Thursday, March 29, 2018

எது சரி? எது தப்பு?: உளவியல் மற்றும் அறிவியல் பார்வை

ஒரு நிகழ்வு நடக்கிறது, நீங்களும் அந்த தருணத்தில் அங்கு இருக்கிறீர்கள், அந்த நிகழ்வை காணும் நாம் எப்படி அந்த நிகழ்வை குறித்து ஓர் முடிவுக்குவருகிறீர்கள் . அது சரியான முடிவா? இல்லை தவறான முடிவா?

ஒரு உதாரணம் எடுத்து கொள்ளுவோம். ஆபிசில் ஒரு மீட்டிங் நடக்கிறது. ஒரு முக்கியமான பிரச்னை குறித்து மேனேஜர் தெரிவிக்கிறார். அதன் தீர்வு என்ன என்று விவாதிக்கவே இந்த மீட்டிங். தற்போது உங்களுக்கும் அந்த மேனேஜர் க்கும் டெர்ம்ஸ் சரி இல்லை என்று வைத்து கொள்ளுவோம். அவர், என்ன சொல்ல வந்தாலும் அல்லது சொன்னாலும் அது தப்பாகவே தோன்றும்.  அதே நேரம், அந்த மேனேஜர்க்கு  உங்களுடன் நல்ல டெர்ம்ஸ் இருக்கிறது என்றால், அவர் சொல்வது எல்லாமே கரெக்ட் ஆக தோன்றும்.

ஏன் இப்படி நடக்கிறது. எது சரி? எது தப்பு?. முதலில் உளவியல் பார்வை.

மனோதத்துவத்தில் "Ladder of Inference" என்ற ஒரு தியரி உண்டு. அதாவது, தமிழாக்கத்தில் "ஊகிக்கும் படிநிலை". இந்த தியரி படி, ஒவ்வொரு விஷயம் நடக்கும் போதும் அந்த விஷயம் குறித்து நாம் ஒரு ஊகம் செய்து ஒரு முடிவுக்கு வருகிறோம்.

Image from google images

1. இந்த படிநிலையில் முதல் படி," நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகள்", எந்த பில்டரும் இல்லாமல் நம்மை சுற்றி நடக்கும் எல்லா நிகழ்வுகளும் இங்கே முதல் படி. என்னுடைய முந்தைய உதாரணத்தில், ஆபிசில் நடக்கும் மீட்டிங், அது நடக்கிறது. அங்கு கூடியிருக்கும் மக்கள், அவர்கள் முக பாவனைகள், அவர்கள் அமர்ந்திருக்கும் முறை. இப்படி பலவும் முதல் நிலை. "அதாவது , நம்மால் பார்க்க/கவனிக்க முடிந்த/முடியாத எல்லா  செய்திகள்/நிகழ்வுகள் கலவை"

2. இரண்டாவது படி, " நாம் பார்த்த செய்திகளில்/ நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்யும் நிகழ்வுகள்".  என்னுடைய உதாரணப்படி, அந்த மேனேஜர் என்னுடன் நல்ல டெர்ம்ஸ் இல் இருந்தார் எனில், அவருடைய செய்கைகள், அவரை ஆமோதிக்கும் அனைவரின் செய்கைகள் மட்டுமே என் மூளை செலக்ட் செய்யும். இல்லை, எனக்கு அந்த மேனேஜர் உடன் மோசமான முன் விரோதம் இருப்பின் என்றால், அவருக்கு எதிராக நடக்கும் எல்லா விஷயங்கள் மட்டுமே கண்ணில் சிக்கும், அல்லது மூளை செலக்ட் செய்யும். இந்த நேரத்தில், அந்த மேனேஜர் சொல்லும் சொல்லுக்கு எதிர் பேசும் ஒருவர் சொல்லுவது எல்லாமே கரெக்ட் ஆக தெரியும்.

3. மூன்றாவது படி, "நம்முடைய கற்பனை கலத்தல்", நடந்த நிகழ்வுகளில், நாம் செலக்ட் செய்த நிகழ்வுகளில், நம்முடைய கற்பனை கலப்பது. உதாரணமாக, அந்த மீட்டிங்கில், ஒரு பெண் தலை குனிந்து கேட்கிறார் என்று வைத்து கொள்ளுவோம், நமக்கு பாஸிடம் நல்ல டெர்ம்ஸ் இல்லாத பட்சத்தில், "அந்த பொண்ணு ஏன் தலை குனிச்சிட்டு இருக்கு, எதோ வருத்தப்படுற மாதிரி தெரியுது", என்று மனதுக்குள் நினைப்பது.  அந்த பொண்ணு என்ன காரணத்துக்காக தலை குனிந்து இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், நம்முடைய எண்ணத்துக்கு ஏற்றபடி கற்பனை கலப்பது, மூன்றாவது படி.


4. நான்காவது படி," நாம் கலந்த கற்பனை கொண்டு  இது தான்நடந்து கொண்டிருக்கிறது  "என்று ஊகிப்பது. உதாரணமாக,, அந்த மீட்டிங்கில், "பாஸ் பேசுவது அந்த பொண்ணுக்கு  பிடிக்கவில்லை போல,அதான் தலை குனிஞ்சி வருத்தப்படுது, இந்தம்மா/ஆளு ஏன் இப்படிஇருக்கிறார் ? என்று பாஸ் பற்றிய தன்னுடைய  ஊகத்தை வலுப்படுத்துவது.

5. ஐந்தாவது படியில், "நாம் கொண்ட ஊகம், கற்பனை, எல்லாம் கலந்து  அந்த நிகழ்வு குறித்து முடிவெடுப்பது" . அதாவது, "அந்த மீட்டிங்கில், பாஸ் பேசுவது யாருக்கும் பிடிக்கவில்லை, அதனாலேயே எல்லாரும், தலையை குனிஞ்சிட்டு இருக்காங்க,  ஏன் இந்தம்மா/அய்யா  மத்தவங்களை புரிஞ்சுக்காம இப்படிபேசுறாங்க ? " என்று முடிவெடுப்பது

6.  ஆறாவது படியில், "நாம் எடுத்த முடிவுவை கொண்டு இப்படி தான் உலகம் இருக்கு என்று நம்பிக்கை கொள்வது".  அந்த மீட்டிங்கில் நடந்த, நாம் பில்டர் செய்த, கற்பனை கலந்த, ஊகித்த நிகழ்வுகளை கொண்டு, இந்த உலகமே இப்படி தான் பா", முதலாளி வர்கம், ஏழைகளை பற்றி கவலை பட மாட்டாங்க, என்று புலம்புவது.

7. ஏழாவது படிநிலை, இறுதி நிலை. நாம் எடுத்த முடிவுக்கு ஏற்ற ஆக்சன் எடுப்பது. அதாவது, இந்த மேனேஜர் சரியில்லை, எல்லாரையும் தப்பாக நடத்த்துகிறார், அடுத்தவர்கள் கருத்துக்கு மதிப்பளிக்க மாட்டேன்கிறார், என்று HR இடம் காம்ப்ளயின் செய்வது. அல்லது, அடுத்தவர்களிடம் புறம் பேசுவது, கேங்கு சேர்ப்பது, கூட்டம் சேர்ப்பது,கொடி  பிடிப்பது.


நான் விவரித்த இந்த "Ladder of Inference" இல், "நீ" அல்லது "I" என்பது மிக முக்கியமான ஒன்று. அதாவது, என்ன நடக்கிறது என்பதை, "நீ" அல்லது "I" இன் பார்வையில் மட்டுமே பார்த்து "நாம்" முடிவெடுக்கிறோம். அதுவும் நமக்கு சாதகமாக, அதனை திரித்து, அதனை மாற்றி, கற்பனை கலந்து, மோல்ட் செய்து, ஒரு முடிவுக்கு வருகிறோம்.

இந்த இடத்தில் நாம் எடுத்த முடிவு சரியா? இல்லை தப்பா?

வெளியில் இருந்து பார்க்கும் போது, அல்லது மூன்றாவது மனுஷனாக பார்க்கும் போது அந்த முடிவு தப்பு, ஆனால், நாம் உள்ளே இருக்கும் போது, நாம் அதில் உடன்பட்டு இருக்கும் போது, அந்த முடிவு சரியான முடிவு. இது எல்லாமே பெர்ஸப்ஸன்/ நாம் உணர்வது  சார்ந்தது. ஆனால் உண்மை நிலை அல்ல.

உண்மை நிலை வேறொன்றாக இருக்கலாம், ஆனால், எந்த ஒரு சூழலுக்கும் நாம் அந்த சூழலை குறித்து என்ன நினைக்கிறோம் என்பதை சார்ந்தே, அது சரி என்றோ அல்லது தவறு என்றோ நம்மால் அல்லது பிறரால் தீர்மானிக்கப்படுகிறது.


நிற்க, மனோ தத்துவத்தில் இருந்து, சிறிது மாற்றத்துக்காக  அறிவியல் பார்வை பாப்போம்.

எத்தனை பேர், தன்னுடைய பள்ளி பருவத்தில், "அறிவியல்/பிசிக்ஸ்" பாடத்தை கடுப்புடன் படித்து இருக்கிறீர்கள். பத்தாம் வகுப்பு படிக்கும் போது, ஒளியின் பண்புகள் என்று, இரண்டு வகை பண்புகள் படித்திருப்போம். 1. துகள் வடிவானது( Particle nature of light), 2. அலை வடிவானது (wave nature of light).  என்று நிறைய படித்திருப்போம். ஒவ்வொரு தியரியும் பற்றி படம் வரைந்து,சமன்பாடுகள் மனப்பாடம் செய்து. அட போங்கைய்யா என்று கடுப்பை கிளப்பி இருக்கும்.

பிசிக்ஸ் பாடத்தை குறித்த பார்வையை, அது வெறும் கணித சமன்பாடுகள் மட்டுமே கொண்டது என்ற என்னுடைய எண்ணத்தை மாற்றியது "The Dancing Wu Li Masters" என்ற புத்தகம்.


Image from google images

சரி எதற்கு இந்த புத்தகத்தை குறித்து இங்கே குறிப்பிடுகிறேன் என்றால், அதில், "The Role of "I"" என்ற அத்தியாயம் உண்டு. இந்த அத்தியாயத்தில், எந்த சமன்பாடும் இல்லாமல் ரொம்ப அழகாக இதன் ஆசிரியர், ஒளியின் , அலை மற்றும் துகள் பண்புகளை எளிமையாக குறிப்பிடுகிறார். அதன் பின்பு அவர் சொல்வது. "ஒளிக்கு, அலை மற்றும் துகள் பண்பு இருப்பது இதுவரை கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது, வேறு பல பண்புகளையும் ஒளி கொண்டிருக்கலாம், ஆனால் இதுவரை "நாம்" என்ன அறிந்திருக்கிறோமோ அதனை கொண்டு இது தான் ஒளியின் பண்பு என்று முடிவு கட்டிவிட முடியாது. இது "நாம்"/"ஐ" அறிந்த வரை காணும் ஒளியின் பண்பு மட்டுமே"


பொதிகவியளார், ஹெய்சென்பெர்க் அவர்களின் "Theory of uncertainity" மிக பிரபலம். அதன் முடிவில் ஹெய்சென்பெர்க் சொல்லுவது

" What we observe is not nature itself, but nature exposed to our method of questioning."


நாம் பார்க்கும் உலகம் /இயற்க்கை என்பது உண்மையில் இருப்பது அல்ல, நம்முடைய அனுமானத்தில் அல்லது நமக்கு பிடித்த வகையில் நாம் அறிந்த வரையில் இருக்கும் இயற்க்கை/உலகம் மட்டுமே. இது தான் உண்மையில் உலகம் என்று வரையறுக்க இயலாது.


உளவியல் மற்றும் அறிவியல் பார்வைகளின் சாராம்சம் எளிமையாக, நம்முடைய, எது சரி, எது தப்பு என்ற வாதத்துக்கு வருவோமானால். எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன்பு,  "நான், நாம்", என்ற அந்த பாய்ண்ட்யை விட்டு வெளியே வந்து, மூன்றாவது மனிதனாக, யூனிவேர்சல் ஆக யோசித்தால் மட்டுமே, எந்த ஒரு பிரச்சனைக்கும் "முழுப்பரிமாணம்" கிடைக்கும். இல்லை எனில், லாடம் கட்டிய குதிரை போல் நாம் நினைத்ததே சரி என்று அந்த வழியில் சென்று கொண்டிருப்போம்.


நன்றி.





Thursday, March 22, 2018

முகநூல், ப்ரொபைலிங், பிரைவசி மற்றும் வேலை இழப்பு

சில வருடங்களுக்கு முன்பு, சோசியல் மீடியா குறித்தும், பிரைவசி குறித்தும் அது எப்படி நம்முடைய பர்சனல் வாழ்வில் தலையிடலாம் என்பது குறித்தும் சில பதிவுகள் எழுதி இருக்கிறேன்.
  1. உங்களை சுற்றி பின்னப்படும் பரிந்துரை என்னும் மாயவலை!
  2. Facebook ம் ப்ரைவசியும் பெண்களும்
  3. காசு, பணம் துட்டு, மணி மணி ! 

நான் என்னென்ன குறிப்பிட்டேனோ அது நடந்து விட்டிருக்கிறது. முகநூலில் உங்களை குறித்த விஷயங்களை சேகரித்து, உங்களுடைய பர்சனல் விஷயங்களை வேறொரு கம்பெனியிடம் விற்று, உங்களையே டார்கெட் செய்து மார்க்கெட் செய்து இருக்கிறார்கள். அதுவும் அமெரிக்க தேர்தலில் இது ஒரு பெரிய வித மார்க்கெட்டிங் உத்தியாக உபயோகப்படுத்த பட்டு இருக்கிறது. நாங்கள் தவறு செய்து விட்டோம் என்று மார்க் ஸுகேர்பேர்க் மன்னிப்பு கேட்டு இருக்கிறார். ஆனால் போனது போனது தானே.


இதனால் என்னங்க பிரச்னை என்று கேட்பவர்களுக்கு.. நீங்கள் என்ன சாப்பிடுவது, என்ன பார்பது என்ன உடை அணிவது, என்ன கேட்பது, என்ன என்ன செயல்கள் செய்வது, என்று ஒன்று விடாமல் உங்களை குறித்த ப்ரொபைலிங் நடக்கிறது. உங்களை குறித்து அறிந்தபிறகு, உங்களுக்கு தேவையான பொருட்கள், வீட்டிற்கே வந்து மார்க்கெட்டிங் செய்யப்படுகின்றன. டிஜிட்டல் மார்க்கெட்டிங் இப்போது எல்லா இடங்களிலும் கொடி கட்டி பறக்கிறது. உங்களுக்கு தேவையானதை, மற்றொருவர் முடிவு செய்வார்.  உங்களுக்கு என்று சுயம் ஓன்று இல்லாமல் போகும்

இப்பொது, கூகிள் ஹோம், அலெக்சா, சிறி  என்று பல பர்சனல் அசிஸ்டென்ட் ஆப் கள் இருக்கின்றன. அதுவும் மிக குறைந்த விலையில் கிடைக்கின்றன. ஆனால், அவை ஒவ்வொரு நிமிடமும், உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்று டேட்டா கலெக்ட் செய்து அனுப்புகின்றன. இதனால், நீங்கள் பொது வெளியில் என்ன செய்கிறீர்கள் என்பதை விட, வீட்டில் என்ன என்ன செய்கிறீர்கள் என்று உங்களை முழுக்க ப்ரொபைல் செய்கிறார்கள்.

அப்படி செஞ்சா என்ன பிரச்னை ஆகப்போகுது..விடுங்க என்பவர்களுக்கு, இன்னும் 5 முதல் 10 ஆண்டுகளில் எப்படி ரோபோக்கள் பல வேலைகளுக்கு மனிதர்களை விட பயன்படுத்த பட்டிருக்கும் என்ற மார்க்கெட் வாட்ச் செய்தி மற்றும் படம் இங்கே.




இதில் என்ன குறிப்பிட படுகிறது என்றால், மூளையை உயோகிக்காமல் செய்யப்படும் பல  வேலைகளை ஆட்டோமேஷன் செய்து விடுவார்கள். முதல் உதாரணமாக,  சூப்பர்மார்கெட் செல்கிறீர்கள் என்றால், அங்கே பில் போட  என்று இருக்கும் மக்கள் இனிமேல் இருக்க மாட்டார்கள். அதற்க்கு பதில் ஆட்டோமேட்டிக் ஆக நீங்கள் பில் போடா முடியும். ஏற்கனவே, ஆட்டோமேட்டிக் செக்கின் என்று பல கடைகள் வந்துவிட்டன, இன்னும் சில வருடங்களில் இந்த வேலை எல்லாமே இருக்காது. அந்த வேலை மட்டுமே செய்த தெரிந்த பலருக்கு வேலை இழப்பு ஏற்படும்.

சரி இதற்கும் உங்களை பற்றிய ப்ரொபைலிங் என்பதற்கும் என்ன சம்பந்தம் என்பவர்களுக்கு? ப்ரொபைலிங் செய்வதன் மூலம் உங்களுடைய முழு விவரமும் அவர்களுக்கு தெரியும். அந்த விவரங்களை ஒரு AI /அர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்னும் செயற்கை நுண்ணறிவு படிமுறை மூலம் படிப்படியாக கம்ப்யூட்டர் உங்களை பற்றி கற்றுக்கொள்ளும்.

இது எப்படி ஒரு குழந்தை சிறுவயதில் இருந்து கற்றுக்கொள்கிறதோ, அதனை ஒத்தது. சரி கற்று கொண்டு என்ன ஆகபோகிறது, என்றால். நீங்கள் செய்யும் வேலையும் கம்ப்யூட்டர் செய்கிறது எனில் அதுவும் நீங்கள் செய்யும் வேலை வெறும் உடல் உழைப்பு சார்ந்தது எனில், மனிதர்கள் வேலைக்கு எடுக்க மாட்டார்கள், பதிலாக, கம்ப்யூட்டர் அல்லது ரோபோக்கள் வேலைக்கு எடுக்கப்படும்.

இப்படி மனிதர்கள் அல்லாத ரோபோக்களை வேலைக்கு வைப்பது அவர்களுக்கு சௌகரியம். PF,பஞ்சபடி, மாதாமாதம் சம்பளம், இன்சூரன்ஸ், என்று எதுவும் கொடுக்க தேவை இல்லை. வேலையில் நேரும் குற்றங்கள் நிறைய இருக்காது. சப்போர்ட் வேலைகள் எல்லாமே கம்ப்யூட்டர் செய்துவிடும். ஆட்டோமேட்டிக் மெஸேஜ் போல, தற்போது ஆட்டோமேட்டிக் டெல்லர் வந்து விட்டது. இதனால் BP வேலை செய்யும் பலருடைய வேலை போகும்.

உங்களை பற்றி தெரிந்து கொண்டு உங்களையே வேலையை விட்டு தூக்கலாம், அதற்க்கு உங்களுடைய ப்ரொபைல் பயன்படுத்தலாம். உங்களுடைய கிரெடிட் கார்டு, SSN போன்றவற்றையே சேகரித்து உங்கள் பெயரில் வேறொருவர் லோன் வாங்கலாம். இல்லை பொருட்கள் வாங்கலாம். எங்கும் டேட்டா செக்யூரிட்டி என்று எதுவும் இருக்க போவதில்லை. இவர்கள் சேகரிக்கும் டேட்டா பாதுகாக்கப்படும் என்று யாரும் உறுதி கொடுக்க போவதில்லை.  நாமே சென்று எதிர் இந்த நிலைக்குள் விழ  வேண்டும். சிந்திப்போம்.

நன்றி.



References

http://www.foxnews.com/tech/2018/03/21/facebook-ceo-zuckerberg-breaks-silence-on-data-scandal-dont-deserve-to-serve-without-security.html

https://www.marketwatch.com/story/this-chart-spells-out-in-black-and-white-just-how-many-jobs-will-be-lost-to-robots-2017-05-31





Sunday, March 11, 2018

இனிமேல், ஆடு வெட்டாம ஆட்டுக்கறி சாப்பிடலாம்!!

இந்த பதிவுக்கு ஆடு வெட்டாம ஆட்டுக்கறியும், ஹீலா செல்களும்!! என்று தான் தலைப்பு வைக்கணும்னு நினைச்சேன், ஆனா, ஹீலா செல்கள் "கான்செர் பேஷண்ட்" என்பதால் நெகடிவ் பதம் வந்து விடும் என்று மாற்றி வைத்து விட்டேன்.

"என்ன தலையும் புரியல வாலும் புரியல ?"என்பவர்களுக்கு, என்னுடைய முந்தைய பதிவான "
ஹீலா ஹீலா - செத்தும் கொடுத்தார்" இல் இருந்து சில பகுதிகள்.

"மருத்துவ ஆராய்ச்சி உலகில் இருக்கும் அனைவருக்கும் HeLa என்ற பெயர் மிகவும் பரிச்சயமாகஇருக்கும். HeLa என்பது அழியாத மனித செல் லைன் என்று சொல்வார்கள். பொதுவாக மனிதசெல்கள் உடம்புக்கு வெளியே வளர்ப்பது 1951 வரை மிக மிக கடினமானது என்று கருதப்பட்டது. அவற்றை எல்லாம் முறியடித்து உடம்புக்கு வெளியேயும் செல்கள் வளர முடியும் என்று நிரூபித்ததுHeLa செல்கள் மட்டுமே.

இதென்ன!!,மனித செல்கள் உடம்புக்கு வெளியே வளருவதாஎன்ன சொல்லுறாங்கஎன்றுகேட்பவர்களுக்கு திசு கல்சுர் பற்றிய சின்ன அறிமுகம்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் 

"செல்களை பெட்ரிடிஷ் எனப்படும் தட்டுகளில் வளர்ப்பது".

எப்படி செய்கிறார்கள்

"எந்த ஒரு உயிரினத்தின் செல்களை வளர்க்க வேண்டுமோ அதனை பெட்ரிடிஷ் இல் தடவி, அந்த செல்கள் அதாவது எல்லா விதமான nutrients ம் தந்து அந்த செல்கள் வளர்கின்றனவா? என்று பார்ப்பது 

எதற்க்காக செய்கிறார்கள் 

மருத்துவ சோதனைகளை சோதனைச்சாலை எலிகளிடமோமனிதர்களிடமோ செய்வதற்கு முன்உயிரின செல்களிடம்  செய்து அவை எப்படி அந்த சோதனைகளை எதிர் கொள்கின்றன என்றுகாண்பர்இதனை  போன்ற திசுக்களில் நடத்தப்படும் பரிசோதனை எந்த உயிரினத்தையும்பரிசோதனை  என்ற பெயரில் துன்புறுத்துவதர்க்கு முன் செய்யப்படுவதால் திசு கல்ச்சர்  ஒருவரப்பிரசாதமாக கருதப்படுகிறது.
சரி இப்போது ஹீலா செல்களை பற்றி பார்ப்போம்

முதன் முதலில் ஆராய்ச்சி துறைக்கு நான் வந்த பொழுதெல்லாம் HeLa செல்களில் இந்த ஆராய்ச்சி நடந்தது, அந்த ஆராய்ச்சி நடந்தது என்றெல்லாம் பலர் கூற கேட்டு இருக்கிறேன். ஆனால் HeLa செல் என்றால் என்ன என்று கேட்டால் ஒரே ஒரு பதில் தான் வரும் "HeLa is a immortal cell line" அதனை தவிர வேறொன்றும் யாருக்கும் தெரியாது.

சமீபத்தில் "The immortal life of Henrietta Lacks" என்ற புத்தகத்தை படிக்க நேர்ந்தது.
ஹீலா  என்று மட்டுமே அறியப்பட்ட ஹென்ரிட்ட லாக்ஸ் என்ற கறுப்பின பெண்மணியின் கான்செர்செல்களே ஹீலா செல்கள் என்று அறியப்படுகின்றன என்று அறிந்த போது ஆச்சரியபட்டேன்.


போலியோ மருந்து முதல் பல பல கான்செர் மருந்துகள் வரை பலவகை  மருந்துகளும் முதன்முதலில் சோதனை செய்யப்பட்டது இந்த அம்மாவின் செல்களில்  தான். சொல்லப் போனால் ஒருபுது  மருத்துவ மறுமலர்ச்சியையும், மில்லியன் டாலர் இண்டஸ்ட்ரியையும் இந்த செல்கள்உருவாக்கி இருக்கின்றன.  இன்னும் கூட  பல பல நாடுகளில் ஊர்களில் இருக்கும் பல மருத்துவஆராய்ச்சி கூடங்களில் இவருடைய செல்கள் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன...

ஆனால் இவற்றை எல்லாம் நமக்கு கொடுத்த அவரோ மிக இளவயதில் கர்ப்பப்பை வாய்புற்றுநோய்க்கு பலியாகிவிட்டார். அவருக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களோ அவருடையஉடம்பில் இருந்து எடுத்த செல்களை கொண்டு திசு கல்ச்சர்இல் வளர வைத்து ஒரு பெரியஇண்டஸ்ட்ரி உருவாக்கி விட்டார்கள் ஆனால் இதனை பற்றி அவருடைய குடும்பம் துளியும்அறிந்திருக்க வில்லை.
"

நிற்க, சரி இப்பொழுது எதற்கு ஹீலா செல்களை பற்றியும், ஆட்டு கறி பற்றியும்  குறிப்பிடுகின்றேன் என்றால், எப்படி ஹீலா செல்களை  பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்தார்களோ, அதே போல, மற்ற விலங்குகள் செல்களையும் பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்த்து ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், ஏன் இதை பிசினெஸ் ஆக செய்ய கூடாது என்று பிசினெஸ் முதலாளிகள் நினைத்ததன் விளைவாக, தற்போது பல பல கம்பெனிகள் இதனை ஒரு பிசினிஸ் ஆக்கி இருக்கிறார்கள். அதன் பெயர் "க்ளீன் மீட்". "மெம்பிஸ் மீட், சூப்பர் மீட்" என்று பல பல கம்பெனிகள் இந்த பிசினெஸ் இல் இருக்கிறார்கள்.


அதாவது சின்ன பெட்ரி டிஷ்ஷில் வைத்து வளர்ப்பதற்கு பதில், பெரிய, அல்லது இண்டஸ்ட்ரி லெவல் உற்பத்தி செய்வது. இதன் மூலம், மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி அனைத்தும் லேபில் உற்பத்தி செய்யப்படும். அதன் சுவை மாறி இருக்கிறதா என்று நிறைய டேஸ்ட் டெஸ்ட் நடத்தி இருக்கிறார்கள்.  

இதனை சார்ந்த புத்தகம் ஒன்றை படிக்க நேர்ந்தது "கிளீன் மீட்"  எப்படி இனிமேல், ஆட்டுக்கறி மாட்டு  கறி உற்பத்தி இருக்க  போகிறது என்பது குறித்த விளக்கம் இதில் இருக்கிறது.




இதில் இருந்து என்ன தெரிகிறது என்றால், இனிமேல் கடைக்கு சென்று கறி வாங்கும் போது அது உண்மையிலேயே ஒரு ஆடு மாடு வெட்டி வர்ற கறியா, இல்லை லாபில் வளர்த்த கறியா என்று தெரியாது என்பது உண்மை. 


நன்றி.



Saturday, March 3, 2018

"மில்லியனல்ஸ்"/ஜென் Z " என்னும் ஐ, மீ, தலைமுறை!!!

நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நாம்,  இது பாசிட்டிவ் விளைவை தரும் என்று நினைத்து செய்யும் பல விஷயங்கள் மறுபக்கத்தில் நெகடிவ் விளைவை தரலாம். அப்படி ஆன ஒரு விடயத்தை குறித்த பதிவு இது.

சில பல வருடங்களாக, பாசிட்டிவ் பேரெண்டிங் குறித்து நிறைய படித்து, பேசி இருக்கிறேன். எப்படி குழந்தைகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக ஊக்குவித்து, அவர்களின் ஒவ்வொரு அசைவிலும்  பின்னிருந்து உற்சாகப்படுத்துவது குறித்தது.

ஒவ்வொரு தலைமுறையும் தன்னுடைய அடுத்த தலைமுறை மக்களை பார்த்து குறை சொல்ல ஆரம்பிப்பது பொதுவாக நடப்பதுண்டு. உதாரணமாக, போன தலைமுறை அப்பாக்கள் தங்கள் பிள்ளைகளிடம் அடிக்கடி கூறும் ஒன்று , “நாங்க எல்லாம் எப்படி கஷ்டப்பட்டு படிச்சோம் தெரியுமா!! “ என்று.  பிள்ளைகளிடம், உங்களுக்கு பொறுப்பே இல்லை என்று குறை சொல்லுவார்கள். அதனாலேயோ என்னவோ தான் பட்ட கஷ்டத்தை தனது பிள்ளை படக்கூடாது என்று தாராளமாக செலவு செய்வது, கடன் வாங்கியாவது பிள்ளைகளை படிக்க வைப்பது தொடர்ந்தது. “ போய், புள்ள குட்டிங்கள, படிக்க வையுங்கைய்யா!!” என்பது பொதுவான சொல்வழக்காக ஆகி இருந்தது.

இது நல்ல விஷயம் தானே!!, என்பவர்களுக்கு, இதன் அடுத்த பக்கம் குறித்த கிலிம்ஸ் இங்கே.

சரி, தற்போது விசயத்துக்கு வருவோம். வேலைக்கு ஆட்கள் தேவை என்று விளம்பரம் செய்தால், அதிகம் வேலைக்கு அப்ளை செய்வது மில்லியனல்ஸ் எனப்படும் தலைமுறை. 20 முதல் 30 வயதுக்குள் இருக்கும்  பிள்ளைகள் மில்லியனல்ஸ் எனப்படுகின்றனர்,   முதலில் மில்லியானால் தலை முறை எண்பதுகளின் மத்தியில்  பிறந்த குழந்தைகளில் இருந்து 2000 ஆம் ஆண்டு தொடக்கம் வரை பிறந்த குழந்தைகளை குறிக்கிறது. ஓவ்வொருவரும் ஒவ்வொரு ஸ்கேல் வைத்து இருக்கிறார்கள் மில்லியனல்ஸ் தலைமுறைக்கு என்பதால் இது பொதுவாக குறிக்கப்படும் அளவீடுகளை வைத்து எழுதப்பட்டது. நான் பார்த்த வரையில் இப்பொழுதெல்லாம், சினிமாக்களில் பொதுவாக கதாநாயகன் இந்த தலைமுறையை சார்ந்தவனாக காட்டப்படுகிறார (1988-89 இறுதியில் பிறந்தவராக)



இந்த தலைமுறை மக்களிடம்  இன்டெர்வியூ செய்யும் போது,பொதுவாக எந்த சூழல் உங்களுக்கு அதிகம் மோட்டிவேட் செய்யும்,  அதிகம் சந்தோசம் தரும், என்று கேட்டு இருக்கிறேன். முக்கால் வாசி நேரம் அவர்களின் பதில், சிலிக்கான் வல்லேய் போல்,   1. பிரீ சாப்பாடு, 2. ரிலாக்ஸ் ஆன வேலை சூழல், 3. இன்டெரெஸ்ட்டிங் வேலை, 4. தாக்கம் ஏற்படுத்தும் வேலை என்று சொல்வார்கள்.  வேலைக்கு எடுத்தால், பயங்கர இன்டெரெஸ்ட்டிங் ஆக வேலையை  தொடக்கத்தில் கற்று கொள்வார்கள்.

சில மாதங்கள் கழித்து நீங்கள் அவர்களிடம் எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டு பாருங்கள். முக்கால் வாசி பேர், "மை ஜாப் சக்ஸ்",  சந்தோசமாக இல்லை,  இம்பாக்ட் இல்லாமல் இருப்பதாக சொல்வார்கள். எங்கள் கம்பெனியில், மூன்று மாதத்திற்கு முன்பு வேலைக்கு சேர்ந்த ஒருவர், எனக்கு வேலை பிடிக்கவில்லை என்று ரிசைன் செய்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணம், எனக்கு ஒரே ஆச்சரியம்,  இங்கு "ப்ரோமோஷன் இல்லை, எனக்கு ரெகக்னிஷன் இல்லை, வேலை சேலஞ்சிங் இல்லை". என்பது.  சேர்ந்து 3 மாதத்தில் எப்படி ப்ரோமோஷன் கொடுப்பார்கள், இல்லை ரெகக்னிஷன் கொடுப்பார்கள், எப்படி சேலஞ்சிங் இல்லை என்று கண்டுகொண்டார்? என்று எனக்குள் கேள்வி.

இந்த தலைமுறை மக்களுக்கு எது சந்தோசம், எந்த மாதிரி வேலை சேலஞ்சிங் என்று நிறைய குழம்பி இருக்கிறேன். அப்போது,  "சைமன் சிமோக்" தன்னம்பிக்கை புத்தக, பேச்சாளர் உலகில் அதிகம் அறியப்படும் பெயர், அவரின்,  டெட் டாக் ஒன்றை கேட்க நேர்ந்தது. அதனை தொடர்ந்து மில்லியனல்ஸ் தலைமுறை பற்றிய ஒரு டைம் ஆர்டிகிள் ஒன்றும் படிக்க நேர்ந்தது. இந்த இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விசயங்கள் பகிரப்பட்டு இருந்தன.

சைமன், மில்லியனல்ஸ் தலைமுறையை ஆபிசில் வழி நடத்துவது எப்படி ஒரு கடினமான வேலை என்று கூறுகிறார். அவரும் நான் முன்பு பகிர்ந்ததை போன்ற விஷயங்களை பகிர்ந்து , அவர்கள் இப்படி செய்வதற்கான காரணங்களை விளக்குகிறார்.

 முதல் காரணம்: பெற்றோரின் வளர்ப்பு : 

பிள்ளைகளை செல்லம் கொடுத்து, கஷ்டம் தெரியாமல் வளர்க்கிறோம், தன்னம்பிக்கையுடன் வளர்க்கிறோம் என்று இந்த தலைமுறை பெற்றோர் பிள்ளைகளை பெரும்பாலும் வளர்கிறார்கள். பிள்ளைகள் பள்ளியில் கடைசியில் வந்தாலும் சரி, இல்லை பெயில் ஆனால் கூட, பரவாயில்லை என்று உற்சாகப்படுத்தியது.  எப்பொழுதும் தங்களுடைய குழந்தைகளை "நீங்கள் ஸ்பெஷல்" என்று சொல்லி, என்ன வேண்டுமோ அதனை தர/தந்த பெற்றோர்.  குழந்தைகளுக்காக டீச்சர்களிடம் சண்டை போட்ட பெற்றோர். தங்கள் குழந்தைகள் பெஸ்ட் நீங்கள் தான் சரியாக குழந்தைகளை ட்ரீட் செய்யவில்லை என்று கம்பளைண்ட் செய்த பெற்றோர்.

இதெல்லாம் சரியான அணுகுமுறையா? என்றால் failed parenting என்கிறார் சைமன் அவர்கள். ஏனெனில், இந்த தலைமுறைக்கு, தோல்வி தரும் வேதனையும்,அவமானத்தால்  முன்னேறும் உத்வேகம் வந்து அதன் பிறகு எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று  செயலாற்றுவதும் இல்லாமல் போய் விட்டது என்கிறார். எப்பொழுதும் ஒருவர் வென்று கொண்டே இருந்தால், தோல்வி என்பது என்னவென்று தெரியாமல்போய்  விடும், அடிபட்டு, மிதிபட்டு, வென்றால் மட்டுமே வெற்றியின் சுவை தெரியும்.

"நீ எப்பொழுதும் ஸ்பெஷல்"என்று  வளர்க்கப்பட்ட இந்த தலைமுறை ,வெளி  உலகில் விடப்படும் போது , வேலைக்கு வரும் போது , யாரும் அவர்க்ளை, "நீங்கள் ஸ்பெஷல்", என்று சொல்லவோ, எப்பொழுதும் ஏதாவது "அவார்ட், ரெகக்னிஷன்" கொடுக்கவோ மாட்டார்கள். இதனால் இவர்கள் ரெகக்னிஷன் இல்லை, சந்தோசம் இல்லை என்று ஆரம்பித்து விடுகிறார்கள்.  அடுத்தது என்ன என்று தேட ஆரம்பித்து விடுகிறார்கள்.

இரண்டாவது காரணம்: டெக்னாலஜி 

இந்த தலைமுறை அதிகம் சோசியல் மீடியா உபயோகித்த/உபயோகிக்கும் தலைமுறை. ஒவ்வொரு முறையும் செல்போன் ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம், வாட்ஸாப், ட்விட்டர்  என்று தன்னை பற்றி
அதிகம் பப்லிஷ் செய்த தலைமுறை. எப்பொழுதும் போனும் கையுமாக "லைக்ஸ்/கிளிக்ஸ்/கமெண்ட்ஸ்" வருகிறதா என்று பார்த்த  தலைமுறை. ஒவ்வொரு முறை லைக்ஸ் வரும்போதும், மூளையில் ப்ளெஷர் சென்டர்இல் "டோபோமின்" சுரக்க ஆரம்பிக்கிறது. இது ஒரு இன்ஸ்டன்ட் சந்தோசம் தரும் ஹார்மோன். அதிகம் டோபோமின் சுரக்க சுரக்க, அதிகம் நம்மை பற்றி போஸ்ட் செய்ய ஆரம்பிப்பார்கள். இன்டர்நெட் அடிக்சன் எல்லா தலைமுறைக்கும் தற்போது இருக்கிறது என்றாலும், சிறு  வயது முதல் இந்த அடிக்சனில் இருப்பவர்கள் மில்லியனல்ஸ்.

இதே  "டோபோமின்", ஒருவர் தண்ணி அடிக்கும் போதும், சிகரெட் புகைக்கும் போதும்,  சீட்டாடும் போதும், ரிலீஸ் செய்யப்படும் ஒன்று, அதாவது, மற்ற போதை போல இதுவும் ஒரு வகை போதை. தன்னை முன்னிறுத்தி எப்போதும் மற்றவர்கள் தன்னை பற்றி பேச வேண்டும் என்று நினைக்க வைக்க நினைக்கும் போதை. இன்ஸ்டன்ட் க்ராடிபிகேஷன் அடைய/ந்த அதற்காக எல்லாமுமே செய்ய விளையும் தலைமுறை.

இந்த தலைமுறை எல்லாவற்றையும் உடனே, உடனே பார்த்து விடுகிறார்கள்.
எல்லாம் உடனே உடனே என்று பழக்கப்பட்ட இவர்கள், வேலையில் அங்கிகாரமும் உடனே வேண்டும் என்று நினைக்கிறார்கள். வெற்றிக்கு வெயிட் செய்வது, கஷ்டப்பட்டு உழைப்பது என்பதெல்லாம் அவர்களுக்கு பிடிப்பதில்லை. எல்லாமே உடனே அவர்களுக்கு நடந்து விடவேண்டும். "இப்பொழுதே, இங்கே, எனக்கு, எனக்கு" கிடைக்க வேண்டும். அடுத்தவர்களை பற்றிய சிந்தனையோ, செயலோ இருப்பதில்லை.



மூன்றாவது காரணம்: மக்களுடன் எப்படி பழகுவது என்று அறியாமல் இருப்பது


இதனை கேட்டவுடன் பலரும், என்ன சொல்லுறீங்க, இந்த தலைமுறை தான் அதிகம் பேஸ்புக் நண்பர்கள் உள்ள தலைமுறை, எப்பொழுதும் "வெல் கன்னெக்ட்டடட் " தலைமுறை. இப்படி சொல்லும் பலரை கேட்டு இருக்கிறேன். ஆனால், இந்த தலைமுறை தங்களுடைய அனைத்து நண்பர்களையும் நிழல் உலகத்தில் மட்டுமே வைத்து இருக்கிறார்கள். அந்த நிழல் உலகில் தன்னை பற்றிய பல பல பிம்பங்களை உருவாக்கி வைத்து இருக்கிறார்கள். அந்த பிம்பங்கள் உடையாத வாறு மெயின்டைன் செய்கிறார்கள். ஆனால் உண்மையில் இந்த தலைமுறை மக்களுக்கு தன்னை பற்றிய சுயதேடல் அல்லது சுயமரியாதை மிக குறைவு. அடுத்தவர்கள் தன்னை பற்றி உயர்வாக நினைக்கவைக்க என்னென்ன தேவையோ அதனை செய்யும் அவர்கள், தன்னுடைய சுயம் என்ன?, என்பதை மறந்த தலைமுறை.

ஒரு நல்ல, நம்பிக்கையான நண்பர்/நண்பிகள் இல்லாத தலைமுறை இதுவாகத்தான் இருக்கும். வெளியே சுற்றவும், தண்ணி அடிக்கவும், சினிமா செல்லவும் அதிகம் கூட்டம் கூட்ட மெனக்கெடும் இந்த தலைமுறை, நல்ல அர்த்தமுள்ள, ஆழமான நட்பை வளர்க்க தவறி விட்டதென சொல்லலாம். அப்படிப்பட்ட நட்பை எப்படி வளர்ப்பது என்று தெரியாத தலைமுறையும் இதுவே. உண்மை நட்பை அறியவேண்டுமானால், நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும். நீங்கள் மற்றொருவராக இருந்தால், அந்த மற்றொரு பிம்பம் மட்டுமே நீங்கள் என்று உங்கள் நண்பர்கள் அறிவார்கள். இந்த தலைமுறை, தன்னுடைய உண்மையான சொரூபத்தை காட்டாதவர்கள். எப்பொழுதும் ஒரு முகமூடி அணிந்து நடப்பதாலேயோ என்னவோ, உண்மையான நட்பு என்பது என்ன, எப்படி நட்புகளை உறவுகளை வளர்ப்பது என்று அறியாமல் வளர்க்கிறார்கள்.

இந்த நிலையில், ஆபிசில் வேலை செய்ய வேண்டும் என்றால், நீங்கள் மட்டும் அல்ல, உங்களை சுற்றி உள்ள மக்களுடன் பழக தெரிந்திருக்க வேண்டும். பீப்பிள் ஸ்கில்ஸ் மிக முக்கியம். ஆபிசில் நீங்கள் ஒருவர் சூப்பர்ஸ்டார் ஆக இருந்தாலும், ஒருவர் மட்டுமே அனைத்தையும் தெரிந்திருக்க முடியாது. எப்பொழுதும் ஒரு   "டீம்" என்பதே ஒரு காரியத்தை சரிவர நிறைவேற்ற முடியும்.   அடுத்தவர்களுடன் எப்படி பழகுவது என்பதே அறியாத இந்த தலைமுறை, "தான், தான்", என்று மட்டுமே நினைக்கும் ஒரு தலைமுறை. இதனாலேயே, ஒரு "டீம்" என்று வந்துவிட்டால், இவர்களால்
சமாளிக்க முடிவதில்லை.

எனக்கு சைமன் அவர்களின் பேச்சை கேட்ட போது, அதனை சார்ந்த விஷயங்களை வாசித்த பொது, அதில் இருக்கும் உண்மையை நிதர்சனத்தை மறுக்க முடியவில்லை.  இந்த தலைமுறையை நினைத்து பாவமாக இருந்தது. அதிகம், சுயமரியாதை இல்லாத, சுயம் என்ற ஒன்று இல்லாத, பொறுமை இல்லாத, சோசியல் ஸ்கில்ஸ் இல்லாத, எப்படி அடுத்தவர்களோடு பழக வேண்டும் என்று அறியாத, சந்தோசமே இல்லாத ஒரு தலைமுறை உருவாகி இருக்கிறது/ உருவாகி கொண்டிருக்கிறது.  என்ன செய்து இவர்களை மீட்டெடுப்பது?


டிஸ்கி :

இது மில்லியனல்ஸ் தலைமுறை குறித்த என்னுடைய அனுபவங்கள், வாசித்த விடயங்கள் மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.  நன்றி