Monday, January 25, 2010

Peer பிரஷர்

என்னுடைய சின்ன வயசில காலை எழுந்ததும் நான் கேட்பது இது தான்

"எதிர்த்த வீட்டு மகேஸ பாரு, காலையில எந்திரிச்சு எப்படி வீட்டு வேலை பாக்கிறா? நீயும் தான் இருக்கியே, இங்க இருக்கிறதா எடுத்து அங்கே வைக்கிறாயா"

தினம் தினம் இந்த அர்ச்சனை தான் எனக்கு என் அம்மாவிடம் இருந்து கிடைக்கும்.
நான் எதை செய்தலும் எதிர் வீட்டு மஹேஸ் அக்கா வுடன் உடனே ஒரு comparison நடக்கும்.

நான் 10 வது படிக்கும் போது அந்த அக்கா +2 வில் 1000 இக்கு மேல மார்க் வாங்கிட்டாங்க, உடனே என் அம்மாவிடம் இருந்து வந்த வார்த்தைகளில் எல்லாம் அந்த மார்க் எப்படியோ வந்து விடும்.

மஹேஸ் அக்காவின் அப்பாவுக்கு வேற ஊருக்கு மாற்றலாகி போற வரை மஹேஸ் அக்காவுடனான என் comparison தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஒரு வழியாக காலேஜ் final year வரை comparision இல்லை, அப்பாடா என்று இருந்தது. Final year முடிக்கும் போது ஒரு வகை pressure என் அப்பாவிடம் இருந்து வந்தது.

"உன் பெரியப்பா பொண்ணு ஒன்னோட வயசு தான், அவளுக்கு கல்யாணம் செய்துட்டாங்க, எப்போ உன் பொண்ணுக்கு கல்யாணம்னு என்னை எல்லாரும் கேட்குறாங்க, நான் என்னத்த சொல்ல?"

ஒரு வகையாக அந்த பிரஷர் இல் இருந்து தப்பிக்க வேற ஊரில் வேலை கிடைத்தது. பிறகு எப்போ ஊருக்கு போனாலும் அம்மா, அப்பா, அக்கம், பக்கம், சொந்தம், பந்தம் எல்லாரும் கேட்கும் ஒரே கேள்வி

"உன்னோட set எல்லாம் கல்யாணம் ஆகி settle ஆகிட்டாங்க, நீ எப்போ கல்யாண சாப்பாடு போடா போறே?"

என் அம்மாவின் புலம்பல் தினம் தினம் அதிகம் ஆனதால் ஒரு வழியாக கல்யாணத்திற்கு சம்மதம் சொல்லி கல்யாணமும் ஆன போது அப்பாடா இப்போ ஒரு வழியா pressure முடிஞ்சது என்று நினைத்தேன்.

என் ஆறுதல் ஆறு மாசம் கூட இல்லை அடுத்த pressure என் அம்மாவிடம் இருந்தே வந்தது.

"என்னமா எதாவது விசேஷம் இருக்கா, உன் சித்தி பொண்ணு அபி பாரு கல்யாணம் ஆகி நாலு மாசம் தான் ஆகுது, அவ இரண்டு மாசம் முழுகாம இருக்காளாம். நீ எப்ப நல்லா செய்தி சொல்ல போற ?"

"சீக்கிரம் சொல்றேன் மா" என்று நான் பொய்யாக சமாதானம் சொன்னாலும் , என்ன செய்வது?, எல்லா விதத்திலும் நாங்கள் இருவரும் fit ஆக இருந்தாலும் எங்களால் நல்லா செய்தி சொல்ல முடியவில்லை.

பிறகு ஒவ்வொரு நாளும் பிரஷர் அதிகம் ஆனது. மற்ற எல்லா pressure யும் சமாளிக்க தெரிந்த எனக்கு இதனை சமாளிக்க தெரியவில்லை. மற்ற வகை பிரஷர் எல்லாம் உடம்பை கெடுக்காது என்றாலும் குழந்தை விஷயத்தில் ஏற்படும் பிரஷர் உடம்பை ரொம்ப பாதிக்கும் என்று டாக்டர் அறிவுறுத்தினார்.

பிறகு எப்படியோ ஒரு வழியா "உண்டாகி" குழந்தை பிறந்த போது நினைத்தேன்

"இனிமேல் யாருடனும் என்னை ஒப்பிட மாட்டார்கள், நானும் என் பையனை அடுத்தவர்களுடன் ஒப்பிட மாட்டேன்"

சில மாதங்களில் என் அம்மா என்னிடம் கேட்டார்கள்

" அபி பொண்ணு பிடிச்சிட்டு நிற்கிறாளாம், முகுந்த் நிற்கிறானா?"

அட கடவுளே!! இதுக்கு முடிவே இல்லையா?.

Thursday, January 21, 2010

விலங்குகள் பண்ணை (Animal Farm)

எனக்கு எப்போதும் அரசியல் புரிவதில்லை. எந்த நாட்டு அரசியல் என்றாலும் கூட. எனக்கு communisa திற்கும் capitalisa திற்கும் வித்தியாசம் தெரியாது. ஒரு நாள் என்னுடைய அலுவலக நண்பர் எனக்கு ஒரு புத்தகம் சிபாரிசு செய்தார். அது "Animal Farm" By George Orwell.

அது ஒரு விலங்குகளை அடைத்து வைத்திருக்கும் பட்டி. அதில் ஒரு பொதுக்கூட்டம் நடக்கிறது. பன்றிகள் தலைமை ஏற்று அந்த கூட்டத்தை நடத்துகின்றன. ஒரு கிழ பன்றி "Old Major" உரை நிகழ்த்த ஆரம்பிகிறது. அந்த உரையில் மனிதர்களை ஒட்டுண்ணிகள் என விவரிகின்றது. "மனிதர்கள் நம்மிடம் இருந்து பால், முட்டை, கம்பளி மற்றும் உழைப்பு அனைத்தையும் எடுத்து கொண்டு நமக்கு வெறும் புல் மற்றும் தீவனங்களை தருகிறார்கள். நம்மை கறிக்காக விற்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்" என்று
உரை நிகழ்த்துகிறது.

கூட்டம் நிகழ்ந்த சில நாட்களில் கிழ பன்றி இறந்து விட இரண்டு இளைய பன்றிகள் "Snowball & Napoleon" பொறுப்பை ஏற்று "Old Major" கனவை நனவாக்க முயல்கின்றன. அதன் முதற்கட்டமாக புரட்சி செய்து பட்டியை அதன் முதலாளியிடம் இருந்து தங்கள் வசப்படுத்தி அதற்கு "விலங்குகள் பண்ணை (Animal Farm)" என பெயரிடுகின்றன. விலங்குகள்துவம் உருவாக்க படுகிறது. அதன் 7 கட்டளைகள் பண்ணை சுவற்றில் பொறிக்க படுகின்றன. அவை

1. இரண்டு காலில் நடப்பவை எல்லாம் எதிரிகள்.
2. நான்கு காலில் நடப்பவை அல்லது இறக்கை உள்ளவை எல்லாம் நண்பர்கள்.
3. எந்த விலங்கும் ஆடை உடுத்த கூடாது
4. எந்த விலங்கும் படுக்கையில் படுக்க கூடாது
5. எந்த விலங்கும் மது அருந்த கூடாது
6. எந்த விலங்கும் பிற விலங்குகளை கொல்ல கூடாது
7. எல்லா விலங்குகளும் சமம்.

விலங்குகள்துவம் ஆரம்பித்த சிறிது நாட்களில் Snowball & Napoleon இடையே சண்டை மூளுகிறது. இருவரும் பிரிந்து விடுகிறார்கள். பண்ணையின் தலைவராக "Napoleon" செயல்படுகிறார். அவருக்கு என்று ஒரு ரகசிய நாய் படை நியமிக்க படுகிறது. அவர் செய்வது எல்லாம் சரி என்று சொல்ல "Squealer" என்ற பன்றி நியமிக்க படுகிறது. Squealer இன் பணி, பண்ணை மிகவும் சுபிட்சமாக இருப்பதாக பறை சாற்றுவது. மற்ற விலங்குகளும் அதை நம்பி பண்ணை சுபிட்சமாக இருப்பதாக நம்புகின்றன. நாட்கள் செல்ல செல்ல பன்றிகள் பண்ணையின் "முதலாளிகள்" ஆகின்றன. சில நாட்களில் பன்றிகள் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பிக்கின்றன.

கட்டளைகள் சிறிது சிறிதாக மாற்றி அமைக்க படுகின்றன.

" நான்கு காலில் நடப்பவை நன்று, இரண்டு காலில் நடப்பவை மிகவும் நன்று "

"எந்த விலங்கும் கூடுதலாக மது அருந்த கூடாது"

"எந்த விலங்கும் போர்வை போர்த்தி படுக்கையில் படுக்க கூடாது"

"எல்லா விலங்குகளும் சமம், ஆனால் சில விலங்குகள் மற்றவற்றை விட அதிக சமம்"

Animal Farm புத்தகம் "Russian civil war" ம் அதை தொடர்ந்து நிகழ்ந்த வரலாற்றையும் விலங்குகளை கொண்டு Orwell சித்தரித்து இருக்கிறார். அதில் இருக்கும் ஒவ்வொரு நிகழ்வும் இன்றைய இந்திய அரசியல் சூழலுக்கு பொருத்தமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.

Saturday, January 9, 2010

தமிழா !! கொஞ்சம் கஷ்டமுங்க

இது முழுக்க முழுக்க நான் சந்தித்த ஒரு சில பெண்களை பற்றிய பதிவு.

என் கல்லூரி நாட்களில் சந்தித்த அந்த பெண்.

கல்லூரியில் Admission கிடைக்குமா என்று வரிசையில் நின்று கொண்டிருந்த போது எனக்கு பின் கையில் ஒரு ஆங்கில புத்தகம் வைத்து கொண்டு நின்றாள். என்ன புத்தகம் அது என்று பார்த்த போது " N or M by Agatha Christie".

அவளுக்கு என்று ஒரு சில தோழிகள் உண்டு. எப்போதும் அவர்களுடன் மட்டும் தான் பேசுவாள். அவர்கள் அனைவரும் எப்போதும் ஆங்கிலத்தில் தான் பேசுவார்கள். அவளிடம் எப்போது பேசினாலும் பதில் ஆங்கிலத்தில் தான் வரும்.

"19c பஸ் போயிடுச்சா"
"I dont know, It must have been".

என் கல்லூரி இறுதி ஆண்டு முடியும் வரை நான் பார்க்கும் நேரம் எல்லாம் அவள் வசம் அந்த புத்தகம் இருக்கும். நெறைய பேர் இருக்கும் இடத்தில் அவள் கட்டாயம் அந்த புத்தகத்தை பிரித்து மறக்காமல் படிப்பாள்.

அடுத்து நான் சந்தித்த ஒரு பெண் என்னுடன் வேலை பார்த்தவள். தமிழ் பெண் தான் என்றாலும் தான் ஒரு தமிழ் பெண் என்ற அடையாளம் தன மீது விழுந்து விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பாள்.

எப்போதும் பிற மொழி பேசும் மக்களுடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் பேசி கொண்டு இருப்பாள். தமிழ் பேசுபவர்கள் சென்று பேசினாலும் அவள் பதில்

"எனக்கு தமிழில் சரியாய் பேச வராது "


அடுத்து சில பெண்கள், தாங்கள் பிறந்து, வளர்ந்து, படித்ததெல்லாம் தமிழ்நாட்டில் என்றாலும், தமிழ் வாசகங்களை வாசிக்க சொன்னால் அவர்கள் பதில்.

"ஐயோ தமிழா!! கொஞ்சம் கஷ்டமுங்க"

எனக்கு இன்று வரை விளங்காத ஒன்று

"இவர்களுக்கு உண்மையாகவே தமிழ் பேச , எழுத தெரியாதா ?"

முதல் தமிழ் இடுகை

ஒரு வழியாக தமிழில் எப்படி எழுதுவது என்று கற்று விட்டேன். இனி தமிழில் எழுத ஆரம்பிக்கிறேன்.

My first blog-How exciting!!!

After reading many blogs in English and Tamil, I finally thought why not start blogging my self ( Vidhi Valiyathu) ;-) as a result, created my own enakke enakkana blog.

Naan Kandu, Kettu, Rasitthavattrai patri elutha munayum oru siriya muyarchi.

Not learnt yet how to type in Tamil, will write in thanglish till then.