Wednesday, September 23, 2015

இன, சாதி பாகுபாடுகள் பிறப்பில் இருந்து தொடர்வதோ!




என்னுடன் வேலை பார்த்தவர்கள் அவர்கள். இருவரும் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். 20 களில் இருப்பவர்கள். ஒருவர் யூத மதத்தை சேர்ந்தவர், இன்னொருவர் எந்த மதத்தையும் சேர்ந்தவர் இல்லை என்றாலும் பெயரளவில் ஒரு முஸ்லிம் பெயர் கொண்டவர்.

எந்த மீட்டிங் என்றாலும், ஒருவர் பேசினால் இன்னொருவர் அதனை குறை சொல்லுவது என்பது எப்பொழுதும்  இருக்கும். வெளிப்படையாக அவர்கள் இருவரும் வெறுப்புணர்வை காட்டி கொள்ளாவிட்டாலும்(அது சட்டப்படி குற்றம்), அவர்களின் செய்கையில் ஒரு துவேஷம் இருந்து கொண்டே இருக்கும். எனக்கு இது தோன்றுவது உண்டு, இவர்கள் பிறப்பதற்கு முன்பே ஆரம்பித்த, எங்கோ நடக்கும் பிரச்சனைகள் இவர்களுக்கு முந்தய தலைமுறையில் ஆரம்பித்த பிரச்சனைகள் எப்படி இவர்ளின் ஒவ்வொரு செயலிலும் ஆக்கிரமித்து கொண்டு இருக்கின்றான், என்று யோசித்ததுண்டு. ஒருவேளை இவை பிறப்பில் இருந்தே உருவானதோ என்றும் யோசிப்பது உண்டு.

அதே போல, எப்பொழுதும் இந்தியர்கள் சந்தித்து கொண்டால் ஒரு சிலர் ஒதுங்கியே இருப்பதை கவனிக்கலாம். அதாவது பார்டி என்று வைத்து கொள்ளுவோம், பள்ளியில் ஒன்றாக படிக்கும் குழந்தைகள் பார்டி என்று போனாலும், சாதி வித்தியாசம் தெரியும், அதுவும் தற்பொழுது குடிபெயர்ந்த மக்களிடம் மட்டுமே இதனை அப்பட்டமாக பார்க்கலாம் (70-80 களில் குடிபெயர்ந்த மக்களிடம் இது அதிகம் காணப்படவில்லை) . அதாவது ஒரு சில  சாதி மக்கள்வேறு  சாதி மக்களுடன் அதிகம் ஒட்ட மாட்டார்கள். அல்லது வேறு சாதி மக்களும் ஒரு சில  சாதி மக்களின் பார்டிகளுக்கு சென்றாலும் ஒதுங்கியே இருப்பார்கள். ப்ரெண்ட்சர்குள் கூட நிறைய ஒரே சாதி மக்கள் அவர்கள் சாதி மக்களுடன் அதிகம் ப்ரெண்ட் ஆக இருப்பது காணலாம், ஒரே எண்ணம், சாப்பாடு, பழக்க வழக்கங்கள் என்று காரணம் வேறு சொல்லுவார்கள்.  அதில் வேறு சாதி மக்களை சேர்த்து கொள்ள மாட்டார்கள்.
அதே போல எல்லா  மக்கள் சேர்ந்து ப்ரெண்ட் சர்குள் வைத்து கொண்டாலும் அதில் நிறைய நேரம், ஒரு  சில  சாதி மக்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். இவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அதனால் இன்னும் இந்திய சாதி வேறுபாடுகளை கட்டி  காக்கிறார்கள், என்று நினைத்து போனா போங்கள் என்று விட்டு விட நினைத்தாலும் , சில நேரங்களில் பிள்ளைகளுக்கும் அதனை கற்று கொடுப்பதுதான் கடுப்பை கிளப்பும்.

இதனை பற்றி நிறைய கவனித்து கவனித்து இந்த மக்கள் எல்லாம் திருந்த மாட்டார்கள் பா, என்று நினைத்து கொள்ளுவேன். ஆனால், சமீபத்தில் ஒரு செய்தியையும் அதனை சார்ந்த கட்டுரையும் படிக்க நேர்ந்தது. அது, எப்படி தன்னுடைய பிறப்பு சாதி குறித்த எண்ணங்கள் மக்களின் எண்ணங்களையும் முன்னேற்றங்களையும் மாற்றுகின்றன என்பது பற்றியது.

அதாவது பொதுவாக நம்பப்படுவது என்னவென்றால், நீங்கள் கடுமையாக அயராமல் உழைத்தால் வெற்றி நிச்சயம் என்பது. அது நீங்கள் எந்த இன, மதம், மொழி, பாலினம் சேர்ந்தவராயினும் உழைத்தால் பயன் உண்டு என்பதே  அது.

ஆனால், இந்தியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், மக்கள் இன்னமும் தங்களின் வாழ்கையின் வெற்றி தங்களின் சாதியை சார்ந்தது என்று நம்புவதாக அறிய முடிகிறது. அதாவது, நான் என்ன தான் படித்து முன்னேற முயற்சி செய்தாலும், என்னுடைய் சாதி என்னை முன்னேற விடாது, என்ற எண்ணம். மக்கள் மனதில் புரையோடி இருப்பதாக அறிய வருகிறது.

குழந்தை பருவத்தில் இருந்தே தங்களின் சாதியை குறித்து குழந்தைகளுக்கு சொல்லி கொடுப்பதன் விளைவாகவே அவர்கள் இந்த சமுதாயம் என்னை சாதிக்க விடாது அல்லது என்ன படித்தாலும் நான் இந்த வேலைக்கு தான் போவேன் என்று பட்டை குத்தி வைத்து இருக்கிறது என்று குழந்தைகள்/இளைஞர்கள் நம்ப ஆரம்பிகிறார்கள். அது படிப்படியாக தங்களின் கற்கும் திறனை குறைக்கிறது என்று சொல்கிறார்கள்.

இதனை எப்படி தவிர்ப்பது, குழந்தையில் இருந்து, சாதி என்ற ஒன்றை பற்றி குழந்தைகளிடம் பேசாமல் இருப்பது. எந்த சாதி மதத்தை சேர்ந்தவர்களும் சாதிக்கலாம். சாதி ஒரு பொருட்டே இல்லை என்ற என்னத்தை கொண்டு வருவது மட்டுமே.

என்ன தான் பண புழக்கம் அதிகமாகி இந்தியா முன்னேறுவதாக ஒவ்வொரு ஆட்சியாளரும் பறை சாற்றி கொண்டு இருந்தாலும், சாதியையும் அதனை சார்ந்த மக்களின் எண்ணங்களையும் மாற்ற முயலாத வரை, இந்தியா வல்லரசு என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளில் இருந்து வருவது மட்டுமே. என்பது என் எண்ணம்.


நன்றி

Reference

Stereotypes persist that class and privilege determine intellect and succes  Yasmin Anwar | 

3 comments:

Shanthi and Senbag Rajamani said...

Thanks for touching the lightening rod.

I strongly believe this problem resonate in our younger kids self confidence in a social level who is growing in USA. They are perfectly indoctrinated by their parents. The only difference is that so called Higher caste families take a pride on doing this and Lower ones are reluctant to even bringing this up as a live topic to discuss with their kids. Middle level always sides with higher ones and changes their behavior and lifestyle accordingly and explaining their kids that they are higher level in the caste ladder.
I live in Washington DC metro. This became a normal and accepted behavior among our people and hence the differences/ discrimination will follow suite in near future.
I heard that there is a petition to establish a MANU as a inventor of Law system in India as US Capitol has statues of other law makers of various countries. Then Manusmruthi will be asked to be accepted as a standard
Thank god, people can live a very discrete life in USA if they choose to. However, you neighbor always finds a way to find which level you are defeats the purpose of discrete living.

It is Sad.

Senbag

வருண் said...

***The only difference is that so called Higher caste families take a pride on doing this and Lower ones are reluctant to even bringing this up as a live topic to discuss with their kids.***

Yoga!

Seems like you know which is higher and which is lower caste and who belongs to higher and who belongs to lower caste as well!!! Is that what you do for your living (analyzing everyone's caste?) or it is just a "serious hobby"? I am just curious how the hell you know everybody's caste unless you give too much importance to that??

Unknown said...

இந்தியர் கண்டு பிடித்த இந்த சாதி சனியன் என்று ஒழியுமோ.
நாம் தான் அடிபட்டு வாழ்ந்தோம் என்றால் வரும் சந்ததிகளும் இந்தசகதியில் மாட்டி வேதனை பட வேண்டி உள்ளது. ஓரளவு பணம் இருந்தால் சற்று சமாளிக்க முடியும். படித்த மக்களே இப்படி சாதியை போற்றி வளர்கின்றனர்.
எந்த அடையாளமும் இல்லாத கற்பிதம் செய்யப்பட்டு,மனதில் மட்டுமே உள்ள இந்த சாதி எவ்வளவோ பேர் இந்த இழிவை ஒழிக்க பாடுபட்டும் , என்றும் அழியாது போல் உள்ளது. வேதனை. ஒழிக்க வேண்டிய அரசு இதில் முனைந்து செயல் பட்டால் சிறிது குறையலாம்.