செய்தி இல்லீங்க, இது SETI - Search for Extra-Terrestrial Intelligence (SETI). அதாவது வெளியில இருக்கிற அண்டங்களில், ஏதாவது உயிருள்ள ஜீவன்கள் இருக்கா அப்படின்னு தேடுற ஒரு ப்ராஜெக்ட்.
இதுல என்ன பண்ணுவாங்கன்ன பூமியின் மேற்பரப்பில பெரிய ரேடியோ telescope வச்சு ஏதாவது Alien சிக்னல் வருதான்னு கண்காணிச்சுட்டு இருப்பாங்க.
இதுல ஒரு சிறப்பு என்னன்னா எல்லாரும் இந்த ப்ராஜெக்ட் ல பங்கு கொள்ள முடியும். இதுல தேவை என்னன்னா இண்டர்நெட்ல இணைக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் மட்டுமே. setiathome.ssl.berkeley.edu என்ற தளத்துக்கு போயி அவங்க கொடுக்குற BOINC அப்படிங்கிற மென்பொருளை உங்க கணினியில நிறுவிவிட்டா போதும். பிறகு உங்க கம்ப்யூட்டர் எப்போ எல்லாம் standby mode ல இருக்கோ அப்போ இந்த ப்ரோக்ராம் ரேடியோ telescope ல இருந்து கிடச்ச சிக்னலை analyze பண்ணும். நீங்களும் இந்த ப்ராஜெக்ட் ல பங்கு பெறலாம்.
கிட்டத்தட்ட அம்பதுகளின் ஆரம்பத்தில் துவங்கிய இந்த தேடல் இன்னும் நடந்துட்டு இருக்கு. அம்பது வருசமா தேடினதுல எதுவும் இன்னும் கிடைக்காட்டியும் எந்த எந்த இடத்தில இன்னுமே தேடணும்னு முடிவு பண்ண இத்தனை வருஷ தேடல் உதவி இருக்காம்.
அதனால நான் என்ன சொல்ல வர்றேன்னா, அடுத்த மனிதன் வாழுற மாதிரி சூழ்நிலை உள்ள கிரகத்துல இருந்து சிக்னல் வர்றவரை, தயவு செய்து இருக்கிற ஒரு பூமிய பாதுகாப்போமா.
இன்று பூமி தினம். அதனால இதை எல்லாரும் மனசுல வச்சுகோங்க.