Sunday, April 8, 2012

ஈ -வேஸ்ட் வாங்கலையோ ஈ-வேஸ்ட்!!!

Mobile Company Nokia, Samsung, Sony, LG, Motorola, Apple iPhone , Blackberry...

Facilities 3G, dual sim, camera, music player, Bluetooth, Internet, Email....

Electronics Company Onida, Sony, Toshiba, LG, Samsung, Nikon, Fuji, Cannon, Bose, Apple..

Facilities LCD TV, Plasma TV, digital camera,video camera, iPod, iPad, music system, home theater

இப்படி புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கிறது ...தினமும் புது புது மாடல் கள், இன்னைக்கு விட்டு நாளைக்கு வாங்கினால் இன்னும் நல்ல  மாடல் கிடைக்குமே..ஏங்கும் இளைஞர் நெஞ்சங்கள்.


புதுசா லேட்டஸ்ட் ஆ இருந்தா தான் எல்லாரும் மதிப்பாங்க இல்லாட்டி யாரும் மதிக்க மாட்டாங்க!! , இன்றைய உலகம் இதுதான்.

சரி, ஓல்ட் மாடல் செல் போன்களும், டிவிக்களும் என்னவாகும்? அவைகள் எல்லாம் பழைய electronics கடைக்கோ அல்லது குப்பை தொட்டிக்கோ போகப்படும்...



அங்கு. இருந்து அவை எங்கே போகின்றன என்னவாகின்றன?  யாருக்கு கவலை? எனக்கு புது செல் போன் வந்தா போதும்.

நம்ம ஊரு குப்பை போதாதென்று வெளிநாடுகளும் இதனை போன்ற இ-வேஸ்ட் கலை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்கின்றது.



இப்படி தூக்கி எறியப்படும் cell போன் களும்  டிவிக்களும், அதில் இருக்கும் இரும்பு, அலுமினியம் போன்ற பொருட்களுக்காக குப்பை பொறுக்குபவர்களால் பொறுக்க படுகின்றன. பின்னர் அதில் இருக்கும் உலோகங்கள் எல்லாம் எடுக்ககப்பட்ட பின்னர் எஞ்சி இருப்பது Integral Circuit & wires

சரி அவை என்னவாகின்றன?

வேறென்ன.? எரிக்கப்படுகின்றன..

ஆனால் இப்படி எரிப்பவர்கள் அந்த circuit இல் Cadmium, lead நச்சு பொருட்கள் இருக்கின்றன , அவை சூழ்நிலைக்கும், தமக்கும் கேடு விளைவிப்பவை என்று அறிவார்களா.

அதனை எரிக்கும் ஏழைகளையும் விடுங்கள்.. அவர்கள் வயிற்று பிழைப்பிற்க்காக வேறு வழி இன்றி இதனை செய்கிறார்கள்.

ஆனால் ..அப்படி எரியூட்டப்படும் இடங்களுக்கு அருகில் வசிப்பதால் தமக்கும் அந்த கேடு விளையும் என்று பொது மக்கள் அறிவார்களா?


இல்லை எந்த வேகத்தில் மார்க்கெட்டிங் செய்து பொருட்களை விற்கின்றோமே அதில் கொஞ்ச அளவாவது ப்ரோபர் டிஸ்போசல் முறைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று கம்பெனி கள்தான் செய்யுமா..

இல்லை...இந்திய மிளிர்கிறது என்று விளம்பரபடுத்தும் அரசாங்கம் , இப்படியே போனால் இந்தியா வியாதிக்கூடமாகிவிடும் என்று அறிந்து, இ-வேஸ்ட் பற்றியும் ரி சைக்ளிங் பற்றியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றுமல்லாமல் அதற்குரிய நடவடிக்கைகளும் துரிதமாக எடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் அறியுமா?

God only knows!

Photos: Google Images

4 comments:

ப.கந்தசாமி said...

Not even God can save India.

கோமதி அரசு said...

நல்ல விழிப்புணர்வு பதிவு முகுந் அம்மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு. இந்திய மக்கள் பற்றிய கவலை இவர்களுக்கு ஏது... தான் சம்பாதித்தால் போதும் என்ற குறிக்கோளே இவர்களுக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நினைச்சாலே பயம்மாத்தாங்க இருக்கு..