Friday, May 13, 2016

மனோதத்துவ நேர்காணலும் இன்றைய அரசியல் நிலையம் !

தற்போது நிறைய நிறுவனங்கள் தங்கள் ஆட்களை எடுக்கும் முன்பு மனோதத்துவ முறையில் பல தேர்வுகள் நடத்துகிறார்கள். CIDS எனப்படும் இதனை போன்ற தேர்வுகள் தலைமை பொறுப்பு பதவிகளுக்கு கட்டாயம். சில நாட்களுக்கு முன்பு அப்படி ஒரு மனோதத்துவ இண்டர்வியு எடுக்க நேர்ந்தது.

திரும்ப திரும்ப சில கேள்விகள் அதில் கேட்கப்பட்டன.

தேங்க்ஸ் டு google images 

நீங்கள் உங்களின் சாதனைகளை மதிக்கிறீர்களா?, நீங்கள் வாழ்கையில் தன்னிறைவு அடைந்ததாக நினைகிறீர்களா? உங்கள் வாழ்கையில் ஏதாவது சாதனை செய்து இருப்பதாக நினைக்கிறீர்களா? தனியாக இருப்பது பிடிக்குமா, அல்லது பார்ட்டி செல்ல பிடிக்குமா?, எத்தனை நண்பர்கள் உங்களுக்கு?புதியவர்களுடன் நீங்கள் நட்பாக இருக்க இயலுமா?  தவறு செய்வீர்களா, செய்திருக்குகிறீர்களா? தானம் செய்து இருக்கிறீர்களா? அடுத்தவர்கள் தவறு செய்தால் உடனே சுட்டி காட்டுவீர்களா? மேனேஜர் என்ன செய்தாலும், தவறே செய்தாலும் சுட்டி காட்டாமல் கண்டு கொள்ளாமல் விடுவீர்களா? எத்தனை முறை நீங்கள் சோதனையான காலத்தில் அமைதியாக இருந்து இருக்குறீர்கள்? ஒருவரை பார்த்தவுடன் நீங்கள் அவரை எடை போடுவீர்களா?

இப்படி பல பல, கிட்டத்தட்ட 1 மணிநேரம் முதல் 2 மணி நேரம் வரை கேள்விகள். எல்லாமே உங்களின் பெர்சனாலிட்டி பற்றி தெரிந்து கொள்ள? ஏன் இப்படி கேள்வி கேட்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு..


பொதுவாக நிறைய மக்கள் நினைபதெல்லாம் இதுதான்..வேலை கிடைக்க வேண்டும் என்றாலோ அல்லது இருக்கும் வேலையை தக்க வைக்க வேண்டும் என்றாலோ முதலில் நாம் நம் மேனேஜர் /கம்பெனி முதலாளி/டைரக்டர்/ ...க்கு சலாம் போட வேண்டும். அவர் என்ன தப்பு செய்தாலும் அவை எல்லாம் கண்டு கொள்ளாமல், எப்படி அமைச்சர்கள் அம்மாவிடம் அவர் என்ன செய்தாலும் நீங்க செய்வது தான் சரி அம்மா! என்று கூல கும்பிடு போட்டு வாழ்ந்து தன்னுடைய பதவியை தக்க வைத்து கொள்ளுகிறார்களோ அதுவே சிறந்தது . அப்படி இருப்பவன் பிழைக்க தெரிந்தவன் என்பது காலம் காலமாக நமக்கு கற்று கொடுக்கபடும் ஒன்று.

அப்படி அடுத்தவரிடம் பணிந்து பணிந்து வேலை பார்க்கும் ஒரு ஆள், தன்னுடைய இயலாமையை மறைக்க என்று வேறு யாருடனோ அல்லது தனக்கு கீழே இருக்கும் ஒருவனிடம் அவன் படோடபத்தை காட்டுவான்..இது தொடர்கதை ஆகி ...முதல் கோணல் முற்றும் கோணல் போல வழி  வழியாக வந்து, எந்த உருப்படியான காரியங்களும் செய்ய முடியாமல் டாமினோ எபக்ட் போல படிப்படியாக சரிய நிறைய வாய்ப்புகள் இருப்பதாலேயே..உன் மேனேஜர் தப்பு செய்கிறார் என்றால், அதனை எதிர்த்து சொல்ல தைரியம் வேண்டும். ஆனால், அதன் பின் விளைவுகளை தாங்கி கொள்ளும் திறமையும் வேண்டும். அதே நேரம், தொடாதுக்கெல்லாம் குறை சொல்ல கூடாது. நல்ல பாலன்ஸ் இருக்க வேண்டும்.

நிறைய இண்டர்வியுக்களில் பார்க்கபடும் அடுத்த முக்கிய மனோதத்துவ பண்பு , " நான் மட்டுமே வாழ்க்கை..என்னை என் குடும்பத்தை சுற்றி மட்டுமே எல்லாம் நிகழ வேண்டும் என்று  நினைக்கும் பண்பு இல்லாது இருப்பது"  அடுத்தவர்கள் உதவி என்று கேட்டால் உதவும் எண்ணம் துளியும் இல்லாமல், தானும் தன்னுடைய குடும்பமும் வாழ்ந்தால் போதும் என்று சுயநலமாக இருப்பது.  இரக்க குணம், அடுத்தவருக்கு உதவும் பண்பு என்று நிறைய தலைமை பொறுப்பு இருப்பவர்களுக்கு வேண்டும் என்று எதிர் பார்கிறார்கள்.  நீங்கள் எப்பொழுதாவது கம்ம்யுநிட்டி சர்வீஸ் அல்லது பொது சேவை செய்து இருக்கிறார்களா  என்று நிறைய கம்பனிகள் பார்க்கிறார்கள். empathy அல்லது இரக்க குணம் என்பது இருந்தால் மட்டுமே அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் வரும்.

அதே போல, தவறு செய்தால் ஒத்து கொள்ளும் தன்மை. பொது இடங்களில் பேசும் நாகரிகம்
தன்னுடைய ஒவ்வொரு தவறுக்கும் அடுத்தவர் தான் காரணம் என்று கை காட்டிவிட்டு தப்பித்து செல்லாமல், செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை, யாருமே இங்கு மாஸ்டர் அல்ல, எல்லாரும் ஸ்டுடென்ட் போல ஒவ்வொரு நாளும் கற்று கொண்டு இருக்கிறோம் என்ற பணிவு . இதனை போன்ற பல பல கேள்விகளாக கேட்கப்பட்டன.

இந்த நேர்காணல் முடிந்தவுடன், எனக்குள் சில கேள்விகள். சாதாரண மேனேஜர்  பதவிக்கே..இத்தனை இத்தனை கேள்விகள் கேட்டு அவர் அந்த பதவிக்கு சரியானவரா என்று ஆராய்ந்து முடிவு செய்கிறார்கள். ஆனால், தமிழ் நாடு, இந்தியா ஏன் அமெரிக்கா எலெக்சனில் வாக்களிக்கும் முன்பு மக்கள் இது போன்ற அடிப்படை பண்புகளில் ஒன்றாவது தாங்கள் வாக்களிக்க போகும் அரசியல்வாதிகளுக்கு இருக்கா என்று ஆராய்கிறார்களா?

சாதாரண தலைமை பொறுப்புக்கே இத்தனை பண்புகளையும் கொண்டுள்ள ஒரு தலைவன்/தலைவி வேண்டும் என்று எதிர்பாக்கப்படும் போது நாட்டையே கட்டி ஆள வாய்ப்பு கொடுங்கள் என்று கூவும் அரசியல் வாதிகள் தங்களுக்கு இதனை போன்ற அடிப்படை பண்புகள் உண்டா என்று சுயபரிச்சை செய்கிறார்களா/செய்வார்களா?

ஒன்றும் புரியவில்லை.


நன்றி.

டிஸ்கி
இது என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே..எந்த அரசியல் கட்சியை குறித்தும் தலைவர்கள் குறித்தும் இங்கு கூறவில்லை.

1 comment:

வேகநரி said...

பொருத்தமான நேரத்தில் ஒரு சிறந்த பதிவு.
மக்களுக்கு மிகவும் தகுதி கொண்ட சரியானவங்களை தெரிவு செய்ய பயன்பட்டால் அவர்களுக்கும் நல்லது.