Saturday, September 10, 2016

ஹோம் ஒர்க் உலகத்தில் குழந்தைகளும் பெற்றோரும் !

பள்ளி ஆரம்பித்ததில் இருந்து இரண்டாவது படிக்கும்  முகுந்துக்கு வரும் ஹோம் ஒர்க் பார்த்தால் நமக்கு தலை சுற்றுகிறது.

இரண்டாவது சிலபஸ் இல்  "ஸ்டேட்ஸ் ஆப் மேட்டர்" டெஸ்ட் கடந்த வாரம். அவர்களுக்கு திட, திரவ, வாயு நிலைகளை (liquid, solid and gas )பற்றி சொல்லி கொடுத்து, அவர்களை தயார் செய்ய வேண்டும். நேற்று "Next gen vehicles" பற்றி ப்ராஜெக்ட். அவர்களாகவே யோசித்து, டிஸ்கஸ் செய்து, கேள்விகள் கேட்டு, பின்னர் படம் வரைந்து என்று நிறைய நிறைய ..ஆங்கிலத்தை பொறுத்தவரை, அதற்குள் இலக்கணம் வந்துவிட்டது, proper noun, common nound, adjective..என்று அனைத்தும் வந்துவிட்டது. இதில், singular, plural nouns இல் டெஸ்ட் எல்லாம் வருகிறது. கணக்கில் picture puzzules, or puzzle problem தினமும் 15 நிமிடம் கணக்கு விளையாட்டு விளையாட வேண்டும் அதற்கென்று Reflex math என்ற Ipad app /online game இருக்கிறது. அதனை தவிர, தினமும் ஒரு புத்தகம் குறைந்தது 15 நிமிடமாவது  படிக்க வேண்டும். என்ன படித்தான், எவ்வளவு நேரம் கணக்கு விளையாட்டு என்று பெற்றோர் பையனின் ஜர்னலில் எழுதி அனுப்ப வேண்டும். எனக்கு தெரிந்த வரை 6-7 ஆவது படிக்கும் போது சிங்குலார் ப்ளுரேல் nouns படித்ததாக நியாபகம். அதனையே, இங்கேயே படித்த ஒரு அம்மாவும் சொன்னார். அதுவும் Next gen vehicle போன்ற ப்ராஜெக்ட் எல்லாம், 10 அல்லது 12 வது வகுப்பில் படித்து இருப்போம். இப்படி இரண்டாவது வகுப்பிலேயே படித்து இருக்க மாட்டோம். இத்தனைக்கும் முகுந்த் படிப்பது பப்ளிக் ஸ்கூலில்.  அவர்களுக்கு சொல்லி கொடுக்க என்று பெற்றோரும் நிறைய ஹோம் ஒர்க் செய்ய வேண்டி வருகிறது.


picture from google images

நான் கேள்வி பட்ட வரை, முன்பெல்லாம் இங்கு STEM எனப்படும் Science, Technology, Engineering and Mathematics க்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க படுவதில்லை. மொழி, மற்றும் கலை இலக்கியங்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்க பட்டு வந்து இருக்கிறது. ஹை ஸ்கூல் படிக்கும் போது மட்டுமே நிறைய கணக்கு மற்றும் அறிவியல் விடயங்கள் படிக்க வேண்டி இருந்திருக்கிறது. ஆனால் தற்போது, elementary பப்ளிக் பள்ளிகள் கூட, STEM சிலபஸ் பின்பற்றுகிறார்கள். அதனால் 7 வயதில் "States of Matter" பற்றி படிக்க வேண்டி வருகிறது. இது காம்பெடிட்டிவ் அதிகம் உள்ள பள்ளிகளுக்கு இடையே நடக்கும் போட்டி போல ஆகி விட்டது.

முன்பெல்லாம் ஸ்கூல் விட்டு வந்ததும் விளையாட செல்லும் குழந்தைகள், தற்போது குறைந்தது 1 மணி நேரம் ஸ்கூல் ஹோம் ஒர்க் செய்ய வேண்டும் என்றால் அழுது அடம் பிடிக்கிறார்கள். இதனை தவிர, இந்திய குழந்தைகள் பலரும், எக்ஸ்ட்ரா கிளாஸ் செல்கிறார்கள் திரும்பி வந்து அதனை சார்ந்த ஹோம் ஒர்க் செய்ய சொல்லும் போது இன்னும் அதிகம் அழுகிறார்கள்.

இது இங்கு நடக்கும் கூத்து என்றால், இந்தியாவில் வேறு வகையான கூத்து நடக்கிறது. எல்லா பெற்றோரும் தன் குழந்தைகளை பெஸ்ட் ஸ்கூலில் சேர்க்க வேண்டும் என்று பணம் கொட்டி சேர்க்கிறார்கள். ஆனால் அங்கு கொடுக்கப்படும் ஹோம் ஒர்க் ஐ, சொல்லி கொடுக்க, செய்ய வைக்க  இவர்களுக்கு தெரிய வில்லை அதனால் ட்யூஷன்க்கு அனுப்புகிறார்கள். பள்ளி விட்டு வரும் எந்த குழந்தையும் விளையாட்டுவதே இல்லை, அதற்க்கு நேரம் இருப்பது இல்லை. ஒரு ட்யூசன் முடிந்தவுடன் அடுத்தது என்று ஓடுகிறார்கள்.

எங்கள் சொந்த கார பெண் தன்னுடைய 6 வயது பையனை பெரிய பள்ளியில் சேர்க்கிறேன் பேர்வழி என்று தன து வீடு இருக்கும் இடத்தில் இருந்து மறுகோடியில் இருக்கும் ஒரு பள்ளியில் சேர்த்து இருக்கிறார். காலை 8 மணிக்கு பள்ளி செல்லும் குழந்தை பள்ளி முடிந்து  வரும்போது மணி 5 ஆகி விடுகிறது. வந்தவுடன் 1 மணி நேரம் பள்ளி பாட டியூசன், பின்னர் ஹிந்தி டியூசன் 1 மணி நேரம் பின்னர் ஸ்கூல் ஹோம் ஒர்க் என்று முடிக்க வைக்க எப்படியும் 9 மணி ஆகி விடுகிறது. இதில் எங்கே குழந்தைகள் விளையாட நேரம்.

எனக்கு தெரிந்து என் பெற்றோர் எனக்கு சொல்லி கொடுத்ததில்லை அல்லது என்னிடம் இவ்வளவு நேரம் செலவழித்து ப்ராஜக்ட் செய்தது இல்லை. எனக்கு தெரிந்தே என்னுடைய ஸ்கூல் பிரிண்ட்ஸ் ன் பெற்றோரும் சரி இல்லை அவர்களும் சரி நிறைய விளையாடி இருக்கிறோம். பின்னர் எப்படி இந்த ஜெனெரேஷன் குழந்தைகளும் சரி பெற்றோரும் சரி ஹோம் ஒர்க்குக்கு  என்று  இவ்வளவு நேரம் செலவழிக்கிறார்கள்.  பாட திட்டங்கள் அதிகமாகி விட்டதாலா? அல்லது காம்பெடிஷன் அதிகமாகி விட்டதாலா? இப்படி அதிகம் ஹோம் ஒர்க் செய்யும் குழந்தைகள் child prodigy ஆகி விடுமா?, எதனால் இத்தனை புஷ்?

STEM பாடத்திட்டம் மட்டும் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து விடுமா? ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் இங்கே

“it’s in Apple’s DNA that technology alone is not enough — that it’s technology married with liberal arts, married with the humanities, that yields us the result that makes our hearts sing.”

படிப்புடன், மொழியும் இலக்கியமும், மனிதநேயமும் எல்லாமும் சேர்ந்தாலே பெஸ்ட் ரிசல்ட் வரும் என்கிறார்.  இன்னோவேஷன் அல்லது கண்டு பிடிப்பு எல்லாவற்றுக்கும் கற்பனை திறன் வேண்டும். கற்பனை திறன் வளர நிறைய மொழி மற்றும் கலை பற்றிய பிடிப்பு வேண்டும். ஆர்வம் வேண்டும்.  குழந்தைகள் நிறைய விளையாட, ஆராய்ந்து தெரிந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்க வேண்டும். தினம் தினம் ஹோம் ஒர்க் மட்டுமே வாழ்க்கை, ஒரு கிளாஸ் முடிந்தவுடன் அடுத்தது  என்று உக்கார வைக்காமல் வேறு சில விஷயங்களையும் செய்ய ஊக்கு விக்க வேண்டும்.

ஏற்கனவே நிறைய பள்ளிகளில் ஹோம் ஒர்க் கொடுத்து செய்ய சொல்லும் நேரத்தில்,  எல்லா எக்ஸ்ட்ரா கிளாஸ்களிலும் சேர்த்து குழந்தைகளை படுத்தாமல் கொஞ்ச நேரமாவது அவர்களுக்கு விளையாட கொடுக்க வேண்டும், அதுவே அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் அதுவே நான் நம்புவது.


நன்றி







1 comment:

ஆரூர் பாஸ்கர் said...

அட்லாண்டா அற்புதங்கள் போல. ்பிளாரிடாவில் நீங்கள் சொல்வதுபோல் மோசமில்லை என நினைக்கிறேன்