Sunday, March 15, 2015

அடுத்தவர் வாக்கியங்களை நீங்கள் முடிக்காதீர்கள்!

ஒரு சில மனிதர்களை சந்தித்து இருக்கிறேன், இவர்களிடம் பேசுவது என்பது  தேவையே இல்லாதது. நாம் பேசவேண்டும் என்று ஆரம்பிப்போம் ஆனால் நாம் என்ன பேச போகிறோம் என்று இவர்களுக்கு தெரிந்தது போல இவர்கள் பேச்சை பாதியில் நிறுத்தி இவர்கள் பேச ஆரம்பிப்பார்கள். அவர்களை பொறுத்தவரை அவர்கள் சொல்வதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும், என்று நினைப்பார்கள். எங்கள் ஊர்ர்பக்கம் ஒரு பழமொழி சொல்வார்கள் "கல்யாண வீடா இருந்த மாப்பிள்ளையா இருக்கணும், இழவு வீடா இருந்தா பொணமா இருக்கணும்" என்று, அது போல, இப்படி பட்ட மனிதர்கள் எப்போதும் தன்னை சுற்றியே "center of attraction" இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

சில நேரங்களில் நம் வாக்கியங்களை இவர்கள் முடிப்பது தான்   வேடிக்கையாக இருக்கும். இப்படி பட்ட மனிதர்கள் எப்போதும் படபடப்பாகவே இருப்பார்கள் யோசிப்பார்கள்.  எங்கே நாம் சொல்லவந்தது மறந்து விடுமோ என்று இப்படி பேசுபவர்கள் நிறைய பேர். ஆனால் நம் எதிரில் நின்று பேசுபவர் எப்படி நினைப்பார் நம்மை பற்றி என்று நினைப்பதில்லை. இப்படி படபடப்பாக பேசுபவர் அவசரக்காரர் என்று பொறுப்பான பதவியை யாரும் வழங்க மாட்டார்கள். எங்கே ஒருவர் பிறரை நன்கு ஸ்டெடி செய்து கொண்டு, அவர் பேசுவதை கவனித்து பின்பு பதில் சொல்கிறாரோ அவருக்கு அன்பவமும் முதிர்ச்சியும் இருக்கும் என்று நிர்வாகத்தில் இருப்பவர்கள் அறிந்து இருப்பார்.  நீங்கள் இப்படி அடிக்கடி அடுத்தவர்கள் வார்த்தையை முடிப்பவராயின், பேச வாய் வரும்முன் ஒரு செகண்ட் நாம் எதிரில் இருப்பவர் இடத்தில் தற்போது இருந்தால் எப்படி பீல் செய்வோம் என்று நினைத்து பாருங்கள், நாம் செய்யும் தப்பு புரியும்.

இங்கு ஒரு பழமொழி உண்டு "Put yourself in others shoes" என்று, அதாவது உங்களை உங்கள் எதிராளியின் சிச்சுவேஷனில் பொருத்தி பாருங்கள் என்று பொருள். நான் இப்பொழுதெல்லாம் அடுத்தவர் சூழலில் இருந்து நிறைய யோசிக்கிறேன், அப்படி யோசிக்கும் போது கடந்து போன பல நிகழ்வுகள் எல்லாம் இப்போது வேறு கோணங்களில் யோசிக்க தோனுகிறது. எதிராளிளியின் மீது பல நேரங்களில் பாவப்பட தோனுகிறது. அடுத்தவர் நிலையில் இருந்து யோசிக்கும் பொது அவர் செய்தது சரி என்று கூட சில நேரங்களில் தோன்றுகிறது. "Develop the compassion"
அல்லது "பகைவனுக்கும் இரங்காய்"' என்பதே அது.


முடிந்தால் செய்து பாருங்கள், நிறைய ஸ்ட்ரெஸில் இருந்து விடுபடலாம்.


நன்றி





2 comments:

Unknown said...

சில மனிதர்கள் இப்படியும் இருப்பதைக் கண்டிருக்கிறேன்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

அருமையான புத்திமதி!
சில நேரங்களில் நான் முடிப்பதும் உண்டு. காரணம் அவர்கள் இதைத்தான் சொல்லிக் கொல்லப்போகிறார்கள், என்பதை முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவித்துத் தப்பிக் கொள்ள!!