Monday, October 26, 2015

பிரெண்ட்லி மக்களும் அன்பிரெண்ட்லி மக்களும்

எப்பொழுதும்  சைகோலோஜி மீது ஆர்வம் உண்டு, அதுவும் மக்களின் நடத்தைகள் குறித்த சைகோலோஜி ரொம்ப சுவாரசியமானது. அப்படி எனக்கு அப்பட்டமாக தெரிந்த பிரெண்ட்லி, அன்பிரெண்ட்லி குணாதிசயங்கள் இங்கே.

ஒருவரை சந்திக்க நேர்ந்தது. சாதாரணமாக உடை உடுத்தி இருந்தார் , மிக மிக சிம்பிள் ஆக. ஹலோ, ஹாய் சொல்லி சாதாரணமாக பேச ஆரம்பித்து , சில நிமிடங்களில் நமக்கு வாவ் என்று சொல்ல தோன்றும் அளவு அவர்களின் பேச்சு இருந்தது. நல்ல அறிவு ஞானம் கொண்டு இருப்பார்கள். நீங்கள் சொல்லுவதை சின்சியர் ஆக கேட்பார்கள், உங்களுக்கு அறிவுரை தேவை எனில் சொல்லுவார்கள். அவர்கள் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். எல்லாரையும் எப்படியாவது சிரிக்க வைத்து விடுவார்கள். அவர்களிடம் பேசினாலே நேரம் போவதே தெரியாது. இவர்களை குறித்து சிலர் கமெண்ட் எல்லாம் பின்னால் அடித்தாலும் எதை பற்றியும் இவர்கள் கவலை பட மாட்டார்கள். ஏனெனில் இவர்கள் தன்னை பற்றி நன்கு அறிந்தவர்கள், அடுத்தவர்களின் ஜட்ஜ்மெண்ட் க்கு எப்பொழுதும் காத்து கிடக்க மாட்டார்கள். நீங்கள் அவர்களை பற்றி நல்லது சொன்னாலும் சரி கெட்டது சொன்னாலும் சரி, கண்டு கொள்ளமாட்டார்கள். இப்படி குணாதிசயங்கள் கொண்ட மனிதர்கள் மிக அபூர்வம், ஆனால் இவர்கள் ஹை ஸ்பிரிடட், ஹை அசிவிங் மக்கள். அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று ஒரு தேடல் அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். மிக மிக பிரெண்ட்லி மக்கள் இவர்கள்.

இப்பொழுது  இன்னொரு வகை மக்கள், இவர்கள் மிக அன்பிரெண்ட்லி, இவர்கள் முந்தய மக்களின் எதிர்பத மக்கள்  எப்பொழுது அந்த இடத்தை விட்டு நகருவோம் என்று நினைக்க வைத்து விடுவார்கள். இவர்களின் பேச்சு எப்பொழுதும்அவர்களை  சுற்றியே இருக்கும்,  ரொம்ப அலுத்து கொண்டே இருப்பார்கள், எல்லாவற்றையும் கம்ப்ளைன்ட் செய்வார்கள். ரோடு சரியில்லை, வீடு சரியில்லை, மக்கள் சரியில்லை என்று எல்லாவற்றையும் கம்ப்ளைன்ட் செய்து செய்து நமக்கு காதில் ரத்தம் வர வைப்பார்கள்.

இன்னொரு மக்கள், இவர்கள் எப்பொழுதும் யாருடனாவது கம்பெடிசொன் அல்லது போட்டி போட்டு கொண்டே இருப்பார்கள். அது சின்ன சின்ன விசயங்களாக கூட இருக்கும். அவ  கார் வச்சிருக்கா, நானும் வாங்கணும். அவர் சேலை வாங்குறா நானும் வாங்கணும் என்று மெட்டீரியல் பொருள்களில் இருந்து வேலை, லட்சியம் வரை இது தொடரும். எல்லாரையும் இவர்கள் போட்டியாக மட்டுமே நினைப்பார்கள். எல்லாரையும் விட தான் உசத்தி என்று காட்டுவதில் இவர்களுக்கு அலாதி பிரியம். இவர்கள் தங்களின் நண்பர்களை கூட எதிரிகளாக அல்லது போட்டியாளர்களாக  தான் பார்பார்கள். இவர்களிடம் நட்பு வைத்திருப்பது என்பது கடினாமான வேலை.

அடுத்த வகை மக்கள் தான் பாஸ் என்று காட்டி கொள்ளுவார்கள். அதாவது பிரெண்ட்ஸ் கெட் டுகெதர் என்று வைத்து சென்றோம் என்றாலும் அதில் அவர் மட்டுமே ஆர்டர் தர வேண்டும் மற்றவர்கள் நடத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அதாவது, தான் பாஸ், எல்லா முடிவுகளும் தான் மட்டுமே எடுப்பேன் என்று நடந்து கொள்ளுவது. இது வெகு சீக்கிரத்தில்அவர்களை அவர்கள்  நட்பு வட்டத்திடம் இருந்து பிரித்து விடும் அட்டிடுட் என்று உணருவதில்லை.

இன்னொரு வகை மக்கள், இவர்கள் தங்களுக்கு ஏதாவது தேவை எனில் யாருடைய காலையும் பிடிப்பார்கள். நமக்கு போன் மேலே போன் போடுவார்கள். அக்கறையாக விசாரிப்பார்கள். என்னடா இது என்று யோசிக்கும் வேளையில் தனக்கு ஆக வேண்டிய காரியத்தை குறித்து சொல்லுவார்கள். ஆடடா இதுக்கு தானா?, என்று நமக்கு சிரிப்பு வரும். இதே மக்களிடம் நீங்கள் எந்த ஹெல்ப் வேண்டும் என்று கேட்டாலும், போனே எடுக்க மாட்டார்கள், அல்லது காலம் கடத்துவார்கள்.

இந்த கடைசி வகை மக்கள், எனக்கு கொஞ்சமும் ஒத்து வராதவர்கள். இவர்கள், எப்பொழுதும் அடுத்தவர்களை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என்று அனைவர் முன்னிலையிலும் அவமான படுத்துவார்கள். அவர்களை பொருத்தவரை அது பன், என்ன தவறு  என்று சொல்லுவார்கள். ஆனால் இவர்கள் சரியான காலை வாறும் bullyகள். நம்மிடம் சிரித்து பேசி விஷயத்தை வாங்கி விட்டு அனைவர் முன்னிலையிலும் அதனை சொல்லி கிண்டல் செய்வார்கள். இவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதை யாக இருப்பது நல்லது.


டிஸ்கி
இது நான் சந்தித்த, கடந்து சென்ற சில பிரெண்ட்லி, அன்பிரெண்ட்லி மக்களின் சைகோலோஜி குறித்த எனது புரிதல் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

நன்றி.

1 comment:

Anonymous said...

கடைசி வகை மக்களுக்காக, வள்ளுவர் இதனை
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு - என்று 820வ்து குறளில் சொல்லியிருக்கார். உலகறிந்த தீர்க்கதரிசி.