Monday, October 17, 2016

"அம்மாவின்" உடல்நிலையும், ஆண்டிபையாட்டிக் எதிர்ப்பும்!

பல பல வதந்திகள், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புது புது கட்டு கதைகள், எங்கும் எதிலும் அம்மாவை பற்றிய செய்திகள், இதில் உண்மை கால்பங்கு என்றால் கற்பனை 75%. இது ஒருபுறம் இருக்க இதனை சார்ந்த பிரச்சனைகள், இதனை மையப்படுத்தி அதனை தனக்கு சாதகமாக்க துடிக்கும் சிலர். அதனை தொடர்ந்த சர்ச்சைகள் என்று ஒருவரின் உடல் நலக்குறைவை வைத்து காமெடி ஆக்கி கதை கட்டி  சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாமல் பல ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் தீனி போட்டன.



அதில் குறிப்பிடும் படியான ஒன்று மேலே.. உண்மையில் நடப்பது என்ன என்பது யாருக்கும் தெரியாது. ஆனாலும் கொடுக்கப்படும் மருத்துவ அறிக்கைகளில் இருந்து நான் கணித்தவற்றையம் தொற்று நோய் ஆராச்சியில் நான் அறிந்ததை வைத்தும் என்ன என்று என்னுடைய கணிப்பை இங்கு   எழுதி இருக்கிறேன் . இது உண்மையாக இல்லாமல் கூட இருப்பினும் அறிவியல் சார்ந்த விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன்.



2014 ஆம் ஆண்டு என்னுடைய பதிவு ஒன்றில் "ஆண்ட்டி பாக்டீரியல் சோப்புகளை உபயோகிப்பது நல்லதா இல்லையா?" ஆண்ட்டி பாக்டீரியல் எதிர்ப்பு குறித்து குறிப்பிட்டு இருந்தேன். அதில் ஆண்ட்டி பையாடிக் எதிர்ப்பு பாக்டீரியா வான MRSA  குறித்து குறிப்பிட்டு இருந்தேன்.

ஆண்டிபையாடிக் எதிர்ப்பு என்றால் என்ன? என்று கேட்பவர்களுக்கு.
நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் நோய் கிருமிகள் முக்கியமாக இரண்டு வகையாக பிரிக்கலாம். பாக்டீரியாக்கள், வைரஸ்கள். அதில் பாக்டீரியா தொற்றை தவிர்க்க என்று மருத்துவர்களால் பரிந்துரைக்க படும் மருந்துகள் ஆண்டிபையாட்டிக் மருந்துகள் எனப்படும். இவை பாக்டீரியாவிற்கு எதிராக நம் உடலில் இருக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக ஆன்டிஜென் ஐ தோற்றுவித்து நோய் தொற்றை தவிர்க்கும்.

இந்தியாவில் எதற்கெடுத்தாலும் தற்போது அன்டிபையாட்டிக் மருந்துகள் எழுதி தருகிறார்கள். அதனை தவிர நிறைய ஆண்ட்டிபையாட்டிக் சோப்புகளும் உபயோகிக்கிறார்கள். இதன் பின் விளைவு என்னவென்றால், நாம் பாக்டீரியாக்களை அழிக்க அழிக்க, அவை எப்படி உயிர் வாழ்வது என்று பல பல வகைகளில் தங்களை பரிணாம படி தகவமைத்து, தங்களின் DNA களில் மாற்றம் உண்டாக்கி அந்த ஆண்டிபையாட்டிக் மருந்துகள் மற்றும் சோப்பு களில் இருந்து காத்து கொள்ளுகின்றன.  இதனையே, ஆண்ட்டி பையாட்டிக் எதிர்ப்பு என்கிறோம்.

ஆண்ட்டி பையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும் இடங்கள்.

எந்த இடங்களில் அதிகம் ஆண்டிபையாட்டிக் மருந்துகள் கையாள படுகின்றனவோ அந்த இடங்களில் ஆன்டி பையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கும். அதனாலேயே MRSA போன்றவை பெரிய மருத்துவ மனைகளுக்கு தலைவலி  கொடுக்கும் ஒன்றாக இருந்து வருகின்றன.

உதாரணமாக, அதிகம் கிளீன் செய்யப்படும் இடங்களான, ஆஸ்பத்திரிகள், ICU இடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் இதனை போன்று பரிணாம வளர்ச்சி படி தகவமைத்து எந்த அன்டிபையாட்டிக் மருந்துகளாலும் அழிக்க படாமல் அல்லது பல ஆண்டிபையாட்டிக் மருந்துகள் கொடுத்து அழிக்க வேண்டிய நிலையில் இருக்கும்.


அம்மாவின் உடல் நிலையம், 2ஆம் மாடி காலியாதலும் 

"அம்மா" அப்பல்லோவில் சேர்க்கப்பட்டவுடன் அந்த மாடி முழுதும் காலியாக்க பட்டு விட்டன, யாரும் உள்ளே சேர்க்கப்படவில்லை என்பது பெரிய விஷயமாக பேசப்பட்டது.  இதற்க்கு முக்கியகாரணம், அங்கு ஏற்கனவே இருந்த நோயாளிகள் மூலம் எந்த இரண்டாம் நிலை தொற்று அம்மாவுக்கு பரவாமல் இருப்பதற்காகவும், அங்கே இருந்த மற்ற நோயாளிகள் மூலம் "அன்டிபையாட்டிக் எதிர்ப்பு பாக்டீரியாக்கள்" பரவாமல் இருப்பதற்காகவும் என்று மருத்துவ அறிவியல் முறையில் விளக்கம் கொடுக்கலாம். ஏனெனில், அம்மாவுக்கு இருக்கும் நுரையீரல் தொற்று (upper respiratory disease) நிமோனியாவாக இருக்கும் பட்சத்தில், இதனை போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பது அவசியம். இது அவருக்கு, செகண்டரி இன்பிக்சன் பரவாமல் தடுக்கும்.

மற்றொரு விஷயம், அவரின் வயது சார்ந்தது. இதே நிலை ஒரு 30 வயது ஒருவருக்கு ஏற்படும் எனில் அதற்கு இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை இல்லை. இவரின் வயதோ 68,  எந்த தொற்றாயினும் ( பாக்டீரியா அல்லது வைரஸ்) 60 வயதுக்கு மேல் ஏற்படின் அதற்க்கு அதிக கவனிப்பு தேவை, பாதுகாப்பு தேவை.  அதிலும், அவருக்கு இருக்கும் சக்கரை வியாதி, மற்றும் ரத்த கொதிப்பு இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு அவருக்கு அதிக டோஸ் உள்ள ஆன்டிபயோட்டிக் கொடுக்க இயலாது. அப்படி கொடுத்தால் அது அவருக்கு சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தலாம்.

அதுவும் அவருக்கு நிம்மோனியா போன்ற தொற்று ஏற்பட்டு இருப்பின், வெளி ஆட்களை உள்ளே சேர்க்காமல் இருப்பது, உடலில் எதிர்ப்பு  சக்தி ஏற்படும் வரை பாதுகாப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும்.  உடலின் எதிர்ப்பு சக்தி அளவு, ரத்த வெள்ளை அணுக்கள் அளவு எல்லாம் சரி பார்த்த பின்னர், மற்ற யாரையும் உள்ளே அனுமதிக்கலாம்.

இது இவருக்கு என்று இல்லை,வேறு  யாராக இருப்பினும், 60 வயதை தாண்டிய ஒரு பெரியவராக இருப்பின், அவருக்கு நுரையீரல் நோய் தொற்று ஏற்பட்டு இருப்பின், இதே போன்ற ஒரு மருத்துவ நிலை தேவை படலாம். அது அவரவருக்கு இருக்கும் பண வசதியை பொறுத்தது.

அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பின், அவரின் உடல் நிலை முழுதும் குணமாகும் வரை மருத்துவமனையில் இருப்பது நல்லது.


டிஸ்கி:  இது "அம்மாவின்" உடல்நிலை குறித்து அறிவியல் ரீதியான கருத்து மட்டுமே, உண்மை நிலை அல்ல.


நன்றி.


1 comment:

வேகநரி said...

நல்லதொரு வீடியோ.
கடந்த மாதம் 22ம் திகதி காய்ச்சலுக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட அம்மா காய்ச்சலில் இருந்து குணம் அடைந்து வருகிறார், வழக்கமான உணவு சாப்பிடுகிறார், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்று அப்பல்லோ மருத்துவமனை அறிவித்து கொண்டிருந்ததின் பிண்ணணியில் எவ்வளவோ எல்லாம் இருந்திருக்கிறது!