Wednesday, July 25, 2018

சான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் !!


சான்பிரான்சிஸ்கோ poop  மேப்

சமீபத்திய நியூயார்க் பயணத்தில் நான் கண்டது நியூயார்க் தெருவுக்கு தெரு வீடில்லாமல் தெருவில் வசிக்கும் நிறைய மக்கள். ஒரு மூட்டை மட்டுமே வைத்து கொண்டு தெரு ஓரங்களில் நிறைய பேரை காண நேர்ந்தது. செக்ஸ் கொடுமைகள், பாலின மாறுபாடுகள், LGBT எனப்படும் மூன்றாம் பாலின புரிதல் மட்டும் அறிதல் காரணமாக வீட்டை விட்டு துரத்த படும் மக்கள், வேலையிழப்பு மற்றும் இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் எல்லாவற்றையும் இழந்த மக்கள் என்று பல காரணங்களுக்காக தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்ட  மக்கள்.

picture from google images

இப்படி தெருவில் வசிக்கும் மக்களுக்காக என்று ஹோம் லெஸ் ஷெல்ல்ட்டர் எனப்படும் தற்காலிக தங்குமிடங்கள் தரப்பட்டாலும், நிரந்தர தீர்வு என்று எதுவும்செய்து கொடுக்காத நிலையிலேயே இப்படி பலரும் தெருவில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.. அதுவும் பெரிய பெரிய மெட்ரோ நகரங்களான நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ போன்றவற்றில் இது வேறு வகையான பிரச்சனைகளை கொடுக்கிறது. அது இப்படி வீடில்லாத மக்கள் தம் கழிவுகளை தெருக்களில் வெளியேற்றுவதால்  பல தெருக்களில் நாம் நடக்க முடியாத அளவு மூத்திர மற்றும் மல நாற்றம்.   

இந்த பிரச்சனையை முன்னிறுத்தியே 2014  ஜென்னிபர் வோங் என்னும் வெப் டெவலப்பர், ஹியூமன் வேஸ்ட் லேண்ட் என்னும் ஒரு ப்ராஜெக்ட் உருவாக்கினார். அதில் பே ஏரியா எனப்படும் சிலிக்கான் வேலே இல் எங்கெல்லாம் மனித கழிவுகளை ரோட்டில் காணலாம் என்று மேப்பில் குறித்திருப்பார்.


http://mochimachine.org/wasteland/



இது சான் பிரான்சிஸ்கோ என்று இல்லை இன்னும் பல பல மெட்ரோ நகரங்களின் நிலை. ஏன் அட்லாண்டாவில் கூட மிட்டவுன் அருகில் இருக்கும் பல பகுதிகள் இப்படி தான் இருக்கும்.


ஹாரி பாட்டர்

முகுந்தின் சம்மர் ஹாலிடேஸ்ல் 4 ஆவது கிரேடுக்கு முன் படிக்க வேண்டிய புத்தக லிஸ்ட் என்று ஒரு லிஸ்ட்  அவன் பள்ளியில் கொடுத்திருந்தார்கள். எப்போதும் டிவி, கேம்ஸ் என்று கழிக்காமல் எப்படியாவது ரீடிங் ஹாபீட்டை அதிகப்படுத்துவது என்று முடிவு செய்து ஹாரி பாட்டர் புத்தகத்தை படி என்று நூலகத்தில் இருந்து எடுத்து கொடுத்தேன். அவனுக்கு இண்டெர்ஸ்ட் வர என்று முதல் புத்தகத்தை அவனுடன் சேர்ந்து நானும் படிக்க ஆரம்பித்தேன். அதுவே  வர வர ஒரு போட்டியாக போய் விட்டது. யார் முதலில் ஒரு சாப்டர் ஐ படிப்பது என்று. அப்படி படித்தவர்கள் அடுத்தவர்களுக்கு கதை சொல்ல கூடாது என்று அக்ரீமெண்ட் வைத்து கொண்டோம். முதல் புத்தகம் கிட்டத்தட்ட முடிய போகிறது.



இரண்டு சாப்டர்கள் தவிர மற்றவை சரி இன்டெரெஸ்ட்டிங். இந்த புத்தகத்தை முழுதும் முடித்த பிறகு அந்த படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன். என்னுடன் போட்டி போட்டு கொண்டே முகுந்த் இரண்டாவது புத்தகம் படித்து முடித்து விட்டான். அவனிடம், கதை ஸ்பாயில் பண்ண கூடாது என்று கண்டிப்பாக சொல்லி இருக்கிறேன்.

ஏற்கனவே நன்றாக படம் வரையும் முகுந்த் தற்போது காமிக் புக் ஒன்று எழுதி படம் வரைய ஆரம்பித்து இருக்கிறான். "Journey Through Time" என்று பெயர் கூட வைத்து இருக்கிறான். வைகிங், ரோமன், விஸார்ட் மற்றும்  விட்ச்ஸ் என்று அனைத்தும் அதில் வரைந்து இருக்கிறான். பார்க்கலாம் எப்படி வருகிறது என்று. 



வாசிப்பிற்கு நன்றி.



Sunday, July 8, 2018

கலவை: ரசித்தது, படித்தது, நொந்தது

ரசித்தது: 

அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு  டெம்பிளேட் லிஸ்ட் இருக்கிறது.

 ஈஸ்ட் கோஸ்ட் இல் என்றால்

1. நயாகரா, 2. வாஷிங்க்டன் டிசி வெள்ளை மாளிகை, கேப்பிடல் ஹில், சில ம்யூசியங்கள் 3. நியூ யார்க், டைம் ஸ்கொயர், சுதந்திர தேவி சிலை, எம்பையர் ஸ்டேட் பில்ட்டிங், மேடம் துஸ்ஸாட் மெழுகு ம்யூஸியம் 4. புளோரிடா பீச், டிஸ்னி லேண்ட், யூனிவேர்சல், 5. மியாமி பீச். 

வெஸ்ட் கோஸ்ட் என்றால் 1. லாஸ் வேகஸ், 2. கிராண்ட் கேன்யன், 2. சான்பிரான்சிஸ்கோ 4. லாஸ் ஏஞ்செல்ஸ் 

இவை எல்லாம் கூட்டி போய் காட்டிவிட்டால், மொத்த அமெரிக்காவும் காட்டி விட்டது போல சொல்லி கொள்ளலாம். 

ஒவ்வொரு முறையும் அம்மா ஊரில் இருந்து வரும் போது கிட்டத்தட்ட எதாவது ஒன்றை டெம்ப்ளட் லிஸ்டில் இருந்து கவர் செய்து இருக்கிறேன். அப்படி, ஊரில் இருந்து வந்த அம்மாவை அழைத்து கொண்டு நியூயார்க் பயணம். முன்பு சிலமுறை நியூயார்க் சென்றிருக்கிறேன்,  என்றாலும், அம்மாவுடன் தனியாக சென்றது ஒரு த்ரில்லிங். நியூயார்க் செல்லப்போகிறேன் என்றதும், என்னுடன் வேலை பார்க்கும் சிலர், "பிராட்வே ஷோ ரொம்ப பாமேஸ்" அழைத்து கொண்டு போ, என்றனர்.   

முன்பின் ஓபரா சென்றதில்லை, என்றாலும், எந்த  எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு நிகழ்ச்சிக்கு  சென்று மெய்மறந்து ரசித்தது எவ்வாறு இருக்கும் என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். "பான்டோம் ஆப் ஓபரா" நியூயார்க் மெஜெஸ்டிக் பிராட்வே தியேட்டரில் 30 வருடங்களாக நடக்கும் ஷோ என்றார்கள். 30 வருசமா ஒரு ஸ்டேஜ் ஷோ நடக்குதா, என்று ஒரே ஆச்சரியம். விலை எல்லாம் கண்ணா பின்னா என்று இருந்தது, ஈவினிங் ஷோவுக்கு இடம் இல்லை. அதனால் மதியம் இரண்டு மணி ஷோவுக்கு புக் செய்து விட்டேன்.  2 மணி ஷோவுக்கு 30 நிமிடம் முன்னால் சென்றால் போதும் என்று சென்றால், ஒரு மைல் தூரத்துக்கு கியூ நின்றது. அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். 30 வருசமா நடக்குற ஷோவுக்கு இவ்வளவு கூட்டமா என்று.

உள்ளே சென்று ஒரு வழியா உக்கார்ந்து செட்டில் ஆனவுடன், 1800 களின் பிற்பகுதியில் இருக்கும் பிரான்ஸ் என்று ஒரு ஏலம் போன்ற ஒரு செட் ஆரம்பித்தார்கள். அதில் நடு நாயகமாக சாண்ட்லியர் ஒரு மூடி வைக்கப்பட்டு இருந்தது. அதனை ஒருவர் ஓபன் செய்ய அற்புதமான தீம் மியூசிக் உடன் அந்த சாண்ட்லியர் மேலே செல்ல அட போட வைத்தது...

வாயை பிளந்து நான் பார்த்த ஒரு ஷோ என்றால் அது "பாண்டம் ஆப் ஓபரா பிராட் வே ஷோ" அமேசிங் எஸ்பிரின்ஸ்.  ஆர்கெஸ்ட்ரா வாசிக்க, பாண்டம் ஆக நடித்தவர், மற்றும் கிறிஸ்டின் ஆக நடித்தவர், பாடியது, செட் அலங்காரங்கள் எல்லாம் அருமையிலும் அருமை. எதோ வேறு உலகுக்கு சென்றது போன்ற ஒரு உணர்வு.

மறுபடி எப்பொழுது நியூயார்க் சென்றாலும் மறுபடியும் இந்த ஷோ செல்லவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஒரு அவுட் ஆப் வேர்ல்ட் உணர்வு.

பான்டோம் ஆப் ஓபரா படமாகவும் வந்திருக்கிறது. அதில் வந்த தீம் சாங் இங்கே



படித்தது :

எப்பொழுதும் எதிர்பாராமல் நடக்கும் சில விசயங்கள் மறக்க முடியாததாகி விடும். ஏர்போர்ட்டில்  விமானம் தாமதமாக, பொழுது போக ஒரு புத்தக கடையை சுத்தி கொண்டிருந்த போது, இந்த புத்தகம் கண்ணில் பட்டது, மால்கம் கில்டவெல் எழுதிய "அவுட்லையர்ஸ்" என்ற புத்தகம். புள்ளியியலில்  படித்தவர்கள் அறிந்திருப்பார்கள். அவுட்லையர்ஸ் என்பது எப்பொழுதும் எஸ்ட்ரீம் கேஸ் என்று டேட்டா அனாலிசிஸ் செய்யும் போது, நிராகரிக்கப்படும். எந்த டேட்டா நீங்கள் எடுத்து ஆராய்ந்தாலும் அதில் சில அவுட் லையெர்ஸ் எப்போதும் இருக்கும். அதாவது, எதோ ஒரு வகையில் பொதுவான பண்பில் இருந்து வித்தியாசமாக மாறுபட்டு தனித்து இருக்கும் விஷயங்கள் அவுட் லையெர்ஸ் எனப்படும்.



"ஸ்டோரி ஆப் சக்ஸஸ்" என்று போட்டிருந்தது,  வித்தியாசமாக இருந்தது. உடனே வாங்கி விட்டேன். 

என்னை பொறுத்த வரை கற்பனை கதை என்பது மிக சுவாரசியமானது. அடுத்து என்ன என்ன என்று புத்தகத்தை புரட்ட வைத்து விடும். ஆனால் உண்மை விஷயங்களை குறிக்கும் புத்தகம், நான்பிக்சன்  புத்தகம் என்பது அடுத்தது என்ன என்று பக்கங்களை நகர்த்தியது என்றால் அது இந்த புத்தகம் மட்டுமே.

தொடக்க சாப்டர் "ரொசெட்டா மிஸ்டரி" , இத்தாலில் இருந்த ரொசெட்டா என்ற ஊரில் இருந்து அமெரிக்கா வந்து குடியேறிய ஒரு கிராமம் முழுக்க பென்சில்வானியா ஊரில் வந்து தங்கி, அங்கேயே ஒரு குடியிருப்பை நிறுவிய மக்களை பற்றிய அத்தியாயம் அது. 

1950 ஆம் ஆண்டு, இத்தாலியில் இருந்து பென்சில்வானியா  வந்து  கிட்டத்தட்ட 70-80 வருடங்கள் ஆன பிறகும் அந்த ஊரில் மட்டும் எந்த மக்களும் இதயநோயால் இறக்க வில்லை. யாருக்கும் இதயநோய் இல்லை, என்று ஆச்சரிய படுகிறார் ஸ்டீவர்ட் ஒலஃ என்னும் மருத்துவர். இதயநோய் மட்டும் அல்ல, அல்சர், மனஅழுத்தம் என்ற எந்த நோய்களும் இல்லை, என்ன காரணம்?, உணவு பழக்கமா, இல்லை உடற்பயிற்சி அதிகமா?, இல்லை சீதோஷண நிலை, இயற்கை நிலப்பரப்பா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்கிறார். ஆனால் எந்த வித துப்பும் அவருக்கு கிடைக்கவில்லை. உணவு பழக்கவழக்கம், சீதோஸ்ணம், உடல்பயிற்சி என்று எல்லா விதத்திலும் பென்சில்வானியா ரொசெட்டா கிராமம், மற்ற கிராமங்கள் போலவே இருக்கிறது. பின்பு எப்படி, இந்த ஊரில் மட்டும் ஒருவருக்கு கூட இதய நோய் இல்லை என்று குழம்புகிறார். இந்த ரொசெட்டா கிராமம், இதய நோயை பொறுத்தவரை ஒரு அவுட்லெயர்.

இதனை யோசித்து கொண்டு, அந்த கிராமம் வழியாக நடந்து சென்றபோது, ஒலஃ கவனித்தது ஒன்று. அந்த கிராம மக்கள், அனைவரும் அனைவரையும் அறிந்து இருக்கிறார்கள். எல்லாரும் எல்லோரிடமும் பேசுகிறார்கள். நடந்து செல்லும் போது கூட ஒவ்வொரு கடையிலும் நின்று எல்லோரிடமும் பேசுகிறார்கள். அதனை தவிர, ஒவ்வொருவரும் கூட்டு குடும்பமாக வாழ்கிறார்கள். 
குடும்பத்திற்குள் பிரச்னை என்றால் ஒருவரை ஒருவர் பேசி தீர்த்து கொள்கிறார்கள். அனைவரும் வார இறுதியில் சர்ச் செல்கிறார்கள். அங்கு ஒவ்வொரு குரூப் ஆக கலந்து பேசி, தமக்குள்ள இருக்கும் சண்டையை, மனக்கசப்பை தீர்த்து கொள்கிறார்கள்.  அனைவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறார்கள். என்று கண்டறிகிறார். மருத்துவ உலகில் மிஸ்டரி ஆக இருந்த "ரொசெட்டா" ஒரு அவுட்லையேர் அல்ல, ஒரு சக்ஸஸ் ஸ்டோரி.

நொந்தது:

மேலே குறிப்பிட்ட இந்த புத்தகம் படித்த சில வாரங்களுக்கு முன்பு தான் என்னுடைய தோழி ஒருவரின் சமீபத்திய இந்திய பயணம் குறித்து அறிய நேர்ந்தது. ஒரு திருமணத்திற்கு என்று சென்ற அவர், தற்போது சொந்தங்கள் எப்படி இருக்கிறார்கள் என்று ஒரு கிலிம்ஸ் கொடுத்தார்.

முன்பெல்லாம், திருமணம் சடங்கு என்றால், அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து வேலையை எடுத்து செய்து, அனைவரையும் உபசரித்து ஆளுக்கொரு வேலையாக செய்த காலம் போய், தற்போது திருமணம், நல்ல காரியம், ஏன், உடல் நிலை சரியில்லை என்றால் கூட, நெருங்கிய சொந்தம், அக்கா, அண்ணா, தங்கை,தம்பி, தவிர வேறு யாரும் எந்த உதவியும் செய்வதில்லை.  அதுவும் ஒரு குழந்தை, இரண்டு குழந்தை என்று இருக்கும் குடும்பத்தில், யாரும் இல்லை. சித்தப்பா, பெரியப்பா, மாமா, அத்தை குழந்தைகள் என்று எந்த சொந்தமும், கூட மாட வேலை கூட செய்யவேண்டாம், ஏனோ தானோ என்று வருகிறார்கள், சென்று விடுகிறார்கள். அப்படி வரும் பலரும், நம்மிடம், எதோ எதிர்பார்க்கிறார்கள், செய்யவில்லை எனில், நாம் எதிரி நம்பர் 1 ஆகி விடுகிறோம். 

இதனை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்த நேரத்தில், என்னுடன் வேலை பார்க்கும் ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர், தன்னுடைய பேமிலி கெட்டோகெத்தேர் இருக்கிறது அதனால் நான் லீவில் செல்கிறேன் என்று சொல்லி கொண்டிருந்தார். என்னது, கெட் டுகெதர் கு லீவா?, என்ன செய்வீர்கள் என்று கேட்டுக்கொண்டிருதேன். அவர் சொன்னது. அவருடைய, சொந்தங்கள் அனைவரும், அதாவது, ஒரு பேமிலி பெயர் கொண்டிருக்கும் அனைவரும், வருடாவருடம் ஒவ்வொருவர் வீட்டில் ஒன்று கூடுவார்கள். அதற்காக, எல்லா மாநிலங்களிலும் இருந்து கெட்டோகெத்தேர் வீட்டுக்கு வந்து விடுவார்கள். பின்னர், அவர்கள் வீட்டில் சாப்பாடு, சர்ச்சுக்கு செல்வது என்று சென்று விட்டு, இரண்டு நாள் கழித்து சென்று விடுவார்கள். அப்படி கெட் டுகெதர்க்கு ஆகும் செலவு, எல்லாரும் பிரித்து ஏற்றுக்கொள்ளவேண்டும். பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை, அனைவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள நல்ல வழி இது.  கிட்டத்தட்ட, 50- 100 பேர் வருவார்கள் என்று சொல்லி கொண்டிருந்தார்.

எனக்குள், ஒரே ஆச்சரியம், சந்தோசம்,வருத்தம் எல்லாம் கலந்த ஒரு உணர்ச்சி அவர் சொன்னதை கேட்ட பிறகு. இந்தியாவில் சொந்தங்கள்  எல்லாம் பொய்யாகி விட்டனவா?, என்று எனக்குள் கேள்வி? அதனால் தான், நமக்கு, இருதய நோய், அல்சர், மனஅழுத்தம் என்ற அனைத்தும் அதிகம் இருக்கிறதா?நமக்கு  என்று இல்லாமல் தனக்கு   என்று வாழ ஆரம்பித்ததுக்கு நாம் கொடுத்த பரிசா இது? தெரியவில்லை.



வாசிப்புக்கு நன்றி.