Showing posts with label வியாபாரம். Show all posts
Showing posts with label வியாபாரம். Show all posts

Friday, November 20, 2015

குறைந்த சேதாரம், கூலி என்னும் நகைக்கடைகளின் ஏமாற்று வேலை!


சிறு வயது முதல் நகை தொழில் செய்பவர்கள் அருகில் இருந்து இருக்கிறேன். எங்கள் குடும்பத்தில் சிலரும் இந்த நகை செய்யும் வேலையில் இருந்து இருக்கிறார்கள் என்பதால் நகை எப்படி தங்கத்தில் இருந்து செய்யபடுகிறது என்பது குறித்த சில அடிப்படை விஷயங்கள் எனக்கு தெரியும். எப்பொழுதெல்லாம் பெரிய பெரிய நகை கடை காரர்கள் குறைந்த சேதாரம், 0% சேதாரம் என்று கூவி கூவி விற்கும் போது எல்லாம் அடபாவிங்களா எப்படி எல்லாம் ஏமாத்துறீங்க என்று நினைப்பது உண்டு. முகநூலில் குடும்ப நண்பர் ஒருவர் ஷேர் செய்திருந்த தங்க நகை தொழில் குறித்த சில விசயங்களும், எப்படி சேதாரம் இல்லை என்று கூவும் நகை கடை காரர்களின் பம்மாத்து வேலைகளும் இங்கே. இது தங்க நகை செய்யும் நண்பர் ஒருவர் எழுதியது, அவரின் சம்மதத்துடன் இங்கே வெளியிடப்படுகிறது.
தேங்க்ஸ் டு கூகிள் இமேஜ்
இனியும் ஏமாறவேண்டாமே நண்பர்களே.....
ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு தொழில் ரகசியம் என்று இருக்கும், அது போலவே நகைதொழிலுக்கும் இருந்தது, ஆனால் இன்று சில நகைகடை விளம்பரங்களில், அடித்து நொறுக்கப்பட்ட சேதாரம் என்றும், எங்கள் கடையில் நகை வாங்கினால் ஆஹா மற்ற கடையில் வாங்கினால் ஸ்வாகா, எங்கள் கடையில் மட்டும்தான் நிறைய தங்கம் கொஞ்சம் செம்பு மற்ற கடையில் நிறைய செம்பு கொஞ்சம்தான் தங்கம், என்று பிரபலமான நடிகர் நடிகைகள் வைத்து விளம்பரம் செய்து மக்களை தன்னுடைய மாய வலைக்குள் சிக்க வைக்கின்றனர்,
இப்படிப்பட்ட விளம்பரங்களை பார்த்து அந்த பெரிய கடையில் போய் நகைகள் வாங்கி, தன் தோழியருடன் ஏய் நேற்று நான் அந்த கடையில் இந்த நகைவாங்கினேன்டி, ஏய் இந்த கடையில் அந்த நகை வாங்கினேன்டி, சேதாரம் ரொம்ப கம்மியா தர்றாங்க, என்று பெருமையாக ஏமாந்து வரும் மக்கள் அதை பெருமையாக சொல்வதை கேட்கும் போது குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளின் தரத்தை பற்றி சிந்திப்பதில்லை, எனவே சில உண்மைகளை உடைத்து காட்டவேண்டிய காலக்கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது,
தங்க நகை எப்படி செய்யபடுகிறது?
முதலில் தங்கத்தை உருக்கி, அதன் பிறகு அதை கம்பியாக்க, டை என சொல்ல படும் டிசைன் வடிவம் அமைக்க, அதன் பிறகு அந்த மாடலுக்கு ஏற்ற மாதிரி வடிவமைத்து, பிறகு பாலிஷ் போட, கட்டிங் செய்ய, கல் வைக்க, என எல்லா வேலைகளையும் முடித்து, ஹால் மார்க் முத்திரை பதித்து என ஒரு நகை செய்து முடிக்க கிட்டத்தட்ட பத்து தொழிலாளர்களின் பட்டறை சென்று வர வேண்டியது இருக்கின்றது, இந்த அனைத்து வேலைகள் செய்யும் தொழிலாளிக்கும் சேதாரம் மற்றும் கூலி பகிர்ந்து கொடுக்க வேண்டும்,
உங்களிடம் வாங்கும் சேதாரத்தில் இவ்வளவு வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்றால், விளம்பரத்தில் சொல்லப்படும் 3சதவிகித அல்லது 4சதவிகித அல்லது 5சதவிகித சேதாரத்தில் செய்து விட நிச்சயமாக முடியாது, ஏன் என்றால் எந்த நகைதொழிலாளியும் கூலி சேதாரம் இல்லாமல் வேலை செய்து கொடுப்பதில்லை.
ஹால் மார்க் 916 நகைகள் என்றால் என்ன? 
ஒரு நகையின் தயாரித்து முடித்த பிறகு அந்த நகையிலிருந்து சிறு பகுதியில் வெட்டி அதனை உருக்கி சோதனை செய்து அந்த தங்கத்தின் தரம் 91.60 எனப்படும் ஹால் மார்க் தரத்தில் இருக்கிறதா என அறிந்து, அதன் பின்பு இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட முக்கோண மற்றும் 916 என்ற முத்திரையை லேசர் ஒளிக்கதிர் கொண்ட கருவியால் பதிக்கச்செய்த நகைகள் மட்டுமே உண்மையான ஹால் மார்க் நகை, மேலும் ஹால் மார்க் தரத்தில் ஒரு நகை தயாரிக்க வேண்டும் என்றால் ( 10 கிராம்) சொக்கத்தங்கத்தில் ( 800 மில்லி கிராம்) செம்பு மட்டுமே கலவையாக சேர்க்கவேண்டும், மேலும் ஒரு நகை தயாரிக்க வேண்டும் என்றால் அதை ஒரு நகைதொழிலாளி மட்டுமே செய்து விட முடியாது,
இப்போது சிந்தித்து பாருங்கள் குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகள் உண்மையான நகையாக இருக்க முடியுமா என்றால் கிடையாது என்பதுதான் உண்மை,
இதையும் மீறி நாங்கள் சோதனை செய்து பார்த்தோம் சரியாகத்தான் இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் பெரிய கடையில் குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கிய நகையை மீண்டும் திரும்ப கொண்டுசென்று கொடுத்து இந்த நகையை விற்க வேண்டும் பணம் தாருங்கள் என்று கேட்டு பாருங்கள் நிச்சயமாக பணம் தர மாட்டார்கள் இந்த நகையை தந்து வேறு நகை மட்டுமே எங்கள் நிறுவனத்தில் வாங்க முடியும் பணம் தர மாட்டோம் என்பதுதான் பதிலாக வரும், இதுதான் அவர்கள் தொழில் தந்திரம், பெருமையாக ஏமாந்து கடையை விட்டு வெளியே வருவோம்,
ஞாயமான சேதாரம் கொடுத்து வாங்கும் நகைகளுக்கும், குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளுக்கும் உள்ள வித்தியாசம் சொல்கிறேன் கேளுங்கள்,
ஞாயமான சேதாரம் கொடுத்து வாங்கும் நகைகளில் உள்ள கல் மற்றும் பாசி எடை கழித்து தரப்படும், நீங்கள் வாங்கும் ஹால் மார்க் நகைகள் ஏதாவது பணதேவைகளுக்காக விற்க போகும்போது அன்றைய மார்க்கெட் விலைக்கு பணமாக தரப்படும். கல் நகைகளில் கல்லிற்கான பணத்தை வாங்கி கொண்டு, கல் எடையை முற்றிலும் கழித்து தரப்படும், 10 கிராம் சுத்தமான தங்கத்தில் 800 மில்லி கிராம் செம்பு என்ற சரியான கணக்கில் சேர்க்கப்படுகிறது,
இனி குறைந்த சேதாரத்தில் நீங்கள் வாங்கும் நகைகளை பார்ப்போம்,
கல் மற்றும் பாசி எடை கழித்து தரப்படுவதில்லை கல் பாசி எடை உங்களிடம் தங்கத்திற்கான பணமாக வசூல் செய்து ஏமாற்ற படுகிறீர்கள், நீங்கள் வாங்கும் நகையை திரும்ப கொடுத்து நகையாக மட்டுமே வாங்க முடியும் பணமாக வாங்க முடியாது, 10 கிராம் சுத்தமான தங்கத்தில் 800 மில்லி கிராம் செம்பு என்ற சரியான கணக்கில் சேர்க்கப்படுவது இல்லை, ஒரு வேளை நீங்கள் வெளியில் எங்காவது சோதனை செய்து கண்டுபிடித்து அந்த கடையில் போய் உங்களிடம் வாங்கிய நகையின் தரம் குறைகிறது என்று கேட்டால் கூட அங்கே மழுப்பலான பதிலும் இதை வெளியே சொல்லாமல் இருக்க எவ்வளவு பணம் வேண்டும் என்ற கேள்விதான் பதிலாக வரும்,
இப்போது உங்களுக்கு அந்த விளம்பர படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் வந்தா நஷ்டத்தை தருவார்கள்?
எனவே குறைந்த சேதாரம் என்று போய் ஏமாற வேண்டாம், ஞாயமான சேதாரம் கொடுத்து நகைகள் வாங்கி தரமான தங்கத்தை வாங்கி செல்லுங்கள்.

Friday, August 21, 2015

சில மூளை சலவை விளம்பரங்களும் வரலாறும்!

"நீரின்றி அமையாது உலகு" என்பது பழைய மொழி. "விளம்பரங்கள் இன்றி அமையாது உலகு" என்பது புது மொழி. சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து உபயோக்கிக்கும் டாய்லெட் பேப்பர் வரை. தலைக்கு உபயோக்கிக்கும் சீப்பில் இருந்து காலுக்கு அணியும் செருப்பு வரை எல்லாமே விளம்பரம். 

இது இந்தியாவில் உலகமயமாக்கலுக்கு பின்பு தான் வந்த நுகர்வோர் கலாச்சாரம், அதற்க்கு முன்பு இல்லை இல்லை என்று சொல்லவே முடியாது. என் சிறு வயதில் பார்த்த தூர்தர்ஷன்  ஒளியும் ஒலியும் இல், பாடல்கள் வருவதற்கு முன்பு கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் விளம்பரம் தொடர்ச்சியாக பார்த்து இருக்கிறேன். அதே போல, ஞாயிற்று கிழமை படத்திற்கு முன்பும், இடைவெளியின் போதும் நிறைய பார்த்து இருக்கிறேன். 

சொல்ல போனால் விளம்பரங்கள் பழைய காலத்தில் இருந்தே பத்திரிக்கைகளில் வந்து இருக்கின்றன. சாவித்திரி, ஹேமா மாலினி காலத்து லக்ஸ் விளம்பரங்கள் அந்த கால பத்திரிக்கைகளில் தவறாமல் இடம் பிடித்து இருக்கின்றன. என் சிறு வயதில் எந்த திரைப்படம் சென்றாலும் அங்கு லிரில் சோப்பு மற்றும் சிந்தால் சோப்பு விளம்பரம் பார்த்து இருக்கிறேன்.

 

அதனால் விளம்பரங்கள் இந்திய உலக மயமாக்கலுக்கு பின்பு  வந்தவை அல்ல.


 ஆனால், மேற்கத்திய நாடுகளில் ஒரு சில விசயங்களை விளம்பர படுத்த என்று மக்களின் குணாதிசயங்கலுடன் தொடர்பு படுத்த பட்டு  மக்கள் மனதில் பதிய வேண்டும் என்று விளம்பர படுத்த பட்டு இருக்கின்றன. மக்கள் இதனை உபயோகிப்பது ஸ்டேடஸ் சிம்பல் என்று  மறைமுகமாக மூளை சலவை செய்ய பட்டு இருக்கிறார்கள்.

இதற்க்கு சிறந்த இரண்டு உதாரணங்கள் இங்கே காணலாம்.

புகையிலை, சிகரெட் புகைத்தல் 

முதலாம் உலகப்போர் முடிந்த தருவாயில் அமெரிக்கா எங்கும் ஒரு விளம்பரங்கள் வந்தன. அவை சிகரெட் புகைப்பதை பற்றியது. சிகரெட் புகைப்பது ஆண்மையின் அடையாளமாக சித்தரிக்க பட்டது. அனைவர் கையிலும் சிகரெட்டுகள், சினிமா நடிகர்கள் முதல், குடியரசு தலைவர், போர் முனையில் இருக்கும் வீரர்கள் என்று அனைவர் கையிலும் சிகரெட்டுகள். அது புகைக்காதவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று மெதுவாக மூளை சலவை செய்யபட்டார்கள்.


 அதே போல 70 களில் பெண்கள் இயக்கம் சம உரிமை பிரச்னை எழுந்தபோது பெண்கள் தங்களை ஆண்களுடன் சமமாக காட்டி கொள்ள என்று புகை பிடித்தலை கை கொண்டனர்.


புகை பிடித்தால் அவர்கள் தைரியசாலிகள் என்று மூளை சலவை நடந்தது. அதன் பின்னர் சிகரெட்டு விற்பனை விண்ணை தொட்டது.

இதே போன்ற ஒரு விளம்பரங்கள் மறை முகமாக இந்திய மண்ணிலும் விதைக்க பட்டன. அதுவும் சினிமா நடிகர்கள் மூலம். 70-80 களில் வந்த படங்களில் எல்லாம் சிகரெட்டு கையில் வைத்திருக்காத நடிகர்களை காண இயலாது. அதற்க்கு முன்பு வந்த படங்களிலாவது கதாநாயகன் புகை பிடிப்பவனாக அதிகம் இருக்க மாட்டார். ஆனால் இந்த காலத்தில் புகை பிடித்தல் ஆண்மை அடையாளம் என்று மாற்ற பட்டது.



இதே நிலை பின்னர் வந்த நடிகர்களிடமும் தொடந்தது,. இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது

எப்படி விளம்பரங்கள் மக்களை மூளை சலவைசெய்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் மட்டுமே.


வைரங்கள்

இரண்டாவது உதாரணம், வைரங்கள்.

உலகம் எங்கும் பின்பற்ற படும் ஒரு கலாச்சாரம் இது. ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தன்  காதலை சொல்லி என்னை கல்யாணம் செய்து கொள்ளுகிறாயா என்று கேட்பதற்கு முன்பு அந்த பெண் முன்பு முட்டியிட்டு கையில் ஒரு வைர மோதிரத்துடன் "Will you marry me?" என்று வேண்ட வேண்டும்.

தற்போது இந்தியாவிலும் இது சினிமாக்கள் மூலம் பிரபல படுத்த படுகிறது. முக்கியமாக வைர மோதிரம் இல்லாமல் என்கேஜெமென்ட் இல்லை. இது எப்படி அறிமுகபடுத்த பட்டது. ஒரு ஸ்டாண்டர்ட் ஆனது.

1914 இல் "A diamond is forever" என்ற பிரசாரங்கள் N.W.Ayer & son என்னும் விளம்பர கம்பெனியால் ஆரம்பிக்க பட்டன.

மர்லின் மன்றோ வை வைத்து, "Diamonds are girls best friends" என்னும் பிரச்சாரம் ஆரம்பிக்க பட்டது.


இவர்களின் ஒவ்வொரு வாசகமும், வைரங்கள் மட்டுமே காதலின் உண்மையான பரிசு, எந்த ஒரு காதலும் வைரங்கள் இல்லாமல் முழுமை அடையாது. என்று பிரபல படுத்த பட்டது. இப்படி மூளை சலவை செய்யப்பட்ட பின்னர், தற்போது propose செய்ய விரும்பும் அனைவரும், தங்களால் முடிகிறதோ இல்லையோ, ஒரு வைரத்தை வாங்கி பெண்ணின் முன் மண்டியிட்டு என்னை கல்யாணம் செய்து கொள் என்று கேட்டு கொண்டு இருகிறார்கள். அது பெரிய விசயமாகவும் பேச படுகிறது.

இந்தியாவில் வைரங்களுக்கு இன்னும் அவ்வளவு மவுசு கூட வில்லை என்றாலும், நகை கடை விளம்பரம் இல்லாத பத்திரிக்கை, டிவி, இன்டர்நெட் விளம்பரங்கள் பார்க்கவே முடியாது.

இன்னும்  சில மூளை சலவை விளம்பரங்கள் இருப்பினும் உதாரணமாக "fair and lovely" போன்றவை இருப்பினும். பதிவின் நீளம் கருதி இதோடு முடித்து கொள்ளுகிறேன்.

நன்றி.


Thursday, March 13, 2014

காசு, பணம் துட்டு, மணி மணி !

முகநூல், டுவிட்டர், பதிவுலகம், யுடூப், வாட்'ஸ் அப், இன்ஸ்டா கிராம் ... என்று என்னென்ன இருக்கிறதோ அவற்றில் எல்லாம் என்ன நடக்கிறது. சண்டை.., நீ நான் என்ற போட்டி. ஒரு லைக் வாங்குவதற்காக எந்த நிலைக்கும் அளவுக்கும் செல்லும் மனிதர்கள். இவை தான் தற்போது ஒரு பக்கம் இருக்கும் சாதாரண
மனிதர்களின் பக்கம்.
 
 



இப்போது இந்த பக்கத்தை விட்டு விட்டு அடுத்த பக்கத்திற்கு வாருங்கள். அது இப்படி சமூக வலைத்தளங்களே வாழ்க்கை என்றிருக்கும் மக்களை பணச்சுரங்கமாக மாற்றும் அடுத்த பக்கம். இவர்களின் முதலீடு நீங்கள் தான். உங்களின் ஒவ்வொரு அசைவையும் இவர்கள் கவனிக்கிறார்கள். நீங்கள் எந்த பக்கத்துக்கு அதிகம் செல்கிறீர்கள், எத்தனை தடவை செல்கிறீர்கள், என்ன வாங்குகிறீர்கள், அதனை பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன? எதனை பற்றி அதிகம் தேடுகிறீர்கள். உங்களுக்கு எத்தனை நண்பர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் எத்தனை? அவர்களுக்கு என்ன பிடிக்கிறது, அவர்கள் அதனை தேடுகிறார்கள், அவர்கள் என்ன வாங்குகிறார்கள், அதனை பற்றி என்ன சொல்கிறார்கள்......இப்படி உங்களை பற்றி அனைத்தும் சேகரிப்பது அவர்களின் முதல் வேலை. 

சரி, அடுத்து என்ன செய்கிறார்கள், உங்களிடம் இருந்து சேகரித்த விசயங்களை கொண்டு நீங்கள் இப்படித்தான் என்று ஒரு ப்ரொபைல் உருவாக்குகிறார்கள். அப்புறம் என்ன உங்கள் அனைத்து தளத்திற்கும் நீங்கள் கேட்காமலேயே விளம்பரங்கள் வந்து சேரும், நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் , பார்த்தாலும் பார்க்கவிட்டாலும்  கூட. எவ்வளவு அதிகமாக நீங்கள் சமூக வலை தளங்களை நீங்கள் உபயோகிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவர்கள் பணக்காரர்கள் ஆகிறார்கள். 

நாம் இங்கு நீ பெரியவனா, நான் பெரியவனா என்று முக நூலில் சண்டை போட போட , அவர்களுக்கு பணம் குவிகிறது.

இப்போது இருக்கும் வேலை வாய்ப்புகளில் அதிக பணம் சம்பளமாக கிடைப்பது "Data scientist" எனப்படும் வேலை தான். இவர்களின் வேலை என்னவென்றால் , இப்படி சமூக வலைத்தளம் அல்லது கூகுள் போன்ற தளங்களில் கிடைக்கும் பொது மக்களை பற்றிய செய்திகளை சேகரிப்பது மற்றும் அவர்களின் விருப்பு வெறுப்புகளை அறிவது உங்கள் ப்ரொபைல் உருவாக்குவது மட்டுமே.

அதனை கொண்டு, அதற்க்கு ஏற்ப விளம்பரதாரர்களை  அணுகுவது அல்லது விளம்பர தார்கள் இந்த பெரிய சமூக வலைத்தளங்களை அணுகுகிறார்கள். பின்பு, உங்களின் பலவீனம் அவர்களுக்கு காசு, பணம், துட்டு, மணி மணி தான்.



Sunday, April 4, 2010

வால்மார்ட்டும், ரங்கநாதன் தெருவில் இருக்கும் கடைகளும்

இது ஒரு சின்ன ஒப்பீடு.

வால்மார்ட்: Electronics, பாத்திரங்கள், துணிமணிகள், மளிகை, சாப்பாடு, பொம்மை, வீட்டுஉபயோக பொருட்கள்.... உலகத்தில் உள்ள அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் வால்மார்ட்.
ரங்கநாதன் தெரு கடைகள்: பாத்திரங்கள், துணிமணிகள், மளிகை, சாப்பாடு, பொம்மை, வீட்டுஉபயோக பொருட்கள், நகைகள் (ஜொலிக்குதே, ஜொலி ஜொலிக்குதே). அனைத்தும் கிடைக்கும் ஒரே இடம் ரங்கநாதன் தெரு.

வால்மார்ட்: இங்கு வாங்கும் துணி மணிகள் நன்றாக உழைப்பதில்லை என்றாலும் விலை குறைவாக இருப்பதால் அங்கு தான் நாம் வாங்குவோம்.
ரங்கநாதன் தெரு கடைகள்: இங்கு வாங்கும் துணி மணிகள் என்னதான் மட்டம் என்றாலும் அங்கு தான் நாம் வாங்குவோம்.

வால்மார்ட்: டீன் ஏஜ் பசங்கள் படிப்பு செலவுக்காக இங்கே வந்து வேலை பார்க்கின்றனர்.
ரங்கநாதன் தெரு கடைகள்: நெறைய டீன் ஏஜ் பசங்கள், குழந்தைகள் இங்கு வயிற்றுக்காக வேலை பார்க்கின்றனர்.

வால்மார்ட்: இங்கு வேலை பார்பவர்களுக்கு சம்பளம் என்று அவர்கள் கொடுப்பது மிக சொற்பம் (மணிக்கு $8), அவர்களுக்கு கிடைக்கும் benifits ம் மிக குறைவு. வேலை அதிகம்.
ரங்கநாதன் தெரு கடைகள்: இங்கு வேலை பார்ப்பவர்களுக்கு சோறு போட்டு தங்க இடம் கொடுத்து எவ்வளவு சம்பளமாக கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியாது. மிக மிக சொற்பம் என்பது மட்டும் உண்மை. வேலை அதிகம்.

வால்மார்ட்: இங்கு வேலை பார்ப்பவர்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று கூறப்படுவதுண்டு. அப்படி மீறப்படும் போதெல்லாம் பிரச்சனையை தவிர்க்க அந்த ஸ்டோர் ஐ மூட முயற்சிப்பார்கள்.
ரங்கநாதன் தெரு கடைகள்: மனித உரிமைகளா அப்படின்னா?


இந்த பதிவு நேற்று நான் பார்த்த அங்காடித் தெரு படத்தின் பாதிப்பு.