Friday, May 29, 2015

ஐ, மீ, மைசெல்ப், நான், மே...




சில நேரங்களில் இப்படிப்பட்ட மனிதர்களை நாம் சந்தித்து இருப்போம். ஒரு மீட்டிங் அல்லது பொது இடத்தில் அல்லது பார்டியில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் இப்படி எங்காவது. அவர் நீங்கள் பேசுவதை கேட்பார், ஆனால் கேட்க மாட்டார். அதாவது, நாம் பேசும் வார்த்தைக்கு எப்படி பதில் தருவது என்பது மட்டுமே அவர் கேட்பார் ஆனால் என்ன சொல்ல வருகிறோம் என்று முழுதாக கேட்க மாட்டார்.

உதாரணமாக  நீங்கள் ஒரு ப்ராஜெக்ட் பற்றி எடுத்து அதனை பற்றி பேச வருகிறீர்கள் என்று வைத்து கொள்வோம், அதில் பல modules இருக்கலாம் அல்லது ஸ்டேஜ் இருக்கலாம். அதனை நீங்கள் விவரித்து கொண்டு இருப்பீர்கள், அப்பொழுது ஒருவர், நாம் குறிப்பட்ட எதோ ஒரு வார்த்தையை பிடித்து கொண்டு, நம்மை கேள்வி கேட்பார். நாம் ஏதேனும் பதில் சொன்னாலும் அந்த பதிலில் இருக்கும் ஒன்றை பிடித்து கேள்வி கேட்பார். நம்மை பேச விட மாட்டார், மாறாக அவர் சொன்ன பதிலில்/கேள்வியில் இருக்கும் நியாயத்தை பக்கம் பக்கமாக விவரிப்பார், விதண்டாவாதம் பேசுவார். "ஏன் எப்படி செய்ய கூடாது?" "என்ன முட்டாள் தனமான செய்கை இது" என்று அனைவர் முன்பும்  கமெண்ட் அடிப்பார்.

நம்மை பேச விடாமல் கேள்வி கேட்டு, நாம் கொஞ்சம் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாலும், அதனை பிடித்து கொண்டு, நம்மை மட்டம் தட்டுவார்கள். நாம் தடுமாறுவதை பார்த்து ரசிப்பார்கள். அதுவே அவர்கள் வேண்டுவது.

இப்படி கேள்வி கேட்பவரின் நோக்கம், விஷயத்தை தெரிந்து கொள்வதற்கு அல்ல, மாறாக சென்ட்டர் ஆப் அட்ராக்ஷன் தன் பக்கம் திருப்ப மட்டுமே. அதாவது, "என்னா கேள்வி பாரு", "அவன் சொல்லுவது தான் சரி" என்று எல்லாரும் அவரை புகழ வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களின் நோக்கம் எப்பொழுதும் தன்னை சுற்றி மட்டுமே எல்லாமே நடக்க வேண்டும் என்பது.

 நீங்கள் அவரை தனியே அழைத்து ப்ராஜெக்ட் பற்றி  பற்றி கேட்டு இருபீர்ர்கள், அப்போது வாயை திறந்து இருக்க மாட்டார். அல்லது, "எல்லாம் சரியாக இருக்கிறது" நம்மிடம் பசப்பி இருப்பார். இவர்களின் நோக்கம் தனக்கு மட்டுமே அந்த ப்ராஜெக்ட் கிடைக்க வேண்டும், தான் மட்டுமே அதனை நடத்த வேண்டும்..ஐ, மீ, மைசெல்ப், நான் ...என்று எல்லா மொழியிலும் இருக்கும் "நான்" என்ற வார்த்தை மட்டுமே.

இவர்கள் பாம்புக்கு சமமானவர்கள். எப்பொழுதும் கொஞ்சம் தள்ளியே வைத்து இருக்க வேண்டும். இவர்களை ஆங்கிலத்தில் "Narcissist" என்பர். இந்த வகை மக்கள், தான் எப்போதும் successful, என்று காட்டி கொள்ள பார்பார்கள்.  அதே போல, ஏதேனும் குறை, தப்பு என்று அவர் மீது காட்டி விட்டால், உடனே தன்னை சுற்றி இருப்பவர்கள் மீது எளிதாக கையை காட்டி விடுவார்கள். "They dont mind throwing someone under the bus to save their back. They enjoy doing such things". இப்படி பட்டவர்கள் தன்னை சுற்றி எல்லாரும் புகழ வேண்டும் என்று நினைப்பார்கள், எல்லாரும் சலாம் போடா வேண்டும், கும்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். இப்படிப்பட்ட மக்கள் அரசியல் தலைவர்கள் ஆயின், அவரை சுற்றி உள்ளவர்கள் பாடு அதோ கதி தான்.

உண்மையில் இப்படி பெர்சொனாலிட்டி இருக்கும் மக்கள் தன்னம்பிக்கை இல்லாதவர்கள், சின்ன சின்ன criticism கூட அவர்களை உசுப்பேத்தி விட்டு விடும். இப்படி பட்ட பெர்சொனாலிட்டி இருக்கும் மக்கள் குடும்பத்தில், வேலையில், வெளி உலகத்தில், பண விசயத்தில் என்று  எல்லா வற்றிலும் தோல்வியை மட்டுமே சந்திப்பார்கள். இப்படி பட்ட மனிதர்களை சந்திக்கும் போது அல்லது பழகும் போது கவனமாக எச்சரிக்கையாக இருப்பது நல்லது. இல்லையேல் உங்களை குழப்பி, உங்கள் தன்னம்பிக்கையை நாசமாக்கிவிட்டு போய் விடுவார்கள். இது என் சொந்த அனுபவத்தில் கண்டது.

நன்றி.

1 comment:

வருண் said...

It depends on who that person is. If he/she happened to be your boss or to whom to supposed to report, then you have to deal with him/her until you find another job. If he/she is a co-worker, you could try avoid him/her. In corporate settings when money involved there you could see lots of "cutthroat" people. The same people after retiring, go, do yoga and talk philosophy after a while. lol People become self-centered and arrogant and inhuman after a while, for survival and for getting the credit for whatever or for making more money.

The question is, Are they dangerous or silly? Here is where who you are matters.

Should one feel sorry for them or try to pay back in their own coin? Or just talk about them behind their back and laugh at what they and how they do and all?

First of all we need to learn to deal with them if you can not avoid them completely. Different people deal differently and it all depends on who you are.

The important thing is try understand that even if he/she wins he/she is a loser! :)