Showing posts with label படிப்பு. Show all posts
Showing posts with label படிப்பு. Show all posts

Tuesday, February 8, 2011

Researcher என்றொரு ஜந்து-2



ஏற்கனவே என்னுடைய முந்தய சில இடுகைகளில் ஆராய்ச்சி பட்டம் பெற முயற்சி செய்யும் பலர் படும் அவஸ்தைகளை பற்றி எழுதி இருந்தேன் பகுதி 1 , பகுதி 2, அந்த அவஸ்தைகளின் தொடர்ச்சியே இந்த இடுகையும்.

நேற்று நெடுநாளைக்கு பிறகு என்னுடைய நண்பர் ஒருவரை எதேச்சையாக சந்திக்க நேர்ந்தது. என்னுடைய ஜூனியர் அவர். இந்தியாவில் இருந்து இங்கு மேல்படிப்புக்காக வந்தவர். கிட்டதட்ட ஐந்து வருட இடைவெளியில் சந்தித்தால் எனக்கு ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறி இருந்ததாக தோன்றியது. பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டு பேசிகொண்டிருந்த போது "எப்போ கிராஜூவேட் ஆன? " என்று நான் கேட்டது தான் தாமதம் அவர் முகம் சுருங்கி எதோ போல ஆகி விட்டது. பின்னர் ஒருவாறு பேச்சை மாற்றி வேறு பேச்சு பேச ஆரம்பித்து விட்டோம்.

பின்னர் வேறு ஒரு நண்பர் மூலமாக நான் அறிந்தது இது தான். என்னுடைய நண்பர் படிப்பை தொடர்ந்த போது, அவருடைய பாஸ் அவருக்கு ஒரு புது உயிரினத்தை அதாவது அதிகம் ஆராய்ச்சிக்கு உட்படுத்தாத ஒரு உயிரினத்தை அவரின் ஆராய்ச்சிக்கு கொடுத்து இருக்கிறார். இது போன்று யாரும் ஆராய்ச்சி
செய்யாத உயிரினத்தை கொடுத்து ஆராய்ச்சி செய்ய சொல்லுவது ஒரு சூதாட்டம் மாதிரி. நல்ல ரிசல்ட் வந்தால் நல்ல மதிப்பு மற்றும் நல்ல ஜேர்னலில் ஆராய்ச்சி கட்டுரை என்று எல்லாம் நல்ல படியாக நடக்கும். மாறாக ஒன்றும் வரவில்லை என்றால் எல்லாமே ஆப்பு ஆகிவிடும்.

புது உயிரினம் அதனால் நல்ல எதிர்காலம் உனக்கு இருக்கிறதுஎன்று அவருடைய பாஸ் பிரைன் வாஷ் செய்து இருக்கிறார். இவரும் நம்பி இறங்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட உயிரினம் செயற்கையான லேப் சூழ்நிலையில் வளர மறுக்க.அவருக்குஅதனை எப்படி லேபில் வளர வைக்க என்று ஆராயவே அவருக்கு சில வருடங்கள் பிடித்திருக்கிறது. பின்னர் புது உயிரினத்தில் நடத்தப்படும் அடிப்படை சில டெஸ்டுகள் நடத்தி முடிக்க அவருடைய ஆராய்ச்சி காலமும் முடிந்திருக்கிறது, பின்னர் ஒரு வருடம் எக்ஸ்டென்ஷன் வாங்கி அவர் தொடர்ந்திருக்கிறார், சில பல புதிய ஆராய்ச்சிகள் செய்து முடிக்கும் தருவாயில் அவர் செய்தது போன்ற அதே ஆராய்ச்சிகள் வேறொறுவர் செய்து ஜர்னலில் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி இருக்கிறார். அதனை காரணமாக காட்டி அவருடைய ஆராய்ச்சி கட்டுரைகள் எங்கும் வெளியிட படவில்லை.

ஆராய்ச்சி கட்டுரை வெளியிடப்படாததால் அவருக்கு முனைவர் பட்டமும் கொடுக்கப்படவில்லை. இந்தியாவில் இருந்து ஸ்டூடண்ட் விசாவில் வந்ததால் அதுவும் முடிந்து விட்டு இருக்கிறது, இப்பொதைக்கு அவர் 5 வருடங்களுக்கு முன் எந்த நிலையில் இந்தியாவில் இருந்து வந்தாரோ அதெ போல வெறுங்கையுடன் இந்தியா திரும்ப வேண்டிய நிலை. இடையில் திருமணம் வேறு.

ஒரு ஆராய்ச்சி மாணவன் நல்ல படியாக தீசிஸ் எழுதி பட்டம் பெறுவது என்பது முழுக்க முழுக்க அவனது ப்ரோபாசர் கையில் இருக்கிறது. அவர் நல்லவராக அமைந்து விட்டால் எல்லாம் நல்லபடியாக இருக்கும், இல்லாவிட்டாலோ, எல்லாம் சர்வநாசம் ஆகிவிடும்.

Thursday, April 15, 2010

Researcher என்ற ஒரு ஜந்து-1

என்னுடைய முந்தய இதே தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதற்குள் இருக்கும் அவஸ்தையை எழுதி இருந்தேன், ஒருவர் முனைவர் பட்டம் பெற்ற பிறகு அவர் permanent வேலையில் சேர்வதற்குள் என்ன சந்திக்க நேரிடும் என்பதை குறிப்பிடுவது இந்த பதிவு.

இன்று, நான் பிரசவத்திற்கு முன் வரை படித்த/வேலை பார்த்த பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. எப்போதும் கலகலப்பாக என்னுடன் பேசும் நண்பர்கள் அனைவரும் இன்று ஏனோ பேசவில்லை. அங்கு இருக்கும் பலரிடம் எனக்கு நல்ல நட்பு உண்டு, இருப்பினும் ஏன் இப்படி நடந்து கொண்டனர், வேலை இருந்தால் ஒரு மாதிரி இல்லாவிட்டால் இப்படி தான் நடத்துவார்கள் என்று நினைத்து கொண்டேன்.

என்னுடைய பழைய பாஸ் ம் என்னவோ தெரியவில்லை, இதனை வேறு விதமாக சொல்லியே விட்டார்(ள்). அடுத்தவர்களுக்கு வேலை இருக்கிறது உன்னை போல இல்லை அல்லவே, என்று கிட்டத்தட்ட ஒவ்வொரு வார்த்தை முடிவிலும் கமெண்ட் போல சொல்லி கொண்டு இருந்தார்(ள்). இது ஒருவகையான சர்காஸ்டிக் விமர்சனம் தான் என்றாலும் அவர்களை பொறுத்தவரை குடும்பத்திற்காக career ஐ on - hold இல் வைத்திருப்பது என்பது stupid decision .

நான் அவர்களை குறை சொல்ல முடியாது. என்னுடைய பாஸ், திருமணம் ஆகாதவர். எனக்கு தெரிந்து ஆராய்ச்சி துறையில் இருந்து கொண்டு குடும்ப வாழ்கையிலும் ஈடுபடும் பெண்கள் மிக குறைவு. ஏனெனில் மற்ற துறைகளை போல அல்லாமல் ஆராய்ச்சி துறையில் அர்ப்பணிப்பு அதிகம் தேவைப்படும். டென்சன் அதிகம் உள்ள ஒரு துறை இது. அதனால் இந்த துறையில் உள்ள நெறைய பெண்கள் இதனாலேயே அதே துறையில் இருப்பவர்களை திருமணம் செய்து கொள்வர். இதனால் இருவருக்கும் ஒரே இடத்தில், ஒரே ஊரில் வேலை கிடைப்பது சுலபமாக இருக்கும் என்பதால்.

ஒருவர் முனைவர் பட்டம் பெற்ற பிறகு Tenure எனப்படும் permanent பேராசிரியர் வேலை கிடைப்பதற்கு அமெரிக்காவில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பாருங்கள்.

1 . முதலில் முனைவர் பட்டம் பெற வேண்டும் (Minimum 5-6 years)

2. முனைவர் பட்டம் பெற்ற பிறகு ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு வருடங்கள் ஒருவர் Postdoc எனப்படும் professor ஆவதற்கான தகுதி வேலை பார்க்க வேண்டும். அதில் அவர் எத்தனை ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுகிறார் என்பதை பொறுத்து அவரின் அடுத்த நிலையான Tenure - Track எனப்படும் ஒரு பதவி தரப்படும்.

3. Tenure - Track என்பது temporary professor மாதிரி. இந்த பதவி அவருக்கு ஒரு நான்கு அல்லது ஐந்து வருடங்கள் தரப்படும். அதற்குள் அவர் எவ்வளவு productive ஆக இருக்கிறார் என்பதற்கு அவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் எந்த அறிவியல் பத்திரிக்கையில் வருகின்றது என்பதை பொறுத்தது.

4 . அப்படி அவர் நல்ல கட்டுரைகள் எழுதினாலும் ஆராய்ச்சி செய்ய பணம் தேவை அதற்காக அவர் " Grants " எனப்படும் ஆராய்ச்சி செய்வதற்காக பணம் goverment இடம் இருந்து வாங்க வேண்டும். இதில் ஒரு கொசுறு என்னவென்றால் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே இதனை வாங்க அனுமதிக்க படுவர்.

5 . கிராண்ட்ஸ் இருக்கிறது, ஆராய்ச்சி கட்டுரை உள்ளது, பிறகு என்ன? உங்களை பற்றி அந்த துறையில் உள்ள சிலர் "Recommend " செய்ய வேண்டும்.

6 . இந்த கடலையும் தாண்டிய பிறகு ஒரு வழியாக அவர் permament professor ஆகிறார்.

சமீபத்தில் இங்குள்ள அலபாமா என்னும் மாநிலத்தில் உள்ள பல்கலைகழகத்தில் ஒரு பெண் பேராசிரியர் ஒருவர் தனக்கு Tenure எனப்படும் permanent வேலை கிடைக்காததற்கு யாரெல்லாம் காரணம் என்று நினைத்தாரோ அவர்களை எல்லாம் சுட்டு கொன்று விட்டது பெரிய செய்தியானது. அந்த பேராசிரியர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவருக்கே permanent வேலை என்பது எட்டா கனியான போது மற்றவர்களுக்கு என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்.

எல்லாவற்றையும் தாண்டிய பின்னர் யாரும் சரியாக தன்னை recommend செய்யாததால் அலபாமா பெண் பேராசிரியர் தனக்கு permanent வேலை கிடைக்கவில்லை என்று நினைத்து, அதற்கு காரணமானவர்களை கொன்றிருக்கிறார்.

இருபதுகளில் ஒருவர் முனைவர் பட்டம் பெற படிக்க ஆரம்பித்தால் அவர் படித்து முடித்து permanent வேலையில் சேரும் போது தனது நாற்பதுகளில் இருக்க நேரிடும்.

இப்படி ஏழு கடல் ஏழு மலை எல்லாம் தாண்டி ஒருவர் பேராசிரியர் ஆனாலும் அவருக்கு சம்பளம் என்று கிடைப்பது இந்தியாவில் இருந்து வரும் ஒரு பிரெஷ் programmer க்கு கிடைப்பதை விட சற்று அதிகம்.