Showing posts with label கலாச்சாரம். Show all posts
Showing posts with label கலாச்சாரம். Show all posts

Wednesday, March 4, 2015

மேலை நாடுகளில் வாழும் இந்திய பெண்கள் சந்திக்கும் கலாச்சார மாற்றங்கள்


நீங்கள் மேலை நாடுகளில் வசிக்கிறீர்கள் அதுவும் மேலை நாடுகளில் மேல்படிப்பு படித்தவர் என்றால் கட்டாயம் இதனை அனுபவித்து இருப்பவர்கள்.

இது பலருக்கும் நடந்திருக்கும், நமக்குதெரிந்தவர் உதாரணமாக உங்கள் பாஸ் என்று வைத்து கொள்ளுங்கள் அவரை சந்திக்கும் போது  கட்டி பிடித்தல் சகஜம் அது இவர்களின் கலாச்சாரம். அதே சமயம் தெரியாதவர் என்றால் சந்திக்கும் போது கை கொடுத்தல் மிக சகஜம். உங்களுக்கு  எதாவது நல்லது அல்லது கெட்டது என்று எது நடந்தாலும் இப்படி வந்து கட்டி பிடித்து ஆறுதல் சொல்வார்கள் அல்லது வாழ்த்துவார்கள். இன்னும் சில நாடுகளில் அதுவும் ஐரோப்பிய நாடுகளில் கன்னத்தில் முத்தம் கொடுப்பார்கள். இதெல்லாம் எப்படி செய்யலாம், மாட்டேன் என்று சொல்ல முடியாது. உடனே "unfriendly" என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

இதனையும் அனுபவித்து இருக்கலாம், யாரையும் பார்க்கும் போது ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். தெரிந்தவர் தெரியாதவர் என்று எந்த வித்தியாசமும் இருக்காது. நீங்களும் பதிலுக்கு சிரிக்க வேண்டி வரும். நீங்கள் ஜாகிங் செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அப்போது எதிரில் உங்களை போல ஜாகிங் செய்து கொண்டு வருபவர் உங்களை பார்த்து ஹாய் அல்லது குட் மார்னிங் சொன்னால் நீங்களும் சொல்ல வேண்டி வரும், அவர் யாரெண்று கூட உங்களுக்கு தெரியா விட்டாலும், இல்லாவிட்டால் நீங்கள் rude என்று சொல்லி விடுவார்கள்.

அதே போல நீங்கள் கீழே விழுந்து விடீர்கள் என்றாலும் உடனே வந்து உங்களை தொட்டு தூக்குவார்கள், உடனே "யார் நீ, என்னை தூக்க " என்று சண்டை போட முடியாது .  எப்போது டின்னெர் அல்லது பார்ட்டி என்றாலும் ஆண்களும் பெண்களும் பீர் அல்லது வைன் குடிப்பார்கள், நீங்களும் குடிக்கிறீர்களா? என்று கேட்பார்கள், இதென்ன பொம்பளை கிட்ட இப்படி கேட்குறீங்களே? என்று நீங்கள் கேட்க முடியாது . ஒரு success பார்டி அல்லது கல்யாணம் என்று சென்றாலும்  உடனே ஷாம்பெயின் ஓபன் செய்வார்கள், நமக்கும் குடுப்பார்கள், நீங்கள் குடிக்கவிட்டலும், கிளாஸ் ஐ வாங்கி டோஸ்ட் செய்ய வேண்டும், இல்லையேல் மரியாதை குறைவாக நினைப்பார்கள்.

வெளி நாடுகளில் வந்து படிக்கும் சிலர் அனுபவிப்பது இது. நீங்கள் இங்கு இருக்கும் பலரையும் உங்களுக்கு வெளிநாட்டு மக்களுடன் பழக வேண்டும் என்றால் அவர்களுடைய சினிமா, விளையாட்டு, மியூசிக், அரசியல், சமையல் என்று ஒவ்வொன்றாக கற்று கொள்ள வேண்டும், அப்பொழுது தான் அவர்களுடன் பேச பழக இயலும் .

என்னை போன்று ஒரு கட்டுபெட்டியான குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அதுவும் மேல்படிப்புக்கு என்று வந்தவர்கள் இதனை  போன்ற ஒரு விசயத்தை பெரிய ஷாக் ஆக்கி பார்பவர்கள். ஆனால்நாட்கள் செல்ல செல்ல  நீங்களும் இந்த பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக உங்களை அறியாமல் பழகி இருப்பீர்கள்.

உதாரணமாக, பெண்கள் அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் பல  பொட்டு வைப்பது, விபூதி இடுவது, கல்யாணம் ஆனவர் என்றால் மெட்டி அணிவது, தாலி அணிவது என்பதெல்லாம் இருபதில்லை.எனக்கு தெரிந்தே வேலைக்கு செல்லாத  நிறைய பெண்களும் இப்போது தாலி அணிவதில்லை. திருட்டு பயம் என்று காரணம் சொல்கிறார்கள் என்றாலும் இது சாதரணமாகி விட்டது.தாலிக்கு  பதில் மோதிரம் அணிந்து கொள்கிறார்கள், இங்குள்ளவர்கள் போல.
நிறைய இந்திய பெண்கள் பார்ட்டி என்றால் வைன் அருந்துகிறார்கள். சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கொள்கிறார்கள், ஆண் பெண் வித்தியாசம் இன்றி.

இந்திய உடைகளை உடுத்துவது என்பது மிக குறைந்து விட்டது . இப்போதெல்லாம் சுடிதார் கூட உடுத்துவது இல்லை, எப்பொழுதும் மேலை நாட்டு உடை தான். புடவை உடுத்துவது என்பது பார்ட்டிக்கு செல்லும் போது அல்லது கோவிலுக்கு போகும் பொது என்றாகிவிட்டது. இதெல்லாம் நம்மையும் அறியாமல் நடக்கும் மாற்றங்கள். எது நமக்கு சவுகரியமோ அதனை உடுத்தி கொள்கிறோம்.
ஏனெனில் ஐரோப்பிய நகரங்களில் இந்திய உடையுடன் சுற்றினால் எப்படி நம்மை வேடிக்கை பார்பார்கள் என்பதை நான் அனுபவித்து இருக்கிறேன். அமெரிக்காவில் இந்தியர்கள் நிறைய இருப்பதால் இந்திய உடை அணிதாலும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஆனால் ஐரோப்பாவில் கட்டாயம் வேடிக்கை பார்ப்பார்கள்(என்னுடைய 10 வருடங்களுக்கு முந்தைய அனுபவம் இது, இப்போது மாறி இருக்க வாய்ப்பு இருக்கிறது). ஆனாலும் இன்றும் அமெரிக்காவில் இந்திய உடையுடன் ஆபிசுக்கு வந்தால் எல்லாரும் கட்டாயம் உங்களை வேடிக்கை பார்பார்கள்.


இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமல் மாறிய நாம், இந்தியாவிற்கு செல்லும் போது நம்மை மறுபடியும் re tune செய்து கொள்ள வேண்டி வரும். உதாரணமாக, படித்து கொண்டிருந்த போது,  நான்   விடுமுறைக்கு என்று சென்ற போது மதுரை ஏர்போர்ட்டில் என்னைபார்த்த என் அப்பா, "இது மதுரை மா, பான்ட் ஷர்ட் எல்லாம் போடாத, எல்லாரும் ஒரு மாதிரி பார்பாங்க" என்று சொன்னது இன்னும் நினைப்பு இருக்கிறது. இதற்காக பிரான்க்பார்தில் இருந்து விமானம் ஏறும் முன் நான் உடை மாற்றி கொண்டு வர இயலாது. எல்லாரையும் பார்த்து சிரித்து பழகி இருந்த நான், அங்கு ஒரு ஆட்டோ டிரைவரை பார்த்து சிரிக்க அந்த ஆள் என்னை ஒரு மாதிரி நினைத்து விட்டார். பின்னர் நான்  தவறை உணர்ந்து முகத்தை கடுப்பாக்கியது வேறு கதை. அதே போல தெரிந்தவர்களை பார்க்கும் போது  இங்கேபழகியது  போல கட்டி பிடிக்க முடியாது. அங்கே கட்டி பிடிப்பது என்றாலே பாலியல் சார்ந்த ஒரு வார்த்தை.  அதே போல யாராவது விழுந்தால் ஓடிபோய் தூக்குவது, அனைத்திற்கும் நன்றி சொல்லுவது, சாரி சொல்லுவது, என்று செய்து கொண்டிருப்போம்.

இப்படி எல்லாம் நம்மையும் அறியாமல் நாம் கற்ற பழக்கவழக்கங்கலால்  நாம் கலாச்சாரத்தை மறந்தவர்கள் ஆகிவிடுவோமா? என்னை பொறுத்த வரை, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் செய்யும் எந்த விசயங்களும் நல்லதே. மாற்றங்கள் என்பது மாறாதது, இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில  ஆண்டுகளில் இந்தியாவில் கூட இவை பெரிய விசயமாக இருக்காது.  நாம் தான் அந்த மாற்றங்களை பழகி கொள்ள வேண்டும்.

நன்றி


Saturday, September 10, 2011

இந்திய, மேற்கத்தைய கலாச்சாரம்: சில பார்வைகள்


நேற்று இரவு "As good as it gets" என்ற ஒரு ஆங்கில படம் பார்க்க நேர்ந்தது. பதிவுலகில் அப்பப்போ நடக்கும் லிவ்விங் டுகெதெர் கலாச்சாரம் குறித்த சண்டைகள் நினைத்து, எனக்கு அந்த படம் பார்த்தவுடன் எதோ தோன்றியது போல இருந்தது. அதன் விளைவே இந்த இடுகை.


அந்த படத்தில் ஒரு குழந்தையுடன் கஷ்டப்படும் Single mom ஆக "ஹெலன் ஹன்ட்" நடித்திருப்பார். (சிங்கிள் வுமன் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு திருமணம் ஆகி விவாகரதானவர்களோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமலே குழந்தை பெற்ற பின்பு பாய் பிரெண்ட் விட்டு விட்டு சென்றிருப்பான், அல்லது கணவன் இறந்திருப்பார், இப்படி எந்த பிரிவில் இருந்தாலும் தனியாக குழந்தையை கவனித்து கொள்ளும் அம்மா சிங்கள் மாம் அன்று அழைக்கப்படுகிறாள்)


தன் வயதான தாயையும் கவனித்து கொண்டு தன் நோயாளி மகனையும் கவனித்து கொண்டு ஒரு ஹோட்டலில் சர்வர் ஆக வேலை பார்பார் ஹெலன். தன் கஷ்ட நிலையை கொஞ்சமாவது புரிந்து கொள்ளும் ஒரு பாய் பிரெண்ட் கிடப்பானா என்று தன் தாயிடம் அவள் அழுவாள். ஆனால் அவளிடம் பாய் பிரெண்ட் ஆக வருபவர்கள் அவள் உடலுக்காக மட்டுமே வருவார்கள். கடைசியில் எப்படி அவள் ஜாக் நிகோல்சனின் அன்பை புரிந்து கொள்கிறாள் என்று படத்தில் காட்டி இருப்பார்கள்.


எனக்கு தெரிந்து, படிக்கும் காலத்திலும் சரி வேலை பார்க்கும்காலத்திலும் சரி நிறைய மேற்கத்திய கலாச்சாரத்தை சேர்ந்த பல தோழிகள் தனக்கு நல்ல பாய் பிரெண்ட் கிடைப்பதில்லை என்று கூறியதை கேட்டதுண்டு. அப்படியே நல்ல பாய் பிரெண்ட் கிடைத்தாலும் அவர் திருமணம் செய்து கொள்ள தயங்குகிறார் என்றும் கூறுவதுண்டு. மேற்கத்திய கலாசாரத்தில் commit செய்து கொள்ள அதாவது திருமணம் செய்கிறேன் என்று வாக்கு கொடுக்க ஆண்கள் தயங்குவதுண்டு. திருமண நாளில்e கூட நிறைய ஆண்கள் மனம் செய்து கொள்ளாமல் ஓடி விடுவதுண்டு அதனை cold feet என்று அழைப்பார்கள். என்னுடைய முந்தய பாஸ் ஒரு பெண், நல்ல தோழி போல பழகுவார், அவருக்கு கிட்டத்தட்ட நாற்பது வயதாகிறது. ஆயினும் இன்னும் வாழ்கையில் செட்டில் ஆக முடியவில்லையே என்று ஒரே கவலை அவருக்கு. என் என்றால் அவர் இஷ்டம் போல ஒரு பாய் பிரெண்ட் ம் கிடைக்கவில்லை. அவருக்கு கிடைத்த ஒரு பாய் பிரெண்ட் ஒரு நாள் காலையில் எழுந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டான் என்று சொல்லி அழுது இருக்கிறார்.

நான் இதுவரை சந்தித்த பெண்கள் வாழ்கையில் ஒரு செக்யூரிட்டி தேடுபவர்கள். தனக்கும் ஒரு குடும்பம் குழந்தை என்று வேண்டும் என்று நினைப்பவர்கள். ஆயினும் பலருக்கு அது அமைவதில்லை. தெரிந்து திருமணம் செய்து டைவெர்ஸ் ஆன பல சிங்கள் மாம்கள் பலரை பார்த்திருக்கிறேன். அவர்கள் சாப்பிட, குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்றே தீர வேண்டிய கட்டாயம். தன் குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டிய கட்டாயம்.

என் நல்ல தோழி ஒருத்திக்கு ஒரு பழக்கம் உண்டு, எதாவது துணி வாங்க போனால் எல்லா துணிகளையும் போட்டு பார்க்கும் பழக்கம் உள்ள அவள் திருமண உடை போன்று இருக்கும், வெள்ளை ஆடைகளை மட்டும் அணிந்து பார்க்க மாட்டாள். அவளை பொறுத்த வரை திருமண ஆடைகளை ட்ரை செய்தால் திருமணமே நடக்காது நல்ல பாய் ஃப்ரெண்ட் கிடைக்காது என்ற மூட நம்பிக்கை அவளுக்கு.

நான் சந்தித்த இவர்கள் எல்லாம் எனக்கு அந்த திரைப்படம் பார்த்தவுடன் ஞாபகம் வந்தனர். அவர்கள் இவ்வாறுசொல்லும் போதெல்லாம் பரவாயில்லை நம்ம கலாசாரத்தில் இந்த பிரச்சனை எல்லாம் இல்லைப்பா, “அம்மா அப்பா பார்த்து ”வைப்பாங்க என்று ஏனோ எனக்கு தோன்றி தொலைக்கும்.

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் போல.


Monday, March 22, 2010

Difference Between American and British Culture




எனக்கும் ஒரு personal experience உண்டு. ஒருமுறை ஒரு பிரிட்டிஷ் receptionist அம்மாவிடம் ஒருவர் பற்றி enquire செய்தேன். அந்த அம்மா எதோ சொன்னது அந்த pronunciation எனக்கு புரியவில்லை. உடனே சாரி மா "I dont understand" என்று சொன்னேன். உடனே அந்த அம்மா எனக்கு ஊமை பாஷை போல கைவிரல்களை ஆட்டி எதோ சொல்ல ஆரம்பித்தது. எனக்கு சரி கடுப்பு, புரியலைனா மெதுவா சொல்லணும், அதை விட்டுட்டு இப்படியா செய்யிறது.

Friday, February 26, 2010

மொழியும், இந்திய கலாச்சாரமும்

முதல் முதலாக நான் இங்கு பல்கலைகழகத்தில் சேர்ந்த போது என்னுடன் வேலை செய்த ஒருவரின் குடும்ப பெயர் Ramkissan. அட இந்தியர் பெயர் போல இருக்கே! என்று விசாரித்த போது அவர் westindies தீவுகளில் ஒன்றான Trinidad-Tobago நாட்டை சேர்ந்தவர் என்று தெரிந்தது. பார்த்தால் இந்தியர் போல அல்லாமல் கறுப்பினத்தவர் போல இருந்தார்.

அவருக்கு எப்படி இந்திய குடும்ப பெயர் வந்தது என்று கேட்ட போது அவர் தன்னுடைய மூதாதையர்கள் இந்தியாவில் இருந்து அடிமைகளாக, வேலைகாரர்களாக பிரிட்டிஷாரால் அழைத்து வரப்பட்டவர்கள் என்றும் ( 19th century ஆரம்பத்தில் ) அதன் பின் trinidad இல் settle ஆகி விட்டதாகவும். இந்தியாவுடனான தங்கள் தொடர்பு எப்போதோ அற்றுவிட்டதாகவும், இப்போது அவருக்கு இந்தியாவில் யாரையும் தெரியாது என்றும் கூறினார். ஹிந்தி யிலும் ஓரிரண்டு வார்த்தைகள் தவிர எதுவும் பேச தெரியவில்லை என்றாலும் பேசுவதை கொஞ்சம் புரிந்து கொள்ள முடியும் என்றார். தன்னுடைய சிறு வயதில் அமிதாப் பச்சன் படங்கள் பார்த்ததாகவும் சொன்னார்.

சுமார் 200 ஆண்டுகள் இந்தியாவை விட்டு புலம் பெயர்ந்து வேறு நாட்டை தனதாக்கி கொண்டாலும் இன்னும் இந்திய வம்சாவளியினர் தாங்கள் என்று சொல்ல பெருமை படுவதாகவும் சொன்னார். அதற்கு பின்னர் இலக்கியத்திற்கு நோபல் பரிசு பெற்ற திரு V.S.நைபால் அவர்களும் Trinidad-Tobago வில் உள்ள இந்திய வம்சாவளியினர் என்றும் கூறினார். அவர் கூறிய நிறைய விஷயங்கள் எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

எதற்கு இப்போது இதனை நினைவு கூர்கிறேன் என்றால், நேற்று எங்களுடைய நெருங்கிய வடநாட்டு நண்பர் தன் புது மனைவியுடன் விருந்துண்ண எங்கள் வீட்டிற்க்கு வந்திருந்தார். எங்கள் நண்பரின் மனைவி மும்பையில் பிறந்து வளர்ந்த வடஇந்திய பெண் என்றாலும் ஹிந்தியை விட ஆங்கிலம் நன்றாக பேசினார். எங்கள் நண்பர் இங்கே சுமார் 25 வருடங்களாக படித்து வேலை பார்த்து வந்தாலும் அவர் சுத்தமாக ஹிந்தி பேசினார். மேலும் எங்கள் நண்பர் தன் மனைவி பேசும் ஹிந்தியை கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த போது வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியினர் எப்படி தங்களின் மொழியையும், கலாச்சாரத்தையும் விடாமல் பாதுகாக்கிறார்கள் என்று எண்ணி ஆச்சரியமும், இந்தியாவில் அதுவும் மெட்ரோ நகரங்களில் வாழும் மக்கள் ஆங்கில மோகம் கொண்டு தங்கள் தாய் மொழியை கற்காமல் ஆங்கிலமும் தெரியாமல் ரெண்டும் கெட்டானாக இருப்பது குறித்து வேதனையும் அடைந்தேன்.

பி.கு : பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது.
என் நண்பர் ஒருவர் அனுப்பிய you tube video

http://www.youtube.com/watch?v=tgSienhtm3o