Thursday, February 19, 2015

தட்டையான உலகம் முதல் "break the internet" வரை.. சுருங்கிய மனித மனங்கள்.


நவம்பர் 9 1989, உலகவரலாற்றில் ஒரு முக்கியமான நாள்.  பெர்லின் சுவர்  இடிக்கப்பட்டு கிழக்கு ஜெர்மனியில் கம்யுனிசம்  வீழ்ந்த நாள். உலக பொருளாதார சந்தைகள் திறக்க அடிகோலிய நிகழ்வு அது என்பது  "The world is flat" புத்தகம் எழுதிய Thomas L. Friedman அவர்களின் கூற்று.  மிக சுவாரஸ்சியமாக  அவர் இதனை "சுவர் வீழ்ந்தது, ஆனால் விண்டோஸ் வளர்ந்தது" என்று  மைக்ரோசாப்ட் விண்டோஸ், IBM வளர்ச்சி பற்றி அவர் குறிப்பிடுகிறார்.  

உலகை தட்டையாக்கிய 10 காரணிகள் சொல்லபட்டாலும் இந்தியாவை பொருத்தவரை புரட்டி போட்டவை என் பார்வையில்: Netscape ,ஈமெயில், HTML, opensource software , uploading , outsourcing , offshoring என்பனவற்றை சொல்லலாம்.

இதை தவிர உலகம் அனைத்தையும் புரட்டி போட்டது கூகிள் போன்ற தேடு தளங்களும், அதன் பின்னர் வந்த "ஊக்கமருந்துகள்" ஆன mobile phones, instant messaging மற்றும் VoIP.


இன்றைய சூழலில் உங்களுக்கு facebook, twitter , blogs, instagram, whatsup என்றால் என்னவென்று தெரியாது என்று சொன்னால் உங்களை ஏற இறங்க பார்பார்கள். உலகம் உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட் போன் க்குள் அடங்கி விட்டது. November 9, 2014 , பெர்லின் சுவர் வீழ்ந்த நிகழ்வின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள்.

உலகம் தட்டையாகிவிட்டது, ஆம், இன்று பல அமெரிக்க மென்பொருள் கம்பெனிகளில் எப்போது மீட்டிங் என்றாலும் , across the globe பல நாடுகளில் இருந்து குறிப்பாக, இந்தியா, பிரேசில் மற்றும்  துருக்கி நாடுகளில் இருந்து சாதரணமாக பலர் Dial -in செய்து கலந்து கொள்வார்கள். எப்போதும் கூகுள் hangout அல்லது skype போன்றவை  ஒன்று இவர்களுக்காக ஓபன் செய்து  இருப்பதை காணலாம். இன்று பல கம்பெனிகள், செலவை  மிச்சபடுத்த "Work from home" எனப்படும் வீட்டில் இருந்து வேலை செய்வதை அனுமதிக்கிறார்கள்.


எவ்வளவுக்கு எவ்வளவு உலகம் தட்டையாகி உலகின் எந்த மூலையில் என்ன நிகழ்ந்தாலும் நமக்கு உடனடியாக தெரிகிறதோ அதே போல எல்லா கெட்ட விசயங்களும் எங்கும் வியாபித்து புதிதாக இணைய உபயோகிப்பவர்களை சுண்டியும் இழுக்கின்றன.இணையத்தை மூலதனமாக கொண்டு மார்க்கெட்டிங் செய்பவர்கள் இங்கு ஏராளம். உதாரணமாக சிலமாதங்களுக்கு  முன்பு "Break the internet" என்ற பதம் இணையம் முழுதும் வியாபித்து இருந்தது. அதில் Kim Kardashian னின் நிர்வாண புகைப்படம் மட்டுமே இருந்தது. கிம் போன்றவர்கள் இணையத்தையும், தகவல் தொழில்நுட்பத்தையும் வைத்தே பணக்காரர்கள் ஆனவர்கள்.

 இன்று பலரின் நினைவூட்டியாக  இணையம்   இருக்கிறது. பிறந்தநாள், திருமண நாள், பிறப்பு, இறப்பு  என பலவும் இப்போது இணைய குறுஞ்செய்திகள் வாயிலாகவே நாம் அறிந்து கொள்கிறோம். ரோட்டில் ஒருவர் அடிபட்டு கிடந்தாலும் உதவாமல் அதனை புகைப்படம் எடுத்து உதவி செய்யுங்கள் என்று facebook ல் போடுபவர்களும்  உண்டு .  எங்கும்  பரபரப்பான இந்த நடப்பு  உலகத்தில் நட்புகளும் அதே பரபரப்புடன் ஆரம்பித்து பரபரப்புடன் முடிந்துவிடுகின்றன. அனைத்து நட்புகளுமே ரயில் சிநேகமாகி விட்டதோ என்று தோன்றுகிறது. எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை. ஒரு புறம் இந்த இணையத்தால் பல நன்மைகள் இருப்பினும் மனித மனங்கள் சுருங்கி விட்டன என்று தோன்றுகிறது.

நன்றி 






1 comment:

வெங்கட் நாகராஜ் said...

இணையத்தினால் பல நன்மைகள் இருந்தாலும், இதிலேயே ப்லரும் மூழ்கிவிட்டது தான் சோகமானது. இன்றைய குழந்தைகள் வெளியே வருவதே இல்லை!