Showing posts with label வலையுலகம். Show all posts
Showing posts with label வலையுலகம். Show all posts

Thursday, February 19, 2015

தட்டையான உலகம் முதல் "break the internet" வரை.. சுருங்கிய மனித மனங்கள்.


நவம்பர் 9 1989, உலகவரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.  பெர்லின் சுவர்  இடிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனியில் கம்யுனிசம்  வீழ்ந்த நாள். உலக பொருளாதார சந்தைகள் திறக்க அடிகோலிய நிகழ்வு அது என்பது  "The world is flat" புத்தகம் எழுதிய Thomas L. Friedman அவர்களின் கூற்று.  மிக சுவாரஸ்சியமாக  அவர் இதனை "சுவர் வீழ்ந்தது, ஆனால் விண்டோஸ் வளர்ந்தது" என்று  மைக்ரோசாப்ட் விண்டோஸ், IBM வளர்ச்சி பற்றி அவர் குறிப்பிடுகிறார்.  

உலகை தட்டையாக்கிய 10 காரணிகள் சொல்லபட்டாலும் இந்தியாவை பொருத்தவரை புரட்டி போட்டவை என் பார்வையில்: Netscape ,ஈமெயில், HTML, opensource software , uploading , outsourcing , offshoring என்பனவற்றை சொல்லலாம்.

இதை தவிர உலகம் அனைத்தையும் புரட்டி போட்டது கூகிள் போன்ற தேடு தளங்களும், அதன் பின்னர் வந்த "ஊக்கமருந்துகள்" ஆன mobile phones, instant messaging மற்றும் VoIP.


இன்றைய சூழலில் உங்களுக்கு facebook, twitter , blogs, instagram, whatsup என்றால் என்னவென்று தெரியாது என்று சொன்னால் உங்களை ஏற இறங்க பார்பார்கள். உலகம் உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் க்குள் அடங்கி விட்டது. November 9, 2014 , பெர்லின் சுவர் வீழ்ந்த நிகழ்வின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்.

உலகம் தட்டையாகிவிட்டது, ஆம், இன்று பல அமெரிக்க மென்பொருள் கம்பெனிகளில் எப்போது மீட்டிங் என்றாலும் , across the globe பல நாடுகளில் இருந்து குறிப்பாக, இந்தியா, பிரேசில் மற்றும்  துருக்கி நாடுகளில் இருந்து சாதரணமாக பலர் Dial -in செய்து கலந்து கொள்வார்கள். எப்போதும் கூகுள் hangout அல்லது skype போன்றவை  ஒன்று இவர்களுக்காக ஓபன் செய்து  இருப்பதை காணலாம். இன்று பல கம்பெனிகள், செலவை  மிச்சபடுத்த "Work from home" எனப்படும் வீட்டில் இருந்து வேலை செய்வதை அனுமதிக்கிறார்கள்.


எவ்வளவுக்கு எவ்வளவு உலகம் தட்டையாகி உலகின் எந்த மூலையில் என்ன நிகழ்ந்தாலும் நமக்கு உடனடியாக தெரிகிறதோ அதே போல எல்லா கெட்ட விசயங்களும் எங்கும் வியாபித்து புதிதாக இணைய உபயோகிப்பவர்களை சுண்டியும் இழுக்கின்றன.இணையத்தை மூலதனமாக கொண்டு மார்க்கெட்டிங் செய்பவர்கள் இங்கு ஏராளம். உதாரணமாக சிலமாதங்களுக்கு  முன்பு "Break the internet" என்ற பதம் இணையம் முழுதும் வியாபித்து இருந்தது. அதில் Kim Kardashian னின் நிர்வாண புகைப்படம் மட்டுமே இருந்தது. கிம் போன்றவர்கள் இணையத்தையும், தகவல் தொழில்நுட்பத்தையும் வைத்தே பணக்காரர்கள் ஆனவர்கள்.

 இன்று பலரின் நினைவூட்டியாக  இணையம்   இருக்கிறது. பிறந்தநாள், திருமண நாள், பிறப்பு, இறப்பு  என பலவும் இப்போது இணைய குறுஞ்செய்திகள் வாயிலாகவே நாம் அறிந்து கொள்கிறோம். ரோட்டில் ஒருவர் அடிபட்டு கிடந்தாலும் உதவாமல் அதனை புகைப்படம் எடுத்து உதவி செய்யுங்கள் என்று facebook ல் போடுபவர்களும்  உண்டு .  எங்கும்  பரபரப்பான இந்த நடப்பு  உலகத்தில் நட்புகளும் அதே பரபரப்புடன் ஆரம்பித்து பரபரப்புடன் முடிந்துவிடுகின்றன. அனைத்து நட்புகளுமே ரயில் சிநேகமாகி விட்டதோ என்று தோன்றுகிறது. எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை. ஒரு புறம் இந்த இணையத்தால் பல நன்மைகள் இருப்பினும் மனித மனங்கள் சுருங்கி விட்டன என்று தோன்றுகிறது.

நன்றி 






Sunday, October 28, 2012

பேனை பெருமாளாக்குவது எப்படி?


1910 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த பான்ச்சோ வில்லா ஒரு திருட்டு கும்பலை அமைத்துக்கொண்டு ரயில்களில் திருடுவது, பணக்காரர்களிடம் திருடுவது, கொலைகள் செய்வது என்று ஒரு ராபின் ஹீட் போல செயல் பட்டு வந்தான். மெக்ஸிகோ நாட்டின் ஜெனரெல் காரென்ஸ்ஸா, வில்லாவை தோற்கடித்து கட்டுக்குள் வைத்து இருந்தார்.

1916 ஆம் ஆண்டு மறுபடியும் தலை எடுக்க நினைத்த வில்லா, கொலம்பஸ், நியூமெக்ஸிகோ நகரத்தை சூறையாடி 17 அமெரிக்க ராணுவத்தினரை கொன்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வில்சனிடம் அவருடைய மந்திரிகள் வில்லாவை ஒழிக்க படையை அனுப்பும் படி செய்தனர். ஒரு சிறு திருட்டு கும்பலை அழிக்க பத்தாயிரம் படை வீரர்களை அனுப்பினர்.  அத்தனை பேருக்கும் தண்ணி காட்டி வில்லா தப்பிக்க தப்பிக்க எல்லாருக்கும் பத்திரிக்கைகளுக்கும், ஊருக்கும் அது பெரிய தலைப்பு செய்தியாகி விட்டது.  நாட்கள் செல்ல செல்ல வில்லாவின் தவறை மறந்த மக்கள் அவன் தப்பிக்கும் திறமையை மெச்ச ஆரம்பித்து விட்டனர். ”ஆனானப்பட்ட அமெரிக்காவிற்கே கண்ணுல விரலை விட்டு ஆட்டுறான் பாரு” என்று அனைவரும் மெச்ச அவன் திருட்டையும் கொலைகளையும் மறந்த மக்கள் அவனை ஒரு தலைவன் என்று கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் அமெரிக்காவுக்கோ இது பெரிய அவமானமாகி விட்டது.  வில்லா தலைக்கு $50,000 பணம் என்று அறிக்கை விட்டாலும் யாரும் வில்லாவை பிடித்து தர தயாராக இல்லை.  முடிவில் வில்லாவை பிடிக்க முடியாமல் அவர்கள் திரும்பவேண்டி இருந்த போது இறந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை ஒன்னேகால் லட்சம் வீரர்களாகி இருந்தது. இப்படி வீரர்களின் உயிரையும், பணத்தையும் செலவிட்ட வில்சன் பெரும் அவமானத்தையும் ஏற்படுத்தி அவர் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளியாகி விட்டது.

தன்னுடைய பவரை காட்ட ”ஒரு கொசுவை பிடிக்க யானையை அனுப்புவது போல” படையை அனுப்பும் போது வில்சன் “என்கிட்ட மோதாதே!, நான் அமெரிக்கா, அமெரிக்காவிடம் மோதினால் என்ன நடக்கும் என்று காட்டுகிறேன் பார்?” என்ற மமதையுடன் அனுப்பினார்.

ஆனால், அது வில்லாவுக்கு சாதகமாக அமையும் என்று அவர் எதிர் பார்த்து இருக்கமாட்டார்.

வில்சன் படையை அனுப்புவதற்கு முன் ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்த வில்லாவின் பெயர்.. “அட அமெரிக்காவையே ஆட்டுறவர் டா” என்று அனைவருக்கும் தெரிய ஆரம்பித்து விட்டது.

வெறும் பேனாக இருந்த வில்லா பெருமாள் அளவுக்கு ஊதி பெரிதாக்கப்பட்டார்.

இப்படிபட்ட பேன்களை சரிகட்ட என்ன செய்திருக்கலாம் வில்சன்

“உதாசீனப்படுத்தி இருக்கலாம்”. ஒன்றுமில்லா எதிரியை உதாசீனப்படுத்துவது மட்டுமே நல்ல பழிவாங்குதலாகும். அதுவே அந்த எதிரியை வளர விடாமலும் செய்யும். தமக்கு சமமில்லாத எதிரிக்கு ஒருவர் முக்கியத்துவம் கொடுத்து போர் தொடுப்பதோ இல்லை பழிவாங்குதலோ அந்த எதிரியின் பவரை அதிகப்படுத்துமே ஒழிய, எதிரியை ஒழிக்காது.

"Making a big deal out of a petty problem just fuels it and turns it into something worse." Robert Greene

Friday, January 7, 2011

பதிவுலகில் ஒரு வருடம் !


அப்பாடியோ!! ஒரு வருடம் எப்படி பறந்தது என்றே தெரியவில்லை. இன்றோடு நான் வலையுலகம் வந்து ஒரு வருடம் ஆகிறது. எப்படியாவது நூறு பதிவாவது எழுதி முடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனாலும் வலையுலகம் வரமுடியாத அளவுக்கு வேலை, நேரமின்மை..etc.

என்னுடைய, ஒரு வருட பதிவுலக அனுபவத்தை திரும்பி பார்க்கும் பதிவு இது.

கொசுவர்த்தி
-----------------
பதிவு ஆரம்பித்த பொழுதில் எல்லாம் பதிவுலகே கதியாக இருந்தது,அதற்காக ரங்கமணியிடம் திட்டு வாங்கியது, சிறிதுசிறிதாக இந்த அடிக்க்ஷனில் இருந்து வெளியில் வந்தது, பதிவெழுதவே நிறைய படிக்க ஆரம்பித்தது. நிறைய புத்தகங்கள், செய்திகள், பிற தளங்கள் என பலவும் வாசித்தது என நிறைய சொல்லலாம்... முன்னிருந்த ஆர்வம் இப்போது இல்லையென்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் இங்கு வரவே மனம் விரும்புகிறது.

தட்டி கொடுத்தது
-------------------
ஒரு வருடம் நிறைய எனக்கு கற்று கொடுத்து இருக்கிறது என்றாலும், என்னாலும் எழுத முடியும் என்று என்னையே தட்டிக்கொடுத்தது, யூத்புல் விகடன், தேவதை மற்றும் பாண்டிச்சேரி வலைப்பூவின் அறிமுகத்துவம், இவற்றில் என்னுடைய பதிவை பற்றி வெளிவந்தது. அதனையும் தாண்டி என் வலைபூவிற்கு வந்து படித்து பின்னூட்டம் இட்டு என்னை தட்டிக்கொடுத்த அனைவருக்கும் மிக்க நன்றி.

மலைக்க வைத்தது
-----------------------
ஒரு நாளைக்கு அரை மணிநேரம் பதிவுலகிற்கு வருவதே இப்போது எனக்கு கடினமாகிவிட்ட நிலையில் எப்போதும் ஆன்லைனில் இருந்து எல்லாருடைய பதிவை படித்து தினம் ஒரு பதிவு இடும், பின்னூட்டம் இடும் பதிவர்களை பார்க்கும் போது மலைப்பும் பெருமூச்சும் வருகிறது.


நட்புகள்
------------

ஒரு சில மறக்க வேண்டிய நிகழ்வுகளை தவிர்த்து பார்த்தால்,வேலையில் இருந்து நான் எடுத்த பிரேக்குக்கு, இந்த பதிவுலகம் நல்ல வடிகாலாக இருந்து இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.சில நல்ல நண்பர்களையும் இந்த பதிவுலகம் எனக்கு தந்திருக்கிறது. பெயர், ஊர் என்று என்னைப்பற்றி எதுவுமே தெரியாமல் இருந்தாலும் நிறைய பேர் இங்கு வந்து வாசித்து பின்னூட்டம் இட்டு ஒரு முகமறியா நட்பை என்னுடன் உருவாக்கி இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் மற்றுமொறு நன்றி.

தற்போதய நிலவரப்படி இன்னும் சில நாட்களில் மறுபடியும் வேலைக்கு செல்ல போகிறேன். அதனால் வலைப்பூ வருவது இன்னும் குறையும் என்று நினைக்கிறேன். ஆனாலும் தொடர்ந்து வந்து உங்களை தொல்லை படுத்தாமல் விடப் போவதில்லை என்று உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

Tuesday, September 21, 2010

ஒரு வருடத்தில் 524 recipes சமைப்பது எப்படி?

வேலை கழுத்தறுக்கிறது, வாழ்க்கை போர் அடிக்கிறது, சுவாரசியப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசித்தேன். What about trying a new recipe everyday? Isn't it fun?

"என்ன ரேசிபே செய்ய ஆரம்பிக்கலாம்?" யோசித்த போது பிரெஞ்சு ரேசிபே செய்து பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். (Why French?, அது எப்படின்னே தெரியல, பிரெஞ்சு பொண்ணுங்க மட்டும் என்ன சாப்பிட்டாலும், எப்படி தான் ரவுண்டு கட்டி சாப்பிட்டாலுமே ஒல்லியாவே இருக்குதுங்க? அதான் ஹி, ஹி, ஹி)

முதல் வேலையா, ஒரு பிரெஞ்சு சமையல் புத்தகம் வாங்கினேன், அது Mastering the Art of French Cooking, by Julia Child

அடுத்து ஒரு வலைபூ ஆரம்பித்தேன், அதில் இன்று என்ன ரேசிபே செய்ய போகிறேன் என்று எழுதினேன்.

சும்மா, one recipe one day னா போர் அடிக்குமே , ஏதாவது சுவாரஸ்யம் கொண்டு வரணுமே? என்ன செய்யலாம்?

ஓகே,
  • ஒரு வருசத்துக்குள்ள அந்த சமையல் புத்தகத்தில இருக்கிற எல்லா ரேசிபேயும் சமைச்சு முடிச்சுடனும்
  • ஒவ்வொன்னையும் சமைச்சு முடிச்சப்புறம் வலைபூவில சொல்லணும்,
  • கவுன்ட் டவுன் வச்சுக்கணும்,
இது எப்படி இருக்கு? சுவாரஸ்யமா இருக்கு இல்ல?

இதென்ன சின்னபுள்ள தனமா இருக்கு, இதெல்லாம் எப்படி சாத்தியம்னு நினைக்கிறவங்க,

Julie & Julia படத்த பாருங்க