Monday, August 30, 2010

A House for Mr Biswas - ஒரு சொந்த வீட்டுக்கான கனவு



அது மூட நம்பிக்கைகள் அதிகம் நிறைந்த கிராமம். அங்கு ஏழை ஒருவர் வீட்டில் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. "குழந்தை பிறந்த நேரம் சரியில்லை, அவன் ஒரு பெண்பித்தனாக ஊதாரியாக இருப்பான், தந்தை தாயை விழுங்கி விடுவான், அதனால் தோஷம் கழிய அவனை தண்ணீர் அருகில் செல்ல விடாதீர்கள்" என்று அங்கு இருக்கும் ஜோதிடர் கணிக்கிறார். அவனுக்கு மோகன் என்று பெற்றோர் பெயரிடுகின்றனர். அவனுடன் குடும்ப பெயரான பிஸ்வாஸ்ம் சேர்ந்து அவன் மோகன் பிஸ்வாஸ் என்று அழைக்க படுகின்றான்.

சில ஆண்டுகளுக்கு பின் சிறுவன் பிஸ்வாஸ் ஒரு கன்று கன்றுக்குட்டியை துரத்தி போகிறான், அது ஒரு நீரோடைக்கு அருகில் செல்ல வாழ்நாளில் நீரோடையை முதலில் பார்த்து மெய் மறந்து கன்று குட்டியை மறந்து விடுகிறான். அந்த கன்று குட்டி நீரில் விழுந்து இறந்து விடுகிறது. அதனை தேட சென்ற அவன் தந்தையும் நீரில் மூழ்கி இறக்க அங்கே ஆரம்பிக்கிறது பிஸ்வாஸ் இன் கஷ்ட காலம்.

அப்பாவை இழந்த, பள்ளிகூடத்தில் இருந்து நிறுத்தபட்ட அவன் ஒரு குருக்களிடம் வேதம் கற்று கொள்ள அனுப்பி வைக்க படுகின்றான். அவன் அம்மா மற்றும் இரண்டு சகோதரர்கள் அவன் சொந்த காரர்கள் உடன் தங்குகிறார்கள். அவன் அக்கா வசதியான அவனுடைய மாமா அத்தை உடன் சென்று தங்க குடும்பம் திசைக்கு ஒன்றாக பிரிகிறது.

சிறிது நாட்களில் குருக்கள் வீட்டில் பிடிக்காத சில விஷயங்கள் நடப்பதை அவன் பார்த்து விடுகிறான், உடனே குருக்கள் அவன் சுத்த பத்தமாக இல்லை என்று சொல்லி அவன் மாமா வீட்டுக்கு அனுப்பி விடுகிறார். அவன் அத்தை தன் தம்பி கடைக்கு வேலைக்கு அனுப்ப அங்கும் நடக்கும் தில்லு முல்லுகளை அவன் கண்டறிகிறான் அதனால் அங்கிருந்தும் வெகு விரைவில் வெளியேற்றப்படுகிறான்.

வெளியே வந்த பிஸ்வாஸ் தன் தாயிடம் சென்று தன்னை யாரிடம் தன்னை தங்க அனுப்ப வேண்டாம் என்று கெஞ்சி கேட்டு கொள்கிறான். பிறகு என்ன வேலை செய்வது என்று தெரியாமல் தெருவில் சென்று கொண்டிருந்த பிஸ்வாஸ் பள்ளிகூட நண்பனை சந்திக்கிறான். அந்த நண்பன் sign board எழுதும் வேலையை கற்றுகொடுக்க, அதனையே ஒரு தொழிலாக அவன் எடுத்து கொள்கிறான்.

சில வருடங்களுக்கு பிறகு அவன் sign-board எழுத ஒரு கடைக்கு செல்கிறான் அங்கே இருக்கும் கடைகாரர் மகளை பார்த்து காதல் கொள்கிறான் . அந்த கடை காரர் குடும்பம் அந்த ஊரிலேயே பெரிய துளசி குடும்பம் என்று அழைக்கபடுகிறது. இதனை அறிந்த அந்த கடைகாரர் அவனுக்கே அந்த பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்க அவன் அம்மாவுக்கும் மற்றைய உறவினர்களுக்கும் நிம்மதி ஏற்படுகிறது.

அவனுக்கு என்று சொந்த வீடு என்று எதுவும் இல்லாததால் துளசி குடும்பத்துடன் அவர்களின் வீடான அனுமான் ஹவுஸ் இல் தங்குமாறு அவன் தாய் கூறுகிறாள். ஹனுமான் ஹவுஸ் சென்ற சில நாட்களிலேயே அந்த வீட்டு பெண்கள் தங்கள் கணவர்களுடன் அங்கு தங்கியிருப்பது தெரிகிறது. அவர்களின் கணவன் மார்கள் அந்த வீட்டுக்கு கூலியில்லாத வேலைகாரர்கள் ஆக மாறி இருப்பதும் பிஸ்வாசுக்கு தெரிய வருகிறது.

எப்படியாவது அந்த வீட்டை விட்டு வெளியே வந்துவிட வேண்டும் என்று அவன் விடாமல் முயற்சி எடுக்கிறான். அவன் அனைத்து முயற்சிகளையும் துளசி குடும்பத்தினர் முறியடிக்கிறனர். ஓவ்வொரு முறை தோற்கடிக்க படும்போதும் தனக்கென ஒரு சொந்த வீடு வேண்டும் என்ற அவனது வெறி அதிகமாகி கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூடம் கூட தாண்டாத அவன் சிறிது சிறிதாக முயற்சி செய்து ஒரு பத்திரிக்கையாளர் ஆக மாறுகிறான்.

மிகுந்த சிரமங்களுக்கு இடையில் தனக்கென ஒரு வீடு கட்டுகிறான், தான் மனைவி குழந்தைகளுடன் அங்கு குடியேறுகிறான். ஆனால் அங்கு சென்ற சில காலத்தில் நாற்பது நாற்பத்தைந்து வயதிற்குள் அவன் வாழ்க்கை முடிகிறது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த நோபல் பரிசு வென்ற திரு. V. S. நைபால் அவர்களின் எழுத்தை உலகுக்கு அடையாளம் காட்டிய மிக முக்கியமான நாவல் இது. நாவல் நடப்பதாக காட்டப்படுவது இந்தியாவில் அல்ல. ட்ரினிடாட் நாட்டில் குடியேறிய இந்திய வம்சாவளியினர் வாழும் பகுதியில் கதை நடப்பதாக சித்தரிக்க படுகிறது. நைபால் அவர்களின் எழுத்து நடை கட்டிபோட வைக்கும். என்னை மிகவும் பாதித்த நாவல்களில் இதுவும் ஒன்று.

7 comments:

Chitra said...

கதைக்குள் ஒரு உணர்வு வெள்ளம்..... நல்ல கதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

அரசூரான் said...

வீடு கட்டனும்னா ரொம்ப போராடுனும் போல இருக்கு.

Thekkikattan|தெகா said...

புத்தக வாசிப்பவனுத்தை இவ்வளவு சுருக்கி அழுத்தமா கொடுத்திருக்கீங்க. நல்லா இருக்குங்க.

ஞாபகத்தில வைச்சிக்கிறேன். கிடைக்கும் போது வாசிப்போம்.

Anonymous said...

கிடைக்குதான்னு பாக்கறேன். நல்ல அறிமுகம்

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லதொரு கதை. அறிமுகத்திற்கு நன்றி முகுந்த் அம்மா..

கோமதி அரசு said...

நல்ல கதை பகிர்வுக்கு நன்றி.

முகுந்த்; Amma said...

நன்றி சித்ரா
நன்றி அரசூரான்
நன்றி தெகா
நன்றி சின்ன அம்மணி
நன்றி முத்துலெட்சுமி
நன்றி கோமதிம்மா