Thursday, January 27, 2011

எல்லாம் பயமயம்!

`தெனாலி படத்தில் கமல் ஒரு பயந்தாங்குளியாக நடித்திருப்பார். ஜெயராமை சந்திக்கும் முதல் காட்சியிலேயே தனக்கு எதை எதை பார்த்தால் பயம் என்று ஒரு லிஸ்ட் வாசிப்பார். அந்த லிஸ்ட் இல் புல் முதல் வெடிகுண்டு வரை இருக்கும்..

உண்மையில் ஒருவருக்கு இப்படி பய உணர்வு இருக்குமா என்று நான் யோசித்தது உண்டு. ஆனால் உன்மையில் மனிதர்களுக்கு இருக்கும் பய லிஸ்ட் மிக பெரியது என்று தோன்றுகிறது.
உதாரணமாக..
  1. முடி கொட்டிட்டா என்னாவது?
  2. பரு அல்லது சுருக்கம் வந்தால் முகம் அசிங்கமாயிடுமோ?
  3. லேட்டஸ்ட் மாடல் பொண்ணை/பையனை போல டிரஸ்/ செல் போன்/பைக்வாங்காட்டி யாரும் நம்மை பார்க்க/மதிக்க மாட்டாங்களோ?
  4. அந்த பொண்ணு/பையன் என்னை கிண்டல்/சைட் அடித்தால்/அடிக்காட்டி என்ன செய்வது?
  5. வாத்தியார் எல்லார் முன்னாடியும் திட்டினால் என்னாவது?
  6. ப்ரோமோஷன் கிடைக்கா விட்டால் என்னாவது?
  7. மெமோ கிடைத்து விட்டால் என்ன செய்வது?
  8. வேலையை விட்டு தூக்கிவிட்டால் என்ன செய்வது?
  9. பதவி போயிட்டா என்னாவது?
  10. பக்கத்து வீட்டுக்காரன்/காரி என்னை பத்தி என்னா நினைப்பா?

இதெல்லாம் சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் பெரிய லிஸ்ட் கட்டாயம் இருக்கும்

உண்மையில் நமது சமுதாயம் சிறுவயது முதலே நமக்கு பயங்காட்டியே ஒழுக்கத்தை சொல்லி கொடுத்து இருக்கிறது என்று தோன்றுகிறது. உதாரணமாக "
பூச்சாண்டி பிடிச்சிட்டு போயிடுவான்", "பிள்ளை பிடிகிறவன் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன்", "சரியா சாப்பிடாட்டி பூனை வந்துடும்"என்று குழந்தையை ஒழுக்கமாக வளர்க்க பயத்தை உண்டாக்குகிறோம்.

சிறுவர்கள் ஆன பிறகு இது போன்று எதுவும் கிடையாது என்பதில்லை, அப்பொழுது வேறு மாதிரியான பயஉணர்வு ஏற்படுத்தி ஒழுக்கத்தை போதிக்கிறோம். உதாரணமாக, "ஒழுங்கா சாப்பிடாட்டி TV கிடையாது", "ஒழுங்கா ஹோம்வொர்க் பண்ணாட்டி கிரிக்கெட்/கேம் கிடையாது", "ஒழுங்கா படிச்சு first ரேங்க் வராட்டி vacation கட் " போன்றவை.

இதனை போன்ற பயத்தின் மூலம் ஒழுக்கம் என்பது பெரியவர்கள் ஆன பிறகும் தொடர்கிறது. உதாரணமாக "தப்பு செய்தால் போலீஸ் பிடிக்கும்", "பாவம் செய்தால் நரகத்துக்கு போவோம்", "படிச்சு, பாஸ் செய்யாட்டி வேலை கிடைக்காது" என்பது போன்ற சில.

அரபு நாடுகளில் கடுமையான தண்டனைகள் தரப்படுவதால் தான் அங்கு குற்றம் நடப்பதும் குறைவாக இருக்கிறது. அதனாலேயே தமிழ் திரைஉலகில் அந்த காலத்து வாத்தியார் படங்களில் இருந்து இந்த காலத்து அன்னியன் வரை பல படங்கள் இதனை வலியுறுத்துகின்றன.

தண்டனை கிடைக்கும் என்று தெரிந்துகொண்டே குற்றம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அப்படிபட்டவர்கள் இருக்கும் இந்த நாட்களில் ஒருவர் ஒரு கிராமத்துக்கு வந்து “நான் 10 தங்க பார்களை உங்கள் கிராமத்துக்கு தருகிறேன், போலிஸ் எல்லாம் பிடிக்காது, யாரேனும் ஒருவரை கொலை செய்ய முடியுமா?” என்று கேட்டால் அந்த கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள், கொலை செய்வார்களா? இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா?

என்ன இது லூசு தனமா இருக்கு என்று நினைகிரீர்களா? இப்படி ஒரு சூழலை மையமாக கொண்டது தான் நான் இப்பொது வாசித்த Paulo Cohelco வின் புத்தகமான The Devil and miss Prym இல் கேட்கப்படும் கேள்வி இது..என்ன செய்வார்கள் அந்த கிராம மக்கள் நீங்களே சொல்லுங்கள்.

6 comments:

எல் கே said...

வித்யாசமா புத்தகத்தை அறிமுகப் படுத்தி இருக்கீங்க .. நன்றி

Chitra said...

Yes... Good one.

settaikkaran said...

//என்ன செய்வார்கள் அந்த கிராம மக்கள் நீங்களே சொல்லுங்கள்.//

சொல்லாட்டி சாமி கண்ணைக் குத்தும்னு பயமுறுத்த மாட்டீங்களே..? :-)

Avargal Unmaigal said...

என்னுடைய டீல் ஆர் நோ டீல் ( Deal or No Deal ) என்ற பதிவில் உள்ள வீடியோ க்ளிப்பை பாருங்கள். உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும் http://avargal-unmaigal.blogspot.com/2010/11/deal-or-no-deal.html

ஹுஸைனம்மா said...

//இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா?//

இந்தியாவில இன்னும் சீப்பா ஆட்கள் கிடைப்பாங்க கொலை செய்யன்னு அந்த எழுத்தாளர்கிட்ட சொல்லுங்க!! :-)))

சில பயங்கள் அவசியமானவைதானே நெறிப்படுத்தப்பட்ட வாழ்க்கைக்கு!!

வருண் said...

***“நான் 10 தங்க பார்களை உங்கள் கிராமத்துக்கு தருகிறேன், போலிஸ் எல்லாம் பிடிக்காது, யாரேனும் ஒருவரை கொலை செய்ய முடியுமா?” என்று கேட்டால் அந்த கிராமத்து மக்கள் என்ன செய்வார்கள், கொலை செய்வார்களா? இல்லை பணத்துக்காக பாவம் செய்யாமல் இருப்பார்களா?****

அச்சசோ! ஏங்க இப்படி கண்ட புத்தகமும் படிச்சு...

பணத்துக்காக இதுபோல் பாவம் செய்றவங்க ரொம்ப கம்மிங்க! ஆமா இன்றைக்கும்தான் :)