Wednesday, April 29, 2015

குழந்தைஇன்மையும் Peer பிரஷர்ம்

நான் பதிவெழுத ஆரம்பித்த புதிதில் Peer பிரஷர் என்ற ஒரு பதிவு எழுதி இருந்தேன்.அதில் சிறு வயது முதல் நான் சந்தித்த peer பிரஷர் அல்லது சக ஒப்பீடு பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.

இது இந்தியாவில் வளர்ந்த பலருக்கும் தெரிந்திருக்கும். சிறு வயது முதல் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு பெண்களை அல்லது ஆண்களை நம்முடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு அவர்கள் எப்படி படிகிறார்கள் அல்லது வேலை பார்கிறார்கள் நீ பாக்குறியா என்று ஒரு ஒப்பீடு செய்வார்கள் நம் பெற்றோர்.

ஆணாக இருந்தால் "அவன் எவ்வளவு மார்க் வாங்குறான் பாரு, நீயும் தான் வாங்குறியே? " ,  "அவனுக்கு அரியர் இல்லையாம், நீயும் தான் எத்தனை வச்சு இருக்கிற?"  "அவன் வேலைக்கு போயிட்டான் நீ எப்போ போக போற?"

பெண்களுக்கு மேலே இருக்கும் அனைத்தும் பொருந்தும் என்றாலும் ஒரு சில சில மாற்றங்களும்  உண்டு, "அவ எத்தனை வீட்டு வேலை செய்யுறா பாரு, நீயும் தான் இருக்கியே, இங்க இருகிறதா அங்க எடுத்து வைக்கிரயா, போற வீட்டுல என்ன கேட்ட பேரு வாங்கி கொடுக்க போறியோ?" , "உன்னோட பெரியம்மா பொண்ணு பாரு உன் வயசு தான் ஆனா கல்யாணம் ஆகி 6 மாசம் ஆச்சு, உனக்கு எப்போ கல்யாணம்னு ஊரெல்லாம் கேட்குறாங்க, என்ன பதில் சொல்ல நான் அவங்களுக்கு, சீக்கிரம் ஒருத்தன் கிட்ட உன்ன பிடிச்சு கொடுக்குற வரை வயித்தில நெருப்ப கட்டிட்டு இருக்கேன்" , இப்படி சில ஒப்பிடுகள் நிறைய பெண்கள் கேட்டு இருக்கலாம்.

ஆனால் சிறு வயது முதல் நாம் அதுவும் பெண்கள் கேட்கும் ஒப்பீடுகள்எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆக்கி விடும் ஒரு ஒப்பீடு உண்டென்றால் அது குழந்தை இல்லை அல்லது குழந்தை பிறப்பு தள்ளி போகிறதுஎன்னும் போது  உருவாகும் ஒப்பீடும்  அதனால் ஏற்படும் peer பிரஷர் ம் தான். கல்யாணம் ஆகி 3-6 மாசம் வரை பொறுக்கும் நம் பெற்றோர், உற்றார் உறவினர்கள் எல்லாரும் ஒரு வருடம் கழித்தும் "நல்ல செய்தி" சொல்லவில்லை என்றால் மெதுவாக ஆரம்பிப்பார்கள். நம் பெற்றோரே "எப்போ நல்ல செய்தி சொல்ல போற, பாரு உன் சித்தி பொண்ணுக்கு உனக்கப்புறம் கல்யாணம் இப்போ அவ 6 மாசம் முழுகாம இருக்காலாம்", என்று ஆரம்பிப்பார்கள். அப்போது ஆரம்பிக்கும் ஒரு வித டென்ஷன். இவை போன்ற கேள்விகள் எல்லாம் பெண்களை தான் குறி வைத்து முதலில் எய்ய படும். யாரும் ஆண்களை இப்படி கேட்பதை அதிகம் பார்த்ததில்லை.

"நமக்கு எதோ பிரச்சனையோ, அதனால தான் உண்டாகலையோ" என்று மெதுவாக ஒரு பயம் பெண்களை எட்டி பார்க்கும். அது முதல் குழந்தையின்மை peer பிரஷர். பின்னர் இன்னும் 6 மாதம் ட்ரை செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால், உடனே "கோயிலுக்கு நேந்துகிறது" என்று ஆரம்பிப்பார்கள் நம் சொந்தங்கள். இன்னும் பிரஷர் அதிகமாகும்.


(குழந்தைஇன்மை குறித்து என் சில பழைய பதிவுகள் இங்கே

குழந்தையின்மை சிகிச்சை வியாபாரமாக்கப்படுகின்றதா?

குழந்தையின்மை ஒரு நோயா?- 1

குழந்தையின்மை ஒரு நோயா?- 2

குழந்தையின்மை ஒரு நோயா? - 3 -அதிக எடை ஆபத்தானது

)


இரண்டு வருடங்கள் ஆகி விட்டது, இன்னும் குழந்தை இல்லைஎன்றால் அடுத்து "ட்ரீட்மென்ட்" என்று ஆரம்பிப்பார்கள். அது போல ஒரு ஸ்ட்ரெஸ் பெண்களுக்கு இல்லை என்பது என் கருத்து. IUI, IVF என்று எடுக்கும் ஒவ்வொன்றும் பெண்களுக்கு மனதளவில் உடலளவில் அவ்வளவு ஸ்ட்ரெஸ் கொடுக்க கூடியது. அதுவும் IVF இன் ஓவ்வொரு நிலையிலும் தினமும் பல ஊசிகள் போட வேண்டி வரும், ஹார்மோன் இன்ஜெக்சன் என்பதால் பயங்கர மூட் ஸ்விங் இருக்கும். அனுசரித்து செல்லும் கணவரும் குடும்பத்தினரும் இருந்தால் நல்லது. இல்லை என்றால் மிக கஷ்டம்.

உதாரணமாக, நம் ஊரில் எல்லாம் யாருக்கு குறை என்று எல்லாம் இன்னும் கூட பலர் பார்ப்பதில்லை, உடனே பெண்களை குற்றம் சொல்லும் "அவளை ஒதுக்கிட்டு இன்னொன்னை கட்டிக்கோ" என்று ஆணிடம் சொல்லும் பழக்கம் இன்னும் இருக்கத்தானே செய்கிறது. இப்படி நிலையில் எங்கே தனக்கு குழந்தை இல்லை என்றால் வாழ்கையே இல்லையோ என்று பயமும், ஸ்ட்ரெஸ் ம் அதிகமாகும் நிலை ஒரு சில நேரங்களில் பரிதாபத்துக்கு உரியது.


ஆனால் அப்படி எடுத்தும் ஒரு சிலருக்கு குழந்தை பிறப்பு இல்லாமல் இருந்து இருக்கிறது. அபப்டி பட்ட நிலையில், வாழ்கையில் ஒரு விரக்தி வரும் பாருங்கள், ஊர் கூடி மலடி என்று சொல்லாமல் சொல்வது, எத்தனை ட்ரீட்மென்ட் எடுத்த பின்பும் ஒன்றும் இல்லை அடுத்து என்ன நடக்குமோ என்ற நிலையில்லா தன்மை என்று எங்கு பார்த்தாலும் குழப்பங்கள். எதற்காக வாழ வேண்டும் என்று நினைப்பு..அப்பப்பா..

நம்ம ஊரில் அல்லது நம்மூர் மக்களிடம் இப்போதும் இருக்கும் ஒரு கெட்ட ஒப்பீடு,  குழந்தை இல்லாத தம்பதியினரை முன் வைத்து கொண்டு குழந்தை உள்ள பல தம்பதியினரை பாராட்டி பேசுவது. அல்லது நல்ல விசயங்களில் குழந்தை இருக்கும் பெண்களுக்கு முன்னர் குழந்தை இல்லா பெண்ணை கீழாக நடத்துவது என்று பல. நான் சொல்வது எல்லாம் இந்தியாவில் இருக்கும் சூழல் அல்ல, இங்கே அமெரிக்காவிலும் நடக்கும் சில அவலங்கள் தான்.

வேறு எங்கும் போக வேண்டாம், என்னுடைய சொந்த வாழ்கையில் நடந்தது இது. என் postdoc படிப்புக்காக என்று திருமணத்திற்கு பிறகு நாங்கள் குழந்தை பிறப்பை தள்ளி போட்டு இருந்தோம். அது பற்றி எதுவும் தெரியாத நிலையில், எங்களுக்கு நெருகிய சொந்தம் முதல் நெருங்கிய நண்பர்கள் வரை பலரும் எங்களை நல்ல விஷயங்கள் பலவற்றிக்கும் அழைப்பதில்லை, அப்படியே அழைத்தாலும் என்னை ஒரு சில விடயங்களை செய்யவிடவில்லை . என்னை மிகவும் காயபடுத்திய ஒரு சில விசயங்களில் நான் நெருங்கிய தோழியாக அப்போது நான் நினைத்த ஒரு பெண், தான் தாய்மை அடைந்ததை என்னிடம் சொல்லாமல் மற்ற அனைவருக்கும் சொல்லி அவர்களிடமும் "என்னிடம் சொல்ல வேண்டாம் 3 மாதங்கள் கழிந்த பின் சொல்லுங்கள்" என்று சொன்னது. அதே போல அவளுக்கு குழந்தை பிறந்ததை என்னிடம் சொல்லாமல் மற்றவர்கள் அனைவரிடமும் சொன்னது என்று பல.

அமெரிக்காவில் பல குரூப்கள் உண்டு. இது சாதி மத மொழி தாண்டியது   அதாவது, ஒரு குழந்தை இருக்கும் பெற்றோர் அதே போல ஒரு குழந்தை இருக்கும் பெற்றோரிடம் நட்பு வைத்து கொள்வார்கள் அல்லது அப்படி ஒரு குழந்தை இருக்கும் பெற்றோர்கள் பலரை தங்கள் குருப்பில் சேர்த்து கொள்வார்கள். அதே போல இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருப்பவரும்  2 அல்லது 3 குழந்தைகள் இருக்கும் குருப்பில் இருப்பார்கள். ஆனால் இவர்கள் தவறி கூட ஒரு குழந்தை இல்லா பெற்றோரை தங்கள் குருப்பில் சேர்த்து கொள்ள மாட்டார்கள். எங்கே தன் குழந்தைகளை பார்த்து கண்ணு வைத்து விடுவார்களோ என்று ஒரு குறுகிய எண்ணம். ஒரு சப்போர்ட் குரூப் என்று எதுவும் இருபதில்லை. ஏற்கனவே குழந்தை இல்லை என்று நொந்து போய் இருக்கும் இவர்கள், சமூகத்தால், நண்பர்களாலும் ஒதுக்க படுவதை அறியும் பொது இருக்கும் மனஉளைச்சலை நானும்  கொஞ்ச காலம் அனுபவித்து இருக்கிறேன். எங்கு சென்றாலும் இந்திய மக்களிடம் இருக்கும் ஒரு குறுகிய மனப்பான்மை இருக்கு பாருங்கள் அதனை என்ன என்று  சொல்வது.

உடலில் எந்த குறையும் இல்லை என்றாலும் இது போன்ற ஸ்ட்ரெஸ் களே பல நேரங்களில் நமக்கு எதிரியாக இருக்கும் என்று பலரும் அறிவதில்லை.  பாசிடிவ் எண்ணங்கள், நமக்கும் குழந்தை பிறக்கும் என்ற எண்ணங்கள் கொண்டு ஒழுங்காக உடற்பயிற்சி செய்து, நல்ல சத்தான உணவுகளி உண்டு, முக்கியமாக பெண்கள் அதிக எடை போடாமல், சந்தோசமாக ரிலாக்ஸ் ஆக இருந்தாலே எல்லாம் நல்ல படியாக நடக்கும் என்று நான் அறிந்த நிறைய infertility இணைய தளங்கள் அறிவுறுத்துகின்றன.

எவ்வளவு முயற்சி செய்தாலும் குழந்தை பேறு கிடைக்கவில்லை என்றாலும், கனவனம் மனைவி ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு  குழந்தை தத்து எடுத்து கொள்ளுங்கள். அதற்காக வாழ்க்கை விரக்தி வேண்டாம். குழந்தை என்பது வாழ்கையின் ஒரு அங்கம் தானே தவிர அதுவே முழு வாழ்கையும் அல்ல.

இது எனக்கு தெரிந்த, நெருங்கிய பல குழந்தையில்லா  தோழிகளின் வாழ்கையில் இருந்து எடுக்க பட்டது. அவர்களுக்காகவே எழுதப்பட்டது.

நன்றி.

Sunday, April 26, 2015

OK கண்மணி. என் பார்வையில்

என்னை பொருத்தவரை ஒரு படத்தின் வெற்றி என்பது அதில் எத்தனை தொழில்நுட்பம் இருக்கிறது எப்படி கையாள பட்டு இருக்கிறது, எவ்வளவு செலவு செய்து இருக்கிறார்கள், எத்தனை வெளிநாட்டு கலைஞர்கள் நடித்து இருக்கிறார்கள், எந்த கேமரா உபயோகித்து இருக்கிறார்கள், எந்த வெளிநாட்டில் எடுத்து இருக்கிறார்கள், என்பதில் இல்லை. உங்கள் வாழ்க்கைக்கு எப்படி நெருக்கமாக இருக்கிறது என்பதில் இருக்கிறது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதேனும்  ஒரு சில காட்சிகளிலாவது தங்களின் கடந்த காலத்தை படத்தில் வரும் காட்சிகளுடன் பொருத்தி பார்பாராயின் அதுவே அந்த படத்துடன் தன்னை இணைத்து கொள்ள ஒன்றி கொள்ள முடியும், அதுவே அந்த படத்தின் வெற்றி.

மணிரத்னத்தின் படங்களில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு சில படங்களில் மௌன ராகம், இதயத்தை திருடாதே, ரோஜா மற்றும் அலைபாயுதே. அனைத்திலும் எதோ ஒரு ரியல் லைப் தொடர்பு இருப்பது போல எனக்கு தோன்றும். ரோஜா வில் கூட தேசபற்று தீவிரவாதம் என்பதை தாண்டி, படத்தின் முதல் பாதி ஒரு இளமை துள்ளல்  நிறைந்தது.

ஒரு படத்தில் இசை, இயக்கம், கதை எல்லாம் ஒன்றாக வந்து பார்க்கும் மனிதரை கட்டி போட்டால் அதுவே ஒரு படத்தின் வெற்றி. அப்படி ஒரு படம் ஓகே கண்மணி. நான், அதில் வரும் லிவ் இன் ரிலேஷன் ஷிப் சரியா தவறா என்பது பற்றியெல்லாம் விவாதிக்க வரவில்லை. என்னை பொருத்தவரை எப்படி மௌன ராகம் பார்க்கும் போது ஒரு உணர்வை தந்ததோ அதே உணர்வு ஓகே கண்மணி பார்க்கும் போது இருந்தது. அதற்காக இது மௌன ராகம் அளவு இருந்ததா..அதுவும் இதுவும் எப்படி ஒன்றாக முடியும் என்றெல்லாம் சிலர் நினைக்க கூடும்.

கதை என்று புதிதாக எதுவும் இல்லை, படம் முழுக்க உணர்வுகளின் சின்ன சின்ன வெளிப்பாடுகள் தான்.
 காதலர்கள்களின் ஒவ்வொரு அசைவுகள், உணர்வுகள், எண்ணங்கள், கோபங்கள், தாபங்கள் என்று இன்ச் பை இன்ச் மணிரத்னம் அவர்கள் பதிவு செய்து இருக்கிறார்.  இதனை லிவ் இன் ரிலேஷன் ஷிப் தாண்டி நீங்கள் புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு கூட பொருத்தி பார்க்க முடியும்.

இரண்டு independent ஆணும் பெண்ணும், தன்னுடைய காரியர் அல்லது வாழ்க்கை இரண்டில் எது முக்கியம் என்று ஒரு நிலை வரும் போது, பெரும்பாலும் பெண்கள் தங்கள் காரியர்ஐ தியாகம் செய்வது நடக்கும். முதலில் ஆரம்பிக்கும் போது அவள் தெளிவாக சொல்லுகிறாள், நான் என்னுடைய காரியரை தியாகம் செய்ய தயாராக இல்லை, அதனாலே இந்த லிவ் இன் ரிலேஷன் ஷிப் என்று. 6 மாதம் பின்னர் அவள் நிலை அதே போல இல்லை, இது முக்கியமா இல்லையா என்ற உணர்வு, அதனால் ஏற்படும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் என்று கடைசி 15 நிமிடங்கள்.  எல்லாரும் சொல்லுகிறார்கள், மறுபடியும் கல்யாணம் என்று தானே முடிகிறார்கள் என்று. என்னை பொருத்தவரை, அவன் கடைசியில் சொல்லும் "நீ எங்க வேணா போ பாரிஸ் போ, லண்டன் போ ஆனா என்னை கல்யாணம் செய்துட்டு போ" என்கிறான். என்னை பொருத்தவரை அழகான புரிதல் இது, நல்ல maturity.

இப்படி பட்ட ஒரு உணர்வுகளின் சங்கமத்திற்கு ARR இசை மிக அழகு.  எப்படி என்னால் இன்னும் இதயத்தை திருடாதேயின் "ஓ பிரியா பிரியா" மறக்க முடியாததோ அதே போன்ற ஒன்றாக "Aye Sinamika" சொல்ல முடியும்.

முடிவாக, மணி சார், வெல்கம் பாக். இது உங்களின் ஒன் ஆப் தி பெஸ்ட்.



டிஸ்கி

நேற்று மிக நீண்ட நாட்களுக்கு பிறகு  தியேட்டரில் பார்த்த ஒரு தமிழ் படம் இது. படத்தின் எண்ணங்கள் பாடல்கள் இன்னும் என் நினைவில், அதனால் நேரம் ஏற்படுத்தி கொண்டு என் எண்ணங்களை பதிய வந்த பதிவு இது. இது முழுக்க முழுக்க என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே. மாற்று கருத்துகள் கட்டாயம் இருக்கலாம்.

நன்றி



Saturday, April 25, 2015

பேஷன் என்பது என்ன?

 கடந்த இரண்டு வாரங்களாக Paulo Coelho வின் "The Winner Stands Alone" படித்து கொண்டு இருக்கிறேன். பேஷன், Cannes film festival, சூப்பர் கிளாஸ் ...என்று பேஷன், சினிமா மற்றும் அதனை சுற்றி நடக்கும் பல கூத்துகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு நாவல் அது. இதனை படித்த பிறகு, நம்ம ஊரு கோடம்பாக்கத்தில் மட்டும் என்று இல்லை எல்லா ஊர்களிலும் அதாவது சினிமா எடுக்கும் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி கூத்துக்கள் தான் நடக்கும் போல என்று அறிந்து கொண்டேன். visibility எதாவது ஒரு producer/director/distributor  கண்ணில் படுவதற்கு என்று சிலர் எடுக்கும்  பிரயத்தனங்களை அதன் விளைவுகளை உரைக்கும் நாவல் இது. சரி இந்த பதிவின் நோக்கம் இந்த நாவலை பற்றியது இல்லை என்றாலும், அதில் உரைக்கப்படும் பேஷன் பற்றியது.

பேஷன் என்று நான் சொன்னவுடன், அது எல்லாம் சினிமா நடிகைகள் மாடல்கள் செய்வது நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைத்தால் அது தவறு. உண்மையில் பேஷன் industry இல் இருந்து ஒவ்வொரு ப்ரோடுக்ட்ம் நம் மீது மறைமுகமாக திணிக்கபடுகிறது. அது நம்மை அறியாமல் நடப்பது. உதாரணமாக பெண்கள் பேஷன்  எடுத்து கொள்ளுங்கள் ஒவ்வொரு வருடமும் அல்லது ஒவ்வொரு 6 மாதமும் ஒரு புது வகை புடவை அறிமுகப்படுத்த படுகிறது. அது, ஒரு படத்தில் ஒரு நடிகை கட்டி வந்தது என்று சொல்லியே விற்கிறார்கள். அது வந்தவுடன் கிட்ட தட்ட அனைத்து இளம் மற்றும் மிடில் ஏஜ் பெண்களும் அதனை வாங்கி விடுகின்றனர். அது அவர்களுக்கு பொருந்துமா, இல்லை உடுத்தும் போது தன்னை அழகாக காட்டுமா என்றெல்லாம் யாரும் கவலை படுவதில்லை. நானும் வங்கி விட்டேன், என்னிடமும் இது உண்டு என்று உலகிற்கு காட்டுவதெற்கே பலர் வாங்குகிறார்கள்.

இந்தியா சென்றபோது கண்டது, பெண்கள் பலரும் tights என்று அழைக்கப்படும் ஸ்டாக்கிங்கை சுடிதார்,  டாப்ஸ் உடன் உடுத்துகிறார்கள், அது ஒரு சிலருக்கு உடலுக்கு வெளியில் பிதுங்கி இருப்பது போல தெரிகிறது..ஆனாலும் அதை எல்லாம் பற்றி யாரும் கவலை இல்லை. இன்னும் ஒரு சிலர் இப்போது பேஷன் ஆக இருக்கும் அனார்கலி மாடல் சுடிதார் அல்லது டாப்ஸ் வாங்குகிறார்கள். இது போன்ற டாப்ஸ் கள் நன்றாக உயரமாக ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு அல்லது நல்ல நீளமான கால்கள் இருக்கும் பெண்களுக்கு அழகாக பொருந்தும்..ஆனால் இதனை உடுத்தும் நடுத்தர வயது பெண்கள் நல்ல குண்டாக அல்லது குட்டையாக காட்சி அளிப்பவராக இருப்பின் அது அவர்களை இன்னும் குண்டாக குட்டையாக காட்டும் என்று அறிவதில்லை. ஒரு சில நேரம் எதோ போர்வையை சுற்றி கொண்டு வருவதை போன்ற ஒரு நினைப்பை தவிர்க்க முடியவில்லை.

அதே போல நகை விசயத்திலும், ஐந்து வருடங்களுக்கு முன் பேஷன் ஆகா இருந்த பல மாடல்கள் இப்போது பேஷன் இல்லை, அதனால் ஒரு சிலர் தன்னுடைய ஓல்ட் டிசைன் நகைகளை மாற்றி புது டிசைன் வாங்கி கொள்ளுகிறார்கள், இதனால் எவ்வளவு கிராம்கள் தங்கத்தை இழக்கிறார்கள் நகை கடை காரர்கள் இதனை எப்படி ஒரு உத்தியாக மாற்றி இருக்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் அறிவதில்லை. ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரை அட்சய திருதியையில் தங்கம் வாங்குவது என்பதெல்லாம் இருந்ததில்லை, இதுவும் இப்போது பேஷன் ஆகி விட்டது. அதவாது நானும் அட்சய திருதியையில் தங்கம் வாங்கினேன் என்று காட்டி கொள்ளுவது.  இது ஒரு compulsive buying. தனக்கு தேவையா, பொருந்துமா என்பதெல்லாம் தேவையே இல்லை. அடுத்தவர்கள் வாங்குகிறார்கள் நானும் வாங்குகிறேன்.

இதுவே Paulo வின் கூற்றுப்படி

“Fashion is merely a saying: I belong to your world. I'm wearing the same uniform as your army, so don't shoot.” ― Paulo CoelhoThe Winner Stands Alone

இது இந்தியாவில் என்று இல்லை உலகம் முழுதும் உண்டு. சொல்ல போனால் மேலை நாடுகளில் பேஷன் என்ற பெயரில் ஒவ்வொரு ஆறு மாதமும் நடக்கும் கூத்துக்கள் சிரிப்பை தரும். அதுவும் இந்த பேஷன் மக்கள் குறி வைப்பது டீன் ஏஜ் பெண்களை அதிகம். இங்கு பள்ளிகளில் எல்லாம் யூனிபார்ம் கிடையாது என்பதால் தலயில் இருந்து கால் வரை எல்லா வற்றிக்கும் ஒரு பொருள்களை பேஷன் என்று அறிமுகப்படுத்துகிறார்கள். அதனை மாடல்கள், நடிகைகள், பாடகிகள் கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். இது போன்றவற்றுகாகவே Kim Kardashian  போன்ற ஒரு சில குடும்பங்கள்  இருக்கிறார்கள். இவர்களின் வேலையே ஒன்றும் இல்லாத ஒரு பேஷன்ஐ அறிமுகப்படுத்துவது. அதனை compulsive buying ஆக்குவது. எனக்கு சமீபத்தில் மிகவும் எரிச்சல் தந்தது "American Girl" எனப்படும் ஒரு பொம்மை பற்றியது. அது உப்பு பெறாத ஒரு பொம்மை ஆனால் அதை வைத்திருப்பதையே சில pre teen பெண்கள் ஒரு பேஷன் ஆக வைத்து இருக்கிறார்கள். 
ஒவ்வொரு பொம்மையும் $120 முதல் $150 வரை இருக்கும். அதனை தவிர அந்த பொம்மைக்கு grooming என்று பணத்தை அழுக வேண்டும். எப்படி எல்லாம் பேஷன் என்ற பெயரில் மக்களை மாற்றி இருக்கிறார்கள் அவர்களின் மனத்தை சூறையாடுகிறார்கள் என்று நினைத்தால் கடுப்பு வரும்.

முடிவாக நான் சொல்லுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான், உனக்கு ஒரு உடை உடுத்தும் போது comfortable ஆகா இருக்கிறதா?, உடுத்தும் பொது அங்கங்கே பிடிக்காத உனக்கு சூட் ஆகிறது என்றால் வாங்குங்கள். அடுத்தவர்கள் வாங்கி இருக்கிறார்கள்  அதனால் நானும் வாங்க வேண்டும் என்றால் தயவு செய்து வாங்காதீர்கள், ஏனெனில் இது ஒரு முடிவிலி ஆகி விடும். ஒவ்வொரு 6 மாதமும் நீங்கள் இப்படி வாங்கி கொண்டே இருக்கவேண்டும். உங்கள் பெண் குழந்தைக்கும் சொல்லி கொடுங்கள். இப்படி உடை உடுத்தினால் தான், நகை போட்டால் தான் friends பேசுவார்கள் என்று உங்கள் பெண் கூறினால் அவளிடம் சொல்லுங்கள் அப்படிப்பட்ட ஒரு நட்பே நமக்கு தேவை இல்லை என்று. அவர்கள் எல்லாம் false friends. எப்போதும் உங்களுடன் வர மாட்டார்கள் என்று.

நன்றி.

Tuesday, April 21, 2015

இந்தியாவில் தனியாக ஒரு பெண்ணால் வாழ முடியுமா?


என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் அவர். இந்தியாவில் இருந்து இங்கு திருமணம் ஆகி வந்து ஒரு குழந்தை என்று ஆன பின்னர் கணவருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு கொண்டு விவாகரத்து கொண்டு பிரிந்து விட்டனர். இது நான் கேள்வி பட்ட நான்காவது விவாகரத்து இந்த வருடம். இந்த பெண்ணின் கதை வேறு மாதிரி. கடந்த வருடம் நான் என் தோழியின் வீட்டில் நடந்த வீட்டு வன்முறை பற்றி குறிப்பிட்ட போது ஒரு சிலர் விவாகரத்து கொண்டு பிரிந்து விடலாமே ஏன் இப்படி ஒரு சூழ்நிலையில் வாழ வேண்டும் என்று கேட்டனர். அதே போன்றதொரு சூழ்நிலையில் இந்த பெண் இருந்து இப்போது விவாகரத்து வாங்கி விட்டு கலிபோர்னியாவில் இருந்து எங்கள் ஊருக்கு மாற்றல் ஆகி வந்து விட்டார். மிடில் ஸ்கூல் படிக்கும் பையனோடு.

விவாகரத்துக்கு முன் கணவரிடம் இருந்து பிரிந்து இந்தியா சென்று ஒரு வருடம் அவர் தன மகனுடன் தங்கி இருக்கிறார். அவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஹைதராபாத் சொந்த ஊர்.  கையில் நல்ல வேலை எடுத்து கொண்டு அவர் சென்று ஹைதராபாத் இல் வீடு தேடி இருக்கிறார். அவரின் பெற்றோர் விஜயவாடா ஊரில் இருந்ததால் அவர் தனியே தங்க வேண்டிய நிர்பந்தம். அவர் விவரித்தது இது. 

முதலில் கணவர் பெயர் இல்லாமல் அல்லது கணவர் வந்து கையெழுத்து போடாமல் வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேன் என்று சிலர் சொல்லி இருக்கின்றனர். பின்னர் அவர் என் கணவர் US இல் இருக்கிறார் நான் பையனை படிக்க வைக்க இங்கு வந்துஇருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். பிறகும் சில மாதங்கள் கழித்து அனைவரும் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். இவர் இதனால் பக்கத்து வீடு எதிர் வீடு என்று யாரிடமும் பேசாமல் இருந்து இருக்கிறார். பின்னர் அவர்களுக்கு விஷயம் எப்படியோ தெரிந்த பின்னரும் அனைவரும் நிறைய புரண் பேசி இருக்கின்றனர்.  ஒரு பெண் தனியாக இருக்கிறார் என்றால் ஆபிஸிலும் சில ஆண்கள் நூல் விட்டு பார்த்து இருக்கின்றனர். நிறைய ஜாடை பேசுவது பெண்களும் இவர் பின்னால் "இவ என்ன செய்தாலோ, வீட்டு காரன் விட்டுட்டு போயிட்டான்" என்ற ரீதியில் பேசி இருக்கிறார்கள். அனைவரும் இவள் நடத்தையை கிண்டல் செய்து இருக்கிறார்கள். எங்கே தப்பு என்ன வென்றெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. எதோ மெல்லுவதற்கு அவல் தேவை.

இந்த பேச்சுகளில் இருந்து தப்ப அவள் தன் பெற்றோரை அழைத்து வந்து தன்னிடம் வைத்து கொண்டு இருக்கிறாள்.  ஆயினும் செல்லும் இடம் எல்லாம் தன்னுக்கும் தன பையனுக்கும் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்த அவள், திரும்பி US வந்து விட்டாள். இங்கு ஒரு வேலை எடுத்து கொண்டு தனியாக வாழ கற்றும் கொண்டு விட்டாள். ஆனால் எங்கு சென்றாலும் இந்தியன் மென்டாலிட்டி ஒரே போல தானே இருக்கும், முன்னால் சிரித்து பேசி பின்னால் புரண் பேசுகிறார்கள், என்னை பற்றி தப்பாக பேசுகிறார்கள், இந்தியன் மக்கள் யாருடனும் சேர முடியாமல் ஒரு வாழ்க்கை என்று வருத்த  பட்டாள். நான் அவளிடம் சொன்னது ஒன்றே ஒன்று தான், "நீங்கள் அந்த வாழ்கையில் இருந்து வெளியே வந்து விட்டீர்கள், எத்தனை சந்தித்து இருப்பீர்கள் என்று என்னால் உணர முடிகிறது. ஆனால் நீங்கள் முதலில் அந்த காகுனில் இருந்து கூட்டில் இருந்து வெளியே வர வேண்டும். என்ன சொல்ல போகிறார்கள், தைரியமாக சொல்லுங்கள், I am a divorcee. முதலில் இவர்களின் ஒபினியன் ஒரு பெரிய விசயமாக பார்க்க வேண்டாம். "You just have one life to live, live it to the fullest". வெளியே செல்லுங்கள், நிறைய மனிதர்களை சந்தியுங்கள், உங்களுகென்று ஒரு வாழ்க்கை அமைத்து கொள்ளுங்கள். டிவேர்ஸ் ஆகி விட்டதால் உங்கள் உலகம் முடிந்து விடவில்லை" என்று சொன்னேன்.  சரி என்று சொல்லி இருக்கிறாள். 

ஆனால் அவளிடம் பேசிய பிறகு எனக்குள் சில எண்ணங்கள். உண்மையில் இந்தியாவில் ஒரு வேலை பார்க்கும், சம்பாதிக்கும் பெண் திருமணம் வேண்டாம் என்று இருந்தாலோ, அல்லது விதவையாகவோ அல்லது விவகாரத்து ஆனவளாகவோ இருந்தாலோ சமுதாயத்தால் எப்படி நடத்தபடுவார்கள். அவளால் ஒரு வாழ்க்கையை எந்த ஆண் துணையும் இல்லாமல் அல்லது பெற்றோர்களின், சொந்தங்களின் சார்பு இல்லாமல் வாழ முடியுமா. ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களில் அந்த பெண் சொன்னது போன்ற நிலை என்றால் டவுன்களில் அல்லது கிராமங்களில் எல்லாம் என்ன நிலைமை இருக்கும். இந்தியா முன்னேறி இருக்கிறது பெண்களுக்கு "My Choice" போன்ற ஒரு நிலை இருக்கிறது என்று தீபிகா படுகோன்கள் ஒரு புறம் பரப்பி கொண்டு இருக்க, எது உண்மை நிலவரம் என்று அறிய முடியவில்லை. இப்போதும் என் மனதில்  தொக்கி  நிற்கும் ஒரு கேள்வி, "இந்தியாவில் தனியாக ஒரு பெண்ணால் வாழ முடியுமா?  "

நன்றி.

Sunday, April 19, 2015

இரண்டு பயணங்களும் Queen ம்

கடந்த வருடம் வந்த நான்  பார்த்த Queen படம் எனக்கு12 வருடங்களுக்கு முன் இருந்த என்னை நினைவு படுத்தியது.


என்னுடைய இரண்டு வித்தியாசமான பயணங்கள் இங்கே. ஒன்று பெங்களூரில் இருந்து மதுரைக்கு பகலில் பஸ்ஸில் சென்றது, இரண்டாவது லண்டனில் இருந்து Ghent, Belgium  பயணம்.

பெங்களூர்- மதுரை பயணம்.

பெங்களூரில் intern ஆக ஆராய்ச்சிக்கு சேர்ந்த நேரம், தீபாவளி நேரம் வீட்டுக்கு செல்ல வேண்டும். ட்ரைன், தனியார் பஸ் என்று அனைத்தும் புக் ஆகி விட்டது. நிறைய நேரம் மெஜெஸ்டிக் இல் நின்று வந்த பெங்களூர்-மதுரை அரசு பேருந்தில் ஏறியாகிவிட்டது. காலை 10 மணி அளவில் கிளம்பிய பேருந்து, இரவு 8-9 மணிக்கு மதுரை செல்ல வேண்டும். அது தான் schedule. தனியாக பஸ் பயணம். பஸ்ஸில் ஏறி  உக்கர்ந்தவுடன் நான் கவனித்தது அதிக பேர் பஸ்ஸில் இல்லை என்பது. இருந்தாலும், பட்ட பகல் நேரம் எதுவும் நடக்காது என்று தைரியம் இருந்தாலும், மனதுக்குள் ஒரு நடுக்கம் இருக்கத்தான் செய்தது. சேலம் வரும் வரை ஒரு தொல்லையும் இல்லாத எனக்கு சேலத்தில் ஏறிய ஒரு கிழவர் என் சீட்டுக்கு பின்னால் அமர்ந்து கை விட்டு நோண்ட ஆரம்பித்தார். பின்னர் நான் நடத்துனரிடம் சொல்லி வேறு சீட் மாறி அமர்ந்து வந்தேன். ஒரு முறை கூட கண் அசர வில்லை. சீட்டில் சாய்ந்தும் அமர வில்லை. இதனை எல்லாம் எதிர் பார்க்காததால், ஒரு சேப்டி பின் மட்டுமே கையில் வைத்திருந்தேன். ஒரு வழியாக மதுரை வந்து, அம்மா, அண்ணனை பார்க்கும் வரை  உயிர் என் கையில் இல்லை.

அடுத்தது லண்டன் - Ghent பயணம் .

ப்ராஜெக்ட் க்காக விசிடிங் ஸ்டுடென்ட் ஆக , Ghent university இல் ஒரு வாரம் தங்க வேண்டி பயணம்.
லண்டனில் இருந்து சனிக்கிழமை  விடி  காலை கிளம்பும் முன் Ghent இல் இருந்த ஒரு Bed  அண்ட் breakfast க்கு போன் செய்த போது அவர்கள் சொன்னதது இது தான். 12 மணிக்குள் வந்து விடுங்கள் இல்லையேல் நாங்கள் மூடி விடுவோம் என்று.

லண்டனில் இருந்து ப்ருச்செல்ஸ் விமான பயணம் தாமதமாக, ப்ருசீல்ஸ் டு Ghent  ட்ரைன் பயணமும் தாமதமாகி விட்டது. பெட் அண்ட் breakfast செல்லும் போது மணி 12 கடந்து விட்டது. பெட் அண்ட் breakfast மூடி விட்டார்கள். மொழி தெரியாது யாரையும் தெரியாது, கையில் கொஞ்ச யூரோக்கள் மட்டுமே. என்ன செய்வதென்று தெரியாமல் நான் வந்த டாக்ஸி டிரைவரிடம் "டேக் மீ டு எனி யூத் ஹாஸ்டல்" என்று சொன்னேன்.  அவரும் என்னை ஒரு யூத் ஹாஸ்டல் அழைத்து சென்றார். சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் தங்க வேண்டும். கையில் இருந்த பணத்தை கொடுத்து தங்க இடம் வாங்கியாயிற்று. இரண்டு நாட்கள் தள்ள வேண்டும். university திங்க கிழமை மட்டுமே திறக்கும். அதன் பின்னாரே நான் சென்று சந்திக்க வேண்டியவரை சந்திக்க முடியும். யூத் ஹாஸ்டலில், அந்த படத்தில் வருவது போல பங்க் பெட் என்னுடையது மேல் பெட். எனக்கு கீழே ஒரு ஜப்பான் பெண், எனக்கு எதிரில் இருந்த பெட்டில் மேலே ஒரு ரஷ்சியன் ஆள், கீழே ஒரு போலந்து பெண். இரண்டு நாட்களும். காலையில் தரும் பிரேக் பாஸ்ட்ஐ, மதியமும் வைத்து சாப்பிடுவேன். இருந்த இரண்டு நாட்களும்,  அந்த ஊரை நடந்து சுற்றினேன். இப்படி ஊர், பேர், மொழி தெரியாத ஊரில் ஒரு பெண் தனியாக சுற்ற முடியும் என்றால் அது ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியம்.  கிட்ட தட்ட ஐரோப்பா முழுக்க தனியாக சுற்றி இருக்கிறேன். queen படத்தில் காட்டபடுவது போல நிறைய என் அனுபவங்கள்.

யாரும் உங்களை தொந்தரவு செய்ய மாட்டார்கள். நான்கு வருடங்கள், என் முனைவர் படிப்பு முடியும் வரை தனியாக இருந்து இருக்கிறேன். முதல் இரண்டு மாதங்கள், டோர்மேடோரி எனப்படும் ஹாஸ்டலில் இருந்து இருக்கிறேன். ஆண் ஹாஸ்டல், பெண் ஹாஸ்டல் என்றெல்லாம் இல்லை. உங்கள் அறைக்கு பக்கத்து அறை ஒரு ஆண் தங்கி இருக்கலாம். காமன் கிட்சென். ரூமில் கழிப்பறைகள் என்று ஒரு சின்ன அறை அது. இரவில் தனியாக லேபில் இருந்து நடந்து அல்லது சைக்கிளில்  வந்து இருக்கிறேன். என்னை பொறுத்த வரை, பெண்களுக்கு மிக மிக பாதுகாப்பான இடம் என்றால் அது ஐரோப்பா  தான்.

சொந்த நாட்டில், மொழி தெரிந்த இடத்தில், பட்ட பகலில் ஒரு ஊரில் இருந்து மற்ற ஊருக்கு வருவதற்குள் உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்த பயணம் எங்கே,  எதோ ஒரு நாட்டில், மொழி தெரியாத ஊரில் இரவில் தனியே தங்கியது எங்கே. நினைத்து பார்த்தாலே, நம் சொந்த நாட்டில் பெண்களுக்கு இருக்கும் பாதுகாப்பு புரியும்.

டிஸ்கி

இங்கே எழுதியது அனைத்தும், என்னுடைய சொந்த அனுபவத்தில் நான் கண்டது மட்டுமே. பொதுப்படையான அனுபவம் அல்ல. மாற்று கருத்துக்கள் இருப்பின் வரவேற்க்கபடுகின்றன.

நன்றி.

Saturday, April 18, 2015

உறிஞ்சப்படும் தனியார் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பு


மினிமம் சம்பளம் என்று ஒன்று இருக்கிறது இங்கெல்லாம், அதாவது ஒரு மணி நேரத்திற்கு குறைந்தது $7.25 கொடுக்க வேண்டும். அதற்க்கு குறைவாக கொடுத்தால் சட்டப்படி குற்றம். தண்டனை அளிக்கபடும். நிறைய மெக்சிகன் மக்கள் இதனை விட குறைந்த சம்பளத்திற்கு வேலைக்கு எடுப்பார்கள் ஒரு சில நேரங்களில். ஆனாலும் வேலை எவ்வளவு இருக்குமோ அதற்கேற்றார்போல கூலி தந்து விடுவார்கள், என்ன மற்றவர்களுக்கு கொடுப்பதை விட குறைவாக கொடுப்பார்கள். ஆனாலும் ஒருவர் ஒரு நாள் முழுக்க வேலை செய்கிறார் என்றால் குறைந்தது 50 டாலர் சம்பாதித்து விடுவார்.

இதனை இங்கு ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இந்தியாவில், புனிதமான தொழிலாக கருதப்படும் ஆசிரியர் வேலை செய்யும் பலரும் குறிப்பாக தனியார் நர்சரி மற்றும் பாலர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது என்று நான் நேரில் கண்டது.

என்னுடைய சொந்த கார பெண் தனியார் நர்சரி பள்ளி ஒன்றில் ஹிந்தி ஆசிரியராக வேலை பார்கிறார். சம்பளம் மிக குறைவு. 3000 ரூபாயில் இருந்து 3500 வரை தான் தருகிறார்கள். அவர் படித்திருப்பது B .Com, ஹிந்தியில் ப்ராத்மிக் வரை படித்து இருப்பதால் ஹிந்தி ஆசிரியை என்று பள்ளியில் சேர்த்தார்கள். இவரும் இன்னொரு வருமானம் தானே என்று வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.

முதலில் ஹிந்தி மட்டும் சொல்லிதர வேண்டும் என்றவர்கள் பின்னர், இங்கிலீஷ், கணக்கு என்று மற்ற வகுப்புகளும் எடுக்க சொல்லி விட்டார்கள்.  ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 வகுப்புகள் எடுக்க வேண்டும். காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை பள்ளி. ஒரு சில நேரங்களில் ஸ்பெஷல் கிளாஸ் என்று 6 மணி வரை இருக்க வைத்து விடுவார்கள்.
சனிகிழமை பள்ளி உண்டு. அதனால் சனிக்கிழமையும் லீவு கிடையாது.

கொடுக்கும் சம்பளம் 3000 ருபாய் அதுவும் முழுதாக கையில் கிடைக்காது. டீச்சர்  யூனிபார்ம் புடவை என்று 700 ருபாய் வாங்கி கொள்கிறார்கள். சம்பளம் எப்போதும் முதல் வாரம் வருவதில்லை, ஒரு சில நேரங்களில் கொடுப்பதும் இல்லை, அடுத்த மாதம் சேர்த்து தருகிறேன் என்று சொல்லி ஒப்பேத்துகிறார்கள். பள்ளி சிறிது தூரம் என்று அவர்கள் கொடுக்கும் வேன் வசதியை உபயோகித்தால் அதற்க்கு வேன் சார்ஜ் வாங்கி கொள்ளுகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் அதே பள்ளியில் படித்தாலும் பீஸில் எந்த தள்ளுபடியும் கிடையாது. பீஸ் மட்டும் பிள்ளைகள் இடம் இருந்து மறக்காமல் வாங்கி கொள்ளுகிறார்கள். குழந்தைகள் கலை நிகழ்சிகளில் பங்கெடுக்க என்று வற்புறுத்துகிறார்கள். அப்படி பங்கெடுத்தால், அதில் உபயோகிக்கும் உடை சூ அது இது என்று அனைத்தும் அவர்கள் கொடுக்கும் ஒன்றை தான் வாங்க வேண்டும். அதற்கென்று அவர்கள் சொல்லும் பணம் தலை சுற்றுகிறது.

எதையும் கேள்வி கேட்க முடியாது. ஏனெனில், இதே போல வேலை செய்யும் பலரும் இளநிலை முடித்தவர்கள். டீச்சர் ட்ரைனிங் போல எதுவும் படிக்காதவர்கள். வீட்டில் சும்மா இருப்பதற்கு பதில் இப்படி வேலைக்கு போகலாமே என்று செல்பவர்கள் சிலர் இருந்தாலும், பலர் வீட்டு கஷ்டத்துக்கு வேலைக்கு செல்கிறார்கள். அதனை இப்படி தனியார் பள்ளிகள் நன்கு உபயோகித்து கொள்கின்றன.

 உண்மையில் இங்கு இருக்கும் undocumented workers ஐ விட மிக மிக கீழ்த்தரமாகவே இவர்களின் சம்பளமும் இவர்களின் உழைப்பும் உறிஞ்சபடுகிறது. இப்படி இவர்கள் நடத்தபட்டால் எப்படி அவர்கள் விருப்பத்துடன் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பார்கள்?.டீச்சர் களின் வேலை அதிகம் சம்பளம் குறைவு, பிள்ளைகளின் பீஸ் அதிகம் என்று பேராசை பிடித்து அலையும் தனியார் பள்ளிகள் அடிக்கும் கொட்டம் சொல்லி மாளாது.

நன்றி

Thursday, April 16, 2015

வெளிநாட்டவர் பார்வையில் இந்தியர்கள் மனநிலை.

டிஸ்கி

இது எனக்கு  நெருங்கிய சில அமெரிக்க தோழர்களிடம் இருந்து அறியப்பட்டது. இது ஒரு சில தனிப்பட்டவர்களின் கருத்தாகவும் இருக்கலாம்.


சில lighter மொமேன்ட்களில் அவுட் சைட் வொர்க் நேரங்களில் என்னுடைய அமெரிக்க தோழர்களிடம் நான் வேலை தவிர பேசும் போது  அவர்களிடம் "இந்தியர்கள் பற்றிய அவர்களுடைய பார்வை அல்லது perception கேட்பதுண்டு" நிறைய பேர் சொன்ன ஒரு சில விசயங்கள் இங்கே 



  • Many indians are shallow and judgmental
  • Extremely hierarchically and many Indians find it difficult to work in a non-hierarchical structure
  • They expect commands or instructions from managers and they always on reactive mode and we cannot expect too much initiative from subordinates or they are not proactive. 


முதல் பாயின்ட்: judgmental


எத்தனை பேர் இதனை அனுபவித்து இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு அயன் செய்யாத சட்டையை அல்லது பாண்டை அணிந்து வெளியில் செல்கிறீர்கள்  அப்போது நீங்கள் புதிதாக சந்திக்கும் நபர்கள் முக்கியமாக இந்தியர்கள் உங்களை எப்படி பார்பார்கள். 


மற்றவர்கள் எப்படியோ, நான் நிறைய விசயங்களில் அனுபவித்து இருக்கிறேன்.  இந்தியாவில் இருந்த போதும் சரி இங்கே வந்த போதும் சரி. முதல் பார்வையில் இந்தியர்கள் உங்கள்  உடைகளை பார்த்து ஒரு எடை போட்டு நீங்கள் அப்படி தான் என்று பேச ஆரம்பிப்பார்கள் அல்லது நீங்கள் நகையோ அல்லது காஸ்ட்லி உடை அணியாமல் இருந்தாலோ உங்களிடம் பேச மாட்டார்கள்.  அடுத்து யாரோ ஒருவர் வந்து நம்மை பற்றி கூறி இருப்பார், உடனே உங்களிடம் முகம் திருப்பியவர்கள் திரும்பி வந்து பேசுவார்கள்.எனக்கு ரொம்ப சிரிப்பாக இருக்கும். கொஞ்ச நேரத்திற்கு முன் முகம் திருப்பியவர்கள் இப்போது வந்து பேசுகிறார்கள் என்று.  அதே போல, ஒரு சிலர் நம்மிடம் வந்து பந்தா காட்டுவார்கள், அதாவது என்னிடம் அது இருக்கு இது இருக்கு என்று எதிரில் இருப்பவர்களின் உடைகளை மட்டும் வைத்து ஜட்ஜ் செய்து உங்களிடம் ஒன்று இல்லை என்று நினைத்து பேசுவார்கள்.அப்படி செய்பவர்களி பார்க்கும் போது எனக்கு வடிவேலுவின் துபாய் காமெடி நினைவுக்கு வரும்.



அதே போல, நான் ரொம்ப அனுபவிப்பது இது. ஒரு பெண் பெரியவேலையில்  இருப்பதோ, நிறைய படித்திருப்பதோ அறியாமல் இருக்கும் போது அவர்களிடம் பேசுவதும் பின்னர் அவையெல்லாம் தெரிந்த பிறகு பேசுவதும் வித்தியாசமாக இருக்கும். ஆனால் முதலில் பேச ஆரம்பிக்கும் பொது ஒரு ஜட்ஜ் மென்ட் இல்லாத ஒரு மனநிலையில் பேசவே மாட்டார்கள்.ஏன்  இப்படி என்று பல முறை யோசித்து இருக்கிறேன்.


இதே போன்ற ஒரு மன நிலையை நான் ஒரு சில  UK ஆங்கிலேயர்களிடம் பார்த்து இருக்கிறேன். நான் முதன் முதலில் கேம்பிரிட்ஜ் சென்ற புதிது, இந்தியாவில் இருந்து சென்ற நான் இந்திய accent மட்டுமே உபயோகித்து ஒரு இடத்திற்கு வழி கேட்ட போது அங்கிருந்த அம்மா சொன்ன accent  புரியாமல் "கேன் யு ப்ளீஸ் டெல் மீ ஸ்லோவ்லி" என்று நான் கூற  அந்த அம்மா ஒரு ஊமையிடம் செய்து காட்டுவது போல சைகை காட்டியது இன்றும் நினைவில் இருக்கிறது. 


ஒரு வேலை இந்த ஒரு மனநிலை ஆங்கிலேயர்களிடம் இருந்து வந்ததா என்று தெரியவில்லை. 


அடுத்த பாயின்ட், shallow. அதாவது எல்லாவற்றியும் நுனிப்புல் மேய்வது, ஊன்றி படிப்பதில்லை, மேலோட்டமாக படித்து விட்டு, எனக்கு எல்லாம் தெரியும் என்று ஷோ காட்டுவது. நாம் தெரிந்தது போல காட்டி கொண்டாலும் நம் எதிரில் இருக்கும் அவர்கள் எளிதில் நீங்கள் shallow என்று கண்டு பிடித்து விடுவார்கள் என்று அறியாமல் நடந்து கொள்வது. என்னுடைய நண்பர்கள் இப்படி சொன்ன பிறகு, நம்மை பற்றி எல்லாம் இவர்கள் என்ன நினைத்து இருப்பார்கள் என்று நினைத்து பார்த்தேன். 


அடுத்த இரண்டு பாயின்ட்களும் பற்றி.  ஒரு hierarchy இல்லாமல் எல்லாரும் பொது என்ற மன நிலையில் இந்தியர்கள் எங்காவது வேலை பார்ப்பதை  இந்தியாவில் பார்த்து இருக் கிறீர்களா. ஒரு பாஸ் இருக்க வேண்டும் அவர் முடிவெடுப்பார் அவர் எடுக்கும் முடிவை எல்லாரும் பதில் சொல்லாமல் ஏற்றுகொள்ள வேண்டும். இல்லாவிடில் பாஸ்க்கு கோவம் வந்து விடும். அதனாலேயே நிறைய கீழே வேலை செய்பவர்கள் எதுவும் புதிதாக தொடங்க மாட்டார்கள். இந்த மன நிலையுடன் வளர்க்கப்படும் நாம் எல்லாவற்றிலும் hierarchy எதிர் பார்க்க ஆரம்பித்து விடுகிறோம் என்று நினைக்கிறன்.


 நீங்கள் கொஞ்சம் பெரிய  பொசிசன் வந்த பிறகு உங்களுக்கு கீழே இந்தியர்களை வேலைக்கு எடுத்து அவர்களிடம் வேலை வாங்கும் போது இதனை நிறைய கவனித்து இருப்பீர்கள். அதாவது, அனைவரும் சமம் என்று நீங்கள்நடத்தினால்  உடனே ஒரு கிளாஷ் வந்து விடும், நிறைய backbiting நடக்கும். நம்மிடம் வந்து நிறைய கம்ப்ளைன் செய்வார்கள். அதே, நீங்கள் ஒரு hierachy உருவாகினால் அதிகம் இருப்பதில்லை.  நம்மிடம் தொன்று தொட்டு இருக்கும் காஸ்ட் மற்றும் ஜாதி பிரிவுகளும் நான் பெரியவர் நீ பெரியவர் என்ற ஆதிக்க மனபான்மையுமே இதற்க்கு காரணம் என்று நினைக்கிறன்.



நன்றி

Sunday, April 12, 2015

கட்டாயம் வேணும் டிவிக்கு ஒரு தணிக்கை.


நீங்கள் தொடர்ந்து டிவி பார்பவர்கள் என்றால் ரொம்ப கவனித்து இருக்க வாய்ப்பில்லை.டிவியே பார்க்காமல் அல்லது தமிழ் டிவி பார்க்காமல் பின்னர் ஒரு மாதம் முழுதும் அதை பார்க்கும் படி வைத்தால் என்னவாகும். புது புது விஷயங்கள் கண்டு பிடிப்பீர்கள், வித்தியாசமாக சில விஷயங்கள் தோன்றும் அல்லது ஏன் இப்படி நிகழ்ச்சி நடத்துகிறார்கள் என்று கடுப்பாக  தோன்றும். அப்படி நான் கவனித்த சில விஷயங்கள் இங்கே.

முதலில் நான் கவனித்தது குழந்தைகள் சேனல்ஸ் பற்றியது. இங்கே, நான் முகுந்துக்கு 30 நிமிடம் மட்டுமே டிவி பின்னர் Ipad போன்ற ஸ்க்ரீன் டைம் வைத்து இருக்கிறேன். இதனை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் புத்தகம் படிப்பது, Legos, விளையாடுவது, என்று schedule உண்டு எங்கள் வீட்டில்.

அதே போல டிவி என்றால் PBS தவிர வேறு எந்த சானலும் பார்க்க அனுமதிப்பதில்லை. ஏனெனில் PBS என்பது பப்ளிக் சானெல் விளம்பரங்கள் இருப்பதில்லை, நல்ல தரமான நிகழ்ச்சிகள் மட்டுமே வழங்குகிறார்கள். அதே போல எந்த வித சண்டை, ரத்தம், பாம், குத்து, என்று எதுவும் இருப்பதில்லை.  ஒவ்வொரு ப்ரோக்ராமும் K  என்ற தணிக்கை கொடுக்கப்பட்டது, அதாவது கொடுக்கப்படும் நிகழ்சிகள் அனைத்தும் educational அல்லது குழந்தைகள் பார்க்கலாம் என்று அர்த்தம். திரைப்படங்களும் கே அல்லது PG 13 போன்ற படங்கள் மட்டுமே நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு காண்பிக்கிறார்கள்.

 இப்படி பழகிய முகுந்த்,  இந்திய பயணத்தில் ஓகே, வேறு வழியில்லாமல் பார்க்க  என்று  இருந்த  ஒரே ப்ரோக்ராம் சோட்டா  பீம் மட்டுமே. அதிலும் குத்து, சண்டை என்று உண்டு என்றாலும் மற்ற சிறுவர் சேனல் போல ரொம்ப வயொலேன்ட் இல்லை. கிட்ட தட்ட எல்லா குழந்தைகள் செனெலிலும் எதோ ஒரு குத்து, சண்டை செய்யும் கதை மாந்தர் இருக்கிறார். அவர் சூப்பர் ஹீரோ போல காண்பிக்க படுகிறார். லீவு நேரங்களில் கிட்ட தட்ட எல்லா குழந்தைகளும் டிவி பெட்டியே கதி என்று இருகிறார்கள். ஒரு ப்ரோக்ராம் முடிந்து மற்றொன்று. சில நேரங்களில் பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் யார் ரிமோட் வைத்து கொள்ளுவது என்று சண்டை எல்லாம் நடக்கிறது. educational என்று துளியும் இல்லை, அல்லது நான் பார்த்த சானலில் இல்லை. போகோ, சுட்டி, நிக் என்று அனைத்து சேனல்களும் கிட்ட தட்ட ஒரே போல கதை ஒன்று வைத்து இருக்கிறார்கள்.

டிவிக்கு தணிக்கை என்று எதுவும் இருப்பதில்லை என்பதால் டிவிக்கள் மூலம் அரங்கேற்றபடும் எல்லா கேட்ட விசயங்களும் நம் குழந்தைகளுக்கு காண கிடைகின்றன. நான் பார்த்தவரை, நிறைய பெற்றோர் பெரியவர்கள் நிகழ்சிகளை குழந்தைகள் காண அனுமதிகிறார்கள். நிறைய, கத்தி, ரத்தம், குத்தாட்டம் என்று சர்வமும் இருக்கிறது.

பின்னர் நான் ரொம்ப கடுப்பானது, பெண் தமிழ் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பற்றியது. ஏன் இப்படி இருக்கிறார்கள் இவர்கள் ?
கெக்கே பிக்கே என்று ஏதாவது ஒன்று உளறி கொண்டு டிப்ஸ் தருகிறேன் பேர்வழி என்று பினாத்தி கொண்டு. ஐயோ சாமி. "Have some  dignity girls!" என்று சொல்ல தோன்றியது. அதே போல தற்போது எல்லா சானல்களும் டிவி தொகுப்பாளர்கள் வைத்து ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். அதில் பங்கு பெரும் பெண் தொகுப்பாளர்கள் எப்போதும் படு "dumb " ஆக இருப்பது ஏன்  என்று தெரியவில்லை. உண்மையில் அவர்கள் இப்படி தானா அல்லது ப்ரோக்ராமுக்காக இப்படி நடிகிறார்களா என்று தெரியவில்லை. Connexion என்று ஒரு நிகழ்ச்சி, அதில் எப்போது ஒரு பெண் தொகுப்பாளர்கள் அல்லது சீரியல் நடிகைகள் வந்தாலும் சின்ன சின்ன விசயங்கள் கூட தெரியாமல் விழிக்கிறார்கள். "ஏம்மா இது கூட தெரியலையா" என்று நிகழ்ச்சி நடத்துபவரே பல தடவை கேட்கிறார். இப்படி தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா, அல்லது இப்படி நடிங்கள் என்று சொல்லி தருகிறார்களா என்று தெரியவில்லை.


 ஒரு மாத பெரியவர்கள் தமிழ் டிவி அனுபவத்தில் நான் பார்த்தது, தமிழ் தொலைகாட்சிகளில் அதிகம் செல்லுபடியாவது 1. சினிமா 2. சீரியல் மற்றும் 3. sensational நியூஸ். கிட்டத்தட்ட இவை அனைத்திலும்ஆபாசம் நிறைந்துஇருக்கிறது.  சிறுவர்கள் டிவியில் நிகழ்ச்சிகளில் அறிவை, அல்லது பழக்கவழக்கத்தை கற்றுகொடுப்பது போல எதுவும் இல்லை, அல்லது நான் பார்த்தவரை இல்லை.

கட்டாயம் வேணும் டிவிக்கு ஒரு தணிக்கை.

நன்றி.


Saturday, April 11, 2015

சென்யோரிட்டா, லோலிட்டா, போனிட்டா, காசோலினா ..

என்ன இது எல்லாம் என்று கேட்பவர்களுக்கு, இவைகளெல்லாம் நம் தமிழ் படத்தில் வரும், தொடக்க  பாடல் வரிகள். இவற்றின் ஒரிஜினல் ஸ்பானிஷ், போர்துகீஸ் மற்றும் ரஷ்யன் மொழியில்.

நம்ம ஊரில் நான் இருந்த வரை இப்படி ஏதாவது புதுசா வார்த்தைகள் வந்துட்டே இருக்கும், அதுவும் நான் கல்லூரியில் படிக்கும் போதெல்லாம், என்னுடன் படித்த மற்றவர்கள் புதுசு புதுசாக நிறைய சொல்வார்கள். அவர்கள் சொல்வதற்கு என்ன அர்த்தம் என்று எனக்கு தெரியாது என்றாலும், கேட்க்க தைரியம் இருக்காது. எங்கே ஏதாவது கேட்க போய் அவங்க எனக்கு எதுவுமே தெரியாது என்று நினைத்து விடுவார்களோ, என்று நினைத்து கேட்க மாட்டேன். நம்முடைய நாட்டில் பல மொழி, பல கலாச்சாரம் இருப்பதால் வெளி மாநில மக்கள் வர வர அவர்களுக்கு உரிய வார்த்தைகள் எல்லாம் நம்முடைய மொழியில் கலந்து மக்களிடம் கலந்து விடுகிறது. மக்களும் அதன் அர்த்தம் முழுமையாக தெரியாவிட்டாலும் பயன் படுத்த ஆரம்பிப்போம்.

உதாரணமாக, எனக்கு இப்போது கூட புது வார்த்தையாக இருந்தது "போங்கு" என்ற வார்த்தை. நிறைய பேர் உபயோகிறார்கள். ஆனால் உண்மையில் அதன் அர்த்தம் என்ன என்று எனக்கு முதலில் கேட்ட போது தெரியவில்லை. மதுரை பக்கம் எல்லாம் ரொம்ப "ஜூ" விடாத என்று சொல்வார்கள். அதற்கும் என்ன அர்த்தம் என்று தெரியவில்லை அப்போது..ஆனால் அர்த்தம் தெரியாமல் நிறைய நானே உபயோகித்து இருக்கிறேன். என்னுடைய கணவரிடம் , முதலில் நான் ஜூ என்ற வார்த்தையை அவரிடம் சொன்ன போது  அவர் அதற்க்கு என்ன அர்த்தம் என்று கேட்டார். எனக்கு உண்மையில் அர்த்தம் தெரியாததால் "ஷோ" காட்டுறது என்று சொல்லி வைத்தேன். ஏனெனில் நிறைய வார்த்தைகள் நாம் காண்டக்ஸ்ட் வைத்தே அர்த்தம் அறிகிறோம்.

இப்படி எல்லா வார்த்தையையும் அதன் அர்த்தம் என்ன என்று தெரியாமல் அடுத்தவர்கள் உபயோகிகிரார்களே, நாமும் உபயோகிப்போம் என்று உபயோகிக்கிறோம். உண்மையில் அதன் அர்த்தம் என்னவென்று தெரிந்தால் இப்படி எல்லா நேரமும் உபயோகிப்போமா என்று தெரியாது.

அர்த்தம் தெரியவில்லை என்றால் கேள்வி கேள், "There is no such thing as dumb question" என்று என்னுடைய ஆராய்ச்சி கைடு சொல்லும் வரை எதனை பற்றியும் கேள்வி கேட்க எனக்கு தைரியம் வந்ததில்லை. இப்போது எல்லாம் அர்த்தம் தெரியாமல் எந்த வார்த்தையும் நான் உபயோகிப்பதும் இல்லை, எந்த கேள்வியும் கேட்க்க தயங்குவதும் இல்லை.

சரி இப்போது தலைப்புக்கு வருவோம்.சென்யோரிடா என்றால் கன்னிப்பெண் என்று ஸ்பானிஷ் மொழியில் அர்த்தம். மிஸ் என்பதை சென்யோரிடா என்று அழைகிறார்கள் . பரவாயில்லையே, நம்ம ஊர் கவிஞர்கள் எல்லாம் அடுத்த நாட்டு மொழியையும் எடுத்து எப்படி உபயோகிகிறார்கள் என்று சந்தோஷ படாதீர்கள்.

ஏனெனில் "லோலிடா" என்ற தொடங்கும்  பாட்டு  ஒன்று கேட்க நேர்ந்தது. உண்மையில் அதன் அர்த்தம் என்னவென்று தெரிந்து தான் இதனை உபயோகித்தார்களா என்று தெரியாது. ஏனெனில் லோலிடா என்பது ரஷிய எழுத்தாளர் Vladimir Nabokov அவர்களின் நாவலில் வரும் ஒரு கதை மாந்தர் பெயர். உண்மையில் அதன் அர்த்தம் என்னவென்றால் "a sexually precocious young girl" என்பது. யாரையும் லோலிடா என்று அழைத்து விடாதீர்கள், அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரிந்து, அப்படி அழைத்தீர்கள் என்றால் உங்களை சும்மா விட மாட்டார்கள். 

அதே போல, பொனிட்டா, கசொலினா என்று ஒரு பாட்டு கேட்டேன். பெனிட்டா என்றால் pretty, cute போன்ற அர்த்தம் வரும். ஆனால் காசொலினா என்றால் ஸ்பானிஷ் மொழியில் பல அர்த்தங்கள் அதுவும் காண்டக்ஸ்ட் பொறுத்து மாறும், முக்கியமாக கோகனே, போன்ற போதை பொருள்கள் ஒரு அர்த்தம் என்றால், அசிங்கமான சில பல அர்த்தங்களும் லோக்கல் உபயோகத்தில் உண்டு. இதெல்லாம் பாட்டு எழுதுபவர்களுக்கு தெரியுமா இல்லை சும்மா உபயோகிப்போமே என்று உபயோகிகிறார்களா என்று தெரியவில்லை.

ஊருக்கு சென்றிந்த போது பல சிறு குழந்தைகள் இந்த பாட்டை பாடுவதை கேட்டு இருக்கிறேன், அர்த்தம் தெரிந்தால் இப்படி பாடுவார்களா அல்லது பெற்றோர் பாட அனுமதிப்பார்களா, என்று எனக்கு சந்தேகமாக இருந்தது.
நம்முடைய குழந்தைகளை பிறர் செய்கிறார்கள் அதனால் இவர்களும் செய்யட்டும் என்று ஒரு ஆட்டு மந்தை கூட்டமாக மாற்றாதீர்கள். நிறைய கேள்வி கேட்க வையுங்கள், உங்களுக்கும் தெரியவில்லை என்றால் அர்த்தம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் இருக்கவே இருக்கிறது கூகிள்.  


நன்றி.



Friday, April 10, 2015

மக்களை பிடித்தாட்டும் ஷாப்பிங் மோகம்



இந்திய பயணத்தில் நான் கண்ட இன்னொரு நெருடலான விஷயம், மக்களின் ஷாப்பிங் மோகம். தங்களிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ, அதை பற்றி என்ன கவலை, இருக்கவே இருக்கு கிரெடிட் கார்டு, எடுத்து செலவு செய்வோம் பின்னால பணம் கொடுத்துக்கலாம். இது தான் இப்போ எல்லா இடத்திலையும் பேஷன். கொஞ்சம் வேலைக்கு போய் கையில பணம் புரள ஆரம்பிச்சவுடன், நம்மை சுண்டி இழுப்பது இந்த ஷாப்பிங் தான். இதற்காகவே காத்திருந்தது போல எங்கு பார்த்தாலும் ஆபர், 25% தள்ளுபடி, 50 % தள்ளுபடி என்று எல்லா கடைகளும் அறிவிக் கின்றன.   பல நேரங்களில் peer பிரஷர் தான் இதற்க்கு காரணம் என்றாலும் கண்ணு மண்ணு தெரியாமல் சிலர் ஷாப்பிங் செய்வது சில நேரங்களில் பயத்தை தருகிறது. மதுரை மக்கள் கொஞ்சம் கோன்செர்வடிவ் என்று நினைத்து இருந்தேன், சென்னை அல்லது பெங்களூர் மக்கள் போல பணத்தை தண்ணியாக செலவைக்க மாட்டார்கள் என்று. ஆனால் இந்த முறை அந்த எண்ணத்தை மாற்றி கொண்டு விட்டேன். மற்ற விசயங்களில் எப்படியோ தெரியவில்லை ஆனால் மதுரையில் துணிக்கடைகளிலும், நகை கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. தேவையோ தேவையில்லையோ நிறைய வாங்குகிறார்கள். நான் சென்ற நேரம் ஆப்-சீசன் அப்போதே போத்தீஸ், ராஜ்மஹால்  போன்ற கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றால், சீசன் நேரங்களில் எப்படி இருக்கும் என்று  யோசித்து கொண்டேன்.  என் அம்மா சொன்னது போல, ஆடி மாசம் எல்லாம் துளி கூட இடம் இருக்காது போல.

இன்னொரு விஷயம் எனக்கு பெரும் குழப்பமாக இருந்தது, பெண்கள் வாங்கும் புடவைகள். கிட்ட தட்ட அனைவரும், ஸ்டோன் வொர்க் அல்லது ஜிமிக்கி வொர்க்ஸ் வைத்த புடவைகள் வாங்குகிறார்கள். அதனை சாதாரண சலவை செய்ய முடியாது, வாஷிங் மெசினில் போடவே முடியாது. டிரை வாஷ் தான் செய்யமுடியும் என்று சொல்லியே விற்கிறார்கள். எத்தனை பேருக்கு டிரை வாஷ் ஒவ்வொரு முறையும் செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் பெண்கள் அதனையே வாங்குகிறார்கள். எனக்கு உண்மையில் இவர்கள் அந்த புடவையை எப்படி துவைப்பார்கள்  என்றே சந்தேகம் வந்து விட்டது.

அடுத்த ஷாப்பிங் இப்பொழுதெல்லாம் ஏசி, டிவி, வாஷிங் மெசின், போன்ற வீட்டு உபயோக பொருள்கள் வாங்குவது. எல்லா கடைகளிலும் கிட்ட தட்ட தவணை அல்லது இன்ச்டல்மென்ட் தருகிறார்கள். வீட்டுக்கு தேவையோ இல்லையோ, கரண்ட் இருக்கிறதோ இல்லையோ, நம்மால் கடன் கட்ட முடியுமோ இல்லையோ, எல்லாரும் இதனை வாங்குகிறார்கள் பொருத்தி வைக்கிறார்கள். 


இது இந்திய நிலை மட்டும் அல்ல, இங்கும் மக்கள் நிறைய ஷாப்பிங் செய்கிறார்கள், அதுவும்  இங்கே பேமஸ்,ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது. அது டாய்லெட் பேப்பரில் இருந்து காஸ்ட்லி டிவி வரை எல்லாமே ஆன்லைனில் செய்கிறார்கள். அமேசான், ebay போன்ற சில ஆன்லைன் ஷாப்பிங் சைட் கள் வித வித ஆபர் போட்டு  மக்களை வசீகரிக்கிறார்கள், தினமும் ஒரு பொருளை வாங்குவது அல்லது வாரத்திற்கு ஏதேனும் ஒரு பொருளை வாங்குவது என்று நிறைய பேர் செய்கிறார்கள். இப்போது துணிமணியில் இருந்து, தோடு ஜிமிக்கி வரை எல்லாம் ஆன்லைனில் கிடைகிறது. அதற்காகவே நிறைய தேடு தேடு என்று ஆன்லைனில் தேடுகிறார்கள் மணிகணக்கில் தேடுகிறார்கள். அமேசன் அக்கவுண்ட் இல்லை எனக்கு என்று சொன்னால் அவரை ஒரு ஜந்துவை போல பார்பவர்கள் அதிகம். 

இதனை போன்ற மோகத்தால் அதிகம் பயனடைபவர்கள், வியாபாரிகள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனத்தினர் மட்டுமே. தேவைக்கு அதிகமாக இதனை போன்ற ஒரு ஷாப்பிங் மோகம் தேவையா என்று தெரியவில்லை.

நன்றி.

Thursday, April 9, 2015

இந்தியா ஒரு முரண்பாடுகளின் மூட்டை!

கருத்து கருத்துன்னு எல்லாரும் கருத்து சொல்லிட்டே இருக்காங்க. ஒரு கருத்து சொல்லவேண்டியது,  பின்னாடி அதை எதிர்த்து நூறு பேரு கருத்து சொல்ல வேண்டியது,  ஒரு வாரம் பத்து நாலு முழுக்க டிவி, ரேடியோ, முகநூல், ட்விட்டர் , பதிவுலகம் எல்லாத்திலையும் அதையே பேசி பேசி கொல்ல வேண்டியது..இது ஒரு ட்ரெண்டு மாதிரி ஆகிடுச்சு.
 அதனாலதானோ என்னவோ இந்தியாவை கருத்தரங்கங்களை நேசிக்கும் நாடுன்னு சொல்றாங்க.

அதுவும் கருத்து சொல்ல ஆரம்பிகிறது யாருன்னா பார்த்த, நூறு கோடி இந்திய ஜனத்தொகையில ஒரு பெர்சென்ட் கூட இல்லாத ரொம்ப ரொம்ப பணக்காரங்க , நடிகைகள் அல்லது அரசியல்வாதிகள். போன்ற நிறைய கருத்து கந்த சாமிகள் அல்லது கந்த மாமிகள் இருக்காங்க இதை போல கருத்து சொல்ல.இவங்க மெயின் ஆ எடுக்கிற தலைப்பு என்னான, கந்த சாமிங்களா இருந்தா, ஜாதி, மதம், இல்லாட்டி எதை சாப்பிடனும், எப்படி வாழனும் இல்ல எத்தனை புள்ளைங்க பெத்த்துகனும், பொண்ணுங்க எப்படி இருக்கணும், சமுதாயம் எப்படி இருக்கணும் அப்படின்னு ஒரு பொது லிஸ்ட் இருக்கும் ......கந்த மாமிங்கன்ன, இருக்கவே இருக்கு கற்பு, பெண்ணுரிமை...இதை வச்சே நாங்க ஒட்டிடிடுவோம்ல. அட போங்கப்பா!.

இதில என்ன ஜோக்குன்னா, இந்த மாதிரி கருத்து சொல்ல வர்றவங்க எல்லாரும் இன்ஸ்டன்ட் க்ராடிபிகேசன் மாதிரி 15 நிமிட புகழுக்கு, நாமலும் நியூஸ்ல வந்தோம்ல அப்படின்னு காட்டிகிறதுக்கு நிறைய செய்யிறாங்க.ஒரு வாரம், பத்து நாலு பின்னால வேற வேலைய பார்க்க போயிருவாங்க நம்ம மக்கள். நம்ம மக்களுக்கு ஞாபக மறதி ரொம்ப ஜாஸ்தி. இவங்க சொல்ல வர்ற கருத்து எத்தனை நாளுக்கு நினைப்புல இருக்கும், அதனால என்ன பிரயோஜனம் அப்படின்னு எல்லாம் யாருக்கும் கவலை இல்லை. அட்லீஸ்ட் நீங்க சொல்ல வர்ற கருத்து பெரும்பாலான மக்களின் கருத்து அப்படின்னாலும் சரி, அவன் அவன் ஒரு வேலை சாப்பாட்டுக்கு இங்க உயிரை கொடுத்து உழச்சிகிட்டு இருக்கான். பொண்ணுங்க, ஒழுங்கா வேலை முடிஞ்சு வூடு போய் சேருவமான்னு பயந்துகிட்டு இருக்காங்க, இதுங்க எல்லாம், ஏசி ரூம்ல உக்கார்ந்துட்டு, கால் மேல காலை போட்டுக்கிட்டு இப்படி கருத்து சொல்லுறாங்க. 

இதுல என்ன ஜோக்குன்னா, எப்படி இந்த மாதிரி கருத்து சொல்லுறவங்க சும்மா டைம் பாஸுக்கு செய்யிரன்களோ, அதை விட அதை மறுத்து சொல்லுறவங்க தான் வரிஞ்சு கட்டிட்டு பதில் சொல்லுவாங்க. அதுவும் கந்த மாமிகள் கருத்துன்னா, உடனே, அதை ஆதரித்து வர்ற கருத்துகளை விட, எதிர்த்து கருத்து சொல்லுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருப்பாங்க. எப்படி பெண்ணுரிமை  பத்தி அப்படி கருத்து சொல்லலாம். பெண்ணுரிமைன்னா என்னன்னு தெரியுமா, இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும், அப்படி இருந்தா தான் பெண்ணுரிமை...அப்படின்னு ஆரம்பிப்பாங்க பாருங்க, அயோ சாமி, இதுக்கு கருத்து கந்த மாமிகளே தேவலை அப்படின்னு தோணும்.

தீபிகா படுகோன் அப்படிங்கிற ஒரு அம்மா, எதோ பெண்ணுரிமை பத்தி ஒரு வீடியோ விளம்பரம்செய்திருந்தாங்களாம் .அதை  பல வட இந்திய சகோதரிகள் தங்கள் வலைத்தளம் மற்றும் முகநூலில் பகிர்ந்திருந்தாங்க. அதுல பாதி பேர் அவங்க செய்தது சரி, அப்படின்னு சொல்ல அதற்கு சண்டை போடா ரெடி ஆ பலர் கமெண்ட் அடிக்க...சரி குழம்பம். 

அதில அந்த அம்மா சொல்லுறது எல்லாம் கிரீமி லேயர் அப்படின்னு சொல்லபடுற பல பெண்களுக்கே பொருந்துமான்னு தெரியல, இதில எங்க பெரும்பாலான பொண்ணுங்களை பத்தி பேசுவது. இன்னும் பெரும்பாலான பொண்ணுங்களுக்கு எவ்வளவு படித்திருந்தாலும் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை கூட தானே தேர்ந்தெடுக்கும் உரிமை கூட கொடுக்க படுவதில்லை, கொஞ்ச நாளைக்கு முன்னால, முகநூலில் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது, அதில் பொது இடம் என்றும் பார்க்காமல் ஒரு அப்பா தன் படித்த, வேலை பார்க்கும் மகளை அடித்து கொண்டிருந்தார், சுற்றி நின்று பலரும் வேடிக்கை பர்ர்த்து கொண்டிருந்தார்கள். அந்த பெண் யாரையோ விரும்பி இருக்கிறாள், அதனை பிடிக்காத அப்பா எப்படி நாடு ரோடில் வைத்து அடித்து இருக்கிறார்.  இது தான் நாட்டுல இருக்கிற பெரும்பாலான பொண்ணுங்களோட நிலைமை. 

ஆனா,அந்தம்மா சொல்லுறது போல இல்லவே இல்லை அப்படின்னும் நான் சொல்ல மாட்டேன். அப்படி சொன்னேன்னா நான் ஒரு utopia வாழ்க்கை வாழுறன் அப்படின்னு அர்த்தம். நிறைய மெட்ரோ சிட்டில இதெல்லாம் ரொம்ப சாதாரணம். இல்லைன்னு யாரும் மறுக்க முடியாது. ஆனா, அவங்க 0.0005% பொண்ணுங்க தான், அவங்களை வச்சி எல்லாரும் இப்படி தான் அப்படின்னு பொதுபடுத்த முடியாது. 

முதல்ல பொண்ணுங்களுக்கு மனசில இருக்கிறதை பேசுறதுக்கு, தன்னோட கருத்தை தைரியமா தெரிவிக்கிரதுக்கு, முடிவெடுக்கிறதுக்கு, சுதந்திரம் கொடுங்க..அதுவே பெண்ணுரிமைக்கு முதல் படி.  அதை விட்டுட்டு அந்த அம்மா சொன்னது தப்பு, பொண்ணுங்க இப்படி தான் இருக்கணும் அப்படி இருக்க கூடாது அப்படின்னு அட்வைஸ் பண்ணாதீங்க. எப்படி உங்களுக்கு இது தப்புன்னு சொல்ல சுதந்திரம் இருக்கோ அதே போல அந்த அம்மாவுக்கு கரெக்ட்ன்னு தோணுறதை அவங்க சொல்லுறாங்க. பேச்சு சுதந்திரம் முதல்ல கொடுங்க. 

நன்றி

Wednesday, April 8, 2015

இன்ஸ்டன்ட் நூடுலேஸ் என்ன செய்யும் உங்கள் உடலுக்கு?

Maggi, சன்பீஸ்ட்,  Ching's, Ramen என்று வித வித நூட்லஸ் விளம்பரங்கள். இது ஹெல்தி, இது ஹோல் வீட் என்று வேறு சப்பை கட்டு. கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கட்டாயம் சாப்பிடுகிறார்கள். வேகமாக வேலை முடிவது, பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு நல்ல டிபன் என்று பல தாய்மார்களும் செய்து தருகிறார்கள். ஆனால் அது உண்மையில் ஹெல்தியா என்று யாரும் சிந்திப்பதில்லை. Massachusetts General Hospital ஐ சேர்ந்த டாக்டர்  Dr. Braden Kuo அவர்கள் செய்த இன்ஸ்டன்ட் நூடல்ஸ் ஆய்வின் முடிவை பாருங்கள். 

எப்படி இன்ஸ்டன்ட் நூடுல்களை செரிக்க வைக்க குடல் என்ன பாடு படுகிறது என்று கீழ்க்கண்ட வீடியோ தெரிவிக்கிறது.







இன்ஸ்டன்ட் நூடுல்கள் பல நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்க tertiary-butyl hydroquinone (TBHQ) என்னும் ஒரு நச்சு தன்மை உள்ள ப்ரிசெர்வேடிவ் சேர்கிறார்கள். இது நம் குடலுக்குள் செல்லும் போது குடலில் செரிக்க வைக்க சுரக்கப்படும் வேதிப்பொருள் களால் இந்த TBHQ வை செரிக்க வைக்க இயலாது, அதனால் இந்த நூடுல்கள் செரிக்கபடாமல் மற்ற பொருள்களையும் செரிக்க விடாமல் எள்ளது உடல் சத்துகளை உறிஞ்ச விடாமல் கெடுகிறது.


TBHQ என்பது ஒரு பெட்ரோலியம் பை ப்ரொடக்ட். வேறு எந்த எந்த பொருள்களில் எல்லாம் இது சேர்க்கபடுகின்றது என்று தேடியபோது கிடைத்த செய்திகள் தலை சுற்றியது. McDonald கடைகளில் கிடைக்கும் சிக்கன் nuggets, Kellogg’s CHEEZ-IT crackers, Reese’s peanut butter cups, Wheat Thins crackers, Teddy Grahams, Red Baron frozen pizza மற்றும் டகோ பெல் பீன்ஸ் என்று தெரிந்த ஐடம்ஸ் அனைத்தும் இந்த TBHQ பதபடுத்தும் பொருளை உபயோகிகிறார்கள்.


இன்னும் என்ன இந்த இன்ஸ்டன்ட் நூட்லஸ் செய்யும் என்று பாருங்கள். ஜர்னல் ஆப் நியூட்ரிசன் ல் வெளிவந்த கட்டுரையின் படி(1), அதிகமாக அதாவது வாரத்திற்கு இரண்டு முறைக்கு அதிகமாக இன்ஸ்டன்ட் நூட்லஸ் சாப்பிடும் பெண்களுக்கு  metabolic syndrome எனப்படும் ஹார்மோன் குறைபாடுகள் வரலாம் என்று கூறுகிறது. அதித எடை, அதிகரிக்கும் ரத்த அழுத்தம்,  அதிகரிக்கும் ரத்தத்தில் சக்கரை அளவு மற்றும் சக்கரை வியாதி


இன்ஸ்டன்ட் நூட்லுஸ் சாப்பிடுவோர் protein, calcium, phosphorus, iron, potassium, vitamin A, niacin,மற்றும்  vitamin C போன்ற உடலுக்கு அத்திவசியமான ஊட்ட சத்துகள் எதனையும் பெறுவதில்லை. அவர்கள் பெறுவது எல்லாம் அதிக உப்பு (கிட்ட தட்ட 2700 மில்லி கிராம் அளவு) மற்றும் அதிக ஆபத்தான கொழுப்புகள் மட்டுமே. இவை ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனை தவிர இந்த இன்ஸ்டன்ட் நூட்லஸ்களில் நிறைய MSG அல்லது அஜினோமோடோ வேறு உண்டு.


சிறு வயதில் இருந்து இன்ஸ்டன்ட் நூட்லுஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு  அதிக எடை, சக்கரை வியாதி அல்லது ரத்த அழுத்த  பிரச்சனைகள் வரலாம்.


நூடல்ஸ் ஒரு சத்து இல்லாத அன் ஹெல்தி உணவு, முடிந்த வரை இதனை சாப்பிடுவதை தவிருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்காதீர்கள்.


நன்றி.



Reference
(1) Instant Noodle Intake and Dietary Patterns Are Associated with Distinct Cardiometabolic Risk Factors in Korea
J. Nutr. 2014 144: 1247-1255first published online June 25, 2014.

Tuesday, April 7, 2015

Technology addiction என்னும் ஒரு குட்டிச்சாத்தான்.

சமீபத்தில் டெலி கிராப் இதழில் ஒரு  கட்டுரை படிக்க நேர்ந்தது, அதன் சாராம்சம் இது தான். "மொபைல் போன்கள் குடும்ப உறவுகளை சிதைகிறது" என்பதே. அதே போல இன்னொரு bbc கட்டுரை, எப்படி எல்லாரும் எப்போதும் போன்களை பார்த்துகொண்டு இருக்கிறார்கள், அருகில் இருக்கும் ஆட்கள் கூட தெரியாமல் என்று சொல்கிறது.



All images subject to copyright - Babycakes Romero.

கடந்த பத்து பதினைந்து  வருடங்களில் நீங்கள் கவனித்து பார்த்தீர்கள் என்றால் நிறைய மாற்றங்கள் நமக்கு தெரியாமல் நடந்து இருக்கும். ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரை நிறைய பேர் கையில் செல் போன் இருந்ததில்லை. ஸ்மார்ட்போன்இல் எப்போதும்  ipad, ipod, skype, facebook, வாட்ஸ் அப், வைபர், ட்விட்டர்,  ப்ளாக் என்று பைத்தியம் பிடித்து அலைந்ததில்லை.  அதே நினைவாக எப்போதும் இருக்கும் பலரை பார்த்து இருக்கிறேன். கை நடுங்கும் அளவு கூட சிலருக்கு இருக்கும். இது ஒரு வகை அடிக்சன்.

எப்பொழுதும் போன்களை பார்ப்பது, எதாவது மெசேஜ் வந்திருக்கிறதா என்று செக் செய்வது, அல்லது வாட்ஸ் அப்பில் யார் எதனை ஷேர் செய்திருகிறார்கள் என்று பார்ப்பது, எத்தனை பேர் நம்முடைய முகநூல் பக்கத்தை லைக் செய்திருக்கிறார்கள் என்று பார்ப்பது. அல்லது எத்தனை பேர் நம்மமுடைய பிளாக் ஐ வாசித்திருக்கிறார்கள் என்று பார்ப்பது......இப்படி சொல்லி கொண்டே போகலாம். என்னுடைய இந்திய பயணத்தில் நானே இதனை கண் கூடாக உணர்ந்தேன். செல் போனை அணைத்து வைக்க வேண்டி இருந்த போது  எதோ கை ஒடிந்தது போலஇருந்தது எப்படி நான் ஒரு Technology அடிக்ட் ஆகி இருக்கிறேன் என்று காட்டியது. எதோ இழந்தது போல ஒரு உணர்வு வருவதை தவிர்க்க முடியவில்லை. நல்ல வேலையாக தற்போது  அந்த அடிக்சனில் இருந்து வெளி வந்து விட்டேன்.

இதே போன்ற ஒரு அடிக்சன் , நான் சீரியல் பார்க்கும் பெண்களிடமும் தற்போது ஆண்களிடமும் கூட காண்கிறேன்.  அதுவும் இந்தியாவில் இது கிட்ட தட்ட ஒரு பைத்தியம் போல ஆகி விட்டது. 7 மணி முதல் 11 மணி வரை, தொடர்ந்து சீரியல்கள், அதுவும் பெரும்பாலான சீரியல்கள் ஒரே கதை கொண்டவை, எப்படி பெயர்களையும், கரெக்டேர்களையும் நினைவில் வைத்து இருக்கிறார்களோ தெரியவில்லை. எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது என்னவென்றால், அம்மாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றிருந்த பொது அருகில் அடிபட்ட நிலையில், கால்கட்டு போட்டு இருந்த ஒரு அம்மா, அருகில் இருக்கும் இன்னொரு அம்மாவிடம் "ரெண்டு நாள் ஆச்சு நாதஸ்வரம் பார்த்து, என்ன ஆச்சு அதில ?" என்று ரொம்ப அக்கறையா விசாரித்து கொண்டிருந்தார்கள்.  என்ன சொல்வது என்று எனக்கு தெரியவில்லை.

இப்படி technological addiction என்பது கோகனே போன்ற போதை பொருள் அடிக்சன் போன்றது என்று இங்கு சொல்கிறார்கள். முக்கியமாக முகநூல் அடிக்சன் பற்றி இவர்கள் இப்படி குறிப்பிடுகிறார்கள். இளைஞர்கள் மிக முக்கியமாக இதனை போன்ற ஒரு addictionக்கு ஆளாகி இருக்கிறார்கள். cold turkey எனப்படும் ஒரே நாளில் தூக்கிஎறிந்து  விட்டு, இனி எப்போதும் திரும்பி பார்ப்பதில்லை என்றுகைவிடும்  வரை இது ஒரு குட்டிச்சாத்தான் தான்.

நன்றி.


Monday, April 6, 2015

ஆடம்பரங்கள் ஆகும் திருமணங்கள்!

ஆயிரங்காலத்து பயிர், சொர்க்கத்தில் நிச்சயிக்கபடுகிறது, என்றெல்லாம் சொல்லப்படும் திருமணங்கள் இப்போது ஸ்டேட்ஸ் சிம்பல் ஆகிவிட்டன. அதாவது ஒருவர் எப்படி தன் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணம் நடந்துகிறார் என்பதை வைத்து அவர் புது பணக்காரரா அல்லது மிடில் கிளாஸ், அல்லது பணக்காரரா என்று கணிக்க முடியும்.

உதாரணமாக, இப்போதெல்லாம் திருமணம் மாதிரியே நிச்சயதார்த்தம் நடத்துகிறார்கள். பத்திரிக்கை அடித்து, மஹால் பிடித்து, ப்ளெக்ஸ் பானேர் வைத்து, சாப்பாடு போட்டு, போட்டோ வீடியோ எடுத்து etc etc. இது ஒரு ஸ்டேட்ஸ் சிம்பல் ஆகி விட்டது.நிச்சயதார்த்த விழாவிற்கு உங்களை  வரவேற்கிறோம் என்று ஊர் முழுக்க ப்ளெக்ஸ் பானர்கள் அதிலும் இப்பொழுதெல்லாம் மணமகன் மணமகள் போட்டோ கூட ஒரு ஓரத்தில் தான் இருக்கும் மற்றவர்கள் போட்டோ தான் அடைத்து கொண்டு இருக்கிறது. அதுவும் வித வித போஸ்களில். கூலிங் க்ளாஸ் கண்ணாடி போட்டு அல்லது செல் போன் பேசுவது போல என்று பல பார்க்க காமெடியாக இருக்கும். அப்பாவி போல சில நேரம் மணமகளும், மணமகனும் போஸ் கொடுத்து நிற்பார்கள். இப்பொழுதெல்லாம் ப்ளெக்ஸ் பானர் திருமணங்கள் என்றால் யாரோ ஒரு புது பணக்காரர் அல்லது மிடில் கிளாஸ் ஒருவர் தன மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணம் நடத்துகிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

அதே போல, திருமண நிகழ்ச்சியும் ப்ளெக்ஸ் பானர்களால் நிரம்பி வழியும்.  ஒரு சில குடும்பங்களில் , பழக்க வழங்கங்களில் மாப்பிளை அழைப்பு எல்லாம் இருப்பதில்லை, ஆனால் இப்போதெல்லாம் நிறைய குடும்பங்கள் இதை செய்கிறார்கள். அதே போல மெகந்தி என்பதெல்லாம் இருந்ததில்லை, அது வட நாட்டு திருமணங்களில் செய்து பார்த்து இருக்கிறேன், நம் ஊர்பக்கம் எல்லாம்  மருதாணி போட்டு பார்த்து இருக்கிறேன், ஆனால் இப்போது மெகந்தி என்பது ஒரு கட்டாயம் ஆகி விட்டது. மணமகள், மணமகள் தோழிகள், அம்மா, சித்தி, அத்தை என்று எல்லோரும் மெஹந்தி போட்டு கொள்கிறார்கள்.
அதே போல கல்யாண பட்டு புடவை, அது எத்தனை விலை என்று சொல்வதில் ஒரு ஸ்டேட்ஸ். எத்தனை பெண்கள் அந்த புடவையை தொடர்ந்து கட்டி கொண்டிருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனாலும் பணத்தை கொட்டி வாங்குகிறார்கள். அதனை பெருமையாக சொல்கிறார்கள்.

அடுத்து பெரிய ஸ்டேடஸ் சிம்பல் என்பது எத்தனை நகை போட்டு கல்யாணம் என்பது. , மணப்பெண் போட்டிருக்கும் நகை தவிர, அவர்களின் சொந்தங்கள் அல்லது மணமகன் சொந்தங்கள் போட்டிருக்கும் நகை புடவை எல்லாம் பார்க்க டிசைன் டிசைன் ஆக இருக்கும், ஆளை தூக்கும். ஒரு நகை போடாமல் அல்லது இமிடேசன் நகை போட்டு கல்யாணத்திற்கு சென்றால் அவர்களை இந்த ஆடம்பர மக்கள் பார்க்கும் பார்வை ஒரு ஈனப்பிறவியை பார்ப்பது போல இருக்கும். நகை விலை எவ்வளவு ஏறினாலும் நம்ம ஊர் மக்களின் நகை மோகம் மட்டும் குறையும் போல தெரியவில்லை. அதுவே பெரிய ஸ்டேடஸ் சிம்பல் ஆகி விட்டது.

அடுத்த ஸ்டேடஸ் சிம்பல் சாப்பாட்டு, இப்போதெல்லாம் பிரியாணி சாப்பாடு அல்லது கறி சாப்பாடு, கல்யாண சாப்பாடாக போடுகிறார்கள். நிறைய சாப்பாடு செய்து உபயோகிக்காமல் வீணாக்குகிறார்கள்.

அதே போல பாச்சுலர் பார்ட்டி இல்லாமல் இந்தியாவில் நிறைய திருமணங்கள் நடப்பதில்லை. இது  மணமகன் தன நண்பர்களுக்கு "தண்ணீர்" பார்ட்டி கொடுப்பது தான்  "பாச்சுலர் பார்ட்டி". அமெரிக்காவில், மணமகன் மணமகள் வேறுபாடின்றி இப்படி பாச்சுலர் பார்ட்டி அல்லது பாச்சுலரேட்  பார்ட்டியும்  உண்டு. நல்ல வேலை இன்னும் மணப்பெண் அளவுக்கு இந்தியாவில் இது பரவவில்லை என்பது ஒரு ஆறுதல்.

அடுத்து நிறைய வீடுகளில் இப்போதெல்லாம் ரிசெப்சன் வைக்கிறார்கள், அதில் கேக் வெட்டுவது, சாப்பாடு என்பதெல்லாம் மிக மிக சாதாரணம்.  அது கிட்டத்தட்ட மிடில் கிளாஸ் மக்கள் திருமணங்களில் பார்க்கலாம். அதனை தவிர அடுத்து இப்போது முளைத்து இருக்கும் ஒரு பழக்கம் காக்டெயில் பார்ட்டி, இது நிறைய பணக்கார திருமணங்களில் பார்க்க முடியும். அப்படியே, அமெரிக்க திருமணங்களில்போல  ரிசப்சன் என்றால் மணமகன் மணமகள் டான்ஸ் ஆடுவார்கள், பின்னர் ஷாம்பெயின் ஓபன் செய்வார்கள், பின்னர் எல்லாரும் குடிப்பார்கள், டான்ஸ் ஆடுவார்கள். இப்படி ரிசப்சன் நடப்பது எல்லாம் ஸ்டார் ஹோட்டல்களில். பல நேரம் நமக்கே நாம் எந்த ஊர் திருமணத்தில் இருக்கிறோம் என்று சந்தேகம் வரும் அளவுக்கு இருக்கும்.

நான் இங்கே குறிப்பிட்ட திருமணங்கள் எல்லாம் அம்பானி வீட்டு திருமணங்கள் அல்ல, எல்லாம் சாதாரண மக்கள் கொஞ்சம் கையில் பணம் சேர்ந்தவுடன் தங்கள் ஸ்டேட்ஸ் காட்ட இப்படி திருமணம் நடத்துகிறார்கள். ஏன் இப்படி ஒரு ஸ்டேட்ஸ் மோகம் என்று தெரியவில்லை. எங்கே போக போகிறோம் என்றும் தெரியவில்லை.

நன்றி.

Friday, April 3, 2015

எங்கும் எதிலும் பக்தி மயம், சாமி மயம்...

டிஸ்கி 

இங்கு நான் குறிப்பிட போவது எல்லாம் என்னுடைய சமீபத்திய இந்திய அனுபவத்தில் கண்டது.   இது யாரையும்  புண்படுத்த அல்ல.


ஒரு குறிப்பிட்ட இடைவேளைக்கு பிறகு நீங்கள் இந்தியா செல்கிறீர்கள் என்றால் நிறைய மாற்றங்கள் சந்திக்கலாம். உதாரணமாக, ஒரு பத்து வருடங்களுக்கு முன் இருந்த இந்திய ரோடுகளும் இப்போது இருக்கும் ரோடுகளும் வித்தியாசம். திருச்சிக்கு 3 மணி நேரத்தில் ரோடு வழியாக செல்ல முடியும். அதே போல சென்னைக்கு 6 மணி நேரத்தில் செல்லலாம். நிறைய வாடகை கார்கள் கிடைகின்றன. இங்கே இருப்பது போல நீங்கள் வாடகைக்கு எடுத்து கொண்டு சவாரி செய்யலாம். லெப்ட் ஹான்ட் டிரைவிங் தெரிந்து இருப்பின் ஒரு பிரச்னையும் இருப்பதில்லை.  

நிறைய வெளி நாட்டு உணவகங்கள் பார்க்க முடியும். உதாரணமாக, இங்கு junk உணவகமாக கருதப்படும் "McDonalds, ChickFilA, PizzaHut, Dominos" எல்லாம் அங்கு ஹை எண்டு உணவகங்கள். மால்கள் நிறைய இருக்கின்றன, எல்லா மால்களிலும் இது போன்ற "junk high end" உணவகங்கள் பார்க்க முடியும். பெங்களூர் சென்றீர்கள் என்றால் MG ரோட்டில் எல்லா அமெரிக்க உணவகங்கள் உண்டு. "California Pizza Kitchen" , "Hard Rock Cafe "கூட பார்த்தேன். என் சொந்த ஊரான மதுரையில் கூட நிறைய மால்கள் பார்க்க முடிந்தது. 

இப்படி ஒரு பக்கம் அமெரிக்க அல்லது மேலை நாட்டு தாக்கம் பார்க்க முடிந்தாலும், எனக்கு மிக பெரிய நெருடலாக, அல்லது மாற்றமாக இருந்தது. "எங்கும் எதிலும் பக்தி மயம்". நிறைய புது புது கோவில்கள் அவற்றில் எல்லாவற்றிலும் மக்கள் நிரம்பி வழிகிறார்கள். உதாரணமாக எந்த கோவில்களுக்கும் செல்ல முடியவில்லை. மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றால் இப்பொழுதெல்லாம் Rs 250 அல்லது Rs  500 ருபாய் டிக்கெட் எடுத்து சென்றாலும் குறைந்தது அரைமணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகிறது. பொது தரிசனம் என்றால் எப்படியும் 2-3 மணி நேரம் சாதாரணம். இதே நிலை நான் சென்ற திருச்சி ஸ்ரீரங்கம், திருசெந்தூர், பழனி தெரிந்த பழைய கோவில்களிலும் பார்க்க முடிந்தது.  சரி பெரிய கோவில்களை விட்டு விட்டு சின்ன கோவில்களுக்கு வருவோம். எனக்கு தெரிந்து மிக சிறிய கோவிலாக இருந்த பல கோவில்கள் எல்லாம் இப்போ மிக பிரபல கோவில்கள் ஆகி விட்டன. நிறைய புது கோவில்கள், அவர்ற்றுக்கு என்று பண்டிகை, பால்குடம், தீமிதி, முளைப்பாரி, விளக்கு பூஜை  .... என்று  சில பொது நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். அதற்க்கு அக்கம் பக்கம் வீடுகளில் வசூல் செய்கிறார்கள். பின்னர் பெரிய  ஒலிபெருக்கி குழாய்  கட்டி அம்மன் பாடல்களை அலற விடுகிறார்கள். நாள் முழுதும் காது பஞ்சர் ஆகும் வரை. 

நிறைய குறி சொல்ல்பவர்கள், ஜாதகம் பார்பவர்கள், சாமி ஆடுபவர்கள் பார்க்க முடிந்தது. செவ்வாய் வெள்ளி என்றால் நிறைய பெண்கள் மஞ்சள், சிவப்பு சேலைகள் உடுத்தி கோவில்களுக்கு செல்வது பார்க்க முடிந்தது. நிறைய பெண்கள் ஓம்சக்தி கோவிலுக்கு என்று ஒரு சேலை வைத்து இருக்கிறார்கள், அதனை உடுத்துவதை பார்க்க முடிந்தது. மக்களின் நம்பிக்கையை நான் குறை சொல்ல வரவில்லை. ஆனால் எப்படி ஒரு பத்து வருட கால  இடைவெளிக்குள் இப்படி பக்தி மாற்றம் என்று தெரியவில்லை. 

இது, மதுரை, சென்னை, திருச்சி என்ற பல நகரங்களில் நான் பார்த்தது. பெங்களூரில் கூட வெள்ளி கிழமை அன்று கூட எல்லா கோவிலிலும்  கூட்டம் நிரம்பி வழிகிறது பார்க்க முடிந்தது.

இது ஒரு பக்கம் என்றால் நிறைய புது மசூதிகளையும் பார்க்க முடிந்தது, சார்சுகளும் முளைத்து இருக்கின்றன. 

 மக்களுக்கு பக்தி அதிகரித்து விட்டதா, என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இந்த பக்தி மோகத்தால் நிறைய குறி சொல்பவர்கள், ஜாதகம் பார்பவர்கள் நிறைய பயன் அடைகிறார்கள் என்று மட்டும் அறிய முடிகிறது. எனக்கு தெரிந்தே ஒருவர் ஜாதகம் பார்த்து பார்த்தே பெரிய கோடீஸ்வரனாகி விட்டார். அவர் பையனுக்கு அதே தொழில் பழகி விட்டார், அவரும் தன பங்குக்கு பெரிய கோடீஸ்வரனாகி விட்டார். எல்லா ஜாதகதிர்க்கும் எதோ ஒரு பரிகாரம் என்று கோவில்களுக்கு போக சொல்கிறார்கள். அதனால் தான் ஒரு வேலை கோவில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறதோ, தெரியவில்லை.

நான் சாமி கும்பிடுவதை எதிர்ப்பவள் அல்ல. கடவுள் நம்பிக்கை எனக்கும் உண்டு. ஆனால் எங்கும் எதிலும் பக்தி மயம், எது செய்வதென்றாலும் ஜாதகத்தை பார்த்து விட்டு செய்வது, பரிகாரம் செய்வது என்பதிலெல்லாம் எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை.

எங்கே போய் முடியுமோ இது தெரியவில்லை.

நன்றி.


Thursday, April 2, 2015

அமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்

சமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் வாழ்க்கை மற்றும் அமெரிக்க இந்தியர்கள் வாழ்கை இங்கே.

இங்கு வந்தபிறகு  என்னுடன்  வேலை  பார்க்கும் அமெரிக்கர்களிடம், "நாங்கள் துபாய் சென்றிருந்தோம்" என்று சொன்னவுடன், கிட்ட தட்ட எல்லாரும் என்னிடம் கேட்ட கேள்வி,"நீ அங்கு சென்று புர்கா போட்டாயா? , பெண்களுக்கு ரொம்ப கட்டுப்பாடு இருக்கா?, கார் ஓட்டலாமா?" என்று பல பல. நான் அவர்களிடம் சொன்னது ஒன்றே ஒன்று தான் "Ladies and Gentleman, if you are at Dubai mall, you will feel like you are at Newyork time square" என்று. எனக்கு தெரிந்து துபாய் மாலில் நான் பார்த்த மக்கள், அவர்கள் அணிந்திருந்த உடைகள் மற்றும் அங்கிருந்த கடைகள் , கலாசாரம் எல்லாம் நியூயார்க் நகர டைம் ஸ்கொயர்லில் பார்க்காலாம். துபாய் சிட்டியை அல்ட்ரா மாடர்ன் சிட்டி ஆக மாற்ற எல்லா முயற்சிகளும் நடக்கிறது. துபாய் மாலில் எல்லா அமெரிக்க மற்றும் ஐரோப்பா ஹய் எண்டு கடைகள் காண முடிந்தது. மிக மிக காஸ்ட்லி கடைகள் அவை, டிசைநேர் ப்ராண்ட் கடைகளும் இருந்தன. ஆனால் துபாய் வாழ்க்கை மட்டும் அரபு நாட்டு  வாழ்க்கை அல்ல என்பது  அபுதாபி சென்ற போது நான் கண்டது. எப்படி நியூயார்க் வாழ்கையை வைத்து இப்படி தான் அமெரிக்கா இருக்கும் என்று கணிக்க முடியாதோ அதே போல, glittering துபாயை வைத்து அரபு நாட்டு வாழ்கையும் இப்படி தான் இருக்கும் என்று கணிக்க இயலாது.

திரும்ப எனது அமெரிக்க colleaques, சொன்ன விசயத்திற்கு வருவோம். "புர்கா கட்டாயமா?" இல்லை, எல்லா நாடுகளில் இருப்பது போல புர்க்கா இல்லாமல் பெண்கள்செல்லலாம் . கார் ஓட்டலாம், வேலை பார்க்கலாம். வெளியில் செல்ல எல்லாம் கட்டுப்பாடு இருப்பதில்லை. ஆனால் துபாய் சிட்டி தவிர எங்கும் நான் பெண்கள் மினி டிரஸ் அல்லது குட்டை பாவாடை அணிந்து பார்த்ததில்லை.  நிறைய இந்திய மற்றும் தெற்காசிய கலாசார தாக்கம் இருக்கிறது. இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்தால் நன்கு காலத்தை ஓட்ட முடியும். வெள்ளிகிழமை மற்றும் சனிக்கிழமை விடுமுறை என்பதால், வியாழன் இரவே இவர்களுக்கு வீக் எண்டு ஆரம்பித்து விடுகிறது. நாங்கள் அங்கு சென்ற நாள் வியாழன் இரவு என்பதால் நிறைய நிறைய உணவகங்கள் கால நேரம் இல்லமல் திறந்து இருக்கின்றன. அதுவும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்பது எல்லா காஸ் ஸ்டேசன் லும் இந்திய, அமெரிக்க, சைணீஸ் உணவகங்கள் இருப்பது அதிலும்  ராத்திரி 1-2 மணி வரை கூட்டம் அலை மோதுவது என்பது.

ஒரு சின்ன நெருடல் எனக்கு இருந்தது என்ன வென்றால் பெண்களுக்கான கழிப்பறைகள் சுத்தமாக இல்லாதது. அதற்கென்று அசுத்தம் என்று சொல்லமாட்டேன்.ஆனால் சுத்தம் இல்லை. நிறைய லேடீஸ் ப்ரயெர் ஹாலுக்கு அருகில் இருக்கும் கழிப்பறைகள் உபயோகிக்க முடியாத அளவு இருந்தது. நிறைய 
ஒரு வேலை நிறைய மாடர்ன் ஆக இருக்கிறதே என்று நான் ரொம்ப எதிர் பார்த்து விட்டேனோ என்னவோ தெரியவில்லை.

அடுத்து எனக்கு ரொம்ப ஆச்சரியாமாக இருந்தது, லோகல்ஸ் எனப்படும் அரபு நாட்டவர் வரும் போது நம் மக்கள் ஒதுங்கி நின்று வழி விட்டது. அதுவும் அந்த மனிதர் பெரிய ஆள் போல எல்லாம் தெரியவில்லை. ஆனாலும் அவர்கள் சென்ற பிறகு உதாரணதிற்கு எல்லாரும் லிப்ட் உபயோகிரார்கள். 
அமெரிக்காவில் நான் பார்த்ததிற்கு இது  எதிர் பதமாக இருந்தது. உதாரணமாக, என் கணவர் எப்போதும் டென்னிஸ் விளையாடுவது இங்கிருக்கும் மேயர் உடன். எந்த வித்தியாசமும் எனக்கு தெரிய இருப்பதில்லை. உள்ளுக்குள்ளே நிறைய இருந்தாலும் வெளி காட்டி கொள்ள மாட்டார்கள்.

பின்னர் அரபு நாட்டு பெண்கள் செய்த ஷாப்பிங். சரி காமெடியாக இருந்தது. ஒரு அம்மா ஷாப்பிங் மால் உள்ளே நுழைகிறார் என்றால் உடனே அங்கு வேலை பார்க்கும் பெண்கள் கார்ட் தள்ளி கொண்டு வருகிறார்கள், அந்த அம்மா சொல்ல சொல்ல உடனே பொருள்களை எடுத்து போடுகிறார்கள் பின்னர் அவர்களாகவே எடுத்து பில் போட்டு காரில் கொண்டு சேர்கிறார்கள். எனக்கு பார்க்கும் பொது ஆச்சரியாமாக இருந்தது. இங்கெல்லாம், எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும் ஷாப்பிங் எல்லாம் செல்லும் பொது இப்படி கார்ட் தள்ள என்று யாரையும் வைத்து கொள்வதில்லை. 

கார் என்று எடுத்து கொண்டால், நிறைய பேர் லேன்ட் கிருசர் வைத்து இருக்கிறார்கள், இங்கு எப்படி ஹோண்டா, டொயோடா எங்கும் பார்க்க முடியுமோ அதே போல அங்கு லேன்ட் கிருசெர் பார்க்க முடிந்தது.நிறைய  கார் இருக்கிறது ஆனால் பார்கிங் இல்லை. குடியிருப்புகளுக்கு அருகில் எல்லாம் முறையான பார்க்கிங் இல்லாமல். இந்தியாவில் இருப்பது போல ரோடு ஓரங்களில் பார்க்கிங் செய்கிறார்கள். குடியிருப்புகள் கட்டினால் முறையான பார்கிங்கும் செய்து தர வேண்டும் என்று இங்கிருப்பது போல எந்த சட்டமும் இல்லை போல் இருக்கிறது. இல்லை ஒரு வேலை நான் பார்க்க வில்லையோ தெரியவில்லை.

அதே போல எங்கு பார்த்தாலும் மொபைல் மற்றும் எலெக்ட்ரானிக் பொருள்களை விற்கும் கடைகள் பார்க்க முடிந்தது. எல்லா கடைகளிளும் நிறைய சைனீஸ் மேக் பொருள்கள். இங்கெல்லாம் அப்படி எல்லா இடங்களிலும் கடைகளை பார்க்க முடியாது. மால்களில் வேண்டுமானால் இப்படி கடைகள் பார்க்கலாம். 

அதே போல சீசன் மாற்றங்கள் எதையும் அங்கு காண முடியவில்லை. இந்தியா போல பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதாலோ என்னவோ, இந்தியா போன்ற நிறைய கிளைமேட் பார்க்க முடிந்தது. இங்கிருப்பது போல, வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், மற்றும் குளிர் காலம் எல்லாம் இல்லை. 

அதற்க்கு பிறகு நான் கண்டது, படிப்பு பற்றியது. நிறைய பள்ளிகள் இருக்கின்றன, அமெரிக்கன், பிரிட்டிஷ் பள்ளிகள் மற்றும் இந்திய பள்ளிகள். ஆனால் அவை எல்லாமே பிரைவேட் பள்ளிகள். இந்தியா போல. நான் பப்ளிக் பள்ளிகளை பார்க்கவில்லை.( யாரவது தெரிவியுங்கள் எனக்கு, பப்ளிக் பள்ளிகள் உண்டா என்று?) ஒருவர் சம்பாதிக்கும் குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் இருப்பின், பள்ளிகளுக்கு என்றே குறைந்தது 5-10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு வருடத்திற்கு செலவழிக்க வேண்டி இருக்கிறது. இந்த பணம் இந்தியன் பள்ளிகளில் சேர்பதற்கு மட்டும், அதே, அமெரிக்க பிரிட்டிஷ் பள்ளிகள் என்றால் 20 ஆயிரம் டாலர் வரை செலவாகிறது.  இந்திய பள்ளிகளும் CBSC சிலபஸ் பாலோ செய்கிறார்கள். படிப்பு தரம் அவ்வளவாக இருப்பதில்லை என்பது அங்கு கேட்டு விசாரித்தது. உண்மையா என்று தெரியவில்லை.  நான் கேள்வி பட்ட வரை, வீட்டு வாடகைக்கும், பள்ளி பீசுக்கும் அங்கிருக்கும் இந்தியர்கள் நிறைய செலவளிகிறார்கள்.

சம்பளங்கள் இங்கிருக்கும் சம்பளத்துடன் ஒப்பிட முடியுமா என்று தெரியவில்லை. இன்னொன்று நான் கண்டது, நீங்கள் எந்த நாட்டு குடிமகன் என்பதை பொறுத்து சம்பளம் மாறுவது. ஒரே வேலை செய்யும் அமெரிக்க குடிமகன் வாங்கும் சம்பளமும் இந்திய குடிமகன் வாங்கும் சம்பளமும் வேறு வேறாக இருப்பது ஆச்சரியாமாக இருப்பது. என்ன காரணம் என்றெல்லாம் கேட்க கூட முடியாது என்று நினைக்கிறன்.


ஆனால் டாக்ஸ் இல்லை, அதனால் நீங்கள் சம்பாதிக்கும் பணம் உங்கள் கையில். இங்கே இருப்பது போல பாதி பணத்தை Uncle Sam இடம் அழுக வேண்டியதில்லை. இந்தியாவுக்கு நினைத்தால் சென்று விடலாம், 4 மணி நேர பயணம், டிக்கெட் விலையும் 10-15 ஆயிரம் ருபாய் மட்டுமே. இப்படி பல நன்மைகள் இருப்பினும், வீடு வாங்குவது செட்டில் ஆவது என்பதெல்லாம் நினைத்து கூட பார்க்க முடியாது. எனக்கு தெரிந்த ஒருவர் சொன்னது போல, "ஒரு செங்கல் கூட வாங்க முடியாது", குடிமகனாவதோ, அல்லது நிரந்தரமாக தங்குவதோ, நினைத்து கூட பார்க்க முடியாது. "நிறைய சம்பாதி, ஊர் பக்கம் ஓடி விடு" என்பதே அங்கு செல்லும். 

இவை எல்லாம் நான் கண்ட கவனித்த விசயங்களை வைத்து எழுதியது. தவறாக இருப்பின் தெரிவிக்கவும்.

நன்றி