Wednesday, May 26, 2010

கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவை மனிதன்



ஒரு கப்பல் பசிபிக் மகா சமுத்திரத்தில் சென்று கொண்டு இருக்கிறது. அதில்
ஒரு இந்திய குடும்பமும் zoo வில் இருக்கும் மிருகங்களும் அடங்கும்.

அப்போது பயங்கர புயல் வீசுகிறது, கப்பல் கொஞ்சம் கொஞ்சமாக கவிழ ஆரம்பிக்கிறது. இந்திய குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கிட்டத்தட்ட இறக்கும் தருவாயில் அந்த குடும்பத்தில் உள்ள பதினாறு வயது பையன் " Pi " க்கு ஒரு lifeboat கிடைக்கிறது. ஆனால் அவன் அதில் ஏறுவதற்கு முன் ஒரு Hynea (ஒரு வகை ஓநாய்), ஒரு குரங்கு (Orangutan ), ஒரு அடிபட்ட வரிக்குதிரை , பின் ஒரு பெங்கால் புலி, ஏறிக்கொள்கிறது.

சில நாட்களில் ஓநாய், குரங்கையும், வரிக்குதிரையையும் தின்றுவிடுகிறது.
புலி, ஓநாயை திங்க, " Pi " க்கு பயம் பிடித்து கொள்கிறது. எப்படியாவது தன்னை
புலியிடம் இருந்து காப்பாற்றி கொள்ள பல வழிகளை கையாள்கிறான். தானே மீன் பிடித்து அதனை புலிக்கும் அளிக்கிறான். சரியான உணவும் நீரும் இல்லாததால் இருவருக்கும் கண் தெரியாமல் போகிறது, நோய் வாய்படுகின்றனர். மெசிக்கன் கரையில் boat ஒதுங்க புலி காட்டிற்குள் எங்கோ ஓடி ஒளிந்து கொள்கிறது.

மீட்கப்பட்ட " Pi " யிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கும் போது அவன் மேற்சொன்ன கதையை கூறுகிறான். ஆனால் யாரும் அதனை நம்ப தயாராக இல்லை. உடனே அவன் வேறு ஒரு கதையை கூறுகிறான், அந்த கதையின் படி "Hynea " ஒரு பிரெஞ்சு சமையல்காரனாகவும், "Orangutan " அவன் தாயாகவும் , அடிபட்ட வரிக்குதிரை ஒரு சக பயணியாகவும், புலி அவனாகவும் இருக்கிறார்கள். இந்த கதை நம்பக்கூடியதாக இருப்பதாக கூறுகிறார்கள்.

கடல் பிரயாணத்தின் போது இப்படி உணவும் குடிநீரும் இல்லாமல் தனித்து விடப்பட்டவர்கள் "Cannabalism " எனப்படும் மனித மாமிசம் சாப்பிடுபவர்களாக மாறுவது உண்டு. எப்படியாவது வாழவேண்டும் என்ற போராட்டம் அவர்களுக்கு உள் உள்ள மிருகத்தை தட்டி எழுப்பி விடும்.

அதன் படி " Pi " முதலில் சொன்ன கதையில் தனக்கு உணவு இல்லாவிட்டாலும் கூட மீன் பிடித்தாவது புலிக்கு கொடுத்து தன்னையும் காப்பாற்றி கொண்டு கொஞ்சம் மனிதனுக்கு உள்ள கடவுளை தட்டி எழுப்ப முயற்சிக்கிறான். ஆனால் யாரும் இதனை ஏற்று கொள்ளாத போது மனிதனுக்குள் இருக்கும் மிருகத்தை பற்றி சொல்ல அனைவரும் ஏற்று கொள்கின்றனர்.

நீங்கள் என்ன நினைகிறீர்கள் முதலில் சொன்ன கதை உண்மையா? அல்லது இரண்டாவது சொன்ன கதை உண்மையா?

இது Booker பரிசு வென்ற "Life of pi " என்ற புத்தகத்தை படித்த பிறகு எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்.


பி.கு: எப்போதோ எழுதியது, இந்தியா செல்லும் இந்த இடைப்பட்ட காலத்தில் இருக்கட்டுமே என்று போஸ்ட் செய்து வைத்தது. நன்றி.

8 comments:

பத்மா said...

அதானே பார்த்தேன்
ஊருக்கு கிளம்பலையா இன்னும்?

முகுந்த்; Amma said...

June 9th I am leaving from here.

பனித்துளி சங்கர் said...

இது நம்ம ஆளுடைய வேளையாத்தான் இருக்கும்ங்கோ !

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

Chitra said...

June 9th - mmmm..... Have a safe and fun trip.... Enjoy on our behalf too...... :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கதைங்க..

நல்ல தெளீவா குழப்புறாங்க..

ஆனா நாம கடவுளை விட மிருகத்தைத்தானெ நம்புவோம்..:))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நல்ல கதை..ரெண்டுமே நம்ப முடியற கதை தான் depending on the context
Going to India? hum....me waiting for Diwali to go. Have a great trip

மங்குனி அமைச்சர் said...

பாத்துங்க தங்கமணி என்ஜாய் அப்படின்னு உங்க முகுந்த் அப்பா கிளம்பிட போறாரு ?