Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

Wednesday, February 11, 2015

ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி - 2 ? குறைகளுடன் சமரசம் செய்து கொள்ளுங்கள்




குறை இல்லா மனிதன் இல்லை. எந்த காரியத்தையும் எந்தவொரு குறையும் இல்லாமல் பூரணமாக செய்ய என்னால் மட்டுமே முடியும் என்று ஒருவர் நினைக்க ஆரம்பித்தால் அவர் ஸ்ட்ரெஸ் ஐ வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறார் என்று பொருள். 

எனக்கு அனுபவம் இருக்கிறது. இந்த முறையில் நான் வகுத்தபடி தான் அனைவரும் நடக்க வேண்டும் ஏனெனில் அதுதான் சரியான விளைபயன் தரும். அவ்வாறு நடக்க இல்லையேல் பின்விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்  என்று நினைத்து பயந்து தன்னையும் சரி அடுத்தவரையும் சரி தன்  வழி நடக்க வைக்க நினைப்பார்கள் (இம்சிப்பார்கள்) சிலர். மற்றவர்களுக்கும் அதனை பற்றி அனுபவம் இருக்கும் அல்லது அவர்களின் எண்ணங்களையாவது கேட்போம் என்று நினைப்பதில்லை இவர்கள். 
பெற்றோர் குழந்தைகளிடமும் ,கணவன் மனைவியிடத்தோ அல்லது மனைவி கணவனிடத்தோ இதனை போன்ற எதிர்பார்ப்பை(இம்சையை)  அடிக்கடி காணலாம் . 

இன்னும் சிலரோ தனக்கு உள்ள மிக சிறிய குறைகளையோ நினைத்து நினைத்து வருந்தவோ அல்லது மற்றவர்களிடம் உள்ள குறைகளையோ குத்தி காட்டவோ, கிண்டல் செய்யவோ  செய்வார்கள். அது வெளிப்புற தோற்றமாக இருக்கலாம் அல்லது அவர்களின் பழக்க வழக்கங்களாக அல்லது நடவடிக்கைகளாக இருக்கலாம். இது போன்று செய்யும் போது  முதலில் நம் மீது இருக்கும் தன்னம்பிக்கையை இழந்து விடுகிறோம். பின்னர் அடுத்தவர்கள் நம் மீது கொண்டுள்ள மரியாதையை, நம்பிக்கையை இழந்து விடுகிறோம்.

இதிலிருந்து எப்படி மீள்வது?. ஒவ்வொரு முறையும் அடுத்தவர்கள் ஒரு காரியத்தை தன்  வழியில் அல்லாமல் வேறு மாதிரியாக செய்யும் போதோ  உடனே டென்சன் ஆகி  நரம்பு புடைக்க  "நீ செய்வது தவறு, நான் சொல்லும்படி செய்"  என்று  கத்தாமல்  "இட்ஸ் ஓகே, ஒன்றும் இல்லை, எல்லாம் நன்றாக நடக்கும்" என்று ஒரு ஜென்டில் ரிமைன்டர் செய்து கொள்ளுங்கள். 

அடுத்தவரை பார்த்து குறை சொல்ல வாய் வரும்போதோ அல்லது உங்களின் குறைகளை பார்த்து மனம் வருந்தும் போதோ ஒன்றை நினைத்து கொள்ளுங்கள். குறைகளுடன் பிறந்து அதனை பெரிதாக நினைக்காமல் வாழ்ந்து சாதித்தவர்கள் ஏராளமானோர். உதாரணமாக இருவர்; ஒருவர் "பீதோவன் இசைக்கலைஞர் காது கேட்கும் தன்மையற்றவர்", மற்றொருவர் "ஹெலன் கெல்லர் எழுத்தாளர் காது கேட்கும் வாய்பேசும் பார்வை இல்லாதவர்."

முடிவாக இது 



நன்றி 

ஸ்ட்ரெஸை  கட்டுபடுத்துவது எப்படி -1 ? பேனை பெருமாளாக்க வேண்டாம் , துவக்க பகுதி இங்கே.


Sunday, June 3, 2012

வாழ்க்கை போராட்டம்.

ஏன் வாழ்க்கையை போராட்டம் என்றழக்கிறார்கள் என்று நான் யோசித்ததுண்டு. போராட்டம் என்றாலே கொடிபிடிப்பது, கூச்சல் போடுவது, மறியல் செய்வது என்று மட்டுமே சிறுவயதில் நினைத்திருந்தேன் நான். ஆனால் ஒவ்வொரு நாளும் வாழுவதற்கு நாம் அனைவரும் ஏதோ ஒரு போராட்டம் செய்கிறோம். நாம் செய்யும் போராட்டங்களை பற்றிய அலசலே இந்த பதிவு.

ஏழைகளும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே வாழ்வதற்கு போராட வேண்டும் மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கை போராட்டம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் வாழ்வில் எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும் சரி அவருடைய வாழ்விலும் ஒரு போராட்டம் இருக்கும். அது பொருளாதாரம் சார்ந்த போராட்டமாக இல்லாமல் இருக்கலாம்..ஆனால் அவர்களும் வாழ்வில் போராடவே வேண்டியிருக்கிறது.

இதற்கு சில உதாரணங்கள் சில.

முதல் உதாரணசில நாட்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு பெண்ணை கூறலாம். அவள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய மண்னை சேர்ந்த பெற்றோரை கொண்டவள். அவளுடைய அப்பா, ஒரு மில்லியனர், ரிசாட் ஹோட்டல் ஹோட்டல் உரிமையாளர். பார்க்க அழகாக இருப்பாள். அவளுக்கு டாக்டருக்கு படிக்கும் ஒரு இந்திய மரபை சேர்ந்த பாய்ஃப்ரெண்ட்ம் உண்டு. அந்த பாய்ஃப்ரெண்ட் குடும்பமோ ஒரு கோடீஸ்வரர்கள் குடும்பம் படிப்பு. பாய்ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் நிலையை தாண்டி, தற்போது கணவன் மனைவியாகி விட்டனர்.

அந்த பையன் ஒரு அப்பாவி வேறு, எல்லாம் இவள் சொற்படி தான் நடப்பார்.  பணம், அழகு, அந்தஸ்து, அழகான, பணக்காரனான கணவன்..இப்படி அந்த பெண்ணுக்கு எல்லாமே உண்டு..ஆனால் அவளிடம் நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசினால் போதும்..வாழ்வில் விரக்தி வந்துவிடும்..காலையில் எழுந்ததில் இருந்து படுக்கப்போகும் வரை தான் சந்திக்கும் ஒவ்வொருவரும் தனக்கு துரோகம் செய்கிறார்கள் என்பாள். தன்னுடைய தந்தையை பற்றி அசிங்க அசிங்க வார்த்தைகளால் திட்டுவாள். தன கணவனை பற்றியும், அவரின் குடும்பத்தார் பற்றியும் அவள் திட்டும் வாரத்தைகள் கேட்க்க காது கூசும்.அவளை பொறுத்த வரை ஒவ்வொரு நாளும் வாழ்க்கை ஒரு போராட்டமே. 

அடுத்து நான் சொல்ல இருப்பது என்னை போன்ற ஒரு பெண் ஆராய்ச்சியாளரின் கதை,  இரண்டு குழந்தைகளுக்கு தாய் அவர். முனைவர் பட்டம் பெற பல்கலைகழகத்தில் சேர்ந்த சில மாதங்களில் திருமணம் ஆனது. குழந்தை பேரு வேண்டாம் என்று தள்ளி போட்டு கொண்டிருந்த அவர், பட்டம் பெற சில மாதங்கள் இருக்கும் பொது தாயாகி விட்டார். அவரின் கைடுக்கு அது பிடிக்காமல் போக, குழந்தையை பார்த்து கொள்ள முடியாத அளவு வேலைப்பளு கொடுத்து, வேலையை முடி இல்லை டிகிரி கிடையாது என்று மறைகமாக மிரட்ட, குழந்தைக்கும், எதிர்காலத்துக்கும் நடுவில் அவர் நடத்திய வாழ்க்கை போராட்டம் இன்னும் என் கண் முன் நிற்கிறது. கடைசியில் இந்த ஆராய்ச்சியே வேண்டாம் என்று தாக்கி போட்டுவிட்டு இன்னொரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும், அவரிடம் இருக்கும் அறிவும் ஆர்வவும் நினைத்த தொழிலை செய்ய முடியாமல் அவர் படும் வேதனையும் அவர் வாழ்க்கையை ஒரு போராட்ட களமாக்கி விட்டிருக்கிறது.

 கடைசியாக நான் சொல்ல இருப்பது நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும், இன்னும் உயர் பதவிக்கு வர துடிக்கும் ஒரு பெண்ணை பற்றியது. இவருக்கும் குழந்தைகள் உண்டு என்றாலும் அவர்களை முழுக்க முழுக்க கவனித்து கொள்ளுவது ஆயாக்களும் அவர் கணவரும் தான். ஒரு நாளின் 24 மணிநேரத்தில் வெறும் 4 மணி நேரம் மட்டுமே இவர் உறங்குவார். மற்ற எல்லா நேரமும் வேலை வேலை வேலை தான். நிறுவனத்தில் நடக்கும் அரசியல்களை சமாளிக்க, மேலும் பதவி உயர்வு பெற இவர் போராடும் போராட்டம் அப்பப்பா  சொல்லமுடியாது