Saturday, May 30, 2015

இந்தியர்களின் நகை அபிமானமும், திருட்டும்

இரண்டு செய்திகள் வாசிக்க/பார்க்க  நேர்ந்தது, அதில் ஒன்று, சவூதி அரசர் தன் மகளுக்கு செய்து கொடுத்த தங்க டாய்லெட் கல்யாண சீதனம். இரண்டாவது, எதோ ஒரு தமிழ் டிவியில் வந்த ஒரு படம். "குடும்ப சங்கிலி" என்று நினைக்கிறன்.  

முதல் செய்தியை வைத்து நிறைய காமெடி செய்து இருந்தார்கள். இது அடுக்குமா?..என்றெல்லாம். ஆனால் உண்மையில் ஒரு பவுன் கூட நகை சீதனமாக வாங்காமல் இந்தியாவில் திருமணங்கள் நடக்காது..என்பதை அனைவரும் அறிவர். கல்யாண பையனே எனக்கு ஒன்றும் வேண்டாம் என்று சொன்னாலும் மணமகள் வீட்டுகாரர்கள் விட மாட்டார்கள். இதெல்லாம் ஒரு ஸ்டேடஸ் சிம்பல். சரி காதல் திருமணம் முடித்தவர்கள் இப்படி எல்லாம் சீதனம் எதிர்பார்பதில்லை என்றாலும், இந்தியாவை பொருத்தவரை, நகை என்பதை தாண்டி ஒரு சேப்டி நெட். நகையில் பணத்தை இன்வெஸ்ட் செய்பவர்களை பார்த்து இருக்கிறேன். அதுவும் பெண் குழந்தைகள் வைத்து இருக்கும் பெற்றோர், பிள்ளைக்கு நகை சேமிப்பது என்பது அவள் குழந்தையாக இருப்பதில் இருந்து நடக்கிறது. எனக்குதெரிந்த நிறைய பெற்றோர், குழந்தையின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு தங்க காசு வாங்குவதை பார்த்து இருக்கிறேன்.


இதில் தமிழ் சமூகம், தெலுகு சமூகம் என்று இல்லை..சொல்ல போனால் இந்தியா முழுக்க இதே நிலை தான். நான் வாசித்த NPR பக்கம் இதனை உறுதி படுத்துகிறது  பெண்ணுக்கு நகை போட்டு கல்யாணம் முடிக்க வேண்டும், அது ஒரு பாரம் என்பதாலேயே இந்தியாவில் ஆண் குழந்தைகள் வேண்டும், அவன் தங்கச்சி அக்காவை கரை ஏத்துவான் என்று காலம் காலமாக நம்ப பட்டு வருகிறது. 

இதே போன்ற ஒரு கருத்தை நான் பார்த்த "குடும்ப சங்கிலி" என்ற படம் வலியுறுத்துகிறது. அதாவது, ஆண் பிள்ளை பெற முடியவில்லை என்பதற்காக எதோ குடும்பத்தில் ஒரு குறை என்று தள்ளி வைத்தல். அக்காக்கள் எல்லாம் சேர்ந்து தம்பியை படிக்க வைத்தல், பிறகு தம்பி அவர்களை நட்ராற்றில் விட்டு விடுதல்...ஐயோ சாமி..எந்த நூற்றாண்டில் நாம் இருக்கிறோம் என்று என்னை கிள்ளி பார்க்க வைத்தது. இப்பொழுதெல்லாம், நிறைய இந்திய குடும்பங்களில் பெண் குழந்தைகள் மட்டுமே இருகிறார்கள். அவர்கள் பெற்றோரை பார்த்து கொள்ள மாட்டார்கள் என்று யார் சொன்னது. எனக்கு தெரிந்த குடும்பத்தில் தன தாய் தந்தையரின் இறுதி சடங்கு கூட பெண் நிகழ்த்தி இருக்கிறார்.  ஆனால் இன்றும் கிராமங்களில் ஆண் வாரிசு இல்லாத வீடு என்றால், ஒரு இளக்காரம் என்பதை பார்க்க முடிகிறது. எத்தனை பெண் குழந்தைகள் இருந்தாலும், ஒரு பைய்யன் அதுவும் கடை குட்டி பையன் இருப்பின் அவனுக்கு தனி மரியாதை, சலுகை என்பது இன்னும் இருக்க தான் செய்கிறது. எப்பொழுது இந்த பாகுபாடு மாறுமோ.

இப்படி நகை மேல் நகை சேர்த்து, வெளி நாட்டு மாப்பிளைக்கு கல்யாணம் செய்து கொடுத்து, இங்கு வந்த பிறகு அந்த பெண்கள் நகையை வைத்து சந்திக்கும் சில பிரச்சனைகள். இந்தியாவில் இருப்பது போலவே, எதவாது பார்ட்டி அல்லது விசேசம் என்றால் கழுத்து நிறைய நகை போட்டுட்டு போக வேண்டியது. இது தான் சாக்கு என்று இந்திய குடும்பங்களை நோட்டமிடும் திருடர்களுக்கு இது வசதி. கர்ணம் வைத்து அடித்து விடுகிறார்கள். எனக்கு தெரிந்தே நிறைய குடும்பங்களில் நகை திருட்டு நடக்கிறது/நடந்து இருக்கிறது. திருட வருபவர்கள், இந்தியன் குடும்பங்களில் நகை சீதனம் நிறைய இருக்கும் என்று அறிந்து, நோட்டம் இட்டு metal detector கொண்டு வந்து திருடுகிறார்கள். திருடிய நகைகளை pawn ஷாப்பில் உடனடியாக கொண்டு விற்று உருக்கி விடுகிறார்கள்,என்பதால் நீங்கள் போலீஸ் இடம் தெரிவித்தாலும் கண்டு பிடிப்பது கடினம். கோவிந்தா தான். 5 பவுன் 10 பவுன் என்று தாலி சங்கிலி போட்டு போகவேண்டியது. ஈசி ஆகா அவர்களை கத்தி காட்டி மிரட்டி நகையை திருடுவது மிக அதிகரித்து இருக்கிறது.எதற்கு இப்படி ஒரு நகை மோகம் என்று தெரியவில்லை. நகை மட்டுமே வாழ்க்கை அல்ல, நிறைய இருக்கிறது உலகில். நகை வாங்கி மட்டும் சேமித்து வைப்பதால் நீங்கள் பொருளாதாரத்தை முடக்குகிறீர்கள். பணம் புழங்க வேண்டும். ஓரிடத்தில், பேங்க் லாக்கரில் நகை வடிவில் இருப்பதால் என்ன லாபம். நிறைய bonds வாங்குங்கள். நிறைய இன்வெஸ்ட் செய்யுங்கள். வெறும் நகையில் காசை முடக்காதீர்கள்.


சீரியஸ் டாபிக் இல் இருந்து ஒரு relaxation காக,எனக்கு பிடித்த ஒரு பாடல் கௌரி மனோஹரி ராகம் என்று நினைகிறேன்..அற்புதமான இசை, யேசுதாஸ், சித்ரா அவர்களின் குரல் மற்றும்  நடன அசைவுகள்.



நன்றி.

No comments: