Saturday, May 31, 2014

ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை உபயோகிப்பது நல்லதா இல்லையா?

சமீபத்தில் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்ட போது , anti-bacterial lotion எனப்படும் பாக் டீரியா நுண்ணுயிர்  எதிர்ப்பு கை கழுவும் லோஷன் பற்றிய விளம்பரங்களை அதிகம் காண நேர்ந்தது. ஒவ்வொரு கம்பெனியும், தன்னுடைய லோஷன் 15 நிமிடத்தில் செயல்படும், என்னுடையது 10 நிமிடத்தில் செயல்படும் என்று ஒரே புராணத்தை பாடி கொண்டிருந்தார்கள்.

உண்மையில், இப்படி ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை  உபயோகிப்பது நல்லதா இல்லையா? பார்ப்போம் இங்கே .

நம்மை சுற்றி நம் சுற்றுபுறத்தில் கோடிகணக்கான பாக்டீ ரியாக்கள் உள்ளன. நம் digestive system நன்கு செயல்படவும், பல நன்மை பயக்கும் பாக்டீ ரியாக்கள் காரணமாக இருக்கின்றன. நம்முடைய ecosystem அனைத்திலும் பாக்டீ ரியாக்கள் செய்யும் வேலைகள் பல, இலை தளை  மக்கவைப்பது, கழிவுப்பொருள்களை மீண்டும் உரமாக்குவது என்பது அவற்றுள் முக்கியமானவை. நாம் வாழும் ஈக்கோ சிஸ்டத் தில் பாக்டீ ரியாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

நம்மை சுற்றி பல நன்மை பயக்கும் பாக்டீ ரியாக்கள் இருந்தாலும், பல தீமை விளைவிக்கும் பாக்டீ ரியாக்கலும் உள்ளன . இந்த தீமை விளைவிக்கும் பாக்டீ ரியாக்களை கொல்லவே தற்போது நிமிடத்திற்கு நிமிடம் ஆண்ட்டி பாக்டீரியல் சோப் விளம்பரங்கள் ஒலிபரப்பபடுகின்றன. 

சரி இப்போது அடிக்கடி ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை ஏன் உபயோகப்படுத்த கூடாது என பார்போம்.

முதலில், இந்த வகை சோப்கள் கெட்ட கிருமிகளை மட்டும் கொல்வதில்லை, அவற்றோடு, நமக்கு நன்மை கொடுக்கும் பலவும் அழிகின்றன.

தற்போது, இங்கு இருக்கும் மருத்துவர்கள் பலர் , ஆண்டி பயொடிக்க்ஸ் மருந்துகளை சாதாரண இருமல் காய்ச்சல் என்று போனால் பரிந்துரை செய்வதில்லை, அதற்கும் ஆ ண்ட்டி பாக்டீரியல் சோப்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டும் பாக்டீ ரியாக்களை கொல்ல உபயோகபடுத்த படுகின்றன.



Photo courtesy Rocky Mountain Laboratories
என்ன பிரச்சனை என்றால், இந்த பாக்டீ ரியாக்களை கொல்ல நாம் மருந்துகளையோ  அல்லது கை கழுவும் திரவங்கலையோ உபயோகபடுத்த படுத்த , அவை மிக சாதுர்யமாக தங்களை mutate எனப்படும் மாற்றி அமைத்து கொள்கின்றன. தற்போது இங்கிருக்கும் மருத்துவ மனைகள் சந்திக்கும் ஒரு மிகபெரிய பிரச்சனை antibiotic resistant bacteria. தற்போது ஒரு சில anti biotics மருந்துகளுக்கு கட்டுபடாத MRSA  101 எனப்படும் பாக்டீ ரியா பெருகி வருகிறது. அதனை superbug என்று சொல்லும் அளவுக்கு. 


எனக்கு தெரிந்த ஒரு நண்பருக்கு தெரிந்த ஒருவர் சாதாரண ஆபரேஷன் என்று மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை முடிந்து சில நாட்களில் இறக்க நேரிட்டது. இத்தனைக்கும் அவருக்கு மிகச்சாதாரணமான ஒரு ஆபரேஷன் மட்டுமே. என்னவென்று விசாரித்தால், சிகிச்சை முடிந்த பின்னர் அவருக்கு antibiotic resistant bacteria தாக்குதல் ஏற்பட்டு இருக்கிறது. அதனை கொல்ல எந்த antibiotic மருந்துகளும் பயன்படவில்லை.

சரி, இப்போது தொடங்கிய பிரச்சனைக்கு வருவோம்,நாம் தேவை இல்லாமல் ஆண்ட்டி பாக்டீரியல் சோப்களை உபயோகபடுத்த உபயோகபடுத்த, அவை நம்முடைய உடம்பின் ecosystem மாற்றியமைப்பது மற்றுமின்றி, இதனை போன்ற antibiotic resistant bacteria உருவாகவும் காரணமாக இருக்கிறது. முடிந்தவரை இதனை போன்ற கண்கவர் விளம்பரங்கள் வராது தடுக்கவும், மக்களுக்கு இதன் எதிர்விளைவை சொல்லவும் வேண்டும்.

சரி, அதற்கென்று எப்படி கிருமிகளை ஒழிப்பது என்று பலர் கேட்கலாம், நாம்  அன்றாடம் உபயோகிக்கும் சோப்புகளை கைகழுவ உபயோகிக்கலாம். இதற்காக, அடிக்கடி ஆண்ட்டி பாக்டீரியல் சோப் தனியாக உபயோகிக்க வேண்டாம்.

நன்றி.

4 comments:

வருண் said...

As you are saying, unnecessary use of anti-bacterial soap should be avoided.I will consider your suggestion, Mukund ammA!:)

Recently I was reading microbiology book for helping someone.

Read about all kinds of defenses against micro-organisms starting from skin (innate immunity and adaptive immunity etc) and it was very interesting. LOVED it, I should say! :) The recent books are very well written and with beautiful pictures and they are upto-date as well! Even people like me could understand easily. :)

----------------
Humans, (US!!!) want to destroy everybody other than themselves ruthlessly for their survival. Every life wants to live including bacteria as this is their world too. The mutation they themselves undergo is for their survival against the humans- the destroyers of them! So, there is going to be some human lives "taken away" by the surviving mutated-stranded resistant bacteria too! We are ignorant, and we think we can kill anybody for our survival. They do kill some of us successfully for their survival too. Your friend was such a "human victim"! :( As we are self-centered we never consider any other living organism's "RIGHT TO LIVE" as important as ours!

The above is the way I justify human killings by micro organisms!

--------------

mubarak kuwait said...

உங்கள் ப்ளாக் இன்றுதான் பார்த்தேன் அணைத்து பதிவுகளும் அருமை, நீங்கள் ஒரு genious கேட்ட வார்த்தை இல்லை. உண்மையில்

ராமலக்ஷ்மி said...

அறியாத தகவல். பகிர்வுக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நலல் தகவல்.....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி முகுந்த் அம்மா.