நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாக்பாட் பார்க்க நேர்ந்தது.
அதில் இரண்டு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பங்கேற்றனர். அதில் ஒரு கேள்வி,
காந்தி படத்தின் முதல் காட்சியான, காந்தியை கோட்சே சுடுவது போன்ற ஒன்று, அதை போட்டு விட்டு, காந்தியை கொன்றது யார்? என்ற கேள்வி கேட்டார்கள்.
என்ன கேணத்தனமான கேள்வியா இருக்குதே, இது கூடவா 10th students don't know,
என்று நான் நினைக்கும் தருவாயில் அந்த அணியினர் பதில் எனக்கு புல்லரிப்பை தந்தது.
ஒரு அணியினர் சொன்ன பதில்.
நோ ஐடியா.
இரண்டாவதி அணியினர் சொன்னது
முசோலினி
அட கடவுளே!!! இது என்ன காந்திக்கு சோதனை.
இங்கே அமெரிக்காவில் நடக்கும் ஜெப்பர்டி ப்ரோக்ராம் பார்க்க நேர்ந்தது, அதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி.
காந்தியை கொன்றது யார்?
அதில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் பச்செர் அழுத்தினர் அனைவரின் பதிலும்
நாதுராம் கோட்சே
எங்கே செல்கிறது இந்திய குழந்தைகளின் கல்வித்தரம்