Friday, October 21, 2016

அழகென்பது யாதெனில் ...

அழகென்பது எது?, எது பெண்களுக்கு அழகு? எப்போது பெண்கள் அழகாக இருப்பார்கள்? என்ற கேள்வி சில நேரங்களில் எனக்குள் எழுவதுண்டு. நிறைய நகை போட்டு, பட்டு புடவை கட்டினால் ஒரு பெண் அழகாக இருப்பாளா? நிறைய மேக்கப் போட்டு மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஒரு பெண் அழகாக இருப்பாளா? நிறைய மேக்கப் இல்லாமல் அதிக படோடபம் இல்லாமல் சிம்பிள் ஆக இருந்தால் பெண் அழகாக இருப்பாளா?  ஏனென்றால், முகநூலில் தற்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் பல பல போஸ்களில் ஷேர் செய்யப்படும் புகை படங்கள் பார்த்த பின்னர், இப்பொழுதெல்லாம் இயற்கையான அழகு என்ற ஒன்று உண்டா என்பது என் கேள்வியாகி விட்டு இருக்கிறது. பார்க்க பார்க்க சலிப்பும் ஏற்படுகின்றது.

இந்த நேரத்தில், புது பெண்ணான பிறகு தான் தன் கணவருடன், தழைய தழைய புடவை கட்டி, ரொம்ப சிம்பிள் ஆக பூ வைத்து, மஞ்சள் கயிறு மின்ன, எந்த மேக்கப்ம் இல்லாமல், எந்த போஸும் கொடுக்காமல், வெக்கப்பட்டு  நிற்கும், என்னுடைய தோழி ஒருவரின் பழைய புகை படம் பார்க்க நேர்ந்தது. என்ன ஒரு அழகு அந்த புகைப்படத்தில்!, எந்த வித பாசாங்கும் இல்லாமல், புகைப்படத்துக்கான எந்த போஸும் இல்லாமல், போலி சிரிப்பு இல்லாமல் அற்புதமான புகை படம் அது. ஒரு நேச்சுரல் புகைப்படம். 

இதனை பார்த்த பின்னர் எனக்குள் நேர்ந்த தேடலின் விளைவு இந்த பதிவு.

அழகு என்பது என்ன?-உலகத்தில் எது அழகு?

"Beauty is not a matter of cosmetics, money, race or social status, but more about being yourself"

என்ற ஒரு கருத்து காண நேர்ந்தது. இதனை சார்ந்த ஒரு செய்தியும் காண/வாசிக்க நேர்ந்தது, அது உலக மகளிர் பலரின் புகைப்படங்கள் அதனை எடுத்தவர் Michaela Norac என்பவர் . அதில் காணும் ஒவ்வொரு பெண்ணும் மிக இயல்பாக கொடுக்கும் போஸ் அழகு உதாரணத்துக்கு இங்கே சில 

                                                               photo from Mihaela Noroc

                                                               photo from Mihaela Noroc


அதிலும் மிக அதிகம் பேரால் கொண்டாடப்பட்ட "ஆப்கான் கேர்ள்" எனப்படும் Steve McCurry
அவர்கள் எடுத்த புகைப்படம் உலக பிரசித்தி பெற்றது. அதில் ஷர்பத் குலா என்ற அந்த பெண்ணின் கண்களில் தெரிவது சோகமா, ஆற்றாமையா என்று யாராலும் கூற முடியாது. இது இன்னொரு மோனாலிசா ஓவியம் என்று கூட போற்றப்பட்டது.


எல்லாவற்றிலும் காஸ்மெடிக்ஸ் ஆக்கிரமித்த, முக சாயம் பூசிய, வித வித உடை மாட்டிய பெண்களுக்கு மத்தியில் இது போன்ற பெண்களின் புகை படங்கள், இயல்பான புகைப்படங்கள் பார்க்க அருமையாக இருக்கின்றன. 

இப்பெல்லாம் யாருங்க மேக்கப் போடாம டிரஸ் பண்ணிக்காம இருக்கா, நல்லா ப்ரெசென்ட்டபிள் ஆக இருக்கணும் இல்ல, என்று பல பெண்கள், அதுவும் இளவயது பெண்கள் கேட்கலாம்.  அது உண்மையா? அப்படி என்றால்  எல்லோரும் கொண்டாடிய ப்ரேமம் படத்தில் ரொம்ப இயல்பாக  எந்தவித மேக்கப் ம் இல்லாமல் நடித்து உள்ளத்தை கொள்ளை கொண்ட "மலர்" டீச்சர் ஆக நடித்த "சாய் பல்லவியை" ஏன் பலருக்கு பிடிக்கிறது. அதே பாத்திரத்தில் நடித்த "ஸ்ருதி ஹாசனை" பிடிக்கவில்லை.  ஏன், ஸ்ருதி ஹாசனை பல கேலி கிண்டல் செய்து மீம்கள்? உதாரணத்துக்கு கீழே சில.

இதெல்லாம் பார்த்த பிறகு, எனக்கு தோன்றியது. "அழகென்பது யாதெனில், எதனை அணியும் போது  நீங்கள் நீங்களாகவே உணர்கிறீர்களோ அதுவே உங்களுக்கு அழகு."



டிஸ்கி 

இது அழகு குறித்த என்னுடைய கருத்துக்கள் மட்டுமே. யாரையும் குறை கூறவில்லை. நன்றி.

2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

Natural smile ?? those are golden age of our time. :)

வேகநரி said...

நிறைய தங்க நகைகைகள் போட்டு காட்சி தந்தால் பெண் பெருமை மிக்க அழகான பெண்ணாக காட்சியளிப்பார் என்பது இந்திய பெண்களின் நம்பிக்கை.(: