Sunday, March 11, 2012

மிட் நைட் மசாலா பாடல்களும், சரவணா பவன் சாப்பாடும்!



தெரியாதனமா நேற்று இங்கிருக்கும் சரவணாபவனுக்கு சாப்பிட சென்றுவிட்டோம். அங்கு இசை அருவி சானல் போட்டு அதில் பாடல்கள் போட்டு கொண்டிருந்தார்கள். அதில் அழகு குறிப்பு சொல்ல போன் செய்ய சொல்லி ஒரு DJ பேசி கொன்று கொண்டிருந்தார். அதை கூட தாங்கி கொள்ளலாம் போல இருந்தது. ஆனால் அதற்கு பிறகு போட்ட ஒவ்வொரு பாடல்களும் ஆகா என்ன அருமையான அர்த்தங்கள் கொண்டவை.

“எப்படியும் ஒருத்தனுக்கு கழுத்த நீட்ட போறேன்” ,
 “ஒரு நாள் மட்டும் கேர்ள் ஃப்ரெண்ட் ஆக வரயா” ,
"பம்பர கண்ணாலே”
“அர்ஜுனா அர்ஜுனா அம்பு விடும்”

இந்த பாடல்களின் அர்த்தம் தெரிந்த நமக்கு நெளிவை ஏற்படுத்த, அதில் வந்த காட்சிகள் எல்லாம் ”உவ்வே” ரகம். அந்த நேரம் பார்த்து சாப்பிட என்று ஒரு அமெரிக்க குடும்பம் 5 வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளை கூட்டி கொண்டு வந்தனர்.

அவர்கள் வந்து உட்கார்ந்த சில நிமிடங்களில் அவர்களின் இரண்டு குழந்தைகளும் திரையில் வந்த பாடல்களை கண்கொட்டாமல் பார்க்க ஆரம்பிக்க அந்த பெற்றோர்கள் அவர்களை பார்க்க விடாமல் செய்ய செய்த பிரயத்தனம் எங்களுக்கு சிரிப்பை வரவழித்தது.

இங்கு அமெரிக்காவில் குழந்தைகளுக்கு என்று இருக்கும் நிகழ்ச்சிகள், புத்தகங்கள், திரைப்படங்கள் மட்டுமே காட்டுவார்கள்.  வன்முறை காட்சிகள் நிறைந்த படங்களோ, 18 வயதிற்கு மேற்பட்ட வயதினர் மட்டுமே பார்க்கும் படி இருக்கும் காட்சிகள் நிறந்த படங்களையோ பார்க்க பல பெற்றோர் அனுமதிப்பதில்லை.

அதிலும் குழந்தைகள் 5 வயதுக்குட்பட்டவராய் இருப்பின் அவர்களுக்கு டிவி பார்ப்பது கூட பல நேரங்களில் தடை உண்டு.

எவ்வளவோ முயற்சி செய்து குழந்தைகளை ’அந்த மாதிரி’ பாடல்களை பார்க்க முடியாமல் செய்ய முடியாமல் ஆக, முடிவாக அந்த கடை நடத்துபவரிடம் சென்று டிவியை அணைக்கும் படி சொன்னார்கள் அந்த அமெரிக்க பெற்றோர்.

இப்படி மிட் நைட் மசாலா பாடல்கள் பட்ட பகல் நேரங்களில் டிவியில் ஒளிபரப்புதல் தேவையா?

டிவிக்கும் கண்டிப்பாக தணிக்கை தேவை என்பது கண்கூடு..கவனிக்குமா இந்திய அரசு.



Monday, March 5, 2012

என்னாது காந்திய கொன்னுட்டாங்களா ??

நேற்று நீண்ட நாட்களுக்கு பிறகு ஜாக்பாட் பார்க்க நேர்ந்தது.

அதில் இரண்டு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் பங்கேற்றனர். அதில் ஒரு கேள்வி,
காந்தி படத்தின் முதல் காட்சியான, காந்தியை கோட்சே சுடுவது போன்ற ஒன்று, அதை போட்டு விட்டு, காந்தியை கொன்றது யார்? என்ற கேள்வி கேட்டார்கள்.
என்ன கேணத்தனமான கேள்வியா இருக்குதே, இது கூடவா 10th students don't know,
என்று நான் நினைக்கும் தருவாயில் அந்த அணியினர் பதில் எனக்கு புல்லரிப்பை தந்தது.

ஒரு அணியினர் சொன்ன பதில்.

நோ ஐடியா.

இரண்டாவதி அணியினர் சொன்னது

முசோலினி

அட கடவுளே!!! இது என்ன காந்திக்கு சோதனை.


இங்கே அமெரிக்காவில் நடக்கும் ஜெப்பர்டி ப்ரோக்ராம் பார்க்க நேர்ந்தது, அதில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி.

காந்தியை கொன்றது யார்?

அதில் கலந்து கொண்ட அத்தனை மாணவர்களும் பச்செர் அழுத்தினர் அனைவரின் பதிலும்

நாதுராம் கோட்சே 

எங்கே செல்கிறது இந்திய  குழந்தைகளின் கல்வித்தரம்

Saturday, March 3, 2012

சரக்கடிடா மச்சான்!!!!

மனதில் கவலையா?
பொண்டாட்டி சொல்லற பேச்சு கேக்க மாட்டேன் என்கிறாளா?,
காதலில் தோல்வியா?
காதலி கலட்டி விட்டுட்டாளா? 

சரக்கடி மச்சான்!!

பண பிரச்சனையா?,
கடன்காரன் தொல்லையா?,
பிசினஸ் லாஸ் ஆ?
வேலை போயுடுச்சா?
சாப்பாட்டுக்கு வழியில்லையா?

சரக்கடி மச்சான்!!!

பர்த்டே பார்ட்டி ஆ?
கெட் டுகெதர் ஆ  ?
பேசுலோர் பார்ட்டி ஆ?
பிசினெஸ் டீலிங் ஆ?
பதிவர் சந்திப்பா?

சரக்கடி மச்சான்!!!

நீ பெரிய அப்பாடக்கருன்னு உலகத்துக்கு காட்ட ஆசை பட்ட,
நல்லா தண்ணி அடிச்சு மட்டையாகிட்டு,
அப்புறம் எழுந்திருச்சு , எவ்வளோ தண்ணி அடிச்ச,
எத்தனை மணி வரைக்கும் அடிச்ச,
என்ன சைடு டிஷ் சப்பட்ட?,
யார் கூட சேர்ந்து தண்ணி அடிச்ச?
அவங்க வயசு என்ன?
எவ்வளவு தண்ணி அடிச்சாலும் வாந்தி எடுக்காம இருக்க என்ன என்னசெய்யிற?
இப்படி எல்லாத்தையும் ஒன்னு விடாம எழுதணும். 
அப்படி மட்டும் எழுதி blog ல 
போட்டுடு, அப்புறம் நீ பெரிய அப்படக்கர் தான்..

உன்னை பாலோ பண்ணினிட்டு இருக்கிற சில அடிபிடிகள்...ஆகா, ஐயூ... சான்ஸ் இல்லை அப்படின்னு உன்னை புகழ்ந்துட்டு அவங்களும் தண்ணி அடிச்சிட்டு மட்டையாயிடுவாங்க. அப்புறம்
என்ன உனக்கும் ஊசியில சரக்கு கிடைச்சிடும்...அதனால

சரக்கடி மச்சான்!!!

பி.கு: இப்படி எல்லாத்துக்கும் சரக்கடி, சரக்கடின்னு சொல்லிட்டு இருந்த என் சித்தி பையன், போன மாதம் ஒரு பார்டியில நல்ல சரக்கடிச்சுட்டு ,motorbike la போயி மோதி இறந்து விட்டார். இப்போது அவர் மனைவியும், இரண்டு குழந்தைகளும் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

Friday, March 2, 2012

அழியப்போகும் ஆண்கள் இனம்.


ஒரு செய்தி வாசிக்க நேர்ந்தது http://www.bbc.co.uk/news/science-environment-17127617.  http://news.bbc.co.uk/2/hi/europe/8060289.stm     அது இன்னும் ஒரு மில்லியன் ஆண்டுகளில் ஆண் வர்க்கத்தை நிர்ணயிக்கும் Y குரோமோசொம்கள் இருக்காது என்று கணித்திருக்கிறது. என்ன என்று தேடிய போது ஒரு புத்தகம் சிக்கியது அது ஆதாமின் சாபம் என்ற புத்தகம்.

அது என்ன Y குரோமோசொம்கள், எப்படி அவை ஆண்களை அழிக்க போகிறது என்று கேட்பவர்களுக்கு.

மனிதர்கள் அனைவருக்கும் மனித உடலை. உருவ அமைப்பை நிர்ணயிக்கும் 22 pairs குரோமோசொம்களும், 2 செக்ஸ் குரோமோசொம்களாலும் இருக்கும். ஆண்களுக்கு இவை X & Y வும்,  பெண்களுக்கு இது X & X ஆகவும் இருக்கும்.

File:HumanChromosomesChromomycinA3.jpg
குரோமோசொம்கள் செல்பிரிவின் போது




File:NHGRI human male karyotype.png
ஆண் குரோமோசொம்கள்.








பெண் குரோமோசோம்கள்.



மேலே உள்ள இரண்டு படத்தில் இருப்பது கார்யோடைப்பிங்(karyotyping) எனப்படும் முறையில் குரோமோசொம்களை வகைப்படுத்துவது.

குழந்தை ஆணா பெண்ணா என்று நிர்ணயிப்பது ஆண்கள் தான் என்று இன்னும் பலருக்கு தெரியாமல் இருக்கிறது. ஆனால் அப்பாவிடம் இருந்து வரும் விந்தணுக்களில் Y குரோமோசோம் இருப்பின் பிறக்க போகும் குழந்தை ஆண்குழந்தையாகவும், X இருப்பின் பெண்குழந்தையாகவும் இருக்கும்.

சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.
இந்த Y குரோமோசோம்களே, ஆண் உறுப்புகள், ஆண்களுக்கான ஹார்மோன்கள் அனைத்தையும் உண்டாக்கும் ஜீன்களை கொண்டிருக்கும்.இந்த Y குரோமோசோம்கள் படிப்படியாக தன்னிடம் இருக்கும்  ஜீன்களை இழந்து வருகிறது என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன் 1400 ஜீன்களை கொண்டிருந்த இந்த குரோமோசோம் இப்போது வெறும் 45 ஜீன்களை மட்டுமே கொண்டிருக்கிறது. இது போன்ற ஜீன்களை இழக்கும் தன்மை யால் ஜீன்கள்  படிப்படியாக குறைந்து ஒரு சமயம் y குரோமோசோம் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கிறது அந்த ஆய்வு. ஆனால் சமீபத்தில் நடந்த ஆராய்ச்சியில் இந்த ஜீன் இழப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக அறிந்தாலும் எந்த நேரமும் அது தொடரும் அபாயம் உள்ளது குறித்து  அறிய முடிகிறது.

சரி அப்போது ஆண்கள் இனமே இல்லாது போகுமா? என்ன ஆகும்? யாருக்கும் தெரியவில்லை.உண்மை நிலைமை இப்படி இருக்க ஆண் குழந்தை தான் உசத்தி என்று நினைத்து கொண்டு இந்தியாவில் நடக்கும் பெண் சிசுகொலைகளை என்னவென்று சொல்ல?