Saturday, June 30, 2012

அரசியலால் வில்லன்கள் ஆகும் காமெடியன்கள்!

அது 2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம், அப்போது ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க வில் இணைந்திருந்தார் காமெடி நடிகர் செந்தில். ஆனந்தவிகடன் பேட்டி ஒன்றில் “ஏய் கருணாநிதி!, ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?” என்று கேட்டு ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.

அந்த தேர்தலில் அ.தி.மு.க தோற்று தி.மு.க வென்றது..

அ.தி.மு.கா வுக்கு ஆதரவாக மு.க வை தாக்கிய அந்த ”ஒண்டிக்கு ஒண்டி” வார்த்தையை திட்டி பல பிரபலங்கள் பேட்டி கொடுத்தனர்.


 
ஏற்கனவே பட வாய்ப்புகள் குறைந்திருந்த செந்திலுக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்க பயந்து பட அதிபர்கள் ஒதுக்க  ஆரம்பித்தனர்.  பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் ஒடுங்க ஆரம்பித்தார் செந்தில் அவர்கள்.
 
எந்த கட்சியையும் சாராமல் இருந்த வடிவேலுவும், விவேக்குக்கும் அதிக வாய்ப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன.
 
 
சீன் மாறுகிறது.
 
இது 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம். அப்போது ஆளும்கட்சியாக இருந்த தி.மு.காவில் சேர்ந்திருந்தார் உச்சத்தில் இருந்த காமெடி நடிகர் வடிவேலு.
 
தி.மு.காவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக அவர், எதிர் கட்சி கூட்டணியில் இருந்த தே.மு.தி.கா தலைவரை தாக்கி பேசினார்.
 
 அந்த தேர்தலில் தி.மு.க தோற்று அ.தி.மு.க வென்றது..


தி.மு.கா வுக்கு ஆதரவாக விஜயகாந்தைவை தாக்கியதை, திட்டி பல பிரபலங்கள் பேட்டி கொடுத்தனர்.



ஆளும்கட்சியை பகைத்துகொண்டு  வடிவேலுவுக்கு புது பட வாய்ப்புகள் எதுவும் கொடுக்க பயந்து பட அதிபர்கள் ஒதுக்க ஆரம்பித்தனர். பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் வீட்டில் ஒடுங்க ஆரம்பித்தார் வடிவேலு அவர்கள்.


எந்த கட்சியையும் சாராமல் இருந்த சந்தானத்திற்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலிலும் பிரசாரம் செய்த இரண்டு காமெடியன்களும் அரசியல் செய்ய தெரியாமல் வாயில் வந்ததை பேசி வில்லன்கள் ஆக்கப்பட்டு வாய்ப்பை இழக்கின்றனர்.

 இதிலிருந்து என்ன தெரிகிறது, அரசியல்வாதிகளும், ஆளும் கட்சியும் தான் ஒரு நடிகனின் மார்கெட்டை தீர்மானிக்கிறார்கள். மக்கள் தீர்மானிப்பதில்லை!!

Sunday, June 3, 2012

வாழ்க்கை போராட்டம்.

ஏன் வாழ்க்கையை போராட்டம் என்றழக்கிறார்கள் என்று நான் யோசித்ததுண்டு. போராட்டம் என்றாலே கொடிபிடிப்பது, கூச்சல் போடுவது, மறியல் செய்வது என்று மட்டுமே சிறுவயதில் நினைத்திருந்தேன் நான். ஆனால் ஒவ்வொரு நாளும் வாழுவதற்கு நாம் அனைவரும் ஏதோ ஒரு போராட்டம் செய்கிறோம். நாம் செய்யும் போராட்டங்களை பற்றிய அலசலே இந்த பதிவு.

ஏழைகளும், நடுத்தர வர்க்கமும் மட்டுமே வாழ்வதற்கு போராட வேண்டும் மற்றவர்களுக்கு இந்த வாழ்க்கை போராட்டம் தேவையில்லை என்று நினைப்பவர்கள் உண்டு. ஆனால் வாழ்வில் எந்த நிலையில் ஒருவர் இருந்தாலும் சரி அவருடைய வாழ்விலும் ஒரு போராட்டம் இருக்கும். அது பொருளாதாரம் சார்ந்த போராட்டமாக இல்லாமல் இருக்கலாம்..ஆனால் அவர்களும் வாழ்வில் போராடவே வேண்டியிருக்கிறது.

இதற்கு சில உதாரணங்கள் சில.

முதல் உதாரணசில நாட்களுக்கு முன் நான் சந்தித்த ஒரு பெண்ணை கூறலாம். அவள் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்த இந்திய மண்னை சேர்ந்த பெற்றோரை கொண்டவள். அவளுடைய அப்பா, ஒரு மில்லியனர், ரிசாட் ஹோட்டல் ஹோட்டல் உரிமையாளர். பார்க்க அழகாக இருப்பாள். அவளுக்கு டாக்டருக்கு படிக்கும் ஒரு இந்திய மரபை சேர்ந்த பாய்ஃப்ரெண்ட்ம் உண்டு. அந்த பாய்ஃப்ரெண்ட் குடும்பமோ ஒரு கோடீஸ்வரர்கள் குடும்பம் படிப்பு. பாய்ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் நிலையை தாண்டி, தற்போது கணவன் மனைவியாகி விட்டனர்.

அந்த பையன் ஒரு அப்பாவி வேறு, எல்லாம் இவள் சொற்படி தான் நடப்பார்.  பணம், அழகு, அந்தஸ்து, அழகான, பணக்காரனான கணவன்..இப்படி அந்த பெண்ணுக்கு எல்லாமே உண்டு..ஆனால் அவளிடம் நீங்கள் ஒரு 5 நிமிடங்கள் பேசினால் போதும்..வாழ்வில் விரக்தி வந்துவிடும்..காலையில் எழுந்ததில் இருந்து படுக்கப்போகும் வரை தான் சந்திக்கும் ஒவ்வொருவரும் தனக்கு துரோகம் செய்கிறார்கள் என்பாள். தன்னுடைய தந்தையை பற்றி அசிங்க அசிங்க வார்த்தைகளால் திட்டுவாள். தன கணவனை பற்றியும், அவரின் குடும்பத்தார் பற்றியும் அவள் திட்டும் வாரத்தைகள் கேட்க்க காது கூசும்.அவளை பொறுத்த வரை ஒவ்வொரு நாளும் வாழ்க்கை ஒரு போராட்டமே. 

அடுத்து நான் சொல்ல இருப்பது என்னை போன்ற ஒரு பெண் ஆராய்ச்சியாளரின் கதை,  இரண்டு குழந்தைகளுக்கு தாய் அவர். முனைவர் பட்டம் பெற பல்கலைகழகத்தில் சேர்ந்த சில மாதங்களில் திருமணம் ஆனது. குழந்தை பேரு வேண்டாம் என்று தள்ளி போட்டு கொண்டிருந்த அவர், பட்டம் பெற சில மாதங்கள் இருக்கும் பொது தாயாகி விட்டார். அவரின் கைடுக்கு அது பிடிக்காமல் போக, குழந்தையை பார்த்து கொள்ள முடியாத அளவு வேலைப்பளு கொடுத்து, வேலையை முடி இல்லை டிகிரி கிடையாது என்று மறைகமாக மிரட்ட, குழந்தைக்கும், எதிர்காலத்துக்கும் நடுவில் அவர் நடத்திய வாழ்க்கை போராட்டம் இன்னும் என் கண் முன் நிற்கிறது. கடைசியில் இந்த ஆராய்ச்சியே வேண்டாம் என்று தாக்கி போட்டுவிட்டு இன்னொரு குழந்தைக்கு தாயாகி விட்டாலும், அவரிடம் இருக்கும் அறிவும் ஆர்வவும் நினைத்த தொழிலை செய்ய முடியாமல் அவர் படும் வேதனையும் அவர் வாழ்க்கையை ஒரு போராட்ட களமாக்கி விட்டிருக்கிறது.

 கடைசியாக நான் சொல்ல இருப்பது நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும், இன்னும் உயர் பதவிக்கு வர துடிக்கும் ஒரு பெண்ணை பற்றியது. இவருக்கும் குழந்தைகள் உண்டு என்றாலும் அவர்களை முழுக்க முழுக்க கவனித்து கொள்ளுவது ஆயாக்களும் அவர் கணவரும் தான். ஒரு நாளின் 24 மணிநேரத்தில் வெறும் 4 மணி நேரம் மட்டுமே இவர் உறங்குவார். மற்ற எல்லா நேரமும் வேலை வேலை வேலை தான். நிறுவனத்தில் நடக்கும் அரசியல்களை சமாளிக்க, மேலும் பதவி உயர்வு பெற இவர் போராடும் போராட்டம் அப்பப்பா  சொல்லமுடியாது