Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, October 17, 2016

"அம்மாவின்" உடல்நிலையும், ஆண்டிபையாட்டிக் எதிர்ப்பும்!

பல பல வதந்திகள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது கட்டு கதைகள், எங்கும் எதிலும் அம்மாவை பற்றிய செய்திகள், இதில் உண்மை கால்பங்கு என்றால் கற்பனை 75%. இது ஒருபுறம் இருக்க இதனை சார்ந்த பிரச்சனைகள், இதனை மையப்படுத்தி அதனை தனக்கு சாதகமாக்க துடிக்கும் சிலர். அதனை தொடர்ந்த சர்ச்சைகள் என்று ஒருவரின் உடல் நலக்குறைவை வைத்து காமெடி ஆக்கி கதை கட்டி  சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாமல் பல ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் தீனி போட்டன.



அதில் குறிப்பிடும் படியான ஒன்று மேலே.. உண்மையில் நடப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் கொடுக்கப்படும் மருத்துவ அறிக்கைகளில் இருந்து நான் கணித்தவற்றையம் தொற்று நோய் ஆராச்சியில் நான் அறிந்ததை வைத்தும் என்ன என்று என்னுடைய கணிப்பை இங்கு   எழுதி இருக்கிறேன் . இது உண்மையாக இல்லாமல் கூட இருப்பினும் அறிவியல் சார்ந்த விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.



2014 ஆம் ஆண்டு என்னுடைய பதிவு ஒன்றில் "ஆண்ட்டி பாக்டீரியல் சோப்புகளை உபயோகிப்பது நல்லதா இல்லையா?" ஆண்ட்டி பாக்டீரியல் எதிர்ப்பு குறித்து குறிப்பிட்டு இருந்தேன். அதில் ஆண்ட்டி பையாடிக் எதிர்ப்பு பாக்டீரியா வான MRSA  குறித்து குறிப்பிட்டு இருந்தேன்.

ஆண்டிபையாடிக் எதிர்ப்பு என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு.
நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் நோய் கிருமிகள் முக்கியமாக இரண்டு வகையாக பிரிக்கலாம். பாக்டீரியாக்கள், வைரஸ்கள். அதில் பாக்டீரியா தொற்றை தவிர்க்க என்று மருத்துவர்களால் பரிந்துரைக்க படும் மருந்துகள் ஆண்டிபையாட்டிக் மருந்துகள் எனப்படும். இவை பாக்டீரியாவிற்கு எதிராக நம் உடலில் இருக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக ஆன்டிஜென் ஐ தோற்றுவித்து நோய் தொற்றை தவிர்க்கும்.

இந்தியாவில் எதற்கெடுத்தாலும் தற்போது அன்டிபையாட்டிக் மருந்துகள் எழுதி தருகிறார்கள். அதனை தவிர நிறைய ஆண்ட்டிபையாட்டிக் சோப்புகளும் உபயோகிக்கிறார்கள். இதன் பின் விளைவு என்னவென்றால், நாம் பாக்டீரியாக்களை அழிக்க அழிக்க, அவை எப்படி உயிர் வாழ்வது என்று பல பல வகைகளில் தங்களை பரிணாம படி தகவமைத்து, தங்களின் DNA களில் மாற்றம் உண்டாக்கி அந்த ஆண்டிபையாட்டிக் மருந்துகள் மற்றும் சோப்பு களில் இருந்து காத்து கொள்ளுகின்றன.  இதனையே, ஆண்ட்டி பையாட்டிக் எதிர்ப்பு என்கிறோம்.

ஆண்ட்டி பையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும் இடங்கள்.

எந்த இடங்களில் அதிகம் ஆண்டிபையாட்டிக் மருந்துகள் கையாள படுகின்றனவோ அந்த இடங்களில் ஆன்டி பையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். அதனாலேயே MRSA போன்றவை பெரிய மருத்துவ மனைகளுக்கு தலைவலி  கொடுக்கும் ஒன்றாக இருந்து வருகின்றன.

உதாரணமாக, அதிகம் கிளீன் செய்யப்படும் இடங்களான, ஆஸ்பத்திரிகள், ICU இடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் இதனை போன்று பரிணாம வளர்ச்சி படி தகவமைத்து எந்த அன்டிபையாட்டிக் மருந்துகளாலும் அழிக்க படாமல் அல்லது பல ஆண்டிபையாட்டிக் மருந்துகள் கொடுத்து அழிக்க வேண்டிய நிலையில் இருக்கும்.


அம்மாவின் உடல் நிலையம், 2ஆம் மாடி காலியாதலும் 

"அம்மா" அப்பல்லோவில் சேர்க்கப்பட்டவுடன் அந்த மாடி முழுதும் காலியாக்க பட்டு விட்டன, யாரும் உள்ளே சேர்க்கப்படவில்லை என்பது பெரிய விஷயமாக பேசப்பட்டது.  இதற்க்கு முக்கியகாரணம், அங்கு ஏற்கனவே இருந்த நோயாளிகள் மூலம் எந்த இரண்டாம் நிலை தொற்று அம்மாவுக்கு பரவாமல் இருப்பதற்காகவும், அங்கே இருந்த மற்ற நோயாளிகள் மூலம் "அன்டிபையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள்" பரவாமல் இருப்பதற்காகவும் என்று மருத்துவ அறிவியல் முறையில் விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், அம்மாவுக்கு இருக்கும் நுரையீரல் தொற்று (upper respiratory disease) நிமோனியாவாக இருக்கும் பட்சத்தில், இதனை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது அவசியம். இது அவருக்கு, செகண்டரி இன்பிக்சன் பரவாமல் தடுக்கும்.

மற்றொரு விஷயம், அவரின் வயது சார்ந்தது. இதே நிலை ஒரு 30 வயது ஒருவருக்கு ஏற்படும் எனில் அதற்கு இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை இல்லை. இவரின் வயதோ 68,  எந்த தொற்றாயினும் ( பாக்டீரியா அல்லது வைரஸ்) 60 வயதுக்கு மேல் ஏற்படின் அதற்க்கு அதிக கவனிப்பு தேவை, பாதுகாப்பு தேவை.  அதிலும், அவருக்கு இருக்கும் சக்கரை வியாதி, மற்றும் ரத்த கொதிப்பு இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு அதிக டோஸ் உள்ள ஆன்டிபயோட்டிக் கொடுக்க இயலாது. அப்படி கொடுத்தால் அது அவருக்கு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதுவும் அவருக்கு நிம்மோனியா போன்ற தொற்று ஏற்பட்டு இருப்பின், வெளி ஆட்களை உள்ளே சேர்க்காமல் இருப்பது, உடலில் எதிர்ப்பு  சக்தி ஏற்படும் வரை பாதுகாப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும்.  உடலின் எதிர்ப்பு சக்தி அளவு, ரத்த வெள்ளை அணுக்கள் அளவு எல்லாம் சரி பார்த்த பின்னர், மற்ற யாரையும் உள்ளே அனுமதிக்கலாம்.

இது இவருக்கு என்று இல்லை,வேறு  யாராக இருப்பினும், 60 வயதை தாண்டிய ஒரு பெரியவராக இருப்பின், அவருக்கு நுரையீரல் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பின், இதே போன்ற ஒரு மருத்துவ நிலை தேவை படலாம். அது அவரவருக்கு இருக்கும் பண வசதியை பொறுத்தது.

அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பின், அவரின் உடல் நிலை முழுதும் குணமாகும் வரை மருத்துவமனையில் இருப்பது நல்லது.


டிஸ்கி:  இது "அம்மாவின்" உடல்நிலை குறித்து அறிவியல் ரீதியான கருத்து மட்டுமே, உண்மை நிலை அல்ல.


நன்றி.


Monday, May 23, 2016

சோசியல் மீடியா சாதியும்,நீதியும், தண்ணீர் தண்ணீரும்!


கடந்த 6 மாதங்களாக சோசியல் மீடியாவில்  எங்கு திரும்பினாலும் அரசியல், அரசியல் என்று ஒரே அரசியல் மட்டுமே. இன்டர்நெட் உபயோகிக்கும் அனைவரும் இதனை ஒரு பொழுது போக்காக, அவுல் மெல்ல, விவாதிக்க, நன்றாக தீனி போட்டது இந்த சோசியல் மீடியா. FB, வாட்ஸ் ஆப், ட்விட்டர், ப்ளாக்..என்று என்ன என்ன இருக்கிறதோ அங்கெல்லாம் செம தீனி. 

எங்க கட்சி தான் ஜெயிக்கும்.உன்னை விட ஒரு ஓட்டாவது கூட வாங்கி கட்டுறேன் பாருங்க ...எங்கள் சாதி/இன  பலம் தெரியுமா, பாருங்கள். என்று கட்சிகளும் மீம்ஸ் மூலமும் வீடியோ மூலமும் பிரச்சாரம் தூள் பறந்தது.நிறைய மக்கள் தங்களின் சாதி வேட்பாளர் யாரேனும் போட்டியிட்டால் தங்களின் தளங்களில் பப்ளிக் ஆக பிரச்சாரம் செய்தனர். இது எங்க சாதி..என்று பலர் பப்ளிக் ஆக அறிவித்து, சாதி பெருமை பேசினர். அதிலும் அப்படி தங்கள் சாதியை பற்றி சிலாகித்து செய்தி வெளியிட்ட பலரும் நன்கு படித்து நல்ல பதவியில் அல்லது IT கம்பனியில் வேலை பார்க்கும் பலர். யார் போட்டியிடுகிறார், அவர் செய்த நல்லது என்ன? என்று யோசிக்கும் நிலையில் கூட யாரும் இல்லை. எனக்கெனவோ,இந்த தேர்தல்  சாதி வெறியை நிறைய ஊக்குவித்ததாக தோன்றியது. 


இதே மக்கள் பலர், சென்னை வெள்ளம் வந்த போது வரிந்து கட்டிக்கொண்டு அரசியல் வாதிகளையும் கவர்மெண்ட்ஐயும் காய்ச்சு காய்ச்சு என்று சோசியல் மீடியாவில் காய்ச்சியவர்கள். சென்னை வெள்ளத்தில் உதவி செய்த சகாயம் IAS, மற்றும் நடிகர்கள் சித்தார்த், RJ பாலாஜி எல்லாரையும் ஓட்டு போட்டு தேர்ந்தெடுங்கள் என்று நிறைய செய்திகள், பெட்டி செய்திகள், மீம்கள் என்று தூள் பரத்தினார்கள். சரி, மக்கள் முன்னேறிட்டாங்க போல என்று சந்தோசமாக இருந்தது. ஆனால், நடந்தது என்னவென்றால் இப்படி சோசியல் மீடியாவில் நீதி பேசிய பலர் ஓட்டு போடவில்லை. கேட்டால் நேரம்/காலம்/விருப்பம் இல்லை/... என்று பல நொண்டி சாக்குகள்.
சாதி என்ற ஒன்று எப்படி இந்த தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது..
நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம்!, என்று என்னையே கேள்வி கேட்க தூண்டியது.

இந்த நிலையில் பல நாட்களுக்கு பிறகு, பாலச்சந்தர் அவர்களின் "தண்ணீர் தண்ணீர்" படம் பார்க்க நேர்ந்தது. 1981 ஆம் ஆண்டு வந்த படம் அது. அது படம் என்பதை விட  பாடம் என்பதே சரி. படம் வந்து கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆன பின்பும், இன்னும் அதில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் இன்றைய அரசியலுக்கும் சரி, தேர்தலுக்கும் சரி..சீனுக்கு சீன் அப்படியே ஒத்து போகிறது. மக்களின் சாதியை குறி வைத்து நடக்கும் தேர்தல் பிரச்சாரங்கள், அதனை சார்ந்த காட்சிகள், அரசு எந்திரம் எப்படி இருக்கிறது என்பதற்கான காட்சிகள் என்று அந்த படம் ஒரு காவியம் என்று தான் சொல்ல வேண்டும். இவை போன்ற படங்கள் இனிமேல் வருமா, ஏக்க பெருமூச்சு மட்டுமே நம்மில்.

அரசு எந்திர செயல்பாடு குறித்த அந்த படத்தின்  சில காட்சிகள் இங்கே!!.





இதில் ஜோக் என்னவென்றால் இந்த சோசியல் மீடியா என்னும் மாய உலகை உண்மை என்று நம்பி தான் வெற்றி அடைந்துவிட்டோம் என்று மமதையில் ஆடிய நிறைய பேர். அவர்களின் கதி தற்போது என்ன என்று நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது.

டிஸ்கி 

இது இன்றைய அரசியல் குறித்தும், சோசியல் மீடியா குறித்தும் என்னுடைய எண்ணங்கள் மட்டுமே. யாரையும் குறிக்கவில்லை.
பல வருடங்களுக்கு பிறகு கோடை விடுமுறை இந்தியாவில்.  பார்க்கலாம், என்னென்னபுதிய  விசயங்கள் கற்றுக்கொள்ள போகிறேன் என்று.

நன்றி 

Friday, May 13, 2016

மனோதத்துவ நேர்காணலும் இன்றைய அரசியல் நிலையம் !

தற்போது நிறைய நிறுவனங்கள் தங்கள் ஆட்களை எடுக்கும் முன்பு மனோதத்துவ முறையில் பல தேர்வுகள் நடத்துகிறார்கள். CIDS எனப்படும் இதனை போன்ற தேர்வுகள் தலைமை பொறுப்பு பதவிகளுக்கு கட்டாயம். சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு மனோதத்துவ இண்டர்வியு எடுக்க நேர்ந்தது.

திரும்ப திரும்ப சில கேள்விகள் அதில் கேட்கப்பட்டன.

தேங்க்ஸ் டு google images 

நீங்கள் உங்களின் சாதனைகளை மதிக்கிறீர்களா?, நீங்கள் வாழ்கையில் தன்னிறைவு அடைந்ததாக நினைகிறீர்களா? உங்கள் வாழ்கையில் ஏதாவது சாதனை செய்து இருப்பதாக நினைக்கிறீர்களா? தனியாக இருப்பது பிடிக்குமா, அல்லது பார்ட்டி செல்ல பிடிக்குமா?, எத்தனை நண்பர்கள் உங்களுக்கு?புதியவர்களுடன் நீங்கள் நட்பாக இருக்க இயலுமா?  தவறு செய்வீர்களா, செய்திருக்குகிறீர்களா? தானம் செய்து இருக்கிறீர்களா? அடுத்தவர்கள் தவறு செய்தால் உடனே சுட்டி காட்டுவீர்களா? மேனேஜர் என்ன செய்தாலும், தவறே செய்தாலும் சுட்டி காட்டாமல் கண்டு கொள்ளாமல் விடுவீர்களா? எத்தனை முறை நீங்கள் சோதனையான காலத்தில் அமைதியாக இருந்து இருக்குறீர்கள்? ஒருவரை பார்த்தவுடன் நீங்கள் அவரை எடை போடுவீர்களா?

இப்படி பல பல, கிட்டத்தட்ட 1 மணிநேரம் முதல் 2 மணி நேரம் வரை கேள்விகள். எல்லாமே உங்களின் பெர்சனாலிட்டி பற்றி தெரிந்து கொள்ள? ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு..


பொதுவாக நிறைய மக்கள் நினைபதெல்லாம் இதுதான்..வேலை கிடைக்க வேண்டும் என்றாலோ அல்லது இருக்கும் வேலையை தக்க வைக்க வேண்டும் என்றாலோ முதலில் நாம் நம் மேனேஜர் /கம்பெனி முதலாளி/டைரக்டர்/ ...க்கு சலாம் போட வேண்டும். அவர் என்ன தப்பு செய்தாலும் அவை எல்லாம் கண்டு கொள்ளாமல், எப்படி அமைச்சர்கள் அம்மாவிடம் அவர் என்ன செய்தாலும் நீங்க செய்வது தான் சரி அம்மா! என்று கூல கும்பிடு போட்டு வாழ்ந்து தன்னுடைய பதவியை தக்க வைத்து கொள்ளுகிறார்களோ அதுவே சிறந்தது . அப்படி இருப்பவன் பிழைக்க தெரிந்தவன் என்பது காலம் காலமாக நமக்கு கற்று கொடுக்கபடும் ஒன்று.

அப்படி அடுத்தவரிடம் பணிந்து பணிந்து வேலை பார்க்கும் ஒரு ஆள், தன்னுடைய இயலாமையை மறைக்க என்று வேறு யாருடனோ அல்லது தனக்கு கீழே இருக்கும் ஒருவனிடம் அவன் படோடபத்தை காட்டுவான்..இது தொடர்கதை ஆகி ...முதல் கோணல் முற்றும் கோணல் போல வழி  வழியாக வந்து, எந்த உருப்படியான காரியங்களும் செய்ய முடியாமல் டாமினோ எபக்ட் போல படிப்படியாக சரிய நிறைய வாய்ப்புகள் இருப்பதாலேயே..உன் மேனேஜர் தப்பு செய்கிறார் என்றால், அதனை எதிர்த்து சொல்ல தைரியம் வேண்டும். ஆனால், அதன் பின் விளைவுகளை தாங்கி கொள்ளும் திறமையும் வேண்டும். அதே நேரம், தொடாதுக்கெல்லாம் குறை சொல்ல கூடாது. நல்ல பாலன்ஸ் இருக்க வேண்டும்.

நிறைய இண்டர்வியுக்களில் பார்க்கபடும் அடுத்த முக்கிய மனோதத்துவ பண்பு , " நான் மட்டுமே வாழ்க்கை..என்னை என் குடும்பத்தை சுற்றி மட்டுமே எல்லாம் நிகழ வேண்டும் என்று  நினைக்கும் பண்பு இல்லாது இருப்பது"  அடுத்தவர்கள் உதவி என்று கேட்டால் உதவும் எண்ணம் துளியும் இல்லாமல், தானும் தன்னுடைய குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்று சுயநலமாக இருப்பது.  இரக்க குணம், அடுத்தவருக்கு உதவும் பண்பு என்று நிறைய தலைமை பொறுப்பு இருப்பவர்களுக்கு வேண்டும் என்று எதிர் பார்கிறார்கள்.  நீங்கள் எப்பொழுதாவது கம்ம்யுநிட்டி சர்வீஸ் அல்லது பொது சேவை செய்து இருக்கிறார்களா  என்று நிறைய கம்பனிகள் பார்க்கிறார்கள். empathy அல்லது இரக்க குணம் என்பது இருந்தால் மட்டுமே அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் வரும்.

அதே போல, தவறு செய்தால் ஒத்து கொள்ளும் தன்மை. பொது இடங்களில் பேசும் நாகரிகம்
தன்னுடைய ஒவ்வொரு தவறுக்கும் அடுத்தவர் தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பித்து செல்லாமல், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை, யாருமே இங்கு மாஸ்டர் அல்ல, எல்லாரும் ஸ்டுடென்ட் போல ஒவ்வொரு நாளும் கற்று கொண்டு இருக்கிறோம் என்ற பணிவு . இதனை போன்ற பல பல கேள்விகளாக கேட்கப்பட்டன.

இந்த நேர்காணல் முடிந்தவுடன், எனக்குள் சில கேள்விகள். சாதாரண மேனேஜர்  பதவிக்கே..இத்தனை இத்தனை கேள்விகள் கேட்டு அவர் அந்த பதவிக்கு சரியானவரா என்று ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள். ஆனால், தமிழ் நாடு, இந்தியா ஏன் அமெரிக்கா எலெக்சனில் வாக்களிக்கும் முன்பு மக்கள் இது போன்ற அடிப்படை பண்புகளில் ஒன்றாவது தாங்கள் வாக்களிக்க போகும் அரசியல்வாதிகளுக்கு இருக்கா என்று ஆராய்கிறார்களா?

சாதாரண தலைமை பொறுப்புக்கே இத்தனை பண்புகளையும் கொண்டுள்ள ஒரு தலைவன்/தலைவி வேண்டும் என்று எதிர்பாக்கப்படும் போது நாட்டையே கட்டி ஆள வாய்ப்பு கொடுங்கள் என்று கூவும் அரசியல் வாதிகள் தங்களுக்கு இதனை போன்ற அடிப்படை பண்புகள் உண்டா என்று சுயபரிச்சை செய்கிறார்களா/செய்வார்களா?

ஒன்றும் புரியவில்லை.


நன்றி.

டிஸ்கி
இது என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே..எந்த அரசியல் கட்சியை குறித்தும் தலைவர்கள் குறித்தும் இங்கு கூறவில்லை.

Tuesday, September 29, 2015

மோடி என்னும் ஒரு ராக் ஸ்டார்..


மறுபடியும் ஒரு அரசியல் பதிவு.

என்னதான் எழுத கூடாது என்று நினச்சிட்டு பேசாம இருந்தாலும் இந்திய பிரதமர் மோடி ஒரு ராக் ஸ்டார் பெர்பார்மன்ஸ் கொடுத்து நம்மள வாய திறக்க வச்சிடுவார் போல.

FB தலைமையகத்தில எப்படி பேசினார் தெரியுமா எங்க மோடி? என்று மோடி ஜால்ராக்கள் சத்தம் தாங்க முடியவில்லை. அதோட FB யின் டிஜிட்டல் இந்தியாவில் வெரி பலரும் சேர்ந்து தங்களுடைய ப்ரொபைல் படத்தை மாற்றி வைத்து இருந்தார்கள்.

அதுமட்டும் அல்ல, அவர் எத்தனை உடைகள் மாற்றினார். எப்படி ஒரு முறை உடுத்தினதை இன்னொரு முறை உடுத்தவில்லை என்று பெருமை வேறு. இதில இன்னும் சிலர் அவரின் கேமரா மோகத்தை அவர் மார்க் ஜுகேர்பெர்க் ஐ இழுத்து காமெராவை மறைக்காதே என்பது போல போஸ் கொடுப்பது எல்லாம் போட்டு இருந்தனர்.  






எனக்கு தெரியாம தான் கேட்குறேன், இவரு பிரதமரா, இல்ல ராக் ஸ்டார் ஆ. பொதுவா, கேமரா மோகம், உடை மோகம் கொடண்டவங்க எல்லாம் பொண்ணுங்க அப்படின்னு சொல்லுவாங்க..இல்லாட்டி ராக் ஸ்டார்ஸ் அல்லது சினிமா பிரபலங்கள் இப்படி செய்யலாம். ஆனா, ஒரு நாட்டுக்கு பிரதமர், இப்படி கேமரா மோகம் பிடித்து ஆட்டுவது சிரிப்பாக இருந்தது. இதில எப்படி டீல்  போட்டு இருக்கார் தெரியுமா என்று ஜால்ரா சத்தம் தாங்க வில்லை.

அதோட, FB தலைமையகத்துல ஹிந்தில பேசுறாருப்பா...உடனே இந்தி தேசிய மொழி அப்படின்னு ஆடாதீங்க..பேசுங்க இந்தியாவில பேசுங்க..ஆனா வெளி நாட்டுக்கு வந்து பேசும் போது எல்லாருக்கும் புரியிற மாதிரி பேசினா, எங்கள போல ஹிந்தி தெரியாதவங்களும் புரிஞ்சிகிரலாம்ல..

நம்ம பக்கத்து நாடு சீனா, Baidu, Qihoo அப்படின்னு சத்தம் இல்லாம கூகிள் ஐ மாத்திட்டு இருக்கான். அதே போல, அலிபாபா அப்படின்னு ஒன்ன வச்சிட்டு அமேசான் ஐயும் மாத்திட்டு இருக்கான். இப்படி எல்லாத்திலையும் தன்னிறைவு பெறுவதோட அல்லாம, அமெரிக்கா கண்ணுல விரல விட்டு பொருளாதாரத்துல ஆட்டிட்டு இருக்காங்க..இவரு என்னடான்னா, ராக் ஸ்டார் ஆகி கூத்தாடிட்டு இருக்காரு. 

ஆனா சரியான பாலிவூட் பெர்போர்மான்ஸ்..எந்த நாட்டு பிரதமரும் கொடுக்காத ஒரு பெர்போர்மான்ஸ் கொடுத்துட்டு போய் இருக்கார். அதுக்கு எல்லாரும் ஜோரா கை தட்டுங்கப்பா.

நன்றி.

டிஸ்கி.

என் வீட்டுக்கு ஆட்டோ வரப்போவது நிச்சயம். 

Friday, July 10, 2015

தமிழகத்தின் அம்மா பாசம் !!

டிஸ்கி
பொதுவாக நான் அரசியல் குறித்து எழுதுவதில்லை. ஏன் என்றால்?, நாம ஏதாவது மனசுல பட்டதை எழுதபோயி, வீட்டுக்கு ஆட்டோ ஏதும் வந்துட்டா, எதுக்கு வம்பு என்று தான். ஆனாலும் நியூ யார்க் டைம்ஸ் இல் நான் படித்த ஒரு கட்டுரையும், இந்திய பயணத்தில் நான் சந்தித்த சில நபர்களும் குறித்து எப்படியாவது எழுத வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அதன் விளைவே இது.இங்கு குறிப்பிட்டு இருப்பவை எல்லாம் அரசியலை குறித்தோ அல்லது குறிப்பிட்ட அரசியல் வாதியை குறித்தோ என்னுடைய கருத்து அல்ல. பொதுவாக நான் பார்த்த படித்த, பார்த்த  விஷயங்கள் மட்டுமே.

ஒரு மாநிலத்தை சினிமா நடிகர் ஆட்சி செய்தால் என்ன நடக்கும் ? இதுவே ஜூலை 1 வெளியான நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் செய்தி. அந்த கட்டுரையின் ஆசிரியர் Rollo Romig.



மே 8ஆம் தேதி பல கரை வேட்டிகளும், அமைச்சர்களும் பெருமாள் கோவிலில் செய்த பிரார்த்தனைகள் "பெருமாளே, நியாயம் ஜெயிக்கட்டும், தமிழ்நாடு செழிப்பான பாதையில் சென்று கொண்டு இருந்தது, ஆனால் தீய சக்திகள் வளர்ச்சியை தடுத்து விட்டன, அம்மா  புடம் போட்ட தங்கமாக வெளியே வந்து பணிகளை தொடரட்டும். அவரின் வளர்ச்சியை தடுத்தவர்கள் தண்டிக்கப்படட்டும்" என்று ஒரே கத்தல்கள்.

மக்களின் விசுவாசங்கள், உடல் முழுதும் பச்சை குத்திய பெண்கள். மாவட்ட செக்ரெட்டரி கையில் "அம்மா வாழ்க" என்ற பச்சை. கையில் தீச்சட்டி ஏந்தியபடி , தீ மேல் நடக்கும். அங்கபிரதட்சனம், யாகம்  செய்யும் அமைச்சர்கள். தீர்ப்பு வெளிவரும் நாட்களில் 1008 லட்சத்தி எட்டு என்று தேங்காய் உடைக்கும் "அம்மா பக்தர்கள்".

யார் இந்த அம்மா? என்று அனைவராலும் அழைக்கப்படும் தமிழக முதல்வர் அவர்கள் என்பது பற்றி
அவர்களின் முந்தய கால வாழ்க்கை, MGR அவர்களுடன் நட்பு, AIADMK வில் எப்படி அவர் படிப்படியாக முன்னேறினார். அவருக்கும் DMK கலைஞர் அவர்களுக்கும் இருந்த போட்டி...என்று முன்னுரையில் குறிப்பிட்டு...கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த சொத்து குவிப்பு வழக்கில் நடந்த கைது, அதன் பின்னணி என்ன என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

கவர்ச்சியான சினிமா நடிகையாக அறியப்பட்ட இவர் , முதலில் செய்தது தன்னை அழகில்லாதவராக, சாதாரண மனிதராக காட்டி கொள்ளுவது. நகைகளை தவிர்த்து, நானும் உங்களை போன்ற ஒருவர் என்று கட்டியது. எனக்கு என்று எந்த சொந்தமும் இல்லை. நீங்களே என் சொந்தம், உங்களில் ஒருத்தி நான். உங்கள் "அம்மா" என்று ஒரு இமேஜ் உருவாக்கியது. தன்னை தானே ஒரு ப்ராண்ட் ஆக உருவாக்கியது. எங்கும் எதிலும் அம்மா முகம். அம்மா 5 ரூபாய் மதிய உணவு, அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு, அம்மா சிமெண்ட், அம்மா படம் பதித்த கம்ப்யூட்டர்கள், தமிழகத்தில் எங்கு நோக்கினும்  அம்மா..அம்மா...அம்மா என்று ஒரு ப்ராண்ட் உருவாக்கியது.


ஆனால் இந்த கட்டுரையின் சாராம்சம் தமிழக முதல்வர் பற்றியோ, அவரின் அரசியலை பற்றியோ அல்ல, மாறாக அம்மாவின் கைதும் அதன் பின்னர் அவருக்காக என்று நடந்த அம்மாவின் பக்தர்களின் பிராத்தனைகளும், பஸ் தீவைக்க பட்டது, உடைக்கப்பட்டது, தற்கொலைகள்..என்ன என்ன என்பதை பற்றியது.

பெருங்குளத்தூர் ஜங்ஷன் இல் ஹை வேயில் மக்கள் படுத்து கொண்டு "பஸ்ஸை எங்கள் மேல் ஏத்துங்கள், அம்மா சிறையில் இருக்கும் போது நாங்கள் ஏன் வாழ வேண்டும்?"  என்று மக்கள் கத்தியதை, நூற்றுகணக்கான மக்கள் தற்கொலை செய்து கொண்டது போன்ற வரலாற்று நிகழ்வுகள் குறித்து குறிப்பிடுகிறார்.

இப்படி ஒரு பக்திக்கு என்ன காரணம்?. பக்கத்து மாநிலமான கேரளாவில், இப்படி ஆயிரகனக்கனோர்  ரோட்டில் படுத்து கொண்டு  பஸ்ஸை ஏத்துங்கள் என்று சொல்ல மாட்டார்கள். பின்னர் எப்படி இந்த பக்தி. தற்போதைய முதல்வர் அம்மா முந்தய நாள் கதாநாயகி என்பது தான் காரணமா என்று கேள்வி கேட்கிறார்.

தீர்ப்புக்கு மூன்று நாட்கள் முன்பு கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள் என்று அனைத்திலும் கூட்டு பிரார்த்தனைகள் மதுரையில் 1008 தேங்காய் உடைப்பு, கோயம்பத்தூர்இல் 2008 பேர் பால்குடம் ஏந்தி யாத்திரை. திருவிளக்கு பூஜைகள்..எல்லாவற்றிலும் அம்மாவின் போட்டோ வைத்து , "கடவுளே அம்மாவை விடுதலை செய்து விடு" என்று பிரார்த்தனைகள்...


மெரினா கரை ஓரம் தான் சந்தித்த சில மீனவர்கள் பற்றியும் மீனவ குடும்பங்கள் பற்றியும் குறிப்பிடும் அவர் 
மீனவர்களின் அம்மா குறித்த வார்த்தைகள் பற்றி, "மீனவர்களை காப்பாற்றும் ஒரே மனிதர் அம்மா தான். அம்மா, சிறை சென்றதும் நாங்கள் அனாதைகள் ஆகி விட்டோம்". மீனவ பெண்களோ, "சுனாமி அடித்து ஓய்ந்த பிறகு ஓடோடி வந்து எங்களுக்கு ஆறுதல் சொன்னவர் எங்கள் அம்மா தான். யார் தவறு செய்யவில்லை இப்பொழுது, ஏன் அம்மா மீது மட்டும் இப்படி வழக்குகள்" என்று அவர் செய்தது தவறே இல்லை என்று சத்தியம் செய்யும் பெண்கள். 


"இப்படி அம்மா பாசம், தீக்குளிப்பு, பிரார்த்தனைகள், எல்லாம் கட்சிகாரர்கள் பணம் கொடுத்து செய்தது , செய்ய சொன்னது, அதன் மூலம் அம்மாவின் நன்மதிப்பை பெற அவர்கள் செய்த முயற்சி" என்று பத்திரிக்கையாளர் ஞானி போன்றவர்களின் கருத்தையும் பதிவு செய்து இருக்கும் கட்டுரை ஆசிரியர். அம்மா தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்று தனது இரண்டு விரல்களை வெட்டிய சேலம்  Ex-SP ரத்தினம்,  ரத்தத்தால் அம்மாவின் சிலையை உருவாக்கிய ஹுசைனி போன்றவர்களை பற்றியும் குறிப்பிடுகிறார். இவர்களை போன்றவர்களின் பாசமும் அம்மாவின் அன்பை பெறுவதற்காகவா? அல்லது உண்மையான பாசமா?  என்று கேள்வி எழுப்புகிறார்.

என் சொந்த அனுபவத்தில் நான் கண்டது. என் அம்மாவின் தைராய்டு அறுவை சிகிச்சைக்கு என்று ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தோம். அங்கு இருந்த ஒரு டாக்டர் கூட அம்மா மோதிரம் அணிந்து இருந்ததை பார்க்க முடிந்தது. அங்கு வேலை பார்த்த பல நர்சுகளும் அம்மா சிறையில் இருந்து வெளியே வர வேண்டும் என்று மண் சோறு சாப்பிட்டதாக சொன்னார்கள்.எனக்கு தெரிந்த சிலர்  தீசட்டி எடுத்தாகவும், அங்க பிரதட்சணம் செய்ததாகவும் சொன்னார்கள். இவர்கள் எந்த உள்நோக்கத்துடனும் இதனை செய்திருப்பார்கள் என்று தோன்றவில்லை. அல்லது அம்மாவின் நற்பெயரை எப்படியாவது பெற்று விட மாட்டோமா, அம்மாவின் கண் பார்வை தன்  மீது பட்டுவிடாதா என்று இவர்கள் செய்திருப்பார்களா? தெரியவில்லை..எல்லாம் கடவுளுக்கே வெளிச்சம்.  

நன்றி.


Thursday, February 5, 2015

ஐயையோ! திருப்பரங்குன்றம் மலையை காணோமே!

இது என்ன வடிவேலுவின் கிணற்றை காணோம் காமெடி  போல இருக்கேன்னு நினைக்காதீங்க.  சமீபத்தில் மதுரை சென்ற போது நான் உண்மையில் கண்டது. திருப்பரங்குன்றம் மலை அங்கே தான் இருக்கிறது..ஆனால் அதனை பார்க்க தான் முடியவில்லை.  பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை, நாங்கள் இருந்த ஜெய் ஹிந்துபுரம் பகுதியில் இருந்து திருப் பரங்குன்றம் மலையை தெள்ள தெளிவாக பார்க்கலாம். தற்போது, ஒரே புகை மூட்டம் அதனை சுற்றி. என்ன காரணம் என்று விசாரித்த போது நான் அறிந்தது இது. திருப்பரங்குன்றம் பகுதிக்கு அருகில் மாநகராட்சி குப்பை எரிக்கபடுகிறது. அதனால் ஏற்படும் புகை மூட்டம் அந்த பகுதி முழுதும் சூழ்ந்து ஒரே புகை மூட்டம்.

அது சரி..எரிக்காவிட்டால் அப்புறம் எப்படி தான் குப்பைகளை அகற்றுவது, என்று சிலர் கேட்கலாம். முதலில் குப்பைகளை எரிப்பதால் என்னவாகும் என்று சில நாட்களுக்கு முன் நான் வாசித்த கதிர் அவர்களின் வலைத்தளம் என்ன சொல்கிறது பாருங்கள். சுருக்கமாக சொன்னால், முதலில் எரிக்க்காகப்படும் பொருள்கள் மக்கும் கழிவுகள்  மக்கா கழிவுகள், நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுகள், மறுசுழற்சி செய்யபடும் கழிவுகள் என்று எரிக்கும் முன் பிரிக்கபடுவதில்லை. அனைத்தையும் ஒன்றாக சேர்த்து எரிக்கிறார்கள்.

எரிக்கப்படும் கழிவுகளில்  இருக்கும்  நெகிழி (plastic) கழிவுகள் dioxtin என்னும் நச்சு பொருள் வெளியாகிறது. அது மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களை உண்டாக்குவது அல்லாமல், இதய நோய்கள், கல்லீரல் மற்றும் கிட்னி பிரச்சனைகளையும் அதிகரிக்கிறது. இதெல்லாம் விட இவை இனபெருக்க உறுப்புகளின் செயல்பாடுகளில் குறுக்கீடு செய்யவல்லவை. இதனை பற்றி எத்தனை பேருக்கு தெரியும். குப்பைகளை பாதுகாப்பாக எப்படி அகற்றுவது என்று மாநகராட்சி கழிவு மேலாண்மையில் இருக்கும் யாருக்காவது தெரியுமா என்று தெரியவில்லை.



அனைவருக்கும், தன்  வீட்டில் இருந்து குப்பை சென்றால் போதும். அது என்னவாகிறது எப்படி உலகிற்கு கேடு விளைவிக்கிறது என்று கவலை இல்லை. அரசியல்வாதிகளுக்கோ இதெல்லாம் ஒரு பிரச்சனையாகவே தெரிவதில்லை.

உண்மையில் குப்பைகள் கொண்டு மின்சாரம் தயாரிக்கபடுகிறது ஸ்வீடன் நாட்டில். அதில் கிடைக்கும்  energy கொண்டு 20% வீடுகளுக்கு heating சிஸ்டம் வழங்கபடுகிறது. குப்பைகள் போதவில்லை என்று பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் குப்பைகள் இறக்குமதி செய்ய படுகிறது.   அதெல்லாம் வளர்ந்த நாடு, அவர்களிடம் பணம் இருக்கிறது அதனால் இப்படி விதவிதமாக மாற்று எரிசக்தி வழியில் முதலீடு செய்கிறார்கள் என்று யாரும் சொல்ல முடியாது, சொல்லபோனால் இந்தியா தான் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவதாக இருக்கிறது.


References :

http://www.pri.org/stories/2012-06-26/sweden-imports-waste-european-neighbors-fuel-waste-energy-program

http://blogs.wsj.com/indiarealtime/2015/02/04/india-has-worlds-third-largest-number-of-billionaires/



Monday, November 5, 2012

இட ஒதுக்கீடும் பர்த்டே பார்ட்டியும்!!

என்ன ஒரு தலைப்பு!!..

அது என்னனங்க போன வாரம் ஒரு பர்த்டே பார்ட்டிக்கு கூப்பிட்டாங்கன்னு போயிட்டோம்..அது ஏன் போனோம்னு நானும் ரங்கமணியும் தலையில முட்டிக்காத குறை தான்.

ஒரு இந்திய தமிழ் குழந்தையின் பார்ட்டி அது. அந்த குழந்தையின் பெற்றோர் எங்களுக்கு அதிக பரிச்சயமில்லாதவர்கள் என்றாலும், முகுந்த் உடன் படிக்கும் பையன் பார்ட்டி என்பதால் அங்கு சென்றோம்.


அந்த பர்த்டே பார்ட்டியில ஒரு குறிப்பிட்ட சாதி வகுப்பை சேர்ந்த பலரும் சில அமெரிக்கர்களையும், சில வேறு சாதி மக்களையும் அந்த குழந்தையின் பெற்றோர் அழைத்திருந்தார்கள். அவர்கள் வீட்டில் நடத்தப்பட்டது அந்த பார்ட்டி.

அங்கு வந்திருந்த பலர் இந்தியாவில் நடக்கும் இட ஒதுக்கீடு பற்றியும், அது எப்படிப்பட்ட முட்டாள்தனம் என்பது போன்று பேசிக்கொண்டு இருந்தனர். எப்போதும், இப்படி நடக்கும் டிஸ்கஸன்களில் நமக்கு ஏன் வம்பு என்று பேசாமல் இருந்து விடுவேன். எல்லாரும் வாய் கிழிய தமிழில் பேசிய பிறகு..கேக் வெட்டும் நேரம் வந்தது..பிறகு எல்லாரும் சாப்பிட வாங்க என்று அந்த பெற்றோர் அழைத்தனர்.  நாங்கள் எல்லரும் தட்டை எடுத்து கொண்டு புஃபேக்கு சென்று வரிசையில் நிற்க..அந்த குறிப்பிட்ட சாதி மக்கள் மட்டும் அவர்களின் டைனிங் டேபிளில் உட்கார்த்திருக்க..அவர்களுக்கு என்று தனி சாப்பாடு பரிமாறப்பட்டது.

எங்களை போன்ற சில குடும்பங்களுக்கு அமெரிக்கர்கள் உட்பட வேறு சாப்பாடு வைத்து இருந்தனர். அதில் ஒரு அமெரிக்க அம்மா..அது என்ன சாப்பாடு என்று கேட்க..அதற்கு அந்த பர்த்டே பார்ட்டி அம்மா, ”அது கடவுளுக்கு படைத்தது..வேறு மக்கள் சாப்பிட கூடாது” என்று கூறினார்.

அட..இது நல்லா இருக்கே..அப்படி கடவுளுக்கு படைத்த சாப்பாட்டை வேறு சாதி மக்கள் சாப்பிட கூடாது என்று சொல்பவர்கள்..எதற்கு மற்ற மக்களை பார்ட்டி என்று அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை..

அதே போல சாப்பிட்ட பிறகு கை கழுவ என்று மற்ற சாதி மக்களுக்கு தனி இடம் என்று வைத்து இருந்தது கண்டு..அட அட என்ன அழகா நமக்கு இவங்க இடம் ஒதுக்கி இருக்காங்கப்பா என்று எனக்கு மலைப்பாக இருந்தது.

அவர்கள் சிறிது நேரத்துக்கு முன்பு வரை “இட ஒதுக்கீடு” பற்றி பேசிய பேச்சுக்கும் அவர்கள் எங்களுக்கு கொடுத்த “இட ஒதுக்கீடு” பற்றியும் நினைத்து ”அட நாம அமெரிக்காவில தான இருக்கோம்” கிள்ளி பார்த்து கொண்டு அந்த இடத்தை விட்டு விட்டால் போதும் என்று காலி செய்தோம்.

Saturday, June 30, 2012

அரசியலால் வில்லன்கள் ஆகும் காமெடியன்கள்!

அது 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம், அப்போது ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க வில் இணைந்திருந்தார் காமெடி நடிகர் செந்தில். ஆனந்தவிகடன் பேட்டி ஒன்றில் “ஏய் கருணாநிதி!, ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?” என்று கேட்டு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த தேர்தலில் அ.தி.மு.க தோற்று தி.மு.க வென்றது..

அ.தி.மு.கா வுக்கு ஆதரவாக மு.க வை தாக்கிய அந்த ”ஒண்டிக்கு ஒண்டி” வார்த்தையை திட்டி பல பிரபலங்கள் பேட்டி கொடுத்தனர்.


 
ஏற்கனவே பட வாய்ப்புகள் குறைந்திருந்த செந்திலுக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்க பயந்து பட அதிபர்கள் ஒதுக்க  ஆரம்பித்தனர்.  பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் ஒடுங்க ஆரம்பித்தார் செந்தில் அவர்கள்.
 
எந்த கட்சியையும் சாராமல் இருந்த வடிவேலுவும், விவேக்குக்கும் அதிக வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன.
 
 
சீன் மாறுகிறது.
 
இது 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம். அப்போது ஆளும்கட்சியாக இருந்த தி.மு.காவில் சேர்ந்திருந்தார் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர் வடிவேலு.
 
தி.மு.காவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக அவர், எதிர் கட்சி கூட்டணியில் இருந்த தே.மு.தி.கா தலைவரை தாக்கி பேசினார்.
 
 அந்த தேர்தலில் தி.மு.க தோற்று அ.தி.மு.க வென்றது..


தி.மு.கா வுக்கு ஆதரவாக விஜயகாந்தைவை தாக்கியதை, திட்டி பல பிரபலங்கள் பேட்டி கொடுத்தனர்.



ஆளும்கட்சியை பகைத்துகொண்டு  வடிவேலுவுக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்க பயந்து பட அதிபர்கள் ஒதுக்க ஆரம்பித்தனர். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் ஒடுங்க ஆரம்பித்தார் வடிவேலு அவர்கள்.


எந்த கட்சியையும் சாராமல் இருந்த சந்தானத்திற்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் பிரசாரம் செய்த இரண்டு காமெடியன்களும் அரசியல் செய்ய தெரியாமல் வாயில் வந்ததை பேசி வில்லன்கள் ஆக்கப்பட்டு வாய்ப்பை இழக்கின்றனர்.

 இதிலிருந்து என்ன தெரிகிறது, அரசியல்வாதிகளும், ஆளும் கட்சியும் தான் ஒரு நடிகனின் மார்கெட்டை தீர்மானிக்கிறார்கள். மக்கள் தீர்மானிப்பதில்லை!!

Thursday, November 10, 2011

1984

1984- ஜார்ஜ் ஆர்வெல் அவர்களின் மிக முக்கியமான நாவல் இது. டோடலிடோரியன் கவர்மெண்ட் எனப்படும் பொதுவுடமை தத்துவங்களை பின்பற்றும் ஒரு நாடு 1984 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று 1949 ஆம் ஆண்டு ஆர்வெல் எழுதியது. இவருடைய மற்றொரு பிரபல நாவலான Animal farm (விலங்குகள் பண்ணை) ஐ விட இது மிக பிரபலம்.

இந்த நாவல் வெளிவந்த பிறகு, பல புதிய பதங்கள் நடைமுறைக்கு வந்தன..இப்போதும் கூட பல சொற்கள் நடைமுறையில் இருக்கின்றன..

உதாரணமாக..தற்போது உலகெங்கும் பிரபலமாக இருக்கும் “Big Brother" எனப்படும் ஒரு நிகழ்ச்சியின் கரு இந்த புத்தகத்தில் இருந்தே வந்தது (ஒரு வீட்டில் சில பிரபலங்கள் சில மாதங்கள் தங்க வேண்டும், அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் காமிரா மூலம் கண்காணிக்கப்படும்).

Double think, Thoughtcrime, Newspeak போன்ற பல பதங்கள் அந்த புத்தகம் வந்த பின்பே பிரபலமாகின.

மேலும் “Big brother is watching you" போன்ற சொற்றொடர்களும் இதன் மூலமே பிரபலமாகின.



பல முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் வேறு வேறு மாதிரி எண்ணங்கள் தோன்றும்.

நிறைய நாட்களுக்கு பிறகு கடந்தமாதம் மேலும் ஒரு முறை 1984 ஐ படிக்க நேர்ந்தது. தற்போதைய இந்தியாவிற்கும் 1984 நாவலுக்கும் எதோ தொடர்பு இருப்பது போல தோன்றுகிறது.

சரி இப்போது நாவலுக்குள் செல்வோம்.

அது ஒரு கற்பனையான நாடு, அதன் பெயர் ஓசோனியா. அதன் தலைவர் அனைவராலும் "பிக் பிரதர்" என்று அழைக்கப்படுகிறார்.

ப்ரோல்ஸ்
---------------
அந்த நாட்டில் வசிக்கும் மக்களில் எண்பத்திஐந்து சதவீதம் பேர் ப்ரோல்ஸ் என்றழைக்க படுகிறார்கள். இவர்கள்  வறுமையில் வாடுபவர்கள். அவர்களுக்கு மாதமாதம் ரேஷனாக சில உணவு பொருள்கள் 
வழங்கப்படுகின்றன.  இந்த மக்கள் அனைவர்க்கும் எப்பொழுதும் சினிமா, கேளிக்கை
குடி, விளையாட்டு போன்றவை வழங்கப்படுவதால் தாம் வறுமையில்,அறியாமையில் இருக்கிறோம்
 என்பதையே அறிந்து கொள்ளாமல் வாழ்பவர்கள். 

அவுட்டர் பார்ட்டி
------------------------

அந்த நாட்டில் வசிக்கும் பதிமூணு சதவீத மக்கள் அவுட்டர் பார்ட்டியை சேர்ந்தவர்கள். அவர்கள் மிடில் கிளாஸ் மக்கள். படிப்பறிவு கொண்டிருப்பதால் ஓசோனியாவின்  கவர்மென்ட் வேலைகள் செய்பவர்கள்.
படிப்பறிவு கொண்டிருப்பதாலேயே, அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் புரட்சி ஏற்படுத்தி விடுவார்கள் என்று பயந்து எப்போதும் ஓசோனியா தலைவரான "பிக் பிரதர்" மற்றும் அவர்களின் "Ministry of Truth" அமைச்சரவையால் எப்போதும் கண்காணிக்கப்படுபவர்கள். இவர்கள் 
செய்யும் அனைத்தையும் கண்காணிக்க அனைவர் 
வீடுகளிலும் டெலிஸ்க்ரீன் வைக்கப்பட்டு இருக்கும். அதன் மூலம் ஒவ்வொருவரும் என்ன என்ன செய்கிறார்கள், என்பது உண்மை அமைச்சரகத்துக்கு அனுப்பப்படும்.

அவர்கள் தங்க அரசாங்க இடம்/வீடு கொடுக்கப்படும்.  இவர்களுக்கும் மாதமாதம் ரேஷன் வழங்கப்படும் அதனை கொண்டு அவர்கள் வாழ வேண்டும் அரசாங்க ஊழியம் செய்ததற்கு அவர்களுக்கு சம்பளம் என்று சொற்ப தொகை  கிடைக்கும்.

ஒரு அவுட்டர் பார்ட்டியை சேர்ந்தவர் இன்னொரு அவுட்டர் பார்ட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அரசாங்கத்தை சேர்ந்தவர்கள். தங்கள் குழந்தை மீது எந்த உரிமையும் அவர்கள் கொண்டாட கூடாது.

இன்னர் பார்ட்டி
----------------------

ஒசோனியாவின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் இரண்டு சதவீதத்துக்கும் குறைந்தவர்கள். இவர்கள் மேல் மட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு என்று ரேஷன் இருப்பதில்லை. வீடு/சொத்து வாங்கிகொள்ளலாம். பிடித்ததை சாப்பிடலாம். இவர்களை யாரும் கண்காணிப்பதில்லை என்பதால் டெலி ஸ்க்ரீன் இருப்பினும் உபயோகப்படுத்துவதில்லை.

பிக் பிரதர்
--------------

எல்லாவற்றிக்கும் தலைவர் இவர். இவர் யார் என்று மிடில் கிளாஸ் மக்களுக்கோ ப்ரோல்ஸ் க்கோ தெரியாது. ஆனாலும் அவருடைய படம் எல்லா வீடுகளிலும், தெருக்களிலும் மாட்ட பட்டு இருக்கும்.

நாவலின் கதாநாயகன் வின்செண்ட் ஸ்மித் ஒரு மிடில் கிளாஸை சேர்ந்தவர். அவர் MiniTrue எனப்படும் ட்ருத் மினிஸ்ட்ரியில் வேலை பார்க்கிறார். இவரை போல மினிட்ருதில் வேலை பார்ப்பவர்களின் வேலை வரலாற்றை மாற்றி அமைப்பது. அதாவது, பிக்ப்ரதர்க்கு எதிராக எதேனும் வரலாற்றில் இருந்திருந்தாலோ அல்லது போராட்டம் செய்திருந்தாலோ அவர் unperson ஆக்கபட்டுவிடுவார், அதாவது கொல்லப்பட்டு அவர் இருந்ததற்கான சுவடுகள் அழிக்கப்பட்டு விடும்.

இவருக்கு அந்த நாட்டில் நடக்கும் அக்கிரமங்கள் பிடிப்பதில்லை. அந்த ஆபிஸில் இருக்கும் ஜுலியாவை இவருக்கு பிடித்து போகிறது. இருவருக்கும் பிக் பிரதரின் மீதும் அவரின் அரசாங்கதின் மீதும் இருவருக்கும் வெறுப்பு, ஏனெனில் அவர்களுடைய பெற்றோரை அரசாங்கத்தை எதிர்த்ததற்காக unperson ஆக்கி இருப்பார்கள். ரகசியமாக காதலிக்கும் இவர்களை அரசாங்க அதிகாரியாக இருக்கும் ஓப்ரெயன் சந்தித்து அவருக்கு உதவுவதாக கூறுகிறார். சில நாட்கள் கழித்து அவர்கள் இருவரும் அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாக கைது செய்யப்படுகிறார்கள்.

அவர்கள் இருவரும் பலமுறை எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டு கொடுமைபடுத்தபடுகிறார்கள்.  ரூம் 101 எனப்படும் கொடுமை சேம்பரில் வைத்து மூளை சலவை செய்யப்படுகிறார்கள். முடிவாக அவர்கள் சிறையை விட்டு வெளியே வரும் போது பிக்ப்ரதர் அடிமைகளாக விசுவாசிகளாக வருகின்றனர்.

கதை முடிகிறது.

இந்த கதை ஒரு கற்பனை தான் என்றாலும் ரஷ்ய நாட்டில் ஸ்டாலின் ஆட்சியில் நடந்த பல சம்பவங்கள் இந்த நாவல் மூலம் மறைமுகமாக தெரிவிக்கப்படுன்றன.

உதாரணமாக..

கீழே காட்டப்படும் இரண்டு புகைப்படங்களும் unperson ஆக்கப்படுவதற்கான ஒரு உதாரணம்.