Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Thursday, March 29, 2018

எது சரி? எது தப்பு?: உளவியல் மற்றும் அறிவியல் பார்வை

ஒரு நிகழ்வு நடக்கிறது, நீங்களும் அந்த தருணத்தில் அங்கு இருக்கிறீர்கள், அந்த நிகழ்வை காணும் நாம் எப்படி அந்த நிகழ்வை குறித்து ஓர் முடிவுக்குவருகிறீர்கள் . அது சரியான முடிவா? இல்லை தவறான முடிவா?

ஒரு உதாரணம் எடுத்து கொள்ளுவோம். ஆபிசில் ஒரு மீட்டிங் நடக்கிறது. ஒரு முக்கியமான பிரச்னை குறித்து மேனேஜர் தெரிவிக்கிறார். அதன் தீர்வு என்ன என்று விவாதிக்கவே இந்த மீட்டிங். தற்போது உங்களுக்கும் அந்த மேனேஜர் க்கும் டெர்ம்ஸ் சரி இல்லை என்று வைத்து கொள்ளுவோம். அவர், என்ன சொல்ல வந்தாலும் அல்லது சொன்னாலும் அது தப்பாகவே தோன்றும்.  அதே நேரம், அந்த மேனேஜர்க்கு  உங்களுடன் நல்ல டெர்ம்ஸ் இருக்கிறது என்றால், அவர் சொல்வது எல்லாமே கரெக்ட் ஆக தோன்றும்.

ஏன் இப்படி நடக்கிறது. எது சரி? எது தப்பு?. முதலில் உளவியல் பார்வை.

மனோதத்துவத்தில் "Ladder of Inference" என்ற ஒரு தியரி உண்டு. அதாவது, தமிழாக்கத்தில் "ஊகிக்கும் படிநிலை". இந்த தியரி படி, ஒவ்வொரு விஷயம் நடக்கும் போதும் அந்த விஷயம் குறித்து நாம் ஒரு ஊகம் செய்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.

Image from google images

1. இந்த படிநிலையில் முதல் படி," நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்", எந்த பில்டரும் இல்லாமல் நம்மை சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும் இங்கே முதல் படி. என்னுடைய முந்தைய உதாரணத்தில், ஆபிசில் நடக்கும் மீட்டிங், அது நடக்கிறது. அங்கு கூடியிருக்கும் மக்கள், அவர்கள் முக பாவனைகள், அவர்கள் அமர்ந்திருக்கும் முறை. இப்படி பலவும் முதல் நிலை. "அதாவது , நம்மால் பார்க்க/கவனிக்க முடிந்த/முடியாத எல்லா  செய்திகள்/நிகழ்வுகள் கலவை"

2. இரண்டாவது படி, " நாம் பார்த்த செய்திகளில்/ நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்யும் நிகழ்வுகள்".  என்னுடைய உதாரணப்படி, அந்த மேனேஜர் என்னுடன் நல்ல டெர்ம்ஸ் இல் இருந்தார் எனில், அவருடைய செய்கைகள், அவரை ஆமோதிக்கும் அனைவரின் செய்கைகள் மட்டுமே என் மூளை செலக்ட் செய்யும். இல்லை, எனக்கு அந்த மேனேஜர் உடன் மோசமான முன் விரோதம் இருப்பின் என்றால், அவருக்கு எதிராக நடக்கும் எல்லா விஷயங்கள் மட்டுமே கண்ணில் சிக்கும், அல்லது மூளை செலக்ட் செய்யும். இந்த நேரத்தில், அந்த மேனேஜர் சொல்லும் சொல்லுக்கு எதிர் பேசும் ஒருவர் சொல்லுவது எல்லாமே கரெக்ட் ஆக தெரியும்.

3. மூன்றாவது படி, "நம்முடைய கற்பனை கலத்தல்", நடந்த நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்த நிகழ்வுகளில், நம்முடைய கற்பனை கலப்பது. உதாரணமாக, அந்த மீட்டிங்கில், ஒரு பெண் தலை குனிந்து கேட்கிறார் என்று வைத்து கொள்ளுவோம், நமக்கு பாஸிடம் நல்ல டெர்ம்ஸ் இல்லாத பட்சத்தில், "அந்த பொண்ணு ஏன் தலை குனிச்சிட்டு இருக்கு, எதோ வருத்தப்படுற மாதிரி தெரியுது", என்று மனதுக்குள் நினைப்பது.  அந்த பொண்ணு என்ன காரணத்துக்காக தலை குனிந்து இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், நம்முடைய எண்ணத்துக்கு ஏற்றபடி கற்பனை கலப்பது, மூன்றாவது படி.


4. நான்காவது படி," நாம் கலந்த கற்பனை கொண்டு  இது தான்நடந்து கொண்டிருக்கிறது  "என்று ஊகிப்பது. உதாரணமாக,, அந்த மீட்டிங்கில், "பாஸ் பேசுவது அந்த பொண்ணுக்கு  பிடிக்கவில்லை போல,அதான் தலை குனிஞ்சி வருத்தப்படுது, இந்தம்மா/ஆளு ஏன் இப்படிஇருக்கிறார் ? என்று பாஸ் பற்றிய தன்னுடைய  ஊகத்தை வலுப்படுத்துவது.

5. ஐந்தாவது படியில், "நாம் கொண்ட ஊகம், கற்பனை, எல்லாம் கலந்து  அந்த நிகழ்வு குறித்து முடிவெடுப்பது" . அதாவது, "அந்த மீட்டிங்கில், பாஸ் பேசுவது யாருக்கும் பிடிக்கவில்லை, அதனாலேயே எல்லாரும், தலையை குனிஞ்சிட்டு இருக்காங்க,  ஏன் இந்தம்மா/அய்யா  மத்தவங்களை புரிஞ்சுக்காம இப்படிபேசுறாங்க ? " என்று முடிவெடுப்பது

6.  ஆறாவது படியில், "நாம் எடுத்த முடிவுவை கொண்டு இப்படி தான் உலகம் இருக்கு என்று நம்பிக்கை கொள்வது".  அந்த மீட்டிங்கில் நடந்த, நாம் பில்டர் செய்த, கற்பனை கலந்த, ஊகித்த நிகழ்வுகளை கொண்டு, இந்த உலகமே இப்படி தான் பா", முதலாளி வர்கம், ஏழைகளை பற்றி கவலை பட மாட்டாங்க, என்று புலம்புவது.

7. ஏழாவது படிநிலை, இறுதி நிலை. நாம் எடுத்த முடிவுக்கு ஏற்ற ஆக்சன் எடுப்பது. அதாவது, இந்த மேனேஜர் சரியில்லை, எல்லாரையும் தப்பாக நடத்த்துகிறார், அடுத்தவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க மாட்டேன்கிறார், என்று HR இடம் காம்ப்ளயின் செய்வது. அல்லது, அடுத்தவர்களிடம் புறம் பேசுவது, கேங்கு சேர்ப்பது, கூட்டம் சேர்ப்பது,கொடி  பிடிப்பது.


நான் விவரித்த இந்த "Ladder of Inference" இல், "நீ" அல்லது "I" என்பது மிக முக்கியமான ஒன்று. அதாவது, என்ன நடக்கிறது என்பதை, "நீ" அல்லது "I" இன் பார்வையில் மட்டுமே பார்த்து "நாம்" முடிவெடுக்கிறோம். அதுவும் நமக்கு சாதகமாக, அதனை திரித்து, அதனை மாற்றி, கற்பனை கலந்து, மோல்ட் செய்து, ஒரு முடிவுக்கு வருகிறோம்.

இந்த இடத்தில் நாம் எடுத்த முடிவு சரியா? இல்லை தப்பா?

வெளியில் இருந்து பார்க்கும் போது, அல்லது மூன்றாவது மனுஷனாக பார்க்கும் போது அந்த முடிவு தப்பு, ஆனால், நாம் உள்ளே இருக்கும் போது, நாம் அதில் உடன்பட்டு இருக்கும் போது, அந்த முடிவு சரியான முடிவு. இது எல்லாமே பெர்ஸப்ஸன்/ நாம் உணர்வது  சார்ந்தது. ஆனால் உண்மை நிலை அல்ல.

உண்மை நிலை வேறொன்றாக இருக்கலாம், ஆனால், எந்த ஒரு சூழலுக்கும் நாம் அந்த சூழலை குறித்து என்ன நினைக்கிறோம் என்பதை சார்ந்தே, அது சரி என்றோ அல்லது தவறு என்றோ நம்மால் அல்லது பிறரால் தீர்மானிக்கப்படுகிறது.


நிற்க, மனோ தத்துவத்தில் இருந்து, சிறிது மாற்றத்துக்காக  அறிவியல் பார்வை பாப்போம்.

எத்தனை பேர், தன்னுடைய பள்ளி பருவத்தில், "அறிவியல்/பிசிக்ஸ்" பாடத்தை கடுப்புடன் படித்து இருக்கிறீர்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ஒளியின் பண்புகள் என்று, இரண்டு வகை பண்புகள் படித்திருப்போம். 1. துகள் வடிவானது( Particle nature of light), 2. அலை வடிவானது (wave nature of light).  என்று நிறைய படித்திருப்போம். ஒவ்வொரு தியரியும் பற்றி படம் வரைந்து,சமன்பாடுகள் மனப்பாடம் செய்து. அட போங்கைய்யா என்று கடுப்பை கிளப்பி இருக்கும்.

பிசிக்ஸ் பாடத்தை குறித்த பார்வையை, அது வெறும் கணித சமன்பாடுகள் மட்டுமே கொண்டது என்ற என்னுடைய எண்ணத்தை மாற்றியது "The Dancing Wu Li Masters" என்ற புத்தகம்.


Image from google images

சரி எதற்கு இந்த புத்தகத்தை குறித்து இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அதில், "The Role of "I"" என்ற அத்தியாயம் உண்டு. இந்த அத்தியாயத்தில், எந்த சமன்பாடும் இல்லாமல் ரொம்ப அழகாக இதன் ஆசிரியர், ஒளியின் , அலை மற்றும் துகள் பண்புகளை எளிமையாக குறிப்பிடுகிறார். அதன் பின்பு அவர் சொல்வது. "ஒளிக்கு, அலை மற்றும் துகள் பண்பு இருப்பது இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது, வேறு பல பண்புகளையும் ஒளி கொண்டிருக்கலாம், ஆனால் இதுவரை "நாம்" என்ன அறிந்திருக்கிறோமோ அதனை கொண்டு இது தான் ஒளியின் பண்பு என்று முடிவு கட்டிவிட முடியாது. இது "நாம்"/"ஐ" அறிந்த வரை காணும் ஒளியின் பண்பு மட்டுமே"


பொதிகவியளார், ஹெய்சென்பெர்க் அவர்களின் "Theory of uncertainity" மிக பிரபலம். அதன் முடிவில் ஹெய்சென்பெர்க் சொல்லுவது

" What we observe is not nature itself, but nature exposed to our method of questioning."


நாம் பார்க்கும் உலகம் /இயற்க்கை என்பது உண்மையில் இருப்பது அல்ல, நம்முடைய அனுமானத்தில் அல்லது நமக்கு பிடித்த வகையில் நாம் அறிந்த வரையில் இருக்கும் இயற்க்கை/உலகம் மட்டுமே. இது தான் உண்மையில் உலகம் என்று வரையறுக்க இயலாது.


உளவியல் மற்றும் அறிவியல் பார்வைகளின் சாராம்சம் எளிமையாக, நம்முடைய, எது சரி, எது தப்பு என்ற வாதத்துக்கு வருவோமானால். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு,  "நான், நாம்", என்ற அந்த பாய்ண்ட்யை விட்டு வெளியே வந்து, மூன்றாவது மனிதனாக, யூனிவேர்சல் ஆக யோசித்தால் மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் "முழுப்பரிமாணம்" கிடைக்கும். இல்லை எனில், லாடம் கட்டிய குதிரை போல் நாம் நினைத்ததே சரி என்று அந்த வழியில் சென்று கொண்டிருப்போம்.


நன்றி.





Sunday, March 11, 2018

இனிமேல், ஆடு வெட்டாம ஆட்டுக்கறி சாப்பிடலாம்!!

இந்த பதிவுக்கு ஆடு வெட்டாம ஆட்டுக்கறியும், ஹீலா செல்களும்!! என்று தான் தலைப்பு வைக்கணும்னு நினைச்சேன், ஆனா, ஹீலா செல்கள் "கான்செர் பேஷண்ட்" என்பதால் நெகடிவ் பதம் வந்து விடும் என்று மாற்றி வைத்து விட்டேன்.

"என்ன தலையும் புரியல வாலும் புரியல ?"என்பவர்களுக்கு, என்னுடைய முந்தைய பதிவான "
ஹீலா ஹீலா - செத்தும் கொடுத்தார்" இல் இருந்து சில பகுதிகள்.

"மருத்துவ ஆராய்ச்சி உலகில் இருக்கும் அனைவருக்கும் HeLa என்ற பெயர் மிகவும் பரிச்சயமாகஇருக்கும். HeLa என்பது அழியாத மனித செல் லைன் என்று சொல்வார்கள். பொதுவாக மனிதசெல்கள் உடம்புக்கு வெளியே வளர்ப்பது 1951 வரை மிக மிக கடினமானது என்று கருதப்பட்டது. அவற்றை எல்லாம் முறியடித்து உடம்புக்கு வெளியேயும் செல்கள் வளர முடியும் என்று நிரூபித்ததுHeLa செல்கள் மட்டுமே.

இதென்ன!!,மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளருவதாஎன்ன சொல்லுறாங்கஎன்றுகேட்பவர்களுக்கு திசு கல்சுர் பற்றிய சின்ன அறிமுகம்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் 

"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".

எப்படி செய்கிறார்கள்

"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது 

எதற்க்காக செய்கிறார்கள் 

மருத்துவ சோதனைகளை சோதனைச்சாலை எலிகளிடமோமனிதர்களிடமோ செய்வதற்கு முன்உயிரின செல்களிடம்  செய்து அவை எப்படி அந்த சோதனைகளை எதிர் கொள்கின்றன என்றுகாண்பர்இதனை  போன்ற திசுக்களில் நடத்தப்படும் பரிசோதனை எந்த உயிரினத்தையும்பரிசோதனை  என்ற பெயரில் துன்புறுத்துவதர்க்கு முன் செய்யப்படுவதால் திசு கல்ச்சர்  ஒருவரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
சரி இப்போது ஹீலா செல்களை பற்றி பார்ப்போம்

முதன் முதலில் ஆராய்ச்சி துறைக்கு நான் வந்த பொழுதெல்லாம் HeLa செல்களில் இந்த ஆராய்ச்சி நடந்தது, அந்த ஆராய்ச்சி நடந்தது என்றெல்லாம் பலர் கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் HeLa செல் என்றால் என்ன என்று கேட்டால் ஒரே ஒரு பதில் தான் வரும் "HeLa is a immortal cell line" அதனை தவிர வேறொன்றும் யாருக்கும் தெரியாது.

சமீபத்தில் "The immortal life of Henrietta Lacks" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.
ஹீலா  என்று மட்டுமே அறியப்பட்ட ஹென்ரிட்ட லாக்ஸ் என்ற கறுப்பின பெண்மணியின் கான்செர்செல்களே ஹீலா செல்கள் என்று அறியப்படுகின்றன என்று அறிந்த போது ஆச்சரியபட்டேன்.


போலியோ மருந்து முதல் பல பல கான்செர் மருந்துகள் வரை பலவகை  மருந்துகளும் முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது இந்த அம்மாவின் செல்களில்  தான். சொல்லப் போனால் ஒருபுது  மருத்துவ மறுமலர்ச்சியையும், மில்லியன் டாலர் இண்டஸ்ட்ரியையும் இந்த செல்கள்உருவாக்கி இருக்கின்றன.  இன்னும் கூட  பல பல நாடுகளில் ஊர்களில் இருக்கும் பல மருத்துவஆராய்ச்சி கூடங்களில் இவருடைய செல்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...

ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு கொடுத்த அவரோ மிக இளவயதில் கர்ப்பப்பை வாய்புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ அவருடையஉடம்பில் இருந்து எடுத்த செல்களை கொண்டு திசு கல்ச்சர்இல் வளர வைத்து ஒரு பெரியஇண்டஸ்ட்ரி உருவாக்கி விட்டார்கள் ஆனால் இதனை பற்றி அவருடைய குடும்பம் துளியும்அறிந்திருக்க வில்லை.
"

நிற்க, சரி இப்பொழுது எதற்கு ஹீலா செல்களை பற்றியும், ஆட்டு கறி பற்றியும்  குறிப்பிடுகின்றேன் என்றால், எப்படி ஹீலா செல்களை  பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்தார்களோ, அதே போல, மற்ற விலங்குகள் செல்களையும் பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்து ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், ஏன் இதை பிசினெஸ் ஆக செய்ய கூடாது என்று பிசினெஸ் முதலாளிகள் நினைத்ததன் விளைவாக, தற்போது பல பல கம்பெனிகள் இதனை ஒரு பிசினிஸ் ஆக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் "க்ளீன் மீட்". "மெம்பிஸ் மீட், சூப்பர் மீட்" என்று பல பல கம்பெனிகள் இந்த பிசினெஸ் இல் இருக்கிறார்கள்.


அதாவது சின்ன பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்ப்பதற்கு பதில், பெரிய, அல்லது இண்டஸ்ட்ரி லெவல் உற்பத்தி செய்வது. இதன் மூலம், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி அனைத்தும் லேபில் உற்பத்தி செய்யப்படும். அதன் சுவை மாறி இருக்கிறதா என்று நிறைய டேஸ்ட் டெஸ்ட் நடத்தி இருக்கிறார்கள்.  

இதனை சார்ந்த புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது "கிளீன் மீட்"  எப்படி இனிமேல், ஆட்டுக்கறி மாட்டு  கறி உற்பத்தி இருக்க  போகிறது என்பது குறித்த விளக்கம் இதில் இருக்கிறது.




இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இனிமேல் கடைக்கு சென்று கறி வாங்கும் போது அது உண்மையிலேயே ஒரு ஆடு மாடு வெட்டி வர்ற கறியா, இல்லை லாபில் வளர்த்த கறியா என்று தெரியாது என்பது உண்மை. 


நன்றி.



Friday, March 18, 2016

குழந்தை மணமகள்களும் , அழகான சமன்பாடுகளும்!

முதல் விஷயம். சில வாரங்களுக்கு முன்பு "மியூசியம் ஆப் நேசுரல் ஹிஸ்டரி" சென்றிருந்தேன், அங்கு "நேஷனல் ஜியோக்ராபி"யின் சார்பில் புகைப்பட கண்காட்சி ஒன்று வைத்து இருந்தார்கள். பல பல அருமையான இயற்க்கை புகைப்படங்கள் கண்களை கவர பார்த்து கொண்டு வந்த நான்,  ஸ்டெப்னி சிங்குலர் என்பவரின் "டூ யங் டு வெட்" எனப்படும் குழந்தை மணமகள்கள் புகைப்படங்கள் கண்டபோது திகைக்க நேர்ந்தது. புகைப்படத்தில் காணப்பட்ட 8-10 வயது சிறுமிகள்  திருமணமாகி அவர்களின் கணவர்களுடன் சோகமாக கொடுத்த போஸ் பார்க்கவே மனதை வருத்தியது.


அரபு நாடான ஏமனில் எடுக்க பட்ட புகைப்படங்கள் அவை. எண்ணெய் வளங்கள் ஏதும் இன்றி மிக மிக  ஏழை நாடான ஏமனில் பிறக்கும் அல்லது வளர்க்கப்படும் பல பெண் குழந்தைகள் அவர்களின் 15 வயதுக்குள் அவர்களுக்கு கொடுக்கப்படும் டவுரிக்காக அவர்களின் வயதை விட 2-3 மடங்கு வயது நிறைந்த ஆண்களுடன் திருமணம் முடித்து  கொடுக்க படுகிறார்கள். புகைப்படங்களில் காணப்பட்ட குழந்தைகள் 9-10 வயது குழந்தைகள் அவர்களின் கணவர்களின் குறைந்தபட்ச வயது 30-40.

புகை பட கண்காட்சியில் நான் பார்த்த அனைத்து படங்களும் சொல்லுவது என்னவென்றால், குழந்தை திருமணங்கள் சாதி, மதம், இனம், நாடு கடந்த ஒரு நிகழ்வாக இருக்கிறது என்று தெரிவிக்கிறது. வளரும் நாடுகளும் இதில் அடங்கும், நேபால், இந்தியா, நைஜீரியா போன்ற பல பல நாடுகளில் திருமணம் ஆக போகும் அல்லது திருமணம் ஆன சிறுமிகளின் பல புகைப்படங்கள் அவர்களின் கருத்துக்கள் எல்லாம் கண்ணீர் வரவழிக்கும்.  திருமணம் முடிந்த கையோடு கணவரால் பாலியல் தொல்லைக்கும் , 12 -13 வயதில் ஒரு குழந்தைக்கு  தாயாகவும் ஆகும் பல குழந்தைகள் பல பாலியில் தொற்றுக்கும் பல ஆப்ரிக்கா நாடுகளில் HIV க்கும் ஆளாவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருக்கும் கொடுமை.


இதனை சார்ந்த ஒரு புத்தகமும் வாசிக்க நேர்ந்தது "I am Nujood, Age 10 and divorced" என்ற 10 வயது நுஜூத் என்ற பெண்ணின் சுயசரிதை. ஏமன் நாட்டை சேர்ந்த 10 வயதில் திருமணம் முடிக்கப்பட்டு கணவரால்? 10 வயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு, வீட்டை விட்டு ஓடி வந்து கோர்டில் தஞ்சம் புகுந்து முடிவில் விவாகரத்து கொடுக்கப்பட்ட ஒரு சிறுமியின் கதை அது.  படிக்க படிக்க கண்ணீர் வர வழிக்கும் ஒன்று. எந்த நாடாக இருந்தாலும் எந்த ஊராக இருந்தாலும் பெண்கள், பெண் குழந்தைகள்  அனுபவிக்கும் கஷ்டங்கள் மட்டும் மாறாமல் இருக்கிறது.


அடுத்து நான் ரசித்த  விஷயம் கணக்கு குறித்தது. பள்ளி கல்லூரி நாட்களில் கணிதம் மிக விருப்ப பாடம். பயன் என்ன வென்று அறியாமலேயே நிறைய மனனம் செய்து கணித சமன்பாடுகளை கற்றுகொண்டு இருக்கிறேன். உதாரணமாக pi எனப்படும் pi =3.14 என்னும் நம்பர், சிறு வயதில் வட்டத்தின் ஆரம் மற்றும் பரப்பளவு  கண்டு பிடிக்க உதவும் ஒன்று. அதே போல arithmetic progression எனப்படும் 2,4,6,8,10.. போன்ற 2 வித்தியாசம் உள்ள நம்பர் சீரிஸ் போன்ற எளிதான சீரிஸ் .. இவை எல்லாம் மனனம் செய்து கடம்  அடித்து படித்து இருக்கிறேன் அதன் உபயோகம் தெரியாமல். சொல்ல போனால் நம்மில் பலர் நாம் சிறு வயதில் படித்த படிப்புக்கும் இப்பொழுது பார்க்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஏனெனில் நமக்கு எந்த இடத்தில் சமன்பாடுகள் உபயோக்கிக்க படும் என்று ப்ராக்டிகல் ஆக எங்கும் சொல்லி கொடுப்பதில்லை. உதாரணமாக என்னுடைய முதுநிலையில் fourier சீரிஸ் என்னும் ஒரு சமன்பாடுகள் வரும். அது எங்கு உபயோகிக்க வேண்டும் என்று யாரும் சொல்லி கொடுக்கவில்லை இன்னும் கூட சொல்லி கொடுக்கபடுவதில்லை. ஆனால், என்னுடைய முனைவர் படிப்பின் போது புரதங்களின் வடிவமைப்பை பற்றி படிக்கும் போது அல்லது ஆராய்ச்சி செய்யும் போது எப்படி fourier சீரீஸ் உபயோகிக்க படுகிறது என்று ஆச்சரிய பட்டது உண்டு.

அதே போல புள்ளியியல் படிக்கும் பலரும் Bayes தியரம் என்ற ஒன்று படித்து இருப்பார்கள். என்ன சொத்தை தியரம் இது என்று நானே கடம் அடித்து படித்து இருக்கிறேன். ஆனால், இதன் ப்ராக்டிகல் உபயோகம் அளவற்றது. நிறைய ரீசனிங் அல்லது டிடெக்டிவ் வேலை பார்க்கும் பலர் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உபயோகிப்பது இது. சொல்ல போனால் அகதா க்ரிஷ்டி அவர்களின் மையின் கதாநாயகனான "Hercule Poirot" வின் திறமையின் அடிநாதமே இந்த Bayes தியரம் தான்.

கணித சமன்பாடுகளின் உபயோகங்களை அறிந்து கொண்டால் அதனை படிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பது உங்களுக்கு பிடித்த செயலை செய்வது  போல சுவாரசியமானது. கணித சமன்பாடுகளின் மீது காதல் கொண்டிருந்த நான் BBC தளத்தில் "அழகிய சமன்பாடுகள்" என்ற போட்டி காண நேர்ந்தது. அதில் 12 கணித சமன்பாடுகளை கொடுத்து வாசகர்களை தேர்தெடுக்க சொல்லி இருந்தார்கள். பார்க்க படிக்க ஆச்சரியமாக  இருந்தது. அதில் என்னுடைய பாவரிட் ஆன Bayes தியரமும் இருந்தது கண்டு இன்னும் சந்தோசம்.




 உங்களுக்கும் கணித சமன்பாடுகள் பிடிக்கும் என்றால் http://www.bbc.com/earth/story/20160120-you-decide-what-is-the-most-beautiful-equation-ever-written என்ற தளம் சென்று உங்களுக்கு பிடித்த சமன்பாட்டுக்கு வாக்களியுங்கள்.


நன்றி.

Monday, January 18, 2016

தொலைந்த ஏரியும், ராஜாவின் ஆளுமையும்!

முதலில் நான் பார்த்த குழந்தைகள் நிகழ்ச்சி பற்றியது.

எப்பொழுதும் நான் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. சில நேரங்களில் முகுந்துடன் அவனுடைய சேனல் பார்ப்பதை தவிர. PBS எனப்படும் பப்ளிக் தொலைக்காட்சி (நம்மூர் தூர்தர்ஷன் போல) ஒன்றே ஒன்று மட்டுமே பார்க்க அதுவும் வார இறுதி நாட்களில் பார்க்க அனுமதி உண்டு. அப்படி ஒரு நாள் தொலைக்காட்சி நேரத்தில் பார்த்த ஒரு நிகழ்ச்சி "ப்ளம் லேன்டிங்" எனப்படும் ஒரு குழந்தைகள் நிகழ்ச்சி. 

அந்த நிகழ்ச்சியின் மெயின் கேரக்ட்டர் "ப்ளம்" எனப்படும் ஒரு ஏலியன். வெளி உலகில் இருந்து வந்து பூமியின் ஒவ்வொரு விசயத்தையும் இயற்கையையும் பார்த்து அதிசயிக்கும் ஒரு பிராணி ப்ளம். அப்படி ஒரு நாள் வந்த நிகழ்ச்சி, "லாஸ்ட் லேக்" எனப்படும்  ஆஸ்திரேலிய பாலைவனத்தில் தொலைந்த ஏரி பற்றியது.

எப்படி ஒரு 3 மாத இடைவெளியில் ஒரு பெருமழை பெய்து, ஒரு பாலைவனம் சோலைவனமாக மாறுகிறது பின்னர் மறுபடியும் பாலைவனமாக மாறுகிறது. என்பதனை ஒரு 5 நிமிட நிகழ்ச்சியில் பொருத்தி மிக மிக இன்றேஸ்டிங் ஆக அளிக்கிறார்கள் என்று நினைத்தால் அதிசயமாக ஆச்சரியமாக இருக்கிறது. எல்லாவற்றுக்கும் காரணம் தண்ணீர், மழை. அதனை கொண்டு ஆக்காவும் முடியும் அழிக்கவும் முடியும் என்று ஒரு 5 நிமிட ப்ரோக்ராமில் கற்று கொடுத்தது அமேசிங்.

என்னுடைய ஆறாவது அல்லது ஏழாவது படிக்கும் போது என்று நினைக்கிறன். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து பற்றி புவியியலில் மனபாடம் செய்தது. ஆஸ்திரேலியா நிறைய பாலை வனங்கள் கொண்டது என்று அறிந்தது /மனபாடம் செய்தது ஆறாவது படிக்கும் போது. அதன் பின்னர் எதுவும் நான் படித்தது இல்லை. ஆனால் ஒரு 1 வது படிக்கும் முகுந்த், நான் ஆறாவதில் படித்ததை விட நிறைய தெரிந்து கொண்டு இருக்கிறான். அதை போலவே, மாங்கரூவ் காடுகள் எனப்படும் சதுப்பு நில காடுகள் எப்படி சிறு கடல் மீன்கள் வளர, மீன்களுக்கு டே கேர் போல இருக்கின்றன என்று பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையில் தற்போது இருக்கும் குழந்தைகள் நிறைய விசயங்களை விளையாட்டாக கற்று கொள்ளுகிறார்கள். சில நேரங்களில் பொறமை கூட பட தோன்றுகிறது.

சில "ப்ளம் லேன்டிங்" வீடியோக்கள் இங்கே






அடுத்த விஷயம் இசைஞானி இளையராஜா பற்றியது. 

எங்கள் தமிழ் பள்ளியில் வருடாவருடம் பொங்கல் திருவிழா நடக்கும். ஒவ்வொரு வருடமும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளும் தன்னார்வ தொண்டர்களும் பொங்கல் குறித்து அதனை சார்ந்த விசயங்களை ஆடல் பாடல் நடிப்பு மற்றும் கவிதை கட்டுரை என்று அரங்கேற்றுவது உண்டு. அப்படி நிறைய நிறைய ஆட்டங்கள் பாட்டங்கள் என்று இந்த வருடமும் கலை கட்டியது.

பொங்கல் பண்டிகையை பற்றியதல்ல இந்த பதிவு..ஆனால் எப்படி இளையராஜா என்னும் ஒரு ஆளுமை நம்மில் கலந்து இருக்கிறார் என்பதனை பற்றியது. உதாரணமாக, நீங்கள் எந்த கிராமியம் சம்பந்தமான ஒரு விஷயம் யோசித்தாலும் அல்லது பாட்டை நினைத்தாலும் உடனே நமக்கு ஒரு இசை ஞாபகத்திற்கு வரும் என்றால் அது இளையராஜா இசை என்பதை யாரும் மறுக்க முடியாது. நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது தற்போது ஹாட் ஆக இருக்கும் தாரை தப்பட்டை தீம் மியூசிக் இல் பொங்கல் நிகழ்ச்சி ஆரம்பித்தது. அய்யா..என்ன ஒரு மியூசிக். கேட்கும் அனைவரையும் எழுந்து ஆட வைக்கும் மியூசிக்..


அதனை தொடர்ந்து "பச்சைக்கிளி பாடும் பாட்டு", "மாரி மழை பெய்யாதோ!! "சில பாடல்கள் சில ரஹ்மானின் பிறரின் அதிக இரைச்சல் இசையிலும்,இசை என்று ஒன்று இசைத்தாலும்  இரைச்சலே மிச்சம் இருந்த மாதிரி ஒரு உணர்வு.,ஆனால் அடுத்து  வந்த "பூமியே எங்க சாமியம்மா" . என்ன ஒரு பாட்டு..அதற்க்கு மழலைகளின் அருமையான ஆட்டம். அருமை அருமை. மொத்த அரங்கமும் ஆரவாரமாக ரசித்தது.



ஒன்று மட்டும் நிச்சயம். எத்தனை எத்தனை கத்து குட்டிகள் வந்து நாங்களும் இசை அமைகிறோம் என்று பீற்றி கொண்டாலும். ராஜா என்னும் ஒரு ஆளுமையை அசைத்து கூட பார்க்க முடியாது.

டிஸ்கி 

இது என்னுடைய பார்வையில் இருந்து எழுதியது மட்டுமே..மற்ற இசை கலைஞர்கள் இசையை குறை கூற இல்லை இங்கு.






Thursday, July 30, 2015

அலுப்பும் நோய் தொற்றும் தொடர்புள்ளவையா?


இது குழந்தைகளிடம் அதிகம் காணலாம். உதாரணமாக, நீங்கள் அவர்களை வீட்டு பாடம் செய்ய சொல்லுகிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள். உடனே அவர்களுக்கு அப்பொழுது தான் தலை வலிக்கும், உடல் வலிக்கும், தூக்கம் வரும் எல்லாமே செய்யும். அதே அவர்களை இதனை முடித்தால் நீங்கள் விளையாடலாம் அல்லது டிவி பார்க்கலாம் என்று சொல்லி பாருங்கள். உடனே, வேலை நடக்கும். அப்பொழுது அவர்கள் முதலில் உடல் வலிக்கிறது, தலை வலிக்கிறது என்று  பொய் சொன்னார்களா? யோசித்து வையுங்கள். 

இதே கேள்வியை உங்களிடமும் கேக்கிறேன். ஒரு நாள் ஆபிசில் இருந்து பயங்கர சோர்வாக வீட்டுக்கு வருகிறீர்கள். உங்களுக்கு தூக்கம் தூக்கமாக வருகிறது. அப்பொழுது உங்கள் நீண்ட கால நெருங்கிய நண்பர் போன் பேசுகிறார் அல்லது வீட்டுக்கு வருகிறார் என்று வைத்து கொள்ளுவோம். உடனே, அவரிடம் கல கல வென்று பேச ஆரம்பித்து விடுகிறீர்கள். பழைய நினைவுகளை எல்லாம் அசை போடுகிறீர்கள். சிறிது நேரத்தில் உங்கள் சோர்வு மறைந்து விடுகிறது. அப்பொழுது முதலில் உங்களுக்கு இருந்த  சோர்வு பொய்யா? 

வேறு ஒரு சூழல் சொல்கிறேன்.  உங்களுக்கு பிடிக்காத மீட்டிங் ஆனால் நீங்கள் போயே ஆக வேண்டும். வேண்டா வெறுப்பாக பொய் உக்கார்ந்து இருக்கிறீர்கள். அப்பொழுது பார்த்து எங்கிருந்து தான் உங்களுக்கு கொட்டாவி வருமோ தெரியாது. தொடர்ந்து வந்து அனைவரும் உங்களை திரும்பி பார்க்கும் வரை தொடரும். தொடர்ந்து தலைவலியும் கொண்டு வந்து விடும். அதே நேரம்  வெளியில் வந்து கொஞ்ச நேரம் நடந்தாலோ அல்லது இசை கேட்டாலோ அல்லது நண்பர்களுடன் பேசினாலோ கொட்டாவி, தலைவலி எல்லாம் போய் விடுகிறது. எப்படி?

மேலே சொன்ன உதாரணங்களில், ஒருவரின் மனநிலை அவரின் உடல்நிலையை பாதிக்கிறது. மருத்துவத்தில் நியூரோஇம்யுனாலாஜி என்று ஒரு துறை இருக்கிறது அதில் நரம்பு மண்டலம் நம் உடல் நிலையை, எதிர்ப்பு சக்தியை எப்படி பாதிக்கிறது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். உதாரணமாக, உங்களின் மூட், தூக்கம் நடவடிக்கை பொறுத்து உங்களின் உடம்பில் இருக்கும் cytokine எனப்படும் செய்தி எடுத்து செல்லும் மேச்சென்ஜெர் மாலிகுல்கல் பாதிக்க படுகின்றன அல்லது தூண்டப்படுகின்றன என்று ஆராய்ச்சி செய்கிறார்கள். இவை பொதுவாக தலையில் காயம் ஏற்படும் போது , வைரல் அல்லது பாக்டீரியல் தாக்குதலின் போது பாதிக்கப்படும் மேச்சென்ஜெர்கள் ஆகும் (1). இதே போன்ற cytokine மற்றும்  chemokine போன்றவை நரம்பு மண்டலத்தில் செய்தி கடத்தும் மாலிகுல்கலை எப்படி பாதிக்கிறது என்று அறியப்பட்டு இருக்கிறது (2)

தொடர்ந்த மன அழுத்திற்கும் , அதிக வைரல் தொற்றுக்கும் தொடர்பு இருக்கிறது என்று விலங்குகளில் நடந்த ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. விலங்குகளை, அதிக மன அழுத்தத்திற்கு உட்படுத்தும் போது  glucocorticoid அளவு அதிகமாகி, streptococcal எனப்படும் தோல் தொற்று அதிகமாவது நிரூபிக்க பட்டு இருக்கிறது (3).

இவை என்ன தெரிவிகின்றன என்றால்,  உங்கள் குழந்தைகளிடம் வீட்டுபாடம் செய்ய சொல்லும் போது அவர்களுக்கு ஏற்படும் அலுப்புகள் அவர்களின் நரம்பு மண்டலத்தை பாதித்து அவர்களுக்கு தலை வலியை கொடுக்கலாம். அதனால் அவர்கள் சொல்வது உண்மையாகவும் இருக்கலாம்.

அதனால், எப்பொழுது பார்த்தாலும் படி, வீட்டுபாடம்  செய், இல்லை அதனை செய் இதனை செய் என்று நீங்கள் நடத்தினீர்கள் அல்லது வேலை கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் மன அழுத்தம் அதிகமாகி உடல் நிலை சரியில்லாமல் போக நிறைய வாய்ப்புகள் உண்டு. அதனால் எப்பொழுது பார்த்தாலும் படி படி என்று அவர்களை படுத்தாமல், அவர்களுக்கு மன சந்தோசம் தரும் விசயங்களையும் செய்ய கொடுங்கள், நிறைய விளையாடவும் நேரம் கொடுங்கள். அப்பொழுது தான் அவர்கள் சந்தோசமாக நோய் தொற்று இன்றியும்  இருப்பார்.

நன்றி.

References 
1) http://grants.nih.gov/grants/guide/pa-files/pa-05-054.html
2) Kipnis J, Derecki NC, Yang C, Scrable H (October 2008). "Immunity and cognition: what do age-related dementia, HIV-dementia and 'chemo-brain' have in common?". Trends Immunol. 29 (10): 455–63
3) Kawli, Trupti; He, Fanglian; Tan, Man-Wah (2010-01-01).It takes nerves to fight infections: insights on neuro-immune interactions from C. elegans. Disease Models & Mechanisms 3 (11-12): 721–731.

Sunday, July 19, 2015

இந்தியாவில் பயோடெக்னாலாஜி படித்தால் வேலை கிடைக்குமா?

எனக்கு நடந்த ஒரு எதிர்பாராத அனுபவம் அது. அம்மாவின் ஆபரேஷன் க்கு பிறகு போஸ்ட்  செக்கப்க்கு என்று மருத்துவமனை அழைத்து சென்று இருந்தேன். அங்கு இருந்த ஒரு நர்ஸிடம் ஒரு அம்மா, என் பையன் +2 முடிச்சிட்டான், சயின்ஸ் குரூப், என்ன படிக்கலாம் என்று கேட்டு கொண்டு இருந்தார். அந்த நர்ஸ் அம்மாவும், பயோடெக்னாலாஜி படிக்க வையுங்க என்று சொன்னார். அப்போது, அங்கு செக்கப்க்கு வந்து இருந்த இன்னொரு அம்மா, "வேணாம் மா, என் பைய்யன் அதை தான் படிச்சிட்டு 10 வருசமா வேலை இல்லாம இப்போ தான் மா வேலைக்கு போய் இருக்கான், வேற என்னானாலும் படிக்க வையுங்க இது வேண்டாம்" என்று சொன்னார். 

எனக்கு அந்த அம்மா சொன்னது தூக்கி வாரி போட்டது. என்னது நம்ம பீல்ட் பத்தி இப்படி பேசுறாங்களே என்று. பிறகு அந்த அம்மாவிடம் கேட்டபோது, அவர் சொன்னது இது தான். அவரின் பைய்யன் BTech பயோடெக்னாலாஜி படித்து இருக்கிறார், அதன் பிறகு வேலை இல்லை. பின்னர், PhD சேர்ந்து பிளான்ட் பயோடெக்னாலாஜி படித்து முனைவர் பட்டம் வாங்கி இருக்கிறார். அதன் பிறகும் வேலை என்று பெரியதாக எதுவும் இல்லை ஆனால் 8-9 வருடங்கள் கடந்து இருக்கின்றன. இப்பொழுது Postdoc ஆக வெளி நாட்டுக்கு சென்று இருக்கிறார். அதுவும் postdoc சம்பளம் என்பது மிக குறைந்தது. "சம்பளம் கம்மி என்று யாரும் பொண்ணு கூட கொடுக்க மாட்டேங்கிறாங்க மா!" என்று புலம்பி தீர்த்து விட்டார். 

இது உண்மையா, இந்தியாவில் பயோடெக்னாலாஜி படித்தால் வேலை கிடைக்காதா? என்று எனக்கு தெரிந்த, இந்தியாவில் பயோடெக்னாலாஜி ஸ்டார்ட் அப் கம்பெனி வைத்து இருக்கும் ஒருவரிடம் கேட்டேன். அவர் சொன்னது இது தான்.  இந்தியாவில்  பயோடெக்னாலாஜி என்பது வெறும் ஆராய்ச்சி சார்ந்த பீல்ட் மட்டுமே. ஒரு கம்பெனி ஆரம்பிக்க வேண்டும் என்றால் பல நிலைகள் clearance செய்ய வேண்டும். இது ஒரு புறம் இருக்க, இப்படி படித்து விட்டு வரும் மாணவர்களும் வெறும் புத்தக அறிவு மட்டுமே கொண்டு இருக்கிறார்கள். ப்ராக்டிகல் அறிவு இருப்பதில்லை. பல கல்லூரிகள்  பயோடெக்னாலாஜி என்ற பெயரில்ஆராய்ச்சி கூடம் கூட இல்லாமல் பாடம் நடத்துகிறார்கள். அங்கு படித்து விட்டு வெளிவரும் பலருக்கும் பல விஷயங்கள் தெரிவதில்லை. பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு கூட Genetics, Recombinant DNA technology என்று எதுவும் சொல்லி தர தெரியவில்லை. ரொம்ப ஜெனெரல் ஆக படிக்கிறார்கள். specialize எதுவும் செய்து கொள்ளுவதில்லை.
இப்படி அனைத்தையும் மனபாடம் செய்து வெளி வரும் பலரும் இண்டர்வியு நேரத்தில் கேட்கும் அடிப்படை விசயங்களுக்கு கூட பதில் சொல்லுவதில்லை. இதனால் நல்ல subject தெரிந்த பலரை தேடி கண்டு பிடிக்க வேண்டி இருக்கிறது. அதேபோல,  நிறைய பயோடெக் கம்பெனிகளும் இல்லை என்று சொன்னார். 

இது ஒரு புறம் இருக்க, வெறும் BTech  பயோடெக்னாலாஜி படிக்கும் பலரும் படித்து முடித்து வெளி வரும் போது கெமிகல் எஞ்சினீர், பயோ மெடிக்கல் எஞ்சினீர், பயோ கெமிஸ்ட்ரி, பயாலாஜி படித்தவர்கள் என்று அனைவருடனும் போட்டி போட வேண்டி இருக்கிறது. அடிப்படை அறிவு இல்லாமல் எல்லாத்தையும் நுனிப்புல் மேய்ந்து விட்டு வரும் இவர்கள் நிறைய தடுமாறுகிறார்கள். 

வெறும் Btech மட்டும் படித்த இவர்களுக்கு மார்க்கெட்டிங் வேலை மட்டுமே கிடைகிறது. மேல்படிப்பு அல்லது Phd படித்தால் மட்டுமே கொஞ்சம் நல்ல வேலை கிடைகிறது. அதனால், IT சார்ந்த படிப்புகள் போல படித்து முடித்தவுடன் 5-6 வருடங்களில் வேலை, ஓரளவு நல்ல துவக்க சம்பளம் என்று எதுவும் கிடைப்பதில்லை.

 clearance பிரச்சனையை பற்றி இன்னொரு இடத்திலும் கேள்வி பட்டேன். என்னுடைய தற்போதைய பயணத்தில் ஆராய்ச்சி விசயமாக ஒரு பல்கலைகழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இருக்கும் உபகரணங்கள் எல்லாம் நன்றாக லேட்டஸ்ட் கட்டிங் எட்ஜ் ஆக இருந்தது.. DBT இல் இருந்து பண்டிங்க் கிடைத்ததாக சொன்னார்கள்.  ஆனால் கிடைத்த பண்டிங்க் வைத்து அவர்களால் உபகரணங்கள் வாங்க முடிந்ததே தவிர அதனை தொடர்ந்து நடத்த, கரண்ட் பில் கட்ட கூட அவர்களால் முடிவதில்லை, clearance என்ற பெயரில் நிறைய ரெட் டேபிசம் நடப்பதாக சொன்னார்கள்.

1 பில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது  நோய்களும், வைரஸ்களும், பாக் டீரியாக்களும் வந்து கொண்டு இருக்கையில், பயோ டெக் போன்ற துறை கள் வளர்வது  எவ்வளவு முக்கியம். எவ்வளவோ சாதிக்கலாம் .  ஆனால் இது தான் தற்போதைய  நிலையா? எதிர்காலம் இல்லாமல் இருக்கும் பயோடெக்னாலாஜி பட்டதாரிகள் நிலை என்னாகும்..தெரியவில்லை. 


நன்றி.


Thursday, January 22, 2015

சங்கரின் "ஐ" வைரசும் ஒரு ஃப்ளு ஆராய்ச்சியாளரின் புலம்பலும்

ஃப்ளு போன்ற ஒரு சுவாசப்பகுதியை தாக்கும்  வைரசை ஒரு பெரிய உயிர் கொல்லியாக்கி அதற்கான தடுப்பூசி அவசியம் என்றதொரு மாயபிம்பம் அமெரிக்காவில் உருவாகாப்பட்டு இது வரை சிறப்பாக செயல்படுத்தபட்டும் இருக்கிறது.  

இன்னொரு பக்கம் இதுபோன்றதொரு தடுப்பூசிகள் குழந்தைகளிடம் ஆட்டிசம் போன்ற குறைபாடுகளைஅதிகரிக்கின்றன என்ற சில எதிர்ப்புகளும் கிளம்பியவண்ணம் இருக்கின்றன. ஃப்ளு தடுப்பூசியில் பதபடுத்த உபயோகபடுத்தபட்ட    Thimerosal போன்றவை ஆட்டிசம் போன்றவற்றை தூண்டுகின்றன என்று சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்ததால் 2000ஆம் ஆண்டில் இருந்து Thimerosal உபயோகிப்பதில்லை.

இது எல்லாம் ஒரு புறம் இருக்க, இந்த ஃப்ளு வைரசை வைத்து சினிமா உலகம் அதுவும் தமிழ் சினிமா உலகம் சரியான காமெடி செய்து கொண்டு இருக்கிறது.
சமீபத்தில் வந்த "ஐ" படம் அதற்க்கு சாட்சி. அதில் ஹீரோவுக்கு மனிதனால் ஆராய்ச்சி கூடத்தில் உருவாக்கப்படும்  H4N2 என்ற I வைரசை செலுத்துகிறார்கள், உடனே, அவர் உடலில் கட்டிகளும் அவலட்சணமும் தோன்றி, கூனனாகி விடுகிறாராம். என்ன கதையையா இதெல்லாம்.

மூன்று வருடமாக ஃப்ளு வைரஸில் ஆராய்ச்சி செய்திருக்கிறேன், இதுவரை இப்படி பட்ட ஒரு விஷயத்தை கேள்விப்பட்டதில்லை.

முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள், H4N2, ஒரு avian virus , அதாவது பறவைகளை தாக்கும் ஃப்ளு. அது இயற்கையாக இருக்கும் வைரஸ். மனிதனால் லேபில் உருவாகாபடுவதில்லை. கிட்டதட்ட 100 வருடங்களாக 1918 இல் இருந்து ஃப்ளு வைரஸ் பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் H4N2 மனிதனை தாக்கியதில்லை. 


இது லேபில் மரபணு மாற்றம் செய்யப்பட்டது என்றே வைத்துகொள்வோம் அதனால் மனிதனை தாக்கும் படி மாறிவிட்டது என்று வைத்து கொண்டாலும் அப்படியே செய்யப்பட்டு இருப்பினும், அதன் mode of infection , அதாவது,எப்படி எந்த வழியில் மனிதனை தாக்கும் என்பது நன்கு அறியப்பட்டு இருக்கிறது. அதாவது, upper respiratory அல்லது மூச்சு குழாய் பகுதியை தாக்கலாம். அல்லது, avian பறவை  ஃப்ளு போல மனிதனின் GI tract (gastrointestinal tract)  அதாவது குடல் மற்றும் செரிமான பகுதியை மட்டுமே தாக்கும் என்று இதுவரை கண்டறிய பட்டு இருக்கிறது. இந்த படத்தில் காட்டுவது போல, pituitary gland அல்லது pituitary சுரப்பியை மற்றம் செய்து, உடல் முழுதும் அவலட்சணம் ஆகும் என்றோ அல்லது, கூன் விழும் என்றோ எனக்கு தெரிந்த எந்த ஆராய்ச்சியும் சொல்லவில்லை.

என் இப்படி உண்மைக்கு புறம்பான விசயங்களை பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. அதுவும் சங்கர் போன்றவர்களிடம் இருந்து இப்படி ஒன்றை எதிர்பார்க்கவில்லை.


References 

http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2504709/
http://www.cdc.gov/vaccinesafety/concerns/autism/





Friday, January 16, 2015

படித்தது, கேட்டது, அனுபவித்தது

படித்தது 

சில மாதங்களுக்கு முன்பு, "ஆண்டிபயாடிக் சோப்புகளை உபயோகிப்பது நல்லதா இல்லையா " என்ற பதிவு எழுதி இருந்தேன். அதில் தற்போது மருத்துவமனைகளில் பரவும் MRSA ஆண்டிபயாடிக் எதிர்ப்பு பாக்டீரியாக்களை பற்றியும் குறிப்பிட்டு இருந்தேன்.

இன்று வாசித்த செய்தி. சாதாரண ஆண்டிபயாடிக்குகள் போல ஆண்டிபயாடிக் எதிர்பை அல்லது பாக்டீரியாகளில் பரிணாம மாற்றத்தை தூண்டாத ஒரு புது ஆண்டிபயாடிக்கை தற்போது மண்ணில் இருக்கும் பாக்டீரியாக்களில் இருந்து பிரித்து எடுத்து கண்டுபிடித்து இருக்கின்றனர்.  அதன் பெயர் teixobactin. இதனை காச நோயை உருவாக்கும் Mycobacterium tuberculosis பாக்டீரியாக்களின் மீது செலுத்திய போது, இது காச நோய் பாக்டீரியாக்களை கொன்றது மட்டுமல்லாமல் எந்த வித ஆண்டிபயாடிக் எதிர்ப்பு காச நோய் பாக்டீரியாக்களையும் உருவாக்கவில்லை. அதனால் இந்த மருந்தை எந்த பயமும் இன்றி கொடுக்கலாம். ஆனால் என்ன, இதனை மருந்தாக உருவாக்கி, பரிசோதனைகள் செய்து மார்கெட்டில் புழக்கத்தில் வர குறைந்தது பத்து வருடங்கள் ஆகும் என்றாலும் இது மருத்துவ உலகில் வரவேற்க தக்கது.

கேட்டது 

ஒரு சிலரின் குரலை முதன் முதலில்  கேட்கும் போது மனம் மயங்கும், அப்படி நான் கேட்டவுடன் பிடித்த குரல் Israel "IZ" Kamakawiwoʻole எனப்படும் ஹவாயை சேர்ந்த பாடகர். அவரின் "Somewhere over the rainbow" எனப்படும் இந்த பாடல் சோர்ந்த மனதிற்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளிக்கும். "IZ" அவர்களின் சொந்த வாழ்க்கை சோகமானது, உடல் பருமனால் அவரின் மொத்த குடும்பமும் அவதிப்பட்டு இறந்தாலும் தனது வசீகர குரலால் பலருக்கு தன்னம்பிக்கை அளித்தவர் அவர்.

இதோ அவரின் "Somewhere over the rainbow" பாடல் 




அனுபவித்தது 

சமீபத்தில் இந்தியா சென்றிருந்த போது பட்ட அவஸ்த்தை. சொந்த ஊரான மதுரையில் இருந்து கொடைக்கானல் செல்லலாம் என்று குடும்பத்துடன் முடிவு செய்து அனைவரும் கிளம்பியாயிற்று. போகும் வழியில் எல்லாம் பெண்களுக்கான கழிப்பறை தேடி தேடி நொந்து போனது அவஸ்தை. அப்படியே ஒரு சில இடங்களில் கழிப்பறைகள் இருப்பினும் அவற்றில் எல்லாம் உபயோகித்த நாப்கின் குப்பைகளில் இருந்து அனைத்தையும் போட்டு சில இடங்களில் கால் கூட வைக்க முடியவில்லை.  பல கட்டண கழிப்பறைகளில் கூட இந்த நிலை, தண்ணீர் கூட  வருவதில்லை. கட்டணமில்லா கழிப்பறைகளை பற்றி சொல்லவே வேண்டாம். ஒழுங்கான கழிப்பறைகளை நான் கண்டது மதுரையில் இருந்து சென்னை செல்லும் வழியில் இருந்த  A2B உணவகங்களுக்கு அருகில் இருந்தவை மட்டுமே.

இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் பெண்கள் கழிப்பறைகளை உபயோகித்தாலும் UTI (Urinary track infection) வருவது தவிர்க்க முடியாது.  நல்ல கழிப்பறைகள் தேவை, எல்லா இடங்களில் இல்லாவிட்டாலும் , சுற்றுலா தளங்களிலாவது வேண்டும். கவனிக்குமா அரசு.

நன்றி 


Friday, March 2, 2012

அழியப்போகும் ஆண்கள் இனம்.


ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது http://www.bbc.co.uk/news/science-environment-17127617.  http://news.bbc.co.uk/2/hi/europe/8060289.stm     அது இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளில் ஆண் வர்க்கத்தை நிர்ணயிக்கும் Y குரோமோசொம்கள் இருக்காது என்று கணித்திருக்கிறது. என்ன என்று தேடிய போது ஒரு புத்தகம் சிக்கியது அது ஆதாமின் சாபம் என்ற புத்தகம்.

அது என்ன Y குரோமோசொம்கள், எப்படி அவை ஆண்களை அழிக்க போகிறது என்று கேட்பவர்களுக்கு.

மனிதர்கள் அனைவருக்கும் மனித உடலை. உருவ அமைப்பை நிர்ணயிக்கும் 22 pairs குரோமோசொம்களும், 2 செக்ஸ் குரோமோசொம்களாலும் இருக்கும். ஆண்களுக்கு இவை X & Y வும்,  பெண்களுக்கு இது X & X ஆகவும் இருக்கும்.

File:HumanChromosomesChromomycinA3.jpg
குரோமோசொம்கள் செல்பிரிவின் போது




File:NHGRI human male karyotype.png
ஆண் குரோமோசொம்கள்.








பெண் குரோமோசோம்கள்.



மேலே உள்ள இரண்டு படத்தில் இருப்பது கார்யோடைப்பிங்(karyotyping) எனப்படும் முறையில் குரோமோசொம்களை வகைப்படுத்துவது.

குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆண்கள் தான் என்று இன்னும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் அப்பாவிடம் இருந்து வரும் விந்தணுக்களில் Y குரோமோசோம் இருப்பின் பிறக்க போகும் குழந்தை ஆண்குழந்தையாகவும், X இருப்பின் பெண்குழந்தையாகவும் இருக்கும்.

சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.
இந்த Y குரோமோசோம்களே, ஆண் உறுப்புகள், ஆண்களுக்கான ஹார்மோன்கள் அனைத்தையும் உண்டாக்கும் ஜீன்களை கொண்டிருக்கும்.இந்த Y குரோமோசோம்கள் படிப்படியாக தன்னிடம் இருக்கும்  ஜீன்களை இழந்து வருகிறது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் 1400 ஜீன்களை கொண்டிருந்த இந்த குரோமோசோம் இப்போது வெறும் 45 ஜீன்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது போன்ற ஜீன்களை இழக்கும் தன்மை யால் ஜீன்கள்  படிப்படியாக குறைந்து ஒரு சமயம் y குரோமோசோம் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வு. ஆனால் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் இந்த ஜீன் இழப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிந்தாலும் எந்த நேரமும் அது தொடரும் அபாயம் உள்ளது குறித்து  அறிய முடிகிறது.

சரி அப்போது ஆண்கள் இனமே இல்லாது போகுமா? என்ன ஆகும்? யாருக்கும் தெரியவில்லை.உண்மை நிலைமை இப்படி இருக்க ஆண் குழந்தை தான் உசத்தி என்று நினைத்து கொண்டு இந்தியாவில் நடக்கும் பெண் சிசுகொலைகளை என்னவென்று சொல்ல?


Friday, February 3, 2012

கடவுளும், பரிணாமமும், மாலிகுகலர் பயாலஜியும்


2010 ஆம் வருடம் கிரேக் வெண்டர் அவர்கள் செயற்கை செல் உருவாக்கிய செய்தி வந்தது தான் தாமதம், பதிவுலகில் உள்ள நாத்திகர்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாருங்கள் செயற்கை செல் உண்டாக்கி விட்டனர் அறிவியலார், அதனால் கடவுள் என்ற ஒன்று இல்லாவே இல்லை என்ற விவாதம் ஆரம்பித்தனர்.

ஆத்திகர்களே விடுவேனா பார் என்று நாத்திகர்களுக்கு 'counter' கொடுப்பதாக நினைத்து வரிந்து கட்டி கொண்டு, பரிணாமம் என்ற ஒன்று இல்லாவே இல்லை,  கடவுள் இந்த உலகத்தை இத்தனையாவது நாள் இப்படி தான் படைத்தார் என்று தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்தனர்.

என்னை போன்ற ஆ/நாத்திகர்களே, ஆத்திகர்கள் பக்கமும் செல்ல முடியாமல் நாத்திகர்கள் பக்கமும் செல்ல முடியாமல், என்ன செய்வது என்று புரியாமல் விழிக்க ஆரம்பித்து விட்டோம்.

அதென்ன ஆ/நாத்திகர்கள், “நமக்கு மேலே ஒரு சக்தி இருந்து நம்மை ஆட்டுவிக்கிறது என்று நம்பும் அறிவியலார்கள்”.

சரி இதெல்லாம் இப்போது எதற்கு சொல்கிறேன் என்று கேட்பவர்களுக்கு.

சில நாட்களுக்கு முன்பு தமிழ் மணத்தை பல நாட்கள் இடைவேளைக்கு பிறகு திறக்க நேர்ந்தது..அதில் அதிக பதிவர்கள்  பரிந்துரைத்த இடுகை என்ற ஒரு இடுகை "Central Dogma" எனப்படும் மாலிகுலர் பயாலஜி அடிப்படை தத்துவத்தை கூறுவது என்று பறைசாற்றப்பட்டு கிட்டதட்ட 30க்கும் அதிகமானவர்கள் பரிந்துரைத்து இருந்தனர். அட, நம்ம சப்ஜெக்ட் ஆச்சே..நாமலே ரொம்ப நாளா எழுதனும்னு நினைச்சதே..என்று..மிக மிக ஆர்வத்துடன் சென்று பார்த்தேன்..

படித்த சில நேரத்தில் அதில் கூறப்பட்டிருந்த அடுக்கடுக்கான அறிவியல் மற்றும் பரிணாமத்தை பற்றிய திரிபுகளை பார்த்த பிறகு பொறுக்க மாட்டாமல், சில கேள்விகளை எழுப்பிவிட்டு தயவு செய்து தவறான அறிவியலை போதிக்காதீர்கள் என்று சொல்லி விட்டு வந்தேன்.

அதற்கான பதிலாக தன் கூற்றை நியாயப்படுத்தி தன் கட்டுரையில் உள்ள குற்றம் இருந்தால் காட்டும்மாறு சவால் விட்டு இருந்தார்.

பரிணாமம் என்பது என்ன? மனித பரிமாணம் மட்டுமே பரிணாமம் என்றழைக்கப்படுகிறதா?, வேறெந்த உயிரினமும் பரிணாமிக்காதா? என்ற சில கேள்விகளை எழுப்பி இருந்தேன்?...பதில் ஏதும் அங்கிருந்து வந்ததாக தெரியவில்லை.

முன்பே பரிணாமம் பற்றி தருமி அய்யா அவர்களும், தி அனலிஸ்ட் அவர்களும் அழகாக எழுதி இருக்கிறார்கள்.

அதனால், நான் இங்கு கூற இருப்பது எல்லாம் பரிணாமத்திற்கான சிறந்த உதாரணமாக இருக்கும் ஃப்லூ வைரஸ் பற்றியே.


அதென்ன ஃப்லூ வைரஸ், பறவைக்காய்ச்சல் பன்றிக்காய்ச்சல், ஃப்லூ காய்ச்சல் என்ற வித விதமான காய்சல் பரப்பும் ஒரு சின்னச்சிறிய உயிரி அது.

ஒரு ஓவியரின் கைவண்ணத்தில் கீழே காட்டப்பட்டு இருப்பது தான் ஒரு ஃப்லூ வைரஸும் அதில் இருக்கும் ஜீன்களும்.


நமக்கெல்லாம் இருப்பது போலே ஆயிரக்கணக்கான ஜீன் களை ஃப்லூ வைரஸ் கொண்டிருக்கவில்லை. அவைகள் கொண்டிருப்பது மொத்தம் பன்னிரெண்டு ஜீன்கள் மட்டுமே..இந்த 12 ஜீன் களும் 'segmented genome' என்றழக்கப்படும் 8 கூறுகளாலான மரபுப்பொருள்களை உடைய பகுதிகளாக பிரிக்கபட்டு இருக்கும்.

வெறும் 12 ஜீன்களை கொண்டு எப்படி இத்தனை effective ஆக மக்களை அவர்களால் தாக்க முடிகிறது, வாழ முடிகிறது, ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் கிலி ஏற்படுத்த முடிகிறது என்றால்..அதற்கு ஒரே ஒரு காரணம் தான், வைரஸ் கிருமிகள், எப்படி திறமையாக வாழ்வது என்ற பரிணாம கொள்கையை நன்கு அறிந்து கொண்டிருக்கின்றன.
"survival of the fittest" என்றழைக்கப்படும் அந்த கொள்கையை எப்படி அவை பயன்படுத்துகின்றன என்று பார்ப்போம்.


ஏற்கனவே, ஃப்லூ வைரஸ் 8 கூறுகளையுடைய மரபுப்பொருள்களை கொண்டது என்றறிந்தோம், இந்த கூறுகளை permutation and combination முறையில் பலவாறு சேர்த்து, பிரித்து ஒழுங்குபடுத்தி எந்த கூறுகள் வாழ்வதற்கு தகுந்ததோ அவற்றை அழகாக இணைத்து கொள்கிறது ஃப்லூ.

உதாரணமாக கீழே கொடுக்கபட்டு இருக்கும் இரண்டு பிங்க் மற்றும் கிரீன் வைரஸ்கள் தங்களின் மரபுப்பொருள்களை எப்படி ஒழுங்குபடுத்தி அதிக ஆற்றல் கொண்ட ஃப்லூவை உருவாக்குகிறது பாருங்கள்.
Figure 1
ஃப்லூ நோய்வாய்பட்ட ஒருவரிடம் இருந்து எந்த நிமிடத்தில் வைரஸை நீங்கள் பிரித்தெடுத்தாலும், அவற்றில் கிட்டதட்ட 40% வைரஸ்கள், இப்படி ரீஅஸ்ஸார்ட்மெண்ட் செய்துகொண்டு மிக மிக வலிமையான வைரஸ் சந்ததிகளை உருவாக்கி இருக்கும்.

என்ன ஒரு திறமை பாருங்கள். 

இவ்வளவு இன்று போதும் என்று நினைக்கிறேன், பிறகொரு சமயம், மீண்டும் ஃப்லூ பற்றி பார்ப்போம்.

தற்போது..மீண்டும் ஆத்திக, நாத்திக சண்டைக்கு வருவோம்..

ஆத்திகர்களே..நீங்கள் கடவுள் என்ற ஒன்று இருப்பதாக நம்புகிறீர்கள், அதோடு விட்டுவிடுங்கள்..பரிணாமம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதெல்லாம் வேண்டாம்.

நாத்திகர்களே..பரிணாமம் உண்மை..ஆனால் தயவு செய்து பரிணாமத்திற்கும் கடவுளுக்கும் முடிச்சு போடவேண்டாம்.

நன்றி.

Saturday, October 29, 2011

A.R.முருகதாஸும் வாட்ஸன் & கிரிக்கும்

19ஆம் நூற்றாண்டின் கடைசி பகுதி, ஒரு ஜெர்மன் பயோகெமிஸ்ட் ஒருவர் நியூக்ளிக் ஆசிட் என்ற ஒன்றை கண்டுபிடித்தார். பின்னர், நிறைய நியூக்ளிக் ஆசிட் கொண்ட ஒரு செயின் கார்போஹைடிரேடாலும்,பாஸ்பாரிக் அமிலத்தாலும் நிறைய நைட்டிரஜன் அணுக்கள் நிறைந்த காரத்தாலும் நிறைந்திருப்பதை கண்டு பிடித்தார் அதற்கு, டி.என்.ஏ/ஆர்.என்.ஏ என்று பின்னர் பெயரிடப்பட்டது.

1943 ஆம் ஆண்டு Oswald Avery என்ற அமெரிக்க விஞ்ஞானி,  இந்த டி.என்.ஏ அல்லது ஆர். என். ஏ என்பது, மரபுப்பொருட்களை கொண்டிருக்கலாம், அதன் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மரபு சார்ந்த நிகழ்வுகள் கடத்தப்படலாம், என்றும் கண்டுபிடித்தார்.

டி.என்.ஏ என்பது மரபுப்பொருளைக் கொண்டது என்று கண்டுபிடித்தாலும் அது எப்படி இருக்கும், எந்த தோற்றம் கொண்டது என்று யாரும் அறிந்திருக்கவில்லை.

1953 ஆம் ஆண்டு, ஜேம்ஸ் வாட்ஸன் & ஃபிரான்ஸிஸ் கிரிக் ஆகிய இருவரும் x-ray crystallography முறையை பயன்படுத்தி டி.என்.ஏ என்பது டபுள் ஹெலிக்ஸ் எனப்படும், முருக்கிவிட்ட ஏணி போன்ற ஒரு தோற்றம் கொண்டது என்று கண்டுபிடித்தனர்.


மேலே உள்ள படத்தில் இருப்பது போன்ற தோற்றம் கொண்டது தான் டி.என்.ஏ என்று கண்டுபிடித்ததற்க்காக, வாட்சன் அவர்களுக்கும் கிரிக் அவர்களுக்கும் 1962 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது.



சரி, இப்போது எப்படி, வாட்ஸனும் கிரிக்கும், டி. என். ஏ தோற்றத்தை கண்டுபிடித்தார்கள் என்று பார்க்கலாம்.

முதலில், டி.என்.ஏ வை, உயிரினத்திலிருந்து பிரித்து எடுக்க வேண்டும், இதற்காக, எச்சில், ரத்தம் போன்ற பல பொருள்கள் பயன்படுத்தபடுகின்றன.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பது, சாம்பிளில் இருந்து பிரிக்கப்பட்ட டி.என்.ஏ.

டி. என். ஏவை மட்டும் பிரித்த பிறகு, அதனை படிமங்களாக்குகின்றனர்.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பது, படிமங்களாக்கபட்ட டி. என்.ஏ ஆகும்.

அடுத்து, படிமங்களாக்கப்பட்ட டி.என்.ஏக்களை, x-ray crystallography, எனப்படும் x-ray ஒளிச்சிதறல் முறையை பயன்படுத்தி சிதறச்செய்கின்றனர்.


மேலே உள்ள படத்தில் இருப்பது சிதறடிக்கபட்ட டி.என்.ஏ ஒளி.

பின்பு, சிதறச்செய்த ஒளியை ஒன்று படித்தி, இது தான் டி.என்.ஏவின் தோற்றம் என்று கண்டு பிடிக்கிறார்கள்.



சரி, இப்போது தலைப்புக்கு வருவோம்,

இத்தனை கஷ்டப்பட்டு வாட்ஸனும், கிரிக்கும், கண்டுபிடித்த டி.என்.ஏ தோற்றத்தை, வெறும், சாதாரண மைக்கிராஸ்கோப் அடியில் சாம்பிளை வைத்து கொண்டு ஸ்ருதிஹாசன் 7 ஆம் அறிவு படத்தில் கண்டுபிடிக்கிறார். எப்படி பட்ட மைக்கிராஸ்கோப் அது?,  டி.என்.ஏ ஸ்ட்ரெக்சரை, காட்டுகிறது என்று சொன்னால் x-ray crystallography செய்யும் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும், செய்வாரா Mr. A. R. முருகதாஸ் அவர்கள்?

தன்னுடைய தந்தை வெறும் டெலஸ்கோப் வைத்துகொண்டு, வைரஸ் பரவுவதை தசாவதாரம் படத்தில் காணுவதை விட ஸ்ருதிஹாசன் செய்வது பரவாயில்லை என்றாலும், எப்படி எல்லாம், அறிவியல் கண்டுபிடிப்புகள் தமிழ் சினிமாவில் நகைப்புக்குள்ளாக படுவது நினைத்து கடுப்பை கிளப்புகிறது.