Monday, February 9, 2015

ஸ்ட்ரெஸை கட்டுபடுத்துவது எப்படி -1 ? பேனை பெருமாளாக்க வேண்டாம்


எப்பொழுதெல்லாம் நமக்கு பிடிக்காத நிகழ்ச்சிகள் நம் வாழ்கையில் நடக்கும் போதோ அல்லது புரிந்து கொள்ளாத கடினமான நபரை சமாளிக்க வேண்டி வரும் போதோ அல்லது வாழ்கையில் ஏமாற்றங்களையோ  அல்லது எதிர்பாராத சந்தர்ப்பங்களை சந்திக்கும் போதோ நாம் என்னவாகிறோம்.
overreact செய்கிறோம், எப்பொழுதும் அதனையே நினைத்து கொண்டு, ஒன்றை பத்தாக்கி,நூறாக்கி, ஆயிரமாக்கி, நாமும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி,  நாம் மட்டும் தான்  உலகின் ராசியற்ற மனிதன் என்று மனம் நொந்து என்று எல்லா எதிர்மறை விளைவுகளும் நடக்கும் என்று நினைத்து அழுது அரற்றி புலம்பி etc etc ...

பல நேரங்களில் பார்த்தோமானால் நாம் பெரிய பிரச்னை என்று நினைத்து அரற்றிய விஷயம் மிக சிறு பிரச்னை ஆக இருக்கும். சொல்ல போனால் பல சிறு பிரச்சனைகளை நாம் தான் ஊதி பெருசாக்கி அசைவற்று போகும் நேரங்களில் நாம் உண்மை நிலவரத்தை விட்டு வெகு தூரத்திற்கு சென்று விடுகிறோம். நாம் கற்பனை செய்த சந்தர்பம் மட்டுமே அப்போது நம் முன் நிற்கும். அதனால் பிரச்சனைக்கு சரியான தெரிவு காண முடியாது. 



சுருங்க சொல்லபோனால் பல சிறு பிரச்சனைகளை நாம் பெரிய எமெர்ஜென்சி ஆக்கி ஒரு எமெர்ஜென்சிக்கு பின் அடுத்தது என்று ஓடிகொண்டே இருக்கிறோம்.

காலம் செல்ல செல்ல, எந்த ஒரு பிரச்சனையையும் அவசர அவரமாக முடிக்காவிட்டால் அது தீர்க்கப்படவில்லை என்றே நாம் நம்ப ஆரம்பித்து விடுவோம். ஏன் இப்படி?

சில நாட்களுக்கு முன் எனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் அது, அது  நடந்து முடிந்தவுடன் பயங்கரமாக மனமுடைந்த நான் ஒரு நாள் முழுதும் அழுது கொண்டிருந்தேன். உடனே என் கணவர் சொன்னது இது " எலிக்கு பயந்து வீட்டை கொளுத்தாதே! நீ நீயாகவே இரு, சிறு பிரச்சனையை பெரியதாகாதே. அதெல்லாம் வேலை வெட்டியில்லாதவர்கள் செய்வது, தூக்கி போட்டுவிட்டு உன் முன்னே இருக்கும் வேலையை பார்" என்றார். இப்போது நான் அந்த பிரச்சனையை திரும்பி பார்த்தால் எனக்கு சிரிக்க தோன்றுகிறது. நான் ஏன் அதனை பெரிய பிரச்னை என்று நினைத்தேன் அழுதேன் என்று தெரியவில்லை. உனக்கு தெரிந்தது அவ்வளவு தான், என்று தூக்கி போட்டுவிட்டு நம் வேலையை போய் பார்க்கவேண்டும் என்பது நான் கற்ற பாடம்.

பின்னர் எனக்கு "Don't sweat the small stuff"  என்ற புத்தகம் பரிந்துரை செய்தார். வாழ்கையை எப்படி ஸ்ட்ரெஸ் இல்லாமல் அல்லது ஸ்ட்ரெஸ் குறைத்து வாழ்வது என்பதை கூறும் புத்தகம், அதனை பகிர்ந்து கொள்ளலாம் என்று எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.

அந்த புத்தகத்தின் துவக்க பகுதி தான் இது.

 "Life is too short to argue, fight or be negative in any way.  Count your blessings, value the people who matter and move on from the drama with your head held high."





3 comments:

ப.கந்தசாமி said...

அருமையான தத்துவம். ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்கவேண்டிய தத்துவம். வாழ்க்கை வாழ்வதற்காகத்தான். தவறிப்போனவைகளுக்காக அழுவதற்கு அல்ல.

முகுந்த்; Amma said...

நன்றி அய்யா.

வெங்கட் நாகராஜ் said...

அருமையான வாசகம்.

கவலை கொள்வதை தவிர்த்து விட்டால் வாழ்க்கை சந்தோஷ மயமானது.....