Sunday, March 27, 2016

அமெரிக்க மற்றும் இந்தியா பள்ளி ஆண்டு விழா பெயரில் நடக்கும் கூத்துகள்!

இது நோர்தேன் ஹெமிஸ்பியர் இல் இருக்கும் பல நாடுகளில் பள்ளி இறுதி தேர்வு நடக்கும் காலம்.

ஒவ்வொரு நாட்டிலும் அதன் தட்ப வெப்ப நிலை பொறுத்து வேறு வேறு மாதங்கள் பள்ளி இறுதி தேர்வு நடக்கலாம். இந்தியாவில் பல பள்ளிகளில் முக்கால் வாசி நேரம் ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் பள்ளி இறுதி தேர்வு கோடை விடுமுறை மாதங்கள் ஆகும். ஏனெனில் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் வெயிலின் தாக்கம் மற்றும் கோடை காலம் ஏப்ரல் மே மாதங்கள் என்பதால்.

அமெரிக்காவில் பல மாகாணங்களில் மே, ஜூன் மாதம் தான் பள்ளி இறுதி தேர்வு அல்லது பள்ளி முடிவு ஆகி ஜூன், ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் விடுமுறை இருக்கும். ஏனெனில் அமெரிக்காவில் ஜூன் ஜூலை மாதங்கள் தாம் கோடை காலம். கனடாவில் செப்டம்பர் மத்தியில் பள்ளி திறக்கும் என்று நினைகிறேன்.  

நிற்க, இந்த பதிவு கோடை காலங்கள் எப்படி நாட்டுக்கு நாடு மாறுபடுகின்றன என்பதனை குறித்தவை அல்ல. மாறாக பள்ளி ஆண்டுவிழாக்கள் என்ற பெயரில் செய்யும் சில விஷயங்கள்/கூத்துக்கள் குறித்தவை.

இந்திய பள்ளி ஆண்டுவிழாக்கள் 

இந்தியாவில் பல பள்ளிகள் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பள்ளி ஆண்டுவிழாக்கள் நடத்துகின்றன. அதில் நம் குழந்தைகளும் நடனம் ஆடட்டும் என்று பல பெற்றோரும் அதனை ஊக்க படுத்துகின்றனர். நான் சொல்வது எலிமெண்டரி ஸ்கூல் ஆண்டுவிழாக்கள் என்றாலும் பல உயர் நிலை பள்ளிகளும் இதனை நடத்துகின்றன என்று அறிய முடிகிறது. நம்ம குழந்தைகளுக்கும் ஒரு சான்ஸ் என்று நிறைய பெற்றோர் இப்போது நினைப்பதை பார்க்க முடிகிறது. இதனை சாக்காக வைத்து கொண்டு தனியார் பள்ளிகள் செய்வது சில நேரங்களில் ஓவர். முதலில், ஆண்டுவிழாக்களில் குழந்தைகளுக்கு டிரஸ் நாங்களே கொடுத்து விடுவோம், நீங்கள் எங்களுக்கு குறிப்பட்ட தொகை மட்டும் கொடுத்துடுங்க என்பார்கள். சரி நமக்கு தொல்லை விட்டது என்று நீங்கள் முடிவு செய்து கொடுக்க தொடங்கினால் பட்டியல் நீளும்.

டிரஸ்க்கு, உபயோகிக்கும்பொருட்களுக்கு, டான்ஸ் சொல்லி கொடுப்பவருக்கு என்று ஒவ்வொருன்றுக்கும் தனி தனியாக பணம் கேட்பார்கள். இதில் முக்கால் வாசி நேரம் வெளியில்  இருந்து எந்த டான்ஸ் மாஸ்டரும் வர மாட்டார், மாறாக உள்ளுக்குளே இருக்கும் பள்ளி ஆசிரியர் நடனம் சொல்லி கொடுப்பார்.  அதில் காசு பார்பார்கள் பள்ளி நிர்வாகம். அடுத்து பிள்ளைகளுக்கு எடுக்கும் உடைகளுக்கு என்று குறைந்தது 1500 இல் இருந்து 2500 வரை வசூலிப்பார்கள். ஆனால் LKG, UKG, முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு என்று ஒரே மாதிரி டிரஸ் வாங்க எப்படியும் ஆகும் செலவு 600 இல் இருந்து 800 வரை மட்டுமே ஆகும். மீதி உள்ள பணம் எல்லாம் பள்ளிக்கு. அதே போல ப்ரோப்ஸ் அதற்க்கும் சேர்த்து காசு அடிக்கிறார்கள்.

இப்படி பெற்றோரிடம் அடிக்கும் காசிலேயே அவர்களின் தனியார் பள்ளிக்கு விளம்பரம் செய்து கொள்ளுகிறார்கள். முடிவாக பங்கு பெரும் குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ், பென்சில் பாக்ஸ் போன்ற பரிசுகள் கொடுத்து நல்ல பேரு வாங்கி கொள்ள முனைவது.

அமெரிக்க தமிழ் பள்ளி ஆண்டுவிழாக்கள் 

சரி இந்தியாவில் நடக்கும் பள்ளி ஆண்டுவிழாக்கள் தாம் அப்படி இங்கெல்லாம் ஆண்டு விழாக்கள் நடக்குமா? என்று கேட்பவர்களுக்கு. ரெகுலர் பள்ளிகளில் ஒரு சில நேரம் பாடல்கள் அல்லது மியூசிக் ரீசைடல், கோரஸ் மியூசிக் போன்றவை நடக்கும். ஆனால் இந்திய அமெரிக்கா வார இறுதி நாள் மொழி பள்ளிகளில் எல்லாம் நம்ம ஊரில் நடப்பது போல குழந்தைகள் பங்கு பெரும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் நடக்கும். இறுதியில் பள்ளி இறுதி வகுப்பு முடித்த குழந்தைகளுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியும்  நடக்கும்.

இது போன்ற நிகழ்ச்சிகளை பள்ளிகள் நடத்துவது இல்லை, மாறாக உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்களிடம் ஒரு குரூப் இருந்தால் நீங்களே பதிவு செய்து பங்கு பெறுங்கள் என்று விண்ணப்ப படிவம் பள்ளியில் இருந்து அனுப்புவார்கள். அதற்க்கு பிறகு யாரெல்லாம் விண்ணப்பம் அனுப்புகிறார்களோ அவர்களிடம் யார் யார் பங்கு பெறுகிறார்கள், குழந்தைகள் பெயர்கள் , யார் ஒருங்கிணைபாளர்கள் என்று பதிவு செய்கிறார்கள். பின்னர் பள்ளியின் சார்பில் எவென்ட் ஒருங்கிணைபாளர்கள் குழு நடன ஒருங்கினைபாளர்களை தொடர்பு கொள்ளுவார்கள். இதில் அனைவரும் தன்னார்வ தொண்டர்கள் என்பதால் பணம் என்னும் விஷயம் இருப்பதில்லை.

அமெரிக்காவில் மட்டும் பல பல தமிழ் பள்ளிகள் "கலிபோர்னியா தமிழ் அகாடமி" பாட திட்டங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்கின்றனர். நாங்கள் இருக்கும் ஜியார்ஜியாவில் தமிழ் ஒரு மொழி பாடமாக படிக்கலாம் கிரெடிட் வாங்கி கொள்ளலாம் என்பதால் ஒவ்வொரு வருடமும் நிறைய குழந்தைகள் பள்ளி இறுதி தெரிவு முடிந்து பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும்.

அடடா, பரவாயில்லையே வெளி நாட்டுக்கு சென்றும் தமிழை எப்படி எல்லாம் வளர்கிறார்கள். பணம் என்பதே இல்லை போல, எல்லாரும் எல்லாமும் சமம்,  என்று யாராவது நினைக்க ஆரம்பித்தால்..ப்ளீஸ்  ஸ்டாப். ஏனெனில் நான் மேலே சொன்னவை எல்லாம் நல்ல விஷயங்கள் அல்லது அனைவராலும் பரப்பப்படும் விஷயங்கள் மட்டுமே.

இங்கும் பணம் என்ற ஒன்று உண்டு அது பள்ளிகளிடம் இருந்து கேட்கபடுவது இல்லை. மாறாக "தமிழ் சங்கங்கள்" இதனை கேட்கும். உதாரணமாக, தமிழ் பள்ளிகள் அனைத்தும் தமிழ் சங்ககளின் கீழ் இயங்குகின்றன என்பதால் ஆண்டு விழாக்கள் எல்லாம் தமிழ் சங்கங்கள் நடத்து கின்றன.  ஒவ்வொரு ப்ரோக்ராமும் நடன குழுக்களை சார்ந்தது, அவர்களே குழந்தைகள் துணி மணி, ப்ரோப்ஸ், எல்லாம் கொண்டு வர வேண்டும்.

2 மணிக்கு ப்ரோக்ராம் ஆரம்பிக்கும் ஆனால் 1:30 கே பங்கு பெரும் அனைத்து நடன குழுக்களும் இருக்க வேண்டும் என்பார்கள். இதில் பங்கு பெற வரும் குழந்தைகள் அல்லது பெற்றோர்களுக்கு நாங்களே சாப்பாடு போடுகிறோம் வாங்கி கொள்ளுங்கள் என்பார்கள். சரி என்று நடன குழுக்களும் , பங்கு பெரும்  குழந்தைகளும் அங்கு சாப்பாடு வேண்டும் என்று புக் செய்தால் நடப்பது கொடுமை. 8$, 6$ என்று கேட்பார்கள், ஆனால் அவர்கள் கொடுக்கும் சாப்பாடு 1$ அல்லது 2$ மட்டுமே.  எதோ பிரசாதம் போல இருக்கும். இதுக்கு போய்  8$ ஆ கொடுமை என்று தலையில் அடித்து கொள்ள வேண்டும்.

இதனை தவிர நிறைய நகை, இஷா யோகா அல்லது சாப்பாட்டு கடை என்று விளம்பர ஸ்டால்கல் வைக்க அந்த அந்த கம்பனிகளிடம் இருந்து பணம் வாங்கி கொள்ளுவார்கள். அதனை தவிர ப்ரோக்ராம் அறிவிக்க என்று பெரிய ஸ்க்ரீன் வைப்பார்கள் ஆனால் அதில் முக்கால் வாசி நேரம் விளம்பரங்கள் மட்டுமே ஓடும். அனைத்தும் அட்வேர்டிசிங் பணம்.

நடக்கும் ப்ரோக்ராம் எல்லாம் அந்த அந்த நடன குழுக்களை சார்ந்தது என்பதால் தமிழ் சங்கத்துக்கு எந்த செலவும் இல்லை. பணிபுரிபவர்கள்  எல்லாரும் தன்னார்வ தொண்டர்கள், அதனால் சம்பளம் என்று எந்த செலவும் இருப்பதில்லை. விழா மேடை ஒலி ஒளி செட்டிங் போன்ற ஒரு சில செலவு விஷயங்கள் தவிர பெரிய செலவு என்று எதுவும் இருப்பதில்லை. அனைத்தும் கொள்ளை லாபம், தமிழ் சங்கத்துக்கு என்று சொல்லி கொள்ளுகிறார்கள். யாருக்கு செல்கிறதோ?

இது ஒரு புறம் இருக்க, பள்ளியில் இருக்கும்  எவென்ட் ஒருங்கினபாளர்கள் அல்லது ஒருங்கிணைபாளர்கள் குழு செய்யும் பாரபட்சம், ஐயோ சாமி என்று இருக்கும். அதாவது, அவர்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது அவர்களின் குழந்தைகள் பங்கு பெரும் நிகழ்சிகள் எனில் நல்ல டைம் ஸ்லாட் கொடுப்பது, அல்லது நிறைய நேரம் ஆட கொடுப்பது. அவர்களுக்கு தெரிந்த நடன குழுக்கள் மட்டுமே உற்சாக படுத்துவது மற்ற குழுக்கள் எனில், தற்பொழுது ஸ்லாட் இல்லை வேறொரு டைம் முயற்சி செய்யுங்கள், இல்லை இவ்வளவு நேரம் மட்டுமே கொடுக்க முடியும், இந்த பாட்டு நாங்கள் ஆட வைத்து இருக்கிறோம், வேறு ட்ரை செய்யுங்கள் என்று பாட்டை பாதியில் மாற்றுவது, வேறு குரூப் முதலிலேயே ஆட இருக்கிறார்கள், என்று பந்தா காட்டுவது.

ப்ரோக்ராம் நேரங்கள் எப்பொழுது நடக்கும் என்று தனக்கு தெரிந்த குழுக்களுக்கு மட்டும் அறிவிப்பது, மற்ற குழுக்களை கண்டு கொள்ளாமல் அல்லது செய்திகள் நிகழ்ச்சி நிரல்களை சொல்லாமல் விடுவது. என்ன டைம் எங்கள் ப்ரோக்ராம் என்று சென்று கேட்டாலும் எரிந்து விழுவது என்று..இந்த பந்தா பேர்வழிகள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாதவை.

உலகின் எந்த மூலை சென்றாலும் மக்களின் பணமும் பதவியும் அதிகார வேட்கையும் மாறாதவை என்பது திண்ணம்.


டிஸ்கி 

5 டு 6 வயது சிறு குழந்தைகள் வைத்து GATS தமிழ் பள்ளிகள் நடத்திய தமிழ் பள்ளிகள் ஆண்டு விழாவில் குழு நடன ஒருங்கினைபாளாராக இருந்து நான் அனுபவித்த விடயங்களின் தொகுப்பே இது. இது என்னுடைய சொந்த அனுபவம் மட்டுமே.

Friday, March 18, 2016

குழந்தை மணமகள்களும் , அழகான சமன்பாடுகளும்!

முதல் விஷயம். சில வாரங்களுக்கு முன்பு "மியூசியம் ஆப் நேசுரல் ஹிஸ்டரி" சென்றிருந்தேன், அங்கு "நேஷனல் ஜியோக்ராபி"யின் சார்பில் புகைப்பட கண்காட்சி ஒன்று வைத்து இருந்தார்கள். பல பல அருமையான இயற்க்கை புகைப்படங்கள் கண்களை கவர பார்த்து கொண்டு வந்த நான்,  ஸ்டெப்னி சிங்குலர் என்பவரின் "டூ யங் டு வெட்" எனப்படும் குழந்தை மணமகள்கள் புகைப்படங்கள் கண்டபோது திகைக்க நேர்ந்தது. புகைப்படத்தில் காணப்பட்ட 8-10 வயது சிறுமிகள்  திருமணமாகி அவர்களின் கணவர்களுடன் சோகமாக கொடுத்த போஸ் பார்க்கவே மனதை வருத்தியது.


அரபு நாடான ஏமனில் எடுக்க பட்ட புகைப்படங்கள் அவை. எண்ணெய் வளங்கள் ஏதும் இன்றி மிக மிக  ஏழை நாடான ஏமனில் பிறக்கும் அல்லது வளர்க்கப்படும் பல பெண் குழந்தைகள் அவர்களின் 15 வயதுக்குள் அவர்களுக்கு கொடுக்கப்படும் டவுரிக்காக அவர்களின் வயதை விட 2-3 மடங்கு வயது நிறைந்த ஆண்களுடன் திருமணம் முடித்து  கொடுக்க படுகிறார்கள். புகைப்படங்களில் காணப்பட்ட குழந்தைகள் 9-10 வயது குழந்தைகள் அவர்களின் கணவர்களின் குறைந்தபட்ச வயது 30-40.

புகை பட கண்காட்சியில் நான் பார்த்த அனைத்து படங்களும் சொல்லுவது என்னவென்றால், குழந்தை திருமணங்கள் சாதி, மதம், இனம், நாடு கடந்த ஒரு நிகழ்வாக இருக்கிறது என்று தெரிவிக்கிறது. வளரும் நாடுகளும் இதில் அடங்கும், நேபால், இந்தியா, நைஜீரியா போன்ற பல பல நாடுகளில் திருமணம் ஆக போகும் அல்லது திருமணம் ஆன சிறுமிகளின் பல புகைப்படங்கள் அவர்களின் கருத்துக்கள் எல்லாம் கண்ணீர் வரவழிக்கும்.  திருமணம் முடிந்த கையோடு கணவரால் பாலியல் தொல்லைக்கும் , 12 -13 வயதில் ஒரு குழந்தைக்கு  தாயாகவும் ஆகும் பல குழந்தைகள் பல பாலியில் தொற்றுக்கும் பல ஆப்ரிக்கா நாடுகளில் HIV க்கும் ஆளாவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருக்கும் கொடுமை.


இதனை சார்ந்த ஒரு புத்தகமும் வாசிக்க நேர்ந்தது "I am Nujood, Age 10 and divorced" என்ற 10 வயது நுஜூத் என்ற பெண்ணின் சுயசரிதை. ஏமன் நாட்டை சேர்ந்த 10 வயதில் திருமணம் முடிக்கப்பட்டு கணவரால்? 10 வயதில் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்பட்டு, வீட்டை விட்டு ஓடி வந்து கோர்டில் தஞ்சம் புகுந்து முடிவில் விவாகரத்து கொடுக்கப்பட்ட ஒரு சிறுமியின் கதை அது.  படிக்க படிக்க கண்ணீர் வர வழிக்கும் ஒன்று. எந்த நாடாக இருந்தாலும் எந்த ஊராக இருந்தாலும் பெண்கள், பெண் குழந்தைகள்  அனுபவிக்கும் கஷ்டங்கள் மட்டும் மாறாமல் இருக்கிறது.


அடுத்து நான் ரசித்த  விஷயம் கணக்கு குறித்தது. பள்ளி கல்லூரி நாட்களில் கணிதம் மிக விருப்ப பாடம். பயன் என்ன வென்று அறியாமலேயே நிறைய மனனம் செய்து கணித சமன்பாடுகளை கற்றுகொண்டு இருக்கிறேன். உதாரணமாக pi எனப்படும் pi =3.14 என்னும் நம்பர், சிறு வயதில் வட்டத்தின் ஆரம் மற்றும் பரப்பளவு  கண்டு பிடிக்க உதவும் ஒன்று. அதே போல arithmetic progression எனப்படும் 2,4,6,8,10.. போன்ற 2 வித்தியாசம் உள்ள நம்பர் சீரிஸ் போன்ற எளிதான சீரிஸ் .. இவை எல்லாம் மனனம் செய்து கடம்  அடித்து படித்து இருக்கிறேன் அதன் உபயோகம் தெரியாமல். சொல்ல போனால் நம்மில் பலர் நாம் சிறு வயதில் படித்த படிப்புக்கும் இப்பொழுது பார்க்கும் வேலைக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஏனெனில் நமக்கு எந்த இடத்தில் சமன்பாடுகள் உபயோக்கிக்க படும் என்று ப்ராக்டிகல் ஆக எங்கும் சொல்லி கொடுப்பதில்லை. உதாரணமாக என்னுடைய முதுநிலையில் fourier சீரிஸ் என்னும் ஒரு சமன்பாடுகள் வரும். அது எங்கு உபயோகிக்க வேண்டும் என்று யாரும் சொல்லி கொடுக்கவில்லை இன்னும் கூட சொல்லி கொடுக்கபடுவதில்லை. ஆனால், என்னுடைய முனைவர் படிப்பின் போது புரதங்களின் வடிவமைப்பை பற்றி படிக்கும் போது அல்லது ஆராய்ச்சி செய்யும் போது எப்படி fourier சீரீஸ் உபயோகிக்க படுகிறது என்று ஆச்சரிய பட்டது உண்டு.

அதே போல புள்ளியியல் படிக்கும் பலரும் Bayes தியரம் என்ற ஒன்று படித்து இருப்பார்கள். என்ன சொத்தை தியரம் இது என்று நானே கடம் அடித்து படித்து இருக்கிறேன். ஆனால், இதன் ப்ராக்டிகல் உபயோகம் அளவற்றது. நிறைய ரீசனிங் அல்லது டிடெக்டிவ் வேலை பார்க்கும் பலர் அவர்களுக்கு தெரிந்தோ தெரியாமலோ உபயோகிப்பது இது. சொல்ல போனால் அகதா க்ரிஷ்டி அவர்களின் மையின் கதாநாயகனான "Hercule Poirot" வின் திறமையின் அடிநாதமே இந்த Bayes தியரம் தான்.

கணித சமன்பாடுகளின் உபயோகங்களை அறிந்து கொண்டால் அதனை படிப்பது மற்றும் பயன்படுத்துவது என்பது உங்களுக்கு பிடித்த செயலை செய்வது  போல சுவாரசியமானது. கணித சமன்பாடுகளின் மீது காதல் கொண்டிருந்த நான் BBC தளத்தில் "அழகிய சமன்பாடுகள்" என்ற போட்டி காண நேர்ந்தது. அதில் 12 கணித சமன்பாடுகளை கொடுத்து வாசகர்களை தேர்தெடுக்க சொல்லி இருந்தார்கள். பார்க்க படிக்க ஆச்சரியமாக  இருந்தது. அதில் என்னுடைய பாவரிட் ஆன Bayes தியரமும் இருந்தது கண்டு இன்னும் சந்தோசம்.




 உங்களுக்கும் கணித சமன்பாடுகள் பிடிக்கும் என்றால் http://www.bbc.com/earth/story/20160120-you-decide-what-is-the-most-beautiful-equation-ever-written என்ற தளம் சென்று உங்களுக்கு பிடித்த சமன்பாட்டுக்கு வாக்களியுங்கள்.


நன்றி.

Saturday, March 12, 2016

மாதவிடாய் மனிதரும், இந்தியாவின் மகளும் மற்றும் தாலிக்கொடியின் கனமும்!

இரண்டு டாகுமெண்டரி பார்க்க நேர்ந்தது இரண்டும் பெண்களை குறித்தது என்றாலும் இரண்டும் மனதை பிசைந்த விடயங்கள். முதல் விஷயம் ஒரு நம் மண்ணின் மைந்தனின் சாதனை என்றால், இரண்டாவது  ஒரு சிலரால் நமக்கு ஏற்பட்ட தலைகுனிவு குறித்தது.

நான் தற்பொழுது முகநூல் பக்கமே செல்வது இல்லை. நேரமின்மை ஒரு காரணம் என்றாலும், ஏதாவது ஒரு மொக்கை ஜோக், அல்லது அரசியல் வாதிகளை கலாய்க்கும் காமெடி வரும்.இதெல்லாம் பார்க்குறது தேவையா என்று நினைத்து செல்வது இல்லை. உபயோகம் என்றால் அவ்வப்போது அறிவியல் வெப்சைட்களில் இருந்து கொஞ்சம் கட்டிங் எட்ஜ் செய்திகள் வரும். அதனை பார்க்க மட்டுமே நான் உபயோகிப்பது.

பல நாட்களுக்கு பிறகு முகநூலை திறந்த பிறகு ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது. மனதை தொட்ட வீடியோ அது. "எப்படி  சின்ன சின்ன விஷயங்கள் பெரிய மாற்றத்தை தரும்" என்பதற்கு உதாரணமாக இருந்த ஒருவரை பற்றிய அல்ஜீரா வீடியோ. இதில் இன்னும் சந்தோசம் என்னவென்றால் அது ஒரு தமிழரை பற்றிய வீடியோ.

அவரை பற்றிய ஒரு செய்தியும் NPR செய்தியில் கேட்க நேர்ந்த போது, ஆச்சரியமாக இருந்தது. அவரை குறித்த ஒரு டாகுமெண்டரி யும் இருப்பதை கண்டு, இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று அதிசயமாக இருந்தது. அது அருணாசலம் முருகானந்தம் எனப்படும் "மாதவிடாய் ஆகும் ஆண்" ஒருவரை பற்றிய டாகுமெண்டரி.




இந்தியாவில் ஒன்றில் பத்து பெண்கள் பள்ளியை விட்டு விலகுவதற்கு முக்கிய காரணம் மாதவிடாய் நேரங்களில் சுகாதாரமான சானிடரி நாப்கின் கிடைக்காமல் கரைகளுக்கு பயந்து அல்லது ஒதுக்கப்பட்டு வெட்கப்பட்டு விலகுவது. அல்லது பழைய துணிகளை உபயோகித்து நிறைய நோய்களுக்கு ஆளாவது என்று பல பல பிரச்சனைகள் சந்திக்கிறார்கள். எப்படி இது போன்று இருக்கும் பெண்களுக்கு குறைந்த செலவில் நாப்கின்கள் உபயோகிக்க கொடுப்பது கிடைக்க செய்வது என்று முயற்சி செய்து வென்று காட்டிய ஒரு சாதாரண மனிதனின் சாதனை இது. தன்னுடைய ஒவ்வொரு முயற்சியும் எப்படி தன் மனைவியால் சொந்த பந்தங்களால் புறக்கணிக்க பட்டது, தன்னுடைய சோதனை முயற்சியை வெற்றியடைய செய்ய தானே சானிடரி நாப்கின் அணிந்து முயற்சி செய்தது என்று அருணாசலம் முருகானந்தம் அவர்களின் ஒவ்வொரு செயலும் வியக்க வைத்தன. இவற்றை எல்லாம் விட எனக்கு மிக மிக ஆச்சரியமும் பெருமையும் பட வைத்தது, இவரை பல பெரிய பெரிய கம்பனிகள் அணுகி இவரின் மெசினை வாங்க முயற்சி செய்தாலும் இது ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று யாருக்கும் விற்காமல் உறுதியுடன் இருக்கும் இவரை பார்த்தவுடன், இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் இன்னும் மழை பெய்கிறதோ என்று என்ன தோன்றுகிறது.


அடுத்த டாகுமெண்டரி, "இந்தியாவின் மகள்" எனப்படும் BBC வீடியோ. 2012 இல் நிகழ்ந்த நிர்பயா கற்பழிப்பு மற்றும் கொலை குறித்த டாகுமெண்டரி. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த டாகுமெண்டரி நெட்ப்ளிக்ஸ் புண்ணியத்தில் பார்க்க நேர்ந்தது. சமீப காலத்தில் நான் பார்த்த பல நிகழ்ச்சிகளில் என்னை மிக மிக உலுக்கிய ஒன்று உண்டென்றால் அது இது தான்.





அந்த பெண் அனுபவித்த ஒவ்வொரு நிகழ்வும் நினைக்கவே மனது வலிக்கிறது. இது நிர்பயா மட்டும் அல்லாமல் நிர்பயா போன்றே எத்தனை எத்தனை பெண்கள் இது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள் என்று  மனம் வலிக்கிறது. இவற்றை எல்லாம் விட எனக்கு மிகவும் வலித்தது பெண்களை குறித்த குற்றவாளியின் வாக்குமூலம்.  இது குற்றவாளி என்று மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் பாதிக்கு  பாதி படிப்பறிவில்லாத பல ஆண்களின் மனவோட்டமாக மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. என்ன தப்பு நாங்கள் செய்து விட்டோம் என்று கூறும் குற்றவாளிகள் இருக்கும் வரை,நம்மை  போன்ற நாடுகள் எவ்வளவு தான் மற்ற விடயங்களில் முன்னேறியதாக அறிவிக்க பட்டாலும் என்னை பொருத்தவரை மிக மிக பின்தங்கிய நாடு மட்டுமே.

முடிவாக ஒரு லைட் மொமென்ட். அது என் அண்ணி கூறியது. மதுரையில் இப்பொழுதெல்லாம் ஒரு நம்பிக்கை நிகழ்வதாக அவர் கூறியது.  அதாவது  பெண்களின் தாலிக்கொடி எவ்வளவுக்கு எவ்வளவு தடிமனாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவளின் கணவரின் ஆயுள் கெட்டியாக இருக்கும் என்று நம்புவதாக கூறினார். எப்படியெல்லாம் நகை கடை காரங்க கதை கட்டி விடுறாங்கள் பாருங்க என்று சிரிக்க தோன்றியது.

டிஸ்கி
இங்கு குறிப்பிட்ட அனைத்தும் என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே யாரையும் குறிப்பிடவில்லை.

நன்றி.