Showing posts with label J.R.R.Tolkien. Show all posts
Showing posts with label J.R.R.Tolkien. Show all posts

Friday, March 19, 2010

Lord of the Rings ம் நானும்-2 (Fellowship of the ring)

` சென்ற பதிவின் தொடர்ச்சி

LoTR , நம்ம பொன்னியின் செல்வன் போல பல பாகங்கள் கொண்டது. அப்புறம் அதில கிளை கதைன்னு பல கதைகளும் உண்டு.

எனக்கு கதை புத்தகத்தை கொடுத்த என் labmates அனைவரும் இந்த புத்தகத்தை தங்களின் தாய்மொழியில் படித்து இருந்தனர். எனக்கு இதனை படிப்பது குதிரை கொம்பாக முதலில் இருந்தது. LoTR புத்தகம் Classic English இல் எழுதப்பட்டது. ஒவ்வொரு வரிக்கும் எனக்கு முதலில் dictionary தேவைப்பட்டது. நான் அதிக நாள் படித்த ஒரே புத்தகம் இதுதான்.

LoTR இன் முதல் பாகம் "Fellowship of the Ring"

கதை ஆரம்பிக்கும் போது காணாமல் போன Dark lord Sauron இன் மாயமோதிரம் hobbit இனத்தை சேர்ந்த Bilbo Baggins கிட்ட இருக்குது. Hobbit மக்கள் Shire எனப்படும் ஒரு ஊரில் வசிக்கிறார்கள். அவர்கள் அனைவரும் குள்ள வடிவில் இருக்கிறார்கள்.

மாய மோதிரம், எப்பொழுது தன் எஜமானரிடம் சேரலாம் என்று காத்துகொண்டு இருக்கிறது. அதனை யாராவது அணிந்து கொண்டுவிட்டால், அணிந்தவர் அடுத்தவர் கண்ணுக்கு தெரியமாட்டார், ஆனால் Sauron இன் கண்ணுக்கு மட்டும் தெரிந்து விடுவார். அப்படி, அந்த மோதிரம் எஜமானருக்கு தன் இருப்பிடத்தை காட்டிகொடுக்கும் சக்தி கொண்டதாக இருக்கிறது.




அந்த மோதிரம் Bilbo வை 111 வயசாகியும் இளமையா வச்சிருக்குது. Bilbo வின் 111 ஆவது பிறந்தநாளை கொண்டாட Shire மக்கள் அனைவரும் திரள்கிறார்கள். அப்போது Bilbo வின் நண்பரான Gandolf the grey வருகிறார். இவர் ஒரு Witch (மந்திரவாதி). தன்னுடைய பிறந்தநாளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் Bilbo ஒரு மேஜிக் காட்டப்போவதாக அறிவித்து விட்டு அந்த மோதிரத்தை அணிந்து மறைந்து விடுகிறார். உடனே அது தன் இருப்பிடத்தை Sauron கண்களுக்கு காட்டி விடுகிறது. Sauron இன் அடியாட்கள் (Dark forces) மோதிரத்தை தேடி Shire க்கு கிளம்புகிறார்கள்.




பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்தவுடன் அந்த மோதிரத்தை கதாநாயகனான Frodo விடம் கொடுத்து விட்டு தான் யாத்திரை செல்ல இருப்பதாக Uncle Bilbo அறிவிக்கிறார். அந்த மோதிரத்தின் சக்தியை பார்த்த Gandolf அந்த மோதிரம் Sauron உடையது தானா என்று பரிசோதிக்கிறார், அது Sauron உடையது என்று உறுதி செய்து கொண்ட பின் அதனை எடுத்து சென்று அழிக்க வேண்டும் என்று கூறுகிறார். அதற்காக Frodo வை Rivendell என்ற ஊருக்கு மோதிரத்துடன் வருமாறு சொல்லிவிட்டு எங்கோ சென்று விடுகிறார். Frodo வுடன் அவன் நண்பர்கள் Sam, Pipin, Merry ஆகியோரும் சேர்ந்து கொள்ள Rivendell பயணம் ஆரம்பிக்கிறது.

மோதிரத்தை Frodo விடம் கொடுத்த பின் Gandolf அந்த மோதிரத்தை பற்றி மேலும் அறிந்து கொள்ள தன் நண்பனான Saruman னிடம் செல்கிறார். Saruman, Gandolf ஐ விட அதிகம் சக்தி கொண்டவன். அவன் Sauron இன் கைப்பதுமை ஆகிவிட்டது, Gandolf இக்கு தெரிய வருகிறது. அவன் Orcs எனப்படும் பேய் முகம் கொண்ட ஒரு இனத்தவரை அடிமைகள் ஆக்கிக்கொண்டு Sauron இன் சாம்பிராஜியத்தை பரப்ப முயல்கிறான். அவன் Gandolf ஐயும் தன் போல Sauron பக்கம் சேருமாறு அழைக்கிறான். அதனை Gandolf மறுத்துவிட அவரை Isengard நகர கோபுரத்தின் உச்சியில் சிறை வைத்து விடுகிறான்.

இதற்கிடையில் Rivendell செல்வதற்குள் Frodo தெரியாமல் அந்த மோதிரத்தை போட்டு விடுகிறான், அது தன் எஜமானனுக்கு எங்கு இருக்கிறது என்று தெரிவித்து விடுகிறது, Sauron இன் அடியாட்கள் Frodo வை துரத்துகின்றனர். Strider என்று அழைக்கப்படும் Aragorn இன் உதவி அவர்களுக்கு கிடைக்கிறது. Aragorn மனித இனத்தை சேர்ந்தவன் நல்ல பலசாலி. Rivendell பயணத்தில் ஒரு நாள் Nazgûl என்ற Dark forces இன் தலைவனின் கத்தியால் Frodo குத்தபடுகிறான். அவன் சாக கிடக்கும் போது Elrond என்னும் Elf இன அரசன் Frodo வை பிழைக்க வைக்கிறார். மற்ற அனைவரும் Aragorn இன் உதவியுடன் Rivendell க்கு வருகின்றனர். கோபுரத்தின் உச்சியில் சிறைவைக்கப்பட்ட Gondolf தன் ரகசிய பருந்து படையின் உதவியுடன் தப்பித்து Rivendell வருகிறார்.

Rivendell அரசன் Elrond, Middle-earth இல் வசிக்கும் அனைத்து இன மக்களின் பிரதிநிதிகளையும் அழைத்து Sauron இன் மோதிரத்தை எப்படி அழிப்பது என்று கூட்டம் போடுகிறான். அப்போது Gandolf இதனை உடைக்கவோ, எரிக்கவோ, உருக்கவோ முடியாது என்றும், இந்த மோதிரம் Mordor நாட்டில் இருக்கும் Mount Doom இல் உள்ள நெருப்பு ஆறில் உருவாக்கப்பட்டது என்றும். அந்த நெருப்பு ஆறு மட்டுமே அதனை அழிக்க முடியும் என்று கூறுகிறார். அந்த மலையை Sauron இன் கண்கள் பாதுகாப்பதாகவும், அதன் பார்வையில் இருந்து தப்பித்து Mount Doom செல்வது கடினம் என்றும் கூறுகிறார். யார் அதனை எடுத்து செல்வது என்று அனைவருக்கும் சண்டை நடக்கிறது.

அப்போது Frodo எதோ நினைவு வந்தவனாக, நானே எடுத்து செல்கிறேன் என்று சொல்கிறான். அவனுக்கு துணையாக Elf இனத்தை சேர்ந்த Legolas ம், Dwarf இனத்தை சேர்ந்த Gimli யும், மனித இனத்திற்கு Boromir ம், Aragorn ம், Witch இனத்திற்கு Gandolf ம், Frodo வின் நண்பர்களும் சேர்ந்து ஒரு group உருவாகிறது. அதனை " Fellowship of the Ring" என்று Gandolf அறிவிக்கிறார்.


(The Fellowship of the Ring: Orlando Bloom (Legolas), Dominic Monaghan (Merry), Sean Bean (Boromir), Billy Boyd (Pippin), Ian McKellen (Gandalf), Elijah Wood (Frodo), Viggo Mortenson (Aragorn), John Rhys-Davie (Gimli) and Sean Astin (Samwise) in The Lord of the Rings: The Fellowship of the Ring (2001))


அப்பாடா ஒரு வழியா முதல் பாகத்தின் தலைப்பு வந்திடுச்சு, புக் முடிஞ்சிருச்சுன்னு நினைச்சேன். ஆனா, இன்னும் கொஞ்சம் கதை உண்டு இந்த புக் முடிய.

இந்த group தன் பயணத்தை தொடர்கிறது. Saruman, இந்த பயணத்தை பற்றி தெரிந்து கொண்டு கடுமையான பனிப்பொழிவை உண்டாக்குகிறான். அதனால் அவர்களால் வழக்கமான பாதையில் செல்ல இயலாமல் போகிறது. அவர்கள் மலைக்குகை பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள். அதனை கடக்கும் போது நடக்கும் சண்டையில் Gandolf, Morgoth Bauglir என்ற ராட்சனதனால் நெருப்பு மலை உச்சியில் இருந்து விழுந்து விடுகிறார். Fellowship உடைய ஆரம்பிக்கிறது. Boromir, Frodo விடம் இருந்து அவன் மோதிரத்தை திருட முயற்சிக்கிறான், அதனால் நம்பிக்கை இழந்த Frodo தப்பித்து தன் நண்பனான Sam உடன் தனியாக பயணத்தை தொடர்கிறான். அடுத்து Orcs இனத்தவருடன் நடக்கும் ஒரு போரில் Boromir கொல்லப்படுகிறான்.

Fellowship of the Ring படம் முடிகிறது.

---தொடரும்

Lord of the Rings ம் நானும் -1


போன பதிவில் LoTR (Lord of the Rings) பற்றியும் ஆராய்ச்சி மாணவர்கள் படும் இம்சை பற்றியும் எழுதிட்டு, அப்படியே போனா எப்படின்னு தோணிச்சு அதான் இந்த பதிவு :)))
( படிக்கிறவங்கள கொடுமை படுத்தாம விடுறதில்லைன்னு ஆத்தா மகமாயி முன்னால சத்தியம் செஞ்சு இருக்கோம்ல நாங்க)

LoTR என்றொரு புத்தகம் இருக்கிறது, அது சினிமாவாக எடுக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்பது எனக்கு 2002 வரை தெரியாது. 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான் வெளிநாடு வந்து இரண்டு மாதங்களே ஆன நிலை, 2001 ஆம் ஆண்டு டிசம்பர்இல் தான் LoTR இன் முதல் பாகமான "Fellowship of the Ring" சினிமாவாக வெளிவந்து சக்கை போடு போட்டு கொண்டு இருந்தது. என்னுடைய labmates இருவர் நீ கட்டாயம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர். படம் தொடங்கிய போது எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. நேரம் செல்ல செல்ல எதோ கொஞ்சம் புரிந்தது (அதில் வரும் graphics ம் DTS சத்தமும் படத்தில் வரும் பேய் போன்ற முகங்களும் அன்று இரவு கனவில் வந்து என்னை பயமுறுத்தியது வேற விஷயம்)

பிறகு அடுத்த நாள் அப்பாடா தொல்லை விட்டது என்று நான் நினைக்க அதே labmates இல் ஒருவர் வந்து, இந்தா புத்தகம், இது LoTR ஐ உனக்கு அறிமுகப்படுத்தும் என்று "The Silmarillion" என்ற புத்தகத்தை கொடுத்து விட்டு போனார். எனக்கு LoTR யே புரியல, இதில எங்க அறிமுகப்படுத்துறது என்று மனதுக்குள் சொல்லி கொண்டு அதனை வாங்கி வைத்து கொண்டேன். (கடைசி வரை அதனை நான் படிக்க வில்லை)

பிறகு அடுத்த மாதமே என்னுடைய whole group ம் சேர்ந்து அதே படத்திற்கு (விதி செய்த சதி) நான் வரவில்லை என்று பல தடவை சொல்லியும் கேட்க்காமல் அழைத்து சென்றது.
இப்பொழுது படம் எனக்கு இன்னும் கொஞ்சம் புரிந்த மாதிரி இருந்தது. (எங்கு, எங்கு பேய்முகம் வரும் என்று தெரிந்ததால் நாள் கண்ணை மூடி கொண்டு விட்டேன்)

அப்புறமும் என்னை விடாமல் துரத்தியது LoTR, இப்போது வேறு வடிவில். நாங்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து எப்போதும் சாப்பிட செல்வோம், சாப்பிட்டு விட்டு ஒவ்வொருவரும் முட்டை வடிவில் சாக்லேட் ஒன்று இருக்கும் அதனுள் LoTR action figures இருக்கும், அதனை collect செய்வது எதோ தங்கத்தை சேகரிப்பது போல எல்லாரும் செய்வார்கள், அந்த சுழலில் நானும் மாட்டி கொண்டேன். (நான் படித்து முடித்து விட்டு வரும் போது ஒரு பை நிறைய LoTR action figures என்னிடம் இருந்தது) அவ்வாறு சேர்த்த பொம்மைகளை என் desk முழுக்க எதோ கொலு போல வைத்து இருப்பேன்.

இப்படி தொடர்ந்து நம்மை துரத்துதே LoTR அப்படி என்ன தான் அதில இருக்கு? அப்படின்னு ஒரு கை பாத்திடுவோம்னு, LoTR இன் முதல் புத்தகமான Fellowship of the Ring படிக்க ஆரம்பித்தேன். ஏற்கனவே படம் வேறு பல முறை பார்த்ததால் கதை கொஞ்சம் புரிந்தது.

இந்த புத்தகத்தை எழுதியவர் J.R.R. Tolkien அவர்கள். LoTR கதை நடப்பது middle earth என்ற பூமி போன்ற ஒரு உலகத்தில். அதில் பலவகையான மனிதர்கள், மனிதர்கள் போன்றவர்கள் வசிக்கிறார்கள். அவர்களின் தலைவர்கள் எல்லாம் சேர்ந்து தங்கள் இனத்தை பாதுகாக்க மோதிரங்களை (Rings) உருவாக்குகிறார்கள். ஒவ்வொரு race ம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான Rings ஐ பெருகின்றனர். அவற்றில் ஒரு கெட்ட அரசன் Sauron (Dark lord) இவர்களுக்கு எல்லாம் தெரியாமல் எல்லா மோதிரங்களையும் அடிமை படுத்தும் ஒரு மோதிரத்தை உருவாக்குகிறான். அதுவே Lord of all the rings. இந்த மோதிரத்தை கொண்டு எல்லா மனிதர்களையும், மனிதர்கள் போன்றவர்களையும் அடிமைபடுத்த முயல்கிறான். இதனை தெரிந்து கொண்ட அனைவரும் அவனுக்கு எதிராக வெகுண்டெழுந்து போர் செய்கின்றனர், முடிவில் Sauron கொல்லபடுகிறான். அவன் மோதிரம் தொலைந்து போகிறது, அவன் இறந்தாலும் அவன் ஆவி அந்த மோதிரத்தை தேடுகிறது.

இதுவரை நான் சொன்னது LoTR இன் முன்கதை மட்டுமே , இப்பவே கண்ண கட்டுதே! என்று தான் முதலில் இருந்தது எனக்கு.
---தொடரும்