Showing posts with label சுயசொறிதல். Show all posts
Showing posts with label சுயசொறிதல். Show all posts

Friday, February 17, 2012

இரண்டு வருட பதிவுலக வாழ்க்கையும் விருதும்.

போன மாதமே இதனை எழுதி இருக்க வேண்டும். ஆனால், பதிவுலகில் இருந்து என்ன பெரிதாக சாதித்து விட்டோம் என்று நினைத்து இதனை எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஆனாலும், சென்ற வாரம் நான் படித்த இரண்டு பதிவுகளும், அவர்கள் உண்மைகள் அவர்கள் எனக்கு வழங்கிய விருதும், என்னை பற்றி சுயபரிசோதனை செய்ய தூண்டியதன் விளைவே இந்த பதிவு.

2008 இல் இருந்து பதிவுலகம் எனக்கு அறிமுகமானாலும் பதிவு எழுதுவது எப்படி என்பது குறித்தோ, திரட்டி குறித்தோ நான் அறிந்திருக்கவில்லை. வேலை பளு காரணமாகவும் எழுதுவது குறித்து நான் நினைக்கவும் இல்லை.

ஆனால் 2009 இல் முகுந்த் பிறந்தபிறகு நான் எடுத்த பேறுகால விடுமுறை எனக்கு நிறைய நேரம் தந்தது. அதுவரை ஓடி ஓடி பழக்கப்பட்ட எனக்கு நேரம் நிறைய இருந்தது போர் ஆகிவிட்டது. எதையாவது உருப்படியாக செய்யலாமே என்று ஆரம்பித்தது தான் வலைப்பூ. என் கணவரே வலைப்பூ ஆரம்பி என்று blogspot ஐ அறிமுகப்படுத்தினார்.

முதலில் எதனை எழுதுவது என்று தெரியாமல், நான் படித்த புத்தகம் பற்றியும், என்னுடைய அனுபவம் பற்றியும் எழுதி வைத்து பார்த்து கொண்டு இருந்தேன். முதன் முதலில் என் வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டமும் இட்டு, திரட்டி குறித்து அறிமுகப்படுத்தி அதில் பதிவை இணைக்க சொல்லி கூறியவர் தெகா அவர்களும், முத்துலெட்சுமி அவர்களும் தான்.

பதிவை தமிழ்மணத்தில் இணைத்த பின் மேலும் பலர் வந்து பார்த்து பின்னூட்டம் இட ஆரம்பித்ததும், blog bug ஆல் கடிக்கப்பட்டு இணையத்திற்கு நான் அடிமையானது நினைத்து இப்போது சிரிப்பு தான் வருகிறது. யார் பார்த்தார்கள், எப்போது எங்கிருந்து வந்தார்கள் என்று எப்போதும் கம்யூட்டரே கதி என்று ரெஃப்ரெஸ்ஷ் செய்து பார்த்திருக்கிறேன்.

இது ஒருவிதமான அடிக்‌ஷன் என்று தான் சொல்ல வேண்டும். ஒரு வித ஆர்வத்தில் ஆரம்பிக்கும் இது போகப்போக வெறியாகி, ஹிட்டை அதிகரிக்க என்னென்ன செய்யலாம் என்று மனது யோசிக்க தொடங்கும். ஒரு நாளைக்கு ஒரு பதிவு, இரண்டு பதிவு என்று போட்டி போட்டுக்கொண்டு எழுத ஆரம்பித்து, உபயோகமான பதிவுகள் இல்லாமல், வெறும் மொக்கை பதிவுகள் போட ஆரம்பித்து விடும் அபாயம் உண்டு.

மன அமைதிக்காக பிளாக் என்பது போயி,  மன நிம்மதி கெடுவதற்குறி்ய ஒரு காரணியாக போய் விடும். நல்ல வேளை, இது ஒரு மாய உலகம் என்று நான் ஆரம்பத்திலேயே சுதாரித்து கொண்டேன். எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது மட்டுமே பதிவிடுவது, பதிவுகளை பார்ப்பது என்று என்னை நானே சுருக்கி கொண்டுவிட்டேன்.

சென்ற ஆண்டு ஆரம்பத்தில் மறுபடியும் வேலைக்கு சேர்ந்தபிறகு என்னுடைய பதிவிடும் நேரமும் பதிவுகளை படித்து பின்னூட்டம் இடும் நேரமும் அதிகளவில் குறைந்து போய் விட்டன.

பெண்ணாக இருந்து குடும்ப வேலைகளுக்கு இடையே வீட்டு வேலைகள் ஒழிந்த நேரம் பதிவிடுவது என்பது மிக கடினம். அதுவும், வேலைக்கும் சென்று விட்டு வீட்டுவேலைகளும் செய்து விட்டு கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் பதிவிடுவது மிக மிக கடினம். அதுவும் என்னை போல ஆராய்ச்சித்துறையில் இருப்பவர்களுக்கு நேரம் காலம் என்று வேலைக்கு இருப்பதில்லை. வரும் நோய்க்கு நேரம் காலமா தெரிய போகிறது. பல நேரங்களில் விடுமுறை நாட்களிலும் வேலை செய்ய வேண்டியிருக்கும்.

அதனால், குடும்பத்தையும், வேலையையும் பாலன்ஸ் செய்வது என்பது மிக மிக கடினமாகி விட்ட நிலையில், பதிவிற்க்கு என்று நேரம் ஒதுக்குவது முடியாததாகி விட்டது. இந்த நிலையில், ஹிட் பற்றியோ, பின்னூட்டதிற்கு பதில் எழுதுவது பற்றியோ நினைத்து கூட பார்க்க முடிவதில்லை.

ஆயினும், இன்னும் பலர் என்னுடைய பதிவிற்கு வந்து படித்து ஊக்குவித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் உளமார்ந்த நன்றி.

Liebster award கொடுத்த அவர்கள் உண்மைகள் அவர்களுக்கு என் நன்றி. இதனை என்னை போல இருக்கும் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.

குறிப்பாக நான் மிகவும் மதிக்கும் இருவர்.

  1. அறிவியலில் பெண் ஆராய்ச்சியாளராக இருந்து கொண்டு குடும்பத்தையும் அற்புதமாக பாலன்ஸ் செய்யும் அன்னா தி அனலிஸ்ட் அவர்களுக்கும்
  2. மிக அருமையான தமிழால் நம்மை கட்டிப்போடும் அறிவியல் ஆசான் கையேடு ரஞ்ஜித் அவர்களுக்கும் அளிக்க விரும்புகிறேன்.


நன்றி.








Saturday, October 22, 2011

கடுப்பை கிளப்பும் சிலர்!



  • அவசர அவசரமாக ஆபிஸுக்கு போய் கொண்டிருப்போம்..மீட்டிங் வேறு இருக்கும். அந்த நேரம் பார்த்து.. எல்லா சிக்னலிலும் ரெட் விழுந்து சதி செய்யும். சிக்னலில் நிற்கும் போது,  நமக்கு முன்னால் இருக்கும் காரில் ஒரு கிழவி உக்கார்ந்து கொண்டு இடைவிடாது  மேக்கப் தலை சீவுதல் என்று படுத்தும் பாருங்க.., சிக்னல் விழுந்தபின்னும் காரை எடுக்காமல் கடுப்பை கிளப்பும்.

  • மாலையில் எப்படியாவது சீக்கிரம் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு வந்துடனும்னு வேக வேகமா வர நினைப்போம். அப்போது சிங்கிள் லேன் ரோடுல  யார் கூடயோ செல்போனில் பேசி கொண்டு 45 மைல் ஸ்பீடு லிமிடில் வெறும் 15 மைல் ஸ்பீடில் உருட்டி கொண்டு செல்லும் சிலர்.


  • விழுந்து விழுந்து வேலை செய்து முடித்து இருப்போம், ஸ்டேடஸ் அப்டேட் மீட்டிங்கில் பெரிய தலை ஒருத்தர் வந்து ஒரு ஐடியா சொல்லுவார், நாம அந்த ஐடியாவை முதல்லயே சொல்லி இருப்போம்..ஆனா அப்போ , மேனேஜர் அதை ரிஜெக்ட் பண்ணி இருப்பார். இப்போ, பெரிய தலை நாம சொன்னதையே சொல்லுவார்.ஆகா, ஓகோ ஐடியா பிரமாதம்னு பெரிய தலைக்கு ஜால்ரா போடுவாரு பாருங்க நம்ம மேனேஜர்..அந்த ஜால்ரா சத்தம் காதை கிழிக்கும்.

  • நான் அடிக்கடி சந்திக்கும் நபர்கள் இவர்கள்.. முக்கியமாக இந்தியர்களாக இருப்பர். முதல் சந்தித்து ”ஹெல்லோ ஹவ் ஆர் யூ?”, என்று சொல்வதில் ஆரம்பித்து...வரிசையாக தன்னை பற்றி ஒரு அறிவுஜீவி  என்றெல்லாம் அடுக்க ஆரம்பிப்பார்கள். நானும் பெரிய ஆள் தான் போல இவரு என்று நினைக்க ஆரம்பித்து சப்ஜெட் சம்பந்தமாக ஒரு சாதாரண கேள்வி கேட்பேன்...அதற்கு கேனத்தனமாக எதாவது பதில் சொல்வார்கள். ”எதுக்கு இந்த பந்தா?” என்று கேட்க எனக்கு நாக்கு வரை வந்துவிடும்.
  • சப்ஜெட் ஒன்னுமே தெரியாட்டியும்...அதை தெரியும் இதை தெரியும், யானையை குதிரையாக்குவேன்..என்றெல்லாம் எல்லார் முன்னாலும் பிலிம் காட்டியே பிரமோஷன் வாங்கி பிழைப்பை நடத்தும் சிலர்.
  • மாங்கு மாங்குன்னு ரிசெர்ச் பண்ணி ஒரு டாபிக் பத்தி பிளாகுல எழுதி இருப்போம்...பத்து பேரு தான் வந்து நம்ம பிளாக்கை படிச்சு இருப்பாங்க... பரவாயில்ல பத்து பேராவது படிச்சிருக்கங்க அப்படின்னு சந்தோசமாகியிருப்போம்..ஆனா சுண்டியிழுக்கிற தலைப்பை வச்சு பிளாக் போஸ்ட் முழுக்க மொக்கை போட்டு இருப்பார் ஒருத்தர்..அவருக்கு கூட்டம் அள்ளும்..ஆனாலும் எனக்கு விசிடர்ஸ் கம்மியாயிடாங்க ஹிட்ஸ் கம்மியாயிட்டதுன்னு புலம்பு புலம்புன்னு புலம்புவார் பாருங்க.
  • எனக்கெல்லாம்,பத்து பேரு வந்து என்னோட பிளாக்கை படிச்சாலே பெரிசு..இதி்ல   ஓட்டு பெட்டி..தமிழ்மணம் ராங்கிங்கில் வருவதற்கு நடக்கும் அடிபிடி சண்டைகள் எல்லாம் பார்க்கும் போது கடுப்பு வரும் பாருங்க.