Friday, August 19, 2016

ஒலிம்பிக்ஸ்ம், சோசியல் மீடியா கூத்துக்களும்

ஒவ்வொரு ஒலிம்பிக்ஸ்ன் போதும் நம் மக்களுக்கு ஒரு புது வியாதி தொத்தி கொள்ளும். அது ஒரு செலெக்ட்டிவ் அம்னீசியாவில் இருந்து வெளியில் வந்த ஒருவர் பார்ப்பதை குறித்து புதிதாக தன் கருத்தை கூறுவது போன்றது.  இது ஒரு சார்ட் டைம் மெமரி போல, ஒலிம்பிக்ஸ் முடியும் மட்டுமே நினைவில் இருக்கும் பின் எங்கோ போய் விட்டு மீண்டும் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் தலை எடுக்கும்.

அது என்ன வென்று நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும்." இந்தியாவிற்கு ஏன் பதக்கங்கள் வரவில்லை?" என்ற ஆராய்ச்சி, இந்தியாவில் ஊழல், மக்கள் விளையாட்டுகளில் காட்டும் அலட்சியம் என்ற அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விடுவார்கள்.   கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகள், புத்தகங்கள், என்று எல்லாவற்றிலும் ஒரு இந்தியன் தன் நாட்டுக்கு ஏன் பதக்கங்கள் இல்லை என்ற காரணத்தை, பக்கம் பக்கமாக விவரிப்பார். நிறைய வெளிநாட்டு பத்திரிக்கைகளில் இதனை குறித்த ஆர்டிக்கில்  பார்க்க முடிந்தது.

தற்போது சோசியல் மீடியாவில் இது ஒரு கூத்தாக போய் கொண்டு இருக்கிறது. நேற்று சாக்ஷி மாலிக் ஒரு வெண்கல பதக்கம் வாங்கியதை கேலியாக பாகிஸ்தானிய பத்திரிக்கையாளர் "119 பேர் அனுப்பப்பட்டதற்கு 1 வெண்கல பதக்கம்" என்று  ட்வீட் செய்ய, நிறைய இந்தியர்களுக்கு, அமிதாப் பச்சன் உட்பட தேச உணர்வு பொத்துக்கொண்டு வந்து விட்டது. எப்படி சொல்லலாம், என்று சண்டை பிடிக்க, அந்த பத்திரிக்கையாளரோ சளைக்காமல் , 1.2 பில்லியன் மக்கள் தொகைக்கு ஒரு வெண்கல பதக்கம், ஆனால் வெறும் 5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட நோர்வே 2 பதக்கங்கள்..என்று கவுண்டர் கொடுத்து கொண்டு மேலும் உசுப்பேத்தி கொண்டு இருக்கிறார்.


எனக்கு என்ன புரியவில்லை என்றால். இது தான் நம் நிலை என்று எல்லா இந்தியர்களுக்கும் தெரியும். இந்தியா வீரர்களை அனுப்பும் போதே, அட்லிஸ்ட் ஒரு தங்க பதக்கமாவது வாங்கிட்டு வாங்க, என்று நாம் நினைக்க துவங்கி விட்டோம்.

அதற்க்கு என்ன காரணம் என்றும் எல்லாருக்கும் தெரியும், நம் நாட்டில் மக்களும் சரி, அரசாங்கமும் சரி, கிரிக்கெட் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மற்ற விளையாட்டுக்கு கொடுப்பதில்லை. ஏனெனில் மற்ற விளையட்டுக்கு ஸ்பான்ஸர் இல்லை, மற்ற விளையாட்டு வீரர்களை ப்ரொமோட் செய்ய முடியாது, மக்களுக்கு தெரியாது. கிரிக்கெட் வியாபாரமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டது. அதனால் அதற்க்கு கிடைக்கும் விளம்பரங்கள் பல ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கு கிடைப்பதில்லை. வருமானம் தராத விளையாட்டுக்கு ஸ்பான்சர் செய்ய யாரும் முன்வருவதில்லை.

இது ஒரு புறம் இருக்க, அரசாங்கமும் அல்லது அரசியல் வாதிகளும் இதனை குறித்து கண்டு கொள்வதில்லை. ஏனெனில் இதனை வைத்து அரசியல் வாதிகள் அடிக்கும் கூத்து எல்லாருக்கும் தெரிந்தது. ஒலிம்பிக்ஸ் செலக்சன் போர்டில் அவர்களுக்கு தெரிந்த மக்களை சேர்ப்பது, தகுதியானவர்களை தவிர்ப்பது என்று எல்லா வித கூத்துகளும் நமக்கு தெரிந்தே நடக்கின்றன. இதுவும் எல்லாரும் அறிந்தே இருக்கிறார்கள்.

இன்னொரு புறம், சாதாரண மக்கள்  படிப்பு படிப்பு என்று படிப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கு கொடுப்பதில்லை. என்னை பொறுத்தவரை, கடந்த தலைமுறை மக்களை விட இப்போது இருக்கும் இளைய தலைமுறை, மிக மிக குறைவாக ஸ்போர்ட்ஸ் விளையாடுகிறார்கள். நிறைய பேர் கம்ப்யூட்டர் கேம்ஸ் க்கு மாறி விட்டார்கள். இதுவும் எல்லாரும் அறிந்தே இருக்கிறார்கள்.

 இப்படி எல்லாவற்றையும் மக்கள் அறிந்திருந்தும், நம்முடைய நாட்டின், மக்களின், அரசியல் வாதிகளின் செயலை உணர்ந்திருந்தும் ஏன் இந்த திடீர் வீரம், நாட்டுப்பற்று. ஏனெனில், நமக்கு அடுத்தவர்களை பார்த்து குறை சொல்ல, பேச மட்டுமே தெரியும். உண்மை நிலவரம் தெரிந்திருந்தாலும், நாங்கள் பேசி கொண்டே இருப்போம். அடுத்த நாடுகளை போல செயலில் இறங்கி வேலை செய்ய மாட்டோம். 

எதோ ஒரு படத்தில் ஒரு வசனம் வரும். அதில் ரஜினி சொல்லுவார், "சீனா காரன் சூதாடாட்டி செத்து போயிடுவான், இந்தியன் பேசாட்டி செத்து போயிடுவான்" அது எவ்வளவு உண்மை.


டிஸ்கி
இது என்னுடைய அறிவுக்கு எட்டியவரை தெரிந்த விஷயங்களை கொண்டு எழுதிய என்னுடைய சொந்த கருத்துக்கள் மட்டுமே. எந்த அரசியல்வாதிகளையோ, மக்களையோ, இனத்தையோ, குறிப்பிட்டு சொல்லவில்லை.

2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

//சீனா காரன் சூதாடாட்டி செத்து போயிடுவான், இந்தியன் பேசாட்டி செத்து போயிடுவான்// ரசித்தது. ஆமாம், ஓலிம்பிக் புராணம் பாடுவதில் பயனில்லை

காரிகன் said...

உண்மைதான். கேடுகெட்ட கிரிக்கெட்டை ஒழித்தால் மற்ற விளையாட்டுகளுக்கு புது ரத்தம் பாயும்.