Wednesday, May 20, 2015

எண்ணங்களும் ,காட்சிபடுத்தலும், வெற்றியும்

Dr. APJ. அப்துல்கலாம் அவர்கள் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது சொன்ன ஒரு வாக்கியம், "இளைஞர்களே கனவு காணுங்கள்" என்பது. அதனை வைத்து பலர் காமெடி செய்தது கூட பின்னர் நடந்தது.ஆனால் நீங்கள் புத்தகம் படிப்பவராக அதுவும் non-fiction தன்னம்பிக்கை தரும் புத்தகங்கள் படிப்பவராக இருப்பின் கிட்ட தட்ட அனைத்து புத்தகங்களும் ஒன்றை திரும்ப திரும்ப சொல்லும் "The power of dream and visualization" என்பது.

உதாரணமாக, "The Secret by Rhonda Byrne", "Think and grow rich by Napolean Hill" , "How to win friends and Influence people by Dale Carnegie, "Seven habits of highly effective people by Stephen Covey", "The power of positive thinking by Norman Vincent Peale"....etc etc போன்ற பல புத்தகங்களின் அடி நாதம் "The power of thoughts  and visualization" அல்லது, "எண்ணங்களும், காட்சிப்படுதலும்".

உங்களுக்கு ஆபிசில் பிரச்சனையா, உங்கள் ஆபிஸ் எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைகிறீர்களோ அதனை ஒரு பேப்பரில் எழுதி வைத்து, அதனை காட்சி படுத்தி பாருங்கள். தொடர்ந்து, நீங்கள் ஒரு விஷயத்தை பற்றில் ஆழமாக நம்பும் போது, கனவு அல்லது காட்சி படுத்தி பார்க்கும் போது, நம்முடைய மூளையில் ஆழப்பதிந்து, நம்மை சுற்றியுள்ள auro மாறி விடுகிறது. இதனையே "Rhonda" அவர்கள் "The universe is like a Genie, whatever you wish /visualize with heart  for , it will grand you" என்று சொல்லுகிறார். என்னை கேட்டால் நிறைய மத நம்பிக்கைகளுக்கும் இதுவே மூலம் என்று சொல்லுவேன். கடவுள் நாமத்தை ஜெபிக்க சொல்லுவது, கடவுளிடம் முறை இடுவது, திரும்ப திரும்ப ஒரே எண்ணத்துடன் கடவுளிடம் வாசிப்பது என்பதெல்லாம் இதில் இருந்து வந்திருக்கிறதோ என்று எனக்கு எண்ண தோன்றும்.நம்மூரில், நல்லதையே பேசுங்கள், நல்லதையே நினையுங்கள் என்பார்கள், அதுவும் இதனுடன் சேர்ந்தது என்று நினைக்கிறன்.

சரி, கனவு இருக்கிறது, பெரிய மனிதர் ஆக வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று, அது மட்டும் போதுமா வெற்றியடைய என்றால், இல்லை என்கிறார் Napolean Hill அவர்கள். கனவு வெறியாக வேண்டும், உதாரணமாக, நீங்கள் ஒரு பிசினஸ் ஆரம்பிக்க விழைகிறீர்கள் என்று எடுத்து கொள்ளுவோம், அது ஒரு கனவு என்ற நிலையில் இருந்து வெறி என்ற நிலைக்கு வர வேண்டும், எண்ணம், செயல் எல்லாமே அதனை நோக்கியே இருக்க வேண்டும். அதனை "desire". அடுத்து அந்த எண்ணங்கள், கனவுகள் எல்லாம் நனவாகும் என்று நம்ப வேண்டும், அப்படி நனவானால் என்ன இருப்பீர்கள் என்று காட்சிபடுத்தி பாருங்கள் என்கிறார்கள்.  அதுவே "visualization". அடுத்து உங்களுக்கு அந்த கனவு சம்பந்தமான basic அறிவு இருக்க வேண்டும். "Specialised knowledge", அல்லது உங்களுக்கு அந்த அறிவு இல்லை என்றால், அதனை பெற முயற்சிக்க வேண்டும்.

சரி, உங்களுக்கு கனவு, வெறி, நம்பிக்கை, அடிப்படை அறிவு இருந்தால் போதுமா வெற்றி பெற என்றால் இல்லை. அடுத்த முக்கியமான தகுதி, "organized planning" அல்லது கவனமாக திட்டமிடல் வேண்டும். பின்னர், நல்ல டீம் ஒன்று உருவாக்குவது. ஏனெனில் ஒருவராக எதனையும் சாதிக்க இயலாது. டீம் உருவாக்குவது மட்டும் அல்லாமல் அந்த டீம் மக்களை வழிப்படுத்த உற்சாகப்படுத்த வேண்டும். அவர்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரவழிக்க வேண்டும். அவர்களின் கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேட்க வேண்டும், ஆனால் செயல் படுத்தும் போது நீங்கள் full responsibility எடுத்து கொள்ள வேண்டும். Pleasing personality இருக்க வேண்டும், motivate செய்ய வேண்டும்.

அடுத்தது, முடிவெடுத்தல், அதுவும் எப்போது முடிவெடுக்க வேண்டுமோ அப்போது முடிவெடுக்க வேண்டும், தள்ளி போடா கூடாது. தினமும் எது முக்கியம் என்று  prioritize செய்ய வேண்டும். ஒரு முறை prioritize செய்து விட்டால், ஒவ்வொரு காரியத்தையும் தள்ளி போடாமல் முடிக்க வேண்டும். சரியான நேரத்தில் எடுக்கப்படாத முடிவுகள் உங்கள் தோல்விக்கு முதல் படி.

நான் மேற் குறிப்பிட்ட எல்லாமே இருக்கிறது, பின்னரும் உங்களை வெற்றி தேடி வரவில்லை என்றால், அவசரபடாமல் பொறுமை காக்க வேண்டும். திரும்ப திரும்ப முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். "தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன மெய் வருத்த கூலி தீரும்" திருவள்ளுவர் சொன்னது.


நான் தொடங்கிய வாக்கியத்திற்கு வருவோம். கனவு காணுங்கள், ஆனால் அதோனோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல், அந்த கனவை வெறியாக்கி, நம்மால் சாதிக்க முடியும் என்று நம்பிக்கை வைத்து கட்சிபடுத்தி, அதற்க்கு தேவையான அறிவை சேகரித்து, கவனமாக திட்டமிட்டு, நல்ல ஒரு டீம் உருவாக்கி, தள்ளி போடாமல் முடிவெடுத்து, தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் வெற்றி நிச்சயம்.

டிஸ்கி

இது சில self help புத்தகங்களில் நான் படித்ததை வைத்து தொகுத்து எழுதியது மட்டுமே. பொது அறிவுரை அல்ல.

எப்பொழுதும் கனவு மட்டும் காணும் மக்களுக்காக இந்த பாடல். (நன்றி நந்தவனத்தான் அவர்களே!)




நன்றி

3 comments:

வருண் said...

True. Dreaming is only a first step. There are so many steps to achieve the target after dreaming. One could fail in phase one or phase 2 or phase 3 just like getting a drug in the market going thru all the clinical trials. Dreaming does not guarantee one anything. It is just a starting point. But one need to start somewhere to get somewhere. If they dont start they get nowhere.

Let us look at the reality and practicality here.

Let us take Judge Cunha's dream of becoming a good judge and serve India. He achieved his goal. But, his dream is shattered by the politicians. Who is going to help Judge Cunha now? Nobody! Let us understand that this is a kind of world we live. So, if someone is reluctant to dream, I dont think he is a "fool". He may be a wise person!

It is foolish to say someone to go dream in India or not?

? said...

இந்த பதிவுக்கு உண்மையிலேயே பொருந்தும் பாடல் என பதிவை நேற்று படித்ததும் தோன்றிய பாடல் இது... https://www.youtube.com/watch?v=lp6hxVyp5g4

ஆனா நெகடிவ்வாக ஏன் சுட்டவேண்டும் என விட்டுவிட்டேன். இப்போ வருணின் குன்ஹா உதாரணத்தை படித்ததும் இப்பாடல் ரொம்ப பொருத்தம்தான் என மீண்டும் தோன்றியது.

முகுந்த்; Amma said...

I beleive this is the perfect song for the post. I will include it in the original post. Thanks for the suggestion.