Showing posts with label அமெரிக்கா. Show all posts
Showing posts with label அமெரிக்கா. Show all posts

Friday, January 13, 2017

"ஜல்லிக்கட்டு தமிழர்கள் அடையாளம் " அட்லாண்டாவில் ஒலித்த கோஷம் !

நாமெல்லாம் எதுக்குங்க தமிழ்ல ப்ளாக் எழுதுறோம், இன்னும் நாமெல்லாம் தமிழை பிடிச்சிட்டு இருக்கோம், ஏனென்றால் நாம் தமிழர் என்ற அடையாளம் எங்கு சென்றாலும் மறைவதில்லை. அது எந்த நாட்டுக்கு சென்றாலும் இருக்கும். அதே போல மற்றொரு அடையாளம், காலம் காலமாக நடைபெறும் ஒன்று, "ஏறு தழுவுதல்" என்ற பண்டைய பாரம்பரியம். ஏற்கனவே, ஒவ்வொரு விஷயமாக ஒவ்வொரு தலைமுறையிலும் மறைந்து, மருகி வரும் இந்த காலத்தில், இப்படி ஒரு பாரம்பரியமே நடைபெற கூடாதென்ற நிகழ்வு தடுக்கப்படவேண்டும் என்ற எண்ணத்தில், ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியம், என்ற கோஷத்துடன் ஜல்லிக்கட்டை ஆதரித்து அட்லாண்டா வாழ் தமிழர்கள் இன்று அட்லாண்டா,"ஷாரன் பார்க்கில்" ஒன்று கூடி தங்களின் ஆதரவை தெரிவித்த நிகழ்வு நடந்தது. தமிழர்களின் அடையாளம் "ஜல்லிக்கட்டு" அதனை தொடர்ந்து நடத்துவோம். . என்று கூடிய தமிழர்கள் சார்பாக,  இங்கே சில புகைபடங்கள்.  










நமது பாரம்பரியம் ஜல்லிக்கட்டு அதனை தொடர்ந்து நடத்தவேண்டும் என்ற எனது கருத்தையும் இங்கு பதிவு செய்கிறேன்.

நன்றி 

Thursday, November 10, 2016

சைலன்ட் மெஜாரிட்டியும் , அமெரிக்க இந்தியர்களும்!!

இன்னும் மீள வில்லை!, அமெரிக்க தேர்தல் கொடுத்த தாக்கங்களில் இருந்து!. ஒரு பெண்மணி ப்ரெசிடெண்ட் ஆக வரவேண்டும் என்று நான் போட்ட முதல் ஓட்டும், பெண்களை அவமதிப்பாக நடத்துபவர் வரக்கூடாதென்ற என்னுடைய எண்ணங்களும் தவிடு பொடியாகிவிட்டிருந்தன.

ஏனெனில், எல்லா புள்ளியியலும், அனலிடிக்ஸ்ம், கணிப்புகளும் அடித்து நொறுக்க பட்டிருக்கின்றன. என்ன நடந்தது ஏது நடந்தது என்று இன்னும் கணிக்க இயலவில்லை.  ஆனால் என்னவோ ஒன்று நிகழ்ந்து இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். ஒவ்வொரு முறையும் கணிப்பு சரியாக இருக்கும் என்று ஜனநாயக கட்சி நம்பி இருந்தது. அதுவும், ஒபாமாவின் அலைக்கு பிறகு, டேட்டா அனாலிசிஸ் இல் நிறைய காசை ஹிலாரி அவர்கள் செலவழித்தார். நிறைய சர்வே, மக்களின் நாடித்துடிப்பு என்ன என்றெல்லாம் நிறைய டேட்டா சேகரிக்க பட்டது.

ஆனால், இப்படி சர்வே எடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் மக்கள் என்பது நிறைய சர்வே எடுப்பவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. அதே போல, இப்படி அவர்கள் எடுத்த சர்வேயும், நிறைய அர்பன்/நகர்ப்புற மக்களிடம் மட்டுமே இருந்திருக்கிறது. நிறைய அமெரிக்க கிராம மக்களிடம் எப்படி வாழ்க்கை தரம் இருக்கிறது என்று கேட்டார்களா என்று தெரியவில்லை. ஆனால், ப்ளூ காலர் வேலை எனப்படும் கூலி வேலை செய்யும் அன்றாடம் காட்சிகளும் அமெரிக்காவில் உண்டு, அவர்களின் வருட சம்பளம் "25000$" கும் குறைவு என்று ஏனோ நிறைய புள்ளியியல் சர்வே எடுக்கும் மக்கள் மறந்து விட்டு இருக்கின்றனர். இந்த மக்கள், தங்களின் "சைலன்ட் மெஜாரிட்டி ஐ" காட்டி விட்டு இருக்கிறார்கள். இது ஒரு பெரிய பிளவு. அமெரிக்காவில் முக்கால்வாசி பேர் நடுத்தர மக்கள்.   இது, அமெரிக்கா வரும்போதே H1B visa, வருட சம்பளம் குறைந்தது 50-70K என்று வரும் இந்திய சாப்ட்வேர் மக்களை காணும் சராசரி சம்பளம் வாங்கும் வெள்ளை அமெரிக்கன் கண்களுக்கு உறுத்தவே செய்யும். அதிலும் நம் மக்களுக்கு சொல்லவே வேண்டாம், வந்தவுடன் ஹோண்டா, டயோட்டா என்று ஜப்பான் கார்கள் வாங்கி, லேப்டாப்,....என்று பலதும் வாங்கி, தங்களின் "பலத்தை" காட்டுவார்கள்.  இது இந்தியர்கள் என்று மட்டும் இல்லை, இங்கே இம்மிகிரேண்ட் ஆக வந்த, வரும் பல நாட்டு மக்களுக்கும் பொருந்தும்.

டிரம்ப் அவர்களின் மிகப்பெரிய பலம் அவர், கஷ்டப்படும் சராசரி நடுத்தர அமெரிக்காவின் பிரதிநிதி தான், என்று பேசியது. இதனை கேட்ட "சைலன்ட்" மக்களுக்கோ, தங்களின் குரலையும் கேட்க, தங்களின் ஆதங்கத்தை உணர ஒருவர் இருக்கிறார், என்று நினைக்க வைத்து இருக்கிறது.  அங்கே டிரம்ப் வெற்றி பெற்று இருக்கிறார்.

photo from google images

இன்னொரு விஷயம், ஒரு "பெண்" ணை  எப்படி அவ்வளவு பெரிய பொறுப்பில் உக்கார வைப்பது என்ற எண்ணம். உதாரணமாக, நாங்கள் வசிக்கும் பகுதியில் நடந்த ஹாலோவீன் பார்ட்டியில், எங்களின் பக்கத்து வீட்டுக்கார வயதான வெள்ளை பாட்டி  சொன்ன ஒரு வார்த்தை.
"டிரம்ப் ஒரு ஆண்" அவர் கீழ்த்தரமாக பெண்களை பற்றி பேசியதாக வரும் வார்த்தைகள் எல்லாம், "மென்ஸ் டால்க்" அது சாதாரணம். இதுக்காக, அவரை வெறுப்போம் என்று தப்பு கணக்கு போடுறாங்க. "பெண்களால் நல்ல முடிவெடுக்க முடியாது, அமெரிக்காவின் எதிர்காலத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைக்க முடியாது".

இதனை கேட்ட நானோ, ஜியார்ஜியா ஒரு பைபிள் பெல்ட்  ஸ்டேட், அதனால் மக்கள் இப்படி பேசுறாங்க, மத்த ஊர்ல மக்கள் இப்படி பேச மாட்டாங்க என்று  நம்பினேன். ஆனால், நிறைய பெண்களே, பெண்களுக்கு ஓட்டு போடவில்லை என்று தெரிகிறது.

இது கூட ஒரு வகையில் ஒப்பு கொள்ள முடியும். ஆனால், எனக்கு ரொம்ப வெறுப்பை தந்தது, இங்கு வந்து குடியுரிமை வாங்கி செட்டில் ஆன பல அமெரிக்க இந்தியர்களும் , "டிரம்ப்" தான் பெஸ்ட் என்று என்னிடம் சொன்னது. அதாவது தானும் ஒரு டிபிகல் "அமெரிக்கன்" என்பது போல காட்டி கொள்ளுவது. "அவர் வந்தால் டாக்ஸ் குறையும்", பண புழக்கம் வரும். அதனால் "டிரம்ப்" க்கு ஓட்டு போடு என்று வந்து சொன்னது.

எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை. எப்படி இவர்கள், ஒரு 5-10 வருடத்துக்கு முன்பு குடியுரிமை வரும் முன், எப்படியாவது, க்ரீன் கார்டு வந்துவிடாதா?, வேலை நிரந்தரம் ஆகி விடாதா?, என்று இங்கிருப்பவர்கள் பாஷையில் சொல்ல வேண்டுமானால், நீ ஒரு "ஏலியன்" என்று தவியாய் தவித்த மக்கள். தற்போது, குடியுரிமை வந்து விட்டதால், மற்றவர்களை பார்த்து, அவர்களுக்கும் ஒரு குடியுரிமை வேண்டும் அதற்க்கு நம்மால் ஆன முயற்சிகள் செய்ய வேண்டுமே, என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல். தானும் ஒரு "அமெரிக்கன்" என்று நடந்து கொள்ளுவது எவ்விதம் என்று தெரியவில்லை.

முடிவாக நான் கேட்ட ஒரு  விஷயம். ஆபீசில், தேர்தல் முடிவுகளை விவாதித்தபடி, லிப்ட் க்கு நின்று கொண்டு இருந்தேன். அப்போது அங்கு இருந்த ஒரு பெண் தாய்லாந்து அல்லது பிலிப்பைன்ஸ் பெண் என்று நினைக்கிறன். ரொம்ப சோகமாக, "ப்ளீஸ் அதனை குறித்து பேசாதீர்கள், நானும் என் கணவரும் கனடா சென்று விட போகிறோம், ஏனெனில் அவர் ஒரு முஸ்லீம்" என்று கூறினார்.
இதனை நான் கேட்ட பிறகு, டிரம்ப் வெற்றி பெற போகிறார் என்ற செய்தி வந்து கொண்டிருந்த நேரத்தில், கனடா இம்மிகிரேஷன் தளம் நிறைய ஹிட் வந்ததால் டௌன் ஆகி விட்டது என்ற செய்தி படித்தது ஞாபகம் வந்தது.

முடிவாக "God Save us "

நன்றி.

டிஸ்கி

இது என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

Sunday, March 27, 2016

அமெரிக்க மற்றும் இந்தியா பள்ளி ஆண்டு விழா பெயரில் நடக்கும் கூத்துகள்!

இது நோர்தேன் ஹெமிஸ்பியர் இல் இருக்கும் பல நாடுகளில் பள்ளி இறுதி தேர்வு நடக்கும் காலம்.

ஒவ்வொரு நாட்டிலும் அதன் தட்ப வெப்ப நிலை பொறுத்து வேறு வேறு மாதங்கள் பள்ளி இறுதி தேர்வு நடக்கலாம். இந்தியாவில் பல பள்ளிகளில் முக்கால் வாசி நேரம் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் பள்ளி இறுதி தேர்வு கோடை விடுமுறை மாதங்கள் ஆகும். ஏனெனில் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் கோடை காலம் ஏப்ரல் மே மாதங்கள் என்பதால்.

அமெரிக்காவில் பல மாகாணங்களில் மே, ஜூன் மாதம் தான் பள்ளி இறுதி தேர்வு அல்லது பள்ளி முடிவு ஆகி ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் விடுமுறை இருக்கும். ஏனெனில் அமெரிக்காவில் ஜூன் ஜூலை மாதங்கள் தாம் கோடை காலம். கனடாவில் செப்டம்பர் மத்தியில் பள்ளி திறக்கும் என்று நினைகிறேன்.  

நிற்க, இந்த பதிவு கோடை காலங்கள் எப்படி நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன என்பதனை குறித்தவை அல்ல. மாறாக பள்ளி ஆண்டுவிழாக்கள் என்ற பெயரில் செய்யும் சில விஷயங்கள்/கூத்துக்கள் குறித்தவை.

இந்திய பள்ளி ஆண்டுவிழாக்கள் 

இந்தியாவில் பல பள்ளிகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பள்ளி ஆண்டுவிழாக்கள் நடத்துகின்றன. அதில் நம் குழந்தைகளும் நடனம் ஆடட்டும் என்று பல பெற்றோரும் அதனை ஊக்க படுத்துகின்றனர். நான் சொல்வது எலிமெண்டரி ஸ்கூல் ஆண்டுவிழாக்கள் என்றாலும் பல உயர் நிலை பள்ளிகளும் இதனை நடத்துகின்றன என்று அறிய முடிகிறது. நம்ம குழந்தைகளுக்கும் ஒரு சான்ஸ் என்று நிறைய பெற்றோர் இப்போது நினைப்பதை பார்க்க முடிகிறது. இதனை சாக்காக வைத்து கொண்டு தனியார் பள்ளிகள் செய்வது சில நேரங்களில் ஓவர். முதலில், ஆண்டுவிழாக்களில் குழந்தைகளுக்கு டிரஸ் நாங்களே கொடுத்து விடுவோம், நீங்கள் எங்களுக்கு குறிப்பட்ட தொகை மட்டும் கொடுத்துடுங்க என்பார்கள். சரி நமக்கு தொல்லை விட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொடுக்க தொடங்கினால் பட்டியல் நீளும்.

டிரஸ்க்கு, உபயோகிக்கும்பொருட்களுக்கு, டான்ஸ் சொல்லி கொடுப்பவருக்கு என்று ஒவ்வொருன்றுக்கும் தனி தனியாக பணம் கேட்பார்கள். இதில் முக்கால் வாசி நேரம் வெளியில்  இருந்து எந்த டான்ஸ் மாஸ்டரும் வர மாட்டார், மாறாக உள்ளுக்குளே இருக்கும் பள்ளி ஆசிரியர் நடனம் சொல்லி கொடுப்பார்.  அதில் காசு பார்பார்கள் பள்ளி நிர்வாகம். அடுத்து பிள்ளைகளுக்கு எடுக்கும் உடைகளுக்கு என்று குறைந்தது 1500 இல் இருந்து 2500 வரை வசூலிப்பார்கள். ஆனால் LKG, UKG, முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு என்று ஒரே மாதிரி டிரஸ் வாங்க எப்படியும் ஆகும் செலவு 600 இல் இருந்து 800 வரை மட்டுமே ஆகும். மீதி உள்ள பணம் எல்லாம் பள்ளிக்கு. அதே போல ப்ரோப்ஸ் அதற்க்கும் சேர்த்து காசு அடிக்கிறார்கள்.

இப்படி பெற்றோரிடம் அடிக்கும் காசிலேயே அவர்களின் தனியார் பள்ளிக்கு விளம்பரம் செய்து கொள்ளுகிறார்கள். முடிவாக பங்கு பெரும் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், பென்சில் பாக்ஸ் போன்ற பரிசுகள் கொடுத்து நல்ல பேரு வாங்கி கொள்ள முனைவது.

அமெரிக்க தமிழ் பள்ளி ஆண்டுவிழாக்கள் 

சரி இந்தியாவில் நடக்கும் பள்ளி ஆண்டுவிழாக்கள் தாம் அப்படி இங்கெல்லாம் ஆண்டு விழாக்கள் நடக்குமா? என்று கேட்பவர்களுக்கு. ரெகுலர் பள்ளிகளில் ஒரு சில நேரம் பாடல்கள் அல்லது மியூசிக் ரீசைடல், கோரஸ் மியூசிக் போன்றவை நடக்கும். ஆனால் இந்திய அமெரிக்கா வார இறுதி நாள் மொழி பள்ளிகளில் எல்லாம் நம்ம ஊரில் நடப்பது போல குழந்தைகள் பங்கு பெரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடக்கும். இறுதியில் பள்ளி இறுதி வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியும்  நடக்கும்.

இது போன்ற நிகழ்ச்சிகளை பள்ளிகள் நடத்துவது இல்லை, மாறாக உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களிடம் ஒரு குரூப் இருந்தால் நீங்களே பதிவு செய்து பங்கு பெறுங்கள் என்று விண்ணப்ப படிவம் பள்ளியில் இருந்து அனுப்புவார்கள். அதற்க்கு பிறகு யாரெல்லாம் விண்ணப்பம் அனுப்புகிறார்களோ அவர்களிடம் யார் யார் பங்கு பெறுகிறார்கள், குழந்தைகள் பெயர்கள் , யார் ஒருங்கிணைபாளர்கள் என்று பதிவு செய்கிறார்கள். பின்னர் பள்ளியின் சார்பில் எவென்ட் ஒருங்கிணைபாளர்கள் குழு நடன ஒருங்கினைபாளர்களை தொடர்பு கொள்ளுவார்கள். இதில் அனைவரும் தன்னார்வ தொண்டர்கள் என்பதால் பணம் என்னும் விஷயம் இருப்பதில்லை.

அமெரிக்காவில் மட்டும் பல பல தமிழ் பள்ளிகள் "கலிபோர்னியா தமிழ் அகாடமி" பாட திட்டங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்கின்றனர். நாங்கள் இருக்கும் ஜியார்ஜியாவில் தமிழ் ஒரு மொழி பாடமாக படிக்கலாம் கிரெடிட் வாங்கி கொள்ளலாம் என்பதால் ஒவ்வொரு வருடமும் நிறைய குழந்தைகள் பள்ளி இறுதி தெரிவு முடிந்து பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும்.

அடடா, பரவாயில்லையே வெளி நாட்டுக்கு சென்றும் தமிழை எப்படி எல்லாம் வளர்கிறார்கள். பணம் என்பதே இல்லை போல, எல்லாரும் எல்லாமும் சமம்,  என்று யாராவது நினைக்க ஆரம்பித்தால்..ப்ளீஸ்  ஸ்டாப். ஏனெனில் நான் மேலே சொன்னவை எல்லாம் நல்ல விஷயங்கள் அல்லது அனைவராலும் பரப்பப்படும் விஷயங்கள் மட்டுமே.

இங்கும் பணம் என்ற ஒன்று உண்டு அது பள்ளிகளிடம் இருந்து கேட்கபடுவது இல்லை. மாறாக "தமிழ் சங்கங்கள்" இதனை கேட்கும். உதாரணமாக, தமிழ் பள்ளிகள் அனைத்தும் தமிழ் சங்ககளின் கீழ் இயங்குகின்றன என்பதால் ஆண்டு விழாக்கள் எல்லாம் தமிழ் சங்கங்கள் நடத்து கின்றன.  ஒவ்வொரு ப்ரோக்ராமும் நடன குழுக்களை சார்ந்தது, அவர்களே குழந்தைகள் துணி மணி, ப்ரோப்ஸ், எல்லாம் கொண்டு வர வேண்டும்.

2 மணிக்கு ப்ரோக்ராம் ஆரம்பிக்கும் ஆனால் 1:30 கே பங்கு பெரும் அனைத்து நடன குழுக்களும் இருக்க வேண்டும் என்பார்கள். இதில் பங்கு பெற வரும் குழந்தைகள் அல்லது பெற்றோர்களுக்கு நாங்களே சாப்பாடு போடுகிறோம் வாங்கி கொள்ளுங்கள் என்பார்கள். சரி என்று நடன குழுக்களும் , பங்கு பெரும்  குழந்தைகளும் அங்கு சாப்பாடு வேண்டும் என்று புக் செய்தால் நடப்பது கொடுமை. 8$, 6$ என்று கேட்பார்கள், ஆனால் அவர்கள் கொடுக்கும் சாப்பாடு 1$ அல்லது 2$ மட்டுமே.  எதோ பிரசாதம் போல இருக்கும். இதுக்கு போய்  8$ ஆ கொடுமை என்று தலையில் அடித்து கொள்ள வேண்டும்.

இதனை தவிர நிறைய நகை, இஷா யோகா அல்லது சாப்பாட்டு கடை என்று விளம்பர ஸ்டால்கல் வைக்க அந்த அந்த கம்பனிகளிடம் இருந்து பணம் வாங்கி கொள்ளுவார்கள். அதனை தவிர ப்ரோக்ராம் அறிவிக்க என்று பெரிய ஸ்க்ரீன் வைப்பார்கள் ஆனால் அதில் முக்கால் வாசி நேரம் விளம்பரங்கள் மட்டுமே ஓடும். அனைத்தும் அட்வேர்டிசிங் பணம்.

நடக்கும் ப்ரோக்ராம் எல்லாம் அந்த அந்த நடன குழுக்களை சார்ந்தது என்பதால் தமிழ் சங்கத்துக்கு எந்த செலவும் இல்லை. பணிபுரிபவர்கள்  எல்லாரும் தன்னார்வ தொண்டர்கள், அதனால் சம்பளம் என்று எந்த செலவும் இருப்பதில்லை. விழா மேடை ஒலி ஒளி செட்டிங் போன்ற ஒரு சில செலவு விஷயங்கள் தவிர பெரிய செலவு என்று எதுவும் இருப்பதில்லை. அனைத்தும் கொள்ளை லாபம், தமிழ் சங்கத்துக்கு என்று சொல்லி கொள்ளுகிறார்கள். யாருக்கு செல்கிறதோ?

இது ஒரு புறம் இருக்க, பள்ளியில் இருக்கும்  எவென்ட் ஒருங்கினபாளர்கள் அல்லது ஒருங்கிணைபாளர்கள் குழு செய்யும் பாரபட்சம், ஐயோ சாமி என்று இருக்கும். அதாவது, அவர்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது அவர்களின் குழந்தைகள் பங்கு பெரும் நிகழ்சிகள் எனில் நல்ல டைம் ஸ்லாட் கொடுப்பது, அல்லது நிறைய நேரம் ஆட கொடுப்பது. அவர்களுக்கு தெரிந்த நடன குழுக்கள் மட்டுமே உற்சாக படுத்துவது மற்ற குழுக்கள் எனில், தற்பொழுது ஸ்லாட் இல்லை வேறொரு டைம் முயற்சி செய்யுங்கள், இல்லை இவ்வளவு நேரம் மட்டுமே கொடுக்க முடியும், இந்த பாட்டு நாங்கள் ஆட வைத்து இருக்கிறோம், வேறு ட்ரை செய்யுங்கள் என்று பாட்டை பாதியில் மாற்றுவது, வேறு குரூப் முதலிலேயே ஆட இருக்கிறார்கள், என்று பந்தா காட்டுவது.

ப்ரோக்ராம் நேரங்கள் எப்பொழுது நடக்கும் என்று தனக்கு தெரிந்த குழுக்களுக்கு மட்டும் அறிவிப்பது, மற்ற குழுக்களை கண்டு கொள்ளாமல் அல்லது செய்திகள் நிகழ்ச்சி நிரல்களை சொல்லாமல் விடுவது. என்ன டைம் எங்கள் ப்ரோக்ராம் என்று சென்று கேட்டாலும் எரிந்து விழுவது என்று..இந்த பந்தா பேர்வழிகள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாதவை.

உலகின் எந்த மூலை சென்றாலும் மக்களின் பணமும் பதவியும் அதிகார வேட்கையும் மாறாதவை என்பது திண்ணம்.


டிஸ்கி 

5 டு 6 வயது சிறு குழந்தைகள் வைத்து GATS தமிழ் பள்ளிகள் நடத்திய தமிழ் பள்ளிகள் ஆண்டு விழாவில் குழு நடன ஒருங்கினைபாளாராக இருந்து நான் அனுபவித்த விடயங்களின் தொகுப்பே இது. இது என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே.

Sunday, February 21, 2016

சாதியையும்/நிறமும், திருமணமும்,அரசியலும்-இந்திய அமெரிக்க ஒற்றுமைகள்.

ரொம்ப நாட்களாகவே இது எனக்கு தோன்றுவது உண்டு. அதாவது, இனமும், நிறமும், சாதியும் இந்தியாவிற்கு மட்டும் தான் சொந்தமானதா இல்லை வேறெங்கும் இருக்கிறதா என்று. இதனை சார்ந்த ஒரு நியூயார்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றும்  வாசிக்க நேர்ந்தது. அதன் விளைவே இது.

நான் இங்கு வந்த புதிதில் பல்கலைகழக காம்பஸ் இல் நிறைய கலப்பு ஜோடிகள் காணலாம். அதாவது, வெள்ளை-ஆசியன், வெள்ளை-இந்தியன், வெள்ளை-கருப்பு, வெள்ளை-சவுத் அமெரிக்கன்..அப்பொழுதெல்லாம், பரவாயில்லையே இங்கு நம்ம ஊர் போல சாதி, மதம் எல்லாம் இல்ல, என்று நான் நினைப்பது உண்டு. ஆனால், அப்படி சுற்றி திரிந்த பல காதல் பறவைகள் எத்தனை பேர் மண வாழ்கையில் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள் என்று பாருங்கள், கம்மி. ஆனால் வெள்ளை -வெள்ளை, கருப்பு-கருப்பு,மெக்சிகன் -மெக்சிகன், இந்தியன்-இந்தியன் ஜோடிகள் எனில் கட்டாயம் அவை திருமண வாழ்கையில் ஒன்று சேர தடை இருப்பதில்லை.

உதாரணமாக, ஒரு பைபிள் பெல்ட் ஸ்டேட் எனப்படும் தென் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் ஒரு வெள்ளை பைய்யன் ஒரு கறுப்பின பெண்ணை நான் விரும்புகிறேன் அவளை திருமணம் செய்ய விளைகிறேன் என்று சொன்னால் அவன் வீட்டில் கிடைக்கும் ட்ரீட்மென்ட் வித்தியாசமாக இருக்கும். நிறைய பேர் வீட்டில் அதனை ஒத்து கொள்ள மாட்டார்கள். என்னுடன் தற்போது வேலை பார்க்கும் ஒரு கறுப்பின பெண், தன்னுடைய வெள்ளை கணவர் வீட்டில் தனக்கு இருக்கும் வரவேற்ப்பை பற்றி சில நேரம் வருத்தபடுவது உண்டு. இந்த விசயத்தில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் பெரிய வித்தியாசம் என்று எதுவும் இல்லை. ஆனால், இங்கு இந்தியாவில் நடப்பது போல கௌரவ கொலைகள் எதுவும் நடப்பதில்லை என்றாலும், குடும்பத்தால் ஒதுக்க படுவார்கள் என்பது மட்டும் உண்மை.

அதே போல, எனக்கு தெரிந்து, யூத, முஸ்லிம் ஜோடிகள் எங்கேயும் பார்த்ததே இல்லை. கல்லூரி காம்பஸ் ஆகட்டும் அல்லது திருமணம் முடித்த பின்னர் ஆகட்டும். இது நடக்க வாய்ப்பே இல்லை அல்லது நான் பார்த்த வரை இல்லை. 

இந்தியாவிலாவது காதல் ஜோடிகள் சேர்ந்தாலும் மக்கள் பிரித்து வைத்து பார்த்து இருக்கிறேன், ஆனால் இங்கு இது போன்ற கலப்பு ஒத்து வராது என்று நினைத்தே எந்த யூத-முஸ்லிம் ஜோடிகளும் இணைவது இல்லை போல. ஒரு வேளை லிபரல் ஸ்டேட்ஸ் எனப்படும் நார்த் ஈஸ்ட் அல்லது கலிபோர்னியாவில் இது சாத்தியமா என்று தெரியவில்லை.

தற்போது இந்தியாவை எடுத்து கொள்வோம். நிறைய கூலி செய்து தன் பிள்ளைகளை படிக்க வைத்து ஒரு எஞ்சினீர் ஆக்கி, கீழ் மட்டத்தில் இருந்து தற்போது மிடில் கிளாஸ் ஆகி இருக்கும் பல குடும்பங்கள் எனக்கு தெரிய உண்டு. எனக்கு தெரிய பல கலப்பு காதல் திருமணங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. அவை எல்லாம் பார்க்கும் ஒரு வேளை இந்தியாவில் சாதி ஒழிந்து விட்டதோ என்று எண்ண தோன்றும். ஆனால் இது ஒரு மேம்போக்கான பார்வை மட்டுமே.

உதாரணமாக பல சாதி விட்டு சாதி கலப்பு திருமணம் நடக்கிறது. ஆயினும் அப்படி அங்கிகரிக்க படுகின்ற சில திருமணங்கள் எல்லாம் ஓரளவு ஒத்த சாதி திருமணங்கள் தாம். எனக்கு தெரிந்து நடந்த மேல்சாதி  - கீழ் சாதி திருமணங்கள் மிக மிக சொற்பம். இப்படிப்பட்ட காதல் கூட கௌரவ கொலைகளில் மட்டுமே முடிகின்றன. 

இந்த நிகழ்வு எல்லா நாடுகளும் உண்டா?, இல்லை இந்தியாவிலும் அமெரிக்காவிலும் மட்டுமே நடப்பதா? என்று நான் யோசித்து பார்ப்பது உண்டு. உதாரணமாக, என்னுடைய ஜெர்மனி காலங்களில் நான் பார்த்தவரை , எல்லாம் நிறைய டர்கிஷ்-டர்கிஷ் ஜோடிகள் பார்த்து இருக்கிறேன். ஜெர்மன்-ஜெர்மன் ஜோடிகள் அல்லது, ஜெர்மன் -மற்ற வெள்ளை ஜோடிகள் பார்த்து இருக்கிறேன். ஜெர்மன்- கருப்பு ஜோடிகள் மிக மிக அபூர்வம். தற்போது இந்த நிலை மாறி இருக்கிறதா என்று தெரியவில்லை. 


அதே போல இன்னொரு முக்கியமான சாதி அல்லது இனம் சார்ந்த விஷயம் என்றால் அது அரசியல் தான். இங்கு வந்த புதிதில் எல்லாம், அமெரிக்காவில் எல்லாரும் சமம் என்ற குருட்டு நம்பிக்கை கொண்டு இருந்தேன். அல்லது அப்படி ஒரு மாயை என்னுள் உருவாக்கி கொண்டிருந்தேன். ஆனால், பல விசயங்களில் எப்படி இனம் என்பது ஒரு முக்கியமான ஒன்று என்று இங்கு வந்த பிறகு தெரிய ஆரம்பித்தது. உதாரணமாக, எனக்கு தெரிந்து நான் பார்த்த  தேர்தல்கள் ஒபாமாவின் இரு முறை ஜனாதிபதி தேர்தலும் மற்றும் செனட் தேர்தலும். ஒபாமா தேர்தலில் காலத்திலும் கூட எப்படி கறுப்பின மக்கள் குதூகலமாக வாக்களித்தார்கள், தங்களில் ஒருவர் வர போகிறார் என்று சந்தோஷ பட்டார்கள் என்று கண் முன் காண நேர்ந்தது. அப்படி கருப்பு மக்கள் சந்தோஷ பட்டு கொண்டு இருக்க எனக்கு தெரிந்தே, ஒபாமாவை குறித்து கிண்டல் செய்த பல வெள்ளை மக்களும்  உண்டு. அவரை முட்டாள், குரங்கு கையில் பூமாலை என்பது போன்ற விமரிசனங்கள் முன் வைக்க பட்டன.
இங்கு(அமெரிக்கா) தேர்தல் எனும் பொழுது எல்லாம் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக எப்படியாவது வேட்பாளரின்  நிறம் அல்லது இனம் ஓட்டு போடுவதற்கு ஒரு முக்கிய காரணி ஆகி விடும்.
இதனை பல பேர் நம்ப மறுத்தாலும் இது தான் உண்மை.

உதாரணமாக ஒபாமாவின் தேர்தலின் போது  கூட ஒபாமா ஒரு கலப்பு,அவருடைய  தாய் வெள்ளை, அப்பா கருப்பு என்று பல முறை மீடியாக்கள் ஒளிபரப்பின. அதாவது, மறை முகமாக அவர் முழு கருப்பு இல்லை, ஒரு மிக்ஸ் என்று அறிய வைக்க ஊடகங்கள் பல முயன்றன. தற்போது குடியரசு கட்சி தேர்தல் வேட்பாளராக இருக்கும் Trump கூட இனம் மற்றும் மதங்களை சொல்லியே பேசி வருகிறார், ஆதரவு திரட்டி வருகிறார். 

இந்தியாவை பொருத்தவரை, தேர்தல் என்று மட்டும் அல்ல தேர்தல் இல்லாத நேரத்திலும் கூட சாதி/மதம் என்பது ஒரு முக்கிய காரணி எனபது அனைவரும் அறிந்ததே.

இந்த விஷயங்கள் எல்லாம் யோசிக்கும் போது சாதி, மதம் போன்ற பாகுபாடுகள் எல்லாம் எதோ இந்தியாவிற்கு மட்டும் சொந்தம் என்பது போல ஒரு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உண்மையில் உலகில் இருக்கும் பல நாடுகளிலும் இப்படி எதோ ஒரு வகையில் ஒரு பிரிவினை இருக்கத்தான் செய்கிறது. பொருளாதாரம், செய்யும் தொழில், நிறம், இனம் என்று பல வகைகளிலும் அவை நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்ன பட்டு இருக்கின்றன. ஒரு சில நாடுகளில் அவை அப்பட்டமாக தெரிந்தாலும், பல நாடுகளிலும் அவை நீக்கமற நிறைந்து இருக்கின்றன என்பது மறுக்க இயலாது.

நன்றி .

Monday, February 15, 2016

விவாகரத்தும், ஜாதி சார்ந்த வேலை வாய்ப்பும்- ஒரு அமெரிக்க இந்திய கதை

இரண்டு செய்திகள் இரண்டும் மன வேதனை தரும் செய்திகள் கேட்க நேர்ந்தது.

ஒன்று, எப்படி பகணவன் மனைவிக்குள் நடக்கும் பிரச்சனைகள் சுற்றங்கள் மற்றும் நண்பர்களால் ஊதி ஊதி பெரிதாக்கப்பட்டு விவாகரத்து வரை சென்றும் ஊர் மக்களால் தொடர்ந்து துன்பத்துக்கு உள்ளாக்கபட்டார்கள் என்ற ஒரு செய்தி. 

வட இந்தியாவில் இருந்து வந்தவர் அவர். அவருடைய எக்ஸ் மனைவி இந்தியாவில் பிறந்தாலும் இங்கே சிறு வயதில் வந்து படித்து முடித்தவர்.   நிறைய செல்வம். இரண்டு வளர்ந்த  ஆண் குழந்தைகள்.  வேலை அடிமையான அவர், மனைவியை கவனிக்க நேரம் இல்லாமல் போக, மனைவியோ இணையத்தில் நேரத்தை செலவழித்து இருக்கிறார். அதில் ஒரு நட்பு உண்டாக அதிலேயே நேரம் காலம் தெரியாமல் செலவழித்து இருக்கிறார். இதில் சந்தேகம் அடைந்த கணவன், என்னவென்று பார்க்க தன் மனைவி ஒரு வயதான ஒருவருடன் அதிக நேரம் இணையத்தில் நேரம் செலவழிப்பதை கண்டு பிடித்து இருக்கிறார். அதனால் குடும்பத்தில் சண்டை வர ஆரம்பித்து இருக்கிறது.  இதனை சாக்காக வைத்து அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஊதி ஊதி பெருசாக்க. இந்த பெண்ணோ, நான் என்ன தப்பு செய்தேன் என்ற ரீதியில் பெண்ணுரிமை பேச, நீயா நானா என்ற போட்டி. நான் அப்படி தான் செய்வேன் என்று மனைவி அடம் பிடிக்க, அவரோ விவாகரத்துக்கு அப்ளை செய்து விட்டார். முடிவில் குழந்தைகள் இங்கு கொஞ்சம் அங்கு கொஞ்சம் என்று அலைகழிக்க பட்டு, அவதி பட்டு கொண்டு இருக்கிறார்கள்.

இதில் யாரை குத்தம் சொல்ல, நேரம் செலவழிக்க முடியாமல் போன கணவனையா, அல்லது, இணையத்தில் நேரம் செலவழித்த மனைவியையா, இல்லை இதனை சாக்காக கொண்டு ஊதி ஊதி பெருசாக்கி குடும்பத்தை பிரித்த மக்களையா?.. எது எப்படியோ, நல்லா இருந்த ஒரு குடும்பம் இணையத்தால் சீர் கெட்டு விட்டது. இதில் ஹய் லைட் என்னவெற்றால், விவாகரத்து முடியும் வரை இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசி திரிந்த மக்கள் இப்பொழுது அதனையோ ஒரு ஹாட் டாபிக் ஆக எந்த கெட் டுகெதர் என்றாலும் பேசி பேசி மகிழ்கிறார்கள். எங்கே சென்றாலும் இந்திய மக்களின் புரண் பேசும் எண்ணம் மாறாது போல.

அடுத்த விசயமும் இந்திய மக்களின் மாறாத குண நலன்கள் குறித்தது. நான் புதிதாக வேலைக்கு சேர்ந்த இடத்தில் நிறைய தெலுங்கு மக்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் ஒருவர் தற்போது புதிதாக வேலைக்கு சேர்ந்தவர்.தனக்கு வேலை சீக்கிரம் கிடைக்கவில்லை  என்றும். ஒரு வேலைதான்  ரெட்டியாகவோ அல்லது நாயுடுவாகவோ இருந்தால் சீக்கிரம் கிடைத்து இருக்கும் என்றும் கூறினார். இது என்ன புது கதை என்று கேட்டபோது அவர் சொன்ன விஷயங்கள் தலை சுற்றின. 

இங்கு, பெரிய பெரிய கம்பனிகளில் நல்ல உயர் நிலையில் இருக்கும் இந்திய மேனேஜர் எல்லாம் வெளியே, தன்னுடைய மனைவி அல்லது சொந்தகாரர் பெயரில் ஒரு கன்சல்டின்  கம்பெனி வைத்து இருப்பார்கள். அதன் மூலம் வேலைக்கு ஆட்கள் பிடித்து கொடுத்து கொண்டு இருப்பார்கள்.இதனை வைத்து கொண்டு அந்த கம்பெனியில் எந்த ஒபெனிங் என்றாலும் இவர்களின் கம்பனி வழி மட்டுமே அப்ளை செய்ய முடியும். அவர்கள் வேலைக்கு எடுப்பவர்கள் எல்லாமே, தன்னுடைய சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே. இப்படி நிறைய தெலுங்கு ரெட்டிகளும், நாயுடுக்களும் நிறைய கம்பனிகள் வைத்து இருப்பதால் அந்த சமூகத்தை சேர்ந்த மக்களாக இருப்பின், வேலை கிடப்பது சீக்கிரம் என்று தெரிந்தது.

கண்டம் விட்டு கண்டம் வந்தாலும் மாறாத குண நலன்கள் கொண்ட மக்கள். எப்பொழுது திருந்த போகிறார்களோ!.

டிஸ்கி 
இது நான் கேட்ட செய்திகளை வைத்து எழுதியது மட்டுமே. பொதுப்படையானது அல்ல.

நன்றி.

Sunday, December 27, 2015

மர்லின் மன்றோ மற்றும் திருமணதிற்கு வெளியே தொடர்புகள்!

நிறைய நாட்களாகவே இதனை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்தது உண்டு. ஆனால் சென்சிடிவ்  விஷயம், சரியாக எடுத்து கொள்ள படுமா இல்லையா என்ற குழப்பத்தில் எதுக்கு வம்பு என்று விட்டு விட்டேன். ஆனால் தற்செயலாக மேடம் துச்சாத் ம்யூசியதத்தில் மர்லின் மன்றோ மெழுகு சிலை பார்க்க நேர்ந்தது. அவரின் கடைசி கால வாழ்க்கை பற்றி கொஞ்சம் வாசித்து இருந்ததால் மறுபடியும் எழுத நினைத்த்ததை செய்து விடலாம் என்ற எண்ணத்தில் உண்டானது இது. மற்றபடி யாரையும் குறிப்பிடவில்லை இங்கு.

மர்லின் மன்றோ, அழகு பதுமை, செக்ஸ் சிம்பல் என்று பல பல பெயர்கள்.. தனது 36 வயதில் இறந்து விட்டார், அது கொலை இல்லை தற்கொலை இல்லை மாத்திரை மாற்றி போட்டதால் நடந்த விபத்து... என்று எண்ணற்ற கதைகள் கிளைகதைகள்..இவர் தான் குற்றவாளி அவர் தான் குற்றவாளி என்று நிறைய தியரிகள்.இப்படி நிறைய. நான் வாசித்தவரை தொடர்ந்து ஏற்பட்ட மணமுறிவு மற்றும் காதல் தோல்வி மற்றும் வயதானதால் பட வாய்ப்பு குறைந்தது என்று பலவும் அவரின் சாவுக்கு காரணம். இதையெல்லாம் விட எங்கே மறுபடியும் தனிமை ஆகி விடுவோமோ நமகென்று யாரும் இல்லாமல் போய்விடுமோ என்ற ஒரு எண்ணமுமே தான் ஓவர்டோஸ் மருந்து எடுத்து கொண்டதற்கும் பைத்தியம் போலே நடந்து கொண்டதற்கும் காரணம்..

காதல் அதுவும் 30 வயதிற்கு மேலே வரும் காதல், அதுவும் ப்ரெசிடெண்ட் உடன் வந்த காதல் அதன் பின் விளைவுகள்.என்று அடுக்கடுக்கான பிரச்சனைகள் மர்லின் மன்றோவுக்கு.

சொல்ல போனால் நிறைய 30-40 வயதில் இருக்கும் நிறைய பெண்கள் பலருக்கும் இது போன்ற ஒன்று வர ஆரம்பிக்கும். அது பெரிய ஸ்டார் ஆக இருந்தாலும் சரி இல்லை சாதாரண பெண் ஆக இருந்தாலும் சரி.  30 வயதை கடந்த பின்பு ஒரு தனிமை, ஹார்மோன் பிரச்சனைகள் ஒரு காரணமாக இருந்தாலும் முக்கியமாக நாம் முக்கியமானவர்களாக கருதும் சிலர் நம்மை துச்சமாக மதிப்பதாக ஏற்படும் ஒரு எண்ணமும் இதற்க்கு காரணம். மர்லின் மன்றா விசயத்தில் மட்டும் அல்ல, சாதாரண குடும்ப வாழ்க்கையிலும் எப்பொழுது தன்னுடைய கணவர் அல்லது குடும்பத்தார் நம்மை கொடுமை படுத்துகிறார் அல்லது மதிக்காமல் நடக்கிறார் எனில் ஒரு தனிமை வர ஆரம்பிக்கும்.
இந்த நேரத்தில் வெளி உலக தொடர்பு என்று மெதுவாக ஆரம்பிப்பார்கள். இல்லை தன்னுடைய இளமை கால நண்பர்கள் பக்கத்து வீட்டு எதிர் ஆட்கள் என மெதுவாக ஆரம்பிக்கும் நட்பு. இதில் நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது நல்லவர்கள் போல நடிக்கும் வல்லூறுகளை பற்றியது. இது ஒரு மிடில் லைப் கிரிசிஸ்.

மெதுவாக இப்படி தனிமையில் அல்லது கஷ்டத்தில் இருக்கும் பெண்கள்டம் நட்பாக பேச ஆரம்பிப்பார்கள். அந்த பெண்ணை தனது வசம் இழுக்க என்ன என்ன வித்தைகள் உண்டோ எல்லாமும் செய்வார்கள். இவர்களின் பேச்சில் மயங்கி தனது வாழ்க்கைக்கு இவர் தான் சரியான துணை என்று முடிவு செய்து வீட்டை விட்டு ஓடி வந்தவர்கள் பலரை பற்றி கேள்வி பட்டதுண்டு. அதுவும் பெரிய வளர்ந்த பிள்ளைகளை எல்லாம் விட்டு வந்தவர்களும் உண்டு.

ஆரம்பிக்கும் போது அருமையாக இருக்கும் இந்த வாழ்க்கை ஒரு சில மாதங்களில் கசக்கும் எல்லாம் மோகம் தீர்ந்த பின்பு நடக்கும் ஒரு வேலை. பின்னர் எந்த நரகத்தில் இருந்து தப்பித்தோம் என்று பெண் நினைத்தாளோ அதனை விட கொடிய நரகத்தில் விழுந்து இருப்பாள்.
சொல்ல போனால் இப்பொழுது நேற்று நடப்பது அல்ல இது போன்ற ஒன்று. சுமார் 60
வருடங்களுக்கு முன்பு என் பாட்டி வீட்டில் குடியிருந்த ஒரு அழகான அம்மா இப்படி தன் கணவனை விட்டு ஒரு கூலி  வேலை செய்யும் ஒருவனுடன் ஓடி வந்து அவனோ சபலம் தீர்ந்த பிறகு "என்னோட ஓடி வந்தவ வேற எவன் கூடவாவது போவடி, என்று சொல்லி தினமும் அடிப்பான்" என்று என் அம்மா சில கதைகள் சொன்னதுண்டு.

அதே போல நிறைய கதைகள் கேள்வி பட்டதுண்டு.. எல்லாவற்றின் அடி நாதம் இது தான் தனிமை பெண்களுக்கு வேண்டிய ஒரு செக்யூரிட்டி பீலிங் இதனை பயன்படுத்தி அவளை வஞ்சித்த ஒரு ஆணின் கதை. இந்தயாவில் 99% சதவீதம் இப்படி திருமணதிற்கு வெளியே தொடர்புகள் பிரச்னையில் கொலையில் தற்கொலையில் முடிந்து இருக்கின்றன. அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகளிலாவது  தொடர்புகள் மறுமணத்தில் முடியலாம் ஆனால் இந்தியாவில் இது மிக மிக குறைந்த சதவீதம் மட்டுமே. அதுவும் பெண்ணின் பொருளாதார நிலையை பொறுத்தது. பெண்ணிடம் பணம் இருப்பின் அல்லது நல்ல வேலை இருப்பின் ஒரு வேலை இது மாறலாமே தவிர எல்லா நேரங்களிலும் இது போன்ற தொடர்புகள் ஒரு மாயை மட்டுமே.

நான் இதனை பற்றி எழுதியவுடன் சிலர் ஏமாத்துற பொம்பளைங்களே இல்லையா? என்று கேட்பதுண்டு. இருக்கலாம்.. இருக்கிறார்கள் ஆனால் இந்தியன் செட்டிங் இல் இதனை போன்று இருப்பவர்கள் அதிகம் இருபத்தில்லை

கடந்த சில மாதங்களில் மட்டும் எனக்கு தெரிந்த பெரிய வளர்ந்த குழந்தைகள் கொண்ட மூன்று பெண்கள் வீட்டை விட்டு வந்து இருகிறார்கள். அதுவும் இந்தியாவில் இருந்து வெளி நாட்டுக்கு யாரோ ஒருவரின் பேச்சை. நம்பி வந்தவர்களும் அடங்குவர். எது அவர்களை இப்படி ஆகியது, தற்போது அவர்களின் நிலை என்ன? என்றெல்லாம் யோசித்தால் பாவமாக இருக்கிறது. தேவையா இந்த நிலை, சொந்தமாக சூனியம் வைத்து கொண்ட நிலை இது.  ஒரு குழியில் இருந்து தப்பிப்பதாக நினைத்து புதை குழியுள் விழுந்த நிலை.

பெண்களே, உங்களுக்கு ஒரு சிறு அறிவுரை, திருமணதிற்கு வெளியே தொடர்புகள் எப்பொழுதும் பிரச்சனையில் மட்டுமே முடியும். அவை ஒரு மாயை மட்டுமே.. பருவ இனகவர்சிக்கு ஒப்பானவை அவை. முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய ஒன்று. கொஞ்சம் முற்றி விட்டாலும் உங்கள் வாழ்க்கை குடும்பம் அனைத்தையும் இது சிதைத்து விடும். யாரையும் நம்பாத்தீர்கள் அதுவும் இணைய நட்புகள் வேண்டவே வேண்டாம். உங்களுக்கு குடும்பத்த்தில் பிரச்னை எனில் வெளி ஆள் யாரிடம் பகிர வேண்டாம் . யாரும் மகாத்மா அல்ல. உங்கள் அம்மா, அப்பா அல்லது குடும்பத்தினர் நெருங்கிய தோழிகள் இவர்களை தவிர யாரிடமும் பகிராதீர்கள். வட்டமிடும் வல்லூறுகள் அதிகம் சுற்றும் உலகம் இது.

டிஸ்கி
இது என்னுடைய் அனுபவத்தில் சந்தித்த மனிதர்களை வைத்து எழுதியது மட்டுமே.  யாரையும் குறிப்பிட்டு எழுதியதல்ல.

நன்றி









Friday, October 9, 2015

அமெரிக்காவை எப்படியெல்லாம் பிரிக்கலாம்?

1955 இல் மொழிவாரியாக இந்தியா மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இன்னும் ஒரு சில மாநிலங்கள் மொழி வாரியாகவோ அல்லது பொருளாதார காரணங்களுக்காகவோ பிரிக்க பட்டு கொண்டு இருக்கின்றன.

அமெரிக்கா வே யுனிடெட் ஸ்டேட்ஸ் என்று, அனைத்து மாநிலங்களும் இணைந்த ஒன்று தான். ஆனாலும் எப்படியெல்லாம் அமெரிக்கா பிரிக்க படலாம், என்று வாஷிங்டன் போஸ்டில் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் இங்கே பகிரப்படுகிறது.


photos fromwww.atlasofprejudice.com


உதாரணமாக 12 வகையாக அமெரிக்காவை பிரிக்கலாம் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி தெரிவிக்கிறது. அதில் எனக்கு பிடித்த சில வகைகள் இங்கே.

1. முதல் வகையில், அவர்கள் கூறுவது மூன்று வகையாக அமெரிக்கா பிரிக்கப்படலாம். அதில் கிழக்கு மாகணங்களில் இருப்பவர்கள் எல்லாம் அறிவாளிகள் எனவும், மேற்கு மாகணங்களில் இருப்பவர்கள் எல்லாம் இன்பத்தை விரும்பும் மக்கள் எனவும், இடையில் இருக்கும் மக்கள் எல்லாம் பழைமை விரும்பும் traditional மக்கள் என்றும் பிரிக்கலாம்.

இதில் முக்கியமாக நோர்த் ஈஸ்ட் மாநிலங்களை அதில் உள்ள  ஐவி லீகு கல்லூரிகள், பல்கலை கழகங்களை வைத்து வைத்து இப்படி குறிப்பிடுகிறார்கள் என்றும் மேற்கில் ஹாலிவூட் இருப்பதாலும், மத்திய மாகாணங்கள் எல்லாம் பழமை விரும்பிகளாக இருப்பதால் இப்படி குறிப்பிடுகிறார்கள் என்று  நினைக்கிறன்.


2. இரண்டாவது வகையில், மூன்று வகையாக பிரிக்கலாம். முதல் வகை வடக்கு மாநிலங்கள் எல்லாமே மைக்ரோ வேவ் வைத்து சமையல் செய்பவர்கள், தென் கிழக்கு மாகணங்களில் ஒரு சில barbecue செய்பவர்கள்மற்றும் தென் மாகாணங்கள் பல டீப் ப்ரை செய்யும் மாகாணங்கள்.

உண்மையில் நானே ,நோர்த் கரோலினாவில் இருந்து அட்லாண்டா வந்த சமயத்தில் வேலை பார்க்கும் மக்களுடன் ஒரு ரெஸ்டாரென்ட் சாப்பிட சென்று அங்கு ஐஸ் கிரீம் ஐ மாவில் தோய்த்து ப்ரை செய்து கொடுத்தார்கள். அதில் வடிந்த எண்ணையை பார்த்தவுடன் அடப்பாவிங்களா ஐஸ் கிரீமை எப்படிடா ப்ரை செய்வீங்க என்று எண்ணியது நினைவுக்கு வந்தது.


3. மூன்றாவது வகையாக அமெரிக்கா இரண்டு வகையில் பிரிக்கப்படலாம். வட மேற்கு, வட கிழக்கு மத்திய பகுதி எல்லாமே "ஸ்ட்ரீட் ஸ்மார்ட்" என்று தங்களை நினத்து கொள்பவர்கள் என்று வைத்து கொண்டு, தென் கிழக்கு மாநிலங்களில் இருக்கும் மக்களாகிய பெரும்பாலோர் "பைபிள் பெல்ட்" மக்கள் என்று குறிபிடுகிறார்கள்.அதாவது ஏசுவே சகலமும், என்று நெட்டுரு தட்டும் மக்கள்.

பைபிள் பெல்ட்மாநிலங்களில்  வசிக்கும் பல மக்கள் இதனை அனுபவித்து இருப்பார்கள். உங்கள் வீடுகளை வந்து சிலர் கும்பலாக வந்து தட்டுவார்கள். "ஏசுவே பரம பிதா அவரை பற்றுங்கள், உங்களுக்கு எந்த சந்தேகம் இருந்தாலும் இதனை படியுங்கள் என்று ஒரு சீட்டை நீட்டுவார்கள்." அதுவும் நீங்கள் கிருஸ்துவர் இல்லை என்றால் நிறைய பேர் வந்து அவர்களுடைய சர்சில் உங்களை இழுக்க பார்பார்கள்.அமெரிக்கா வந்து என்னுடைய முதல் இப்படி அனுபவம்  முந்தைய வேலை பார்த்த இடத்தில் நடந்தது. ஒருவர் பிரசங்கி போல, வந்து ஏசுவே பரம பிதா என்று பிரசங்கம் ஆரம்பித்து விட்டார். பின்னர் அவரிடம் இருந்து கழண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

4. இந்த வகை மிக சுவாரசியம். இதில் 2 வகை மக்கள் இருப்பதாக கூறுகிறது. வடக்கு மற்றும் தெற்கு என்று இரு பிரிவுகள். அதில் வடக்கு மாநிலங்கள் பலவற்றில் இருக்கும் மக்கள் நாங்கள் நிற பாகுபாடு பார்ப்பதில்லை என்று வெளியில் காட்டி கொள்ளுவார்கள், ஆனால் உண்மையில் நிறைய பார்பார்கள்.  தெற்கு மாகான மக்கள் வெளிப்படையாக நிறப்பாகுபாடு காட்டுவார்கள். அது சட்ட விரோதம் என்று தெரிந்தாலும் பலர் மறைமுகமாக இதனை செய்வார்கள்.

5. இந்த கடைசி வகையில் இரண்டு வகையில் அமெரிக்கா பிரிக்கப்படலாம். அதாவது, வடகிழக்கு மேற்கு மாநிலங்கள்  மற்றும்  ஹோமோ செக்ஸ் மக்களை அங்கிகரித்தவை அதனால் அவை gay மாநிலங்கள் எனவும், மற்றவை ஏசுவே பரம பிதா அவரை பற்றினால் சொர்க்கம் அடைந்து விடலாம். gay மக்கள் எல்லாம் பாவிகள் என்று பிதற்றும் மக்களை கொண்டது அதனால். இந்த மாநில மக்கள் எல்லாரும் சொர்கத்தை அடைய போகிறவர்கள் என்பதால் அவர்களை ஒரு மாநிலமாக பிரித்து விடலாம் என்கிறார்கள்.

இன்னும் பல வகைகளில் பிரிக்கலாம் என்றாலும் மேலே குறிப்பிட்ட சில எனக்கு ரொம்ப சிரிப்பு வந்ததால் குறிப்பிட்டு இருக்கிறேன். இன்னும் பல, மொழி வாரியாக இல்லாமல், இன வாரியாக, வெள்ளைகள், மெக்சிகன்கள், கறுப்பின மக்கள் இருப்பதை வைத்து பிரிக்கலாம். எங்கெல்லாம் அதிகம் புயல் வீசும் எங்கெல்லாம் அதிகம் மழை பெய்யும் அல்லது தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்றெல்லாம் பிரிக்கலாம் என்று பார்க்கும் போது, எல்லா நாடுகளையும் போல அமெரிக்காவும் பல வகைகளில் வேற்றுமை கொண்டது. ஆனாலும் இங்கே சட்டமும், போலிசும் அதிக பவர் வைத்து இருப்பதால் இன்னும் உடைந்து  பிரிக்கபடாமல் இருக்கிறது என்று நினைக்கிறன்.

நன்றி.

Tuesday, August 18, 2015

பெண்களும், தலைமை பொறுப்பும், அமெரிக்காவும் !



எப்பொழுதும் எங்கள் ஆபிசில் காலையில் பொது விஷயங்கள் குறித்து பேசுவதுண்டு. கரண்ட் அப்பைர்ஸ், பெண்கள், வரவிருக்கும் தேர்தல் என்று அனைத்தும் பேசுவதுண்டு.

இன்றைய ஹாட் டாபிக் ஆக  அடுத்த வருடம் வரப்போகும் US குடியரசு தலைவர் தேர்தல்   முன்னிலையில் இருக்கும் குடியரசு கட்சியின்  "டொனல்ட் ட்ரம்ப்"  பற்றியும் ஜனநாயக கட்சியின் "ஹிலரி கிளின்ட்டன்" பற்றியும் பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது எப்பொழுதும் அமைதியாக இருக்கும் ஒரு வெள்ளை அம்மா, "நீங்கள் என்ன தான் சொன்னாலும், பெண்களால் நாட்டை வழிநடத்த முடியாது அதனால் நான் ஜனநாயக கட்சியை சேர்ந்தவள் என்றாலும், நான் ஹிலாரிக்கு ஓட்டு போட மாட்டேன்" என்று சொன்னார்.

ஏன் அம்மா இப்படி சொல்லுகிறீர்கள் என்று கேட்டதற்கு. பைபிளில் இருக்கிறது, பெண்களால் சர்ச்சை கூட வழி  நடத்த தகுதி இல்லை. இப்படி இருக்க, எப்படி ஒரு  நாட்டை வழி நடத்த முடியும் என்று கேட்டார். பைபிளில் இருப்பதை தான் நாங்கள் பாலோ செய்வோம். அதனால் ஒரு பெண் குடியரசுத்தலைவர் போட்டியில் நின்றால் நாங்கள் ஒட்டு போட மாட்டோம் என்று சொன்னார்.

இதே போன்ற வாசகங்களை நான் மற்ற கன்செர்வேடிவ் கிருத்துவ ஆண்களிடம்  கேட்டு இருக்கறேன் என்பதால் அப்பொழுது  எனக்கு அது ஆச்சரியம் தரவில்லை. ஆனால், இது வருவது ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் இருந்து வருவது தான் ஆச்சரியமாக இருந்தது. இத்தனைக்கும் இந்த பெண் வீட்டில் அனைத்தையும் செய்கிறார், அவளின் கணவர் வீட்டோடு இருக்கிறார் வேலை இல்லை. ஆனாலும், அவள் சொல்லுவது இது தான், என் கணவருக்கு வேலை இல்லை, வீட்டில் இருக்கிறார், ஆனாலும் அவர் தான் குடும்ப தலைவர். அது தான் பைபிளில் இருக்கிறது என்று சொன்ன போது  எனக்கு நாம் அட்வான்ஸ்டு என்று உலகம் எங்கும் நினைத்து கொண்டு இருக்கும் அமெரிக்காவில் தான் இருக்கிறோமா என்று நினைக்க தோன்றியது.

உண்மையை சொன்னால், ஒரு நாட்டை வழி  நடத்த ஒரு பெண்ணை நம்பி நாட்டை ஒப்படைத்தது, சவுத் ஈஸ்ட் ஆசியா தான்முன்னோடி  என்று நினைக்கிறன். இந்திரா காந்தி, பெனசிர் பூட்டோ, கலிதா ஜியா, சந்திரிகா குமாரதுங்கா என்று நிறைய பெண் தலைவர்கள் பார்த்து இருக்கிறோம். அதே போல ஐரோப்பாவிலும், பிரிட்டனின்  தாட்சர், மற்றும் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் போன்ற தலைவர்களும் நாட்டை ஆண்டு கொண்டு திறமாக வழி  நடத்தி கொண்டு இருக்கும் போது. உலகின் தலைவர் என்று மார் தட்டி கொண்டு இருக்கும் அமெரிக்காவில் ஒரு பெண்ணை தேர்தெடுக்க கூட இப்படி யோசிக்கிறார்கள். அதற்க்கு பைபிளை காரணமாக சொல்லுவது சிரிப்பாக இருந்தது. ஒரு வேளை  நாங்கள் பைபிள் பெல்ட் எனப்படும் மாநிலங்களில் இருப்பதனாலா இல்லை US முழுதும் இந்த நிலையா, சொல்லுங்கள் மக்களே.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி

Monday, August 17, 2015

குரூப்பிஷம் மற்றும் டபுள் ப்ரோமோசனும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும்!

கடந்த வாரம் நடந்த இரண்டு விஷயங்கள், நான்  இந்த பதிவு எழுத காரணம். கிட்டத்தட்ட இரண்டுமே, இந்தியாவில் இருந்து இங்கு புதிதாக வந்த சில குடும்பங்களை பற்றியது என்றாலும், இங்கு வந்து சில ஆண்டுகள் ஆன மக்களிடமும் நான் கண்ட விஷயங்கள் இவை. 

குரூப்பிஷம்
அமெரிக்காவில், எந்த ஊரில் எல்லாம் இந்தியர்கள் இருக்கிறார்களோ அங்கு எல்லாம் இந்தியன் கம்யூனிட்டிகள்  இருக்கும். அங்கு முக்கால் வாசி நேரம் இந்தியர்கள் மட்டுமே வசிப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகளில் எல்லாம் இந்தியர்கள் இருப்பதாலேயே, குழந்தை விளையாடலாம், நம்ம ஊர் போன்ற சூழ்நிலை இருக்கும் என்று பலரும் இது போன்ற கம்யூனிட்டிகளுக்கு வீடு வாங்கி செல்வது உண்டு.  வீடு வாங்கி கொண்டு செல்லும் போது சந்தோசமாக செல்லும் பலரும், சென்ற சிறிது ஆண்டுகளுக்குள், குரூப் பொலிடிக்ஸ், பிரச்னை என்று ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்ளாமல் முகத்தை திருப்பி கொள்ளுவதை பார்த்து இருக்கிறேன்.

இனம் மொழி மாறாமல் கிட்ட தட்ட எல்லா இந்தியர்/மாநில மக்களிடமும் இந்த நிலை பார்த்து இருக்கிறேன். என்ன காரணம் என்றால் , இந்தியர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு குரூப் சேர்த்து கொள்ளுவார்கள். மாநிலம், மொழி, இனம், சில நேரம் ஒத்த ஜாதி மக்கள் எல்லாம் கூட ஒன்றாக சேர்ந்து க்ரூப் அமைத்து கொள்ளுவார்கள்.  பின்னர் அந்த குரூப் மக்கள் அவர்களிடம் மட்டுமே பேசி கொள்ளுவார்கள். வேறு வெளி ஆட்கள் யாரையும் அந்த குரூப்இல்  சேர்த்து கொள்ளுவது இல்லை.

பல நேரங்களில் இப்படி குரூப் களுக்குள் ,பொறமை, நீ /நான் பெரியவர், என்னிடம் பேச மாட்டேங்கிறா,மதிக்க மாட்டேன்கிறா, குடும்ப பிரச்னை ... என்பன போன்ற பல பிரச்சனைகள் எழுந்து, ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொள்ளுவதுண்டு. பின்னர் அந்த க்ரூப் மக்கள் ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்ளுவது இல்லை. சில நேரங்களில் குரூப் களில் இருக்கும் குடும்ப பெண்மணிகளுக்குள் நடக்கும் பிரச்சனையால் குடும்ப தலைவர்களும் சில நேரம் பேசி கொள்ள முடியாத நிலை ஏற்படுவதை கண் கூடாக கண்டு இருக்கிறேன். நல்ல நட்புகளாக இருந்த பலரும் உடைந்து சிதறி இருக்கிறார்கள்.

இந்த காரணத்தினாலேயே, எங்களுடைய  நண்பர்கள் அனைவரும் ஒரு இந்தியன் கம்யூனிட்டியில் வீடு வாங்கி சென்று எங்களையும் அங்கு வீடு வாங்குங்கள் என்று வற்புறித்திய  போது, நாங்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டோம்.

ஊர் விட்டு ஊர் வந்து வாழும் நிலையில் இருக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் என்று ஒற்றுமையாக இருப்போம் ஒருவருக்கு ஒருவர் உதவு செய்து கொள்ளுவோம் என்றெல்லாம் இல்லாமல், நீ பெரியவர் நான் பெரியவர் என்று போட்டி போட்டு கொண்டு சண்டை போடுவது ஏன் மக்களே?


இந்த குரூப் கலாச்சாரத்தினால் நிறைய இங்கு வரும் புதியவர்கள் பாதிக்க படுகிறார்கள். அப்படி நான் சந்தித்த வட இந்திய குடும்பம் அது . இவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றாலும் ஹைதராபாதில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். IT துறையில் இருவருக்கும்  வேலை என்பதால், தற்போது, இந்தியாவில் இருந்து 3 ஆண்டுகள் ஆன் சைட் என்று அனுப்பி இருக்கிறார்கள். இரட்டை  குழந்தைகள், இரண்டும் முகுந்த் உடன் பள்ளியில் படிக்கிறார்கள்.  ரொம்ப அமெரிக்க வாழ்க்கை பற்றி அறிந்திராத இவர்கள், இங்கு வந்ததும் நண்பர்கள் வேண்டும் என்று அவர்கள் வந்து சேர்ந்த அபார்ட்மெண்டில் அணுகி இருக்கிறார்கள். முதலில் இவர்கள் புதியவர்கள் என்று யாரும் இவர்களை குரூப்இல் சேர்த்து கொள்ளவில்லை. பின்னர் ஓரிரு நண்பர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் ஈகோ சண்டைகள், போட்டி பொறமை என்று ஆகி இருக்கிறது.  தற்போது தங்களுக்கு யாரும் நண்பர்கள் கிடையாது பேசாம இந்தியாவிற்கு திரும்பி விடலாம்என்று இருக்கிறேன் என்று அந்த அம்மா சொன்னார்கள்.

இங்கு வந்த புதிதில் நானே இதனை நிறைய அனுபவித்து இருக்கிறேன் என்பதால் என்னால் அவர்கள் சொன்னதை புரிந்து கொள்ள முடிந்தது. அதுவும் பெண்கள் படுத்தும் பாடு அதிகம் என்று இங்கு சொல்லியே ஆக வேண்டும். வேலைக்கு போகும் பெண்கள் இருந்தால் அவர்களை யாரும் குரூப்இல் சேர்த்து கொள்ள மாட்டார்கள், என்ற காரணத்தினாலேயே பல நேரங்களில் நான் என் பல்கலைகழக குடும்பத்துடனே பழகி இருக்கிறேன். என்ன மக்களோ?


டபுள் ப்ரோமோஷன் மோகம்

அடுத்த விஷயம், மக்களின் டபுள் ப்ரோமோஷன் மோகம். அதாவது, தன குழந்தையை எப்படியாவது டபுள் ப்ரோசன் வாங்க வைத்து விட வேண்டும் என்று எல்லா வற்றிலும் தள்ளுவது. அதனை கண் கூடாக காண நேர்ந்தது. எங்கள் தமிழ் பள்ளியில் இந்த வருட அட்மிசன் நேரத்தில் குழந்தைகளின் தமிழ்திறனை கணிக்க என்று ஒரு தேர்வு நடத்தினார்கள், அங்கு உதவி செய்யும் படி நேர்ந்தது. அங்கு குழந்தைகள் தேர்வு எழுத அழைத்து வரும் பல பெற்றோரும், தங்கள் குழந்தை நன்கு தமிழ் பேசும், படிக்கும் அதனால் டபுள் ப்ரமோசன் கொடுத்து அடுத்த கிளாஸ் அனுப்புங்கள் என்று எங்களிடம் சண்டை போட்டார்கள். நாங்கள் அவர்களின் திறனை சோதித்த பிறகு இல்லை என்று சொன்னாலும், எப்படி எங்கள் குழந்தைகளை நீங்கள் இந்த வகுப்பிற்கு அனுப்புகிறீர்கள்?, எங்கள் குழந்தை எவ்வளவு டலேன்ட் தெரியுமா ?, பரிச்சை பேப்பரை கொண்டு வந்து காட்டுங்கள்?, எங்கே மிஸ்டேக் சொல்லுங்கள் என்று ஒரே என்று சண்டை. ஒரு பெற்றோர், 7 வயது குழந்தையை 2ஆம் வகுப்பு தமிழில் சேருங்கள் என்று எங்களுடன் சண்டை. இன்னும் சிலர், பிறந்த தேதி கட் ஆப் இல்லை என்று சொன்னாலும், வேண்டும் என்றே டேட் ஆப் பெர்த் ஐ மாற்றி சொல்லுவது என்று செய்து கொண்டு இருந்ததை பார்க்க சிரிப்பு வந்தது. இந்த ஊரில் வந்து தமிழ் மொழி, கலாச்சாரம் தெரிய வேண்டும் என்று தான் குழந்தைகளை தமிழ் படிக்க இப்படி தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். இந்த நிலையில் ஏன் இந்த
போட்டி டபுள் ப்ரோமோசன் மோகம், சண்டை என்று தெரியவில்லை.

இதே போன்ற ஒரு மோகத்தை நான் குமான்னிலும் (kumon) பார்த்து இருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒருவர் kumon வைத்து இருக்கிறார். அங்கு பிள்ளைகளை சேர்க்க வரும் பலரும், ஏன் என் பிள்ளையை இன்னும் இந்த லெவலில் வைத்து இருக்குறீர்கள் மேலே அனுப்புங்கள். இன்னும் ஹோம்வர்க் கொடுங்கள் என்று சண்டை போடுவதை பார்த்து இருக்கிறேன். 

இப்படி நீங்கள் டபுள் ப்ரோமோசன் மோகம் கொண்டு அலைவதால் உங்கள் குழந்தை ஜீனியஸ் ஆகி விடாது. மாறாக, உங்கள் தொல்லை தாங்காமல் வந்து படிக்குமே தவிர உண்மையில் எந்த இண்டரஸ்ட்ம் இல்லாமல் தான் இருக்கும். இப்படி இவர்களை புஷ் செய்து என்ன சாதிக்க போகிறீர்கள், சொல்லுங்கள். என்னவோ போங்கப்பா!

நன்றி.

டிஸ்கி
இது நான் சந்தித்த மக்களை கொண்டு மட்டுமே எழுத பட்டது. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.



Friday, August 14, 2015

பொது இடத்தில் சிறுநீர் கழித்தலும், சான் பிரான்சிஸ்கோவும்

இந்தியாவை பற்றி குறிப்பிடும் விமர்சகர்கள் எல்லாம் அங்கு இருக்கும் சுத்தமின்மை மற்றும் எங்கும் சிறுநீர் கழித்தல் என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால், உண்மையில் இந்தியாவில் மட்டும் தான் எங்கும் சிறு நீர் கழிப்பவர்கள் இருக்கிறார்களா? என்றால் இல்லை. சொல்ல போனால் மிக வளர்ந்த நாடாக இருக்கும் அமெரிக்காவின் சிலிக்கான் வல்லெய் எனப்படும் சான் பிரான்சிஸ்கோவில் இது மிக பெரிய பிரச்சனை. அதனை குறித்த செய்தி ஒன்று வாசிக்க நேர்ந்தது. 

எங்கும் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க, சிறு நீரை ரேப்லேக்ட் செய்யும் பெயிண்ட் ஒன்றை சான் பிரான்சிஸ்கோ நகரம் எங்கும் அடித்திருப்பதாகவும், அது சிறு நீர் பட்டவுடன் ரேப்லேக்ட் செய்து சிறுநீர் கழிப்பவரின்  பான்ட், ஷு எல்லாம் நனைத்து விடுவதாகவும் படித்தேன்.


(AP Photo/Eric Risberg)


பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது சான் பிரான்சிஸ்கோ நகரில் மிகப் பெரிய பிரச்சனை. இதனை தவிர்க்க சிறுநீர் கழித்தால் 500$ அபராதம் என்று பொது அறிவிப்பு கொடுத்தும் சிறிது பயன் மட்டுமே ஏற்பட்டது. 

பல சுவர்களில், "ஹோல்ட் இட்!, இந்த சுவர் பப்ளிக் பாத்ரூம் அல்ல, சான் பிரான்சிஸ்கோவை மதியுங்கள்" என்று எழுதி வைத்து இருக்கிறார்கள். 

சூரிய வெளிச்சத்தில் இயங்கும் பப்ளிக் டாய் லெட்டுகள் ஊரெங்கும் இயங்கு கின்றன. பொதுப்பணி துறையில் வேலை பார்பவர்களும் நாள் முழுதும் வேலை செய்து மக்களை பப்ளிக் டாய் லெட்டு உபயோகிக்க வேண்டுகிறார்கள். அதனை தவிர, ஒவ்வொரு லைட் போஸ்ட்ம், சுவற்றையும் செக் செய்து, உப்பு பறித்தவற்றை மாற்றுகிறார்கள் அல்லது செப்பனிடுகிறார்கள். முடிவாக எதுவும் வேலை செய்யவில்லை / கட்டுபடுத்த முடியவில்லை என்ற நிலையில். ரெலேக்டிங் பெயிண்ட் ஐடியா வை செயல் படுத்தி இருக்கிறார்கள்.

இந்த பெயிண்ட் ஐடியா வை,  ஜெர்மனியில் இரவு நேர குடிகாரர்களின் சுவற்றில் அசுத்த பிரச்சனையை தவிர்க்க அங்கு உபயோகபடுத்துவதை பார்த்து பல சான் பிரான்சிஸ்கோ நகர சுவருகளில் அடித்து வைத்து இருக்கிறார்கள்.


இதனை வாசித்த பிறகு எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்.  எல்லா வசதி இருந்தும் பப்ளிக்கில் அசுத்தம் செய்யும் இவர்களை விட , பொது டாய் லெட்டுகள் அதிகம் இல்லாததால் ரோட்டில், சுவற்றில் அசுத்தம் செய்யும் நம் மக்கள் எவ்வளவோ தேவலையோ என்று எண்ண தோன்றுகிறது. என்ன வசதி இருந்தாலும், மக்கள் மனம் வைத்தால் மட்டுமே ஒரு சுத்தமான ஊரை, நாட்டை உருவாக்க முடியும். மற்றபடி என்னதான்  சட்டம் போட்டாலும் அபராதம் விதித்தாலும், அதனையும் மக்கள் மதிக்க மாட்டார்கள் போல.


நன்றி.


Tuesday, August 4, 2015

ABCD ஆண்கள் சந்திக்கும் விமர்சனங்கள்!

சில மாதங்களுக்கு முன்பு ABCD  பெண்கள்  சந்திக்கும் விமர்சனங்கள், என்ற பதிவு எழுதி இருந்தேன். அதில் பின்னூட்டம் இட்ட சிலர், ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும் எழுத சொல்லி இருந்தனர். அது குறித்த பதிவு இது.

டேட்டிங் மற்றும் திருமண சந்தையில் ABCD ஆண்கள் அல்லது இந்தியாவில் இருந்து இங்கு படிக்க வந்து செட்டில் ஆன ஆண்கள் அல்லது சிறுவயதில் இந்தியாவில் இருந்து பெற்றோருடன் இங்கு வந்து செட்டில் ஆன ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இங்கே.


நீங்கள் ஒரு இந்திய ஆணை டேட்டிங் செய்வீர்களா?, திருமணம் செய்வீர்களா, என்று என் அமெரிக்க தோழிகள் சிலரிடம் கேட்பதுண்டு. பெரும்பாலானவர்களின் முதல் பதில் "No Way" என்று இருக்கும். ஏன் என்று கேட்டதற்கு வேறு வேறு காரணங்கள் போல சொன்னாலும் அத்தனை காரணங்களின் அடிநாதமும் ஒரு கீழே குறிப்பிட்ட சில பாயிண்டுகளில் அடங்கி விடும்.

1. அவர்கள் அம்மா பிள்ளைகள்!

பெரும்பாலான பெண்கள் குறிப்பிடுவது, அவர்கள் அம்மா பிள்ளைகள் அல்லது அவர்களின் குடும்ப தாக்கம் நிறைய இருக்கும் அல்லது சொந்தமாக சிந்திக்க தெரியாது. இப்படி நிறைய ஸ்டீரியோடைப் விமர்சனங்களை நிறைய  பெண்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன். ஏன், இங்கு படிக்க வந்து இருக்கும்  நிறைய இந்திய பெண்களே இது போல சொல்ல கேட்டு இருக்கிறேன். அதுவும் தென்னிந்திய ஆண்கள் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகள் மிக அதிகம். "வட இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மும்பை, டெல்லி போன்ற மெட்ரோக்களில் இருந்து வந்தவர்கள் என்பதால் அதிக இண்டிபெண்டெண்ட் ஆக இருக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியர்கள் சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வந்து இருந்தாலும் அதிக கட்டு பெட்டியாக, அம்மா அல்லது குடும்பம் சொல்லுவதை தவறாமல் பின் பற்றுபவர்களாக இருக்கிறார்கள்" என்று சொல்ல கேட்டு இருக்கிறேன் .

ஒரு சிலர் டேட்டிங், லிவிங் டுகெதர் என்றெல்லாம் வாழ்ந்துவிட்டு கமிட் செய்யுங்கள் என்று கேட்கும் போது, எங்கள் வீட்டில்/குடும்பத்தில்  ஒத்து கொள்ள மாட்டார்கள் என்று சால்சாப்பு சொல்லி விலகுவதை பார்த்து இருக்கிறேன், அந்த பெண்களிடம் சென்று பேசினால், இப்படி விட்டு சென்ற பையன்களை பற்றி கெட்ட கெட்ட வார்த்தைகளாக திட்டுவார்கள்.. இப்படி வீட்டுக்கு பயந்த ஆண் எதற்கு பெண்ணுடன் வாழ வேண்டும் அவளுக்கு திருமண ஆசை காட்ட வேண்டும்.



2. ஆணாதிக்கம் மற்றும் இரட்டை நிலைப்பாடு

அதிக கட்டுபெட்டியாக வளர்க்கபட்டதலோ என்னவோ, இவர்களுக்கு பல விசயங்களில் இரட்டை நிலைப்பாடு இருக்கும். தனக்கு ஒரு சுதந்திரம் அடுத்தவர்குக்கு ஒன்று என்று நினைப்பார்கள். உதாரணமாக தான் எத்தனை பெண்களுடனும் பேசலாம் நண்பராக இருக்கலாம், ஆனால் தன்னுடைய கேர்ள் ப்ரெண்ட் யாரிடமும் பேச கூடாது என்று கட்டுபாடுகள் இருக்கும். அதே போல, நம்பிக்கை ரொம்ப இருக்காது. "A relationship without trust is not possible". இதே காரணங்களுக்காகவே, நிறைய கட்டுபாடுகள் விதிப்பார்கள். டிரஸ் செய்வதில், மேக்கப் செய்வதில், பேசுவதில்...என்று அனைத்திலும். அவர்கள் சொல்படி நடக்க வேண்டும் என்று பெரும்பாலும் நினைப்பார்கள்.

அதே போல பெரும்பாலான ஆண்கள், தனியே இருந்தாலும், தன்னை தானே கவனித்து கொள்ள தெரியாது, அல்லது தன் கேர்ள் ப்ரெண்ட் தன்னை கவனித்து கொள்ள வேண்டும் என்று நினப்பார்கள். சமைப்பது, வீட்டுவேலை செய்வது என்று பலதும் தெரியாது அல்லது தெரிந்தாலும் செய்ய மாட்டார்கள்.


3. ஜட்ஜ்மெண்டல் மக்கள், சோசியல் ஆக இருப்பது என்பது தெரியாது!

இது ஒரு ஸ்பெஷல் காரணமாக கூறப்படுகிறது. நிறைய ஆண்கள் பெரும்பாலும் இந்தியாவில் ஒரு பாலர் கல்வி நிலையங்களில் படித்து வெளியில் வருவதால் நிறைய பெண்களுடன் எப்படி பேசுவது பழகுவது என்று தெரிவதில்லை. அதனால் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவளுடன்  பழகாமல், அவளை பற்றி அறிந்து கொள்ளாமல் இப்படி தான் என்று தனக்கு தானே நினைப்பை வைத்து கொள்ளுகிறார்கள். அதனை விட்டு வெளியே வர பல நேரங்களில் முயல்வதில்லை. இதே போன்ற மனநிலையால் நிறைய நண்பர்களும் வைத்து கொள்ளுவதில்லை. பின்னர் வைத்து கொண்டாலும் தனது நாடு, தனது மொழி, தனது ஊர் என்று தன்னை அதிகம் சுருக்கி கொள்ளுகிறார்கள். வெளியில் வருவது, நிறைய தெரிந்து கொள்ளுவது, நிறைய படிப்பது என்று ஓபன் மைன்டெட் ஆக இருக்க மாட்டார்கள்.


4. அனைத்தையும் பொதுபடுத்தும் மனநிலை

இதுவும் முதல் இரண்டு பாயிண்டுகளுடன் தொடர்பு உடையது தான். வீட்டு தாக்கம் அதிகம் இருப்பதாலோ என்னவோ, பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வைத்து இருப்பார்கள். அதிலிருந்து நாம் சிறிது மாறுபட்டாலும், உடனே, "எங்க வீட்டில எல்லாம் இப்படி இருக்க மாட்டாங்க, நீ இப்படி இருக்க". எங்க வீட்டு பக்கம் இப்படி செய்ய மாட்டாங்க, நீ செய்யிற..இப்படி நிறைய ஒப்பீடு இருக்கும். அனைத்தையும் ஒரு பொதுவான குணம் என்று அவர்கள் வைத்திருக்கும் ஒன்றுடன் எப்பொழுதும் ஒப்பீடு செய்து படுத்துவார்கள்.


டிஸ்கி.

மேலே குறிப்பிட்டவைகள் எல்லாம்  என் அமெரிக்க தோழிகளுடன் பேசிய பொழுது அவர்கள் சொன்ன/பகிர்ந்த  விசயங்கள் மட்டுமே. என்னுடைய சொந்த கருத்துக்கள் அல்ல. பொதுப்படையான கருத்துகளும் அல்ல. வேறு கருத்துகள் இருப்பின் வரவேற்க படுகின்றன.


Thursday, June 4, 2015

Kardashian குடும்பம் சொல்லி தரும் மார்க்கெட்டிங் தந்திரங்கள்

நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் என்றால் இதனை பார்த்து சந்தித்து இருப்பீர்கள். எந்த கடைக்கு, மாலுக்கு சென்று செக் அவுட் கௌண்டர் சென்று நின்றாலும் அந்து தொங்கும் magazine, புத்தகங்கள் எல்லாவற்றிலும் Kardashian குடும்பத்தில் ஏதாவது ஒருவரை பற்றி ஏதாவது ஒரு செய்தி/கிசு கிசு என்று இருக்கும்.  கம்ப்யூட்டர் திறந்து எந்த செய்தி என்று வாசித்தாலும், அல்லது யாகூ, கூகிள் போன்ற பல தளங்களில் செய்தி வாசித்தாலோ உடனே அந்த குடும்ப செய்தி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்து இருக்கும். இது அமெரிக்க பத்திரிக்கைகள் என்று மட்டும் இல்லை. இந்திய ஊடகங்களும் இவர்களை பற்றிய செய்திகளை வெளியிடுகிறார்கள். அமெரிக்காவிலேயே நிறைய பேருக்கு இந்த குடும்பம் பற்றி செய்திகள் எங்கும் நிறைந்து இருப்பது கடுப்படிகிறது, "Kartrashian" என்று ஒரு சொல் கூட இப்போது பிரயோகத்தில் உண்டு. தேடி பார்த்தீர்கள் என்றால் "விஷயம் ஒன்றும் இல்லாமல் famous ஆக" இருப்பவர்களை குறிப்பதற்கு என்று இந்த பதம் இப்போது உபயோகிக்க படுகிறது.

யார் இந்த கர்டஷியன் குடும்பம். அப்படி என்ன talent இருக்கிறது இவர்களிடம்.ஏன் இப்படி எங்கும் நீக்கமற இவர்கள் நிறைந்து இருகிறார்கள், உண்மை சொன்னால் இவர்கள் எல்லாரும் "Famous for being famous"..என்று யோசித்தால், இவர்களின் ஸெல்ப் மார்க்கெட்டிங் தந்திரம், குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் ப்ரொமோட் செய்ய இவர்களின் அம்மா/மேனேஜர் க்ரிஷ் எடுத்து கொண்ட தந்திரங்கள் விளங்கும்.

முதலில் இந்த குடும்பம் வெளியில் தெரிய ஆரம்பித்தது, கிம் கர்டஷியனின் ஆபாச வீடியோ மூலம் தான். பின்னர், "Keeping up with Kardashians" என்னும் ஒரு ரியாலிட்டி ஷோ மூலம்  அவரின் அக்கா, தங்கைகள் என்று ஒவ்வொருவராக அறிமுகபடுத்த பட்டு, பின்னர் அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கு என்று ஒரு ரியாலிட்டி ஷோ வரும் அளவு வளர்ந்து இருக்கிறார்கள்.

இந்த குடும்பம் சோசியல் மீடியாவை எப்படி உபயோகிப்பது, அதன் மூலம் எப்படி followers கொண்டு வருவது, பிசினஸ் பொருள்களை ப்ரொமோட் செய்வது என்று நன்கு அறிந்தவர்கள்.

கிம், மற்றும் அவரின் அக்கா தங்கைகள் அனைவரும் 36 லட்சம் ட்விட்டர் followers வைத்து இருக்கிறார்கள். தினமும் தன்னை பற்றி ஒரு படம் போடுவது, தன் ஆடை பற்றி, சென்ட் பற்றி, diet மாத்திரை, excercise பற்றி என்று ஏதாவது இருக்கும். இப்படி அவர்கள் சொல்லும் ஒவ்வொரு product பற்றியும் ஒரு ட்வீட் எழுத இவர்களுக்கு பல லட்சம் சம்பளம்.

இன்னொரு தந்திரம், இவர்கள் டார்கெட் செய்யும் ஆடியன்ஸ் எல்லா வயது பெண்களும்.
முக்கியமாக, கிம் டார்கெட் செய்வது, ஹை எண்டு பெண்களை, நிறைய பேஷன் விரும்பும் பெண்களை. அவரின் அக்கா டார்கெட் செய்வது, குழந்தை பெற்ற பெண்களை, அல்லது "Moms with kids", குழந்தைகளோடு இவர்களின் பிரச்சனைகள், சமாளிப்பது, அதோடு எப்படி career success அடைவது என்பது போன்ற ஆடியன்ஸ். இவரின் தங்கை டார்கெட் செய்வது, 20 களில் இருக்கும் பெண்கள் முக்கியமாக இவரை போலவே எடை அதிகமான பெண்கள். இவர் எடை குறைக்க செய்யும் செயல்கள் அதன் முன், பின் விளைவுகள் என்று எல்லாமே சோசியல்/ரியாலிட்டி  மீடியாவில் கவர் செய்ய படுகிறது.
அடுத்து கடைசி தங்கைகள் இருவரும் டீன் ஏஜ் பெண்கள் என்பதால் இவர்கள் டார்கெட் எல்லாமே டீன் ஏஜ் பெண்கள். இவர்கள் போடும் உடை, நைல் பாலிஷ், மேக் அப், சூ, hand bag, லிப் ஸ்டிக், மஸ்காரா...என்று அனைத்தும் பற்றி சோசியல் மீடியாவில் தங்கள் படங்களோடு  பகிர்கிறார்கள்.  இவரின் தம்பி டார்கெட் செய்வது, 20-30 வயதில் இருக்கும் ஆண்களை. இப்போது இவர்களின் தந்தை, transgender என்று ஆணிலிருந்து பெண்ணாகி விட்டார், அதனால் திருநங்கைகளையும் இந்த குடும்பம் விட்டு வைக்க போவதில்லை.

 இவர்கள் ஒவ்வொரு productம் endorse  செய்ய சொல்லி பல கம்பனிகள் க்யூவில் இருக்கிறார்கள்.  இப்படி பகிர்வதற்கு மட்டுமே இவர்கள் சம்பாதிக்கும் பணம் தலை சுற்ற வைக்கும்.

அடுத்து, இவர்கள் தாங்களாகவே சில productகளை தயார் செய்து சோசியல் மீடியா மூலம் ப்ரொமோட் செய்கிறார்கள். அதிலும் தந்திரமாக, முதல் நாள் ட்விட்டர், இரண்டாம் நாள் FB, மூன்றாம் நாள் Instagram ....என்று ஏதாவது ஒன்றில் ஒரு நாள். அடுத்து இவர்கள் போட்டி அறிவிகிறார்கள். இந்த பொருள்களை பற்றி உங்கள் கருத்து, புகை படம்..போடுங்கள் சிறந்த படத்திற்கு பரிசு..என்று அதிலும் இவர்கள் செய்யும் மார்க்கெட்டிங் அசத்தும் டெக்னிக்.

ஒரு படத்தில் சொல்வார்கள், "பிரபலம் நாலே ப்ரோப்ளேம் தான்" என்று.. ஆனால் கர்டஷியன் குடும்பத்தை பொருத்தவரை, பிரபலம் தான் இவர்களின் பலம், அதுவே இவர்களின் வாழ்க்கை, சம்பாத்தியம் என்று கோலோச்சுகிறார்கள்.  இவர்கள் அறிவில்லாதவர்கள், திறமை இல்லாதவர்கள் என்று அனைவரும் சொல்லி விட்டு போகட்டும், ஆனால் என்னை பொருத்தவரை, மிக சிறந்த பிசினெஸ் women. எப்படி, மக்கள், சோசியல் மீடியா உபயோகித்து சம்பாதிப்பது என்று கை தேர்ந்தவர்கள்.இந்த அறிவு இல்லை என்றால் "15 min fame" மக்கள் பலர் போல இந்நேரம் காணாமல் போய் இருப்பார்கள். ஆனால் கிட்டத்தட்ட உலகம் முழுக்க இவர்களை பற்றி தெரிந்து இருக்கும் அளவு இவர்களின் மார்க்கெட்டிங் தந்திரம் இருக்கிறது.


நன்றி.

Tuesday, March 31, 2015

சொந்த ஊருக்கு விடுமுறைக்கு செல்வது போல ஸ்ட்ரெஸ் எதுவும் இல்லை.

இந்தியாவுக்கு சென்று 2-3 வருடங்கள் ஆச்சு? ஒரு ட்ரிப் போடலாமா? அப்படின்னு யோசிச்சா கூட இப்பெல்லாம் பலருக்கு பல்ஸ் எகிறும். ஏனெனில் முதலில் அவர்கள் பார்க்க வேண்டியது டிக்கெட் காசு. இப்போதெல்லாம் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்வதென்றால் குறைந்தது ஒருவருக்கு $1200-$1500 செலவு ஆகும். அதுவும் சீசன் நேரங்களில் இன்னும் அதிகம் இருக்கும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குறைந்தது $5000 டிக்கெட் க்கு மட்டுமே எடுத்து வைக்க வேண்டும். பிறகு ஆபிசில் லீவ் சொல்ல வேண்டும். நிறைய நேரங்களில் 3 வாரம் மட்டுமே லீவ் பலருக்கு கிடைக்கும். ஒரு சிலர் 4 வாரங்கள் எடுத்து கொள்ளலாம். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள் என்றால் இருவரின் லீவும் ஒரு சேர வர வேண்டும், இப்படி பல அட்ஜஸ்ட்மென்ட் உண்டு.

டிக்கெட், லீவ் எல்லாம் கரெக்ட் செய்த பின்பு வருவது தான் "இந்தியா ஷாப்பிங்" ஒரு பெரிய லிஸ்ட் இருக்கும். அதில் வீட்டில் உள்ளவர்களுக்கு, இல்லை தெரிந்தவர்களுக்கு என்று இருக்கும் லிஸ்ட் விண்ணை தாண்டும். அதற்க்கு பட்ஜெட் உண்டு பாருங்கள் அது எப்படியும் டிக்கெட் செலவில் ஒரு கால்பங்காவது இருக்கும், லேப்டாப், ஐபோன், கேமரா  போல கொஞ்சம் காஸ்ட்லி ஐடம்ஸ் என்றால் டிக்கெட் செலவில் பாதி கூட ஆகலாம், இதெல்லாம் அவரவர் வசதியை பொறுத்து. ஆனால் இதில் நாம் டென்ஷன் ஆவது தேடி தேடி அலைந்து வாங்குவது தான். உதாரணமாக சிறு குழந்தைகளுக்கு டிரஸ் வாங்குவது. போன் செய்து குழந்தைகளின் சைஸ் கேட்டு பின்னர் அதே சைஸ் இங்கு கிடைக்குமா என்று பார்த்து அலைந்து வாங்கி ஒழுங்கா அதை கொண்டு சேர்க்க வேண்டுமே என்று நினைத்து கொண்டு சேர்த்து இருப்போம், ஆனால் குழந்தைகளை விட பெற்றோர் முகம் ஒரு மாதிரி செல்லுமே அதனை பார்க்கும் பொது எனக்கெல்லாம் சரி கடுப்பு வரும். போன முறை விடுமுறைக்கு சென்ற பொது சொந்த கார பெண்ணின் மகனுக்கு என்று அலைந்து திரிந்து ஒரு டாம்மி ஹில்பிகர் சட்டை மற்றும் பேண்டு வாங்கி கொண்டு சென்றேன். ஜிகு ஜிகு டிரஸ் போட்டே பழக்க பட்ட அவர்கள், இந்த சட்டையை ஒரு ஆர்வமாக கூட வாங்கி கொள்ளவில்லை. எனக்கு சரி கோவம். அதே போல, பெண் குழந்தைகள் என்றால், நைல் பாலிஷ், மேக்கப் ஐடம்ஸ் என்று பெரிய லிஸ்ட் இருக்கும்.

ஒரு வழியாக ஷாப்பிங் எல்லாம் முடிந்தாயிற்று என்றால் அடுத்தது பயணம்,  குறைந்தது 24 மணிநேர விமான பயணம். அதுவும் சிறு குழந்தைகள் வைத்து கொண்டு செய்யும் பயணம் போல டென்ஷன் வேறெதுவும் இருப்பதில்லை.  குறைந்தது இரண்டு விமானங்கள் மாறி செல்ல வேண்டும். விமான நிலையத்தில் காத்திருப்பு நேரம் தவிர இடத்தில் சிறு குழந்தைகளை வைத்து கொண்டு, விளையாட்டு காட்டி, விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் ஏற்படும் அழுத்த பிரச்சனைகளால் குழந்தைகள் காதில் உண்டாகும் வலியால் வீல் என்று அலறும் பொது சமாதானபடுத்தி ஊருக்கு போய் சேர்வதற்குள்..அப்பப்பா என்று இருக்கும். பெரியவர்களான நமக்கே ஒரே இடத்தில் உக்கார்ந்து உக்கார்ந்து கால் வலி, அல்லது வீக்கம் வரலாம். சின்ன குழந்தைகளை என்னவென்று சொல்வது. எப்போடா சென்னை போய் சேருவோம் என்று இருக்கும் எனக்கெல்லாம். ஒரு வழியாக, நடு இரவில் சென்னையில் போய் இறங்குவது போல இருக்கும். ஆனால் சென்னை என்னை போன்று பலருக்கு கடைசி பிரயாண இடமாக இருப்பதில்லை. அடுத்து மதுரை, கோவை என்று பல தொடர் விமானம் இருக்கும். நம்மநாட்டுக்கு  வந்துட்டாலும் சொந்த ஊருக்கு செல்ல இன்னும் சில மணி நேரங்கள் காத்து இருக்க வேண்டி வரும். அதுவும் சிறு குழந்தையுடன் என்றால் சொல்லவே வேண்டாம்.

சொந்த ஊருக்கு வந்தால் அடுத்து நாம் மற்றும் நம் குழந்தைகள் சந்திப்பது காய்ச்சல் அல்லது சளி. ஊருக்கு வந்து ஒரு வாரத்திற்குள் கிட்டத்தட்ட எல்லாருக்கும் இது வந்து விடும். அடுத்து வெட்கை அல்லது சூடு, கொசுகடி என்று பல சிறு குழந்தைகளுக்கு உடல் முழுதும் கொப்புளம் வந்து விடும். நிறைய குழந்தைகளுக்கு  அலர்ஜி ஏற்பட்டு விடும்.  டாக்டரிடம் சென்றால் ஊசி போடுவேன் என்பார்கள், இங்கிருக்கும் பழக்கத்தில்  "எதற்கு ஊசி போடுகிறீர்கள்", என்று கேட்க முடியாது. உடனே "வந்துட்டன்கப்பா NRI ஸ்" அப்படின்னு கிண்டல் வரும். காரணம் சொல்ல மாட்டார்கள். முகுந்த் 10 மாத குழந்தையாக இருந்த பொது இந்திய அழைத்து சென்றிருந்தேன், உடல் எல்லாம் கொசு கடியில் கொப்புளம் பின்னர் காய்ச்சல் என்று டாக்டரிடம் அழைத்து சென்றோம். உடனே அந்த டாக்டர், அண்டிபையடிக் எழுதி கொடுத்தார். எதற்கு அண்டிபையடிக்? என்று டாக்டரிடம் நான் கேட்க்க, அது வைரல் இன்பிக்க்சன் மாதிரி இருக்கு அதனால தான் என்றார். எனக்கு தூக்கி வாரி போட்டது. "என்ன டாக்டர் இது, வைரல் இன்பாக்சனுக்கு அண்டிபயாடிக் ஆ", என்று உடனே கேட்டு விட்டேன். இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத அவர் சமாளித்து கொண்டு, ear infection இருக்கு அதனால என்று சமாளித்தார். பின்னர் என் அம்மாவிடம் "typical NRI" என்று சொல்லி இருக்கிறார். கேள்வி கேட்டால் இப்படி கிண்டல் செய்ய வேண்டியது.

அடுத்து ஒவ்வொரு முறை இந்தியா செல்லும் போதும்  நான் ரொம்ப அனுபவிப்பது என்றால், சொந்த காரங்க வீட்டுக்கு செல்வது. நாம் சென்றிருப்பதோ 3 அல்லது 4 வார விடுமுறை. அதிலும்" ஏன் வீட்டுக்கு வரல, அவங்க வீட்டுக்கு மட்டும் போயிருக்க" என்று நமது சொந்தகள் செய்யும் டிராமா இருக்கிறதே..ஐயோ சாமி ஆளை விடுங்க என்றிருக்கும். அதிலும்நாமிருப்பது  மதுரை என்றால், கோவை, சென்னை, பாண்டிச்சேரி பெங்களூர் என்று பல இடந்திலும் இருப்பார்கள். உள்ளூருக்குள்ளே நிறைய சொந்தங்கள் இருந்தாலும் தினமும் யாராவது வீட்டுக்கு வருவார்கள் அல்லது நாம் சென்று பார்க்க வேண்டி வரும். வருபவர்கள் எல்லாருக்கும் ஏதாவது அமெரிக்கா பொருள் கொடுக்க வேண்டும், அது சாக்லேட் அல்லது நட்ஸ் என்று ஏதாவது இருக்க வேண்டும். நெருங்கிய சொந்தம் என்றால் நம்மிடம் "பெரியதாக" எதிர்பார்பார்கள். நாம் அவர்களுக்கு ஏற்ற்றார் போல எதுவும் செய்யவில்லை என்றால், முகத்தைப் காட்டுவார்கள்.

எனக்கு மிகவும் காமெடியாக அதே சமயம் கடுப்பகுவது என்னவென்றால், எதோ நாமக்கெல்லாம் காசு வானத்தில் இருந்து கொண்ட்டுகிறது போல இவர்கள் நினைப்பதே. ஏற்கனவே நிறைய காசு செலவு செய்து இந்தியா சென்றிருப்போம், அங்கு சென்று கொஞ்சம் பணத்தை எண்ணி செலவு செய்தால், "என்னமா வெளி நாட்டு சம்பாத்தியம், இப்படி பார்த்து பார்த்து செலவளிக்கிற" என்பார்கள். அப்போது வரும் டென்ஷன் பயங்கரமாக இருக்கும்.

இங்கிருந்து அங்கு சென்று முதல் ஒரு வாரம், நேர வித்தியாசம் பழக சரியாக இருக்கும். இங்கு இரவென்றால் அங்கு பகல் என்றிருக்கும் நாம் அங்கு சென்று இரவில் முழித்து கொண்டிருப்போம், பின்னர் பகலில் எழுந்து உக்கார்ந்து கொண்டிருப்போம். ஒரு வழியாக டைம் செட் ஆகி இருக்கும் நேரம், திரும்ப வர வேண்டிய நேரமாகிவிடும். பின்னர் மறுபடியும் இங்கு வந்து அதே டைம் பிரச்னை சந்திக்க வேண்டி இருக்கும்.


முடிவாக விடுமுறை முடிந்து ஊருக்கு கிளம்பியாயிற்று , விமான நிலையத்தில்  சொந்த பந்தங்களை  பார்க்கும் பொது கண்ணில் ஒரு துளி நீர் கட்டாயம் வரும். "அடுத்து எப்போ வருவ?" என்று கேட்கும் வார்த்தைகளை கேட்டு அழுகை வந்துவிடும். என்ன செய்வது, எத்தனை ஸ்ட்ரெஸ்..என்றாலும் ஊருக்கு செல்வது என்பது ஒரு சந்தோசம் தான்.

நன்றி..

Thursday, March 26, 2015

ABCD பெண்கள் சந்திக்கும் விமர்சனங்கள்

 அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த இந்திய அமெரிக்கர்கள்  அதுவும் 70-80 களில் இங்கு வந்து செட்டில் ஆன இந்தியர்களுக்கு பிறந்த குழந்தைகள் முக்கியமாக  பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கிய விஷயம் "டேட்டிங் மற்றும் கல்யாணம்".  ABCD ஆக இந்திய அமெரிக்க கலாச்சார கூட்டஞ்சோறு போல வளரும் இவர்கள், இந்திய கலாச்சாரத்துடன் ஓட்ட முடியாமல் அமெரிக்க கலாச்சாரத்துடனும் சேர முடியாமல் இருப்பதை காண முடியும். அதாவது இங்கு இருக்கும் கலாச்சாரம் போல பருவ வயதை அடைந்தவுடன் தன் மகளோ மகனோ "டேட்டிங்" போகவில்லை என்றால் ஏதோ பிரச்சனை அவர்களுக்கு என்று டாக்டரிடம் அழைத்து செல்லும் பெற்றோர்களை கண்டு இருக்கிறேன். நம் கலாச்சாரத்தை பின்பற்றி குழந்தைதைகளை வளர்க்கும் பல பெற்றோர் டேட்டிங் செல்ல அனுமதிப்பதில்லை. அதே போல பாலியல் பற்றிய பல விசயங்களை சொல்லி தருவதும் இல்லை. எல்லாம் தங்களின் நண்பர்கள் மூலம் அறிந்து கொள்கிறார்கள் இந்திய குழந்தைகள். அழகுணர்ச்சி பற்றியோ, சுத்தம் பற்றியோ இங்கிருக்கும் பெற்றோர் போல பெண் குழந்தைகளுக்கு நிறைய பெற்றோர் சொல்லி தருவதில்லை. படிப்பில் காட்டும் கவனம் மற்ற இங்கிருக்கும் சொஸைட்டியில் வாழ வேண்டும் என்றால் மற்ற விசயங்களிலும் வேண்டும் என்று பல பெற்றோர் அறிவதில்லை, சொல்லி கொடுப்பதில்லை.

கல்யாணம் என்று வரும் போது இந்திய ஆண்களை அல்லது பெண்களை தங்கள் குழந்தைகளுக்கு மனமுடிக்கவே இன்னும் பல NRI  பெற்றோர் விரும்புகின்றனர். கருப்பு, வெள்ளை, ஸ்பானிஷ் போன்ற பல இன ஆண்கள் அல்லது  பெண்களை தங்கள் குழந்தைகள் டேட்டிங் செய்தால் டென்ஷன் ஆகும் பெற்றோர் அதிகம்.

இப்படி பொத்தி பொத்தி இந்திய கலாச்சாரத்துடன் வளர்க்கப்படும் பெண் குழந்தைகள் முக்கியமாக தென் இந்திய பெண்கள் இன்னும் இந்திய பெண்கள் போல்  பல விசயத்தில் விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள். இது ஒரு பக்கம் என்றால் இந்தியாவில் இருந்து இங்கு மேல் படிப்பு படிக்க வரும் பல பெண்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளும் இங்கே.

(இது நான்இங்கிருக்கும் இந்திய  பெண்களை அதுவும் தென் இந்திய பெண்களை  வைத்துஅவர்களிடம் பேசியதை வைத்து எழுதியது பொதுப்படையானது அல்ல ).  இந்திய பெண்கள் மீது வைக்கப்படும் சில விமர்சனங்கள் இங்கே.

1. இந்திய பெண்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்லை. இந்திய உடை தவிர எதனையும் எப்படி உடுத்த வேண்டும் என்று தெரியாது

2. இந்திய பெண்கள் ஹெல்த் கான்சியஸ் இல்லை, தங்கள் உடல் நிலையை கவனித்து கொள்வது இல்லை. வயதில் ஒல்லியாக இருக்கும் பல பெண்களும், கல்யாண ரிங் மாட்டி விட்டால் பலூன் ஆகி விடுகிறார்கள். 35 வயது கடந்த ஒல்லியான அழகான இந்திய பெண்ணை காண்பது மிக அரிது. ஆனால் 40 வயதானாலும் அழகாக சிக்என்று இருக்கும் பல வேறு இன பெண்களை காணலாம். உதாரணமாக ஐரோப்பா பெண்கள் பலருடைய வயதையும் கணிக்க முடியாது.


3. அழகுணர்ச்சி கிடையாது, உடல் சுத்தம் என்பது கிடையாது, சில பெண்கள் அருகில் செல்ல முடியாத அளவு வியர்வை நாற்றம் இருக்கிறது, அல்லது ரோமங்கள்.

4. இந்திய பெண்கள் "அர்குமேண்டடிவ்" அனைத்தையும் டிராமடைஸ் செய்வார்கள். நிறைய பேசுவார்கள் சண்டை போடுவார்கள். நிறைய தொலைக்காட்சி தொடர்கள் பார்பதாலோ என்னவோ, எல்லாவற்றியும் டிராமா செய்து விடுவார்கள்.

5. எப்போதும் தன் இன மக்களுடன் தான் சேர்வார்கள், அடுத்த மக்களுடன் கலந்து பேசவோ, அவர்களின் கலாச்சாரத்தை அறிந்து கொள்வோ பழகவோ மாட்டார்கள். பல இந்திய பெண்கள் சோம்பேறிகள். தான் ஒன்றும் வேலை செய்ய மாட்டார்கள் ஆனால் செய்பவர்களை பற்றி நிறைய புரண் பேசுவார்கள்.

6. தன் கலர் பற்றி அல்லது இனம் பற்றி எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும்.


இதனை போன்ற விமர்சனங்களை நான் கேட்கும் போது எனக்கு பயங்கர கோவம் வந்தது. ஆனால்
Lets face it ladies. இதில் சொல்லப்பட்ட பல விசயங்களை நானே பார்த்து இருக்கிறேன் உணர்ந்து இருக்கிறேன். அதனால் இந்த விமர்சனங்கள் எல்லாம் பொய் என்று நம்மை degrade செய்கிறார்கள் என்று  என்னால் தள்ள முடியவில்லை.

உதாரணமாக பெண்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் இல்லை என்பது , இந்திய உடை தவிர மற்றெதுவும் உடுத்த தெரியாது என்பது . எனக்கு தெரிந்து நான் பார்க்கும் பல பெண்கள் உடுத்தும் உடை பார்த்தால் நமக்கு ஐயோ என்று தோன்றும். ஒழுங்காக உடை உடுத்த ஒல்லியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை நல்ல பிட்டிங் இருந்தால் போதும் டீசென்ட் உடை உடுத்த..ஆனால் பல நேரங்களில் ஆபிசுக்கு கூட சரியான பிட்டிங் இல்லாத உடல் பிதுங்கும் படி உடை உடுத்துபவர்களை நானே பார்த்திருக்கிறேன்.

அதே போல உடல் சுத்தம், நான் அதிகம் கவனித்தது இது, பல பெண்கள் பக்கம் செல்ல முடியாத அளவு வேர்வை நாற்றம் அல்லது உடல் நாற்றம் இருக்கும். ஆபிசுக்கு கூட இப்படி வருபவர்களை பார்த்தால் எனக்கு கோவம் கோவமாக வரும். நீங்கள் செல்வது பொது இடத்திற்க்கு, சில Etiquette உண்டு பெண்களே. எல்லாவற்றியும் பின்பற்ற முடியவில்லை என்றாலும் ஒரு சிலவற்றை முடிந்த அளவு பின்பற்றுங்கள் என்று சொல்ல தோன்றும்.

"அர்குமேண்டடிவ்" என்பது நிறைய பார்த்து இருக்கிறேன்.  அதே போல நிறைய புரண் பேசுவது, நிறைய தொலைகாட்சி தொடர் பார்த்து அதே போல நினைத்து டிராமாடைஸ்  செய்வது பார்த்து இருக்கிறேன். ப்ளீஸ், ஸ்டாப் இட் கேர்ள்ஸ், என்று பல நேரங்களில் எனக்கே தோன்றி இருக்கிறது. 


அதே போல எப்போதும் தன இன மக்களுடன் சேருவது. இந்தியர்கள் இந்தியர்களுடன் மட்டும் பேசுவது என்பது எல்லாம் போய், தமிழ் என்றால் தமிழ் மக்கள் குரூப் ஒன்று இருக்கும். தெலுங்கு என்றால் தெலுங்கு மக்கள் குரூப் என்று ஒன்று இருக்கும்...அங்கேயும் இவர்கள் பேசுவது எல்லாம், சினிமா, மேக்கப் அல்லது மாமியார் மருமகள் பிரச்னை.ஐயோ சாமி என்றிருக்கும்.  ஆபிசில் கூட இந்த குரூப் கலாச்சாரம் அதிகம் உண்டு.


வெளி நாடுகளில் வாழ போகிறீர்கள் அல்லது உங்கள் குழந்தை வாழபோகிறது என்றால் தயவு செய்து, மற்ற மக்களிடம் பழகும் முறை, அடுத்த மக்களின் பழக்கவழக்கங்கள், எப்படி சுத்தமாக இருப்பது, எப்படி ஹெல்த் கான்சியஸ் ஆகா இருப்பது, போன்ற பலவும் சொல்லி கொடுங்கள் உங்கள் பெண்களுக்கு.

முடிவாக இங்கு எழுதப்படிருக்கும் பலவும் என் அனுபவத்தில் நான் கண்ட கேட்ட, உணர்ந்த விசயங்களை கொண்டு எழுதியது. யார் மனதையும் புண் படுத்த அல்ல.

Wednesday, March 4, 2015

மேலை நாடுகளில் வாழும் இந்திய பெண்கள் சந்திக்கும் கலாச்சார மாற்றங்கள்


நீங்கள் மேலை நாடுகளில் வசிக்கிறீர்கள் அதுவும் மேலை நாடுகளில் மேல்படிப்பு படித்தவர் என்றால் கட்டாயம் இதனை அனுபவித்து இருப்பவர்கள்.

இது பலருக்கும் நடந்திருக்கும், நமக்குதெரிந்தவர் உதாரணமாக உங்கள் பாஸ் என்று வைத்து கொள்ளுங்கள் அவரை சந்திக்கும் போது  கட்டி பிடித்தல் சகஜம் அது இவர்களின் கலாச்சாரம். அதே சமயம் தெரியாதவர் என்றால் சந்திக்கும் போது கை கொடுத்தல் மிக சகஜம். உங்களுக்கு  எதாவது நல்லது அல்லது கெட்டது என்று எது நடந்தாலும் இப்படி வந்து கட்டி பிடித்து ஆறுதல் சொல்வார்கள் அல்லது வாழ்த்துவார்கள். இன்னும் சில நாடுகளில் அதுவும் ஐரோப்பிய நாடுகளில் கன்னத்தில் முத்தம் கொடுப்பார்கள். இதெல்லாம் எப்படி செய்யலாம், மாட்டேன் என்று சொல்ல முடியாது. உடனே "unfriendly" என்று முத்திரை குத்தி விடுவார்கள்.

இதனையும் அனுபவித்து இருக்கலாம், யாரையும் பார்க்கும் போது ஒரு சிரிப்பு சிரிப்பார்கள். தெரிந்தவர் தெரியாதவர் என்று எந்த வித்தியாசமும் இருக்காது. நீங்களும் பதிலுக்கு சிரிக்க வேண்டி வரும். நீங்கள் ஜாகிங் செல்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அப்போது எதிரில் உங்களை போல ஜாகிங் செய்து கொண்டு வருபவர் உங்களை பார்த்து ஹாய் அல்லது குட் மார்னிங் சொன்னால் நீங்களும் சொல்ல வேண்டி வரும், அவர் யாரெண்று கூட உங்களுக்கு தெரியா விட்டாலும், இல்லாவிட்டால் நீங்கள் rude என்று சொல்லி விடுவார்கள்.

அதே போல நீங்கள் கீழே விழுந்து விடீர்கள் என்றாலும் உடனே வந்து உங்களை தொட்டு தூக்குவார்கள், உடனே "யார் நீ, என்னை தூக்க " என்று சண்டை போட முடியாது .  எப்போது டின்னெர் அல்லது பார்ட்டி என்றாலும் ஆண்களும் பெண்களும் பீர் அல்லது வைன் குடிப்பார்கள், நீங்களும் குடிக்கிறீர்களா? என்று கேட்பார்கள், இதென்ன பொம்பளை கிட்ட இப்படி கேட்குறீங்களே? என்று நீங்கள் கேட்க முடியாது . ஒரு success பார்டி அல்லது கல்யாணம் என்று சென்றாலும்  உடனே ஷாம்பெயின் ஓபன் செய்வார்கள், நமக்கும் குடுப்பார்கள், நீங்கள் குடிக்கவிட்டலும், கிளாஸ் ஐ வாங்கி டோஸ்ட் செய்ய வேண்டும், இல்லையேல் மரியாதை குறைவாக நினைப்பார்கள்.

வெளி நாடுகளில் வந்து படிக்கும் சிலர் அனுபவிப்பது இது. நீங்கள் இங்கு இருக்கும் பலரையும் உங்களுக்கு வெளிநாட்டு மக்களுடன் பழக வேண்டும் என்றால் அவர்களுடைய சினிமா, விளையாட்டு, மியூசிக், அரசியல், சமையல் என்று ஒவ்வொன்றாக கற்று கொள்ள வேண்டும், அப்பொழுது தான் அவர்களுடன் பேச பழக இயலும் .

என்னை போன்று ஒரு கட்டுபெட்டியான குடும்பத்தில் பிறந்து வெளிநாட்டுக்கு வந்தவர்கள் அதுவும் மேல்படிப்புக்கு என்று வந்தவர்கள் இதனை  போன்ற ஒரு விசயத்தை பெரிய ஷாக் ஆக்கி பார்பவர்கள். ஆனால்நாட்கள் செல்ல செல்ல  நீங்களும் இந்த பழக்க வழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக உங்களை அறியாமல் பழகி இருப்பீர்கள்.

உதாரணமாக, பெண்கள் அதுவும் வேலைக்கு செல்லும் பெண்கள் பல  பொட்டு வைப்பது, விபூதி இடுவது, கல்யாணம் ஆனவர் என்றால் மெட்டி அணிவது, தாலி அணிவது என்பதெல்லாம் இருபதில்லை.எனக்கு தெரிந்தே வேலைக்கு செல்லாத  நிறைய பெண்களும் இப்போது தாலி அணிவதில்லை. திருட்டு பயம் என்று காரணம் சொல்கிறார்கள் என்றாலும் இது சாதரணமாகி விட்டது.தாலிக்கு  பதில் மோதிரம் அணிந்து கொள்கிறார்கள், இங்குள்ளவர்கள் போல.
நிறைய இந்திய பெண்கள் பார்ட்டி என்றால் வைன் அருந்துகிறார்கள். சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து கொள்கிறார்கள், ஆண் பெண் வித்தியாசம் இன்றி.

இந்திய உடைகளை உடுத்துவது என்பது மிக குறைந்து விட்டது . இப்போதெல்லாம் சுடிதார் கூட உடுத்துவது இல்லை, எப்பொழுதும் மேலை நாட்டு உடை தான். புடவை உடுத்துவது என்பது பார்ட்டிக்கு செல்லும் போது அல்லது கோவிலுக்கு போகும் பொது என்றாகிவிட்டது. இதெல்லாம் நம்மையும் அறியாமல் நடக்கும் மாற்றங்கள். எது நமக்கு சவுகரியமோ அதனை உடுத்தி கொள்கிறோம்.
ஏனெனில் ஐரோப்பிய நகரங்களில் இந்திய உடையுடன் சுற்றினால் எப்படி நம்மை வேடிக்கை பார்பார்கள் என்பதை நான் அனுபவித்து இருக்கிறேன். அமெரிக்காவில் இந்தியர்கள் நிறைய இருப்பதால் இந்திய உடை அணிதாலும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். ஆனால் ஐரோப்பாவில் கட்டாயம் வேடிக்கை பார்ப்பார்கள்(என்னுடைய 10 வருடங்களுக்கு முந்தைய அனுபவம் இது, இப்போது மாறி இருக்க வாய்ப்பு இருக்கிறது). ஆனாலும் இன்றும் அமெரிக்காவில் இந்திய உடையுடன் ஆபிசுக்கு வந்தால் எல்லாரும் கட்டாயம் உங்களை வேடிக்கை பார்பார்கள்.


இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம்மை அறியாமல் மாறிய நாம், இந்தியாவிற்கு செல்லும் போது நம்மை மறுபடியும் re tune செய்து கொள்ள வேண்டி வரும். உதாரணமாக, படித்து கொண்டிருந்த போது,  நான்   விடுமுறைக்கு என்று சென்ற போது மதுரை ஏர்போர்ட்டில் என்னைபார்த்த என் அப்பா, "இது மதுரை மா, பான்ட் ஷர்ட் எல்லாம் போடாத, எல்லாரும் ஒரு மாதிரி பார்பாங்க" என்று சொன்னது இன்னும் நினைப்பு இருக்கிறது. இதற்காக பிரான்க்பார்தில் இருந்து விமானம் ஏறும் முன் நான் உடை மாற்றி கொண்டு வர இயலாது. எல்லாரையும் பார்த்து சிரித்து பழகி இருந்த நான், அங்கு ஒரு ஆட்டோ டிரைவரை பார்த்து சிரிக்க அந்த ஆள் என்னை ஒரு மாதிரி நினைத்து விட்டார். பின்னர் நான்  தவறை உணர்ந்து முகத்தை கடுப்பாக்கியது வேறு கதை. அதே போல தெரிந்தவர்களை பார்க்கும் போது  இங்கேபழகியது  போல கட்டி பிடிக்க முடியாது. அங்கே கட்டி பிடிப்பது என்றாலே பாலியல் சார்ந்த ஒரு வார்த்தை.  அதே போல யாராவது விழுந்தால் ஓடிபோய் தூக்குவது, அனைத்திற்கும் நன்றி சொல்லுவது, சாரி சொல்லுவது, என்று செய்து கொண்டிருப்போம்.

இப்படி எல்லாம் நம்மையும் அறியாமல் நாம் கற்ற பழக்கவழக்கங்கலால்  நாம் கலாச்சாரத்தை மறந்தவர்கள் ஆகிவிடுவோமா? என்னை பொறுத்த வரை, யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் செய்யும் எந்த விசயங்களும் நல்லதே. மாற்றங்கள் என்பது மாறாதது, இப்போது இல்லாவிட்டாலும் இன்னும் சில  ஆண்டுகளில் இந்தியாவில் கூட இவை பெரிய விசயமாக இருக்காது.  நாம் தான் அந்த மாற்றங்களை பழகி கொள்ள வேண்டும்.

நன்றி


Sunday, February 22, 2015

Kumon, Abacus, பியானோ... அப்பப்பா முடியல!


எங்கள் வீட்டுக்கு அருகில் வசிக்கும் ஒரு அமெரிக்கா குடும்பத்தில் இருக்கும் குழந்தைகளுடன் முகுந்த் விளையாட சென்றிருந்தான். அப்போது அந்த அம்மா 

"How come Indian students excel in Science and Math but not in Arts?, why do asians push their kids so much in to academics?" என்று. 

நான் இதை பற்றி இதுநாள் வரை யோசித்ததில்லை என்பதால் அவர்கள் கேட்ட பின் அந்த கேள்வி சரி என்றே தோன்றியது. 

இங்குள்ள பள்ளிகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் அறிவியலிலும், கணக்கிலும் நன்றாக score செய்கிறார்கள். Reading, Art இவைகள் பக்கம் அவர்கள் அதிகம் செல்வதில்லை. ஆனால் அமெரிக்க மாணவர்களோ நெறைய Reading, Art போன்றவற்றை பாடமாக எடுக்கிறார்கள். 

இங்கு இருக்கும் பள்ளிகள் அனைத்தும் public schools, அதாவது நம்மூர் அரசு பள்ளிகள் போன்றவை. இங்கு பள்ளி படிப்பு இலவசம் என்பதால் பெரும்பாலோனோர் தங்கள் பிள்ளைகளை இதில் தான் சேர்க்கிறார்கள். இங்கு இருக்கும் private schools எல்லாம் அதிக கட்டணம் வசூலிப்பவை என்பதால் அங்கு பிள்ளைகளை அனுப்புவது குறைவு.

மேலும் இங்குள்ள பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் இருக்கும் பள்ளிகளுக்கு எல்லாம் demand அதிகம் இருக்கும். பள்ளி Admission அவரவர் இருக்கும் இடத்தை பொறுத்தது. ஒருவர் நல்ல பள்ளி இருக்கும் area வில் உள்ளார் என்றால் அவர்களுக்கு அந்த பள்ளியில் admission உண்டு. அதனால் நல்ல பள்ளி உள்ள area களில் எல்லாம் வீடு வாங்குவது, அல்லது வீடு வாடகைக்கு எடுப்பதற்கு அதிகம் செலவாகும்.

இங்குள்ள இந்தியர்களில் பெரும்பாலோனோர் நல்ல பள்ளிகள் இருக்கும் பகுதியில் வாழ்வதால், இந்திய சூழ்நிலை போல அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள பிள்ளைகளுக்குள் போட்டி மனப்பான்மை உருவாக்கபடுகிறது . 

இந்தியாவில் நெறைய வீடுகளில் அடுத்த வீட்டு பிள்ளைகளை காட்டி ஒரு comparison நடக்கும். அதே போல இங்கும் நெறைய வீடுகளில் நடக்கிறது.

"அடுத்த வீட்டு பிள்ளை மியூசிக் கிளாஸ் போகுது, நீயும் போ"

"அந்த பிள்ளை western டான்ஸ் கிளாஸ் போகுது, உன்னையும் அதில சேர்த்து விடுறேன்"


peer pressure அதிகரிக்க அதிகரிக்க  தங்கள் குழந்தைகளை அதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர் நினைத்தாலும் அவர்களின் பள்ளி விடுவதில்லை. தங்களின் grade ஐ உயர்த்த வேண்டும் என்று பள்ளிகளும் குழந்தைகளுக்கு நிறைய homework கொடுக்கிறார்கள்.
உதாரணமாக எங்கள் பகுதியில் இருக்கும் எல்லா பள்ளிகளும் UKG இல் இருந்ததே பிள்ளைகளுக்கு ஆங்கில வீட்டுபாடம் Razkids என்னும் தளத்தில் போட்டு விடுகிறார்கள். அதே போல கணக்கு வீட்டுப்பாடம் IXL  என்னும் தளத்தில். UKG படிக்கும் முகுந்துக்கு ஆங்கில வீட்டுபாடம் இது. ஒரு கதை புக்கை முழுவதும் படித்து வாசிக்க வேண்டும். பின்னர் அதன் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார், ஏன் அப்படி சொல்கிறார். அதில் வரும் கதை மாந்தர்கள் என் அப்படி செய்கிறார்கள், எப்படி மாற்றி செய்யலாம். ஆசிரியர் நோக்கம் என்ன? என்பன போன்ற பல விசயங்களை கிரகிக்க வேண்டும். ஒவ்வொரு கதை முடிவிலும் சில quiz வினாக்கள் உண்டு. அவைகளுக்கு பதில் அளிக்க வேண்டும். அதன் பின் மதிப்பெண்கள் அவன் ஆசிரியருக்கு அனுப்பபடுகிறது.

இதனை தவிர இப்போது பல பள்ளிகளில் STEM எனப்படும் Science, Technology , Engineering மற்றும் Math சார்ந்த பல விசயங்களை project ஆகா கொடுகிறார்கள். அதற்கென்று பல விசயங்களை நாம் நெட்டில் தேட வேண்டி வருகிறது. எல்லாம் creative hands on ஆகா இருப்பதால் மனபாடம் என்பது கிடையாது. ஆனால் இதனை குழந்தைகளுக்கு நாம் சொல்லி தருவதற்கு முன்பு பல நேரங்களில் நாமே நிறைய cross -reference செய்ய வேண்டி இருக்கிறது.

பள்ளியில் இருக்கும் homework போதாது என்று பல இந்தியர்கள் தங்கள் பிள்ளைகளை நெறைய extra classes க்கு அனுப்புகிறார்கள். எப்போதும் எதாவது ஒரு class இக்கு செல்கிறார்கள். இதில் parents க்கும் வேலை அதிகம். ஒவ்வொரு class க்கும் அவர்கள் குழந்தைகளை கொண்டு விடவேண்டும். 

மியூசிக், டான்ஸ், பியோனோ, ஸ்விம்மிங், கராத்தே, கிடார் என்று நெறைய classes உண்டு, ஆனாலும் அதனையே ஒரு career ஆக குழந்தைகளை எடுக்க நெறைய பெற்றோர் விடுவதில்லை. பெரும்பாலான இந்திய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மருத்துவ (அல்லது மருத்துவம் சார்ந்த) அல்லது இன்ஜினியரிங் படிப்புக்கு போவதையே விரும்புகிறார்கள். 

இதற்கெல்லாம் பெற்றோர்கள் தாங்கள் வளர்ந்த சூழ்நிலை போல தம் தம் பிள்ளைகளையும் வளர்க்க நினைப்பது தான் காரணம் என்று நினைக்கிறன். இது ஒரு வகையில் நல்லது தான் என்று நினைத்தாலும், ஒரு ஊரில் அனைவருமே மருத்துவராகவும், பொறியாளராகவும் ஆக நினைத்தால் என்ன ஆகும்? பல குழந்தைகளுக்கு playtime கிடைப்பதில்லை. பல நேரங்களில் ஒரு homework க்கு பிறகு அடுத்த homework என்று இருக்கும், இப்படி எப்போதும் எதாவது ஒரு கிளாஸ்க்கு செல்லும் குழந்ததைகள் அதனை வெறுக்க ஆரம்பிப்பார்கள். விளையாட்டு என்பதையே மறந்து விடுகிறார்கள். என்னவாகுமோ? நினைத்தாலே பயமாய் இருக்கிறது.

நன்றி 


Sunday, February 15, 2015

ரங்கமணியும் திரைக்கதையும்!

 

ரொம்ப நாளா எங்க வீட்டு ரங்கமணிக்கு தமிழ் சினிமாக்கு திரைக்கதை எழுதனும்னு ஆசை. வழக்கமா எந்த தமிழ் படம் பார்த்தாலும் உடனே அவரே கதை சொல்ல ஆரம்பிப்பார். இப்போ கொஞ்ச நாளா எந்த ஆங்கில படம் பார்த்தாலும் "இதை தமிழ் மசாலா இயக்குனர்கள் எப்படி எடுப்பார்கள்" அப்படின்னு பிளேடு போடுறத தொழிலா வச்சிருக்கார். அப்படி நேற்று அவரிடம் மாட்டி என்னை பிளேடு அறுவை வாங்க வச்ச படம் 
Alfred Hitchcock's   "Rear window " .

Rear window கதை இது தான்

ஒரு புகழ் பெற்ற பத்திரிக்கை போடோக்ராபர் Jeff ஆ James Stewart நடிச்சு இருப்பார். ஒரு விபத்தில் Jeff இன் கால் உடைந்து  விட சக்கர நாற்காலியில் வாழ்க்கையை சில மாதங்கள் கழிக்க வேண்டிய நிலை. சக்கர நாற்காலியில் உக்கார்ந்து கொண்டே தன்னுடைய அபார்ட்மென்ட் இன் பின் ஜன்னல் வழியாக பக்கத்து சில அபார்ட்மென்ட்களில் நடக்கும் காட்சிகளை வேடிக்கை பார்கிறார்.

பாலே ஆடும் பெண், புதிதாக திருமணம் ஆன ஜோடிகள், எப்போதும் குடிபோதையில் இருக்கும் இசை மேதை, கணவனை சதா நச்சரிக்கும் பெண்ணும் அவள் கணவனும். தனிமையில் வாடும் பெண் இப்படி பல குடும்பங்களின் அன்றாட நிகழ்வுகளை காணுகிறார். ஒரு சில நாட்களுக்கு பின் கணவனை நச்சரிக்கும் பெண் காணாமல் போகிறாள், அவளுடைய கணவனின் நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்படுத்த, அந்த பெண் கொலை செய்ய பட்டு இருக்கிறாள் என்று Jeff முடிவு செய்கிறார். பின் எப்படி அதனை கண்டு பிடிக்கிறார் என்பதே மீதி கதை.


சரி, இந்த கதையை தமிழ் மசாலா இயக்குனர் எடுத்திருந்தால் எப்படி இருக்கும் என்ற ரங்கமணியின் கற்பனை இதோ.


ஒப்பன் பண்ணினா நம்ம ஹீரோ இயற்க்கை கட்சிகளை போட்டோவா எடுத்துட்டு ஒரு ட்ரைன்ல போயிட்டு இருக்கார். அப்போ அந்த ட்ரைன் ஒரு ஸ்டேஷன் ல நிக்குது, ஒரு திருடன் ஒருத்தர் பர்ஸ் அடிச்சிட்டு ஓடுறான். நாம ஹீரோ சுமார் அம்பது அடி பறந்தே போயி திருடன்கிட்ட இருந்து பர்ஸ் புடிங்கிட்டு வந்து சேர்கிறார். உடனே கூட இருக்குறவங்க எல்லாம் சேர்ந்து ஒரு செம கலக்கலான குத்து பாட்டு.

அடுத்த சீன் ல ஹீரோ தற்கொலை பண்ணிக்கிற போன ஹீரோயின காப்பத்துறார். ஹீரோயின் தன்னோட வீடு பூனை செத்ததிற்கு தற்கொலை பண்ணிக்கிற போறாங்க. ஹீரோயின காப்பதினதுல ஹீரோவுக்கு கால்ல அடி பட்டுடுத்து. உடனே ஹீரோயினுக்கு ஹீரோ மேல லவ் வந்துடுது. சுவிஸ் ல ஒரு சூப்பர் டூயட் சாங்.

அடுத்த சீன் ல ஹீரோ அவர் அபர்த்மென்ட் ல சக்கர நாற்காலியில உக்கார்ந்து இருக்கார். அவங்க பக்கத்து அப்பார்ட் மென்ட் ல நெறய குடும்பம் குடியிருக்குது. அதுல ஒன்னு ஜோக்கர் குடும்பம், அப்புறம் ஒரு கிளுகிளுப்பான பொண்ணு இருக்கிற ஒரு குடும்பம். அப்புறம் நெறைய வாலிப பசங்க தங்கியிருக்கிற ஒரு வீடு, அப்புறம் நை நைங்கிற பொண்டாட்டி , புருஷன் இருக்கிற குடும்பம் குடியிருக்குது.

அடுத்த சீன் ல எல்லா வாலிப பசங்களும் அந்த கிளுகிளுப்பான பொண்ணுக்காக ஜொள்ளு விடுதுங்க. அப்போ ஒரு பாட்டு. அப்புறம் ஜோகர் குடும்பம் அடிக்கிற கடி ஜோக்ஸ் எல்லாம் சேர்ந்து ரெண்டு மூணு சீன் போகிறது.

அப்புறம் அடுத்த சீன் ல ஹீரோவை தேடிகிட்டு ஹீரோயின் வந்துடறாங்க, மறுமடியும் சுவிஸ் ல ரெண்டு பாட்டு.

இப்போ அதுக்குள்ளே ஹீரோவுக்கு கால் சரியாயிடுது (தமிழ் ஹீரோ எல்லாம் இரும்பு மனிதர்கள் மாதிரி ). பக்கத்து அப்பார்ட் மென்ட் ல சில அநீதிகள் நடக்குது அதை எல்லாம் அவர் தட்டி கேட்குறார். அப்போ தான் அவருக்கு தெரிய வருது, அந்த நை நை அம்மா உயிரோட இல்லை அப்படின்னு. இவர் என்னாச்சுன்னு கண்டு பிடிக்கிறார்.

அப்போ தான் கதையில ஒரு ட்விஸ்ட் வைக்கிறோம். அதாவது, அந்த கிளுகிளுப்பான பொண்ணு அந்த நை நை அம்மாவோட கணவரோட சின்ன வீடு. அந்த அம்மா உயிரோட இருந்தா நாம சந்தோசமா இருக்க முடியாதுன்னு நினைச்சு அந்த பொண்ணும், அந்த அம்மாவோட புருசனும் சேர்ந்து கொலை பண்ணுறாங்க. அதை நம்ம ஹீரோ "Jeff intuition " வச்சு இதை கண்டு பிடிச்சி தண்டனை வாங்கி தந்துடறார்.

அப்புறம் படத்துக்கு தமிழ்ல தானே தலைப்பு வைக்கணும், இதோ . "பின் ஜன்னல்"

Thursday, February 12, 2015

50 shades பைத்தியம் பிடித்தலையும் அமெரிக்க பெண்கள்!


ஒரு புது பைத்தியம் இப்போது இங்கிருக்கும் மக்களுக்கு அதுவும் மிடில் ஏஜ் பெண்களுக்கு  பிடித்திருக்கிறது. பெண்கள் அதிகம் இதனை பற்றி பேசினாலும் ஆண்களும் இதனை பற்றி பேசுகிறார்கள். அது "50 shades of Grey" என்னும் புத்தகம் பற்றியது. 

ஆபிஸ் லஞ்ச் டைம் என்று போய் உக்கார்ந்தால் எப்போ பார்த்தாலும் அந்த புத்தகத்தில் வரும் காரெக்டர் கள்  பற்றிய பேச்சு "Grey" "Ana"....etc etc . இதனை பலரும் எனக்கு படிக்க பரிந்துரை செய்தார்கள். அதுவும் என் அருகில் அமர்ந்து வேலை பார்க்கும் ஒரு பெண் நண்பரும்  இதனை சிலாகித்து படி படி என்று வற்புறுத்தியதால் கூகுளில் தேடி ஒரு pdf version தரவிறக்கி படிக்க ஆரம்பித்தேன். 20 பக்கங்கள் தான் இருக்கும், முடியல ஆள விடுங்கடா சாமி என்று மூடி விட்டேன். 

இது erotic நாவல் வகையை சேர்ந்தது என்று சொல்லி கொள்ளுகிறார்கள் ஆனால் என்னை கேட்டால் கீழ்தர நீல படங்களுக்கு ஒப்பானது. நிறைய பேர் சொல்வது/ என்னிடம் சொன்னது போல ரொமாண்டிக் நாவல் அல்ல. நானும் இவர்கள் கொடுத்த பில்டப்புகளை பார்த்து Vladimir Nabokov  அவர்களின் Lolita" போன்று இருக்கும் என்று நினைத்திருந்தேன் அல்லது குறைந்த பட்சம் மில்ஸ் & பூன்ஸ் வகையை சேர்ந்தது என்றாவது நினைத்திருந்தேன். என் நினைப்பில் மண் விழுந்து விட்டது. 
இந்த புத்தகத்தையும் அதன் 2 sequel களையும் வைத்தே E.L.James என்ற பெண்மணி பணக்காரியாகி  விட்டது.

அனைவரும் இப்போது வரவிருக்கும் "50 shades of grey" படத்தை பற்றி பேசி கொண்டிருக்கிறார்கள். 2015 காதலர் தினம் அன்று இந்த புத்தகம் படமாக எடுக்கப்பட்டு வெளிவிட படுகிறது. இன்னும் எத்தனை நாளைக்கு இவர்களின் தொல்லை தாங்க வேண்டுமோ. எப்படிப்பட்ட பாலியல் வறட்சி இருப்பின் இதனையே பேசி பேசிகொல்வார்கள்  என்று நினைக்க தோன்றுகிறது. எங்கே செல்கிறது இந்த சமூகம்.