Saturday, April 7, 2012

அடிக்கடி கோக், பெப்ஸி குடிப்பவரா நீங்கள்?




அடிக்கடி கோக், பெப்ஸி குடிப்பவரா நீங்கள்?, அதன் நிறமும் சுவையும் மறக்க முடியாதது என்று நினைப்பவரா, எல்லாவற்றுக்கும் ”ஹாவ் எ கோக்” என்று சொல்பவரா நீங்கள்..அப்படி என்றால் உங்களுக்கு கான்சர் வரும் வாய்ப்பு அதிகம்.. எப்படி என்று கேட்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.


Center for Science in the Public Interest (CSPI) சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, கோக் மற்றும் பெப்ஸியில் இருக்கும் காரமல் கலருக்காக சேர்க்கப்படும்  4-methylimidazole (4-MEI) and 2-methylimidazole (2-MEI) போன்ற காரமல் கலரிங் ஏஜெண்ட்ஸ் கார்ஸினோஜெனிக் எனப்படும் கான்ஸரை தூண்டும் பொருள்கள் என கண்டறிய பட்டிருக்கின்றன.


http://www.cbsnews.com/8301-504763_162-57391560-10391704/chemical-found-in-cola-causes-cancer-watchdog-warns-what-does-fda-say/


http://www.dailymail.co.uk/news/article-2112335/Coke-Pepsi-change-recipe-avoid-putting-cancer-warning-labels.html

http://healthcarenewsblog.com/coke-and-pepsi-blink-will-tone-down-dubious-caramel-coloring/


இந்த அபாயமான கலரிங் ஏஜண்ட்ஸ் அதிக அளவில் கோக், பெப்ஸி போன்ற குளிர் பானங்களில் இருப்பதால் இங்கிருக்கும் கலிபோர்னியா மாகானத்தில் இந்த கலரிங் ஏஜெண்ட்ஸ் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
இதே போல பல மாகானங்களும் தடை செய்யபோவதாக அறிவித்ததால் பெப்சி, மற்றும் கோக் கம்பெனிகள் இந்த கலரிங் பொருளை மாற்றுவதாக இங்கு அறிவித்திருக்கிறார்கள்.



இது இந்தியாவில் இன்னும் அமல் படுத்த படவில்லை..இந்தியாவில் இளைஞர்களிடையே அதிக பாப்புலராக இருக்கும் இந்த காலத்தில் இந்திய மக்கள் நலன் கருதி அரசாங்கம் உடனடியாக இந்த கான்சர் ஏஜெண்டை தவிர்க்குமாறு கோக் மற்றும் பெப்ஸி கம்பெனிகளை வலியுறுத்த வேண்டும்..இல்லையேல் கான்சர் தாக்கம் அதிகரிக்கலாம்.

நன்றி.

படங்கள் : நன்றி கூகுள்.



4 comments:

வெங்கட் நாகராஜ் said...

இந்த aerated ட்ரிங்க்ஸ் எதையுமே குடிப்பதில்லை....

மக்களைப் பற்றிய அக்கரை இருந்தால் உடனே இதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும் பார்க்கலாம் - கோக் நிறுவனமும் அரசும் என்ன செய்கிறது என்று. மக்களும் தானாகவே இவற்றின் பயன்பாட்டையும் நிறுத்த வேண்டும்!

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

கவி அழகன் said...

Gd post

வவ்வால் said...

நீங்க ரொம்ப அப்பாவியா இருக்கிங்களே, நான் ஸ்கோல் படிக்கிற காலத்திலவே கேசரி பவுடர் எனப்படும் "மெட்டானில் யெல்லோ" கேன்சர் உருவாக்கும் பொருள்னு பாடப்புத்தகத்திலேயே போட்டு இருந்துச்சு, அதையே இன்னும் தடை செய்யலை. மக்களும் எதாவது விஷேஷம்னா சுவீட்டுக்கு கேசரினு கிண்டுறாங்க.

இப்போ தான் கேன்சர் வரும்னு கண்டுப்பிடிச்சு இருக்க கேரமல் கலருக்கு தடையாவது மண்ணாவது, உள்ளம் கேட்குமே மோர்னு குடிக்க தான் சொல்லுவாங்க :-))