்தவரை, அது ஒரு கிளுகிளுப்பு செய்தி. முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருந்த செய்திகள் போய், தற்போது எங்கும் எதிலும் இப்படி நிறைய கேட்க முடிகிறது.<br />
<br />
<br />
ஆனால், ஜோக் என்னவென்றால், இப்படி பரவலாக நடக்கும் விஷயங்களை மக்கள் "அறையில் இருக்கும் யானையாக" பாவித்து, "நமது கலாச்சாரமே சிறந்தது" நாம் தான் சிறந்தவர்கள் என்று கலாசார காவலர்களாக இருப்பது.<br />
<br />
<u><span style="color: blue;">4. அறையில் இருக்கும் கடைசி யானை </span></u><br />
<br />
<br />
சில வாரங்களுக்கு முன்பு, என்னுடைய முதுநிலை கல்லூரி குழுமத்தில் இருந்து வந்த ஒரு செய்தி. வயசான பெற்றோர், தன்னுடைய தனிமை குறித்து, தன்னுடைய பிள்ளைகள் குறித்து திட்டி எழுதிய ஒரு மடல், என்று வைத்து கொள்ளலாம். அதனை குறித்த ஒரு விவாதம் எங்கள் குழுமத்தில் நடக்க, அதில் நான் பாட்டுக்கு சும்மா இல்லாமல், வயதான காலத்தில், எதுக்கு பிள்ளைகளை நம்பி இருக்கணும், காசு இருக்குல்ல, பேசாம, எங்கையாவது டூர் போகலாம், அவங்க பிரெண்ட்ஸ் கூட விளையாடலாம், பேசலாம், படிக்கலாம்". என்று கூற, பயங்கர விவாதம். "நீ அந்த இடத்தில இருந்து பார்த்தால் தான் தெரியும், எப்படி கஷ்டம் தெரியுமா? என்று. உங்களை போல வெளிநாட்டுல போய் செட்டில் ஆனவங்கனால தான் பெற்றோர் கஷ்டப்படுறாங்க" என்று என் மேலே திரும்பிய கணைகள்.<br />
<br />
அந்த சூழலில் அறையில் இருக்கும் யானை, "எதோ வெளிநாட்டிலோ இருப்பவர்களாலே தான் பெற்றோர் இப்படி கஷ்டப்படுகிறார்கள் உள்நாட்டில் நாங்கள் எங்கள் பெற்றோரை கண்ணில் வைத்து பார்த்து கொள்ளுகிறோம்" என்று திருப்பும் மக்கள். அதுவும் இவர்கள் வெளிநாட்டில் இருப்பவர்களை தாக்க என்று வெயிட் செய்து கொண்டிருப்பார்கள்.<br />
<br />
அதில் என்னுடைய தோழி ஒருவர் சொன்ன சில விஷயங்கள், எங்கள் தரப்பு விவாதம் என்று வைத்து கொள்ள உதவியது. அவர் சொன்னது இது தான், என்னுடைய பெற்றோரை எங்களுடன் வந்து இருங்கள் என்று அழைத்தாலும் வந்து இருப்பதில்லை, எப்படி "பெண்" வீட்டில் இருப்பது, என்ற ஈகோ வந்து விடுகிறது. அதனால் தனிமையில் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் எங்களுடன் வந்து தங்க மாட்டார்கள். இன்னும் பெண் வீடு, பையன் வீடு என்று வித்தியாசம் பார்க்கும் பெற்றோர் இருக்கிறார்கள்.<br />
<br />
இருப்பதை நினைத்து, வைத்து கொண்டு, சந்தோசமாக வாழ்ந்து குறை காலத்தை கழிப்பதே சுகம். என்னுடைய பக்கத்து வீட்டு பாட்டி தாத்தா, 75 வயதை கடந்தவர்கள். பிள்ளைகள் அருகில் இல்லை, ஆனாலும் அவ்வளவு ஆக்ட்டிவ். இன்னும் டென்னிஸ் விளையாடுவது, பாட்டி தோட்டவேலை செய்வது, சர்ச்சில் வலண்டீர் பணி செய்வது என்று சந்தோசமாக இருக்கிறார்கள்.<br />
<br />
என் அம்மா மருத்துவ செலவு இவ்வளவு ஆகுது.. என்று புலம்பும் போதெல்லாம் நான் சொல்வது ஒன்றே ஒன்று தான். "செலவு செய்து மருத்துவம் பார்க்கும் அளவு காசு இருக்குல்ல" அதனை நினச்சு சந்தோசமா இருங்க... என்று சொல்வேன். "உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு."<br />
<br />
<br />
<br />
<u>டிஸ்கி</u><br />
<br />
இங்கே குறிப்பிட்டுள்ளதை எல்லாம் என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே. யாரையும் எவரையும், எந்த சமூகத்தையும் குறிப்பிடவில்லை. புரிதலுக்கு நன்றி<br />
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-77120161277117878002018-04-21T11:49:00.000-04:002018-04-21T11:49:28.124-04:00 கனவு, கவர்ச்சிகன்னிகளும் , Femme Fatale ம்.<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
Femme Fatale, என்றால் என்ன என்று கூகிளில் தேடவும்: An attractive and seductive woman, especially one who will ultimately bring disaster to a man who become involved with her.<br />
<div>
<br /></div>
<div>
நீங்கள் தமிழில் இதற்க்கு அர்த்தம் தேடினால், விவகாரமான பெண், கவர்ச்சியான பெண் என்பது போன்ற அர்த்தங்கள் வருகிறது. ஆனால் இவை இரண்டும் பொருந்தாது என்பது என் எண்ணம். இப்படி பட்ட பெண்கள், கவர்ச்சியாகவும் இருப்பார்கள், கனவு கன்னிகளாகவும் இருப்பார்கள், ஆனால் பயங்கரமான உள்நோக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். </div>
<div>
<br /></div>
<div>
தமிழ் சினிமாவில், முதன் முதலில் கனவு கன்னியாக பார்க்கப்பட்ட பேசப்பட்டவர் T.R. ராஜகுமாரி என்று சொல்வார்கள். அவரின் "மன்மத லீலையை வென்றார் உண்டோ" பாடலில் "பறக்கும் முத்தம்" அந்த காலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பார்கள். ஒரு seductress அவர். பார்வையில் ஒரு மயக்கம் கிறக்கம் இருக்கும். அந்த கால இளைஞர்களை அவரின் bold மூவ்ஸ் பாடாய் படுத்தியது என்று சொல்லலாம். அந்த நாட்களில் பின்னர் எத்தனையோ பேர் வந்தாலும், T.R.ராஜகுமாரி அளவு கவரவில்லை எனலாம். 1940-50 களில் கோடி கட்டி பறந்தவர்.</div>
<div>
<br /></div>
<div>
பின்னர் 60-70 களில் , நிறைய கிளப் டான்சர்ஸ் ரோல்களில் நிறைய பேர் அறை குறை ஆடையுடன் ஆடுவது போல நிறைய பாடல்கள் வந்தாலும், மனதில் நிற்பது போல Femme Fatale ரோல்கள் செய்தவர்கள் என்றால் ஜெயமாலினி, ஹிந்தி நடிகை ஹெலன், அனுராதா என்ற ஒரு சிலர். ஆனாலும், இவர்கள் அனைவரையும் தூக்கி சாப்பிட்டவர், சில்க். தன்னுடைய கண்ணசைவில், கவர்ச்சியில் 80 களின் இளைஞர், முதல் முதியவர் வரை ஆட்டி படைத்தவர். என்ன படம் என்று நினைவில்லை, ஆனால் ஒரு படத்தில் பாடலின் ஒவ்வொரு பத்தியில் தன்னுடைய ஒவ்வொரு உடையின் லேயர் அவிழ்ப்பார். ரொம்ப பேமஸ் பாடல் அது.</div>
<div>
<br /></div>
<div>
முன்பெல்லாம் இது போன்ற Femme Fatale ரோல் செய்வதற்கு என்று சிலர் இருந்தனர். ஆனால் இப்போது பல ஹீரோயின்களே அந்த ரோல்கள் செய்து விடுகிறார்கள். ஆடை அவிழ்ப்பு மற்றும் அரைகுறை ஆடை, நீச்சல் உடை போன்றவை உடை அணிந்தால் Femme Fatale அல்ல, </div>
<div>
<br /></div>
<div>
என்னை பொறுத்தவரை, Femme Fatale ரோல் செய்வதென்றால் உங்கள் மேல் நெகடிவ் இமேஜ் இருக்க வேண்டும். பெண்களுக்கு உங்களை பிடிக்க கூடாது, ஆனால் ஆண்கள் கனவு காண வேண்டும். நல்ல அறிவாளியாக இருக்க வேண்டும், எதிராளியை எப்படி கவிழ்க்க முடியும் என்பது தெரிந்திருக்க வேண்டும். அனைத்தையும், அனைவரையும், உங்கள் தேவைக்கேற்ப பயன்படுத்த வளைக்க தெரிந்திருக்க வேண்டும். வெரி வெரி போல்ட். ஜேம்ஸ் பாண்டு படங்களில் எல்லாம் ஒரு Femme Fatale ரோல் கட்டாயம் இருக்கும், இவர்கள் எல்லாருமே டபிள் ஏஜென்ட் ஆக இருப்பார்கள். </div>
<div>
<div>
<br /></div>
</div>
<div>
சரி, என்ன திடீரென்று, Femme Fatale பற்றிய ஆராய்ச்சி. உண்மையில் இது Paulo Cohelho வின் "தி ஸ்பை" படித்த பிறகு ஏற்பட்ட ஆராய்ச்சி.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-YNLSB7gTm4Q/WttTfTS5khI/AAAAAAAACWo/eqaPnw8Qv7sF-pANXtgoS5SS0QZthjueACLcBGAs/s1600/41CYsxCivKL._SX322_BO1%252C204%252C203%252C200_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="499" data-original-width="324" height="320" src="https://1.bp.blogspot.com/-YNLSB7gTm4Q/WttTfTS5khI/AAAAAAAACWo/eqaPnw8Qv7sF-pANXtgoS5SS0QZthjueACLcBGAs/s320/41CYsxCivKL._SX322_BO1%252C204%252C203%252C200_.jpg" width="207" /></a></div>
<div>
<br /></div>
<div>
<span style="font-size: xx-small;">photos from google images</span></div>
<div>
<br /></div>
<div>
இந்த நாவலின் கதாபாத்திரம், "மாதா ஹரி"/ "Mata Hari" என்பது ஒரு கற்பனை கதாபாத்திரம் அல்ல. உண்மையில் 20 ஆம் நூற்றாண்டுகளின் தொடக்கத்தில் வாழ்ந்த ஒரு Femme Fatale. மிக மிக கவர்ச்சியான, அறிவான, யாரையும் மயக்கக்கூடிய, ஒரு பெண். உண்மையான டபிள் ஏஜென்ட். முதல் உலகப்போரில் டபிள் ஏஜென்ட் ஆக செயல்பட்டவர் என்று பிரெஞ்சு ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டவர்.</div>
<div>
<br /></div>
<div>
ஆனால், யார் இந்த மாதா ஹரி. என்று Paulo, அவர் இறக்கும் முன்பு தன்னுடைய வக்கீலுக்கு எழுதிய கடிதங்களை வைத்து விவரிக்கிறார். </div>
<div>
<br /></div>
<div>
சந்தேகப்படும், அடிக்கும் கணவனுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து, அடிபட்டு சுதந்திரமாய் இருக்க என்று வீட்டை விட்டு ஓடி வந்த பெண் அவர். சிறு வயதில் கற்ற நடனம் உடன் இருக்க. எப்படியாவது பெரியாளாக வேண்டும் என்று கையில் ஒருபைசா இல்லாமல் பாரிஸ் நகரம் வந்திறங்கிய "மார்க்ரெட் ஸில்லே". எப்படி பெரியாளாவது என்று யோசனையில், தன்னுடைய பெயரை "மாதா ஹரி" என்று மாற்றி வைத்து கொண்டு, தான் கீழை நாடுகளில் வாழ்ந்தவர், அங்கிருக்கும் நடனம் பயின்றவர் என்று பரப்பினார். "கீழை நாடுகளில் மக்கள் நடனம் எப்படி இருக்கும் என்று தெரியாததால், என்னதான் இந்த பெண் காட்டுகிறார் என்று பார்க்க வந்த கூட்டத்தை, தன்னுடைய வித்தியாசமான அலங்காரம், எஸோட்டிக்மூவ்மெண்ட் என்று தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை, சரியாக பயன்படுத்திய மாதா ஹரி, அதனுடன் நிற்கவில்லை. தன்னுடைய ஷோ ஸ்டாப்பர், மூவ்மெண்ட், ஒவ்வொரு அசைவிலும் தன்னுடைய ஒவ்வொரு லேயர் துணியை உருவி விடுவது, முடிவில் முக்கால் வாசி ஆடை உருவி ஷோவை முடிப்பது என்று, முடித்து, 1904-5 களில், பாரிஸ் நகரை அலற வைத்தவர்.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-3siQ60TpMBE/WttWVv1iQII/AAAAAAAACXA/SChK9S7pjuwY3ptVWZ-4zQNIpRorZM6LACLcBGAs/s1600/Mata_Hari_dancing_in_the_Muse%25CC%2581e_Guimet_%25281905%2529_-_1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1400" data-original-width="1034" height="320" src="https://1.bp.blogspot.com/-3siQ60TpMBE/WttWVv1iQII/AAAAAAAACXA/SChK9S7pjuwY3ptVWZ-4zQNIpRorZM6LACLcBGAs/s320/Mata_Hari_dancing_in_the_Muse%25CC%2581e_Guimet_%25281905%2529_-_1.jpg" width="236" /></a></div>
<div>
<br />
<div style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; color: black; font-family: -webkit-standard; font-style: normal; font-variant-caps: normal; font-weight: normal; letter-spacing: normal; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
</div>
<br />
<div style="-webkit-text-size-adjust: auto; -webkit-text-stroke-width: 0px; color: black; font-family: -webkit-standard; font-style: normal; font-variant-caps: normal; font-weight: normal; letter-spacing: normal; orphans: auto; text-align: left; text-indent: 0px; text-transform: none; white-space: normal; widows: auto; word-spacing: 0px;">
<div style="margin: 0px;">
<span style="font-size: xx-small;">photos from google images</span></div>
</div>
</div>
<div>
<br /></div>
<div>
பின்னால் நடராஜர் சிலை இருக்க, அலங்காரங்களும், தோரனைகளும் வேறு மாதிரி இருக்க, இவரின் நடனம், அந்த கால பத்திரிகைகள், பெரியமனிதர்கள், "யார் இவர்", இப்படி ஒரு டான்சர் பார்த்ததில்லை என்று அனைத்து பத்திரிக்கைகளும் எழுதின. </div>
<div>
</div>
<div>
<br /></div>
<div>
ஆனால், "கவர்ச்சி" சிறு ஆயுட்காலம் கொண்டது. சில ஆண்டுகளில் வெறுத்து. அதே பத்திரிக்கைகள், இவரை, வேறு மாதிரி விவரிக்க தொடங்க ஆரம்பிக்கும் போது , தன்னை ஒவ்வொரு முறையும் புதுப்பிக்க மறக்க வில்லை மாதா ஹரி. ஒவ்வொரு முறையும், வேறு வேறு கிழக்காசியா நாடுகளின் நடனத்தை புகுத்தி, புதுமை கொண்டுவர மறக்கவில்லை. ஒரு சூழலில், "இவரை யாரும் மதிக்கவில்லை, ஆனால் மறக்கவும் இல்லை". </div>
<div>
<br /></div>
<div>
படிப்படியாக, பெரிய மனிதர்கள் பலருக்கு இவரின் "சகாயம்" தேவைப்பட. இவரும், அந்த சூழலை நாசுக்காக பயன்படுத்தி, தன்னுடைய அடுத்த நிலைக்கு வந்திருக்கிறார். முதல் உலகப்போர் மூண்ட நேரம், பிரான்சும், ஜெர்மனியும், எப்படி போரை கையாள்வது, அடுத்தவர்களை பற்றிய துப்புகளை எப்படி அறிவது என்று ஒற்றர்களை பல திசைகளிலும் அனுப்ப எத்தனித்து கொண்டிருக்க. பல பெரிய மனிதர்களின், சர்கிளில், சுதந்திரமாக வாழ்ந்து வந்திருந்த "மாதா ஹரி" தயவை "ஜெர்மனி" அடைய ஒற்றர் H21 நியமித்தது. வயதாகிவிட்டது, இன்னும் டான்ஸ் ஆட முடியாது, என்று, இவரே சென்று, "பிரெஞ்சு" போர் அமைச்சரவையில், "இங்கே பாருங்கள், ஜெர்மனி என்னை அவர்களின் தூதரக நியமித்து இருக்கிறது, எனக்கு "ஜெர்மனி" பெரிய மனிதர்களும் பழக்கம். வேண்டும் என்றால், பிரெஞ்சு க்காக நான் ஒற்றரிகிறேன், எனக்கு பணம் கொடுங்கள்" என்று இரண்டு பக்கமும், "டபிள் ஏஜென்ட்" ஆக செயல்பட்டு, ஆனால், ஒரு பக்கமும், பயனுள்ள எந்த தகவலையும் தெரிவிக்காமல் இரண்டு நாட்டிற்கும் "பெப்பே" காட்டியவர். இரண்டு பக்கமும் எந்த தகவலும் சொல்லாமல் இவர் நழுவி கொண்டிருக்க, இவரை பிரெஞ்சு ஒற்றராக நியமித்த பிரெஞ்சு அதிகாரி, எப்படி ஒரு பெண் தன்னை ஏமாற்றி இருக்கிறார் என்று வெறுப்பாகி, அவரை கர்ணம் வைத்து மாட்டி விட்டிருக்கிறார்"</div>
<div>
<br /></div>
<div>
கடைசியில் பிரெஞ்சு தூதராகத்தால், சிறை பிடிக்கப்பட்டு சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார். உண்மையில் யாராலும், அவர் செய்த எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் ஒரு பலியாடாக இவர் தலை உருண்டிருக்கிறது.</div>
<div>
<br /></div>
<div>
வழக்கமான, Paulo Coelho, புத்தகம் இது இல்லை என்றாலும், அங்கங்கே, சில தத்துவங்களை போலோ, தூவ தவறவில்லை. போலோ வின் கூற்றுப்படி, "ஆணாதிக்க சமுதாயத்தில், தனக்கு விரும்பிய வகையில் சுதந்திரமாக வாழ எத்தனித்த ஒரு பெண்ணின் முடிவு" என்று முடிக்கிறார்.</div>
<div>
எது எப்படியோ, என்னை பொறுத்தவரை, "மாதா ஹரி", உண்மையான Femme Fatale.</div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
நன்றி.</div>
<div>
<br /></div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-25776434282693041362018-03-29T09:09:00.000-04:002018-03-29T09:09:17.198-04:00எது சரி? எது தப்பு?: உளவியல் மற்றும் அறிவியல் பார்வை <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு நிகழ்வு நடக்கிறது, நீங்களும் அந்த தருணத்தில் அங்கு இருக்கிறீர்கள், அந்த நிகழ்வை காணும் நாம் எப்படி அந்த நிகழ்வை குறித்து ஓர் முடிவுக்குவருகிறீர்கள் . அது சரியான முடிவா? இல்லை தவறான முடிவா?<br />
<br />
ஒரு உதாரணம் எடுத்து கொள்ளுவோம். ஆபிசில் ஒரு மீட்டிங் நடக்கிறது. ஒரு முக்கியமான பிரச்னை குறித்து மேனேஜர் தெரிவிக்கிறார். அதன் தீர்வு என்ன என்று விவாதிக்கவே இந்த மீட்டிங். தற்போது உங்களுக்கும் அந்த மேனேஜர் க்கும் டெர்ம்ஸ் சரி இல்லை என்று வைத்து கொள்ளுவோம். அவர், என்ன சொல்ல வந்தாலும் அல்லது சொன்னாலும் அது தப்பாகவே தோன்றும். அதே நேரம், அந்த மேனேஜர்க்கு உங்களுடன் நல்ல டெர்ம்ஸ் இருக்கிறது என்றால், அவர் சொல்வது எல்லாமே கரெக்ட் ஆக தோன்றும்.<br />
<br />
ஏன் இப்படி நடக்கிறது. எது சரி? எது தப்பு?. முதலில் உளவியல் பார்வை.<br />
<br />
மனோதத்துவத்தில் "Ladder of Inference" என்ற ஒரு தியரி உண்டு. அதாவது, தமிழாக்கத்தில் "ஊகிக்கும் படிநிலை". இந்த தியரி படி, ஒவ்வொரு விஷயம் நடக்கும் போதும் அந்த விஷயம் குறித்து நாம் ஒரு ஊகம் செய்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-MgRTW0fb-Gg/WrzVLh34IYI/AAAAAAAACVs/Aong1uWaSo4el3mp7nFMl2B75fD3Ju1MQCLcBGAs/s1600/PD_Ladder-of-Inference.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="800" data-original-width="600" height="320" src="https://1.bp.blogspot.com/-MgRTW0fb-Gg/WrzVLh34IYI/AAAAAAAACVs/Aong1uWaSo4el3mp7nFMl2B75fD3Ju1MQCLcBGAs/s320/PD_Ladder-of-Inference.jpg" width="240" /></a></div>
<span style="font-size: xx-small;">Image from google images</span><br />
<br />
1. இந்த படிநிலையில் முதல் படி,<span style="color: blue;">" நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்",</span> எந்த பில்டரும் இல்லாமல் நம்மை சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும் இங்கே முதல் படி. என்னுடைய முந்தைய உதாரணத்தில், ஆபிசில் நடக்கும் மீட்டிங், அது நடக்கிறது. அங்கு கூடியிருக்கும் மக்கள், அவர்கள் முக பாவனைகள், அவர்கள் அமர்ந்திருக்கும் முறை. இப்படி பலவும் முதல் நிலை. "அதாவது , நம்மால் பார்க்க/கவனிக்க முடிந்த/முடியாத எல்லா செய்திகள்/நிகழ்வுகள் கலவை"<br />
<br />
2. இரண்டாவது படி, <span style="color: blue;">" நாம் பார்த்த செய்திகளில்/ நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்யும் நிகழ்வுகள்"</span>. என்னுடைய உதாரணப்படி, அந்த மேனேஜர் என்னுடன் நல்ல டெர்ம்ஸ் இல் இருந்தார் எனில், அவருடைய செய்கைகள், அவரை ஆமோதிக்கும் அனைவரின் செய்கைகள் மட்டுமே என் மூளை செலக்ட் செய்யும். இல்லை, எனக்கு அந்த மேனேஜர் உடன் மோசமான முன் விரோதம் இருப்பின் என்றால், அவருக்கு எதிராக நடக்கும் எல்லா விஷயங்கள் மட்டுமே கண்ணில் சிக்கும், அல்லது மூளை செலக்ட் செய்யும். இந்த நேரத்தில், அந்த மேனேஜர் சொல்லும் சொல்லுக்கு எதிர் பேசும் ஒருவர் சொல்லுவது எல்லாமே கரெக்ட் ஆக தெரியும்.<br />
<br />
3. மூன்றாவது படி, <span style="color: blue;">"நம்முடைய கற்பனை கலத்தல்"</span>, நடந்த நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்த நிகழ்வுகளில், நம்முடைய கற்பனை கலப்பது. உதாரணமாக, அந்த மீட்டிங்கில், ஒரு பெண் தலை குனிந்து கேட்கிறார் என்று வைத்து கொள்ளுவோம், நமக்கு பாஸிடம் நல்ல டெர்ம்ஸ் இல்லாத பட்சத்தில், "அந்த பொண்ணு ஏன் தலை குனிச்சிட்டு இருக்கு, எதோ வருத்தப்படுற மாதிரி தெரியுது", என்று மனதுக்குள் நினைப்பது. அந்த பொண்ணு என்ன காரணத்துக்காக தலை குனிந்து இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், நம்முடைய எண்ணத்துக்கு ஏற்றபடி கற்பனை கலப்பது, மூன்றாவது படி.<br />
<br />
<br />
4. நான்காவது படி," <span style="color: blue;">நாம் கலந்த கற்பனை கொண்டு இது தான்நடந்து கொண்டிருக்கிறது </span> "என்று ஊகிப்பது. உதாரணமாக,, அந்த மீட்டிங்கில், "பாஸ் பேசுவது அந்த பொண்ணுக்கு பிடிக்கவில்லை போல,அதான் தலை குனிஞ்சி வருத்தப்படுது, இந்தம்மா/ஆளு ஏன் இப்படிஇருக்கிறார் ? என்று பாஸ் பற்றிய தன்னுடைய ஊகத்தை வலுப்படுத்துவது.<br />
<br />
5. ஐந்தாவது படியில், <span style="color: blue;">"நாம் கொண்ட ஊகம், கற்பனை, எல்லாம் கலந்து அந்த நிகழ்வு குறித்து முடிவெடுப்பது"</span> . அதாவது, "அந்த மீட்டிங்கில், பாஸ் பேசுவது யாருக்கும் பிடிக்கவில்லை, அதனாலேயே எல்லாரும், தலையை குனிஞ்சிட்டு இருக்காங்க, ஏன் இந்தம்மா/அய்யா மத்தவங்களை புரிஞ்சுக்காம இப்படிபேசுறாங்க ? " என்று முடிவெடுப்பது<br />
<br />
6. ஆறாவது படியில், "நாம் எடுத்த முடிவுவை கொண்டு இப்படி தான் உலகம் இருக்கு என்று நம்பிக்கை கொள்வது". அந்த மீட்டிங்கில் நடந்த, நாம் பில்டர் செய்த, கற்பனை கலந்த, ஊகித்த நிகழ்வுகளை கொண்டு, இந்த உலகமே இப்படி தான் பா", முதலாளி வர்கம், ஏழைகளை பற்றி கவலை பட மாட்டாங்க, என்று புலம்புவது.<br />
<br />
7. ஏழாவது படிநிலை, <span style="color: blue;">இறுதி நிலை. நாம் எடுத்த முடிவுக்கு ஏற்ற ஆக்சன் எடுப்பது.</span> அதாவது, இந்த மேனேஜர் சரியில்லை, எல்லாரையும் தப்பாக நடத்த்துகிறார், அடுத்தவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க மாட்டேன்கிறார், என்று HR இடம் காம்ப்ளயின் செய்வது. அல்லது, அடுத்தவர்களிடம் புறம் பேசுவது, கேங்கு சேர்ப்பது, கூட்டம் சேர்ப்பது,கொடி பிடிப்பது.<br />
<br />
<br />
நான் விவரித்த இந்த "Ladder of Inference" இல், "நீ" அல்லது "I" என்பது மிக முக்கியமான ஒன்று. அதாவது, என்ன நடக்கிறது என்பதை, "நீ" அல்லது "I" இன் பார்வையில் மட்டுமே பார்த்து "நாம்" முடிவெடுக்கிறோம். அதுவும் நமக்கு சாதகமாக, அதனை திரித்து, அதனை மாற்றி, கற்பனை கலந்து, மோல்ட் செய்து, ஒரு முடிவுக்கு வருகிறோம்.<br />
<br />
இந்த இடத்தில் நாம் எடுத்த முடிவு சரியா? இல்லை தப்பா?<br />
<br />
வெளியில் இருந்து பார்க்கும் போது, அல்லது மூன்றாவது மனுஷனாக பார்க்கும் போது அந்த முடிவு தப்பு, ஆனால், நாம் உள்ளே இருக்கும் போது, நாம் அதில் உடன்பட்டு இருக்கும் போது, அந்த முடிவு சரியான முடிவு. இது எல்லாமே பெர்ஸப்ஸன்/ நாம் உணர்வது சார்ந்தது. ஆனால் உண்மை நிலை அல்ல.<br />
<br />
உண்மை நிலை வேறொன்றாக இருக்கலாம், ஆனால், எந்த ஒரு சூழலுக்கும் நாம் அந்த சூழலை குறித்து என்ன நினைக்கிறோம் என்பதை சார்ந்தே, அது சரி என்றோ அல்லது தவறு என்றோ நம்மால் அல்லது பிறரால் தீர்மானிக்கப்படுகிறது.<br />
<br />
<br />
நிற்க, மனோ தத்துவத்தில் இருந்து, சிறிது மாற்றத்துக்காக அறிவியல் பார்வை பாப்போம்.<br />
<br />
எத்தனை பேர், தன்னுடைய பள்ளி பருவத்தில், "அறிவியல்/பிசிக்ஸ்" பாடத்தை கடுப்புடன் படித்து இருக்கிறீர்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ஒளியின் பண்புகள் என்று, இரண்டு வகை பண்புகள் படித்திருப்போம். 1. துகள் வடிவானது( Particle nature of light), 2. அலை வடிவானது (wave nature of light). என்று நிறைய படித்திருப்போம். ஒவ்வொரு தியரியும் பற்றி படம் வரைந்து,சமன்பாடுகள் மனப்பாடம் செய்து. அட போங்கைய்யா என்று கடுப்பை கிளப்பி இருக்கும்.<br />
<br />
பிசிக்ஸ் பாடத்தை குறித்த பார்வையை, அது வெறும் கணித சமன்பாடுகள் மட்டுமே கொண்டது என்ற என்னுடைய எண்ணத்தை மாற்றியது "The Dancing Wu Li Masters" என்ற புத்தகம்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-T2L8LW153GA/WrzhxmACkZI/AAAAAAAACWI/0RY92_ESFcwRny4Zh7nDSELcp4u2wAJIgCLcBGAs/s1600/516C3opbzoL._SX331_BO1%252C204%252C203%252C200_.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="499" data-original-width="333" height="320" src="https://1.bp.blogspot.com/-T2L8LW153GA/WrzhxmACkZI/AAAAAAAACWI/0RY92_ESFcwRny4Zh7nDSELcp4u2wAJIgCLcBGAs/s320/516C3opbzoL._SX331_BO1%252C204%252C203%252C200_.jpg" width="213" /></a></div>
<br />
<span style="font-size: xx-small;">Image from google images</span><br />
<br />
சரி எதற்கு இந்த புத்தகத்தை குறித்து இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அதில், "The Role of "I"" என்ற அத்தியாயம் உண்டு. இந்த அத்தியாயத்தில், எந்த சமன்பாடும் இல்லாமல் ரொம்ப அழகாக இதன் ஆசிரியர், ஒளியின் , அலை மற்றும் துகள் பண்புகளை எளிமையாக குறிப்பிடுகிறார். அதன் பின்பு அவர் சொல்வது. <span style="color: blue;">"ஒளிக்கு, அலை மற்றும் துகள் பண்பு இருப்பது இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது, வேறு பல பண்புகளையும் ஒளி கொண்டிருக்கலாம், ஆனால் இதுவரை "நாம்" என்ன அறிந்திருக்கிறோமோ அதனை கொண்டு இது தான் ஒளியின் பண்பு என்று முடிவு கட்டிவிட முடியாது. இது "நாம்"/"ஐ" அறிந்த வரை காணும் ஒளியின் பண்பு மட்டுமே"</span><br />
<br />
<br />
பொதிகவியளார், ஹெய்சென்பெர்க் அவர்களின் "Theory of uncertainity" மிக பிரபலம். அதன் முடிவில் ஹெய்சென்பெர்க் சொல்லுவது<br />
<br />
<div class="page" title="Page 133">
<div class="layoutArea">
<div class="column">
</div>
</div>
</div>
<span style="font-family: Times;">" What we observe is not nature itself, but nature exposed
to our method of questioning."</span><br />
<span style="font-family: Times; font-size: 6pt; vertical-align: 4pt;"><br /></span>
<span style="font-family: Times; font-size: 6pt; vertical-align: 4pt;"><br /></span>
நாம் பார்க்கும் உலகம் /இயற்க்கை என்பது உண்மையில் இருப்பது அல்ல, நம்முடைய அனுமானத்தில் அல்லது நமக்கு பிடித்த வகையில் நாம் அறிந்த வரையில் இருக்கும் இயற்க்கை/உலகம் மட்டுமே. இது தான் உண்மையில் உலகம் என்று வரையறுக்க இயலாது.<br />
<br />
<br />
உளவியல் மற்றும் அறிவியல் பார்வைகளின் சாராம்சம் எளிமையாக, நம்முடைய, எது சரி, எது தப்பு என்ற வாதத்துக்கு வருவோமானால். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு, "நான், நாம்", என்ற அந்த பாய்ண்ட்யை விட்டு வெளியே வந்து, மூன்றாவது மனிதனாக, யூனிவேர்சல் ஆக யோசித்தால் மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் "முழுப்பரிமாணம்" கிடைக்கும். இல்லை எனில், லாடம் கட்டிய குதிரை போல் நாம் நினைத்ததே சரி என்று அந்த வழியில் சென்று கொண்டிருப்போம்.<br />
<br />
<br />
நன்றி.<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-4603404031529418212018-03-22T16:30:00.000-04:002018-03-22T16:30:32.336-04:00முகநூல், ப்ரொபைலிங், பிரைவசி மற்றும் வேலை இழப்பு <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
சில வருடங்களுக்கு முன்பு, சோசியல் மீடியா குறித்தும், பிரைவசி குறித்தும் அது எப்படி நம்முடைய பர்சனல் வாழ்வில் தலையிடலாம் என்பது குறித்தும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்.<br />
<ol style="text-align: left;">
<li><a href="https://mukundamma.blogspot.com/2015/09/blog-post_21.html" style="-webkit-text-stroke-width: 0px; background-color: transparent; color: #cc3300; font-style: normal; font-variant: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: left; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">உங்களை சுற்றி பின்னப்படும் பரிந்துரை என்னும் மாயவலை!</a></li>
<li><a href="https://mukundamma.blogspot.com/2015/05/facebook.html" style="-webkit-text-stroke-width: 0px; background-color: transparent; color: #cc3300; font-style: normal; font-variant: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: left; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">Facebook ம் ப்ரைவசியும் பெண்களும் </a></li>
<li><a href="https://mukundamma.blogspot.com/2014/03/blog-post.html" style="-webkit-text-stroke-width: 0px; background-color: transparent; color: #cc3300; font-style: normal; font-variant: normal; font-weight: 400; letter-spacing: normal; orphans: 2; text-align: left; text-decoration: none; text-indent: 0px; text-transform: none; white-space: normal; word-spacing: 0px;">காசு, பணம் துட்டு, மணி மணி ! </a></li>
</ol>
<div>
<span style="color: #b01600; font-family: Georgia;"><br /></span></div>
<span style="color: #001000; font-family: Georgia;">நான் என்னென்ன குறிப்பிட்டேனோ அது நடந்து விட்டிருக்கிறது. முகநூலில் உங்களை குறித்த விஷயங்களை சேகரித்து, உங்களுடைய பர்சனல் விஷயங்களை வேறொரு கம்பெனியிடம் விற்று, உங்களையே டார்கெட் செய்து மார்க்கெட் செய்து இருக்கிறார்கள். அதுவும் அமெரிக்க தேர்தலில் இது ஒரு பெரிய வித மார்க்கெட்டிங் உத்தியாக உபயோகப்படுத்த பட்டு இருக்கிறது. நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று மார்க் ஸுகேர்பேர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் போனது போனது தானே.</span><br />
<br />
<span style="color: #007620; font-family: Georgia;"><br /></span>
இதனால் என்னங்க பிரச்னை என்று கேட்பவர்களுக்கு.. நீங்கள் என்ன சாப்பிடுவது, என்ன பார்பது என்ன உடை அணிவது, என்ன கேட்பது, என்ன என்ன செயல்கள் செய்வது, என்று ஒன்று விடாமல் உங்களை குறித்த ப்ரொபைலிங் நடக்கிறது. உங்களை குறித்து அறிந்தபிறகு, உங்களுக்கு தேவையான பொருட்கள், வீட்டிற்கே வந்து மார்க்கெட்டிங் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் மார்க்கெட்டிங் இப்போது எல்லா இடங்களிலும் கொடி கட்டி பறக்கிறது. உங்களுக்கு தேவையானதை, மற்றொருவர் முடிவு செய்வார். உங்களுக்கு என்று சுயம் ஓன்று இல்லாமல் போகும்<br />
<br />
இப்பொது, கூகிள் ஹோம், அலெக்சா, சிறி என்று பல பர்சனல் அசிஸ்டென்ட் ஆப் கள் இருக்கின்றன. அதுவும் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொரு நிமிடமும், உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று டேட்டா கலெக்ட் செய்து அனுப்புகின்றன. இதனால், நீங்கள் பொது வெளியில் என்ன செய்கிறீர்கள் என்பதை விட, வீட்டில் என்ன என்ன செய்கிறீர்கள் என்று உங்களை முழுக்க ப்ரொபைல் செய்கிறார்கள்.<br />
<br />
அப்படி செஞ்சா என்ன பிரச்னை ஆகப்போகுது..விடுங்க என்பவர்களுக்கு, இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் எப்படி ரோபோக்கள் பல வேலைகளுக்கு மனிதர்களை விட பயன்படுத்த பட்டிருக்கும் என்ற மார்க்கெட் வாட்ச் செய்தி மற்றும் படம் இங்கே.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-eqcEFfs6yNo/WrQIGohyAyI/AAAAAAAACVE/LfIP6ie2wQomEzg_3CYX1_fioEBJuUp8QCLcBGAs/s1600/automation-and-unemployment.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1104" data-original-width="1600" height="275" src="https://4.bp.blogspot.com/-eqcEFfs6yNo/WrQIGohyAyI/AAAAAAAACVE/LfIP6ie2wQomEzg_3CYX1_fioEBJuUp8QCLcBGAs/s400/automation-and-unemployment.jpg" width="400" /></a></div>
<br />
<br />
<br />
<span style="font-family: Georgia;"></span><span style="color: #001000;"></span>இதில் என்ன குறிப்பிட படுகிறது என்றால், மூளையை உயோகிக்காமல் செய்யப்படும் பல வேலைகளை ஆட்டோமேஷன் செய்து விடுவார்கள். முதல் உதாரணமாக, சூப்பர்மார்கெட் செல்கிறீர்கள் என்றால், அங்கே பில் போட என்று இருக்கும் மக்கள் இனிமேல் இருக்க மாட்டார்கள். அதற்க்கு பதில் ஆட்டோமேட்டிக் ஆக நீங்கள் பில் போடா முடியும். ஏற்கனவே, ஆட்டோமேட்டிக் செக்கின் என்று பல கடைகள் வந்துவிட்டன, இன்னும் சில வருடங்களில் இந்த வேலை எல்லாமே இருக்காது. அந்த வேலை மட்டுமே செய்த தெரிந்த பலருக்கு வேலை இழப்பு ஏற்படும்.<br />
<br />
சரி இதற்கும் உங்களை பற்றிய ப்ரொபைலிங் என்பதற்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு? ப்ரொபைலிங் செய்வதன் மூலம் உங்களுடைய முழு விவரமும் அவர்களுக்கு தெரியும். அந்த விவரங்களை ஒரு AI /அர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு படிமுறை மூலம் படிப்படியாக கம்ப்யூட்டர் உங்களை பற்றி கற்றுக்கொள்ளும்.<br />
<br />
இது எப்படி ஒரு குழந்தை சிறுவயதில் இருந்து கற்றுக்கொள்கிறதோ, அதனை ஒத்தது. சரி கற்று கொண்டு என்ன ஆகபோகிறது, என்றால். நீங்கள் செய்யும் வேலையும் கம்ப்யூட்டர் செய்கிறது எனில் அதுவும் நீங்கள் செய்யும் வேலை வெறும் உடல் உழைப்பு சார்ந்தது எனில், மனிதர்கள் வேலைக்கு எடுக்க மாட்டார்கள், பதிலாக, கம்ப்யூட்டர் அல்லது ரோபோக்கள் வேலைக்கு எடுக்கப்படும்.<br />
<br />
இப்படி மனிதர்கள் அல்லாத ரோபோக்களை வேலைக்கு வைப்பது அவர்களுக்கு சௌகரியம். PF,பஞ்சபடி, மாதாமாதம் சம்பளம், இன்சூரன்ஸ், என்று எதுவும் கொடுக்க தேவை இல்லை. வேலையில் நேரும் குற்றங்கள் நிறைய இருக்காது. சப்போர்ட் வேலைகள் எல்லாமே கம்ப்யூட்டர் செய்துவிடும். ஆட்டோமேட்டிக் மெஸேஜ் போல, தற்போது ஆட்டோமேட்டிக் டெல்லர் வந்து விட்டது. இதனால் BP வேலை செய்யும் பலருடைய வேலை போகும்.<br />
<br />
உங்களை பற்றி தெரிந்து கொண்டு உங்களையே வேலையை விட்டு தூக்கலாம், அதற்க்கு உங்களுடைய ப்ரொபைல் பயன்படுத்தலாம். உங்களுடைய கிரெடிட் கார்டு, SSN போன்றவற்றையே சேகரித்து உங்கள் பெயரில் வேறொருவர் லோன் வாங்கலாம். இல்லை பொருட்கள் வாங்கலாம். எங்கும் டேட்டா செக்யூரிட்டி என்று எதுவும் இருக்க போவதில்லை. இவர்கள் சேகரிக்கும் டேட்டா பாதுகாக்கப்படும் என்று யாரும் உறுதி கொடுக்க போவதில்லை. நாமே சென்று எதிர் இந்த நிலைக்குள் விழ வேண்டும். சிந்திப்போம்.<br />
<br />
நன்றி.<br />
<br />
<br />
<br />
References<br />
<br />
http://www.foxnews.com/tech/2018/03/21/facebook-ceo-zuckerberg-breaks-silence-on-data-scandal-dont-deserve-to-serve-without-security.html<br />
<br />
https://www.marketwatch.com/story/this-chart-spells-out-in-black-and-white-just-how-many-jobs-will-be-lost-to-robots-2017-05-31<br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-4095998782827518242018-03-11T10:10:00.000-04:002018-03-11T10:10:07.748-04:00இனிமேல், ஆடு வெட்டாம ஆட்டுக்கறி சாப்பிடலாம்!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த பதிவுக்கு ஆடு வெட்டாம ஆட்டுக்கறியும், ஹீலா செல்களும்!! என்று தான் தலைப்பு வைக்கணும்னு நினைச்சேன், ஆனா, ஹீலா செல்கள் "கான்செர் பேஷண்ட்" என்பதால் நெகடிவ் பதம் வந்து விடும் என்று மாற்றி வைத்து விட்டேன்.<div>
<br /></div>
<div>
"என்ன தலையும் புரியல வாலும் புரியல ?"என்பவர்களுக்கு, என்னுடைய முந்தைய பதிவான "</div>
<div style="text-align: left;">
<a href="http://mukundamma.blogspot.com/2011/07/blog-post.html" style="color: #993322; text-decoration: none;">ஹீலா ஹீலா - செத்தும் கொடுத்தார்</a>" இல் இருந்து சில பகுதிகள்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
"<span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">மருத்துவ </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">ஆராய்ச்சி</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">உலகில்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">இருக்கும்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">அனைவருக்கும்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: red;"><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">HeLa</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span></span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">என்ற</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">பெயர்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">மிகவும்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">பரிச்சயமாக</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">இருக்கும்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">. </span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"><span style="color: red;">HeLa</span></span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">என்பது</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">அழியாத</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">மனித</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">செல்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">லைன்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">என்று</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">சொல்வார்கள்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">.</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">பொதுவாக</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">மனித</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">செல்கள்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">உடம்புக்கு</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">வெளியே</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">வளர்ப்பது</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">1951</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">வரை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">மிக</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">மிக</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">கடினமானது</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">என்று</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">கருதப்பட்டது</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">.</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">அவற்றை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">எல்லாம்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">முறியடித்து</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">உடம்புக்கு</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">வெளியேயும்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">செல்கள்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">வளர</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">முடியும்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">என்று</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">நிரூபித்தது</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">HeLa</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">செல்கள்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">மட்டுமே</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; text-align: justify;">.</span></div>
<br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><span style="background-color: white;"><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">இதென்ன!!,</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">மனித</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">செல்கள்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">உடம்புக்கு</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">வெளியே</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">வளருவதா</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">? </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">என்ன</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"></span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">சொல்லுறாங்க</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">! </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">என்று</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"></span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">கேட்பவர்களுக்கு</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: red;"><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">திசு</span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;"> </span><span style="font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">கல்சுர்</span></span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">பற்றிய</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">சின்ன</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">அறிமுகம்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">.</span></span><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் </span><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".</span><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">எப்படி செய்கிறார்கள்</span><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது </span><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">எதற்க்காக</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">செய்கிறார்கள்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;"> </span><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><span style="background-color: white;"><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">மருத்துவ</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">சோதனைகளை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">சோதனை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">ச்சாலை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">எலிகளிடமோ</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">, </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">மனிதர்களிடமோ</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">செய்வதற்கு</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">முன்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">, </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">உயிரின</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">செல்களிடம்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">செய்து</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">அவை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">எப்படி</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">அந்த</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">சோதனைகளை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">எதிர்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">கொள்கின்றன</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">என்று</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"></span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">காண்பர்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">. </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">இதனை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">போன்ற</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">திசுக்களில்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">நடத்தப்படும்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">பரிசோதனை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">எந்த</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">உயிரினத்தையும்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"></span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">பரிசோதனை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">என்ற</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">பெயரில்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">துன்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">புறுத்துவதர்க்கு</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">முன்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">செய்யப்படுவதால்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">திசு</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">கல்ச்சர்</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">ஒரு</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"></span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">வரப்பிரசாதமாக</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">கருதப்படுகிறது</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">.</span></span><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">சரி</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">இப்போது</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">ஹீலா</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">செல்களை</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">பற்றி</span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;"> </span><span style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px; font-weight: bold;">பார்ப்போம்</span><br style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;" /><br />
<div style="color: #333333; font-family: Arial, Tahoma, Helvetica, FreeSans, sans-serif; font-size: 13.52400016784668px;">
<div style="text-align: justify;">
முதன் முதலில் ஆராய்ச்சி துறைக்கு நான் வந்த பொழுதெல்லாம் HeLa செல்களில் இந்த ஆராய்ச்சி நடந்தது, அந்த ஆராய்ச்சி நடந்தது என்றெல்லாம் பலர் கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் HeLa செல் என்றால் என்ன என்று கேட்டால் ஒரே ஒரு பதில் தான் வரும் "HeLa is a immortal cell line" அதனை தவிர வேறொன்றும் யாருக்கும் தெரியாது.<br /><br />சமீபத்தில் "The immortal life of <b>Henrietta Lacks</b>" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.<br />ஹீலா என்று மட்டுமே அறியப்பட்ட ஹென்ரிட்ட லாக்ஸ் என்ற கறுப்பின பெண்மணியின் கான்செர்செல்களே ஹீலா செல்கள் என்று அறியப்படுகின்றன என்று அறிந்த போது ஆச்சரியபட்டேன்.</div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-v2qs7b7K5P4/WqU4ioDe3LI/AAAAAAAACUg/iCJ7lcLvdRUhFxCpKutbhhy3Dr0EOMfngCLcBGAs/s1600/9781400052172_p0_v4_s600x595.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="595" data-original-width="412" height="320" src="https://2.bp.blogspot.com/-v2qs7b7K5P4/WqU4ioDe3LI/AAAAAAAACUg/iCJ7lcLvdRUhFxCpKutbhhy3Dr0EOMfngCLcBGAs/s320/9781400052172_p0_v4_s600x595.jpg" width="221" /></a></div>
<div style="text-align: justify;">
<br /></div>
<div style="text-align: justify;">
<span style="background-color: white;">போலியோ மருந்து முதல் பல பல கான்செர் மருந்துகள் வரை பலவகை மருந்துகளும் முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது இந்த அம்மாவின் செல்களில் தான். சொல்லப் போனால் ஒருபுது மருத்துவ மறுமலர்ச்சியையும், மில்லியன் டாலர் இண்டஸ்ட்ரியையும் இந்த செல்கள்உருவாக்கி இருக்கின்றன. இன்னும் கூட பல பல நாடுகளில் ஊர்களில் இருக்கும் பல மருத்துவஆராய்ச்சி கூடங்களில் இவருடைய செல்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...<br /><br />ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு கொடுத்த அவரோ மிக இளவயதில் கர்ப்பப்பை வாய்புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ அவருடையஉடம்பில் இருந்து எடுத்த செல்களை கொண்டு திசு கல்ச்சர்இல் வளர வைத்து ஒரு பெரியஇண்டஸ்ட்ரி உருவாக்கி விட்டார்கள் ஆனால் இதனை பற்றி அவருடைய குடும்பம் துளியும்அறிந்திருக்க வில்லை.</span></div>
</div>
<div style="text-align: left;">
"</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நிற்க, சரி இப்பொழுது எதற்கு ஹீலா செல்களை பற்றியும், ஆட்டு கறி பற்றியும் குறிப்பிடுகின்றேன் என்றால், எப்படி ஹீலா செல்களை பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்தார்களோ, அதே போல, மற்ற விலங்குகள் செல்களையும் பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்து ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், ஏன் இதை பிசினெஸ் ஆக செய்ய கூடாது என்று பிசினெஸ் முதலாளிகள் நினைத்ததன் விளைவாக, தற்போது பல பல கம்பெனிகள் இதனை ஒரு பிசினிஸ் ஆக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் "க்ளீன் மீட்". "மெம்பிஸ் மீட், சூப்பர் மீட்" என்று பல பல கம்பெனிகள் இந்த பிசினெஸ் இல் இருக்கிறார்கள்.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
அதாவது சின்ன பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்ப்பதற்கு பதில், பெரிய, அல்லது இண்டஸ்ட்ரி லெவல் உற்பத்தி செய்வது. இதன் மூலம், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி அனைத்தும் லேபில் உற்பத்தி செய்யப்படும். அதன் சுவை மாறி இருக்கிறதா என்று நிறைய டேஸ்ட் டெஸ்ட் நடத்தி இருக்கிறார்கள். </div>
<div style="text-align: left;">
<br /></div>
இதனை சார்ந்த புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது <a href="https://cleanmeat.com/">"கிளீன் மீட்" </a> எப்படி இனிமேல், ஆட்டுக்கறி மாட்டு கறி உற்பத்தி இருக்க போகிறது என்பது குறித்த விளக்கம் இதில் இருக்கிறது.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-rsI_MHLxqiw/WqU3WVEpOCI/AAAAAAAACUU/bTcDRCysvkUh93AmscoBuaWWRl7S36jEgCLcBGAs/s1600/Clean-Meat-Cover-Large.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1000" data-original-width="662" height="320" src="https://2.bp.blogspot.com/-rsI_MHLxqiw/WqU3WVEpOCI/AAAAAAAACUU/bTcDRCysvkUh93AmscoBuaWWRl7S36jEgCLcBGAs/s320/Clean-Meat-Cover-Large.jpg" width="211" /></a></div>
<br />
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இனிமேல் கடைக்கு சென்று கறி வாங்கும் போது அது உண்மையிலேயே ஒரு ஆடு மாடு வெட்டி வர்ற கறியா, இல்லை லாபில் வளர்த்த கறியா என்று தெரியாது என்பது உண்மை. </div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
நன்றி.</div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
<div style="text-align: left;">
<br /></div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-50729581953080227962018-03-03T10:46:00.001-05:002018-03-03T10:47:02.137-05:00"மில்லியனல்ஸ்"/ஜென் Z " என்னும் ஐ, மீ, தலைமுறை!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நாம், இது பாசிட்டிவ் விளைவை தரும் என்று நினைத்து செய்யும் பல விஷயங்கள் மறுபக்கத்தில் நெகடிவ் விளைவை தரலாம். அப்படி ஆன ஒரு விடயத்தை குறித்த பதிவு இது.<br />
<br />
சில பல வருடங்களாக, பாசிட்டிவ் பேரெண்டிங் குறித்து நிறைய படித்து, பேசி இருக்கிறேன். எப்படி குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஊக்குவித்து, அவர்களின் ஒவ்வொரு அசைவிலும் பின்னிருந்து உற்சாகப்படுத்துவது குறித்தது.<br />
<br />
ஒவ்வொரு தலைமுறையும் தன்னுடைய அடுத்த தலைமுறை மக்களை பார்த்து குறை சொல்ல ஆரம்பிப்பது பொதுவாக நடப்பதுண்டு. உதாரணமாக, போன தலைமுறை அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறும் ஒன்று , “நாங்க எல்லாம் எப்படி கஷ்டப்பட்டு படிச்சோம் தெரியுமா!! “ என்று. பிள்ளைகளிடம், உங்களுக்கு பொறுப்பே இல்லை என்று குறை சொல்லுவார்கள். அதனாலேயோ என்னவோ தான் பட்ட கஷ்டத்தை தனது பிள்ளை படக்கூடாது என்று தாராளமாக செலவு செய்வது, கடன் வாங்கியாவது பிள்ளைகளை படிக்க வைப்பது தொடர்ந்தது. “ போய், புள்ள குட்டிங்கள, படிக்க வையுங்கைய்யா!!” என்பது பொதுவான சொல்வழக்காக ஆகி இருந்தது.<br />
<br />
இது நல்ல விஷயம் தானே!!, என்பவர்களுக்கு, இதன் அடுத்த பக்கம் குறித்த கிலிம்ஸ் இங்கே.<br />
<br />
சரி, தற்போது விசயத்துக்கு வருவோம். வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்தால், அதிகம் வேலைக்கு அப்ளை செய்வது மில்லியனல்ஸ் எனப்படும் தலைமுறை. 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும் பிள்ளைகள் மில்லியனல்ஸ் எனப்படுகின்றனர், முதலில் மில்லியானால் தலை முறை எண்பதுகளின் மத்தியில் பிறந்த குழந்தைகளில் இருந்து 2000 ஆம் ஆண்டு தொடக்கம் வரை பிறந்த குழந்தைகளை குறிக்கிறது. ஓவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்கேல் வைத்து இருக்கிறார்கள் மில்லியனல்ஸ் தலைமுறைக்கு என்பதால் இது பொதுவாக குறிக்கப்படும் அளவீடுகளை வைத்து எழுதப்பட்டது. நான் பார்த்த வரையில் இப்பொழுதெல்லாம், சினிமாக்களில் பொதுவாக கதாநாயகன் இந்த தலைமுறையை சார்ந்தவனாக காட்டப்படுகிறார (1988-89 இறுதியில் பிறந்தவராக)<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-Y9qOoxEyw1M/Wpq1GhK-luI/AAAAAAAACT4/UwB3VbqINfY1oEMQHxbcgMW1U7ImHMOSQCLcBGAs/s1600/shutterstock_493599385.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="667" data-original-width="1000" height="213" src="https://2.bp.blogspot.com/-Y9qOoxEyw1M/Wpq1GhK-luI/AAAAAAAACT4/UwB3VbqINfY1oEMQHxbcgMW1U7ImHMOSQCLcBGAs/s320/shutterstock_493599385.jpg" width="320" /></a></div>
<br />
இந்த தலைமுறை மக்களிடம் இன்டெர்வியூ செய்யும் போது,பொதுவாக எந்த சூழல் உங்களுக்கு அதிகம் மோட்டிவேட் செய்யும், அதிகம் சந்தோசம் தரும், என்று கேட்டு இருக்கிறேன். முக்கால் வாசி நேரம் அவர்களின் பதில், சிலிக்கான் வல்லேய் போல், 1. பிரீ சாப்பாடு, 2. ரிலாக்ஸ் ஆன வேலை சூழல், 3. இன்டெரெஸ்ட்டிங் வேலை, 4. தாக்கம் ஏற்படுத்தும் வேலை என்று சொல்வார்கள். வேலைக்கு எடுத்தால், பயங்கர இன்டெரெஸ்ட்டிங் ஆக வேலையை தொடக்கத்தில் கற்று கொள்வார்கள்.<br />
<br />
சில மாதங்கள் கழித்து நீங்கள் அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள். முக்கால் வாசி பேர், "மை ஜாப் சக்ஸ்", சந்தோசமாக இல்லை, இம்பாக்ட் இல்லாமல் இருப்பதாக சொல்வார்கள். எங்கள் கம்பெனியில், மூன்று மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ஒருவர், எனக்கு வேலை பிடிக்கவில்லை என்று ரிசைன் செய்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், எனக்கு ஒரே ஆச்சரியம், இங்கு "ப்ரோமோஷன் இல்லை, எனக்கு ரெகக்னிஷன் இல்லை, வேலை சேலஞ்சிங் இல்லை". என்பது. சேர்ந்து 3 மாதத்தில் எப்படி ப்ரோமோஷன் கொடுப்பார்கள், இல்லை ரெகக்னிஷன் கொடுப்பார்கள், எப்படி சேலஞ்சிங் இல்லை என்று கண்டுகொண்டார்? என்று எனக்குள் கேள்வி.<br />
<br />
இந்த தலைமுறை மக்களுக்கு எது சந்தோசம், எந்த மாதிரி வேலை சேலஞ்சிங் என்று நிறைய குழம்பி இருக்கிறேன். அப்போது, "சைமன் சிமோக்" தன்னம்பிக்கை புத்தக, பேச்சாளர் உலகில் அதிகம் அறியப்படும் பெயர், அவரின், டெட் டாக் ஒன்றை கேட்க நேர்ந்தது. அதனை தொடர்ந்து மில்லியனல்ஸ் தலைமுறை பற்றிய <a href="http://time.com/247/millennials-the-me-me-me-generation/">ஒரு டைம் ஆர்டிகிள் ஒன்றும் </a>படிக்க நேர்ந்தது. இந்த இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விசயங்கள் பகிரப்பட்டு இருந்தன.<br />
<br />
சைமன், மில்லியனல்ஸ் தலைமுறையை ஆபிசில் வழி நடத்துவது எப்படி ஒரு கடினமான வேலை என்று கூறுகிறார். அவரும் நான் முன்பு பகிர்ந்ததை போன்ற விஷயங்களை பகிர்ந்து , அவர்கள் இப்படி செய்வதற்கான காரணங்களை விளக்குகிறார்.<br />
<br />
<u><span style="color: blue;"> முதல் காரணம்: பெற்றோரின் வளர்ப்பு : </span></u><br />
<br />
பிள்ளைகளை செல்லம் கொடுத்து, கஷ்டம் தெரியாமல் வளர்க்கிறோம், தன்னம்பிக்கையுடன் வளர்க்கிறோம் என்று இந்த தலைமுறை பெற்றோர் பிள்ளைகளை பெரும்பாலும் வளர்கிறார்கள். பிள்ளைகள் பள்ளியில் கடைசியில் வந்தாலும் சரி, இல்லை பெயில் ஆனால் கூட, பரவாயில்லை என்று உற்சாகப்படுத்தியது. எப்பொழுதும் தங்களுடைய குழந்தைகளை "நீங்கள் ஸ்பெஷல்" என்று சொல்லி, என்ன வேண்டுமோ அதனை தர/தந்த பெற்றோர். குழந்தைகளுக்காக டீச்சர்களிடம் சண்டை போட்ட பெற்றோர். தங்கள் குழந்தைகள் பெஸ்ட் நீங்கள் தான் சரியாக குழந்தைகளை ட்ரீட் செய்யவில்லை என்று கம்பளைண்ட் செய்த பெற்றோர்.<br />
<br />
இதெல்லாம் சரியான அணுகுமுறையா? என்றால் failed parenting என்கிறார் சைமன் அவர்கள். ஏனெனில், இந்த தலைமுறைக்கு, தோல்வி தரும் வேதனையும்,அவமானத்தால் முன்னேறும் உத்வேகம் வந்து அதன் பிறகு எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று செயலாற்றுவதும் இல்லாமல் போய் விட்டது என்கிறார். எப்பொழுதும் ஒருவர் வென்று கொண்டே இருந்தால், தோல்வி என்பது என்னவென்று தெரியாமல்போய் விடும், அடிபட்டு, மிதிபட்டு, வென்றால் மட்டுமே வெற்றியின் சுவை தெரியும்.<br />
<br />
"நீ எப்பொழுதும் ஸ்பெஷல்"என்று வளர்க்கப்பட்ட இந்த தலைமுறை ,வெளி உலகில் விடப்படும் போது , வேலைக்கு வரும் போது , யாரும் அவர்க்ளை, "நீங்கள் ஸ்பெஷல்", என்று சொல்லவோ, எப்பொழுதும் ஏதாவது "அவார்ட், ரெகக்னிஷன்" கொடுக்கவோ மாட்டார்கள். இதனால் இவர்கள் ரெகக்னிஷன் இல்லை, சந்தோசம் இல்லை என்று ஆரம்பித்து விடுகிறார்கள். அடுத்தது என்ன என்று தேட ஆரம்பித்து விடுகிறார்கள்.<br />
<br />
<u><span style="color: blue;">இரண்டாவது காரணம்: டெக்னாலஜி </span></u><br />
<br />
இந்த தலைமுறை அதிகம் சோசியல் மீடியா உபயோகித்த/உபயோகிக்கும் தலைமுறை. ஒவ்வொரு முறையும் செல்போன் ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், ட்விட்டர் என்று தன்னை பற்றி<br />
அதிகம் பப்லிஷ் செய்த தலைமுறை. எப்பொழுதும் போனும் கையுமாக "லைக்ஸ்/கிளிக்ஸ்/கமெண்ட்ஸ்" வருகிறதா என்று பார்த்த தலைமுறை. ஒவ்வொரு முறை லைக்ஸ் வரும்போதும், மூளையில் ப்ளெஷர் சென்டர்இல் "டோபோமின்" சுரக்க ஆரம்பிக்கிறது. இது ஒரு இன்ஸ்டன்ட் சந்தோசம் தரும் ஹார்மோன். அதிகம் டோபோமின் சுரக்க சுரக்க, அதிகம் நம்மை பற்றி போஸ்ட் செய்ய ஆரம்பிப்பார்கள். இன்டர்நெட் அடிக்சன் எல்லா தலைமுறைக்கும் தற்போது இருக்கிறது என்றாலும், சிறு வயது முதல் இந்த அடிக்சனில் இருப்பவர்கள் மில்லியனல்ஸ்.<br />
<br />
இதே "டோபோமின்", ஒருவர் தண்ணி அடிக்கும் போதும், சிகரெட் புகைக்கும் போதும், சீட்டாடும் போதும், ரிலீஸ் செய்யப்படும் ஒன்று, அதாவது, மற்ற போதை போல இதுவும் ஒரு வகை போதை. தன்னை முன்னிறுத்தி எப்போதும் மற்றவர்கள் தன்னை பற்றி பேச வேண்டும் என்று நினைக்க வைக்க நினைக்கும் போதை. இன்ஸ்டன்ட் க்ராடிபிகேஷன் அடைய/ந்த அதற்காக எல்லாமுமே செய்ய விளையும் தலைமுறை.<br />
<br />
இந்த தலைமுறை எல்லாவற்றையும் உடனே, உடனே பார்த்து விடுகிறார்கள்.<br />
எல்லாம் உடனே உடனே என்று பழக்கப்பட்ட இவர்கள், வேலையில் அங்கிகாரமும் உடனே வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெற்றிக்கு வெயிட் செய்வது, கஷ்டப்பட்டு உழைப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு பிடிப்பதில்லை. எல்லாமே உடனே அவர்களுக்கு நடந்து விடவேண்டும். "இப்பொழுதே, இங்கே, எனக்கு, எனக்கு" கிடைக்க வேண்டும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையோ, செயலோ இருப்பதில்லை.<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen="" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/hER0Qp6QJNU/0.jpg" frameborder="0" height="266" src="https://www.youtube.com/embed/hER0Qp6QJNU?feature=player_embedded" width="320"></iframe></div>
<br />
<span style="color: blue;"><u>மூன்றாவது காரணம்: மக்களுடன் எப்படி பழகுவது என்று அறியாமல் இருப்பது</u></span><br />
<br />
<br />
இதனை கேட்டவுடன் பலரும், என்ன சொல்லுறீங்க, இந்த தலைமுறை தான் அதிகம் பேஸ்புக் நண்பர்கள் உள்ள தலைமுறை, எப்பொழுதும் "வெல் கன்னெக்ட்டடட் " தலைமுறை. இப்படி சொல்லும் பலரை கேட்டு இருக்கிறேன். ஆனால், இந்த தலைமுறை தங்களுடைய அனைத்து நண்பர்களையும் நிழல் உலகத்தில் மட்டுமே வைத்து இருக்கிறார்கள். அந்த நிழல் உலகில் தன்னை பற்றிய பல பல பிம்பங்களை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அந்த பிம்பங்கள் உடையாத வாறு மெயின்டைன் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த தலைமுறை மக்களுக்கு தன்னை பற்றிய சுயதேடல் அல்லது சுயமரியாதை மிக குறைவு. அடுத்தவர்கள் தன்னை பற்றி உயர்வாக நினைக்கவைக்க என்னென்ன தேவையோ அதனை செய்யும் அவர்கள், தன்னுடைய சுயம் என்ன?, என்பதை மறந்த தலைமுறை.<br />
<br />
ஒரு நல்ல, நம்பிக்கையான நண்பர்/நண்பிகள் இல்லாத தலைமுறை இதுவாகத்தான் இருக்கும். வெளியே சுற்றவும், தண்ணி அடிக்கவும், சினிமா செல்லவும் அதிகம் கூட்டம் கூட்ட மெனக்கெடும் இந்த தலைமுறை, நல்ல அர்த்தமுள்ள, ஆழமான நட்பை வளர்க்க தவறி விட்டதென சொல்லலாம். அப்படிப்பட்ட நட்பை எப்படி வளர்ப்பது என்று தெரியாத தலைமுறையும் இதுவே. உண்மை நட்பை அறியவேண்டுமானால், நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும். நீங்கள் மற்றொருவராக இருந்தால், அந்த மற்றொரு பிம்பம் மட்டுமே நீங்கள் என்று உங்கள் நண்பர்கள் அறிவார்கள். இந்த தலைமுறை, தன்னுடைய உண்மையான சொரூபத்தை காட்டாதவர்கள். எப்பொழுதும் ஒரு முகமூடி அணிந்து நடப்பதாலேயோ என்னவோ, உண்மையான நட்பு என்பது என்ன, எப்படி நட்புகளை உறவுகளை வளர்ப்பது என்று அறியாமல் வளர்க்கிறார்கள்.<br />
<br />
இந்த நிலையில், ஆபிசில் வேலை செய்ய வேண்டும் என்றால், நீங்கள் மட்டும் அல்ல, உங்களை சுற்றி உள்ள மக்களுடன் பழக தெரிந்திருக்க வேண்டும். பீப்பிள் ஸ்கில்ஸ் மிக முக்கியம். ஆபிசில் நீங்கள் ஒருவர் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும், ஒருவர் மட்டுமே அனைத்தையும் தெரிந்திருக்க முடியாது. எப்பொழுதும் ஒரு "டீம்" என்பதே ஒரு காரியத்தை சரிவர நிறைவேற்ற முடியும். அடுத்தவர்களுடன் எப்படி பழகுவது என்பதே அறியாத இந்த தலைமுறை, "தான், தான்", என்று மட்டுமே நினைக்கும் ஒரு தலைமுறை. இதனாலேயே, ஒரு "டீம்" என்று வந்துவிட்டால், இவர்களால்<br />
சமாளிக்க முடிவதில்லை.<br />
<br />
எனக்கு சைமன் அவர்களின் பேச்சை கேட்ட போது, அதனை சார்ந்த விஷயங்களை வாசித்த பொது, அதில் இருக்கும் உண்மையை நிதர்சனத்தை மறுக்க முடியவில்லை. இந்த தலைமுறையை நினைத்து பாவமாக இருந்தது. அதிகம், சுயமரியாதை இல்லாத, சுயம் என்ற ஒன்று இல்லாத, பொறுமை இல்லாத, சோசியல் ஸ்கில்ஸ் இல்லாத, எப்படி அடுத்தவர்களோடு பழக வேண்டும் என்று அறியாத, சந்தோசமே இல்லாத ஒரு தலைமுறை உருவாகி இருக்கிறது/ உருவாகி கொண்டிருக்கிறது. என்ன செய்து இவர்களை மீட்டெடுப்பது?<br />
<br />
<br />
<u>டிஸ்கி :</u><br />
<br />
இது மில்லியனல்ஸ் தலைமுறை குறித்த என்னுடைய அனுபவங்கள், வாசித்த விடயங்கள் மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. நன்றி<br />
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-36188969848883205332018-01-28T19:38:00.003-05:002018-01-28T19:38:38.755-05:00ஏன், எனக்கு மட்டும் இது வந்தது???!!!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஏன், எனக்கு மட்டும் இது வந்தது, ஏன் இந்த மாதிரி கஷ்டம் எனக்கு வந்தது. இந்த நிலை எனக்கு மட்டும் ஏன்? இந்த நிலை எனக்கு வராமல் இருந்திருக்கலாமே!!! இப்படி வாழ்க்கையில் புலம்பாதவர்கள் உண்டோ!!<br />
<br />
என்ன ரொம்ப நாட்கள் கழித்து வலைப்பக்கம் வந்து எழுத ஆரம்பிக்கும் போதே புலம்பலா?? என்று நினைக்க வேண்டாம். வலைப்பக்கம் வர முடியாமல் பல மாதங்கள் ஆகும் நிலை. ஒவ்வொரு நாளும் Todo லிஸ்ட் போட்டு இதனை செய்து முடிக்க வேண்டும் அதனை செய்து முடிக்க வேண்டும் என்று பெரிய நீண்ட லிஸ்ட் , போட்டு செயலாற்ற வேண்டிய நிலை. கடந்த ஆறு மாதத்தில் ஒவ்வொரு மாதமும் எதோ ஒரு ஊருக்கு வேலை நிமித்தமாக பயணப்பட நேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு முறை பயணப்படும் போதும் ஒரு டார்கெட் முடிக்க வேண்டும் என்று கொடுக்க படும், அதனை நிறைவேற்றவில்லை எனில், வேலை இருக்குமோ இருக்காதோ என்ற நிலை.. எல்லா நேரங்களிலும் எதோ ஒரு டென்ஷனுடன் சுத்த வேண்டிய நிலை.. இதில்..கூட இருந்து நல்லவர்கள் போல நடித்து, நம்மை பற்றி போட்டு கொடுத்து மேலிடத்தில் நல்ல பெயர் வாங்கும் மக்கள். அட போங்கடா...என்ன வாழ்க்கை இது... என்று ஒவ்வொரு முறை நான் பயணம் செய்ய ஆரம்பிக்கும் போது, தினமும்.... பதிவு ஆரம்பத்தில் கேட்ட அதே கேள்விகள் எனக்கும் தொக்கி நிற்கும். ஏன், எனக்கு மட்டும் இது நேர்கிறது.<br />
<br />
3 விஷயங்கள் எல்லாமே எதோ ஒரு வகையில் எனக்கு இந்த கேள்விக்கான பதிலை கொடுத்து இருக்கின்றன.<br />
<br />
<b><u>முதல் விடயம் : "லார்ட் ஆப் தி ரிங்ஸ்" இன் முதல் பகுதியான "பெல்லோஷிப் ஆப் தி ரிங்:</u></b><br />
<br />
நெட்பிலிக்ஸில் , எதையோ ஒன்றை தேட போக, எதோ ஒன்று அகப்பட்டது போல "லார்ட் ஆப் தி ரிங்ஸ்" இன் முதல் பகுதியான "பெல்லோஷிப் ஆப் தி ரிங்" வந்திருந்தது. இந்த படத்தை பார்த்ததும், என்னுடைய ஸ்பின்ஸ்டர் வாழ்க்கை எனக்கு ஞாபகம் வந்தது. எந்த கவலையும் இல்லாமல், நண்பர்களுடன் இந்த படம் வந்த புதிதில் பார்த்த ஞாபகம்.<br />
<br />
ரொம்ப சுருக்கமாக அதன் கதை.. மிக சந்தோசமாக தன்னுடைய வாழ்க்கையை "ஷையர்" என்ற ஊரில் வாழ்ந்து கொண்டிருக்கும் "பிருடோ" க்கு அவனுடைய அங்கிள் இடம் இருந்து ஒரு "ரிங்" கிடக்கிறது. அங்கே வரும் "கண்டல்ப்" மூலமாக அது "மந்திர ரிங்" அது "கருப்பு அரசன்" சவுரன் உடையது. இந்த ரிங் இல்லாமல் அவன், தற்போது மனித உரு எடுக்க முடியாமல் சூட்சும சரீரத்தில் சுற்றி கொண்டு இருக்கிறன். அவனுடைய படைகளான "ஒர்க்" ஐ பல ஊர்களுக்கும் அனுப்பி தேடி கொண்டிருக்கிறான். இப்போது அந்த "ரிங்கை" மோர்டர் என்ற ஊரில் இருக்கும் எரிமலையில் சென்று அழிக்க வேண்டும். இந்த பணியை செய்யும் பொறுப்பு "பிருடோ"வை அடைகிறது.<br />
<br />
அந்த ரிங் தன்னுடைய தலைவனை எப்படியம் அடைய வேண்டுகிறது, அதனால் எல்லா விதமான காரியமும் செய்கிறது..அதன் கனத்தை தாங்க முடியாமல் பிருடோ , கண்டல்ப் இடம் கேட்கிறான்..<br />
<b>"ஏன் இந்த ரிங் என்னிடம் வந்தது?.. இது என்னிடம் வராமலே இருந்திருக்கலாம்?</b><br />
அதற்க்கு கண்டல்ப், <b>"இதனையே, இங்கு வாழும் பலரும் நினைக்கிறார்கள், ஆனால், அவர்கள் கையில் எதுவும் இல்லை. இப்போது நம் கையில் இருப்பது எல்லாம், இருக்கும் நேரத்தில் எப்படி இதனை செய்வது என்பதே. நம்மை சுற்றி , நம்மால் கட்டுப்படுத்த முடியாத, அறிய முடியாத சக்தி இருக்கிறது பிருடோ, கெட்ட சக்தியையும் தவிர.."</b>என்கிறார்.<br />
<br />
<br />
<table align="center" cellpadding="0" cellspacing="0" class="tr-caption-container" style="margin-left: auto; margin-right: auto; text-align: center;"><tbody>
<tr><td style="text-align: center;"><a href="https://4.bp.blogspot.com/-QjMM1NnRRz0/Wm5lH-YbqnI/AAAAAAAACSg/mdMX8POS0JQCvgHfuimxCoJuudkNfiFHgCLcBGAs/s1600/frodo-i-wish-the-ring-had-never-come-to-me-10359110.png" imageanchor="1" style="margin-left: auto; margin-right: auto;"><img border="0" data-original-height="741" data-original-width="501" height="400" src="https://4.bp.blogspot.com/-QjMM1NnRRz0/Wm5lH-YbqnI/AAAAAAAACSg/mdMX8POS0JQCvgHfuimxCoJuudkNfiFHgCLcBGAs/s400/frodo-i-wish-the-ring-had-never-come-to-me-10359110.png" width="268" /></a></td></tr>
<tr><td class="tr-caption" style="text-align: center;">Photos from Google images</td></tr>
</tbody></table>
<br />
<b>இரண்டாவது விடயம்: டான் பிரவுன் அவர்களின் நாவலான, "தி லாஸ்ட் சிம்பல்"</b><br />
நேரம் கிடைக்கும் போது வாசிக்கும் விஷயங்களில் பல மாதங்களாக உக்கார்ந்து படித்த இந்த புத்தகத்தில் கிட்ட தட்ட மேலே சொன்னது போன்ற ஒரு கேள்வி "ராபர்ட் லாங்டன்" இடம் தொக்கி நிற்கும். "ஏன் இந்த பிரமிட் என்னிடம் கொடுக்க பட்டது?" எதற்க்காக என்னை அனைவரும் துரத்த வேண்டும், என்ற கேள்வி?" அதற்க்கு "இந்த பிரமிட்டில் உள்ள செய்தியை உன்னை தவிர வேறு யாரும் இதில் உள்ள குறியீடுகளை பகுக்க இயலாது. அதற்காகவே, உன்னிடம் வந்திருக்கிறது. இப்போது இருக்கும் நேரத்தில் இதனை எப்படி பகுத்து உணர்வது என்று மட்டுமே நீ சிந்திக்க வேண்டும்". என்று சொல்ல படுகிறது.<br />
<br />
மேலும், Neotic Sciences, என்ற ஒரு அறிவியல் பிரிவு நமக்கு அறிவுறுத்த படுகிறது. IONS , எனப்படும் "இன்ஸ்டிடியூட் ஆப் நெஓடிக் சயின்சஸ்" என்ற கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் குறித்து பகிரபடுகிறது. இது அறிவியலையும், மனோதத்துவத்தையும், கடவுளையும் இணைக்கும் ஒரு அறிவியல். எப்படி நாமெல்லாம் இந்த உலகின்/அண்டத்தின் ஒரு அங்கம், என்று படிக்கும் மற்றும் உணரும் ஒரு நிலை. (மேலும் இந்த நிறுவனம் பற்றி அறிய " http://noetic.org/about/what-are-noetic-sciences".). இதனை உருவாக்கியவர், "எட்கர் மிட்சேல்" என்னும் astronaut. நிலவுக்கு செல்லும் மிஷனில் ஒரு நாள் 360 டிகிரி சுழல நேரிட்ட போது, தனக்கு ஏற்பட்ட ஒரு நிலையை, வேறு எந்த புக், தியறியாலும் என்னால் உணர முடியவில்லை. ஆனால், அந்த நிலையை "சமாதி" என்று ஹிந்து மித்தாலஜி தெரிவிக்கிறது. என்று இந்த அறிவியல் பற்றி அவர் தெரிவிக்கிறார்.<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
</div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-A8EILjFMrGs/Wm5qvgqrAMI/AAAAAAAACS8/6NFnSoSai_osHKyM3iCayXHFPzPCoKEUwCLcBGAs/s1600/01_LostSymbolBookCoverCutOut.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="426" data-original-width="300" height="320" src="https://1.bp.blogspot.com/-A8EILjFMrGs/Wm5qvgqrAMI/AAAAAAAACS8/6NFnSoSai_osHKyM3iCayXHFPzPCoKEUwCLcBGAs/s320/01_LostSymbolBookCoverCutOut.jpg" width="225" /></a><a href="https://2.bp.blogspot.com/-lV0VWgPqGLA/Wm5qyt-2t_I/AAAAAAAACTA/iToIAG1yYYE3psTzamAR9AwcqkQhaG9bQCLcBGAs/s1600/008e9129f349c5398fcba9b9721be6e3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="236" data-original-width="236" src="https://2.bp.blogspot.com/-lV0VWgPqGLA/Wm5qyt-2t_I/AAAAAAAACTA/iToIAG1yYYE3psTzamAR9AwcqkQhaG9bQCLcBGAs/s1600/008e9129f349c5398fcba9b9721be6e3.jpg" /></a></div>
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<br />
நேரம் கிடைக்கும் போது, /ioNS பற்றி படித்து பாருங்கள். எனக்கு கிடைத்த அனுபவம் உங்களுக்கும் கிடைக்க கூடும்.<br />
<br />
<br />
<b>மூன்றாவது விடயம்: பகவத் கீதை, தமிழ் ஒலி வடிவம் </b><br />
<b><br /></b>
எப்பொழுதெல்லாம், மனது கஷ்டமாக இருக்கிறதோ எதாவது ஒன்றை வாசிக்க விழைவேன். அதில் பகவத் கீதை புத்தகமும் அடங்கும். எதையோ தேடும் பொது, இந்த <a href="https://www.youtube.com/watch?v=sQxn-r1FHoI">பகவத் கீதை தமிழ் ஒலி வடிவம் கிடைத்தது.</a> கிட்டத்தட்ட, அதே கேள்வியை அர்ஜுனனும் கேட்கிறான். "ஏன், எனக்கு இந்த போர் வந்தது?, பேசாமல் நான் சன்யாசியாகி விடுகிறேன்", எனக்கு இது தேவை இல்லை, என்கிறான். ஆனால், ஒரே பதில், இதனை தீர்மானிப்பது நீ அல்ல, இது எனக்கு வேணும், அது வேணாம் என்று தீர்மானிக்கும் அதிகாரம் உனக்கு இல்லை. இப்போது உனக்கு இருக்கும் கடமை, கொடுக்கப்பட்ட கணத்தில், நேரத்தில், ஒழுங்காக கடமை ஆற்றுவது தான்."<br />
<br />
<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe width="320" height="266" class="YOUTUBE-iframe-video" data-thumbnail-src="https://i.ytimg.com/vi/sQxn-r1FHoI/0.jpg" src="https://www.youtube.com/embed/sQxn-r1FHoI?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></div>
<br />
<br />
<br />
<br />
எந்த மொழியாக இருப்ப்பினும், கதை, இதிகாசமாக இருப்பினும், இதுவே திரும்ப திரும்ப கூறப்படுகிறது. எதனை செய்ய வேண்டும், வேண்டாம் என்று முடிவெடுக்கும் அதிகாரம் நமக்கு இல்லை. நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை ஒழுங்காக செய்வதே, நம்முடைய அதிகாரத்தில்உள்ளது. வேறெதுவும் நம் கையில் இல்லை.<br />
<br />
<br />
<br />
<br />
<br />
<div>
<br /></div>
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-21083910363883641282017-09-17T19:52:00.001-04:002017-09-17T19:52:12.967-04:00நம்மை கண்ட்ரோல் செய்வது கட்டுப்படுத்துவது யார்/எது ?<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
இந்த கேள்வியை நீங்கள் ஒவ்வொரு வயதினரிடம் கேட்டால் ஒவ்வொரு பதில் கிடைக்கலாம். உதாரணமாக சிறு குழந்தைகளிடமோ அல்லது பருவ வயதினரிடமோ கேட்டால், பெற்றோர் அல்லது உடன் பிறந்தவர்கள் என்ற பதில் வரும். அதே காதலிப்பவர்களிடம் கேட்டால், பெற்றோர் அல்லது சமூகம் என்ற பதில் வரும். திருமணமான பின்னோ கணவன் தன்னை கண்ட்ரோல் செய்வதாக மனைவியும், மனைவி கண்ட்ரோல் செய்வதாக கணவனும் மாறி மாறி புகார் கூறி கொள்வர். ஆனால், வயதான பின்பு உடல்நிலை, குழந்தைகள் என்று சைக்கிள் மாறி விடும்.<br />
<br />
ஆனால் நீங்கள் போனிலோ, அல்லது கம்ப்யூட்டரிலோ இன்டர்நெட் உபயோகிப்பவர் எனில் உங்களை கட்டுப்படுத்துவது எது என்ற கேள்வியை வயது வித்தியாசம் இல்லாமல் கேட்டு பாருங்கள். <br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-J1YWogX-Pf4/Wb8JvpxkHeI/AAAAAAAACRw/i9clgDASizUO0pzu52bUqb7SbPalXiPaQCLcBGAs/s1600/6-034f10.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="150" data-original-width="320" src="https://4.bp.blogspot.com/-J1YWogX-Pf4/Wb8JvpxkHeI/AAAAAAAACRw/i9clgDASizUO0pzu52bUqb7SbPalXiPaQCLcBGAs/s1600/6-034f10.JPG" /></a></div>
<br />
<br />
உதாரணமாக, நீங்கள் யூ-டியூபில் வீடியோ ஒன்று பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுவோம், முன்பெல்லாம் நீங்களாக அடுத்த வீடியோவை கிளிக் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இப்பொழுதோ, அதுவே ஆட்டோ பிலே செய்கிறது. அதாவது, உங்களுடைய வேலையை மிச்சப்படுத்த என்று யூ-டியூப் உங்களுக்காக செலக்ட் செய்து பிலே செய்கிறது. அதாவது யூ-டூபின் நோக்கம் உங்களை அதிக நேரம் அதில் செலவழிக்க வைப்பது. தொடர்ந்து பிலே ஆகும் போது, பல நேரங்களில் உங்களுக்கு அதனை விட்டு வெளியே வர முடிவதில்லை. அதாவது உங்கள் நேரத்தை, நீங்கள் வேறு வகையில் செலவழிக்க விடாமல் உங்களை யூ-டியூப் கண்ட்ரோல் செய்து விடுகிறது.<br />
<br />
<br />
<br />
அதே போல, நெட்பிலிக்ஸ் எடுத்து கொள்ளுங்கள், இதுவும் அதே பாணியை கடைபிடிக்கிறது. '<br />
ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்தது, தானாகவே பிலே ஆகிறது.<br />
<br />
இன்னொரு விஷயம். நீங்கள் எப்போது ஒரு விசயத்தை அதிகம் பார்ப்பீர்கள். உதாரணமாக, முகநூல் நியூஸ் பீட் எடுத்து கொள்ளுங்கள். அதில் எந்த விஷயங்கள் அதிகம் காட்டப்படுகிறது. நீங்கள் ஒரு செய்தியை படித்து மனம் வெதும்பி கமெண்ட் அடிக்கிறீர்கள் அன்று வைத்து கொள்ளுங்கள், உங்களுக்கு அதனை சார்ந்த பதிவுகள், திரும்ப திரும்ப காட்டப்படுகிறது, உதாரணமாக, என்னுடைய நண்பர் ஒருவர் கறுப்பினத்தை சேர்ந்தவர், அவர் நடந்து முடிந்த சார்லோட்ஸ்வில் தாக்குதலை குறித்து கமெண்ட் அடித்திருந்தார். இப்பொழுது விடாமல் அவரிடம் இருந்து அதே போன்ற பல பல செய்திகள் கமெண்ட் ஆக வந்து கொண்டிருக்கின்றன. எல்லாமே ரத்தத்தை கொதிக்க வைக்கிறது போன்ற செய்திகள். நடந்தது என்னவென்றால், அவரின் முகநூல் உபயோகிக்கும் நேரத்தை அதிகப்படுத்த என்று, அதனை சார்ந்த பல பல விஷயங்கள் அவருக்கு பரிந்துரைக்க படுகின்றன. அவரும் ஒவ்வொரு விஷயமாக வாசித்து, கமெண்ட் இட்டு அதனை மற்றவருக்கு அனுப்புகிறார்.<br />
<br />
முதலில் 15 நிமிடம் மட்டுமே முகநூலில் செலவழித்த அவர், இப்போது அதுவே கதி என்று இருக்கிறார்.<br />
<br />
நீங்கள் பிளிப்கார்ட் உபயோகிப்பவரா, இல்லை அமேசான் உபயோகிப்பவரா?, உங்களுக்கு ஏற்ற விடயங்களை, பொருட்களை அவர்களே பரிந்துரைக்கிறார்கள், உங்களுக்கு பிடிக்கும் என்று அடுத்த பொருட்களை பிளாஷ் செய்து உங்களை கிளிக் பண்ண செய்கிறார்கள். நீங்கள் செலவைக்கும் நேரத்தை அதிகரிக்க வைக்கிறார்கள்.<br />
<br />
சரி, இப்போது, மறுபடியும் நான் முதலில் கேட்ட கேள்விக்கு வரலாம். உங்களை யார் கண்ட்ரோல் செய்கிறார்கள்.<br />
<br />
"AI" எனப்படும் செயற்கை நுண்ணறிவு என்ஜினீர்கள். இவர்கள் டாப் 5-10 கம்பெனிகளில் இருக்கும் என்ஜினீயர்கள். கூகிள், முகநூல், யூடூப் , நெட்டபிலிக்ஸ், அமேசான், மைக்ரோ சாப்ட் என்றுஅனைத்து பெரிய கம்பெனிகளில் இருக்கும் அவர்களே உங்களை கண்ட்ரோல் செய்கிறார்கள். உங்களின் நேரத்தை எங்கே செலவழிப்பது, எப்படி செலவழிப்பது, என்ற அனைத்தையும் அவர்களே ப்ரோக்ராம் செய்து வைத்து விடுகிறார்கள். நீங்கள் அவர்கள் பரிந்துரைப்பது போல செயல்பட செயல்பட அதே போன்ற, அதனை சார்ந்தவை மட்டுமே உங்களுக்கு காட்டப்படும். உங்களின் சுயம் என்பது அவர்களால் நிர்ணயிக்க படுகிறது.<br />
<br />
இப்போது எத்தனை பேர் டிவி, போன், ஐபாட், கம்ப்யூட்டர், யூடூப், அமேசான், பிளிப்கார்ட், நெட்டபிலிக்ஸ் என்று எதுவும் இல்லாமல் இருக்கிறார்கள், சொல்லுங்கள். விரல் விட்டு எண்ணிவிடலாம்.<br />
<br />
இதுவே, டிவி நிகழ்ச்சிகளுக்கும் பொருந்தும். எப்படி மக்களை அதிக நேரம் டிவி பார்க்க வைப்பது என்று உக்கார்ந்து உக்கார்ந்து யோசித்ததாலேயே, பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் உருவாக்கப்படுகிறது. அதநை சார்ந்த பலவும் மற்ற எல்லா ஊடகங்களிலும் தெரிய செலவழிக்க வேண்டி உங்களுக்கு பரிந்துரைக்க படுகிறது.<br />
<br />
அதுவே எத்தனை பேர் புத்தகங்களை வாசிக்கிறார்கள், இந்த இன்டர்நெட் தாக்கம் இன்றி சொந்தமாக ஏதாவது செய்கிறார்கள். நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள். நாமெல்லாம் சுயத்தை AI என்ஜினீர்களிடம் இழந்து வருகிறோம், இதுவே உண்மை.<br />
<br />
நன்றி<br />
<br />
Reference:<br />
<br />
<a href="https://www.ted.com/talks/tristan_harris_the_manipulative_tricks_tech_companies_use_to_capture_your_attention/transcript?utm_campaign=social&utm_medium=referral&utm_source=facebook.com&utm_content=talk&utm_term=technology#t-873658">https://www.ted.com/talks/tristan_harris_the_manipulative_tricks_tech_companies_use_to_capture_your_attention/transcript?utm_campaign=social&utm_medium=referral&utm_source=facebook.com&utm_content=talk&utm_term=technology#t-873658</a><br />
<br />
<br />
<br />
<br />
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-34735961050806214302017-09-12T18:01:00.000-04:002017-09-12T18:01:57.548-04:00நகையும், சுயமரியாதையும், கொசு(றும்)!! <div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
ஒரு சில சமயம் சிறு குழந்தைகள் கேட்கும் கேள்விகள் நம்மை வாயடைத்து போக வைக்கும். பல நேரங்களில் எனக்கு இந்த நிலை ஏற்பட்டு இருந்தாலும் சமீபத்தில் முகுந்த் கேட்ட ஒரு கேள்வி என்னை யோசிக்க செய்தது. அது, Why do Women/Girls wear jewellery and makeup?<br />
அதாவது "எதுக்கு மா நகை போடுறாங்க?, எதுக்கு பொண்ணுங்க மேக்கப் பண்ணுறாங்க?" இதுவே அந்த கேள்வி?.<br />
<br />
எனக்கும் இதனை சார்ந்த ஒரு விஷயம் தோழிகளுடன் பேசும் போது கேட்க நேர்ந்தது. அதாவது, #100சாரீபாக்ட் எனப்படும் ஒரு தினமும் ஒரு புடவை அணிந்து போட்டோ எடுத்து அதனை இன்ஸ்டாகிராமில் போடுவது. புடவை மட்டும் என்றில்லாமல் அதற்க்கு தேவையான அணிகலன்கள் (ஜிமிக்கி, தோடு, வளையல், நகை etc ) அணிந்து, அவை எங்கே வாங்கியது என்று டாக் செய்வது.<br />
இதனை பலர் தினமும் செய்து வருவதாக அறிந்தேன். எதற்காக இவை செய்கிறார்கள்? என்ற கேள்வியும் வந்தது.<br />
<br />
சைக்காலஜியில் "மாஸ்லோவின் தேவைகள் பிரமிட்" என்ற ஒன்று உண்டு. அதனை "Maslow's Hierarchy of Needs" என்றழைப்பர். அதன்படி, மனிதர்கள் தேவைகளை பல படிநிலைகள் கொண்டு பிரிக்கலாம். அவை,<br />
<br />
1. அடிப்படை தேவைகள் (உணவு உடை உறைவிடம்)<br />
2. பாதுகாப்பு தேவைகள் (வேலை, உடல்நிலை, வாழ்வில் ஸ்திரத்தன்மை)<br />
3. அன்பு தேவைகள் (நண்பர்கள், குடும்பம், உறவுகள்)<br />
4. சுயமரியாதை தேவைகள் (தன்னம்பிக்கை, சாதித்தல், அடுத்தவர் மதிக்கும்படி நடத்தை, தனித்தன்மை)<br />
5.சுயம் அறிதல் (நன்னடத்தை, படைப்பாற்றல், தன்னிலை உணர்தல், வாழ்வின் நோக்கம் அறிய முற்படுத்தல்)<br />
<br />
<br />
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://4.bp.blogspot.com/-abQlii-8ZMY/WbhYhwb6p3I/AAAAAAAACRM/Z4mXwXPBQeMqvDimgPc9SBYw7EI4RjRDACLcBGAs/s1600/7479eddf03cfa045e3596635867692b7.800x716x1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="716" data-original-width="800" height="286" src="https://4.bp.blogspot.com/-abQlii-8ZMY/WbhYhwb6p3I/AAAAAAAACRM/Z4mXwXPBQeMqvDimgPc9SBYw7EI4RjRDACLcBGAs/s320/7479eddf03cfa045e3596635867692b7.800x716x1.jpg" width="320" /></a></div>
<br />
ஒவ்வொருவருடைய வாழ்வையும் எடுத்துக்கொண்டால் இந்த பிரமிடின் எதோ ஒரு படிநிலையில் நாம் இருக்கிறோம் அல்லது பல படிநிலைகளை தொட்டிருக்கிறோம் என்று அறியலாம்.<br />
<br />
உதாரணமாக. அடிப்படை தேவைகளான உணவு, உடை, உறைவிடம் எல்லாம் இரண்டாம் படிநிலையான வேலையை சார்ந்இருக்கிறது. வேலை இல்லாமல் இருக்கும் பலரின் அடிப்படை வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகின்றன.<br />
<br />
வேலையும் இருந்து விட்டால், வாழ்வின் அடுத்த நிலையான, உறவுகளை தேட ஆரம்பித்து விடுகிறோம். தமிழ் சினிமாவை பொறுத்தவரை இந்த நிலை பொருந்தாது, ஏனெனில், வேலைவெட்டி இல்லாதவன் தான் கதாநாயகன், ஆனால் உண்மை நிலவரம் வேறு, வேலை வெட்டி இல்லதவனை யாரும் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.<br />
<br />
உறவுகளும் அமைந்த பின், அடுத்த நிலை பிரச்சனைகள் எட்டி பார்க்கின்றன, பெரும்பாலும் அவை, சுயமரியாதை சம்பந்தப்பட்டவை. இந்தியாவில் ஒளிபரப்பப்படும் 100க்கு 99 சீரியல்கள் இந்த சுயமரியாதை பிரச்னைனை கையிலெடுத்து, சமூக அந்தஸ்து, அடுத்தவர் மதிக்கும்படு நடத்தை,…என்பதை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படுபவை.<br />
<br />
சீரியல்கள் தவிர்த்து உண்மை நிலவரம் என்னவென்றால், தன்னை இந்த சமூகம் மதிக்க வேண்டும், அதற்கான சில ப்ரோடோகால் உண்டு, நகை போடுவது, மேக்கப் போடுவது, 100சாரீபாக்ட் எல்லாமே, தனக்கான, தன்னுடைய சுயத்துக்கான தேடல். இதனாலேயே, நிறைய வீடுகளில் சீட்டுப்போட்டு நகை வாங்குவது. வாயை கட்டி வயிற்றை கட்டி நகை வாங்குவது. கஷ்டப்படும்போது அடகு வைக்க என்று காரணம் சொல்லப்பட்டாலும், மற்ற அடிப்படை தேவைகள் பூர்த்தியான பல வீடுகளில் நகை என்பது, தன்னுடைய சுயமரியாதையை வளர்த்து கொள்ளவே. எனக்கு தெரிந்தே ஏழை குடும்ப பெண்கள் கல்யாணத்துக்கு செல்லமாட்டார்கள், ஏனெனில், நீங்கள் எவ்வளவு நகை அணிந்து இருக்குறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுக்கு கொடுக்கப்படும் வரவேற்பும், மரியாதையும் இருக்கும் என்பதால்.<br />
<br />
சுயமரியாதை என்ற ஒன்று மட்டுமே பலரை பலநிலைக்கு கீழே தள்ள வல்லது. பலர் கடன் வாங்கியாவது வீடு கட்டுவது, நகை வாங்குவது, பார்ட்டி வைப்பது எல்லாமே, தன்னுடைய ஸ்டேட்டஸ் ஐ வெளிக்காட்டி கொள்ள, ஏதோஒரு வகையில் தான் உயர்ந்தவன் அல்லது நானும் உங்களில் ஒருவன் என்று காட்டி கொள்ள. இப்படி வெட்டியாக சுயமரியாதை மட்டுமே கருத்தில் கொண்டு, உறவுகளை, வேலையை தொலைத்து அடிப்படை தேவைகளுக்கே கஷ்டப்பட்டவர்களை நான் சந்தித்து இருக்கிறேன். இவர்கள் எல்லாம் பந்தா பேர்வழிகள், "ரொம்ப நல்லவங்க சார்/மேடம்" நீங்க என்று சொல்லிவிட்டால் போதும், எதையும் செய்வார்கள்.<br />
<br />
சுயமரியாதை என்பது ஒருவகை தேவை மட்டுமே, ஆனால் அதுவே வாழ்வின் முழுநோக்கமாக இருப்பின் இழப்பு மட்டுமே கிட்டும். வாழ்வின் முழு நோக்கம் தெரிய, அதீத சுயமரியாதை நிலையை விட்டு வெளிவரவும். நம்முடைய முழு திறமை வெளிப்படும்.<br />
<br />
<span style="color: red;"><u>கொசு(று)</u></span><br />
<br />
கொசுக்கடி பற்றிய ஒரு கட்டுரை வாசிக்க நேர்ந்தது. <a href="http://www.smithsonianmag.com/science-nature/why-do-mosquitoes-bite-some-people-more-than-others-10255934/?page=3">கொசுக்கள் ஏன் ஒருசில மட்டும் அதிகம் கடிக்கின்றன?</a>, இதுவே கட்டுரை<br />
<br />
நீங்கள் ஒருபார்க்குக்கு நண்பர்களுடன் சென்றுள்ளீர்கள், அங்கு உங்களை மட்டுமே கொசு பயங்கரமாக கடிக்கிறது, மற்றவர்களை அல்ல. ஏனென்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா?, ஏனெனில், கொசுக்கடிக்கும் உங்கள் ரத்தவகைக்கும் சம்பந்தம் உண்டு. கொசுக்கள் ஓரிரு ரத்தவகை மனிதர்களை அதிகம் விரும்பும். அதுவும், ஓ வகை மனிதர்கள் தாம் கொசுக்களின் முதல் விருப்பம். ஆனால் உங்கள் ரத்தவகை ஏ எனில், உங்களை அதிகம் கடிக்காது.<br />
<br />
நன்றி<br />
<br />
<br />
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-2244499212105563692017-09-09T11:35:00.001-04:002017-09-09T11:35:19.092-04:00கலிங்கத்து பரணியும், விக்ரம் வேதாவும், கைதிகள் குழப்பமும்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
<div>
<span style="color: red;">படித்தது:</span></div>
<div>
தமிழ் சரித்திர நாவல்களில் கல்கியை தவிர நான் வாசித்ததில்லை. கல்கியின் எழுத்துகளில் கூட பொன்னியின் செல்வன் கவர்ந்த அளவு கூட பார்த்திபன் கனவோ இல்லை சிவகாமியின் சபதமோ கவரவில்லை. இந்த முறை இந்திய பயணத்தில் மூச்சு முட்ட வேலை இருந்ததால், கடைசி நாளில் மதுரையில் கோவிலுக்கு சென்று விட்டு புதுமண்டபத்தில் தேடி <span style="color: blue;">கடல் புறா </span>வாங்கி வந்தேன். சாண்டில்யனின் நாவல்கள் வாசித்ததில்லை, ஆயினும் பலர் சிலாகித்து சொல்வதை கேட்டதுண்டு. </div>
<div>
முன்பெல்லாம் ஓரிரு வாரங்களில் புத்தகத்தை முடிக்க நேரம் இருந்தது போல் இப்பொழுது இல்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் ஒரு அத்தியாயமாவது முடித்து இருக்கிறேன். ஒருவழியாக 3 பாகங்களையும் 3 மாதத்தில் முடித்தாகிவிட்டது.</div>
<div>
</div>
<div>
<br /></div>
<div>
இதன் கதை நிறைய பேருக்கு தெரிந்திருக்கும் என்பதால் சிறு கதை சுருக்கம் இங்கே. தென்னிந்தியாவை ஆண்ட சோழர்கள் பற்றியதே "கடல் புறாவும்". ஆனால் கதையின் நாயகன் கருணாகர பல்லவன் அல்லது இளைய பல்லவன். பொன்னியின் செல்வன் கதை வந்தியத்தேவனை சுற்றி நகர்வது போல, கடல்புறா, இளையபல்லவனை சுற்றி நகர்கிறது. அவன் கடலோடும் திறமை, படை நடத்தும் திறமை, அவன் சந்திக்கும் பிரச்னைகள் அதனை எப்படி முறியடிக்கிறான்..இப்படி நகர்கிறது கடல்புறா.</div>
<div>
<br /></div>
<div>
ஆனால் ஒரு பெரிய வித்தியாசம், வந்தியத்தேவன் என்ற அரசன் பெயரளவில் பொன்னியின் செல்வனில் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பார். அவர் உண்மையில் வாணர் குலத்தை சேர்ந்தவரா இல்லையா, என்று உறுதியாக தெரியவில்லை. அவரை பற்றியும் பெரிய அளவில் சரித்திரத்தில் இல்லை. ஆனால், இளையபல்லவனோ கதையின் நாயகன், உண்மையில் கருணாகர தொண்டைமான் என்று புகழ்பெற்று குலோத்துங்க சோழனின் முதன் மந்திரியாக படைத்தளபதியாக இருந்தவன். </div>
<div>
<br /></div>
<div>
புத்தகத்தை பற்றி என்னுடைய கருத்துக்கள், ஒவ்வொரு ஆசிரியர்க்குள்ளும் ஒரு எழுத்து நடை உண்டு. தான் சொல்லவந்ததை சொல்லும் விதமும் வித்தியாசமாக இருக்கும். சாண்டில்யனின் நடை, ஒவ்வொரு அத்தியாயம் முடிவிலும் அடுத்த அத்தியாயத்துக்கான லீட் (சுருக்கம் ) கொடுக்கிறார், அது வித்தியாசமாக இருந்தது. ஒவ்வொரு நாவல் படிக்கும் போதும் அதன் தொடர்புடைய கிளை கதைகள் படித்து தெரிந்து கொள்ளும் பழக்கம் உண்டு. அதே போல தோண்டியபோது, எனக்கு சில விஷயங்கள் புரிந்தன. </div>
<div>
<br /></div>
<div>
கடல்கடந்து ராஜ்யத்தை விரிவு செய்த இந்திய அரசர்களில் சோழர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். அவர்களின் கடற்படை எப்படி அந்த காலத்தில் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கிறது. எப்படி எல்லாம் அவர்கள் படையை காத்தார்கள், வழி நடத்தினார்கள் என்றெல்லாம் படிக்கும் போது புல்லரிக்கிறது. இதெயெல்லாம் கடந்து எனக்கு புரிந்த விஷயம், <span style="color: blue;">கலிங்கத்து பரணி </span>என்ற காவியத்தின் தலைவன் இளையபல்லவன். </div>
<div>
<br /></div>
<div>
பரணி என்பது ஆயிரம் யானைகளை போரில் கொன்ற ஒரு தலைவனை பற்றி பாடுவது "கலிங்கம்" என்ற நாட்டை பிடிக்க நடந்த போரில் ஆயிரம் யானைகளை கொன்ற ஒரு தலைவனின் புகழ் பாடும் காவியம் கலிங்கத்து பரணி. அதனை முன்னின்று நடத்திய கருணாகர பல்லவனின் கீர்த்தி பாடும் காவியம் கலிங்கத்து பரணி. </div>
<div>
<br /></div>
<div>
கலிங்கத்து பரணி என்ற ஒரு காவியம் இருக்கிறது என்று எனக்கு தெரிந்திருந்தாலும், அது என்னவென்று நான் அறிந்திருக்கவில்லை. ஒரு சில தமிழறிஞர்கள் அவ்வப்போது மேடைகளில் "கலிங்கத்து பரணி" குறித்து பேசுவது மட்டுமே கேட்டிருக்கிறேன். ஆனால் அது ஒரு வகை இலக்கியவகை. பரணி பாடுவதற்கு என்று சில வழிமுறைகள், இலக்கணங்கள் இருக்கின்றன. அதன் படி பாடுவது சுலபமல்ல என்றெல்லாம் அறியும் போது நமது தமிழ் மொழியின் சிறப்பை முன்னோர்களின் சிறப்பை எண்ணி பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.</div>
<div>
எனக்கென்னவோ கடல் புறா படித்த பிறகு, லியோ டால்ஸ்டராயின் "War and Peace" ஞாபகத்துக்கு வந்தது. இரண்டும் ஒரு அரசனின்/தலைவனின் போர்முறையை, வீரத்தை பறைசாற்றுகிறது. ஒரு அற்புதமான அனுபவம். </div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-bWmw_FrZrDg/WbQIXUrSGxI/AAAAAAAACQo/mB0NGY-FWkEIYWs6y-J917mdpb1lAVYOACLcBGAs/s1600/kadal-pura-3-parts-original-imadg4dvdjaedx5e.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="704" data-original-width="482" height="320" src="https://1.bp.blogspot.com/-bWmw_FrZrDg/WbQIXUrSGxI/AAAAAAAACQo/mB0NGY-FWkEIYWs6y-J917mdpb1lAVYOACLcBGAs/s320/kadal-pura-3-parts-original-imadg4dvdjaedx5e.jpg" width="219" /></a></div>
<div>
<br /></div>
<div>
<div>
<br /></div>
<div>
<span style="color: red;">பார்த்தது</span></div>
<div>
<br /></div>
<div>
அமெரிக்கா வந்தபிறகு தியேட்டரில் சென்று நான் பார்த்த தமிழ் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால் நிறைய பேர் புகழ்ந்து சொன்ன "விக்ரம் வேதா" தமிழ் படத்தை தியேட்டரில் சென்று பார்க்க நேர்ந்தது. எனக்கு தெரிந்த வரை மிக மிக நேர்த்தியான கதை, திரைக்கதை, நடிப்பு என்று அனைத்திலும் பின்னி எடுத்த ஒரு அற்புதமான படம் இது. படம் முடிந்தவுடன் அனைவரும் எழுந்து ஸ்டாண்டிங் ஓவேஷன் (கைதட்டல்) கொடுத்தனர். அதில் எல்லா நடிகனின் ரசிகனும் இருந்தார்கள். அதுவே படக்குழுவிற்கு கிடைத்த வெற்றி. வெல் டன் டீம்.</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://1.bp.blogspot.com/-h8fn5RwP5v8/WbQISmPGddI/AAAAAAAACQk/aGVq0Kyd3mEKZIdxMw7w7xhm-s58U0kswCLcBGAs/s1600/maxresdefault.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="720" data-original-width="1280" height="180" src="https://1.bp.blogspot.com/-h8fn5RwP5v8/WbQISmPGddI/AAAAAAAACQk/aGVq0Kyd3mEKZIdxMw7w7xhm-s58U0kswCLcBGAs/s320/maxresdefault.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /><div>
<div>
<span style="color: red;">வாசித்தது</span> </div>
<div>
<br /></div>
<div>
விக்ரம் வேதா படத்தை பார்த்த பிறகு வாசிக்க நேர்ந்த ஒரு விஷயம், " <span style="background-color: white; font-family: 'Linux Libertine', Georgia, Times, serif;">Prisoner's dilemma"</span></div>
<div>
அதாவது, இரண்டு குற்றவாளிகள் A , B இருக்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம். இருவரும் ஒரு குற்றத்தில் சம்பந்தப்பட்டவர்கள். அவர்களை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கிறது. இருவரும் வாயை திறக்க மறுக்கிறார்கள். அவர்களை அழைத்து ஒரு டீல் பேசுகிறார்கள், அதாவது, A ஐ அழைத்து நீ உண்மையை ஒப்புக்கொண்டால் உன்னை வெளிவிட்டு B ஐ 20 வருட தண்டனை கொடுப்போம். அதேபோல B ஐ அழைத்து நீ ஒப்புக்கொண்டால் உனக்கு விடுதலை, A க்கு 20 வருட தண்டனை. அதே போல இருவரும் ஒப்புக்கொண்டால் 5 வருட தண்டனை. ஆனால் இருவரும் கடைசிவரை வாயை மூடி இருந்தால் 1 வருடம் மட்டுமே சிறை. என்று சொல்கிறார்கள் என்று வைத்து கொள்ளுவோம். </div>
<div>
<br /></div>
<div>
இந்த நிலையில் என்ன முடிவெடுப்பார்கள் அந்த கைதிகள்?</div>
<div>
<br /></div>
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://2.bp.blogspot.com/-y3pBUSOkJAA/WbQINGuLAbI/AAAAAAAACQg/gQaJVUwlnXYC-cfw_NxtyxyGzekJWD9VQCLcBGAs/s1600/prisoners_dilemma.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1600" data-original-width="1600" height="320" src="https://2.bp.blogspot.com/-y3pBUSOkJAA/WbQINGuLAbI/AAAAAAAACQg/gQaJVUwlnXYC-cfw_NxtyxyGzekJWD9VQCLcBGAs/s320/prisoners_dilemma.jpg" width="320" /></a></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
</div>
<div>
என்ன ஆகிறதென்றால், இருவரும் வாய் மூடி இருந்தால் ஒருவருடம் தண்டனை என்றறிந்து இருந்தாலும், பெரும்பாலும்எங்கே அடுத்தவன் ஒப்புக்கொண்டு தனக்கு 20 வருட தண்டனையும், அவனுக்கு விடுதலையும் பெற்றுத்தந்த விடுவானோ என்றெண்ணி, இருவரும் ஒப்பு கொண்டு இருவரும் ஐந்து வருட சிறை அனுபவிப்பர். </div>
<div>
<br /></div>
<div>
இது அவர்கள் இருவரும் வாய் மூடி இருந்தால் கிடைக்கும் ஒருவருட சிறையை விட அதிகம் என்றாலும், நிறைய பேர் தன்னலமாக யோசித்து அதிக தண்டனை பெற்று கொள்கிறார்கள் என்பது "கைதிகள் குழப்பம்" எனப்படும் "<span style="background-color: white; font-family: 'Linux Libertine', Georgia, Times, serif;">Prisoner's dilemma"</span></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
நன்றி </div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
<div>
<br /></div>
</div>
</div>
</div>
</div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-6187618214643636378.post-29994431109108438632017-08-26T10:57:00.000-04:002017-08-26T10:57:36.627-04:00முகமும், முகமூடியும், பிக்பாஸும் !!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on">
நைபால் அவர்களின் "A Bend in the River"புத்தகத்தில் ஒரு பாதிரியார் பாத்திரம்வரும், அந்த பாத்திரத்தின் பொழுதுபோக்கு முகமூடிகளை சேகரிப்பது. அப்படி அவர் சேகரிக்கும் முகமூடிகளை அவர் பத்திரப்படுத்தி கொண்டிருப்பார், சமயத்துக்கு தகுந்தாற்போல உபயோகப்படுத்த. நாமும் கூட அந்த லிஸ்டில் இருக்கிறோம் என்று நினைக்கிறோம். சமயத்துக்கு தகுந்தாற்போல நடந்து கொள்ள என்று பல பல முகமூடிகள் வைத்துக்கொண்டு இருக்கிறோம். சொல்லப்போனால், எல்லா இடங்களிலும் வாயில் வந்ததெல்லாம் வார்த்தை என்று பேசாமல், சமயத்துக்கு தகுந்தாற்போல பேச வேண்டும், என்று குழந்தையில் இருந்தே சொல்லி வளர்க்கப்படுகின்றனர். உண்மை முகத்தை காட்டுபவர்கள் கொடுமை காரர்களாக காட்டப்படுகிறார்கள். நடிப்பவர்கள், அல்லது முகமூடி அணிபவர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ள படுகிறார்கள்.<br />
<br />
இந்த முகமூடிகளை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டாலும், சில சமயங்களில் முகமூடியை கிழித்து கொண்டு உண்மை முகம் வெளியே தெரிந்து விடுகிறது. முகமூடியை உண்மை என்று நினைத்த வெளியுலகம், நிஜ முகத்தை பார்க்க நேரிடும் போது பயப்படுகிறது.<br />
<br />
இரண்டு உதாரணங்கள் உண்டு. ஒன்று அமெரிக்காவில் சமீபத்தில் சார்லட்வில் நகரில் நடந்தது. கடந்த வருட அமெரிக்க தேர்தல் முடிந்தவுடன் நடந்த விஷயங்களும், அதனை குறித்த டிரம்ப் அவர்களின் அறிக்கையும். அமெரிக்க "சைலன்ட் மெஜாரிட்டி" பற்றி குறிப்பிட்டிருந்தேன். வெள்ளை இனத்தவர் மட்டுமே உசத்தி என்றென்னும் ஒரு இயக்கம் அல்லது பல இயக்கங்கள் அமெரிக்காவில் உண்டு. அமெரிக்காவில் அடிமை முறை வேரறுக்கப்பட்டு, எல்லாரும் சமம் என்று பிரகடன படுத்திய பிறகு அடங்கி போய், அல்லது அடங்கியது போன்ற முகமூடியை மாட்டிக்கொண்டு தெரிந்த இந்த இயக்கத்தினர், தனக்கு சப்போர்ட் செய்ய ஒருவர் வந்தது போன்ற எண்ணம் வந்தவுடன், அதுவரை, நான் இனவெறி கொண்டவன் அல்ல என்று சொல்லி திரிந்த அல்லது முகமூடி அணிந்து கொண்டிருந்த பலரும், தற்போது, "தான் ஒரு வெள்ளை, அடக்கப்படும் வெள்ளை", என்று வீறுகொண்டு எழுந்திருக்கிறதை காண முடிகிறது. ஆபிசில், எதேச்சையாக, சார்லெட் வில் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, அங்கே வந்த ஒருவர், "பிரசிடெண்ட் சொல்லுவதில் உண்மை இருக்கிறது, இரண்டு பக்கமும் தப்பு உண்டு" என்று வார்த்தையை உதிர்க்க, அதிர்ந்து விட்டேன். ஏனெனில், இதுவரை, அவர் எல்லாருடனும் "நன்றாக" பேசிக்கொண்டிருந்தனர், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முகமூடியை கிழித்து கொண்டு அவரின் உண்மை இனவெறி முகம் வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது.<br />
<br />
<br />
ஆனால் இது நடந்த நேரத்தில், <a href="https://twitter.com/BarackObama/status/896523232098078720/photo/1?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fwww.cnbc.com%2F2017%2F08%2F15%2Fobamas-charlottesville-response-could-be-the-most-popular-tweet-ever.html">ஒபாமா அவர்கள் ட்விட்டரில் வெளியிட்ட மண்டேலா அவர்களின் ஒரு பொன்மொழி, ட்விட்டரில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட ஒன்றாகி இருக்கிறது</a>. வெயிலில் தானே தெரியும் நிழலின் அருமை!.<br />
<br />
அடுத்த நிகழ்வு, சற்று வேறுபட்ட செட்டப், எல்லாரும் எப்போதும், எங்கேயும் பேசும் தமிழ் பிக்பாஸ் பற்றியது. "இது நமக்குள் நடக்கும் மாற்றங்கள், நம்மில் இருக்கும் பல பல பிரமாணங்கள் வெளிப்படுகின்றன, ஒரு செட்டப் இல் 100 நாட்கள், வெளியுலக தொடர்பு இல்லமால் இருப்பின் எப்படி இருக்கும் " என்று கமல் அவர்கள் ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தினாலும். மக்களுக்கு எது பிடிக்கிறது என்று பார்க்க வேண்டும். உண்மையை சொன்னால், பிக் பாஸ், பிக் பிரதர் போன்றவை எல்லாமே, ஜியார்ஜ் ஆர்வெல் அவர்களின் "1984" புத்தக படைப்பில் வரும் பாத்திரம். என்ன அங்கே, ஒவ்வொரு வீடும் பிக் பாஸ் வீடு போல கேமரா பொருத்தப்பட்டு, அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கண்காணிக்கப்படும்,என்று 1934 இல் எழுதி இருப்பார். தற்போது நடந்து கொண்டிருக்கிறது.<br />
<br />
நிற்க..நான் இங்கே சொல்ல வந்தது, முகமூடிகளை பற்றி. மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு தீர்வு காணும் அல்லது காண நினைக்கும் கதாபாத்திரங்கள் மட்டுமே போற்ற படுகின்றனர். அதாவது, முகமூடி மாட்டி, நன்றாக நடிக்க தெரிந்தவர்கள். அல்லது, அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை முகமூடி அணிந்து காட்ட தெரிந்தவர்கள் மட்டுமே நல்லவர்கள் மற்றபடி, இது ஒரு கேம் என்று தெரியாமல், அதாவது முகமூடி அணியாமல் இருப்பின், அவர்கள் கெட்டவர்களாக சித்தரிக்க படுகின்றனர். உண்மையாக நாம் அது போன்ற ஒரு செட்டப்பில் இருப்பின் நமக்குள் இருக்கும் ஒரு சில விஷயங்கள் வெளியே எட்டிப்பார்க்கும். உதாரணமாக, நாம் வளர்ந்த சூழல், நம் குடும்பம், சாதி, இவற்றை கொண்டு நம்மை செதுக்கிய விஷயங்கள். அது எவ்வளவு தான் முகமூடி அணிந்தாலும் எப்படியாயினும் எட்டி பார்த்து விடும். அதனாலேயே, நம்முடைய அலைவரிசைக்கு இசைந்த பலருடன் நாம் பழக எத்தனிக்கிறோம்.<br />
<br />
இதே போன்ற சூழல் நிலவாத போது, மற்றவர்களை நம் அலைவரிசைக்கு இழுக்க என்று சிலபல உத்திகள். அதாவது, எங்கள் குடும்பம், நாங்க பணக்காரங்க, படிச்சவங்க, அரசியல்வாதி, என்பது போன்ற பல அஸ்திரங்களை உருவாக்கி, incrowd சேர்ப்பது. அதாவது குரூப்பிஷம் சேர்ப்பது. அப்படி சேர்ப்பதன் மூலம், தன்னுடைய, பெரிய மனிதன் முகமூடியை அணிந்து கொள்ளுவது. அப்படி தன்னுடைய குரூப்பில் சேராத, அடிபணியாத பலரை, ஒதுக்கி தீர்த்து கட்டுவது. இது, எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கிறது. இல்லை என்று சொல்ல இயலாது. ஏன் நாமே கூட பல இடங்களில் அதனை செய்து இருக்கலாம், அல்லது செய்பவரின் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருக்கலாம். ஆனால், அதனை மற்றவர் செய்வதை பார்க்கும் போது நமக்கு ரத்தம் கொதிக்கிறது. உடனே, நாம், நடுநிலையானவன் முகமூடியை அணிந்து கொண்டு "குரூப் சேர்த்த காயத்திரியை" கண்டபடி திட்டுவது. என்று நமக்கும் இருக்கும் உண்மை தனத்தை முகமூடியை கிழித்துக்கொண்டு வெளியே வந்து கீழ்த்தரமாக திட்டி தீர்க்கிறோம். உண்மையை சொன்னால், அந்த இடத்தில் பிழைக்க என்று, தன்னை மாற்றிகொண்டு, அல்லத ஒத்திசைத்த ஜூலியை, கண்டபடி திட்டி தீர்த்தது. ஆனால் உண்மையில் நாமெல்லாமே, ஜூலியை போலவே. ஆபிசில் பிடிக்காவிடினும், சிலருடன் வேலை செய்ய அல்லது ஒத்துப்போக என்று "நல்லவர்" முகமூடியை அணிந்து கொண்டு நடிக்கிறோம். அங்கே நம்முடைய அந்த "முகமூடி", பிழைக்கத்தெரிந்தவன் பட்டத்தை நமக்கு கொடுக்கிறது. ஆனால், இங்கே நாம் நடுநிலையானவன் என்று நம்முடைய உண்மையான முகத்தை திறந்து, மற்றவர்களை திட்டி தீர்க்கிறோம். கமல் அவர்கள் குறிப்பிட்டது போல, "உள்ளே அவர் பேசியது கொஞ்சம் தான், வெளியே பேசும் மக்களின் கீழ்த்தரமான வார்த்தைக்கு".<br />
<br />
எது என்னவோ, "இனவெறி/தான் உசத்தி" என்ற உண்மை முகத்தை மறைக்க முகமூடி அணிந்து கொள்ளுங்கள். ஏனெனில், உங்களின் உண்மை முகத்தை மக்கள் பார்த்தார்கள் என்றால், அவர்கள் தங்களின் நல்லவர் முகமூடியை கிழித்து உங்களை தொங்கவிட்டு விடுவார்கள்.<br />
<br />
இன்னொரு விஷயம் என்னவென்றால், இப்படி சண்டை போடும், முகத்தை காட்டும் வேலையை செய்யாமல் சும்மா நாம் உண்டு நம் வேலை உண்டு என்று "பிந்து" போல இருந்தால் அவர்களை பிடிப்பதில்லை. போரிங் என்று முத்திரை குத்தப்படுவர். அதாவது, மக்கள் விரும்புவது என்னவோ அதற்க்கு தகுந்தாற்போல முகமூடி அணிந்து நடிக்க, பேச, சண்டை போட தெரிந்தவர்களை மட்டுமே, நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு ஒரு வில்லி/வில்லன் வேண்டும், ஒரு கதாநாயகி/கதாநாயகன் வேண்டும். எப்போதுமே சீரியல் பார்த்து பழக்கப்பட்ட மக்களுக்கு, இதெல்லாம் அவசிய தேவை. அதனை நிறைவேற்ற என்று டிவியும் நிறைய மக்களை தரையிறக்குகிறது என்று தோன்றுகிறது.<br />
<br />
<br />
டிஸ்கி<br />
இதில் குறிப்பிட்டுள்ளவை எல்லாமே, என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. யாரையும் குறிப்பிடவில்லை.<br />
<br />
<br />
<br />
<br /></div>
முகுந்த்; Ammahttp://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.com1