Tuesday, March 31, 2015

சொந்த ஊருக்கு விடுமுறைக்கு செல்வது போல ஸ்ட்ரெஸ் எதுவும் இல்லை.

இந்தியாவுக்கு சென்று 2-3 வருடங்கள் ஆச்சு? ஒரு ட்ரிப் போடலாமா? அப்படின்னு யோசிச்சா கூட இப்பெல்லாம் பலருக்கு பல்ஸ் எகிறும். ஏனெனில் முதலில் அவர்கள் பார்க்க வேண்டியது டிக்கெட் காசு. இப்போதெல்லாம் அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்வதென்றால் குறைந்தது ஒருவருக்கு $1200-$1500 செலவு ஆகும். அதுவும் சீசன் நேரங்களில் இன்னும் அதிகம் இருக்கும். நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு குறைந்தது $5000 டிக்கெட் க்கு மட்டுமே எடுத்து வைக்க வேண்டும். பிறகு ஆபிசில் லீவ் சொல்ல வேண்டும். நிறைய நேரங்களில் 3 வாரம் மட்டுமே லீவ் பலருக்கு கிடைக்கும். ஒரு சிலர் 4 வாரங்கள் எடுத்து கொள்ளலாம். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறார்கள் என்றால் இருவரின் லீவும் ஒரு சேர வர வேண்டும், இப்படி பல அட்ஜஸ்ட்மென்ட் உண்டு.

டிக்கெட், லீவ் எல்லாம் கரெக்ட் செய்த பின்பு வருவது தான் "இந்தியா ஷாப்பிங்" ஒரு பெரிய லிஸ்ட் இருக்கும். அதில் வீட்டில் உள்ளவர்களுக்கு, இல்லை தெரிந்தவர்களுக்கு என்று இருக்கும் லிஸ்ட் விண்ணை தாண்டும். அதற்க்கு பட்ஜெட் உண்டு பாருங்கள் அது எப்படியும் டிக்கெட் செலவில் ஒரு கால்பங்காவது இருக்கும், லேப்டாப், ஐபோன், கேமரா  போல கொஞ்சம் காஸ்ட்லி ஐடம்ஸ் என்றால் டிக்கெட் செலவில் பாதி கூட ஆகலாம், இதெல்லாம் அவரவர் வசதியை பொறுத்து. ஆனால் இதில் நாம் டென்ஷன் ஆவது தேடி தேடி அலைந்து வாங்குவது தான். உதாரணமாக சிறு குழந்தைகளுக்கு டிரஸ் வாங்குவது. போன் செய்து குழந்தைகளின் சைஸ் கேட்டு பின்னர் அதே சைஸ் இங்கு கிடைக்குமா என்று பார்த்து அலைந்து வாங்கி ஒழுங்கா அதை கொண்டு சேர்க்க வேண்டுமே என்று நினைத்து கொண்டு சேர்த்து இருப்போம், ஆனால் குழந்தைகளை விட பெற்றோர் முகம் ஒரு மாதிரி செல்லுமே அதனை பார்க்கும் பொது எனக்கெல்லாம் சரி கடுப்பு வரும். போன முறை விடுமுறைக்கு சென்ற பொது சொந்த கார பெண்ணின் மகனுக்கு என்று அலைந்து திரிந்து ஒரு டாம்மி ஹில்பிகர் சட்டை மற்றும் பேண்டு வாங்கி கொண்டு சென்றேன். ஜிகு ஜிகு டிரஸ் போட்டே பழக்க பட்ட அவர்கள், இந்த சட்டையை ஒரு ஆர்வமாக கூட வாங்கி கொள்ளவில்லை. எனக்கு சரி கோவம். அதே போல, பெண் குழந்தைகள் என்றால், நைல் பாலிஷ், மேக்கப் ஐடம்ஸ் என்று பெரிய லிஸ்ட் இருக்கும்.

ஒரு வழியாக ஷாப்பிங் எல்லாம் முடிந்தாயிற்று என்றால் அடுத்தது பயணம்,  குறைந்தது 24 மணிநேர விமான பயணம். அதுவும் சிறு குழந்தைகள் வைத்து கொண்டு செய்யும் பயணம் போல டென்ஷன் வேறெதுவும் இருப்பதில்லை.  குறைந்தது இரண்டு விமானங்கள் மாறி செல்ல வேண்டும். விமான நிலையத்தில் காத்திருப்பு நேரம் தவிர இடத்தில் சிறு குழந்தைகளை வைத்து கொண்டு, விளையாட்டு காட்டி, விமானம் ஏறும் போதும் இறங்கும் போதும் ஏற்படும் அழுத்த பிரச்சனைகளால் குழந்தைகள் காதில் உண்டாகும் வலியால் வீல் என்று அலறும் பொது சமாதானபடுத்தி ஊருக்கு போய் சேர்வதற்குள்..அப்பப்பா என்று இருக்கும். பெரியவர்களான நமக்கே ஒரே இடத்தில் உக்கார்ந்து உக்கார்ந்து கால் வலி, அல்லது வீக்கம் வரலாம். சின்ன குழந்தைகளை என்னவென்று சொல்வது. எப்போடா சென்னை போய் சேருவோம் என்று இருக்கும் எனக்கெல்லாம். ஒரு வழியாக, நடு இரவில் சென்னையில் போய் இறங்குவது போல இருக்கும். ஆனால் சென்னை என்னை போன்று பலருக்கு கடைசி பிரயாண இடமாக இருப்பதில்லை. அடுத்து மதுரை, கோவை என்று பல தொடர் விமானம் இருக்கும். நம்மநாட்டுக்கு  வந்துட்டாலும் சொந்த ஊருக்கு செல்ல இன்னும் சில மணி நேரங்கள் காத்து இருக்க வேண்டி வரும். அதுவும் சிறு குழந்தையுடன் என்றால் சொல்லவே வேண்டாம்.

சொந்த ஊருக்கு வந்தால் அடுத்து நாம் மற்றும் நம் குழந்தைகள் சந்திப்பது காய்ச்சல் அல்லது சளி. ஊருக்கு வந்து ஒரு வாரத்திற்குள் கிட்டத்தட்ட எல்லாருக்கும் இது வந்து விடும். அடுத்து வெட்கை அல்லது சூடு, கொசுகடி என்று பல சிறு குழந்தைகளுக்கு உடல் முழுதும் கொப்புளம் வந்து விடும். நிறைய குழந்தைகளுக்கு  அலர்ஜி ஏற்பட்டு விடும்.  டாக்டரிடம் சென்றால் ஊசி போடுவேன் என்பார்கள், இங்கிருக்கும் பழக்கத்தில்  "எதற்கு ஊசி போடுகிறீர்கள்", என்று கேட்க முடியாது. உடனே "வந்துட்டன்கப்பா NRI ஸ்" அப்படின்னு கிண்டல் வரும். காரணம் சொல்ல மாட்டார்கள். முகுந்த் 10 மாத குழந்தையாக இருந்த பொது இந்திய அழைத்து சென்றிருந்தேன், உடல் எல்லாம் கொசு கடியில் கொப்புளம் பின்னர் காய்ச்சல் என்று டாக்டரிடம் அழைத்து சென்றோம். உடனே அந்த டாக்டர், அண்டிபையடிக் எழுதி கொடுத்தார். எதற்கு அண்டிபையடிக்? என்று டாக்டரிடம் நான் கேட்க்க, அது வைரல் இன்பிக்க்சன் மாதிரி இருக்கு அதனால தான் என்றார். எனக்கு தூக்கி வாரி போட்டது. "என்ன டாக்டர் இது, வைரல் இன்பாக்சனுக்கு அண்டிபயாடிக் ஆ", என்று உடனே கேட்டு விட்டேன். இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்க்காத அவர் சமாளித்து கொண்டு, ear infection இருக்கு அதனால என்று சமாளித்தார். பின்னர் என் அம்மாவிடம் "typical NRI" என்று சொல்லி இருக்கிறார். கேள்வி கேட்டால் இப்படி கிண்டல் செய்ய வேண்டியது.

அடுத்து ஒவ்வொரு முறை இந்தியா செல்லும் போதும்  நான் ரொம்ப அனுபவிப்பது என்றால், சொந்த காரங்க வீட்டுக்கு செல்வது. நாம் சென்றிருப்பதோ 3 அல்லது 4 வார விடுமுறை. அதிலும்" ஏன் வீட்டுக்கு வரல, அவங்க வீட்டுக்கு மட்டும் போயிருக்க" என்று நமது சொந்தகள் செய்யும் டிராமா இருக்கிறதே..ஐயோ சாமி ஆளை விடுங்க என்றிருக்கும். அதிலும்நாமிருப்பது  மதுரை என்றால், கோவை, சென்னை, பாண்டிச்சேரி பெங்களூர் என்று பல இடந்திலும் இருப்பார்கள். உள்ளூருக்குள்ளே நிறைய சொந்தங்கள் இருந்தாலும் தினமும் யாராவது வீட்டுக்கு வருவார்கள் அல்லது நாம் சென்று பார்க்க வேண்டி வரும். வருபவர்கள் எல்லாருக்கும் ஏதாவது அமெரிக்கா பொருள் கொடுக்க வேண்டும், அது சாக்லேட் அல்லது நட்ஸ் என்று ஏதாவது இருக்க வேண்டும். நெருங்கிய சொந்தம் என்றால் நம்மிடம் "பெரியதாக" எதிர்பார்பார்கள். நாம் அவர்களுக்கு ஏற்ற்றார் போல எதுவும் செய்யவில்லை என்றால், முகத்தைப் காட்டுவார்கள்.

எனக்கு மிகவும் காமெடியாக அதே சமயம் கடுப்பகுவது என்னவென்றால், எதோ நாமக்கெல்லாம் காசு வானத்தில் இருந்து கொண்ட்டுகிறது போல இவர்கள் நினைப்பதே. ஏற்கனவே நிறைய காசு செலவு செய்து இந்தியா சென்றிருப்போம், அங்கு சென்று கொஞ்சம் பணத்தை எண்ணி செலவு செய்தால், "என்னமா வெளி நாட்டு சம்பாத்தியம், இப்படி பார்த்து பார்த்து செலவளிக்கிற" என்பார்கள். அப்போது வரும் டென்ஷன் பயங்கரமாக இருக்கும்.

இங்கிருந்து அங்கு சென்று முதல் ஒரு வாரம், நேர வித்தியாசம் பழக சரியாக இருக்கும். இங்கு இரவென்றால் அங்கு பகல் என்றிருக்கும் நாம் அங்கு சென்று இரவில் முழித்து கொண்டிருப்போம், பின்னர் பகலில் எழுந்து உக்கார்ந்து கொண்டிருப்போம். ஒரு வழியாக டைம் செட் ஆகி இருக்கும் நேரம், திரும்ப வர வேண்டிய நேரமாகிவிடும். பின்னர் மறுபடியும் இங்கு வந்து அதே டைம் பிரச்னை சந்திக்க வேண்டி இருக்கும்.


முடிவாக விடுமுறை முடிந்து ஊருக்கு கிளம்பியாயிற்று , விமான நிலையத்தில்  சொந்த பந்தங்களை  பார்க்கும் பொது கண்ணில் ஒரு துளி நீர் கட்டாயம் வரும். "அடுத்து எப்போ வருவ?" என்று கேட்கும் வார்த்தைகளை கேட்டு அழுகை வந்துவிடும். என்ன செய்வது, எத்தனை ஸ்ட்ரெஸ்..என்றாலும் ஊருக்கு செல்வது என்பது ஒரு சந்தோசம் தான்.

நன்றி..

8 comments:

ஹுஸைனம்மா said...

வேணாம்... அழுதுடுவேன்.... அந்த சோகத்தை ஏன் இப்போ கிளறிகிட்டு.... ஒவ்வொரு வார்த்தையும் நிஜம்!!

ஆனா, இப்போல்லாம் யாராவது ஏதாவது சொன்னா, இன்னும் அதிகமா சேர்த்து, பதிலுக்கு நல்லா “கொடுத்து”ட்டுத்தான் வருவேன். எவ்ளோ நாள்தான் நல்லவளாவே “நடிக்கிறது”? :-)))))

இன்னொண்ணு, ஸ்கைப் வைபர்னு எத்தனையோ ஃப்ரீயா பேசுற வசதிகள் இருந்தாலும், வெளிநாட்டில் இருப்பவர்கள்தான் அங்கிருப்பவர்களை அழைத்துப் பேச வேண்டும்!! கண்டிப்பான விதி இது!! :-(((

ப.கந்தசாமி said...

நல்ல காலம், எனக்கு வெளிநாட்டில் எந்த சொந்தக்காரங்களும் இல்லை. எல்லாம் என் வீட்டைச் சுற்றி 20 கி.மீ. வட்டத்துக்குள்தான். அந்த சொந்தக்காரங்களையும் பார்ப்பது கல்யாண வீடுகளில்தான்.

ராம்ஜி_யாஹூ said...

சொந்தங்களையும் , நண்பர்களையும் , தெரிந்த பழகிய இடங்களையும்
பார்க்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியை
டாலர்களால் அளக்க முடியாது .
ட்ரில்லியன் டாலர்கள் & யுரோக்களை விட மேலானது அது

Avargal Unmaigal said...

எனக்கு விமானபயணம் என்று நினைத்தாலே டையர்டாக இருக்கிறது அமெரிக்காவில் கூட பயணம் செய்ய வேண்டுமானால் முதலில் எனது தேர்வு கார்பயணம்தான் அது எவ்வளவு நேரமானாலும் ஒகே . எனது தாயார் மறைந்த பிறகு இந்தியா என்பது எனக்கு வெறுமையாகவே இருக்கிறது அதனால் அங்கு செல்ல வேண்டும் என்ற பெரிய ஆசை எல்லாம் இல்லை. இந்தியா செல்ல ஒரு சின்ன ஆசை ஒன்று மட்டும் உண்டு சில பதிவர்களை சென்று பார்க்க வேண்டும் என்பது மட்டுமே

Avargal Unmaigal said...

அமெரிக்காவில் கிடைக்காது கூட இந்தியாவில் கிடைக்க ஆரம்பிச்ச பின்னும் இன்னும் வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடமிருந்து பரிசுகளை எதிர்பார்க்கும் சொந்தங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர் இதற்கு காரணம் இலவசம் என்பதை அரசாங்கம் அவர்களுக்கு பழக்கப்படுத்திவிட்டதுதான்

ஜோதிஜி said...

இந்தியாவில் மட்டுமல்ல வளரும் நாடுகளில் காசே தான் கடவுளடா? மிக மிக அற்புதமாக எழுதியிருக்கீங்க. வெளிப்படையான வெள்ளந்தியாகவே வாழ்ந்து இருப்பீங்க என்று நினைக்கும் அளவிற்கு எதார்த்தம்.

(அவர்கள் உண்மைகள்) நண்பா அவசியம் வீட்டுக்கு குடும்பத்தோடு வாங்க.

தக்குடு said...

முதல் விஷயமா இவங்க வந்தா இந்த பொருள் கொண்டு வருவாங்கனு எதிர்பார்ப்பை வளர்கர்தை முதல்ல நிறுத்தனும். அமெரிக்கால கிடைக்கும் எல்லா பொருளும் இப்ப அமிஞ்சிகரைலையும் கிடைக்குது அதனால நாம மூட்டை கட்டி கொண்டு போகனும்னு அவசியமே இல்லை. materialistic relationship not at all required.

வெங்கட் நாகராஜ் said...

இப்போதெல்லாம் இந்தியாவில் அனைத்து பொருட்களுமே கிடைக்கிறது. வெளி நாட்டிலிருந்து வாங்கிக் கொண்டு வந்தால் தானா? பலருக்கு இது புரிவதே இல்லை..... :(