Tuesday, May 26, 2015

இந்திய பாரம்பரிய தளங்களும் Titanicம் இன்றைய இளைஞர்களும்

எங்களின் பக்கத்து மாகாணமான Tennessee மாகாணத்தில் உள்ள Knoxville, Pigeon Forge மற்றும் Smokey mountains க்கு கடந்த வாரம் மெமோரியல் டே weekend என்பதால் சென்று இருந்தோம். அங்கு,  Titanic museum ஒன்று Titanic கப்பல் போல வடிவமைக்க பட்டு இருந்தது. அங்கு, உண்மையான Titanic கப்பலின் பயணிகள், அதில் இருந்த deck போல வடிவமைக்க பட்ட அறைகள், அதில் உபயோகிக்கப்பட்ட பாத்திரங்கள், life boat, யாரெல்லாம் தப்பி பிழைத்தார்கள்...என்று ஏகப்பட்ட செய்திகள், விஷயங்கள் துணுக்குகள். ஒரு பெரிய உண்மையான iceberg கூட வைத்து இருந்தார்கள், பின்னர் 26டிகிரி வெப்பநிலையில் அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் தண்ணீர் எப்படி இருக்கும், என்று தொட்டு பார்க்கவும் வைத்து இருந்தார்கள். உண்மை Titanic பற்றிய நிறைய செய்திகள் அறிய முடிந்தது. Titanic கப்பல் 1912 ஆம் ஆண்டு Southampton நகரில் இருந்து நியூயார்க் சிட்டி வரும் வழியில் iceberg மோதி விபத்துக்கு உள்ளாகி மூழ்கி விட்டது.


நிற்க, இதனை ஏன் இங்கு சொல்கிறேன் என்பதற்கு காரணம் இருக்கிறது. மதுரையில், திருமலை நாயக்கர் அரண்மனை இருக்கிறது, அது 16 ஆம் நூற்றாண்டு கட்டப்பட்டது. அதன் பெரிய தூண்களும், அமைப்பும் கண்ணை கவரும். ஆனால், அங்கு நீங்கள் சென்றீர்கள் என்றால் காறி உமிழ்ந்து விட்டு தான் வர வேண்டும், ஒவ்வொரு தூண்களிலும் என்ன என்னவோ கிறுக்கல்கள், காதல் வசனங்கள், காதலர்களின் பெயர்கள்...என்று பல கண்றாவிகள். இதனை தவிர, ஒவ்வொரு தூணின் பின்னும் ஒரு காதல் ஜோடிகள் இருப்பார்கள். இத்தனைக்கும் எல்லா இடங்களிலும் எழுதி வைத்து இருக்கிறார்கள், தூணில் கிறுக்காதீர்கள், காதல் என்ற பெயரில் அசிங்கம் செய்யாதீர்கள் என்று. ஆயினும் யார் கேட்கிறார்கள். எங்கு பார்த்தாலும் பறவை எச்சங்கள், உள்ளே museum என்று வைத்து இருக்கிறார்கள், பாழடைந்து  கிடைகிறது. 


இதே நிலை, இந்தியா முழுக்க பரவி கிடக்கிறது.

UGLY WRITING: Defaced walls of the Golconda Fort Photo: Mohamed Yousuf



Picture from http://www.fullstopindia.com/10-annoying-things-about-india-and-indians/#prettyPhoto

கிட்ட தட்ட எல்லா புராதன தளங்களும் இப்படி பட்ட நிலையை அடைந்து இருக்கின்றன.

இதனை என்னும் போது எனக்கு ஒரு சில விஷயங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. எத்தனை பேருக்கு நமது, வரலாறு தெரியும். சரி, முழு இந்திய சரித்திரம் அறிந்திருக்க வேண்டாம், தென்னிந்திய சரித்திரம் அல்லது, சுதந்திர போராட்டம்  பற்றி எத்தனை இளைஞர்கள் அறிந்துஇருக்கிறார்கள். எத்தனை பேருக்கு நாட்டு நடப்பு சூழல் தெரியும். சமீபத்தில் நான் பார்த்த ஒரு காணொளி மிக மன வருத்தத்தை அளித்தது. இது மும்பை மற்றும் டெல்லி வாழ் இந்திய இளைஞர்கள் இடம் எடுக்கப்பட்ட சர்வே. இந்தியா பற்றி ஐந்து அடிப்படை கேள்விகள் கேட்கபடுகிறது அதற்க்கு அவர்களின் பதில்கள் எனக்கு கண்ணில் நீர் வரவழித்தது. நீங்களும் பாருங்கள்.






இந்திய புராதன தளங்களை தொன்மையை எப்படி காக்க போகிறோம்?, எப்படி இன்றைய இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு எப்படி இந்தியா பற்றி அதன் கலாசாரம், வரலாறு பற்றி சொல்லி கொடுக்க போகிறோம்?,  எப்பொழுது, நான் இந்தியன் அல்லது இந்திய வம்சாவளியில் வந்தவன்/ள் என்று பெருமையாக சொல்ல வைக்க போகிறோம்?. அடுத்தடுத்த கேள்விகள் என் தலை சுற்ற வைக்கின்றன. 

1912 ஆம் ஆண்டு எங்கோ உருவாக்கப்பட்ட, மூழ்கி போன Titanic பற்றி எனக்கு தெரிந்த அளவு கூட, நான் பிறந்து, வளர்ந்த மதுரையில் இருக்கும் 16 ஆம் நூற்றாண்டு திருமலை நாயக்கர் அரண்மனை பற்றி தெரியவில்லை,என்று என்னும் போது, எனக்கே ஒரு தலைகுனிவு ஏற்படுகிறது. வெறும் professional course மட்டுமே வாழ்க்கை, அது மட்டுமே சோறு போடும் என்று நம்மை இயந்திரங்கள் ஆக்கி படிக்க செய்ததின் விளைவோ இது என்று என்ன தோன்றுகிறது, கவலை கொள்ள செய்கிறது.

 நன்றி.


3 comments:

வருண் said...

***எப்பொழுது, நான் இந்தியன் அல்லது இந்திய வம்சாவளியில் வந்தவன்/ள் என்று பெருமையாக சொல்ல வைக்க போகிறோம்?***

இந்தியன்னு சொல்லிக்கிறதுல பெருமை என்னங்க இருக்குனு சொல்றீங்கனு தெரியலை? We happened to be born as Indians. That's all. Right? Children who grew up here, என்னுடைய மூதாதையர்கள் இந்தியால இருந்து வந்து குடிபுகுந்தார்கள்னு சொல்லுவாங்க. வந்து வாழும் நாட்டில் உள்ள தலைவர்கள், கொடி, தேசிய கீதம் பற்றி தெரிந்து இருந்ந்தால் போதாதா?

My mom taught me some morals. Not every Indian has a mom like I did. So, they have been taught differently based on where they're born. Let us take Shakeela's mom or Sobha's mom? Or even Sridevi's mom. They used their children for having a comfortable life. They're Indians too. Though we are all Indians, we were not brought up in the same manner. All Indian moms are not same either. There is nothing to be proud of our culture or our country and saying we were such and such and all. what really matters is what I am and what I do and what I care as an individual. வரலாற்றுப் பெருமை எல்லாம் அவசியமா என்னனு எனக்குத் தெரியவில்லை. நான் வீம்புக்கு இங்கே பேசவில்லை. பலமுறை யோசித்துப் பார்த்து இதுபோல் ஒரு முடிவுக்கு வந்தேன்னு தான் சொல்லணும். :)

முகுந்த்; Amma said...

Varun,

Although I am an US citizen, I am still proud to say that I am a person with indian origin and roots. True that our kids who born here need to know only about the leaders history and all of the US, I still want them to know India's history,
Heritage and independence struggle.

In this article I just mentioned about how poor knowledge indian kids/youths have about indian history and indian heritage who live in india.


To tell
You frankly lots of foreigners still
Think the freedom struggle by MKGandhi as very impressive
And lots of them praise the oldest nature of our history. And even one close friend of mine from South Africa still praises Gandhi for all his initiatives in SA. It is a pity that lots of people/foreigners have lots of respect for india and indian history than Indians who live in india.

ஆரூர் பாஸ்கர் said...

Well said முகுந்த் அம்மா. Your post truly reflect my mind.

I need to make a point that, knowing our history doesn't mean we are going backwards.

Thanks!