Saturday, October 17, 2015

அமெரிக்க கொலு என்னும் ஒரு ப்ரெஸ்டீஜ் இஸ்யு!


முன்பு எல்லாம் பரம்பரை பரம்பரையாக கொலு வைப்பார்கள். அம்மா திருமண மான பின் மகளுக்கு ஒரு சில பொம்மைகள் வாங்கி கொடுப்பது என்பது பல குடும்பங்களில் வழக்கம். மரப்பாச்சி போன்றவை அதில் அடக்கம். வீட்டு பாரம்பரியத்தை காக்க, என்று வரும் மருமகளும் கொலு வைக்க ஆரம்பிப்பார்கள்.  
குடும்பத்தில் கொலு வைக்கும் பழக்கம் இருந்தால் மட்டுமே கொலு வைப்பது என்ற சம்பிரதாயம் எல்லாம் போய் இப்பொழுது எல்லார் வீடுகளிலும் நிறைய கொலு வைக்கிறார்கள். அதிலும் அமெரிக்காவில் எத்தனை பேரை நீ கூப்பிடுற, பாரு நான் உன்னை விட அதிகம் கூப்பிடுறேன் பாரு, என்று போட்டி எல்லாம் நடக்கிறது. அதாவது, உனக்கு செல்வாக்கு நிறையயா இல்ல எனக்கு செல்வாக்கு இருக்கா என்று காட்டவே நிறைய மக்கள் கொலு வைக்கிறார்கள்.  

முன்பெல்லாம் தன் வீட்டில் இருக்கும் சிறு பெண்களை அழகாக பூ தைச்சு குங்கும சிமிழ் கொடுத்து அக்கம் பக்கம் வீட்டுல இருக்கிறவங்கள எல்லாம் "எங்க  வீட்டு கொலுவுக்கு  வாங்க " என்று அழைத்து வர சொல்லுவார்கள். இப்பொழுது எல்லாமே மாடர்ன் தான், evite இல் கொலு அழைப்பிதழ் வருகிறது. பின்னர் நீங்கள் அதில் RSVP செய்யவில்லை என்றால் போனில் கூப்பிட்டு" RSVP செய்யுங்கள், நாங்கள் எத்தனை பேருக்கு வெத்திலை பாக்கு கொடுக்கணும்னு கணக்கு பண்ணனும்" என்று சொல்லுகிறார்கள். 

இதில் கஷ்டபடுபவர்கள் யார் என்றால் கொலு பாக்க அழைக்கப்படும் என்னை போன்றவர்கள் தான், அதுவும் இந்த வருட கொலு க்கு நடுவில் ஒரே ஒரு வீகெண்ட் தான் என்பதால் கிட்ட தட்ட கொலு வைத்த எல்லா வீட்டிலும் இருந்து அழைப்பு. இருப்பது இரண்டு நாள்,  இரண்டு நாளைக்குள் எத்தனை வீட்டுகளுக்கு செல்வது?. அதுவும் ஒரு வீடும் அடுத்த வீடும் இருக்கும் தொலைவு 20-30 மைல்கள். அவர்கள் அழைத்திருக்கும் நேரம் 5 மணிக்கு மேல் 8 மணிக்குள். எத்தனை வீடுகளுக்கு செல்வது? அதுவும் ஒரு வீட்டுக்கு சென்று விட்டு அடுத்த வீட்டுக்கு செல்லவில்லை என்றால் அதுவும் முகத்தை தூக்கி வைத்து கொள்கிறார்கள். ஒரு சிலர் நட்பை கூட துண்டித்து விட்டு இருக்கிறார்கள். கொலுவுக்கு அழைக்கும் போது அடுத்தவர்களை பற்றியும் கொஞ்சம் யோசியுங்கள் மக்களே.

அடுத்து எத்தனை பேர் எங்கள் வீட்டுக்கு வந்தார்கள், எத்தனை பேர் வீட்டுக்கு சென்றோம் என்று பறை அடித்து கொள்ளுகிறார்கள்,அதனை பெருமையாக சொல்கிறார்கள். ஊரு விட்டு ஊரு வந்து இப்படி கொலுபோன்ற இந்திய பாரம்பரியத்தை பின்பற்றுகிறோம் என்பதில் பலருக்கும் பெருமை தான், ஆனால் அது ஒரு ப்ரெஸ்டீஜ் இஸ்யு ஆகி மற்றவங்களுக்கு தொல்லையாகும் போது தான் கடுப்பை வர வழிக்கிறது .  

டிஸ்கி 
இது என்னுடைய பர்சனல் அனுபவம் எண்ணங்கள் மட்டுமே, யாரையும் குறிப்பிட்டு சொல்லவோ, அனுபவங்களை பொதுபடுத்தவோ இல்லை.

நன்றி 
 


4 comments:

நம்பள்கி said...

இந்த கொலு விஷயம் எல்லாம் சமீப வரவு! 25 வருடங்களுக்கு முன்பு கிடையாது. அப்ப இந்த மாதி தடுக்கி விழுந்தா கோவிலும் கிடையாது. கோவில்கள் அங்கு கொண்டுவருவதே பிராமன அல்லாதாரை அவர்கள் கீழே கொண்டுவர். ஜாதி அங்கு தலை விரித்து ஆடஈறது. தமிழ்நாடு கெட்டது பொங்க. வந்த உடன் பணம் சம்பாதிக்கும்---இப்ப வந்த இலசுகள் செய்யும் வேலை இந்த கொலு.

இது பிரமணர் அல்லாதார் அவர்களைப் பார்த்து ஈஷிகொள்ளும் வேலை. அவர்கள் சம்ச்க்ரித்த பெயருக்கு மாறினார்கள்-இவர்களும் மாறினார்கள், இப்ப அங்கு உள்ள பிராமணர்கள் பாதி பேர் முதல் பெயரை கிருத்தவ பெயர்களுக்கு மாற்றிகொண்டார்கள். Ben, Jack, Ed, San, jones இப்படி. என் கிட்டே சிலர் சொனார்கள்--பேரை வெள்ளைக்கர்ன் எளிதாக கூப்பிட வசதியாக இருக்கும்மம். resume-ல் போட்டால் வேலைக்கு கூபுடுவார்கள்ளம் IF all things are equal. இனி எங்காட்களும் அவ்வழியே ஈஷிகொண்டே வருவார்கள். நீங்கள் இருப்பது அல்%பிறேட்டா என்று நினைக்கிறேன். அது மினி மயிலாப்பூர். நியூ ஜெர்சி எடிசன் மினி மாம்பலம்.

நான் பள்ளி பருவத்தில் வசித்து; பிராம்மணர்கள் வசிக்கும் மயிலாப்பூர்/மந்தைவெளி (சென்னை) அங்கு அவ்ர்களைத் தவிர யாரும் கொலு வைக்கமாட்டார்கள், எங்கள் நிலம் இருந்த ஊரில் கொலு என்றால் எந்த பெண்மணிக்கும் தெரியாது.

Locamati said...

Why are you so angry? If you don't want to follow brahmins' culture, don't do it. If you think something is good, do it. Why this bitterness and animosity? You can do whatever pleases you. I don't understand where this caste is an issue. Nobody can change what they were born into. But we can all live however we want to live.

நம்பள்கி said...

அம்மா அல்லது அய்யா!
இது என்னை நோக்கியா அல்லது முகுந்த் அம்மாவை நோக்கியா என்று நேக்கு தெரியாது. இருந்தாலும் என் பின்னூட்டம் உங்களை நோக்கி அல்ல---என் பின்னூட்டம் சூத்திர பண்டாரங்களை நோக்கியே. நீங்கள் பிராமனாளாக இருந்தால் என்னை ஷமிக்கணும்; அப்படியே ஓரம் போன்க்ன்னா?

என் பின்னூட்டம் எங்க சூத்திர முட்டாள்களுக்கு....
அவாளுக்கு பின்னூட்டம் போட்டால், நோக்கு ஏன் மாமா/மாமி வலிக்கிறது?

முகுந்த்; Amma said...

@locamati

I am not sure whether this comment is for me or for nambaki. But if it's for me, please note that I have never mentioned anywhere caste or Brahmin non Brahmin. I always try to avoid caste as a parameter and if you read it between the lines, I mentioned about the non Bramin usage of braminical culture by following up golu and all the traditions. As nambaki suggested it
was not there 25 years back and now everyone is following this so called this culture. I'm not blaming those who wanted to follow these traditions. who am I to blame it's their choice.i am just mentioning about the inconvenience it causes to people they are inviting.